Jump to content

உங்களுக்கு ஏன் உடல் எடை அதிகரிக்கிறது? 5 ஆச்சரிய காரணங்கள்


Recommended Posts

உங்களுக்கு ஏன் உடல் எடை அதிகரிக்கிறது? 5 ஆச்சரிய காரணங்கள்

மன உறுதியுடன் இருந்தால் உடல்பருமனை குறைக்க முடியும் என மக்கள் நம்பலாம் ஆனால் ஆராய்ச்சிகள் வேறு சில உண்மைகளை சொல்கின்றன. உடல்பருமன் உண்மைகள் எனும் ஆராய்ச்சியில் வெளிப்பட்டுள்ள உடல் எடையை பாதிக்கும் ஐந்து ஆச்சர்ய உண்மைகளை இங்கே படிக்கலாம்.

உடல்பருமன்படத்தின் காப்புரிமைJUSTIN SULLIVAN

1. குடல் நுண்ணியிரிகள் :-

இரட்டையர்களான கில்லியன் மற்றும் ஜாக்கி ஆகியோரில் ஒருவர் மற்றொருவரைவிட 41 கிலோ எடை கூடுதலாக உள்ளார். பிரிட்டனின் இரட்டையர்கள் ஆராய்ச்சி படிப்பின் ஒரு பகுதியாக பேராசிரியர் டிம் ஸ்பெக்டன் இவர்களின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து 25 வருடங்களாக கண்காணித்து வருகிறார்.

அவர்களின் உடல் எடைக்கான பெரும் வேறுபாட்டுக்கு குடலில் வாழும் மிகச்சிறிய நுண்ணுயிரிகள் முக்கிய காரணம் என நம்புகிறார் அவர்.

''ஒவ்வொருமுறை நீங்கள் ஏதாவது சாப்பிடும்போதும் நீங்கள் உடலில் உள்ள நூறு ட்ரில்லியன் நுண்ணுயிரிகளுக்கும் உணவளிக்கிறீர்கள். நீங்கள் தனியாக சாப்பிடுவதில்லை'' என அவர் தெரிவித்தார்.

இவரிடமிருந்து மலத்தை மாதிரியாக பெற்று அவர் ஆராய்ந்தார். அதில் இருவரில் மெலிந்தவரின் மலத்தில் வெவ்வேறு வகையான நுண்ணுயிரிகள் இருந்தன. ஆனால் ஜாக்கியின் குடலில் வெகு சில இனங்களே வாழ்கின்றன.

'' பன்முகத்தன்மையே சிறப்பானது. அது மெலிந்தவரிடம் உள்ளது. நீங்கள் அதிக எடையை கொண்டிருந்தால் உங்களது உடலிலுள்ள நுண்ணுயிரிகள் வெவ்வேறு இனத்திலிருக்காது'' என்கிறார் பேராசிரியர் ஸ்பெக்டர். இதே மாதிரியான பாங்கை அவர் ஆராய்ந்த ஐயாயிரம் பேரிடமும் கண்டிருக்கிறார் இப்பேராசிரியர்.

மனித குடலில் பாக்டீரியாபடத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY

ஆரோக்கியமான மற்றும் பலதரப்பட்ட டயட் கடைபிடிக்கலாம். நார்ச்சத்து மிக்க உணவை உட்கொள்ளும்போது அவை குடலில் பல்வேறு வகைப்பட்ட நுண்ணியிரிகளை உருவாக்கும்.

  • எந்த உணவில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது ?
  • முழு தானியங்கள்
  • பெர்ரி உள்ளிட்ட பழங்கள், பேரிக்காய்
  • ப்ரொக்கோலி மற்றும் கேரட் போன்ற காய்கறிகள்
  • பீன்ஸ்
  • பருப்பு வகைகள்
  • கொட்டைகள்

2. மரபணு

மக்களில் சிலர் விடாமுயற்சியுடன் டயட்டை தொடருகிறார்கள் மேலும் உடற்பயிற்சியும் செய்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு சரியான தீர்வுகள் கிடைப்பதில்லை அதேவேளையில் சிலர் வெகு சில உடற்பயிற்சிகள் செய்து, விரும்பிய உணவையும் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு உடல் எடை கூடுவதில்லையே. அது ஏன்?

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடல் எடை விவகாரத்தில் 40 -70% சதவீதம் சந்ததி வாயிலாக நாம் பெற்ற மரபணுவுடன் தொடர்புடையது என நம்புகின்றனர்.

