Jump to content

முத்து அக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

EF2_F8622-4_C92-4_E59-80_C6-316_E8_E2_F6

முத்து அக்கா 

 முத்து அக்காவிடம் கனக்க மஞ்சள் பைகள் இருந்தன. அழுக்கின் கறைகள் இல்லாமல் சிவப்பு நிறத்தில்முருகா முருகாஎன்ற பெரிய எழுத்துக்களுடன் பளிச்சென்று தூய்மையாக எப்போதும் ஒரு மஞ்சள் பை அவர் கையில் தொங்கிக் கொண்டிருக்கும்.

  பால் வியாபாரம்தான் முத்து அக்காவின் குடும்பத்துக்கான ஆதாரம். எங்கள் தெருவில் அநேகமான வீடுகளுக்கு முத்து அக்காதான் பால் கொண்டு வந்து கொடுப்பார். சாரயப் போத்தல் - ‘முழுப் போத்தல்’, எலிபன்ற் பிராண்ட் சோடாப் போத்தல் - அரைப் போத்தல் என்ற அளவில் அவரது  பால் வியாபாரக் கணக்கு இருக்கும்.

 காலையில் ஆறு மணிக்கே எங்கள் தெருவிலுள்ள ஒவ்வொருவர் வீட்டு அடுப்பிலும் பால் கொதிக்க ஆரம்பித்து விடும். அதிலும் எங்கள் வீட்டில்தான் முதலில் பால் பொங்க ஆரம்பிக்கும். எங்கள் வீட்டிற்குத்தான் முத்து அக்காவின் அன்றாட முதல் பால் விநியோகம். அதற்குக் காரணம் நான்தான். என்னை அவருக்கு நிறையப் பிடிக்கும்.

 முத்து அக்காவிற்கு இரண்டு பெண்பிள்ளைகள். மூத்தவள் பெயர் ராணி. இரண்டாமவள் கிளி. கிளி பிறந்த சில நாட்களில் கணவன் இறந்து போக, பிள்ளைகளை வளர்த்தெடுக்க மாடுகளை வாங்கி பால் வியாபாரத்தைத் தொடங்கினார். அந்தத் தொழிலில் அவர் காட்டிய நேர்மை அவரது வியாபாரத்தை  பெரிதாக்கி விட்டிருந்தது. யாரிடமும் தங்கியிருக்காமல் நேரடியாக அவரே எல்லா வீடுகளுக்கும் போய் பால் விநியோகித்து அளவளாவிப் போவதால் தாய்க்குலங்களுக்கு அவரை நிறையப் பிடித்துப் போயிருந்தது.

 தனக்கு ஆண்பிள்ளை இல்லாததால், என்னை அவர் மனதளவில் தன் பிள்ளையாக தத்தெடுத்திருக்க வேண்டும். அப்பொழுது எனக்கு வயது ஏழு. உரிமையோடு என்னைசின்னவன்என்றே முத்து அக்கா அழைப்பார். “சின்னவன் எழும்பிட்டானே?” என்ற அவரது குரலே பல காலைகளில் என்னைக் கண் விழிக்க வைத்திருக்கிறது. ஐஞ்சு நிமிசமாவது என்னுடன் இருந்து கதைத்து விட்டே எங்கள் வீட்டை விட்டுப்  போவார். மாதம் முடிய பால் வாங்கிய பணத்தை அம்மா கொடுக்க மறந்து போனாலும் கூட முத்து அக்கா அதைப் பற்றிக் கேட்கவே மாட்டார்.

 “நான்தான் மறந்து போனன். நீயாவது கேட்டிருக்கலாம்தானே?” என்று அம்மா முத்து அக்காவைக் கேட்டால்,

 “சின்னவன் குடிக்கிற பாலுக்கு கணக்கெதுக்கு?” என்பது அவரது பதிலாக இருக்கும்.

