Jump to content

சிறீ சபாரட்னத்தின் 32ஆவது நினைவஞ்சலி நிகழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

 

 

மற்ற இயக்கங்களை விட கட்டுக் கோப்பான இயக்கமாக  புலிகள் இருந்தார்கள்...அவர்களது தியாகங்களை நான் மதிக்கிறேன்.. அதற்காக அவர்கள் செய்தது எல்லாம் சரி என்றாகி விடாது .எங்களுக்கு ஒரு  நாடு வேண்டும் என்பதற்காக .அநியாயமாய் உயிர் நீத்தவர்களை மறக்கக் கூடாது....ஆனால்

புலிகள்  30 வருடம் போராடி,அவ்வளவு உயிர்கள் மாண்டும்  கண்ட பலன் என்ன?...மற்ற இயக்கங்கள் போல சிக்கிரமாய் அழிந்திருந்தால் அரைவாசி உயிராவது மிகச்சமாயிருக்கும்.

 

 30வருஷங்களாய் போராடி கண்ட பயன் ஒன்றுமில்ல, அதனால பல இயக்கங்கள்போல் சீக்கிரமாய் அழிந்தால் நல்லா இருக்கும் என்று, 20 வருஷங்களுக்கு மேல இயக்கத்தில் இருந்த   கருணா அம்மானால்......

எப்போதோ கண்டு பிடிக்க முடியாமல் போனதிற்கு ஏதாவது காரணமிருக்குமா?

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, சண்டமாருதன் said:

மேலே புத்தன் கூறியது போல் அக்காலகட்டத்தில் இப்படியான கதைகள் மிகப் பிரபலமாகக் கட்டிவிடப்பட்டது. இதற்காக ஒரு வானொலி சேவையே நடந்தது. மக்களை குழப்புவது.. இயக்கங்கள் மீதான நம்பிக்கையை சிதைப்பது என இந்திய உளவுத்துறை ஆதரவுடன் இந்த பிரச்சாரம் நடந்தது. அதனால் நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டிற்கு எந்த அடிப்படையும் இல்லை. 

  

செல்லகிளி இறந்த காலத்தில் எந்த வானொலி இயங்கியது... விக்டர் இறந்த நேரத்தில் தமிழீழத்தில்  புலிகளை தவிர்த்து வேற ஏதாவது இயக்கம் இயங்கியதா?  தகவல் அறிந்து கொள்ள மட்டுமே கேட்கிறேன்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, valavan said:

செல்லகிளி இறந்த காலத்தில் எந்த வானொலி இயங்கியது... விக்டர் இறந்த நேரத்தில் தமிழீழத்தில்  புலிகளை தவிர்த்து வேற ஏதாவது இயக்கம் இயங்கியதா?  தகவல் அறிந்து கொள்ள மட்டுமே கேட்கிறேன்...

 

செல்லக்கிளி அம்மான் வீரச்சாவு அடைந்தபோது இயக்கங்களின் வானொலி இருக்கவில்லை. ஆனால் பின்னர் பிரச்சாரத்திற்காக வந்த வானொலிகள், பத்திரிகைகள் செல்லக்கிளி அம்மான் பின்பக்கமாக வந்த சூட்டால்தான் கொல்லப்பட்டார் என்று திரித்தன.

விக்டர்  வீரச்சாவு அடைந்தது 86 ஒக்டோபரில். அப்போது ரெலோ மட்டும்தான் தடைசெய்யப்பட்டிருந்தது. 86 டிசம்பரில்தான் ஈபிஆர்எல்எவ் தடைசெய்யப்பட்டது என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

செல்லக்கிளி அம்மான் வீரச்சாவு அடைந்தபோது இயக்கங்களின் வானொலி இருக்கவில்லை. ஆனால் பின்னர் பிரச்சாரத்திற்காக வந்த வானொலிகள், பத்திரிகைகள் செல்லக்கிளி அம்மான் பின்பக்கமாக வந்த சூட்டால்தான் கொல்லப்பட்டார் என்று திரித்தன.

