Jump to content

சம்பந்தனுக்கு ரிஷாட் கடிதம்


Recommended Posts

சம்பந்தனுக்கு ரிஷாட் கடிதம்

 

(நமது நிருபர்)

சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திரு கோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல் லூரியின் அபாயா பிரச்சினைக்கு நியாய மான தீர்வைக்காண உதவுமாறுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், ஹபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்தக் கடிதத்தில் அமைச்சர்மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர்கல்லூரி முஸ்லிம் ஆசிரியர்களின்’ அபாயா’ விவகாரத்தில் தலையிட்டு இந்தப் பிரச்சினையை சுமூகமாகத்தீர்த்துவைக் கமூத்தஅரசியல்வாதியான நீங்கள் உதவவேண்டும். இந்தசம்பவத்தைப் பயன்படுத்தி தமிழ் -முஸ்லிம் உறவைசீர்குலைக்க முற்படும்சக்திகள் குறித்துநாம் விழிப்பாயிருக்கவேண்டியதேவைஎழுந்துள்ளது.

சிங்கள, தமிழ், முஸ்லிம்ஆகியமூவின மும்பரஸ்பரபுரிந்துணர்வுடனும், நிம்மதியாகவும்வாழும் திருமலைமாவட்டத்தில் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டிருப்பது, இனங்களுக்கிடையிலான உறவைசீர்குலைக்கும் துரதிஷ்ட நிலைக்கே வழிவகுக்கும்.

யுத்தம் முடிந்துசமாதானம்ஏற்பட்டபின்னர்தமிழ் -முஸ்லிம் உறவு தழைத்தோங்கி மலர்ந்து வரும்தற்போதையகாலகட்டத்தில், இவ்வாறான சிறியசம்பவங்கள் பெரிதுபடுத்தப்பட்டுஇருஇனங்களுக்கிடை யிலானசச்சரவாக, அதுமாறுவதற்குநாங்கள்அனுமதிக்கமுடியாது.

திருமலைமாவட்டமுஸ்லிம்களுடன்நீண்டகாலமாகநல்லுறவுடனும்,அந்நியோன்னியமாகவும்வாழும்உங்களைப்போன்றமூத்ததலைவர்களுக்குமுஸ்லிம்களின்சமய, கலாச்சார,பண்பாட்டுவிழுமியங்கள்நன்குதெரியும். அதுமட்டுமன்றிநான்உட்படநான்சார்ந்தசமூகமும்உங்களைஒருநீதியான, நேர்மையானஅரசியல்தலைவராகவேகருதிவருகின்றோம். அநியாயங்களுக்குநீங்கள்ஒருபோதுமே துணைபோனவர்அல்ல. அதேபோன்றுஇனியும்அவ்வாறுநீங்கள்அநீதியானசெயற்பாடுகளுக்குஇடமளிக்கமாட்டீர்கள்என்றநம்பிக்கையிலேயேஇந்தக்கடிதத்தைஎழுதுகின்றேன்.இந்தப்பிரச்சினையில் அவசரமாகநீங்கள் தலையிட்டு,சமரசத்தீர்வொன்றைக்காணவேண்டுமெனநாம்விரும்புகின்றோம்.

முஸ்லிம்களின்கலாச்சாரஉடையானதுஇன்று,நேற்றுதிடீரென்றுவந்த ஒன்றல்ல என்பதை,முஸ்லிம்களுடன் நெருங்கிப்பழகும்நீங்கள் நன்கறிவீர்கள். தமிழர்களும் முஸ்லிம்களும்ஒரேமொழிபேசும்சிறுபான்மைச்சமூகமாகும். கடந்தகாலங்களில்இரண்டுசமூகங்களுக்கிடையிலானசிற்சிலபிரச்சினைகளைபூதாகரமாக்கி, பிளவுகளை ஏற்படுத்தி அவற்றில்குளிர்காய பல்வேறுதீய சக்திகள் செயற்பட்டன. அதேபோன்றுமீண்டும்தமிழ் -முஸ்லிம்உறவைசீர்குலைத்து ஆதாயம்தேடசிலதீயசக்திகள் மீண்டும் முற்பட்டு வருகின்றன.

எனவேஇனியும்இரண்டுசமூகங்களும் ஒருவரோடுஒருவர்புரிந்துவாழவும், ஒருவரைஒருவர்மதித்துவாழவும்சிறந்தஅடித்தளம்கட்டியெழுப்பப்படவேண்டியது காலத்தின் தேவையாகும்.

அந்தவகையில்,தற்போதுமீளஉருவாகிவரும்ஒற்றுமையையும், இனசௌஜன்யத்தையும் சிதைத்து, சின்னாபின்னமாக்குவதற்குஇவ்வாறானசிறியசம்பவங்கள்கால்கோளாகஅமைந்துவிடக்கூடாது.