 ஒருநாள் முத்து அக்காவின் வரவு நின்று போய்விட்டது. வீட்டுக்கான பால் கூட வேறொரு இடத்தில் இருந்துதான் வந்தது. கூடிக் கூடிக் கதைத்தவர்களின் வாயில் இருந்துமுத்துஎன்ற வார்த்தை அடிக்கடி உதிர்ந்து கொண்டிருந்தது. கதைப்பவர்கள் நடுவேசிறுவன்என்று எனக்கு இடம் கிடைக்கவில்லை. அவர்கள் பேசும் போது சிலவேளைகளில் அவர்களின் குரல்கள் ஆரோகணத்தில் வரும். அப்பொழுது கிடைக்கும் வார்த்தைகளை எல்லாம் எடுத்துக் கோர்த்துப் பார்ப்பேன். “வெறி, அடி, கொலை, பொலீஸ் என்று நான்  சேர்த்த வார்த்தைகளை அந்த வயதில் என்னால் இணைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் முத்து அக்காவுக்கு ஏதோ நடந்துவிட்டது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

 என்னுடன் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த தேவராஜன் முத்து அக்கா வீட்டுக்கு அயலில்தான் இருந்தான். அவன்தான் என்ன நடந்தது என்பதை எனக்குச் சொன்னான்.

 எங்கள் நகரத்து பெரிய முதலாளிதான் முத்து அக்காவின் சகோதரியைத் திருமணம் செய்திருந்தார். பரம்பரைச் சொத்தை விற்பதில் முதலாளிக்கும் முத்து அக்காவிற்கும் இடையில் பல காலங்களாக அனுமார் வால் போல் இழுபறி நீண்டு கொண்டே இருந்தது. பிரச்சனையை முடித்து, சொத்தை விற்று, பணத்தைப் பார்க்க எல்லாவிதமான வியாபார தந்திரங்களையும் முதலாளி செய்து பார்த்தும் காரியம் நடைபெறவில்லை.

 இங்கே முதலாளியைப் பற்றி  கொஞ்சம் சொல்லிவிட்டு விசயத்துக்கு பிறகு வருவது நல்லது என்று நினைக்கிறேன்.

 முதலாளிக்கு வியாபாரம் மட்டுமல்ல அடிதடியும் நன்றாக வரும். அவருக்குசண்டியர்என்ற பட்டமும் இருந்தது. ‘அஞ்சேன்என்பது அவரது சுபாவம். `வணங்காமுடி´ என்பது அவரது இறுமாப்பு. பிரச்சனை என்று வந்தால் முதலில் பேசிப் பார்ப்பார் சரிவரவில்லை என்றால் சண்டிக்கட்டுடன் களத்தில் குதித்து விடுவார். போதிய அடியாட்கள், நகரத்தின் காலிகள் என்று ஏகப்பட்டோர்கள்அவரைச் சுற்றி ஒரு வட்டம் அமைத்திருந்ததால் அவர் தன் பாதுகாப்புக்கென்று பிரத்தியேகமாக நாய் ஒன்றும் வளர்க்க வேண்டிய தேவை இருக்கவில்லை. கொஞ்சமாக இவருடன் சத்தமாக பேசிய விதானையார்  ஒருவர் சூடு விழுந்து ஒருநாள் செத்துப் போயிருந்தார். சற்றுக் கவனியுங்கள் இது போராட்டத்துக்கு முந்திய காலம்

 சுட்டது யாரென்று மன்றில் நின்று சொல்ல எவருமே முன் வராததால் விதானையார் மரணம் சட்டத்தின் பார்வையில் மர்மமாகவே போயிற்று. இப்பொழுது முதலாளியின் தன்மை எப்படியானது என்பது ஓரளவுக்கு  உங்களுக்குப் புரிந்திருக்கும்.

 சரி இனி முத்து அக்கா விடயத்துக்கு வருவோம்.

 அன்று மதியம் சாப்பிட்டுவிட்டு திண்ணையில் சற்று அயரலாம் என்று படுத்திருந்த முத்து அக்காவை வீட்டின் தகரப் படலையில் இருந்து வந்த சத்தம் திடுக்கிட்டு எழ வைத்தது. தகரப் படலையை உதைத்துத் தள்ளிக் கொண்டு ஒரு நடுத்தர வயது ஆண் வீட்டு முற்றத்தில் வந்து நின்றான். வந்தவனின் தள்ளாட்டத்தை விட அவன் நிர்வாணமாக நின்றதுதான் முத்து அக்காவை அதிக திகைப்புக்குள்ளாக்கியது.

 “உங்களுக்கு அவ்வளவு திமிரோடி. இண்டைக்கு.... இண்டைக்கு இப்ப... இப்பவே உங்கடை திமிரை அடக்கிறன். வாங்கோடி வெளியாலை

 ஒலிபெருக்கி கூட அவனது சத்தத்துக்கு நேர் நிற்காது.

