Jump to content

புலியைப் பார்த்து பூனை போட்ட சூடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலியைப் பார்த்து பூனை போட்ட சூடு

              

               மதுரை பல்கலைக்கழகத்தில் அறிஞர் அண்ணாவின் முதல் பட்டமளிப்பு விழாப் பேருரை இன்றளவும் பார் போற்றும் உரை. பள்ளி மாணவப் பருவத்திலேயே அவ்வுரையை மீண்டும் மீண்டும் வாசித்து இன்புற்றிருக்கிறேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி வளர்ச்சிக் குழுமத் தலைவராய் ( Dean, College Development Council )  பணியாற்றிய காலத்தில், கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தும் வாய்ப்பு அமைந்தது. அறிஞர் அண்ணாவை நினைத்தேன். "நமக்குமா?" எனும் எண்ணம் தோன்றியது. சரி, புலியைப் பார்த்து பூனை போட்ட சூடாகத்தான் இருக்கட்டுமே என என்னையே தேற்றினேன்.

 

            இதில் பேசாப் பொருள் எதுவுமில்லை. மாணவர் சமூகத்திடம் மீண்டும் மீண்டும் பேச வேண்டிய பொருள் உண்டு.  இதோ !  பூனை போட்ட சூடு :

 

            நகர்ப்புறத்தினின்றும் தொலைவில் ஒரு அசல் கிராமப்புறத்தில் அமைந்து சமுதாயத்திற்குச் சிறந்த பணியாற்றும் இப்பெருமைமிகு கல்லூரியின் செயலாளர் அவர்களே ! இக்கல்லூரியின் சமூக உணர்வுமிக்க முதல்வர் அவர்களே ! ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர் பெருமக்களே ! பெற்றோரே ! மாணவச் செல்வங்களே ! அனைவர்க்கும் என் அன்பு வணக்கம்.

 

            இனி இவ்வுரை பார் போற்றவுள்ள, இப்பாரினை மாற்றவுள்ள இளம் பட்டதாரிகளை நோக்கியதே.

 

                பட்டம் பெறும் உங்கள் அனவருக்கும் இது சாதனை நாள். நீங்கள் மட்டுமல்லாமல் உங்களை உருவாக்கிய பெற்றோர், உற்றோர், ஆசிரியர் அனைவரும் எதிர்பார்த்திருந்த நன்னாள். உங்கள் வாழ்வில் ஒளிரப் போகும் தீபத்தை உங்கள் கையில் எடுத்துத் தருவது நாங்கள் பெற்ற பேறு. வண்ணக் கனவுகளுடன் இவ்வாயிலை நீங்கள் கடக்கும் தருணம் உங்களை வாசல் வரை வந்து வழியனுப்புவது எமக்குப் பேரானந்தம். தீமையை வேரறுத்து நன்மையை நிலைநாட்ட வீறுகொண்டு எழுந்து நிற்கும் போராளிகளான உங்களுக்கு நாங்கள் பாடும் பரணி இது.

 

            கற்பவை அனைத்தும் ஈண்டு கசடறக் கற்றீர்கள். 'கற்ற வழி நிற்றல்' சமூகம் உங்களிடம் கொண்ட எதிர்பார்ப்பு. வாழ்வில் பூஞ்சோலையாய் அமைந்த மாணவர்ப் பருவத்தினின்று உங்களில் பெரும்பாலானோர் புறவுலகைக் காணச் செல்கிறீர்கள். இங்கே சோலையில் வாழ்ந்த நீங்கள் வெளியுலகில் கரிசல் காட்டையும் கருவேலங்களையும் காணலாம். புல்தரையிலேயே நடந்த உங்களுக்குக் கரடுமுரடான பாதை அமையலாம். நேர்மையின்மையும் கயமையும் ஊழலும் நிறைந்த இருள்சூழ் உலகில் மனிதர்க்கு நம்பிக்கை நட்சத்திரமாய் நீவீர் ஒளிர்வீர் என்பது பெருமைமிக்க இக்கல்லூரியின் எதிர்ப்பார்ப்பு.

 

            நாம் பணிசெய்யும் நிறுவனத்திலோ அலுவலகத்திலோ நம்மைச் சுற்றி அனைவரும் ஊழலில் திளைக்க, நாம் மட்டும் சீரிய வழியில் செல்வது எங்ஙனம் என வாதிடுவது கோழைத்தனம். மாந்தர் அனைவரும் நேர்வழி நின்றால், நேர்மை என்ற சொல்லே தோன்றியிராது.

            'ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

            சான்றோர் பழிக்கும் வினை'

எனும் அறம் சார்ந்த வாழ்வே வீரம் செறிந்த வாழ்வு. இதற்கான நெஞ்சுறுதி பெறாதோர் கற்றதனாலாய பயன்தான் என்ன ? எப்படியும் வாழலாம் என்பதை விடுத்து நீங்கள் வையத்தில் வாழ்வாங்கு வாழ எம் வாழ்த்துக்கள்.