எனவே,திருமலைமாவட்டத்தின்மூத்தஅரசியல்வாதியாகவும், தமிழர்களின்தலைவராகவும்அனைத்துசமூகங்களினாலும்பெரிதும்மதிக்கப்படுபவரானநீங்கள், திருமலைமாவட்டதமிழ், முஸ்லிம்அரசியல்வாதிகள், சமூகத்தலைவர்கள், இந்தவிடயத்தில்சம்பந்தப்பட்டோர் மற்றும் கல்விசார் ஆர்வலர்கள் அனைவரையும் அழைத்து, சமரசப்பேச்சுவார்த்தையின்மூலம்இந்தப்பிரச்சினைக்குசுமூகமான, நியாயமானதீர்வைஏற்படுத்துமாறுநான்அன்பாய்வேண்டுகின்றேன்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-28#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கிறார்களா.....?

சிறீலங்காவில் எந்த ஒரு பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்கு பிரச்சனை என்றால் முஸ்லிம் அரசியல்வாதிகள் தலைவர்கள் உடனே தலையிடுவார்கள்.

ஆனால் தமிழ் அரசியல்வாதிகள்...... ? பேப்பர் படிக்கத்தான் லாயக்கு.

Link to comment
Share on other sites

15 hours ago, MEERA said:

முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கிறார்களா.....?

சிறீலங்காவில் எந்த ஒரு பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்கு பிரச்சனை என்றால் முஸ்லிம் அரசியல்வாதிகள் தலைவர்கள் உடனே தலையிடுவார்கள்.

ஆனால் தமிழ் அரசியல்வாதிகள்...... ? பேப்பர் படிக்கத்தான் லாயக்கு.

ஏன் என்றால் அப்படி தலையிடா விட்டால் அடுத்த முறை தேர்தலில் வாக்கு கேக்க முடியாது, ஆனால் எங்கட அரசியல்வாதிகளுக்கு  எப்பவுமே இருக்கிறது தேசியமும் அரசியல் தீர்வும்

Link to comment
Share on other sites

  •  
  • ஹபாயா தொடர்பில் கவனமாகப் பேசவும்- சம்பந்தன்!!
 
 

ஹபாயா தொடர்பில் கவனமாகப் பேசவும்- சம்பந்தன்!!

 

“திரு­கோ­ண­மலை சிறி சண்­முகா இந்து மக­ளிர் கல்­லூ­ரிக்­கென உல­கம் ஏற்­றுக்­கொண்ட ஒரு மரபு உண்டு. அந்த மர­பு­க­ளுக்கு ஏற்ப கரு­மங்­கள் நடக்க வேண்­டும். அவற்றை மீறா­மல் பேச்சு நடத்­தப்­பட்டு உரிய முடி­வு­கள்  எடுக்­கப்­பட வேண்­டும்.”

இவ்­வாறு எதிர்க்­கட்­சித்  தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வ­ரும் திரு­கோ­ண­ மலை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

குறித்த கல்­லூ­ரி­யில் முஸ்­லிம் ஆசி­ரி­யை­மார் ‘ஹபாயா’ அணி­வது தொடர்­பில் எழுந்­துள்ள சர்ச்­சை­கள் குறித்து கேட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்ட அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

“திரு­கோ­ண­மலை சிறி சண்­முகா இந்து மக­ளிர் பாட­சாலை சுமார் 150 வருட பாரம்­ப­ரிய வர­லா­றைக் கொண்­டது. அந்த நாள்­க­ளில் திரு­கோ­ண­ம­லை­யில் உள்ள இந்து மக­ளி­ருக்கு ஒரு பாட­சாலை தேவை­யென சைவ இந்­துப்  பெரி­யார்­க­ளும் நலன் விரும்­பி­க­ளும் இணைந்து ஆரம்­பிக்­கப்­பட்ட தனி­யார் பாட­சாலை இது.

எனவே, அதற்­கென உள்ள சம்­பி­ர­தா­யங்­கள் மதிக்­கப்­ப­ட­வேண்­டும் எனப் பெற்­றோ­ரும் பாட­சாலை சமூ­க­மும் விரும்­பு­கின்­றது. அந்­தப் பாட­சா­லைக்­கென உல­கத்­தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒரு பாரம்­ப­ரி­யம் மர­பு­க­ளுக்கு ஏற்ப செயற்­பட வேண்­டும். இந்த விட­யங்­கள் பேசப்­பட்டு நிதா­ன­மான முடி­வு­கள் எடுக்­கப்­பட வேண்­டும். எத்­த­னையோ சகாப்­தங்­க­ளாக இருக்­கும் நடை­மு­றையை திடீ­ரென மாற்­றி­விட முடி­யாது. எனவே, பேசி சில விட­யங்­க­ளுக்­குத் தீர்வை நாம் காண வேண்­டும்” – என்­றார்.

