Jump to content

செய்திதுறத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செய்திதுறத்தல் 

ஜெயமோகன்

 

 

srikala-prabhakar

நேற்று ஸ்ரீகலாவின் இறப்புச் செய்தியை ஒட்டி இரவெல்லாம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவருடைய இறப்பு உள அழுத்தத்தால். இந்தத் தலைமுறையில் உள அழுத்தங்கள் மிகுதியாகிக் கொண்டே இருக்கின்றன. நானறிந்த ஐந்தில் ஒருவர் உள அழுத்ததிற்கான மருந்துக்களை ஏதேனும் ஒரு தருணத்தில் எடுத்துக்கொண்டவர்கள், தொடர்பவர்கள்

பலகாரணங்கள். முதன்மையாக பொறுப்பு. சென்ற நூற்றாண்டில் தனிமனிதன் மேல் இத்தனை பொறுப்பு இல்லை. கூட்டாகவே அவன் உலகைச் சந்தித்தான். குடும்பமாக, குலமாக. தனியாளுமை பெரும்பாலும் அன்று இல்லை. அதன் குறுகல் ஒருபக்கமென்றாலும் அது பொறுப்பை குறைத்தது. தனிமையை இல்லாமலாக்கியது.

முடிவெடுக்கும் பொறுப்பே பொறுப்புகளில் முதன்மையானது. இதைச்சார்ந்து இருத்தலியலாளர் ஏராளமாகப் பேசியிருக்கிறார்கள்.  நம் வாழ்க்கையை நாமே முடிவெடுத்தல், அதை முன்னெடுத்துச் சென்று வெற்றிபெறுதல் இன்று ஒவ்வொருவருக்கும் கடமையென்றாகிவிட்டிருக்கிறது.  அதில் வெற்றிதோல்வி நம் கையில் இல்லை, பல்லாயிரம் சூழல்களைச் சார்ந்தது. அது அளிக்கும் அழுத்தம் சாதாரணமானதல்ல. ஒழுக்கில் மிதந்துசெல்லும் சென்றகால வாழ்க்கைக்காக ஏங்குகிறார்கள்

இன்று ஒவ்வொருவருக்கும் தனியாளுமை உருவாகி வந்துள்ளது. தனிப்பட்ட இலட்சியங்கள், தனிப்பட்ட துறைகள். அதிலுள்ள வெற்றிதோல்வியின் சுமை ஒவ்வொருவரையும் அழுத்துகிறது. அதில் கடும் போட்டி. ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அமர நேரமில்லை. பிந்தினால் அனைத்தையும் இழந்துவிடவேண்டியிருக்கும். ஒருநாளில் 16 மணிநேரம் உழைப்பவர்களை எனக்குத்தெரியும். அப்படி உழைக்கத்தக்க தகுதிகொண்டதா மானுடவாழ்க்கை என்றுதான் தெரியவில்லை.

இத்துடன் உறவுகள் உருவாக்கும் சிக்கல். சென்றகாலங்களில் வலுவான தனியாளுமைகள் பெரும்பாலும் இல்லை. கணவன், மனைவி, மகன்,தந்தை, உடன்பிறந்தார் அனைவருமே வலுவான ‘கதாபாத்திரங்கள்’ அதை இயல்பாக நடிக்கமுடியும். இன்று ஒவ்வொருவரும் தனியாளுமைகள். ஒருவர்போல் பிறரில்லை. ரசனை, அரசியல், வாழ்க்கைநோக்கு எல்லாமே வேறுவேறு. ஒருபக்கம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது கடினமாகிறது, மறுபக்கம் சாதாரணமாக பேசிக்கொள்ளக்கூட நேரமில்லை என்றும் ஆகிறது. அரசியல் கொள்கை மாறுபாடு காரணமாக மணமுறிவுசெய்துகொண்ட  ஒரு இணையை எனக்குத்தெரியும். என் பாட்டியிடம் சொன்னால் வாய்பிளந்துவிடுவார்கள்.

