Jump to content

எங்க ஊர் முதலாளி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 

எங்க ஊர் முதலாளி

D10_BEADA-_CDBA-4599-_A42_A-9_CD47_AA667 

ஒரு காலத்தில் நகரத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஆளுமை மிகுந்தவர் முதலாளி. எங்கள் துறைமுகப் பகுதியில் கடலின் ஆழம் போதாது, வணிகக் கப்பல்கள் அங்கு வர முடியாது என்ற நிலை இருந்த போது, துறைமுகத்துக்கு ஒரு மைல் தள்ளி வணிகக் கப்பல்களை நிறுத்திவிட்டு, படகுகளில் போய் பொருட்களை ஏற்றி, கரைக்கு கொண்டுவரலாம் என்று செய்து காட்டி பலருக்கு நகரத்தில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை முதலாளியினுடையது.

 முதலாளிக்கு வணிகத் திறமை மட்டுமல்ல பெண்களை வசியப் படுத்தும் கலையும் நன்றாக வரும். முதலாளியுடன் நெருக்கமாகப் பழகும் அவரது நண்பர்களுக்கு, குழந்தை பிறக்கும் போது, தங்களது குழந்தை முதலாளியைப் போல இருந்து விடுமோ என்ற அச்சம் ஒட்டிக் கொள்ளும். அந்த விசயத்தில் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் உடல் உதவி செய்வதில் முதலாளி ஒரு கண்ணன்.

 நகரத்தின் பெரிய கட்டிடமே முதலாளிக்குத்தான் சொந்தம். இலங்கை வங்கி, யாழ் கூட்டுறவு ஸ்தாபனம், குமார் அச்சகம்… என்று பல கடைகள் அந்தக் கட்டிடத்தில் இருந்தன. மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையம் ஒன்றை அந்தக் கட்டிடத்திலேயே முதலாளியும் தன் பங்குக்கு நடத்திக் கொண்டிருந்தார். அந்த கட்டிடத்துடன் சேர்ந்து  வடக்குப் பக்கமாக இரண்டு சின்னக்கடைகள் இருந்தன. அந்தக் கடைகளை அகற்றி, அதன் நிலத்தை வாங்கி தன் கட்டிடத்துக்கு மேலும் அழகூட்ட முதலாளி விரும்பினார். 

 அந்தக் கடைகளில் ஒன்று யுனைற்ரெட் ஸ்ரோஸ்(புத்தகக் கடை), மற்றது ஜெமினி பன்ஸி பலஸ். இந்த இரண்டு கடைளையும் வல்வெட்டித்துறையைச் சேரந்த அண்ணன் தம்பிகளே நடத்திக் கொண்டிருந்தார்கள். வல்வெட்டித்துறையாரோடு நேரடியாக மோத முதலாளிக்குத் தயக்கமாக இருந்தது. எப்படியாவது அந்தக் கடைகளில் இருந்து அவர்களை வெளியேற்றிவிட வேண்டும் என பல கணக்குகளைப் போட்டுப் பார்த்துக் கொண்டார். முதலாளி போட்ட கணக்கு சிக்கலாக இருந்தது. அடிமானங்கள் பல போட்டுப் பார்த்தும் அண்ணனும், தம்பிகளும் அசைந்து கொடுக்கவில்லை. தனது அடியாட்களை விட்டு ‘பீ முட்டி’ அடித்தும் பார்த்தார். பீ முட்டி’ என்றால் சிலருக்கு அது என்ன என்று புருவங்கள் மேலே எழலாம் என்பதால் அது பற்றிய ஒரு சிறு விளக்கம்.

 அப்பொழுது வாளிக் கக்கூஸ்தான் பரவலாக வீடுகளில் இருந்தன. அப்படியான கக்கூஸ்களில் இருந்து பானை (முட்டி)க்குள் மலங்களை அள்ளி வந்து வேண்டப்படாதவர்கள் வீடுகளுக்கு முன்பாகவோ, கடைகளுக்கு முன்பாகவோ எறிந்து விட்டுப் போவதுதான் ‘பீ முட்டி அடித்தல்’ என்பது.

