Jump to content

சம்பந்தனுக்கு ரிஷாட் கடிதம்


Recommended Posts

சம்பந்தனுக்கு ரிஷாட் கடிதம்

 

(நமது நிருபர்)

சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திரு கோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல் லூரியின் அபாயா பிரச்சினைக்கு நியாய மான தீர்வைக்காண உதவுமாறுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், ஹபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்தக் கடிதத்தில் அமைச்சர்மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர்கல்லூரி முஸ்லிம் ஆசிரியர்களின்’ அபாயா’ விவகாரத்தில் தலையிட்டு இந்தப் பிரச்சினையை சுமூகமாகத்தீர்த்துவைக் கமூத்தஅரசியல்வாதியான நீங்கள் உதவவேண்டும். இந்தசம்பவத்தைப் பயன்படுத்தி தமிழ் -முஸ்லிம் உறவைசீர்குலைக்க முற்படும்சக்திகள் குறித்துநாம் விழிப்பாயிருக்கவேண்டியதேவைஎழுந்துள்ளது.

சிங்கள, தமிழ், முஸ்லிம்ஆகியமூவின மும்பரஸ்பரபுரிந்துணர்வுடனும், நிம்மதியாகவும்வாழும் திருமலைமாவட்டத்தில் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டிருப்பது, இனங்களுக்கிடையிலான உறவைசீர்குலைக்கும் துரதிஷ்ட நிலைக்கே வழிவகுக்கும்.

யுத்தம் முடிந்துசமாதானம்ஏற்பட்டபின்னர்தமிழ் -முஸ்லிம் உறவு தழைத்தோங்கி மலர்ந்து வரும்தற்போதையகாலகட்டத்தில், இவ்வாறான சிறியசம்பவங்கள் பெரிதுபடுத்தப்பட்டுஇருஇனங்களுக்கிடை யிலானசச்சரவாக, அதுமாறுவதற்குநாங்கள்அனுமதிக்கமுடியாது.

திருமலைமாவட்டமுஸ்லிம்களுடன்நீண்டகாலமாகநல்லுறவுடனும்,அந்நியோன்னியமாகவும்வாழும்உங்களைப்போன்றமூத்ததலைவர்களுக்குமுஸ்லிம்களின்சமய, கலாச்சார,பண்பாட்டுவிழுமியங்கள்நன்குதெரியும். அதுமட்டுமன்றிநான்உட்படநான்சார்ந்தசமூகமும்உங்களைஒருநீதியான, நேர்மையானஅரசியல்தலைவராகவேகருதிவருகின்றோம். அநியாயங்களுக்குநீங்கள்ஒருபோதுமே துணைபோனவர்அல்ல. அதேபோன்றுஇனியும்அவ்வாறுநீங்கள்அநீதியானசெயற்பாடுகளுக்குஇடமளிக்கமாட்டீர்கள்என்றநம்பிக்கையிலேயேஇந்தக்கடிதத்தைஎழுதுகின்றேன்.இந்தப்பிரச்சினையில் அவசரமாகநீங்கள் தலையிட்டு,சமரசத்தீர்வொன்றைக்காணவேண்டுமெனநாம்விரும்புகின்றோம்.

முஸ்லிம்களின்கலாச்சாரஉடையானதுஇன்று,நேற்றுதிடீரென்றுவந்த ஒன்றல்ல என்பதை,முஸ்லிம்களுடன் நெருங்கிப்பழகும்நீங்கள் நன்கறிவீர்கள். தமிழர்களும் முஸ்லிம்களும்ஒரேமொழிபேசும்சிறுபான்மைச்சமூகமாகும். கடந்தகாலங்களில்இரண்டுசமூகங்களுக்கிடையிலானசிற்சிலபிரச்சினைகளைபூதாகரமாக்கி, பிளவுகளை ஏற்படுத்தி அவற்றில்குளிர்காய பல்வேறுதீய சக்திகள் செயற்பட்டன. அதேபோன்றுமீண்டும்தமிழ் -முஸ்லிம்உறவைசீர்குலைத்து ஆதாயம்தேடசிலதீயசக்திகள் மீண்டும் முற்பட்டு வருகின்றன.

எனவேஇனியும்இரண்டுசமூகங்களும் ஒருவரோடுஒருவர்புரிந்துவாழவும், ஒருவரைஒருவர்மதித்துவாழவும்சிறந்தஅடித்தளம்கட்டியெழுப்பப்படவேண்டியது காலத்தின் தேவையாகும்.

அந்தவகையில்,தற்போதுமீளஉருவாகிவரும்ஒற்றுமையையும், இனசௌஜன்யத்தையும் சிதைத்து, சின்னாபின்னமாக்குவதற்குஇவ்வாறானசிறியசம்பவங்கள்கால்கோளாகஅமைந்துவிடக்கூடாது.