விக்டர்  வீரச்சாவு அடைந்தது 86 ஒக்டோபரில். அப்போது ரெலோ மட்டும்தான் தடைசெய்யப்பட்டிருந்தது. 86 டிசம்பரில்தான் ஈபிஆர்எல்எவ் தடைசெய்யப்பட்டது என்று நினைக்கின்றேன்.

அப்போ விக்டர் இறந்தபோது  ஈபி ஆர் எல் எவ்  இருந்தது என்று சொல்கிறீர்கள் அப்படித்தானே?

Link to comment
Share on other sites

தலைவர்மார் பிழைவிட்டால் ஒன்று ஒதுங்கி போக வேண்டும். அல்லது சரியான இடத்தில் சேரவேண்டும். அதை விட்டுப்போட்டு 

இந்தியாவிடம் நல்ல பெயர் எடுக்க போட்டி போட்டு வடக்கு கிழக்கில் புலி என்று அப்பாவி தமிழ் இளைஞர் யுவதிகளை கடத்தி கொலை செய்தவங்களும். 


இந்தியன் ஆமிக்கு தலை ஆட்டியாக திரிந்தவங்களும் . தமிழ் பெண்களை பிடித்து இந்தியன் ஆமிக்கு கூட்டி கொடுத்தவனும். அசோக கோட்டலில் அப்பாவி தமிழ் இளைஞர்களை புலி என்று குதவழியாக கோலா போத்தில் செருகி உள்ளே உடைச்சவனும். கண் நோய் என்று படுத்து இருந்த சக இயக்க போராளிகளை கடத்தி சுட்டவர்களும் . 

வெள்ளை வான் ஓடியவர்களும். பகிரங்க வதை முகாம் நடத்தியவர்களும். சென்றி பொயின்ரில் நின்று புலி என்று சாதாரண தமிழர்களை சும்மா காட்டிகொடுத்தவனும் தியாகியா 1f621.png?1f621.png?1f621.png?1f621.png?1f621.png?1f621.png?1f621.png?1f621.png? 

உங்கட படத்தை வேறு எங்கேயாவது ஓட்டுங்கோ. 

வவுனியாவில் காலில் சங்கிலியோடு ஒரு தமிழ் இளைஞனை பாதிரியார் காலில் விழுந்து காப்பாற்றுங்கோ என்று கதற.விட்டவனும் (BBC தமிழ் செய்தி அறிக்கையில் பரபரப்பா. பேசப்பட்டது )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

செல்லக்கிளி அம்மான் வீரச்சாவு அடைந்தபோது இயக்கங்களின் வானொலி இருக்கவில்லை. ஆனால் பின்னர் பிரச்சாரத்திற்காக வந்த வானொலிகள், பத்திரிகைகள் செல்லக்கிளி அம்மான் பின்பக்கமாக வந்த சூட்டால்தான் கொல்லப்பட்டார் என்று திரித்தன.

விக்டர்  வீரச்சாவு அடைந்தது 86 ஒக்டோபரில். அப்போது ரெலோ மட்டும்தான் தடைசெய்யப்பட்டிருந்தது. 86 டிசம்பரில்தான் ஈபிஆர்எல்எவ் தடைசெய்யப்பட்டது என்று நினைக்கின்றேன்.

VOT(voice of tamileelam)என்ற வானோலி இருந்த ஞாபகம் கப்பலில் இருந்து ஒலிபரப்புகிறார்கள் என மக்கள் பேசிய‌ ஞாபகம்....சரியாக தெரியவில்லை....ம‌ற்றும்படி பிரச்சாரங்களை "பொட்டொ கொப்பி" எடுத்து விநியோகித்து ந‌ன்றாகவே  சகல இயக்கங்களும் செய்தனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

அப்போ விக்டர் இறந்தபோது  ஈபி ஆர் எல் எவ்  இருந்தது என்று சொல்கிறீர்கள் அப்படித்தானே?

ஆம். விக்டர் வீரமரணம் அடைந்தது 1986 ஒக்டோபர் 12ந் தேதி.

 

கூகிளில் தேடியபோது கிடைத்த தகவல்:

மார்கழி 13, ஈபிஆர்எல்எவ் மீது தனது திட்டமிட்ட தாக்குதலை பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கம் மேற்கொண்ட நாள்.