http://newuthayan.com/story/88907.html

Link to comment
Share on other sites

’முஸ்லிம் ஆசிரியைகளும் சேலை அணிவதே பிரச்சினைக்குத் தீர்வு’
 
 

"திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில், பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசார மரபுகள், மாணவிகள், ஆசிரியைகள் அணிகின்ற உடை தொடர்பான ஒழுங்குமுறைகள் அவ்வாறே பேணப்படவேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 குறித்த கல்லூயிரில் ஏற்பட்டுள்ள ஆசிரிய ஆடை  தொடர்பான சர்ச்சை குறித்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சம்பந்தனுக்கு அனுப்பி வைத்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அந்தக் கடிதத்தில்,  "2400 மாணவிகள் கல்வி பயிலும் இக்கல்லூரியில் 120க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளும் 110 கத்தோலிக்க, கிறிஸ்தவ மாணவிகளும் பயில்கின்றனர்.

இது ஒரு தேசிய பாடசாலையாக உள்ளமையால் இங்கு எந்த இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களும் கல்வி கற்கவும் கல்விபோதிக்கவும் எத்தகைய தடையும் இல்லை.  ஆயினும், கல்லூரியில் பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசாரமரபுகள், மாணவிகள், ஆசிரியைகள் அணிகின்ற உடை தொடர்பான ஒழுங்குமுறைகள் அவ்வாறே பேணப்படவேண்டு என்பது இந்தக் கல்லூரி சமூகத்தின் விருப்பமாகும். 

முஸ்லிம் ஆசிரியைகள் ஏற்கனவே இந்தக் கல்லூரிக்குச் சேலை அணிந்து, தங்களது பாரம்பரியமான முக்காடு (பர்தா) அணிந்துவந்து சேவையாற்றியது போல மேலும் தொடர்வதை இக்கல்லூரி சமூகம் எவ்விதத்திலும் ஆட்சேபிக்கமாட்டாது. ஆசிரியைகள் கல்லூரிக்கு வருகின்றபோது மட்டும் ஆசிரியைகளுக்கான உடைபற்றிய தேசியக்  கொள்கைகளின் அடிப்படையிலும் இக்கல்லூரி ஆசிரியைகளுக்கான உடை ஒழுங்குவிதிகள் அடிப்படையிலும் செயற்படுவதே இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக அமையும் எனநான் நினைக்கின்றேன். 

இவ்விடயத்தில் எதிர் எதிரான இன, மத ரீதியான ஆர்ப்பாட்டங்களைச் சமயசார்பு அமைப்புக்கள் செய்வது விரும்பத்தக்கதல்ல என்பதே எனது நிலைப்பாடு." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/முஸ்லிம்-ஆசிரியைகளும்-சேலை-அணிவதே-பிரச்சினைக்குத்-தீர்வு/175-215121

Link to comment
Share on other sites

மேலே உள்ள விஷயம்தான் உண்மை. தற்போது அந்த ஆசிரியர்களுக்கு வேறு பாடசாலைகளுக்கு தற்காலிக இடமாற்றம்  வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கல்வி அமைச்சால் தீர்வு வரும்வரை, ஆனால் தீர்வு முன்னர்  சேலை அணிந்து, தங்களது பாரம்பரியமான முக்காடு (பர்தா) அணிந்துவந்து சேவையாற்றியது போல இருந்தால் எதுவித பிரச்சனைகளும் இல்லை மாறாக இருக்குமாயின் போராட்டம் நாடாத்தி தீர்வை பெற வேண்டியதுதான்! அது எமது உரிமை!! அது சின்ன விஷயம் என்று கண்டுகொள்ளாவிட்டால் பெரும் விருச்சமா பின்னர் வந்து நிற்கும் அதனால்தான் முளையிலேயே கிள்ளுவதற்க்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி இருந்த இரண்டு முஸ்லிலிம் ஆசிரியர்கள் ஒழுங்காய் சேலை கட்டித் தான் பாடசாலைக்கு வந்ததாகவும் மூன்றாவதாக வந்த ஆசிரியரால் தான் பிரச்சனை தொடங்கப்பட்ட்தாக  தெரிகிறது....ஒரு திடடததோட தான் யாரோ பிளான் பண்ணி அனுப்பி இருக்கிறார்கள்.... விடக் கூடாது?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப, முஸ்லீம் பள்ளிக்கூடம் ஒன்றில், துன்னூறு, சந்தனம் வைச்சுக்கொண்டு தமிழ் வாத்தியார் போலாமோ...

இந்துக் கல்லூரில வேலை வேண்டும். இந்த உரிமையும் வேணும் எண்டால்?