'' மரபணுக்கள் நமது எடையுடன் தொடர்புடையது என்பது தெளிவாகிறது. உங்களுக்கு சில குறிப்பிட்ட மரபணுக்களில் குறைபாடுகள் இருந்தால் அவை உடல்பருமனை வர வைக்க போதுமானதாக இருக்கலாம்'' என்கிறார் பேராசிரியர் சதாஃ ப் ஃபரூக்கி

உடல்பருமன்படத்தின் காப்புரிமைBRAD BARKET

குறிப்பிட்ட சில மரபணுக்கள் ஒரு மனிதனின் பசியுணர்வை பாதிக்கலாம். எவ்வளவு உணவை அவர் உண்ன விரும்புகிறார்? என்ன விதமான உணவுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்? என்பதில் மரபணுக்கள் பங்காற்றுகின்றன. நாம் எப்படி கலோரியை எரிக்கிறோம் மேலும் எப்படி நமது உடல் கொழுப்பை கையாளுகிறது என்பன போன்றவற்றிலும் மரபணுக்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

குறைந்தபட்சம் 100 மரபணுக்கள் உடல் எடையை பாதிக்கலாம். அதில் MC4R மரபணுவும் முக்கியமான ஒன்று.

இந்த MC4R மரபணுவை பொறுத்தவரையில் ஆயிரம் பேரில் ஒருவருக்கு குறைபாடு உடையதாக இருக்கிறது. இந்த மரபணுதான் பசி மற்றும் பசி ஆர்வத்தை நமது மூளை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடையது. இந்த மரபணுவில் குறைபாடு உடையவர்கள் அதிக பசி கொண்டவர்களாகவும் அதிக கொழுப்பு உடைய உணவுகளின் மீது அடங்கா ஆசை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

'' நீங்கள் உங்களது மரபணுவை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் சிலர் மரபணு அவர்களுக்கு எடை ஏறுவதற்கு தொடர்புடையதாய் இருப்பதை அறிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் டயட் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றில் மாறுதல்களை செய்துகொள்ள உதவலாம்'' என்கிறார் பேராசிரியர் ஃபரூக்கி.

3. நேரமும் உணவும்

ஒரு பழமொழி உண்டு.'' காலையில் அரசனை போல உண்ண வேண்டும். இளவரசனை போல மதிய உணவை முடிக்க வேண்டும், ஆண்டியை போல இரவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்'' . இதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது.

உடல்பருமனுக்கான சிறப்பு மருத்துவர் ஜேம்ஸ் ப்ரவுன் கூறுகையில்

'' எவ்வளவு தாமதமாகச் சாப்பிடுகிறோமோ அதைப் பொறுத்து உடல் எடையும் கூடும். நாம் இரவில் குறைவாக வேலைச் செய்கிறோம் என்பதால் அல்ல நமது உடல் கடிகாரமே இதற்கு காரணம்'' என்கிறார்.

'' பகல் நேரத்தில் உடல் நிறைய கலோரிகளை திறமையாக கையாளுவதற்கும் இரவு நேரத்தில் சற்று குறைவாக கையாள்வதற்கும் ஏற்றவகையில் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது'' என்கிறார் ப்ரவுன்.

இக்காரணத்தின் பொருட்டு ஒழுங்கற்ற வேலை நேரம் கொண்டவர்களுக்கு உடல் எடை கூடும் பிரச்சனை அதிகளவில் இருக்கிறது. இரவு நேரங்களில் நமது உடல் கொழுப்பு மற்றும் சர்க்கரையை செரிக்க சிரமப்படும். ஆகவே இரவு 7 மணிக்கு மேல் நிறைய கலோரி உள்ள உணவுகளை தவிர்ப்பதே நீங்கள் உடல் எடையை குறைக்கவோ அல்லது உடல் எடை கூடுவதை தவிர்க்கவோ உதவக்கூடிய முதல் விஷயம்.

கடந்த ஒரு தசாப்தத்தில், பிரிட்டனில் சராசரி இரவு உணவுக்கான நேரம் ஏழு மணியில் இருந்து பத்து மணிக்குச் சென்றுவிட்டது. இது உடல்பருமன் அளவு அதிகரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது என்கிறார் மருத்துவர் ப்ரவுன்.

பிரட்துண்டுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால் இன்றைய வேலை பாங்கு மற்றும் பரபரப்பான வாழ்க்கைமுறையில் சில விஷயங்களை நாம் செய்வதன்மூலம் நம் இடுப்பு அளவில் சில மாறுதல்களை உண்டாக்கமுடியும்.

மருத்துவர் ப்ரவுனை பொறுத்தவரையில் காலை உணவை தவிர்ப்பது அல்லது ஒரு பிரட் துண்டை மட்டும் எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்.

புரதச்சத்து மற்றும் சில கொழுப்புச் சத்து, மாவுச்சத்து உள்ள உணவுகளை (முழு தானிய சிற்றுண்டியுடன் முட்டை) எடுத்துக்கொள்வது போன்றவை உங்களுக்கு திருப்தியையும் நீண்ட நேரத்துக்கான காலை உணவாகவும் இருக்கும்.