1986 ஏப்ரல் 29  ரெலோ இயக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்து நரவேட்டையாடிய புலிகள் மே 6ம் திகதி ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினத்தையும் சுட்டுக்கொன்றனர்.

1986 அக்டோபர் புளட் இயக்க அங்கத்தவர்களை அச்சுறுத்தி அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கட்டளையிட்டனர். அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிடச் செய்து  புளொட் இயக்கத்தின் செயற்பாடுகளையும் முடக்கியிருந்தனர்.

1986 மார்கழி 13 அன்று ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல் தொடுத்து ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் நடவடிக்கைகளுக்கு புலிகள் தடை ஏற்படுத்திய பின்னர் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய, தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக ஆதரவை பெற்றிருந்த, 5 இயக்கங்களில் ஈரோஸ் மட்டுமே எஞ்சியிருந்தது.

ஈரோஸ் எஞ்சியிருந்த போதும் அது புலிகளிடமிருந்து தப்பிப்பதற்காக கையாண்ட ஒரே தந்திரம் புலிகளை புலிகளை விமர்சிப்பதை தவிர்த்துக்கொண்டதுதான். இதனால், புலிகளின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தப் போய் அதன் ஒரு பகுதி புலிகளுடனேயே சங்கமமாகவேண்டி ஏற்பட்டது.

ஈரோஸ் இயக்கம் புலிகளால் தடைசெய்யப்படாதிருந்த போதும் 1986 மார்கழி 13 இல் ஈபிஆர்எல்எவ் மீது புலிகள் தாக்குதல் தொடுத்ததன் பின்னர் புலிகளின் அராஜகங்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற, புலிகளின் தவறான போக்குகளை சுட்டிக்காட்டுகின்ற செயற்பாடு முடிவுக்கு வந்துவிட்டது.

ரெலொ இயக்கம்  மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட போது ஈபிஆர்எல்எவ் அதனை கண்டித்து பிரச்சாரங்களை மேற்கொண்டது. விஜிதரன் கடத்தப்பட்ட போது அதற்கெதிராக நடாத்தப்பட்ட மக்கள் போராட்டங்களுக்கும் ஈபிஆர்எல்எவ் பக்கபலமாக இருந்தது.

....

 

Link to comment
Share on other sites

11 hours ago, valavan said:

செல்லகிளி இறந்த காலத்தில் எந்த வானொலி இயங்கியது... விக்டர் இறந்த நேரத்தில் தமிழீழத்தில்  புலிகளை தவிர்த்து வேற ஏதாவது இயக்கம் இயங்கியதா?  தகவல் அறிந்து கொள்ள மட்டுமே கேட்கிறேன்...

 

இந்திய இராணுவ வருகையோடுதான் வானொலிகள் முளைத்தது. கப்பலில் இருந்து ஒலிபரப்பினார்களா இல்லை வவுனியாவில் இருந்து ஒலிபரப்பினார்களா என்பது தெரியாது ஆனால் வன்னி எங்கும் கேட்க கூடியதாக இருந்தது. புலிகள் மீதான அவதூறு ஒன்றே குறிக்கோளாக இருந்தது. அதில் தான் அனேகமான கட்டுக்கதைகள் பரப்பப் பட்டது. 

 

10 hours ago, கிருபன் said:

செல்லக்கிளி அம்மான் வீரச்சாவு அடைந்தபோது இயக்கங்களின் வானொலி இருக்கவில்லை. ஆனால் பின்னர் பிரச்சாரத்திற்காக வந்த வானொலிகள், பத்திரிகைகள் செல்லக்கிளி அம்மான் பின்பக்கமாக வந்த சூட்டால்தான் கொல்லப்பட்டார் என்று திரித்தன.

விக்டர்  வீரச்சாவு அடைந்தது 86 ஒக்டோபரில். அப்போது ரெலோ மட்டும்தான் தடைசெய்யப்பட்டிருந்தது. 86 டிசம்பரில்தான் ஈபிஆர்எல்எவ் தடைசெய்யப்பட்டது என்று நினைக்கின்றேன்.