எனவே,திருமலைமாவட்டத்தின்மூத்தஅரசியல்வாதியாகவும், தமிழர்களின்தலைவராகவும்அனைத்துசமூகங்களினாலும்பெரிதும்மதிக்கப்படுபவரானநீங்கள், திருமலைமாவட்டதமிழ், முஸ்லிம்அரசியல்வாதிகள், சமூகத்தலைவர்கள், இந்தவிடயத்தில்சம்பந்தப்பட்டோர் மற்றும் கல்விசார் ஆர்வலர்கள் அனைவரையும் அழைத்து, சமரசப்பேச்சுவார்த்தையின்மூலம்இந்தப்பிரச்சினைக்குசுமூகமான, நியாயமானதீர்வைஏற்படுத்துமாறுநான்அன்பாய்வேண்டுகின்றேன்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-28#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கிறார்களா.....?

சிறீலங்காவில் எந்த ஒரு பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்கு பிரச்சனை என்றால் முஸ்லிம் அரசியல்வாதிகள் தலைவர்கள் உடனே தலையிடுவார்கள்.

ஆனால் தமிழ் அரசியல்வாதிகள்...... ? பேப்பர் படிக்கத்தான் லாயக்கு.

Link to comment
Share on other sites

15 hours ago, MEERA said:

முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கிறார்களா.....?

சிறீலங்காவில் எந்த ஒரு பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்கு பிரச்சனை என்றால் முஸ்லிம் அரசியல்வாதிகள் தலைவர்கள் உடனே தலையிடுவார்கள்.

ஆனால் தமிழ் அரசியல்வாதிகள்...... ? பேப்பர் படிக்கத்தான் லாயக்கு.

ஏன் என்றால் அப்படி தலையிடா விட்டால் அடுத்த முறை தேர்தலில் வாக்கு கேக்க முடியாது, ஆனால் எங்கட அரசியல்வாதிகளுக்கு  எப்பவுமே இருக்கிறது தேசியமும் அரசியல் தீர்வும்

Link to comment
Share on other sites

  •  
  • ஹபாயா தொடர்பில் கவனமாகப் பேசவும்- சம்பந்தன்!!
 
 

ஹபாயா தொடர்பில் கவனமாகப் பேசவும்- சம்பந்தன்!!

 

“திரு­கோ­ண­மலை சிறி சண்­முகா இந்து மக­ளிர் கல்­லூ­ரிக்­கென உல­கம் ஏற்­றுக்­கொண்ட ஒரு மரபு உண்டு. அந்த மர­பு­க­ளுக்கு ஏற்ப கரு­மங்­கள் நடக்க வேண்­டும். அவற்றை மீறா­மல் பேச்சு நடத்­தப்­பட்டு உரிய முடி­வு­கள்  எடுக்­கப்­பட வேண்­டும்.”

இவ்­வாறு எதிர்க்­கட்­சித்  தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வ­ரும் திரு­கோ­ண­ மலை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

குறித்த கல்­லூ­ரி­யில் முஸ்­லிம் ஆசி­ரி­யை­மார் ‘ஹபாயா’ அணி­வது தொடர்­பில் எழுந்­துள்ள சர்ச்­சை­கள் குறித்து கேட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்ட அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

“திரு­கோ­ண­மலை சிறி சண்­முகா இந்து மக­ளிர் பாட­சாலை சுமார் 150 வருட பாரம்­ப­ரிய வர­லா­றைக் கொண்­டது. அந்த நாள்­க­ளில் திரு­கோ­ண­ம­லை­யில் உள்ள இந்து மக­ளி­ருக்கு ஒரு பாட­சாலை தேவை­யென சைவ இந்­துப்  பெரி­யார்­க­ளும் நலன் விரும்­பி­க­ளும் இணைந்து ஆரம்­பிக்­கப்­பட்ட தனி­யார் பாட­சாலை இது.

எனவே, அதற்­கென உள்ள சம்­பி­ர­தா­யங்­கள் மதிக்­கப்­ப­ட­வேண்­டும் எனப் பெற்­றோ­ரும் பாட­சாலை சமூ­க­மும் விரும்­பு­கின்­றது. அந்­தப் பாட­சா­லைக்­கென உல­கத்­தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒரு பாரம்­ப­ரி­யம் மர­பு­க­ளுக்கு ஏற்ப செயற்­பட வேண்­டும். இந்த விட­யங்­கள் பேசப்­பட்டு நிதா­ன­மான முடி­வு­கள் எடுக்­கப்­பட வேண்­டும். எத்­த­னையோ சகாப்­தங்­க­ளாக இருக்­கும் நடை­மு­றையை திடீ­ரென மாற்­றி­விட முடி­யாது. எனவே, பேசி சில விட­யங்­க­ளுக்­குத் தீர்வை நாம் காண வேண்­டும்” – என்­றார்.