உங்க லண்டனில.... பாடசாலைகளில் போர்க் சொசேஜ் பாடசாலை உணவு மெனுவில் இருக்கக் கூடாது என்று போராட்டம். ஓசில சாப்பாடும் வேணும். அடுத்தவரின் உணவும் இருக்கப் படாது...

https://www.telegraph.co.uk/news/shopping-and-consumer-news/11409835/Schools-stop-serving-pork-for-religious-reasons.html

https://www.theguardian.com/education/2017/sep/28/bradford-school-ban-sausage-rolls-pork-pies-backlash

கடைசில, ஹரோ கவுன்சில் மேயர் சுரேஷ் என்ற தமிழர், விடுத்த அறிக்கை எல்லா கவுன்சில் (33) களும் பயன்படுத்தின.

இந்த நாடு எமக்கு தங்க வசதி தந்திருக்கின்றது என்பதை நினைவில் கொண்டு, அவர்களது சிறார்களின் உணவு பழக்கத்தினை, அங்கு படிக்க செல்லும் ஓர், இரு முஸ்லீம் மாணவருக்காக மாத்தக் கோருவது நியாயமானது அல்ல என்று அவர் சொன்னார். 

Link to comment
Share on other sites

6 hours ago, ரதி said:

முந்தி இருந்த இரண்டு முஸ்லிலிம் ஆசிரியர்கள் ஒழுங்காய் சேலை கட்டித் தான் பாடசாலைக்கு வந்ததாகவும் மூன்றாவதாக வந்த ஆசிரியரால் தான் பிரச்சனை தொடங்கப்பட்ட்தாக  தெரிகிறது....ஒரு திடடததோட தான் யாரோ பிளான் பண்ணி அனுப்பி இருக்கிறார்கள்.... விடக் கூடாது?
 

ஓம் ஓம் விடகூடாது .................................

Link to comment
Share on other sites

அமைச்சர் ரிஷாத்­துக்கு எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் பதில் கடிதம்

dddd-b4a9a6f0f9de90cfc1560ecaf5bf67c34b11cd70.jpg

 

 (நமது நி­ருபர்)

திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முக இந்­து­ ம­களிர் கல்­லூ­ரியில் கல்வி கற்­பிக்கும் ஆசி­ரி­யைகள் கல்­லூ­ரிக்­கு­ வ­ரு­கின்­ற­போ­து­ மட்டும் ஆசி­ரி­யை­க­ளுக்­கான உடை பற்­றி­ய ­தே­சியக் கொள்­கை­களின் அடிப்­ப­டை­யிலும் இக்­கல்­லூரி ஆசி­ரி­யை­க­ளுக்­கான உடை ஒழுங்­கு­வி­திகள் அடிப்­ப­டை­யிலும் செயற்­ப­டு­வதே தற்­போது ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைக்­கான தீர்­வா­க­அ­மையும் எனநான் நினைக்­கின்றேன் என்று எதிர்க்­கட்சி தலைவர் இரா. சம்­பந்தன் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் தெரி­வித்­துள்ளார்.   

இந்தச் சிறு­பி­ரச்­சி­னையைப் பெரி­து­ப­டுத்­தி­மேலும் வள­ர­வி­டக்­கூ­டா­து­என்­ப­தே­எ­ன­து­நி­லைப்­பாடு. ஆகவே, இந்தப் பிரச்­சி­னை­யை­சம்­பந்­தப்­பட்­ட­அ­மைச்சும்,கல்வித் திணைக்­க­ளமும் குறித்­த­கல்­லூரிச் சமூ­கமும் அக்­கல்­லூ­ரியின் பெற்­றோரும் பழை­ய­மா­ண­வி­களும் சேர்ந்­து­கட்­டுப்­பா­டா­ன­ஒ­ழுங்­கு­மு­றையில் பேசி,கல்­லூ­ரியில் பின்­பற்­றப்­பட்­டு­வந்­த­உ­டை­ம­ர­பு­க­ளுக்­கு­ம­திப்­ப­ளித்து,எந்தச் சமூ­க­மா­யினும் புதி­ய­உ­டை­க­லா­சா­ரத்­தை­அ­றி­முகம் செய்­யாமல், இது­வ­ரை­கா­லமும் இருந்­து­வந்­த­து­போ­ல­தொ­டர்­வ­தே­பொ­ருத்­த­மா­க­அ­மையும் என்றும் அந்தக் கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவ்­வாறு அனுப்­பப்­பட்­டுள்ள கடி­தத்தில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

இந்த விடயம் தொடர்­பா­க­தாங்கள் எனக்­கு­ஒ­ரு­க­டி­தத்­தை­அ­னுப்­பி­யுள்­ள­தா­ன­செய்தி சில­தமிழ் பத்­தி­ரி­கை­களில் அதன் முழு­மை­யா­ன­உள்­ள­டக்­கத்­துடன் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. குறிப்­பிட்­ட­க­டிதம் இது­வ­ரை­எ­ன­து­பார்­வைக்குக் கிடைக்­க­வில்­லை­யா­யினும்,பத்­தி­ரி­கை­களில் வெளி­வந்­த­செய்­தி­களில் முழு விப­ரமும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­மையால் அது­தொ­டர்­பா­ன­எ­ன­து­நி­லைப்­பாட்­டினைத் தங்­க­ளுக்குத் தெரி­விப்­ப­து­பொ­ருத்­த­மெ­ன­நி­னைக்­கின்றேன்.