 

மேலே கிருபன் கூறியது போல் 86 ஒக்டோபரில் விக்டர் வீரச்சாவு அடைந்தார். டிசம்பர் மாதம் திருவெண்பா பூசை நடக்கும் காலத்தில் தான் ஈபிஆர் எல் எவ் தடைசெய்யப்பட்டது. விக்டர் வீரச்சாவு அடைந்த போது மாங்குளம் இராணுவ முகாமில் இருந்து ராணுவம் வெளியேறதவாறு ஈபிஆர்எல்எவ்  இயக்கத்தினர் காவலில் இருந்தனர்.  மாங்குளம் இராணுவ முகாம் மீது அவ்வப்போது செல்தாக்குதலும் செய்தனர். ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் வீரசிங்கம் என்ற போராளியே இவற்றுக்கு பொறுப்பாக இருந்தார். அக்காலப்பகுதியில் மாங்குளம் ராணுவத்தினர் காடுவளியாக வந்து மாங்குளம் துணுக்காய் வீதியில் வைத்து வீரசிங்கத்தை பதுங்கியிருந்து சுட்டுக்கொன்று மூன்று முறிப்பு சந்தியில் அவர் உடலை கட்டி தொங்கவிட்டனர். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ சபாரத்தினம்  கொலை  செய்யப்பட்டது 

புலிகள்  ரெலோ  சம்பந்தப்பட்டதாக  பார்க்கப்பட்டிருந்தால்

எப்பொழுதோ அது  மன்னித்து மறந்து விடப்பட்டிருக்கும்

இதை  தூக்கி  திரிபவர்களும்

கொழுத்தி விடுபவர்களும்

விடுதலையின் எதிரிகளும் துரோகிகளுமே

அதை  ஒரு போதும் அவர்கள்  விடப்போவதில்லை

எனவே   அந்த  தாக்குதலில் ரெலோவின்  கை  முன்னேறி  புலிகள்  அழிந்திருந்தாலும்

அவர்கள் இதையே  தான்  செய்து கொண்டிருப்பர்

மேலே எழுதப்பட்ட  பலரது  முகங்களும் நாம்  அறிந்தவையே

தொடருங்கள்☹️☹️☹️

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சண்டமாருதன் said:

இந்திய இராணுவ வருகையோடுதான் வானொலிகள் முளைத்தது. கப்பலில் இருந்து ஒலிபரப்பினார்களா இல்லை வவுனியாவில் இருந்து ஒலிபரப்பினார்களா என்பது தெரியாது ஆனால் வன்னி எங்கும் கேட்க கூடியதாக இருந்தது. புலிள் மீதான அவதூறு ஒன்றே குறிக்கோளாக இருந்தது. அ

இந்திய ஆமிக்கு முன்னரே புலிகள் கோப்பாயிலிருந்து வானொலி ஒலிபரப்பினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சண்டமாருதன் said:

இந்திய இராணுவ வருகையோடுதான் வானொலிகள் முளைத்தது. கப்பலில் இருந்து ஒலிபரப்பினார்களா இல்லை வவுனியாவில் இருந்து ஒலிபரப்பினார்களா என்பது தெரியாது ஆனால் வன்னி எங்கும் கேட்க கூடியதாக இருந்தது. புலிகள் மீதான அவதூறு ஒன்றே குறிக்கோளாக இருந்தது. அதில் தான் அனேகமான கட்டுக்கதைகள் பரப்பப் பட்டது. 

 

நான் கேள்விப்பட்டவரையில் புளொட்டினால்தான் முதன்முதலில் 85ம் ஆண்டளவில் வானொலி ஆரம்பிக்கப்பட்டது,மண்டைதீவு வானொலி நிலையத்திலிருந்து கடத்திச்செல்லப்பட்ட வானொலி உபகரனங்களை வைத்து ஆரம்பித்தார்கள் என்று அறிந்தேன் .. நான் அறிந்தது 100% சரியா இருக்குமோ தெரியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, valavan said:

நான் கேள்விப்பட்டவரையில் புளொட்டினால்தான் முதன்முதலில் 85ம் ஆண்டளவில் வானொலி ஆரம்பிக்கப்பட்டது,மண்டைதீவு வானொலி நிலையத்திலிருந்து கடத்திச்செல்லப்பட்ட வானொலி உபகரனங்களை வைத்து ஆரம்பித்தார்கள் என்று அறிந்தேன் .. நான் அறிந்தது 100% சரியா இருக்குமோ தெரியாது.