http://newuthayan.com/story/88907.html

Link to comment
Share on other sites

’முஸ்லிம் ஆசிரியைகளும் சேலை அணிவதே பிரச்சினைக்குத் தீர்வு’
 
 

"திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில், பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசார மரபுகள், மாணவிகள், ஆசிரியைகள் அணிகின்ற உடை தொடர்பான ஒழுங்குமுறைகள் அவ்வாறே பேணப்படவேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 குறித்த கல்லூயிரில் ஏற்பட்டுள்ள ஆசிரிய ஆடை  தொடர்பான சர்ச்சை குறித்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சம்பந்தனுக்கு அனுப்பி வைத்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அந்தக் கடிதத்தில்,  "2400 மாணவிகள் கல்வி பயிலும் இக்கல்லூரியில் 120க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளும் 110 கத்தோலிக்க, கிறிஸ்தவ மாணவிகளும் பயில்கின்றனர்.

இது ஒரு தேசிய பாடசாலையாக உள்ளமையால் இங்கு எந்த இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களும் கல்வி கற்கவும் கல்விபோதிக்கவும் எத்தகைய தடையும் இல்லை.  ஆயினும், கல்லூரியில் பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசாரமரபுகள், மாணவிகள், ஆசிரியைகள் அணிகின்ற உடை தொடர்பான ஒழுங்குமுறைகள் அவ்வாறே பேணப்படவேண்டு என்பது இந்தக் கல்லூரி சமூகத்தின் விருப்பமாகும். 

முஸ்லிம் ஆசிரியைகள் ஏற்கனவே இந்தக் கல்லூரிக்குச் சேலை அணிந்து, தங்களது பாரம்பரியமான முக்காடு (பர்தா) அணிந்துவந்து சேவையாற்றியது போல மேலும் தொடர்வதை இக்கல்லூரி சமூகம் எவ்விதத்திலும் ஆட்சேபிக்கமாட்டாது. ஆசிரியைகள் கல்லூரிக்கு வருகின்றபோது மட்டும் ஆசிரியைகளுக்கான உடைபற்றிய தேசியக்  கொள்கைகளின் அடிப்படையிலும் இக்கல்லூரி ஆசிரியைகளுக்கான உடை ஒழுங்குவிதிகள் அடிப்படையிலும் செயற்படுவதே இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக அமையும் எனநான் நினைக்கின்றேன். 

இவ்விடயத்தில் எதிர் எதிரான இன, மத ரீதியான ஆர்ப்பாட்டங்களைச் சமயசார்பு அமைப்புக்கள் செய்வது விரும்பத்தக்கதல்ல என்பதே எனது நிலைப்பாடு." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/முஸ்லிம்-ஆசிரியைகளும்-சேலை-அணிவதே-பிரச்சினைக்குத்-தீர்வு/175-215121

Link to comment
Share on other sites

மேலே உள்ள விஷயம்தான் உண்மை. தற்போது அந்த ஆசிரியர்களுக்கு வேறு பாடசாலைகளுக்கு தற்காலிக இடமாற்றம்  வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கல்வி அமைச்சால் தீர்வு வரும்வரை, ஆனால் தீர்வு முன்னர்  சேலை அணிந்து, தங்களது பாரம்பரியமான முக்காடு (பர்தா) அணிந்துவந்து சேவையாற்றியது போல இருந்தால் எதுவித பிரச்சனைகளும் இல்லை மாறாக இருக்குமாயின் போராட்டம் நாடாத்தி தீர்வை பெற வேண்டியதுதான்! அது எமது உரிமை!! அது சின்ன விஷயம் என்று கண்டுகொள்ளாவிட்டால் பெரும் விருச்சமா பின்னர் வந்து நிற்கும் அதனால்தான் முளையிலேயே கிள்ளுவதற்க்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி இருந்த இரண்டு முஸ்லிலிம் ஆசிரியர்கள் ஒழுங்காய் சேலை கட்டித் தான் பாடசாலைக்கு வந்ததாகவும் மூன்றாவதாக வந்த ஆசிரியரால் தான் பிரச்சனை தொடங்கப்பட்ட்தாக  தெரிகிறது....ஒரு திடடததோட தான் யாரோ பிளான் பண்ணி அனுப்பி இருக்கிறார்கள்.... விடக் கூடாது?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப, முஸ்லீம் பள்ளிக்கூடம் ஒன்றில், துன்னூறு, சந்தனம் வைச்சுக்கொண்டு தமிழ் வாத்தியார் போலாமோ...

இந்துக் கல்லூரில வேலை வேண்டும். இந்த உரிமையும் வேணும் எண்டால்?