 சாரய வெறியோடு அம்பு ஒன்று அம்மணமாக எய்யப் பட்டிருக்கிறது என்பது முத்து அக்காவுக்கு விளங்கி விட்டது

 அநேகமான ஆண்கள் வேலைக்குப் போய்விட்டதால், அந்த மதிய நேரம் ஊரில் பெண்கள்தான்  வீடுகளில் இருந்தார்கள். வெறியில் சுதி தவறி, செந்தமிழில் வந்த ஒரு ஆணின் குரலைக் கேட்டவுடன், ஓட்டுக்குள் தலையை உள் இழுத்துக்கொண்ட ஆமைகள் போல ஊர்ப் பெண்களின்  தலைகள் காணாமல் போயின.

 முத்து அக்காவின் அயல் வீடுகள் எல்லாம் யன்னல்களை மூடி விட்டு இடுக்குகளுக்குள்ளாலே விடுப்புகள் பார்க்கத் தொடங்கி விட்டன. உதவிக்கு யாரும் வரப் போவதில்லை. குஞ்சுகளைக் காக்க தாய்க் கோழி தயாரானது.

 ராணியையும், கிளியையும் விழுந்திருந்த படலைக்குள்ளாலே  வீட்டுக்கு வெளியே ஓடச் சொல்லிவிட்டு, முத்து அக்கா வந்தவனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.

 “ஆரடா நீ? ஆம்பிளை இல்லாத வீட்டுக்குள்ளை வந்து சண்டிதனம் காட்டுறாய். தெரியுமடா உன்னை யார் அனுப்பினதெண்டு. தைரியம் இருந்தால் அவனை நேரே வரச் சொல்லடா

 முத்து அக்கா நினைத்தது நடந்து கொண்டிருந்தது. அவனது கவனம் முத்து அக்காவின் பக்கம் திரும்பி இருந்ததால் படலையை நோக்கி ஓடும் ராணியும், கிளியும் அவனது கண்களில் படவில்லை. ஆனால் அவர் நினைக்காத ஒன்று நடந்தது.

 ராணி படலையைத் தாண்டி ஒழுங்கைக்குள் ஓடிக் கொண்டிருந்தாள்

கிளியோ தாயைப் பார்த்து, “அம்மா வாங்கோ... நீங்களும் வாங்கோ.. ஓடிவாங்கோ.. “ என்று தன் கவனத்தை தாயில் வைத்துக் கொண்டு, பின்புறமாக ஓடியதில் நிலை தடுமாறி தரையில் விழுந்தாள்.

 விழுந்தவள் எழும்ப எத்தனிக்கும் போது அவள் முன்னாள் நிர்வாணமாக அவன் நின்றான். தள்ளாட்டத்தோடு நின்றவன் அப்படியே கிளி மீது விழுந்து விட்டான். தன் மேல் விழுந்திருந்த அவனை தள்ளிவிட்டு எழந்துவிட அவளுக்கு ஏது பலம்? நிர்வாணமாக தன் மேல் படுத்திருக்கும் ஆண், அவளை தரையை விட்டு அசையவிடாமல் அழுத்தி இருக்கும் அவனது பாரம் எல்லாம் அவளுக்கு பெரிய அதிர்ச்சியாக வே இருந்தன..

5968_F71_E-_B268-4_C9_B-8074-36_F13_ABC9

 

முத்து அக்காவின் கையில் இப்பொழுது உலக்கை இருந்தது. தன் மகளுக்கு அடி பட்டு விடக் கூடாது என்று மிகக் கவனமாகப் பார்த்துப் பார்த்து அவனை உலக்கையால் அடித்துக் கொண்டிருந்தார். அடியின் வேதனையில் கிளியை விட்டு விட்டு தரையில் அவன் உருண்ட போது அவனது முழங்காலின் சில்லை குறிவைத்து கடைசி அடியைப் போட்டுஉலக்கையை எறிந்து விட்டு,  “இனி உன்னாலை எழும்பி நடக்கேலாது. உன்னை அனுப்பினவன் வந்துதான் உன்னைத் தூக்கிக்கொண்டு  போகோணும்சொல்லிக் கொண்டே கிளியை அழைத்துக் கொண்டு ராணியைத் தேடுவதற்காக ஒழுங்கைக்குள் இறங்கினார். கிளிக்கு இன்னமும் அதிர்ச்சியாக இருந்தது. வெறித்துப் பார்ததபடியே தாயோடு நடந்து கொண்டிருந்தாள்.