 பீ முட்டி அடிக்கும் திருவிழா இரண்டு கடைகளுக்கும் முன்னால் ஒவ்வொரு இரவுகளும் நடந்து கொண்டிருந்தன. அண்ணன் தம்பி இருவரும்  சளைக்காமல் கூலிக்கு ஆட்களைப் பிடித்து காலையில் கடை வாசலைத் துப்பரவாக்கி சாம்பிராணி காட்டி தங்கள் வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து ‘போதுமடா சாமி’ என்று ஒதுங்க நினைத்தவர்களுக்குத் தொல்லை தந்து கொண்டிருந்த பிரச்சனை சிறைச்சாலைக்குப் போய் விட்டது.

 முதலாளிக்கு கொஞ்சம் தமிழ்ப் பற்று இருந்தது. அவரின் இந்த தமிழ்ப் பற்றை ஆரம்ப கால போராளிகள் தங்கள் பக்கம் எடுத்துக் கொண்டார்கள். (சுங்கான்) பத்மநாதன் முதலாளியின் கட்டிடத்துக்கு அருகேதான் றேடியோ திருத்தும் கடை வைத்திருந்தார். அதற்கு அடுத்ததாக இருந்த சிறீமுருகன் மெடிக்கல் ஸ்ரோஸ். அதன் உரிமையாளர், ரெலோ இயக்கத்தின் தலைவர்சிறீசபாரத்தினத்தின் அண்ணன் கந்தசாமி.

 பத்மநாதனும், கந்தசாமியும் இணைந்து என்னென்ன செய்தார்கள் என்பது தெரியாது. ஆனால் தாங்களே கைத்துப்பாக்கிகளை உருவாக்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்கான பொருள் உதவிகள் முதலாளியிடம் இருந்துதான் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆயுதப் போராட்டம் பலமாக இருக்கும் போதே அச்சமில்லாமல் காட்டிக் கொடுக்க ஆட்கள் இருந்த போது அன்றைய காலத்தில் ‘மொட்டைக் கடுதாசி’ எழுதிப் போட ஆளில்லாமல் போகுமா? 

 சுங்கான், அவரது கடை ஊழியர் ஒருவர், கந்தசாமி  இவர்களுடன் முதலாளியும் சிஐடி பஸ்ரியாம்பிள்ளையின் விருந்தினர்களாக சிறைச்சாலைக்குப் போனார்கள். அதன்பிறகு புத்தகக் கடைக்கும் பன்ஸிக் கடைக்கும் பீ முட்டி அடிக்கப்படுவது நின்று போனது. 

 செல்வாக்குகளைப் பாவித்து கொஞ்சக் காலத்துக்குப் பிறகு பஸ்ரியாம்பிள்ளையின் விருந்தினர் மாளிகையில் இருந்து முதலாளி வெளியே வந்தார். ‘சிறை சென்று வந்த செம்மல்’ என்று குரல் எழுப்பிக் கொண்டே அவருக்கு மாலை போடப் போன அடிவருடிகள், “என்ன முதலாளி இப்பிடி புத்தர் மாதிரி அமைதியாப் போனார் என்று சலித்துக் கொண்டு திரும்பி வந்தார்கள்.

 சிறைக்குப் போய் வந்த பின்னர் எந்தவித அடிதடிகளும் இல்லாமல் அமைதியாக இருந்து கொண்டு பிரபலமான மனிதர்களை தனது கட்டிடத்துக்கு அழைத்து விருந்தளித்து மகிழ்ந்து கொண்டிருந்தார். அப்போது, நாட்டுக்கு வந்த சீர்காழி கோவிந்தராஜனையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவரையும்  தன் கட்டிடத்துக்கு கூட்டி வந்து விருந்தளித்தார். இவர் அவருக்கு பருகப் பால் கொடுக்க, அவர் இவரைப் பார்த்து, அமுதும் தேனும் எதற்கு? நீங்கள் அருகினிலே இருக்கையிலேயே எனக்கு” என்று கணீர் குரலில் முதலாளியைப் பார்த்துப் பாட, முதலாளி உள்ளம் உருகிப் போய் நின்றார்.