என­து­த­லை­மைத்­துவம் பற்­றியும் மக்கள் மத்­தி­யிலும் தங்­க­ளுக்கும் என்­மீ­து­உள்­ள­ம­திப்புப் பற்­றியும் தாங்கள் சிறப்­பாகக் குறிப்­பிட்­ட­மைக்­கா­க­எ­ன­து­நன்­றியைத் தெரி­வித்­துக்­கொண்­டு­கு­றிப்­பிட்­ட­வி­டயம் தொடர்­பா­க­எ­ன­து­நி­லைப்­பாட்­டை­அ­றியத் தரு­கின்றேன்.

தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்­களைச் சேர்ந்த தமிழ்­பேசும் மக்கள் தொடர்­பா­க­எ­ம­து­த­லைவர் தந்­தை­செல்­வ­நா­யகம் பின்­பற்­றி­யதும்,அவரைத் தொடர்ந்­து­த­லைவர் அ.அமிர்­த­லிங்கம் பின்­பற்­றி­ய­து­மான,“நாம் தமிழ்­பேசும் மக்­கள்”­என்­ற­கொள்­கை­யை­நானும் தொடர்ந்­து­பின்­பற்­றி­வ­ரு­கின்றேன் என்­ப­தை­மக்­களும் நீங்­களும் நன்­கு­அ­றி­வீர்கள்.

வடக்குக் கிழக்குப் பிராந்­தி­யங்­களில் தமிழ்­பேசும் மக்­க­ளு­டைய நிலங்கள் அவர்­க­ளு­டை­ய­க­லா­சார,பாரம்­ப­ரி­யங்கள் பாது­காத்துப் பேணப்­ப­ட­வேண்டும் என்­ற­அ­டிப்­ப­டையில் பண்­டா­ர­நா­யக்­கா–­செல்­வ­நா­யகம் ஆகி­யோரால் மேற்­கொள்­ளப்­பட்­ட­ஒப்­பந்­தத்­திலும் பின்பு டட்­லி­சே­ன­நா­யக்­கா–­செல்­வ­நா­யகம் ஆகி­யோ­ருக்­கி­டையில் செய்­யப்­பட்­ட­ஒப்­பந்­தத்­தி­லும்­கு­றிப்­பி­டப்­பட்­ட­அ­தே­கொள்­கை­யின்­ப­டி­யே­எ­ன­து­அ­ர­சியற் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தையும் இங்கு குறிப்­பி­ட­வி­ரும்­பு­கின்றேன். அந்­த­வ­கையில் தமிழ் - முஸ்லிம் ஒற்­று­மை­யை­ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­க­கு­றிப்­பா­க­எ­ன­து­தொ­கு­தி­யா­ன­தி­ரு­கோ­ண­ம­லை­யிலும் பொது­வாக இந்­நாட்­டிலும் நானும் நான் சார்ந்­த­அ­ர­சியல் கட்­சி­களும் எம்மால் முடிந்­த­ள­வு­பங்­க­ளிப்பைச் செய்­து­வ­ரு­கின்றோம்.

திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முக இந்­து­ம­களிர் கல்­லூரி 95 ஆண்­டு­க­ளுக்­கு­முன்னர் இந்­து­ம­களிர் கல்­வி­கற்­ப­தற்­காக இந்­து­ச­மயப் பெண்­ம­ணி­யா­ன­தங்­கம்­மா­சண்­மு­கம்­பிள்­ளை­என்­ற­கொ­டை­யா­ளி­யினால் தன­து­சொந்தப் பணத்­திலும்,சொந்­த­நி­லத்­திலும் இந்து மக­ளிரின் கல்­வி­மேம்­பாட்­டுக்­கா­க­ஆ­ரம்­பிக்­கப்­பட்­டு­ந­டை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டு­வந்த ஒரு பாட­சா­லை­யாகும். 1960களுக்குப் பின்னர் இந்தப் பாட­சா­லையை அர­சாங்கம் பொறுப்­பேற்­ப­தற்­கு­முன்னர் இங்கு இந்­து­ம­களிர் மாத்­திரம் உயர்­கல்­வி­கற்­று­வந்­த­தோடு, இந்­து­க­லா­சா­ர­பா­ரம்­ப­ரி­யங்­களும் பின்­பற்­றப்­பட்­டு­வந்­த­வ­ர­லா­று­உண்டு. தனியார் பாட­சா­லை­களைப் பொறுப்­பேற்கும் அர­சாங்­கத்தின் திட்­டத்தின் கீழ் கிறிஸ்­த­வ­பா­தி­ரி­மார்கள் நடாத்­தி­ய­பி­ர­ப­ல­பா­ட­சா­லை­களும் அதே­போன்று இந்­து­மற்றும் ஏனைய சமூ­க­நி­று­வ­னங்­களால் பரா­ம­ரிக்­கப்­பட்­டு­வந்­த­பா­ட­சா­லை­களும் பொறுப்­பேற்­கப்­பட்­ட­போதும்,அவற்றின் பெயர்,கலா­சாரம்,கல்­வி­மு­றை­என்­ப­ன­மாற்­றங்­க­ளுக்­கு­உட்­ப­டாமல் தொடர்ந்­து­பே­ணப்­படும் என்­ற­அ­டிப்­ப­டை­யி­லே­யே­அ­வை­பொ­றுப்­பேற்­கப்­பட்­டன.