 அடிபட்டவன் அன்று மாலை ஆதார வைத்தியசாலைக் கட்டிலில் படுத்திருந்தான். அவனிடம் பொலீஸ்  வாக்கு மூலம் எடுத்துக் கொண்டிருந்தது

 “அப்பாவியான என்னை தாயும், மகளும் சேர்ந்து  உலக்கையாலை அடிச்சுப் போட்டாங்கள்என்று திரும்பத் திரும்ப கிளிப்பிள்ளையைப் போல் அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

 அடுத்த நாள் காலையில் அவன் வைத்தியசாலைக் கட்டிலிலேயே செத்துப் போயிருந்தான்.

 பலமாகத் தாக்கப் பட்டதால் மரணம் நிகழ்ந்திருக்கிறது என வைத்திய அதிகாரி பொலிஸுக்கு அறிக்கை கொடுத்தார்.

 "காலில் அடிபட்டதுக்காக ஒருவன் செத்துப் போவானா?”  அக்கம் பக்கம் பார்த்து ஊரில்  மிக அவதானமாக பலரது கேள்வி ஒலித்தது.

 “காசு விளையாடிட்டுது. ராவோட ராவா ஊசியைப் போட்டு ஆளின்ரை கதையை முடிச்சிட்டாங்கள்இப்படியும் ஒரு கதை ரகசியமாக இருட்டுக்குள்ளே உலா வந்தது.

 மரண விசாரணை அதிகாரி விசாரணையில்  “கொலைஎன எழுதிவிட்டு, உடலை உறவினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அன்று மாலையே அவசர அவசரமாக அவனது உடல் தகனம் செய்யப் பட்டு விட்டது.

 கொலை செய்த  குற்றத்துக்காக முத்து அக்காவும், கிளியும் கைதாகினார்கள்.

 ”தாய்க்கும் மகளுக்கும் 14 நாட்கள் றிமான்ட்நீதிபதி சொன்னார்

 ஒவ்வொரு வழக்குத்தவணையிலும் மேலும் மேலும் இரண்டு கிழமைகள் தடுப்புக்காவல் விசாரணை என அதிகரித்துக் கொண்டே போனது. வழக்கின் காலங்கள் நீண்டு கொண்டிருந்தன. முத்து அக்காவினால் துன்பங்களில் இருந்து மீண்டு வர முடியவில்லை. வழக்குச் செலவு கட்டுக்குள் அடங்காமல் அவரை தொல்லைப் படுத்திக் கொண்டிருந்தது.

 சில வருடங்கள் கழித்து நண்பன் ஒருவனோடு வீட்டு வாசலில் நின்று நான் கதைத்துக் கொண்டிருந்தேன்.

 “சின்னவா

 முத்து அக்காவின் குரல். திரும்பிப் பார்த்தேன்.

 அவர் கையில் பளிச்சென்றிருக்கும் மஞ்சள் பை இல்லை. உடையில் கூட சுத்தம் குறைந்திருந்தது. பக்கத்தில் அவரது மகள் கிளி நின்றாள். அவளது பார்வை எங்களை விடுத்து  வானத்தை நோக்கி இருந்தது. யாரையும் பார்ககவோ, பேசவோ அவள் விரும்பவில்லை என்று தெரிந்தது.

 “சின்னவா வளந்திட்டாய். மீசை எல்லாம் முளைக்க ஆரம்பிச்சிட்டுது. பெரிய ஆம்பிளை ஆயிற்றாய்.” அவரின் குரல் பாசத்தோடு ஒலித்தது.

 என்ன நினைத்தாரோ, அவரது குரல் திடீரென சோகமானது. “ஏன்டா சின்னவா இந்த முத்து அக்காவை மறந்து போட்டியே?”

 “இல்லைஎன்று வாய் திறந்து ஏனோ நான் சொல்லவில்லை. ஆனால் இல்லை என்ற அர்த்தத்தில் வேகமாக தலையை மட்டும்  ஆட்டினேன்.

 “தெரியும் நீ என்னை மறக்க மாட்டாய் எண்டு. முத்து அக்கான்ரை நிலமைதான் இப்பிடி ஆகிப் போச்சு. பார் கிளியை. அவளுக்கும் செய்யாத வைத்தியமில்லை. பேந்த பேந்த முளிச்சுக் கொண்டு இருக்கிறாள். இந்தக் கோலத்திலை இவளைப் பாத்திட்டு ஆர்தான் கலியாணம் கட்டப் போறாங்கள். எப்பிடித்தான் இவளைக் கரை சேர்க்கப் போறனோ?”