 தந்தை செல்வா, ஜி.ஜி பொன்னம்பலம் இருவரது மரண ஊரவலங்களையும் அவர்களது கட்அவுட்டுகளை வைத்து நகரத்தில் வரலாறு காணாத இறுதி ஊர்வலங்களை நடத்தி எல்லோரையும் வியக்க வைத்தார். 

 „அட முதலாளிக்கு வேறு முகமும் இருப்பது இதுவரை தெரியாமல் போயிற்றே என்று பலர் பேசிக் கொண்டார்கள். அப்படி நினைத்தவர்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே தெரியாத ஒன்று முதலாளியின் மனதுக்குள் இருந்தது.  1977ல் நடக்க இருந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, அதுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுவது என்பதே முதலாளியின் மனதில் இருந்த ஆசை.

 சிறைக்குப் போய் வந்திருக்கிறார். தமிழ்தலைவர்களின் இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தியிருக்கிறார். பலருக்கு வேலை வாங்கித் தந்திருக்கிறார். போதுமான பணமும் மக்களிடத்திலான அறிமுகமும் நிறையவே இருக்கிறது. ஆகவே தேர்தலில் போட்டியிடலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்ததில் தவறு இல்லைத்தான். அவருக்குத்தான் அந்தமுறை போட்டியிட வாய்ப்பு கூட்டணியில் இருப்பதாக நகரில் பேச்சு இருந்தது. “நீங்கள்தான் எங்களது வேட்பாளர் என்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் வாக்குக் கொடுத்திருந்தார். இருவரும் நெருக்கமாகவே இருந்ததார்கள்.

 இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழமையான போட்டியாளர் க.துரைரத்தினத்துக்கே போய்ச் சேர்ந்தது. ஐந்து தடவை போட்டியிட்டு நாலு தடவைகள் வென்று பாராளுமன்றம்  போய் வந்து கொண்டிருந்த க.துரைரத்தினத்தின் மேல் முதலாளிக்கு  மட்டுமல்ல, பலருக்கும் அதிருப்தி இருந்தது.  ஆனால் அதைப் பற்றி கூட்டணித் தலமை கண்டு கொள்ளவில்லை.

 அபிமானிகள்  தந்த ஆலோசனையில் ‘உண்மையே வெல்லும்’ என்று சுயேட்சையாக போட்டியிட முதலாளி முடிவு செய்தார். தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்துவிட்டு நகரத்தில் வடக்கே கடலைப் பார்த்துக் கொண்டிருந்த காந்தி சிலைக்கு மாலை போட்டு அபிமானிகளோடு ஊர்வலமாக வந்தார். அவர் நடத்திய தேர்தல் கூட்டங்களில் மேடைகளில் கதிரைகள் எதுவுமே கிடையாது. எல்லோரும் மேடைகளில் சப்பாணி போட்டே அமர்ந்தார்கள்.முதலாளியின் பேச்சும், செயலும் பலருக்கு பிடித்துப் போனது. 

 தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்று உதய சூரியன் சின்னத்தில் முதன் முதலாகப் போட்டியிட்டதாலும், இளைஞர்களிடையே அப்பொழுது இருந்த எழுச்சியும், மேடைகளிலே இரத்தப் பொட்டுகளை புன்னகையுடன் அமிர்தலிங்கம் வாங்கிக் கொண்டிருந்ததாலும், தேர்தலின் முடிவு முதலாளிக்கு முரணாகவே போனது. அந்தத் தேர்தலில் முதலாளியால் 13 சதவீத வாக்குகளே பெற முடிந்தது.