 

            'மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திட வேண்டுமம்மா' எனும் சொல்லுக்கு இணங்க பெண்மையைப் போற்றும் பேராண்மை மிக்கவராய் இப்பூவுலகில் நீவீர் அனைவரும் வாழ்தல் வேண்டும். இன்றைய திரைப்படங்களில் கதையின் நாயகர்கள் கூட பெண்களை வக்கிரமாய்க் கிண்டல் செய்யும் வில்லத்தனம் அரங்கேறுவதை நீங்கள் கண்டிருக்கலாம். இத்தகைய பாதகங்களால் நம்மில் சிலர் பக்குவமின்மையால் ஈர்க்கப்பட்டிருக்கலாம். தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தவும் பழகியிருக்கலாம். இவை சமூகச் சீரழிவுக்கு வழிவகுக்கும் என்பதைப் புரிந்து, நீங்கள் பெறும் பட்டம் தரும் பொறுப்பினை உணர்ந்து இச்சீர்கேடுகளைக் களைய அனைவரும் உறுதி பூணும் தருணமிது. பாலியல் கொடுமை, வரதட்சணை, குடும்ப வன்முறை போன்ற தீவினைகளுக்கு எதிரான போர்வாளே நீங்கள் பெறும் பட்டம்.

 

            சாதியக் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும். சாதி ஒழிப்பு உங்கள் தாரக மந்திரமாக வேண்டும். சாதி முத்திரை நமக்கு ஒரு அவமானச் சின்னம் என இளைய சமுதாயம் எண்ணும் பொற்காலம் அமைத்திட சபதம் ஏற்க வேண்டும்.

 

            'பாரத நாடு பழம்பெரும் நாடு ; நீர் அதன் புதல்வர்; இந்நினைவகற்றாதீர்' எனும் பாரதியின் வரிகளுக்கிணங்க பண்பாட்டுச் சிறப்புமிக்க இந்தியனாய் உலக அரங்கில் நீவிர் ஒளிர வேண்டும். தமிழன் என்ற முறையில் சங்க கால வாழ்வியல் எனும் உலகின் தலைசிறந்த நாகரிகத்திற்கு நீங்கள் சொந்தக்காரர்கள் என்பதை உணர்தல் வேண்டும். ஒரு மொழியிலக்கணம் எவ்வாறு அமைதல் வேண்டும் என உலக மொழிகளுக்கே கற்பிதம் செய்த தொல்காப்பியமும், அறம் எனப்படுவது யாது என உலகிற்குப் பறைசாற்றிய வள்ளுவமும் உமக்குப் பாட்டன் சொத்து. வெளியுலகிற்கு ஆங்கிலத்தில் ஆளுமை பெற்றவராய் நீவிர் மிளிர்தல் வேண்டும். தமிழராகிய நமக்குள் அமிழ்தினும் இனிய தமிழ் விடுத்து வேற்று மொழியில் உரையாடுதல் சோரம் போதல் என்பதை உணர்தல் வேண்டும். தொன்மையான மொழியாம் நம் தமிழையும் நம் மரபுகளையும் பாசறை அமைத்துக் காத்து நிற்பது நும் தலையாய கடமை. உலகத் தமிழர்க்காகவும் புலம்பெயர் தமிழர்க்காகவும் உம் குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலித்தல் வேண்டும். தமிழினப் பற்று குறுகிய பார்வை அன்று. மானிடப் பற்றிற்கான வெள்ளோட்டமேயாம். வீட்டுப் பற்றிலிருந்துதானே நாட்டுப்பற்று !  

 

            'தன் பெண்டு, தன் பிள்ளை' என்று மட்டுமே வாழ்வதை விடுத்து சமூகத்துடன் ஒன்றிய வாழ்வு உங்கள் அனைவருக்கும் வாய்த்திட வேண்டும். நீங்கள் கற்ற கல்வி கல்லாதாரினும் உங்களை உயர்த்திக் காட்டுவதற்கு அன்று. கல்லாரோடும் இல்லாரோடும் நீவிர் இயைந்து வாழ்வதற்கே. அன்னார் அளித்த வரிப்பணமே உங்களுக்குக் கல்வியாய் உருப்பெற்றது என்று தெளிதல் வேண்டும்.

            'குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து

            மானம் கருதக் கெடும்'

என்னும் பொய்யா மொழிக்கிணங்க மக்களுக்கான உங்கள் பொதுவாழ்வில் எதையும் தாங்கும் இதயம் உங்களுக்க்கு அமைந்திட வேண்டும்.

 

            மேற்கூறிய அனைத்தும் இன்ன பிற தகைசால் பண்புகளும் பெற்று, உயர்ந்தோர் ஏத்தும் உன்னத வாழ்வைப் பெற்றிட வாழ்த்துக்கள். கல்வி கேள்விகளிற் சிறந்து, அவ்வுலகிற்கு அருளும் இவ்வுலகிற்குப் பொருளும் பெற்றிட வாழ்த்துக்கள். எண்ணிய எண்ணியாங்கு எய்திட எண்ணியதில் திண்ணியராய்த் திகழ்ந்திட வாழ்த்துக்கள்.

 

            இவ்வரிய வாய்ப்புக்கு அனைவருக்கும் நன்றி. வணக்கம்.

                                                                                                                                                                                   -   சுப.சோமசுந்தரம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலியைப்பார்த்து பூனை போல அல்ல, புலி போலவே.....நன்றாக இருக்கு .....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.