 

போராளிகள் இந்தியாவுக்கு தொடர்புகொள்ள வைத்திருந்த 
தொலைத்தொடர்பு சாதனமே 18 மையில் சுற்றளவுக்கு ஒரு குறித்த 
சோர்ட் வெவ் வழியாக ஒலிபரப்பு செய்ய போதுமானதாக இருந்தது.

84 தொடக்கத்திலேயே புலிகள் சிங்கள ஒலிபரப்பை அடிக்கடி 
இடை அறுக்க தொடக்கி இருந்தார்கள்.

கோண்டாவிலில் இருந்த புலவர் வீடியோவில் இருந்த ஒருவர் 
வானொலி சார்ந்து சில புலமை கொண்டிருந்தார் அவரே புளொட்டின் 
ஒலிபரப்பை மாலை 6 தொடக்கம் 9 வரை செய்து வந்தார் ..மண்டைதீவு  
உபகரணங்கள் பெரிதாக உதவவில்லை.

புலிகளின் நிதர்சனம் பின்பு சில ஒலிபரப்புகளை செய்தார்கள் 
அது புளட்டிடம் இருந்து பறித்து எடுத்து செய்தார்களோ தெரியவில்லை.
புலிகளின் குரல் உத்தியோக பூர்வமாக 1990இல் தான் ஒலிபரப்பு செய்ய தொடங்கினார்கள்.

கலண்டர் அடிக்கிறது படம் போடுறது கூட்ட்டம் வைக்கிறது 
என்று பிரச்சார வேலைகளில் புலிகளை விட 
டெலோவும் புளட்டும்தான் முன்னிலை வகித்தார்கள்.

புலிகள் இராணுவ முகம் போலீஸ் நிலைய தகர்ப்பு என்று 
ஈழ விடுதலைக்கு சம்மந்தம் இல்லாத வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:


என்று பிரச்சார வேலைகளில் புலிகளை விட 
டெலோவும் புளட்டும்தான் முன்னிலை வகித்தார்கள்.

புலிகள் இராணுவ முகம் போலீஸ் நிலைய தகர்ப்பு என்று 
ஈழ விடுதலைக்கு சம்மந்தம் இல்லாத வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள். 

ஆயிரத்தில் ஒர் வார்த்தை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

கலண்டர் அடிக்கிறது படம் போடுறது கூட்ட்டம் வைக்கிறது 
என்று பிரச்சார வேலைகளில் புலிகளை விட 
டெலோவும் புளட்டும்தான் முன்னிலை வகித்தார்கள்.

புலிகள் இராணுவ முகம் போலீஸ் நிலைய தகர்ப்பு என்று 
ஈழ விடுதலைக்கு சம்மந்தம் இல்லாத வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள். 

அனைத்து இயக்கங்களும் இருந்த காலத்தில் புலிகளால் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டது, எந்த ராணுவ முகாம்களும் தாக்கியழிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன், கொக்கிளாய் மட்டுமே ,முயற்சி செய்தார்கள் ஆனால் வெற்றியளிக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில் மிக பெரும் எண்ணிக்கையில் போராளிகளை இழந்ததும் அந்த தாக்குதல் என்றுதான் நினைக்கிறேன்...ஆனால் ஆரம்பத்திலிருந்து அஸ்தமனம்வரை புலிகளிடம் மட்டுமே 100% போர் குணம் இருந்தது என்பதை மறுக்க யாருமே இல்லை.

Link to comment
Share on other sites

On 5/11/2018 at 11:16 AM, ரதி said:

சுகன்,நீங்கள் நியாயமாக கருத்து எழுதுவீர்கள் என்று நினைத்தேன்....நான் எல்லாப் படுகொலைக்கும் ,சகோதர யுத்தத்திற்கும் புலிகளும்,தலைவரும் மட்டும் தான் காரணம் என்று எங்குமே எழுதியதில்லை.