உங்க லண்டனில.... பாடசாலைகளில் போர்க் சொசேஜ் பாடசாலை உணவு மெனுவில் இருக்கக் கூடாது என்று போராட்டம். ஓசில சாப்பாடும் வேணும். அடுத்தவரின் உணவும் இருக்கப் படாது...

https://www.telegraph.co.uk/news/shopping-and-consumer-news/11409835/Schools-stop-serving-pork-for-religious-reasons.html

https://www.theguardian.com/education/2017/sep/28/bradford-school-ban-sausage-rolls-pork-pies-backlash

கடைசில, ஹரோ கவுன்சில் மேயர் சுரேஷ் என்ற தமிழர், விடுத்த அறிக்கை எல்லா கவுன்சில் (33) களும் பயன்படுத்தின.

இந்த நாடு எமக்கு தங்க வசதி தந்திருக்கின்றது என்பதை நினைவில் கொண்டு, அவர்களது சிறார்களின் உணவு பழக்கத்தினை, அங்கு படிக்க செல்லும் ஓர், இரு முஸ்லீம் மாணவருக்காக மாத்தக் கோருவது நியாயமானது அல்ல என்று அவர் சொன்னார். 

Link to comment
Share on other sites

6 hours ago, ரதி said:

முந்தி இருந்த இரண்டு முஸ்லிலிம் ஆசிரியர்கள் ஒழுங்காய் சேலை கட்டித் தான் பாடசாலைக்கு வந்ததாகவும் மூன்றாவதாக வந்த ஆசிரியரால் தான் பிரச்சனை தொடங்கப்பட்ட்தாக  தெரிகிறது....ஒரு திடடததோட தான் யாரோ பிளான் பண்ணி அனுப்பி இருக்கிறார்கள்.... விடக் கூடாது?
 

ஓம் ஓம் விடகூடாது .................................

Link to comment
Share on other sites

அமைச்சர் ரிஷாத்­துக்கு எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் பதில் கடிதம்

dddd-b4a9a6f0f9de90cfc1560ecaf5bf67c34b11cd70.jpg

 

 (நமது நி­ருபர்)

திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முக இந்­து­ ம­களிர் கல்­லூ­ரியில் கல்வி கற்­பிக்கும் ஆசி­ரி­யைகள் கல்­லூ­ரிக்­கு­ வ­ரு­கின்­ற­போ­து­ மட்டும் ஆசி­ரி­யை­க­ளுக்­கான உடை பற்­றி­ய ­தே­சியக் கொள்­கை­களின் அடிப்­ப­டை­யிலும் இக்­கல்­லூரி ஆசி­ரி­யை­க­ளுக்­கான உடை ஒழுங்­கு­வி­திகள் அடிப்­ப­டை­யிலும் செயற்­ப­டு­வதே தற்­போது ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைக்­கான தீர்­வா­க­அ­மையும் எனநான் நினைக்­கின்றேன் என்று எதிர்க்­கட்சி தலைவர் இரா. சம்­பந்தன் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் தெரி­வித்­துள்ளார்.   

இந்தச் சிறு­பி­ரச்­சி­னையைப் பெரி­து­ப­டுத்­தி­மேலும் வள­ர­வி­டக்­கூ­டா­து­என்­ப­தே­எ­ன­து­நி­லைப்­பாடு. ஆகவே, இந்தப் பிரச்­சி­னை­யை­சம்­பந்­தப்­பட்­ட­அ­மைச்சும்,கல்வித் திணைக்­க­ளமும் குறித்­த­கல்­லூரிச் சமூ­கமும் அக்­கல்­லூ­ரியின் பெற்­றோரும் பழை­ய­மா­ண­வி­களும் சேர்ந்­து­கட்­டுப்­பா­டா­ன­ஒ­ழுங்­கு­மு­றையில் பேசி,கல்­லூ­ரியில் பின்­பற்­றப்­பட்­டு­வந்­த­உ­டை­ம­ர­பு­க­ளுக்­கு­ம­திப்­ப­ளித்து,எந்தச் சமூ­க­மா­யினும் புதி­ய­உ­டை­க­லா­சா­ரத்­தை­அ­றி­முகம் செய்­யாமல், இது­வ­ரை­கா­லமும் இருந்­து­வந்­த­து­போ­ல­தொ­டர்­வ­தே­பொ­ருத்­த­மா­க­அ­மையும் என்றும் அந்தக் கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவ்­வாறு அனுப்­பப்­பட்­டுள்ள கடி­தத்தில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

இந்த விடயம் தொடர்­பா­க­தாங்கள் எனக்­கு­ஒ­ரு­க­டி­தத்­தை­அ­னுப்­பி­யுள்­ள­தா­ன­செய்தி சில­தமிழ் பத்­தி­ரி­கை­களில் அதன் முழு­மை­யா­ன­உள்­ள­டக்­கத்­துடன் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. குறிப்­பிட்­ட­க­டிதம் இது­வ­ரை­எ­ன­து­பார்­வைக்குக் கிடைக்­க­வில்­லை­யா­யினும்,பத்­தி­ரி­கை­களில் வெளி­வந்­த­செய்­தி­களில் முழு விப­ரமும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­மையால் அது­தொ­டர்­பா­ன­எ­ன­து­நி­லைப்­பாட்­டினைத் தங்­க­ளுக்குத் தெரி­விப்­ப­து­பொ­ருத்­த­மெ­ன­நி­னைக்­கின்றேன்.