இந்­த­நி­லை­மை­யே­தொ­டர்ந்தும் அவ்­வா­றா­ன­அ­நே­க­பா­ட­சா­லை­களில் பேணப்­பட்­டு­வ­ரு­வதைத் தாங்­களும் அறி­வீர்கள். இதன் அடிப்­ப­டை­யி­லேயே திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முக இந்­து­ம­களிர் கல்­லூ­ரி­யிலும் அதன் ஆரம்­ப­கா­ல­ம­ர­புகள் பேணப்­பட்­டு­வ­ரு­வ­தோடு, இன்­று­தே­சியப் பாட­சா­லை­யா­க­அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டு­சி­றந்­த­உயர் பெறு­பே­று­களைப் பெறும் பாட­சா­லை­யாகச் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. அவ்­வா­று­செ­யற்­ப­டு­வ­தற்­கு­பெற்­றோர்கள்,நலன்­வி­ரும்­பிகள்,பழை­ய­மா­ண­விகள் மற்றும் சமய,சமூ­க­நி­று­வ­னங்கள் உத­வி­யா­கவும் அனு­ச­ர­ணை­யா­கவும் இருந்­து­வ­ரு­கின்­றன.

அண்­மையில் இந்தக் கல்­லூ­ரியில் நடந்­த­சம்­ப­வங்கள் தொடர்­பா­க­எ­ன­து­க­வ­னத்­துக்குத் தெரி­விக்­கப்­பட்­ட­தன்­படி,கடந்­த­நான்­கு­ஆண்­டு­க­ளாக முஸ்லிம் ஆசி­ரி­யைகள் மூன்­றுபேர் இக் கல்­லூ­ரியில் சேவைக்­காக இணைக்­கப்­பட்டுத் தம­து­க­ட­மை­களைச் செய்­து­வந்­த­போ­து­அ­வர்கள் இக்­கல்­லூ­ரியின் உடை­நி­ய­தி­க­ளுக்­கு­அ­மை­வா­க­சே­லை­அ­ணிந்­தே­கல்­லூ­ரிக்­கு­வந்­து­கொண்­டி­ருந்­தனர். அவர்கள் முழு­மை­யாக இக் கல்­லூ­ரியின் மரபு,கல்­லூரி ஒழுக்­க­வி­தி­மு­றைகள் மற்றும் கல்­வி­வி­ழு­மி­யங்­க­ளுக்­கு­அ­மை­வா­க­க­டந்­த­நான்­கு­ஆண்­டு­க­ளா­க­எவ்­வி­த­வே­று­பாடும் இன்றிச் செயற்­பட்­டுள்­ளனர்.

அவர்கள் தொடர்­பாக இந்தக் கல்­லூரி சமூகம் எத்­த­கை­ய­எ­திர்ப்­பையும் வெளிக்­காட்­ட­வில்லை. ஆயினும், இந்­த­ஆண்டு ஜன­வ­ரி­மாதம் முதல்­ஒரு முஸ்­லிம்­ஆ­சி­ரியை இட­மாற்­றம்­பெற்­று­வந்­த­போது முஸ்லிம் பெண்கள் அணியும் ‘அபா­யா’­உ­டையில் கல்­லூ­ரிக்­கு­வந்­துள்ளார். அவ்­வே­ளையில் கல்­லூரி அதிபர் அந்­த­ஆ­சி­ரி­யைக்­கு­அந்தக் கல்­லூரி ஆசி­ரி­யை­களின் உடை­தொ­டர்­பா­ன­ம­ர­பு­க­ளையும்,அப்­பா­ட­சா­லை­ஒ­ழுக்­க­வி­தி­க­ளையும் எடுத்­துக்­கூறி ஏனைய ஆசி­ரி­யை­களைப் போன்­று­சே­லை­அ­ணிந்­து­வ­ரு­மா­று­ஆ­லோ­ச­னை­வ­ழங்­கி­யுள்ளார்.