 

//இயக்கங்கள் மோதிக்கொண்டது சகோதரக் கொலைகளும் உண்மைதான் அதை மறுப்பதற்கில்லை ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி பிரபாகரன் தலையில் போட்டுவிட்டு ஏனையவர்கள் யோக்கியராக முடியாது.//

இவ்வாறு நான் எழுதியதற்கு உங்கள் புரிதல் வேறாக இருக்கின்றது. அதையிட்டே இப்பதிலை எழுதவேண்டியுள்ளது. 

பிரபாகரன் என்ற ஒருவரை குற்றவாளியாக்கி தனது அனைத்து சமூக முரண்பாடுகளினதும் அதனூடான வககிரங்களில் இருந்தும் ஏனையவர்கள் நல்லவர்களாக முற்படுகின்றனர். தம்மை யோக்கியராக முன்நிறுத்த முற்படுகின்றனர். இங்கு ஏனையவர்கள் என்பது மற்ற இயக்கங்களை குறிப்பதல்ல. ஒட்டுமொத்தமாக எம் அனைவரையும் குறிப்பதாகும். 

முனனர் நடந்த ஒரு சகோதரச் சண்டையின் பின்புலத்திலேயே இக் கருத்தாடலை நாம் செய்கின்றோம். இதன் நோக்கம் சாதகமாக இருப்பபதே தேவையானது.  அச் சண்டையின் தனமையை நாம் தக்கவைக்க முற்படுவோமானால் அச் சணடை என்னுமொரு காலத்தில் வேறு ஒரு வடிவத்தில் தொடரும். 

இவனை அவன் மண்டையில் போட்டான் அவனை இவன் மண்டையில் போட்டான் என்று சகோதரச் சண்டையில் ஈடுபட்ட எவரையும் நான் எதிரியாக வெறுப்புடன் அணுகியதில்லை. அதனால் தான் எனது முந்தய கருத்துக்கள் மாற்று இயக்கம் எனப்படுவோர் சார்பாக ஒட்டுக்குளு எனப்படுவோர் சார்பாக கருணா போன்றவர்கள் சார்பாக பல சர்ச்சைகளை கொண்டிருக்கின்றது. ஏனெனில் இச் சண்டைகளுக்கன காரணம் என்ன எமக்குள் ஒருவரை ஒருவர் போட்டுக்கொள்ளும் மனநிலை உளவியல் பின்னணி எங்கிருந்து வருகின்றது என்பதே எனது தேடல். அதில் ஏதாவது பிரயோசனம் இருக்கும் என்பது எனது நம்பிக்கை.  கீழ் கண்ட திரியில் காணலாம்.

 

On 5/11/2018 at 11:16 AM, ரதி said:

சிறி சபாரத்தினத்தினத்தை புலிகள்  கொலை செய்ததை ஓரளவு மன்னிக்கலாம்....அவரை புலிகள் சுடாட்டில் அவர் புலியை அழித்திருக்க கூடும் ...அந்த நேரத்தில் லங்கா புவத் உட்பட பல பலரும் வதந்தீகளை பரப்பிக் கொண்டு இருந்தனர் . இப்பவும்  பரப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்....ஆனால் குட்டிமணி விடயத்தில்  தலைவரில் தான் முழுப் பிழையும்... இது பற்றி நான் மேலும் எழுத விருப்பமில்லை...மேலே பகலவன் சிறி சபா, நளினியை வைத்திருந்தவர் என எழுதி இருக்கிறார் அதற்கு ஆதாரம் இருக்கா?....புலிகளை பற்றியோ அல்லது தலைவரைப் பற்றியோ ஏதாவது கதைத்தால் .அது வதந்தி ஆனால் மற்றவர்களை பற்றிக் கதைத்தால் அது உண்மை

கருணா மடடக்களப்பான்.பிரதேசவாதம் கதைக்கிறார். துரோகி எண்டால் பதுமனும் அப்படியா?
ஏன் சூசை அண்ணா குடும்பத்தோட தப்பி ஓட வெளிக்கிடடவர்?
எப்படி அதிக வெறுப்பு கூடாதோ அதே மாதிரி அதீத நம்பிக்கையும் கூடாது