இவை அளிக்கும் உளஅழுத்தத்தை எவ்வகையிலும் இன்று தவிர்க்க முடியாது. ஏனென்றால் இது வரலாற்றின் போக்கு. இதில் விலகிநிற்பது இயல்வதே அல்ல. தனிமனித ஆளுமை, மானுடசமத்துவம், ஜனநாயகம், நுகர்வுப்பொருளியல், படைப்பூக்கம் இல்லாத உழைப்பு, மிகையான செய்தித்தொடர்பு,  நவீன அறிவியல் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

ஆனால் இவை அனைத்தும் உருவாக்கும் உளஅழுத்ததிற்கு நிகரான ஒன்று, அல்லது ஒரு படி மேலான ஒன்று இன்று செயற்கையாக உருவாக்கப்படுகிறது.  எளிதில் தவிர்க்கக்கூடியது அது. ஆனால் நாம் அதை அள்ளி அள்ளி எடுத்துக்கொள்கிறோம். அரசியலால், செய்திகளால் நமக்கு ஊடகங்கள் அளிப்பது அந்த உள அழுத்தம். இன்று ஊடகங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. நாளிதழ்கள் செய்திகளை நூறுமடங்கு பெருக்கி ஒவ்வொருவருக்கும் அளித்தன. 1972ல் என் அப்பாவின் தோழர் டீக்கனார் தினதந்தியைப் பார்த்து “ஏல ஒரு மனியனுக்கு ஒருநாளைக்கு இம்பிடு நூஸ் என்னத்துக்குலே?” என திகைத்ததை நினைவுகூர்கிறேன். தொலைக்காட்சி அதை இருமடங்கு ஆக்கியது. இணையம் மேலும் இருமடங்கு ஆக்கியிருக்கிறது.

செய்திகளுக்கு ஓர் இயங்கியல் உள்ளது. கவனத்தை கவர்ந்தால்தான் அது செய்தி. ஆகவே அது உரக்க ஒலிக்கிறது, சீண்டுகிறது, அறைகூவுகிறது. நம்மை நிலைகுலையச் செய்வதில் செய்திகள் ஒன்றுடனொன்று போட்டியிடுகின்றன. மேலும் மேலும் நம் மீது அம்புகளென தைத்துக்கொண்டே இருக்கின்றன. நம்முள் நஞ்சைச் செலுத்துகின்றன/ எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் மானுட விலங்குள்ளம் எதிர்மறைச் செய்திகளை மேலும் கவனிக்கிறது. ஆகவே செய்தி என்றாலே இன்று கெட்டசெய்திதான். கசப்பு, வெறுப்பு, வஞ்சம், வன்மம் துயரம்தான்.

இச்செய்திகள் நம் மீது நாம் சுமக்கவே முடியாத பொறுப்புக்களைச் சுமத்துகின்றன. பாலியல் வல்லுறவுகளின் மதக்கலவரங்களின் போர்களின் பொறுப்பை நாம் மானசீகமாக ஏற்றுக்கொள்கிறோம். ‘என்ன செய்யப்போகிறோம்”  “நமக்கு இதில் பங்கிருக்கிறது’ ‘நமது முகம் இது’ என செய்தி அறிக்கைகள் கூவிக்கொண்டிருக்கின்றன. நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. இருந்தாலும் செய்யும்நிலையில் நாம் இல்லை. ஆனாலும் கொதிக்கிறோம் அறைகூவுகிறோம் ஆணையிடுகிறோம் விவாதிக்கிறோம். எரிந்துகொண்டே இருக்கிறோம்.

ஒவ்வொரு செய்தியும் இன்றைய உலகளாவிய விவாதச்சூழலால் பெரிதாக்கப்படுகின்றன. எல்லாத்தரப்பும் அமிலமும் தீயுமாகக் கொந்தளிக்கின்றன. ஆசிஃபா இந்து வழிபாட்டிடத்தில் வன்புணர்வுசெய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதை எண்ணி நான் நான்குநாட்கள் கொதித்தேன். . கீதா இஸ்லாமிய வழிபாட்டிடத்தில் வன்புணர்வு செய்யப்பட்டபோது மீண்டும். ஆனால் முந்தையதை இந்துத்துவர் ‘விளக்க’ முற்பட்டனர். ஐயங்கள் எழுப்பினர்.  ‘ஆனால்’களை போட்டனர். இதற்கு இஸ்லாமியர் அதையே செய்கிறார்கள். அன்று கொதித்தவர்கள் மௌனம் சாதிக்கிறார்கள். அன்று மழுப்பியவர்கள் இன்று எகிறுகிறார்கள். எதிலும் அரசியல்தரப்பு மட்டுமே வெளிப்படுகிறது. “என்னால் தூங்கமுடியவில்லை. வேலியம் இல்லாமல் இன்று இரவைக் கடக்கமுடியாது’ என்றார். ஸ்ரீகலாவும் அதைச் சொல்வார் என்று மட்டும் சொன்னேன்.