அதைத்தொடர்ந்து ஊட்டச்சத்துமிக்க மதிய உணவையும் மற்றும் சற்று இலகுவான இரவு உணவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

4. மூளையை ஏய்த்தல்

நடத்தை உட்பார்வை குழுவானது பிரிட்டன் மக்கள் கலோரியை கணக்கில் வைத்துக்கொள்வதில் சரியாக செயல்படுவதில்லை என்றும் இதனால் 30 -50% உணவு குறைவாக மதிப்பிடப்படுகிறது எனக் கூறியுள்ளது.

நடத்தை விஞ்ஞானி ஹியூகோ ஹார்ப்பர், கலோரியை கணக்கிடுவதை விட உணவு உண்ணும் நடத்தையில் மாறுதல்களை கொண்டு வர பரிந்துரைக்கிறார்.

உதாரணமாக, விழிப்புணர்வுடன் தன்னம்பிக்கை கொண்டிருப்பதை விட உணவை பார்ப்பதால் வரும் காட்சி தூண்டுதல்களை நீக்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உடல்பருமன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉடல்பருமன்

ஆகவே ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளை உங்களது சமையலறையில் வைக்காதீர்கள். பழம் அல்லது ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை வைத்திருங்கள்.

தொலைக்காட்சி முன்னர் முழு பிஸ்கட் பாக்கெட்டுடன் உட்காராதீர்கள், எத்தனை உங்களுக்கு வேண்டுமோ அதனை எண்ணி உங்களது தட்டில் வைத்து எடுத்துச் சென்று அமருங்கள்.

ஒட்டுமொத்தமாக தவிர்க்க முயற்சி செய்வதை விட குறைவான கலோரி உள்ள உணவுகளை மாற்றாக எடுத்துக் கொள்வதை மருத்துவர் ஹார்ப்பர் ஊக்குவிக்கிறார்.

சாப்பிடும் உணவு 5 - 10% அளவுக்கு மட்டும் குறைந்தால் மக்கள் அதனை குறிப்பிட்டு கவனிக்கமாட்டார்கள். சிறிய அளவிலுள்ள தட்டுகளை பயன்படுத்துவது கவனக்குறைவாக அதிக கலோரிகளை உண்ணுவதை தவிர்க்க உதவும் என்கிறார் ஹார்ப்பர்.

ஹார்மோன்கள்

உடல்பருமனுக்கான பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை வெறுமனே இரைப்பையின் அளவை குறைப்பது மட்டுமல்ல, ஹார்மோன்கள் உருவாக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

நமது பசியுணர்வு ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. நமது உடலில் பசியுணர்வை கட்டுப்படுத்தவும் தூண்டவும் இருவேறு ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல்பருமனை கட்டுப்படுத்த செய்யப்படும் மிக பயனுள்ள சிகிச்சை பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையாகும்.

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைபடத்தின் காப்புரிமைLUIS ROBAYO

ஆனால் அறுவை சிகிச்சையின் முக்கியப் பகுதி இரைப்பை அளவை குறைப்பதே. பிஎம்ஐ 35-க்கு மேல் உள்ளவர்களுக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்கு பின்னர் பசியார்வத்தில் மாறுதல்களை உண்டாக்கும் குடல் நாள ஹார்மோன்களை மீள் உருவாக்கம் செய்துள்ளனர். தற்போது இது புதிய மருத்துவ பரிசோதனையில் உள்ளது.

மூன்று ஹார்மோன்களின் கலவையானது ஊசி வழியே தினமும் நோயாளிகளுக்கு சுமார் நான்கு வாரங்கள் வரை போடப்படுகிறது.

'' நோயாளிகள் தற்போது குறைவான பசி உணர்வு கொண்டிருக்கிறார்கள். குறைவாக உண்ணுகிறார்கள் மேலும் 28 நாட்களில் 2-8 கிலோ வரை குறைத்திருக்கிறார்கள்.

இந்த மருந்து பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டால் இதன் திட்டமென்னவெனில் நோயாளி ஆரோக்கியமான எடையை எட்டும்வரை இச்சிகிச்சையை பயன்படுத்துவதாகும்.

https://www.bbc.com/tamil/science-43953879

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடியாப்பம், புட்டு, ஒடியல் புட்டு பழஞ்சோறு சாப்பிட்ட எங்கடை மூதாதையருக்கு உந்த செமியாப்பிரச்சனை உடம்பு ஊதிக்கோண்டு வாற பிரச்சனை ஒண்டும் இல்லை கண்டியளோ.....:cool:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள பகுதியில் (நாவூற வாயூற) விதம் விதமான தின்பண்டங்களை பரிமாறி விட்டு கீழே வந்து (நலமோடு வாழ) இந்த மாதிரி கேள்வி கேட்பதில் அர்த்தமில்லை நவீனன்......!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
    • வாலிபத்தில் தவற விட்டவைகளை எண்ணி வயோதிபத்தில் அசை போடுகிறீர்கள் போல. எழுதம் கதை கவிதை எல்லாமே காதல் மயமாகவே உள்ளதே?
    • பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன் பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.