குறித்­த­ஆ­சி­ரி­யையும் தன­து­உ­டையில் மாற்றம் செய்­து­சே­லை­அ­ணிந்­து­வ­ரு­வ­தற்­கு­சி­றி­து­கா­ல­அ­வ­காசம் கோரி­யி­ருந்­ததால் அதற்கு இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அவ்­வாறு இருந்­த­வே­ளையில், இந்­த­மாதம் 22ந் திகதி,ஏற்­கெ­ன­வே­சே­லை­அ­ணிந்­து­கல்­லூ­ரிக்­கு­வந்­து­கொண்­டி­ருந்த மூன்று முஸ்லிம் ஆசி­ரி­யை­களும் கண­வர்­மா­ருடன் கல்­லூ­ரிக்­கு­வந்­து­தாமும் இனிமேல் ‘அபா­யா’­அ­ணிந்­து­வ­ரப்­போ­வ­தா­கவும்,அது­த­ம­து­உ­ரி­மை­என்­ற­ரீ­தி­யிலும் அச்­சு­றுத்தும் பாணியில் அதி­ப­ருக்குத் தெரி­வித்­து­விட்­டு­அ­டுத்­தநாள் ‘அபா­யா’­உ­டை­அ­ணிந்­து­வந்­துள்­ளனர்.

இதனைக் கண்­ணுற்ற மாண­வி­களும் பெற்­றோர்­களும் பழை­ய­மா­ண­வி­களும் மற்றும் பாட­சா­லையின் நலன்­வி­ரும்­பி­களும் முஸ்லிம் ஆசி­ரி­யை­களின் இந்தத் திடீ­ரெ­ன­ஏற்­பட்­ட­உ­டை­மாற்றம் தொடர்­பா­க­த­ம­து­ஆட்­சே­ப­னையைத் தெரி­வித்­து­எ­திர்ப்­பு­ஆர்ப்­பாட்டம் ஒன்­றை­மேற்­கொண்­டனர். இதனால் ஏற்­பட்­ட­அ­மை­தி­யின்­மையைத் தொடர்ந்­து­மே­ல­திகக் கல்விப் பணிப்­பாளர் தலை­மையில் அதிபர் மற்றும் சம்­பந்­தப்­பட்­ட­த­ரப்­பினர் பேசி­ஒ­ரு­தற்­கா­லி­க­ஏற்­பா­டு­செய்­யப்­பட்­டு­நி­லை­மை­கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தா­க­அ­றி­கின்றேன்.

2400 மாண­விகள் கல்­வி­ப­யிலும் இக்­கல்­லூ­ரியில் கிட்­டத்­தட்ட 120 க்குமேற்­பட்ட முஸ்லிம் மாண­வி­களும் 110 கத்­தோ­லிக்க,கிறிஸ்­த­வ­மா­ண­வி­களும் இப்­போ­து­கல்­வி­ப­யில்­கின்­றனர்.

இது­ஒ­ரு­தே­சி­ய­பா­ட­சா­லை­யா­க­உள்­ள­மையால் இங்­கு­எந்த இனத்­தை­அல்­ல­து­ம­தத்தைச் சேர்ந்­த­வர்­களும் கல்­வி­கற்­கவும் கல்­வி­போ­திக்­கவும் எத்­த­கை­ய­த­டையும் இல்லை. ஆயினும்,கல்­லூ­ரியில் பேணப்­பட்­டு­வந்­த­ஒ­ழுக்கக் கட்­டுப்­பா­டுகள்,கலா­சா­ர­ம­ர­புகள்,மாண­விகள்,ஆசி­ரி­யைகள் அணி­கின்­ற­உ­டை­தொ­டர்­பா­ன­ஒ­ழுங்­கு­மு­றைகள் அவ்­வா­றே­பே­ணப்­ப­ட­வேண்­டு­என்­பது இந்தக் கல்­லூரி சமூ­கத்தின் விருப்­ப­மாகும்.