என­து­த­லை­மைத்­துவம் பற்­றியும் மக்கள் மத்­தி­யிலும் தங்­க­ளுக்கும் என்­மீ­து­உள்­ள­ம­திப்புப் பற்­றியும் தாங்கள் சிறப்­பாகக் குறிப்­பிட்­ட­மைக்­கா­க­எ­ன­து­நன்­றியைத் தெரி­வித்­துக்­கொண்­டு­கு­றிப்­பிட்­ட­வி­டயம் தொடர்­பா­க­எ­ன­து­நி­லைப்­பாட்­டை­அ­றியத் தரு­கின்றேன்.

தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்­களைச் சேர்ந்த தமிழ்­பேசும் மக்கள் தொடர்­பா­க­எ­ம­து­த­லைவர் தந்­தை­செல்­வ­நா­யகம் பின்­பற்­றி­யதும்,அவரைத் தொடர்ந்­து­த­லைவர் அ.அமிர்­த­லிங்கம் பின்­பற்­றி­ய­து­மான,“நாம் தமிழ்­பேசும் மக்­கள்”­என்­ற­கொள்­கை­யை­நானும் தொடர்ந்­து­பின்­பற்­றி­வ­ரு­கின்றேன் என்­ப­தை­மக்­களும் நீங்­களும் நன்­கு­அ­றி­வீர்கள்.

வடக்குக் கிழக்குப் பிராந்­தி­யங்­களில் தமிழ்­பேசும் மக்­க­ளு­டைய நிலங்கள் அவர்­க­ளு­டை­ய­க­லா­சார,பாரம்­ப­ரி­யங்கள் பாது­காத்துப் பேணப்­ப­ட­வேண்டும் என்­ற­அ­டிப்­ப­டையில் பண்­டா­ர­நா­யக்­கா–­செல்­வ­நா­யகம் ஆகி­யோரால் மேற்­கொள்­ளப்­பட்­ட­ஒப்­பந்­தத்­திலும் பின்பு டட்­லி­சே­ன­நா­யக்­கா–­செல்­வ­நா­யகம் ஆகி­யோ­ருக்­கி­டையில் செய்­யப்­பட்­ட­ஒப்­பந்­தத்­தி­லும்­கு­றிப்­பி­டப்­பட்­ட­அ­தே­கொள்­கை­யின்­ப­டி­யே­எ­ன­து­அ­ர­சியற் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தையும் இங்கு குறிப்­பி­ட­வி­ரும்­பு­கின்றேன். அந்­த­வ­கையில் தமிழ் - முஸ்லிம் ஒற்­று­மை­யை­ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­க­கு­றிப்­பா­க­எ­ன­து­தொ­கு­தி­யா­ன­தி­ரு­கோ­ண­ம­லை­யிலும் பொது­வாக இந்­நாட்­டிலும் நானும் நான் சார்ந்­த­அ­ர­சியல் கட்­சி­களும் எம்மால் முடிந்­த­ள­வு­பங்­க­ளிப்பைச் செய்­து­வ­ரு­கின்றோம்.

திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முக இந்­து­ம­களிர் கல்­லூரி 95 ஆண்­டு­க­ளுக்­கு­முன்னர் இந்­து­ம­களிர் கல்­வி­கற்­ப­தற்­காக இந்­து­ச­மயப் பெண்­ம­ணி­யா­ன­தங்­கம்­மா­சண்­மு­கம்­பிள்­ளை­என்­ற­கொ­டை­யா­ளி­யினால் தன­து­சொந்தப் பணத்­திலும்,சொந்­த­நி­லத்­திலும் இந்து மக­ளிரின் கல்­வி­மேம்­பாட்­டுக்­கா­க­ஆ­ரம்­பிக்­கப்­பட்­டு­ந­டை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டு­வந்த ஒரு பாட­சா­லை­யாகும். 1960களுக்குப் பின்னர் இந்தப் பாட­சா­லையை அர­சாங்கம் பொறுப்­பேற்­ப­தற்­கு­முன்னர் இங்கு இந்­து­ம­களிர் மாத்­திரம் உயர்­கல்­வி­கற்­று­வந்­த­தோடு, இந்­து­க­லா­சா­ர­பா­ரம்­ப­ரி­யங்­களும் பின்­பற்­றப்­பட்­டு­வந்­த­வ­ர­லா­று­உண்டு. தனியார் பாட­சா­லை­களைப் பொறுப்­பேற்கும் அர­சாங்­கத்தின் திட்­டத்தின் கீழ் கிறிஸ்­த­வ­பா­தி­ரி­மார்கள் நடாத்­தி­ய­பி­ர­ப­ல­பா­ட­சா­லை­களும் அதே­போன்று இந்­து­மற்றும் ஏனைய சமூ­க­நி­று­வ­னங்­களால் பரா­ம­ரிக்­கப்­பட்­டு­வந்­த­பா­ட­சா­லை­களும் பொறுப்­பேற்­கப்­பட்­ட­போதும்,அவற்றின் பெயர்,கலா­சாரம்,கல்­வி­மு­றை­என்­ப­ன­மாற்­றங்­க­ளுக்­கு­உட்­ப­டாமல் தொடர்ந்­து­பே­ணப்­படும் என்­ற­அ­டிப்­ப­டை­யி­லே­யே­அ­வை­பொ­றுப்­பேற்­கப்­பட்­டன.