மற்ற இயக்கங்களை விட கட்டுக் கோப்பான இயக்கமாக  புலிகள் இருந்தார்கள்...அவர்களது தியாகங்களை நான் மதிக்கிறேன்.. அதற்காக அவர்கள் செய்தது எல்லாம் சரி என்றாகி விடாது .எங்களுக்கு ஒரு  நாடு வேண்டும் என்பதற்காக .அநியாயமாய் உயிர் நீத்தவர்களை மறக்கக் கூடாது....ஆனால் புலிகள்  30 வருடம் போராடி,அவ்வளவு உயிர்கள் மாண்டும்  கண்ட பலன் என்ன?...மற்ற இயக்கங்கள் போல சிக்கிரமாய் அழிந்திருந்தால் அரைவாசி உயிராவது மிகச்சமாயிருக்கும்.

உங்களோடு உரையாடியதில் மகிழ்சசி....நன்றி ,வணக்கம்

 

 

எங்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்பதன் அடிப்படையே சிங்களவர்களிடம் இருந்து உயிரை பாதுகாப்பது என்றது தான். நாம் புலம்பெயர்ந்து உயிரைப் பாதுகாத்துள்ளோம்.. தாயகத்தில் மிஞ்சியவர்கள் சிங்களவரின் அதிகாரத்தின் கீழ் வாழ்வது என்ற நிலையில் தமதுயிரை பாதுகாத்துள்ளனர்.  

முப்பது வருடமாக போராடி கண்ட பலன் என்ன (மேலே பதில்) என்று வேறு ஒரு இனத்தவர் எம்மைப் பார்த்துக் கேட்க அதற்கு நாம் என்ன பதில் வைத்திருக்கின்றோம் என்பதும் எமக்குள் இக்கேள்வியை கேட்டு என்ன பதிலை தேடியுள்ளோம் என்பதும் தான் முக்கியம்  ஆனல் பதிலை கூறவேண்டிய நாம் இக்கேள்வியுடனே இலகுவாக நின்று கொள்கின்றோம். இல்லையேல் இருக்கவே இருக்கின்றது ஒரு பதில் அதுவானது பிரபாகரன் என்ற பெயரை சுட்டிக்காட்டுவது. 

On 5/11/2018 at 11:16 AM, ரதி said:

சுகன்,நீங்கள் நியாயமாக கருத்து எழுதுவீர்கள் என்று நினைத்தேன்

-------------------------

உங்கள் பதில்களுக்கும் நன்றி... 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

 

//இயக்கங்கள் மோதிக்கொண்டது சகோதரக் கொலைகளும் உண்மைதான் அதை மறுப்பதற்கில்லை ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி பிரபாகரன் தலையில் போட்டுவிட்டு ஏனையவர்கள் யோக்கியராக முடியாது.//

இவ்வாறு நான் எழுதியதற்கு உங்கள் புரிதல் வேறாக இருக்கின்றது. அதையிட்டே இப்பதிலை எழுதவேண்டியுள்ளது. 

பிரபாகரன் என்ற ஒருவரை குற்றவாளியாக்கி தனது அனைத்து சமூக முரண்பாடுகளினதும் அதனூடான வககிரங்களில் இருந்தும் ஏனையவர்கள் நல்லவர்களாக முற்படுகின்றனர். தம்மை யோக்கியராக முன்நிறுத்த முற்படுகின்றனர். இங்கு ஏனையவர்கள் என்பது மற்ற இயக்கங்களை குறிப்பதல்ல. ஒட்டுமொத்தமாக எம் அனைவரையும் குறிப்பதாகும். 

முனனர் நடந்த ஒரு சகோதரச் சண்டையின் பின்புலத்திலேயே இக் கருத்தாடலை நாம் செய்கின்றோம். இதன் நோக்கம் சாதகமாக இருப்பபதே தேவையானது.  அச் சண்டையின் தனமையை நாம் தக்கவைக்க முற்படுவோமானால் அச் சணடை என்னுமொரு காலத்தில் வேறு ஒரு வடிவத்தில் தொடரும். 