 முத்து அக்காவை நான் அரை நூற்றாண்டாக மறக்காமல் இருக்கிறேன். அதனால்தான் இதை எழுதுகிறேன்.

இன்று முத்து அக்கா உயிரோடு இல்லை. கிளியை  கல்யாணம் செய்ய எவருமே முன்வரவில்லை. அவள் தனது நாற்பதாவது வயதில் செத்துப் போனாள்.

 அந்த முதலாளி?

 சொல்கிறேன்

 

 கவி அருணாசலம் 

04.05.2018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில கணங்களில் நடப்பவை ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை உலுப்பி நாசமாக்கும் என்பதற்கு இந்தக்கதையும் ஓர் உதாரணம்தான். பண வசதி இல்லாதவர்களுக்கு நமது சமூகத்தில் எந்தப் பாதுகாப்பும் கிடையாது. இப்போதும் நிலமை அப்படித்தான் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  • நானும் அதைத் தான் சொல்கிறேன் பணம் இருந்தால் எதையும் விலைக்கு  வாங்கலாம். அன்பு,பாசம்,நல்ல மனம் எல்லாம் அதற்கு பின்பு தான் 

     

தொடருங்கள் கவி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2018 at 5:09 AM, Kavi arunasalam said:

 

 அந்த முதலாளி?

 சொல்கிறேன்

 

அந்த முதலாளியும் (அண்மையில்   நீங்கள் எழுதிய) எங்க ஊர்  முதலாளியும் ஒருவரல்லதானே      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு,

நாயகனும் வில்லனும் ஒருவர்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kavi arunasalam said:

கந்தப்பு,

நாயகனும் வில்லனும் ஒருவர்தான்

அடப்பாவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் முதல் குற்றவாளி முதலாளியின் மனைவி தான். சொந்த சகோதரிக்கு இப்படி ஒரு அநியாயம் நடக்க எப்படி அவரால் பார்த்துக் கொண்டு இருக்க முடிந்தது?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவர்ச்சியான எழுத்து நடை.தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இதில் முதல் குற்றவாளி முதலாளியின் மனைவி தான். சொந்த சகோதரிக்கு இப்படி ஒரு அநியாயம் நடக்க எப்படி அவரால் பார்த்துக் கொண்டு இருக்க முடிந்தது?

 

ரதி, இந்த சம்பவம் நடந்தது அறுபதுகளில். பல வெளி விடயங்கள் வீட்டுப் பெண்களுக்கு தெரிய அப்போது வாய்ப்புகள் குறைவு.  சரி தெரிந்து விட்டது என்று வைத்துக் கொண்டாலும் முதலாளியை “ஏன்” என்று கேட்கும் துணிவு இருக்க வேண்டுமே.

10 hours ago, சுவைப்பிரியன் said:

அடப்பாவி

சுவைப்பிரியன்,

சில தமிழ்ப் படங்களில் ஒருவர் நாயகனாகவும் வில்லனாகவும் இரு வேடங்கள் போடுவதில்லையா? அப்படி நினைத்துக் கொள்ளளுங்கள்.

சத்தியராஜின் அமைதிப்படை திரைப்படத்தைப் பார்த்த போது எனக்கு நினைவுக்கு வந்தவர் இந்த முதலாளிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைகள் வாழ்வு அன்றும் இன்றும் கண்ணீருடன்தான். கதை மிக அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது. பராட்டுக்கள் கவிஅருணாச்சலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kavi arunasalam said:

கந்தப்பு,

நாயகனும் வில்லனும் ஒருவர்தான்

 நாயகனின் கதையினை வாசித்தபோது அவருக்கு ஏற்பட்ட முடிவினை வாசிக்கும்போது வேதனை தந்தது.  ஆனால் வில்லன் கதையினை வாசிக்கும்போது அவர் இந்திய இராணுவ்த்துடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. 

திரு  கவி அருணாசலம்    -  எல்லோருக்கும் பழைய சம்பவங்களை அழகாக விறுவிறுப்பாக எழுதத் தெரியாது. உங்களிடம் அந்த திறமை நிறைய இருக்கிறது.  உங்கள் ஆக்கங்களில் வரையப்படும் ஓவியங்களை வரைந்த  ஓவியர்  நீங்களா?  .நன்றாக இருக்கின்றன. பாராட்டுக்கள் கதைக்கும் ஓவியத்துக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.