இந்­த­நி­லை­மை­யே­தொ­டர்ந்தும் அவ்­வா­றா­ன­அ­நே­க­பா­ட­சா­லை­களில் பேணப்­பட்­டு­வ­ரு­வதைத் தாங்­களும் அறி­வீர்கள். இதன் அடிப்­ப­டை­யி­லேயே திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முக இந்­து­ம­களிர் கல்­லூ­ரி­யிலும் அதன் ஆரம்­ப­கா­ல­ம­ர­புகள் பேணப்­பட்­டு­வ­ரு­வ­தோடு, இன்­று­தே­சியப் பாட­சா­லை­யா­க­அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டு­சி­றந்­த­உயர் பெறு­பே­று­களைப் பெறும் பாட­சா­லை­யாகச் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. அவ்­வா­று­செ­யற்­ப­டு­வ­தற்­கு­பெற்­றோர்கள்,நலன்­வி­ரும்­பிகள்,பழை­ய­மா­ண­விகள் மற்றும் சமய,சமூ­க­நி­று­வ­னங்கள் உத­வி­யா­கவும் அனு­ச­ர­ணை­யா­கவும் இருந்­து­வ­ரு­கின்­றன.

அண்­மையில் இந்தக் கல்­லூ­ரியில் நடந்­த­சம்­ப­வங்கள் தொடர்­பா­க­எ­ன­து­க­வ­னத்­துக்குத் தெரி­விக்­கப்­பட்­ட­தன்­படி,கடந்­த­நான்­கு­ஆண்­டு­க­ளாக முஸ்லிம் ஆசி­ரி­யைகள் மூன்­றுபேர் இக் கல்­லூ­ரியில் சேவைக்­காக இணைக்­கப்­பட்டுத் தம­து­க­ட­மை­களைச் செய்­து­வந்­த­போ­து­அ­வர்கள் இக்­கல்­லூ­ரியின் உடை­நி­ய­தி­க­ளுக்­கு­அ­மை­வா­க­சே­லை­அ­ணிந்­தே­கல்­லூ­ரிக்­கு­வந்­து­கொண்­டி­ருந்­தனர். அவர்கள் முழு­மை­யாக இக் கல்­லூ­ரியின் மரபு,கல்­லூரி ஒழுக்­க­வி­தி­மு­றைகள் மற்றும் கல்­வி­வி­ழு­மி­யங்­க­ளுக்­கு­அ­மை­வா­க­க­டந்­த­நான்­கு­ஆண்­டு­க­ளா­க­எவ்­வி­த­வே­று­பாடும் இன்றிச் செயற்­பட்­டுள்­ளனர்.

அவர்கள் தொடர்­பாக இந்தக் கல்­லூரி சமூகம் எத்­த­கை­ய­எ­திர்ப்­பையும் வெளிக்­காட்­ட­வில்லை. ஆயினும், இந்­த­ஆண்டு ஜன­வ­ரி­மாதம் முதல்­ஒரு முஸ்­லிம்­ஆ­சி­ரியை இட­மாற்­றம்­பெற்­று­வந்­த­போது முஸ்லிம் பெண்கள் அணியும் ‘அபா­யா’­உ­டையில் கல்­லூ­ரிக்­கு­வந்­துள்ளார். அவ்­வே­ளையில் கல்­லூரி அதிபர் அந்­த­ஆ­சி­ரி­யைக்­கு­அந்தக் கல்­லூரி ஆசி­ரி­யை­களின் உடை­தொ­டர்­பா­ன­ம­ர­பு­க­ளையும்,அப்­பா­ட­சா­லை­ஒ­ழுக்­க­வி­தி­க­ளையும் எடுத்­துக்­கூறி ஏனைய ஆசி­ரி­யை­களைப் போன்­று­சே­லை­அ­ணிந்­து­வ­ரு­மா­று­ஆ­லோ­ச­னை­வ­ழங்­கி­யுள்ளார்.