இவனை அவன் மண்டையில் போட்டான் அவனை இவன் மண்டையில் போட்டான் என்று சகோதரச் சண்டையில் ஈடுபட்ட எவரையும் நான் எதிரியாக வெறுப்புடன் அணுகியதில்லை. அதனால் தான் எனது முந்தய கருத்துக்கள் மாற்று இயக்கம் எனப்படுவோர் சார்பாக ஒட்டுக்குளு எனப்படுவோர் சார்பாக கருணா போன்றவர்கள் சார்பாக பல சர்ச்சைகளை கொண்டிருக்கின்றது. ஏனெனில் இச் சண்டைகளுக்கன காரணம் என்ன எமக்குள் ஒருவரை ஒருவர் போட்டுக்கொள்ளும் மனநிலை உளவியல் பின்னணி எங்கிருந்து வருகின்றது என்பதே எனது தேடல். அதில் ஏதாவது பிரயோசனம் இருக்கும் என்பது எனது நம்பிக்கை.  கீழ் கண்ட திரியில் காணலாம்.

 

 

எங்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்பதன் அடிப்படையே சிங்களவர்களிடம் இருந்து உயிரை பாதுகாப்பது என்றது தான். நாம் புலம்பெயர்ந்து உயிரைப் பாதுகாத்துள்ளோம்.. தாயகத்தில் மிஞ்சியவர்கள் சிங்களவரின் அதிகாரத்தின் கீழ் வாழ்வது என்ற நிலையில் தமதுயிரை பாதுகாத்துள்ளனர்.  

முப்பது வருடமாக போராடி கண்ட பலன் என்ன (மேலே பதில்) என்று வேறு ஒரு இனத்தவர் எம்மைப் பார்த்துக் கேட்க அதற்கு நாம் என்ன பதில் வைத்திருக்கின்றோம் என்பதும் எமக்குள் இக்கேள்வியை கேட்டு என்ன பதிலை தேடியுள்ளோம் என்பதும் தான் முக்கியம்  ஆனல் பதிலை கூறவேண்டிய நாம் இக்கேள்வியுடனே இலகுவாக நின்று கொள்கின்றோம். இல்லையேல் இருக்கவே இருக்கின்றது ஒரு பதில் அதுவானது பிரபாகரன் என்ற பெயரை சுட்டிக்காட்டுவது. 

-------------------------

உங்கள் பதில்களுக்கும் நன்றி... 

 

 

 

சுகன், நான் இது திரியில் தொடர்ந்து எழுதுவதில்லை என்று தான் இருந்தேன்.ஆனால் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவைப்பாடு  உள்ளது.

முதலில் எனது தவறுதலான புரிதலால் உங்கள் மனதை நோகப் பண்ணியிருப்பின் அதற்காக மன்னிப்பு கேட்க்கிறேன்.

மற்ற இயக்கங்கங்களை எல்லாம் தோக்கடித்து தன்னால் மட்டும் தான் தமிழீழம் எடுத்து தர முடியும் என்று சொல்லி கடைசி வரை போராடி மக்களை நிற்கதியாய் விட்டுட்டுப் போனவர் தானே! அவரை நோகாமல் வேறு யாரை நோவது 

வேண்டுமானால் சகோதர சண்டையை வேடிக்கை பார்த்தவர்கள் தங்கள் மட்டும் தப்பினால் காணும் என்று நாட்டை விட்டு ஓடி வந்தவர்கள்,புலிகளை உசுப்பேத்தினவர்கள், புலிகளை நம்பினால் காணும் அவர்கள் தமிழீழம் எடுத்து தருவார்கள் என நம்பின மக்கள் .....அப்படி எல்லோரும் பொறுப்பு கூற வேண்டும் என சொல்ல வருகிறீர்களோ என்னவோ?....எது எப்படி என்டாலும் முழுப் பொறுப்பும்,பிழையும் தலைவர் தானே!....ஒரு கதைக்கு அவர் இந்த யுத்தத்தில் வென்றிருந்தால் தலைவர் வென்றிடடார். தமிழீழம் எடுத்து தந்திடடார் என்று தானே சொல்லுவோம்.

வெற்றியை பொறுப்பு ஏற்கும் ஒருவர் தோல்வியையும் பொறுப்பு ஏற்கத் தான் வேண்டும் 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.