முஸ்லிம் ஆசி­ரி­யைகள் ஏற்­கெ­னவே இந்தக் கல்­லூ­ரிக்குச் சேலை­அ­ணிந்து,தங்­க­ள­து­பா­ரம்­ப­ரி­ய­மா­ன­முக்­காடு (பர்தா) அணிந்­து­வந்­து­சே­வை­யாற்­றி­ய­து­போ­ல­மேலும் தொடர்­வதை இக்­கல்­லூரி சமூகம் எவ்­வி­தத்­திலும் ஆட்­சே­பிக்­க­மாட்­டாது. அது­போல இக்­கல்­லூ­ரியில் கல்­வி­கற்­பிக்கும் ஆசி­ரி­யைகள் கல்­லூ­ரிக்­கு­வெ­ளி­யேதாம் விரும்­பி­ய­வா­று­உ­டை­அ­ணிந்­து­கொள்­வதும் அவர்­க­ள­து­வி­ருப்­ப­மாகும். ஆயினும்,அவர்கள் கல்­லூ­ரிக்­கு­வ­ரு­கின்­ற­போ­து­மட்டும் ஆசி­ரி­யை­க­ளுக்­கா­ன­உ­டை­பற்­றி­ய­தே­சியக் கொள்­கை­களின் அடிப்­ப­டை­யிலும் இக்­கல்­லூரி ஆசி­ரி­யை­க­ளுக்­கா­ன­உ­டை­ஒ­ழுங்­கு­வி­திகள் அடிப்­ப­டை­யிலும் செயற்­ப­டு­வதே இந்தப் பிரச்­சி­னைக்­கா­ன­தீர்­வா­க­அ­மையும் எனநான் நினைக்­கின்றேன். இவ்­வி­ட­யத்தில் எதிர் எதி­ரான இன,மத­ரீ­தி­யா­ன­ஆர்ப்­பாட்­டங்­களைச் சம­ய­சார்­பு­அ­மைப்­புக்கள் செய்­வ­து­வி­ரும்­பத்­தக்­க­தல்­ல­என்­ப­தே­எ­ன­து­நி­லைப்­பாடு.

இனங்­க­ளுக்­கு­ரி­ய­க­லா­சா­ர­உ­டை­களில் அண்மைக் காலங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுவருவதுதவிர்க்கமுடியாதது. இலங்கையில் முஸ்லிம் பெண்கள் ‘அபாயா’அணிவதும் அவ்வாறானஅண்மைக்காலஒருமாற்றமாகும். இத்தகையமாற்றங்கள் எல்லாச் சமூகங்களுக்கும் எல்லா இனங்களுக்கும் பொதுவானதும் அவர்களுக்குரியஉரிமையுமாகும். இவ்வாறுஆடைக் கலாசாரத்தில்அதிகமாற்றங்கள் ஏற்பட்டாலும் இன்னமும் ஆசிரியபயிற்சிக் கல்லூரிகள் மற்றும் ஏனைய மதப் பாடசாலைகளில் போதிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளும் சேலைஅணிவதேதற்போதும் நடைமுறையில் உள்ளது. அதுபோலவிசேடசந்தர்ப்பங்களில் அல்லது இடங்களில்,உதாரணமாகபாடசாலைகள்,புனிதத்தலங்கள்,மதவழிபாட்டிடங்கள் மற்றும் சிலஅலுவலகங்களில் உடைதொடர்பானகட்டுப்பாடுகள் பேணப்படுவதுஅந்தந்தநிறுவனங்களுக்குரியதனித்துவமாகும். அதில் மாற்றங்களைச் செய்யமுனைந்தால் சமூகத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாதுபோகும். நீங்கள் குறிப்பிட்டதுபோலகடந்தகாலங்களில் எமதுஇரு சமூகங்களுக்கு இடையிலானசிற்சிலபிரச்சினைகளைப் பூதாகரமாக்கிபிளவுகளைஏற்படுத்திஅவற்றில் குளிர்காயபல்வேறுதீயசக்திகள் செயற்பட்டுவந்துள்ளன

என்பதைநானும் ஏற்றுக் கொள்ளுகின்றேன். அத்தகையதீயசெயற்பாடுகளுக்குநீங்களோ,நானோமுக்கியத்துவம் அளிக்கக் கூடாதென்பதேஎனதுவிரும்பம்.

எனவே, இந்தச் சிறுபிரச்சினையைப் பெரிதுபடுத்திமேலும் வளரவிடக்கூடாதுஎன்பதேஎனதுநிலைப்பாடு. ஆகவே, இந்தப் பிரச்சினையைசம்பந்தப்பட்டஅமைச்சும்,கல்வித் திணைக்களமும் குறித்தகல்லூரிச் சமூகமும் அக்கல்லூரியின் பெற்றோரும் பழையமாணவிகளும் சேர்ந்துகட்டுப்பாடானஒழுங்குமுறையில் பேசி,கல்லூரியில் பின்பற்றப்பட்டுவந்தஉடைமரபுகளுக்குமதிப்பளித்து,எந்தச் சமூகமாயினும் புதியஉடைகலாசாரத்தைஅறிமுகம் செய்யாமல், இதுவரைகாலமும் இருந்துவந்ததுபோலதொடர்வதேபொருத்தமாகஅமையும் என்பதுஎனதுஅபிப்பிராயமாகும். அதற்காகதங்களின் ஒத்துழைப்பையும் தங்களதுசமூகத்தினதுஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-30#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.