உண்மையில் அத்தனை ஆழமாக எரிகிறோமா? அதுவுமில்லை. இது ஒரு ஆட்டம். ஒரு தரப்பை எடுத்துக்கொண்டு எரிந்தால் நாம் தீவிரமானவர்களாக இருக்கிறோம் என்னும் பிரமை நமக்கு ஏற்படுகிறது. நம் வெறுமைகளை நிரப்புகிறோம் என படுகிறது. ஆனால் இந்த நூற்றாண்டு அளிக்கும் வெறுமையை இப்படி எதிர்மறை உணர்வுகளைக்கொண்டு மட்டும்தான் நிரப்பிக்கொள்ளமுடியுமா என்ன? வேறேதும் இல்லையா?

ஸ்ரீகலா செய்தியாளர். அறவுணர்வுகொண்டவர், அதற்கான களமாக செய்தியைக் கண்டவர். ஆகவே ஒவ்வொருநாளும் கொதிப்பு அதன்பின் கசப்பு அதன்பின் தனிமை என்றே அவர் வாழ்க்கை சென்றது. சமநிலையில் அவரைக் கண்டதே மிக அரிதாகத்தான்.  நாமனைவரையும் ஊடகம், அதிலிருக்கும் உச்சக்கொந்தளிப்பாளர்கள் அங்கே கொண்டுசென்றுகொண்டிருக்கிறார்கள்.

இன்று ஒரு முடிவை எடுத்தேன். இனி [குறைந்தது ]ஓராண்டுக்காலம் நாளிதழ்களை வாசிக்கமாட்டேன். இணையத்தில் செய்திவாசிப்பதில்லை. எவ்வகையிலும் ‘நாட்டுநடப்புகளை’ தெரிந்துகொள்ளவோ விவாதிக்கவோ போவதில்லை. என்னை குடிமையுணர்வு இல்லாதவன் என்று சொல்லுங்கள். சமூகப்பொறுப்பு அரசியலுணர்வு இல்லாதவன் என்று சொல்லுங்கள். ஆம் என்று சொல்லவே விரும்புகிறேன். இவை இல்லாமல் இருந்துபார்த்தால் என்ன எஞ்சுகிறது என்றுதான் பார்ப்போமே. சமகாலம் என்பது இந்த அரசியல் மட்டும் அல்ல. இன்று வெளியே இளவெயில். நாளை மெலட்டூர் பாகவத மேளா. இவையும் சமகாலம்தான்.

ஜெ

https://www.jeyamohan.in/108786#.WuP_IC_TVR4

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் செய்திகளை சிறிதுகாலமாக துறந்துள்ளேன்.  உருப்படியாக ஏதாவது நாவல் படிக்கலாம் என்றுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

நானும் செய்திகளை சிறிதுகாலமாக துறந்துள்ளேன்.  உருப்படியாக ஏதாவது நாவல் படிக்கலாம் என்றுள்ளேன்.

இதோடா அந்தாள் மண்டையைப் போடடால் சேர்ந்து தீக்குளிப்பியங்களா?....கோழைகள் தான் செய்தியைக் கண்டு பயந்து ஓடுவது? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இதோடா அந்தாள் மண்டையைப் போடடால் சேர்ந்து தீக்குளிப்பியங்களா?....கோழைகள் தான் செய்தியைக் கண்டு பயந்து ஓடுவது? 

 

தீக்குளிக்கும் அளவிற்கு அதிதீவிரமான ரசிகன் இல்லை.?

செய்திகளைப் படித்து எது போலி, எது உண்மை என்று குழம்புவதைவிட கற்பனையான நாவல்களைப் படிக்கலாம் என்று நினைக்கின்றேன். ஆனால் செய்திகள் காதைக் கடித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.