குறித்­த­ஆ­சி­ரி­யையும் தன­து­உ­டையில் மாற்றம் செய்­து­சே­லை­அ­ணிந்­து­வ­ரு­வ­தற்­கு­சி­றி­து­கா­ல­அ­வ­காசம் கோரி­யி­ருந்­ததால் அதற்கு இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அவ்­வாறு இருந்­த­வே­ளையில், இந்­த­மாதம் 22ந் திகதி,ஏற்­கெ­ன­வே­சே­லை­அ­ணிந்­து­கல்­லூ­ரிக்­கு­வந்­து­கொண்­டி­ருந்த மூன்று முஸ்லிம் ஆசி­ரி­யை­களும் கண­வர்­மா­ருடன் கல்­லூ­ரிக்­கு­வந்­து­தாமும் இனிமேல் ‘அபா­யா’­அ­ணிந்­து­வ­ரப்­போ­வ­தா­கவும்,அது­த­ம­து­உ­ரி­மை­என்­ற­ரீ­தி­யிலும் அச்­சு­றுத்தும் பாணியில் அதி­ப­ருக்குத் தெரி­வித்­து­விட்­டு­அ­டுத்­தநாள் ‘அபா­யா’­உ­டை­அ­ணிந்­து­வந்­துள்­ளனர்.

இதனைக் கண்­ணுற்ற மாண­வி­களும் பெற்­றோர்­களும் பழை­ய­மா­ண­வி­களும் மற்றும் பாட­சா­லையின் நலன்­வி­ரும்­பி­களும் முஸ்லிம் ஆசி­ரி­யை­களின் இந்தத் திடீ­ரெ­ன­ஏற்­பட்­ட­உ­டை­மாற்றம் தொடர்­பா­க­த­ம­து­ஆட்­சே­ப­னையைத் தெரி­வித்­து­எ­திர்ப்­பு­ஆர்ப்­பாட்டம் ஒன்­றை­மேற்­கொண்­டனர். இதனால் ஏற்­பட்­ட­அ­மை­தி­யின்­மையைத் தொடர்ந்­து­மே­ல­திகக் கல்விப் பணிப்­பாளர் தலை­மையில் அதிபர் மற்றும் சம்­பந்­தப்­பட்­ட­த­ரப்­பினர் பேசி­ஒ­ரு­தற்­கா­லி­க­ஏற்­பா­டு­செய்­யப்­பட்­டு­நி­லை­மை­கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தா­க­அ­றி­கின்றேன்.

2400 மாண­விகள் கல்­வி­ப­யிலும் இக்­கல்­லூ­ரியில் கிட்­டத்­தட்ட 120 க்குமேற்­பட்ட முஸ்லிம் மாண­வி­களும் 110 கத்­தோ­லிக்க,கிறிஸ்­த­வ­மா­ண­வி­களும் இப்­போ­து­கல்­வி­ப­யில்­கின்­றனர்.

இது­ஒ­ரு­தே­சி­ய­பா­ட­சா­லை­யா­க­உள்­ள­மையால் இங்­கு­எந்த இனத்­தை­அல்­ல­து­ம­தத்தைச் சேர்ந்­த­வர்­களும் கல்­வி­கற்­கவும் கல்­வி­போ­திக்­கவும் எத்­த­கை­ய­த­டையும் இல்லை. ஆயினும்,கல்­லூ­ரியில் பேணப்­பட்­டு­வந்­த­ஒ­ழுக்கக் கட்­டுப்­பா­டுகள்,கலா­சா­ர­ம­ர­புகள்,மாண­விகள்,ஆசி­ரி­யைகள் அணி­கின்­ற­உ­டை­தொ­டர்­பா­ன­ஒ­ழுங்­கு­மு­றைகள் அவ்­வா­றே­பே­ணப்­ப­ட­வேண்­டு­என்­பது இந்தக் கல்­லூரி சமூ­கத்தின் விருப்­ப­மாகும்.

முஸ்லிம் ஆசி­ரி­யைகள் ஏற்­கெ­னவே இந்தக் கல்­லூ­ரிக்குச் சேலை­அ­ணிந்து,தங்­க­ள­து­பா­ரம்­ப­ரி­ய­மா­ன­முக்­காடு (பர்தா) அணிந்­து­வந்­து­சே­வை­யாற்­றி­ய­து­போ­ல­மேலும் தொடர்­வதை இக்­கல்­லூரி சமூகம் எவ்­வி­தத்­திலும் ஆட்­சே­பிக்­க­மாட்­டாது. அது­போல இக்­கல்­லூ­ரியில் கல்­வி­கற்­பிக்கும் ஆசி­ரி­யைகள் கல்­லூ­ரிக்­கு­வெ­ளி­யேதாம் விரும்­பி­ய­வா­று­உ­டை­அ­ணிந்­து­கொள்­வதும் அவர்­க­ள­து­வி­ருப்­ப­மாகும். ஆயினும்,அவர்கள் கல்­லூ­ரிக்­கு­வ­ரு­கின்­ற­போ­து­மட்டும் ஆசி­ரி­யை­க­ளுக்­கா­ன­உ­டை­பற்­றி­ய­தே­சியக் கொள்­கை­களின் அடிப்­ப­டை­யிலும் இக்­கல்­லூரி ஆசி­ரி­யை­க­ளுக்­கா­ன­உ­டை­ஒ­ழுங்­கு­வி­திகள் அடிப்­ப­டை­யிலும் செயற்­ப­டு­வதே இந்தப் பிரச்­சி­னைக்­கா­ன­தீர்­வா­க­அ­மையும் எனநான் நினைக்­கின்றேன். இவ்­வி­ட­யத்தில் எதிர் எதி­ரான இன,மத­ரீ­தி­யா­ன­ஆர்ப்­பாட்­டங்­களைச் சம­ய­சார்­பு­அ­மைப்­புக்கள் செய்­வ­து­வி­ரும்­பத்­தக்­க­தல்­ல­என்­ப­தே­எ­ன­து­நி­லைப்­பாடு.

இனங்­க­ளுக்­கு­ரி­ய­க­லா­சா­ர­உ­டை­களில் அண்மைக் காலங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுவருவதுதவிர்க்கமுடியாதது. இலங்கையில் முஸ்லிம் பெண்கள் ‘அபாயா’அணிவதும் அவ்வாறானஅண்மைக்காலஒருமாற்றமாகும். இத்தகையமாற்றங்கள் எல்லாச் சமூகங்களுக்கும் எல்லா இனங்களுக்கும் பொதுவானதும் அவர்களுக்குரியஉரிமையுமாகும். இவ்வாறுஆடைக் கலாசாரத்தில்அதிகமாற்றங்கள் ஏற்பட்டாலும் இன்னமும் ஆசிரியபயிற்சிக் கல்லூரிகள் மற்றும் ஏனைய மதப் பாடசாலைகளில் போதிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளும் சேலைஅணிவதேதற்போதும் நடைமுறையில் உள்ளது. அதுபோலவிசேடசந்தர்ப்பங்களில் அல்லது இடங்களில்,உதாரணமாகபாடசாலைகள்,புனிதத்தலங்கள்,மதவழிபாட்டிடங்கள் மற்றும் சிலஅலுவலகங்களில் உடைதொடர்பானகட்டுப்பாடுகள் பேணப்படுவதுஅந்தந்தநிறுவனங்களுக்குரியதனித்துவமாகும். அதில் மாற்றங்களைச் செய்யமுனைந்தால் சமூகத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாதுபோகும். நீங்கள் குறிப்பிட்டதுபோலகடந்தகாலங்களில் எமதுஇரு சமூகங்களுக்கு இடையிலானசிற்சிலபிரச்சினைகளைப் பூதாகரமாக்கிபிளவுகளைஏற்படுத்திஅவற்றில் குளிர்காயபல்வேறுதீயசக்திகள் செயற்பட்டுவந்துள்ளன

என்பதைநானும் ஏற்றுக் கொள்ளுகின்றேன். அத்தகையதீயசெயற்பாடுகளுக்குநீங்களோ,நானோமுக்கியத்துவம் அளிக்கக் கூடாதென்பதேஎனதுவிரும்பம்.

எனவே, இந்தச் சிறுபிரச்சினையைப் பெரிதுபடுத்திமேலும் வளரவிடக்கூடாதுஎன்பதேஎனதுநிலைப்பாடு. ஆகவே, இந்தப் பிரச்சினையைசம்பந்தப்பட்டஅமைச்சும்,கல்வித் திணைக்களமும் குறித்தகல்லூரிச் சமூகமும் அக்கல்லூரியின் பெற்றோரும் பழையமாணவிகளும் சேர்ந்துகட்டுப்பாடானஒழுங்குமுறையில் பேசி,கல்லூரியில் பின்பற்றப்பட்டுவந்தஉடைமரபுகளுக்குமதிப்பளித்து,எந்தச் சமூகமாயினும் புதியஉடைகலாசாரத்தைஅறிமுகம் செய்யாமல், இதுவரைகாலமும் இருந்துவந்ததுபோலதொடர்வதேபொருத்தமாகஅமையும் என்பதுஎனதுஅபிப்பிராயமாகும். அதற்காகதங்களின் ஒத்துழைப்பையும் தங்களதுசமூகத்தினதுஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-30#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.