 தேர்தல் முடிவுக்குப் பிறகு அரசியல் என்பது தன்னைவிட பெரிய பெரிய முதலைகள் வாழும் இடம் என்பதை முதலாளி புரிந்து கொண்டார். வியாபாரம், ஆன்மீகம் இரண்டும் தனக்குப் போதும் இனி அரசியலில், அடிதடிகளில் எல்லாம் இறங்க முடியாது என்று ஒதுங்கி இருந்தவரை மீண்டும் பிரச்சினை தேடி வந்தது.

 தனது கட்டிடத்தின் மேல் தளத்தில் இளைஞர்கள் கராட்டி பழகுவதற்கென முதலாளி இடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தார். ரட்ணசோதி என்பவரே அந்த கராட்டி வகுப்பை நடத்திக் கொண்டிருந்தார். இந்த ரட்ணசோதிதான் பின்னாளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் கராட்டி சொல்லிக் கொடுத்தவர்.“போராளிகளுக்கு முதலாளியின் கட்டிடத்தில் பயிற்சி நடக்கிறது என யாரோ ஒருவர் மொட்டைக் கடுதாசியை புலனாய்வுத்துறைக்கு எழுதிப் போட, ஒருநாள் கட்டிடத்தைச் சுற்றி  நிறைய அதிரப்படை. 

 அதில் இருந்து ஒருவாறு தன்னைக் காப்பாற்றிக் கொண்டாலும் கட்டிடத்தின் தெற்குப் பக்கமாக இருந்த அச்சகத்தால் அவருக்குப் பிரச்சனை வந்தது. அந்த அச்சகத்தின் உரிமையாளரின் தம்பிதான் கிட்டு என்கிற கிருஷ்ணகுமார். ஒரு இரவு அதிரடிப்படை இராணுவத்துடன் வந்து அச்சகத்தை தீ வைத்து முற்றாக அழித்து விட்டுப் போயிற்று. இதற்குள் மாணவர் பேரவை  பகலிலேயே  கட்டிடத்தின் மேற்குப் பக்கமாக இருந்த இலங்கை வங்கியை கொள்ளை அடித்து காவலுக்கு நின்ற ரிசேர்வ் பொலிஸை சுட்டுக் காயப் படுத்திவிட்டும் போனது. 

 கட்டிடத்தின் மேலே கராட்டிப் பிரச்சினை, தெற்கே அச்சகப் பிரச்சினை, மேற்கே வங்கிக் கொள்ளை. முதலாளிக்கு ஒன்று விளங்கிவிட்டது அரசியலும், வியாபாரமும் இனிவரும் காலங்களில் தனக்கு சரிப்பட்டு வராது என்று. அரசியலும், வியாபாரமும் காலை வாரிவிட  அடுத்து அவரது கையில் இருந்தது ஆன்மீகம் மட்டுமே. இவ்வளவு பிரச்சினைகளுக்குள் முதலாளி சிக்குண்டு இருக்கையில் அவரது மகன் போராட்டக்குழுவில் போய் சேர்ந்து விட்டான்.

 இந்திய அமைதிப்படை  முற்று முழுதாக நகரத்தை ஆக்கிரமித்து இருந்த பொழுது, சமூகத்தில் மேல் நிலையில் இருந்தவர்களோடு அவர்கள் தங்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் தொடர்பில் முதலாளியும் இருந்தார். முதலாளி இந்தியப்படைக்கு, போராளிகளைப் பற்றி தகவல்கள் கொடுக்கிறார் என்று யாரோ புண்ணியவான் கதையைக் கிளப்பிவிட முதலாளியின் நிலை கவலைக்கிடமாகிப் போனது. வெளி நடமாட்டத்தை குறைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார். 

 முதலாளிக்கு வேண்டிய ஒருவர் காலமாகிப் போன பொழுது தனது அஞ்ஞாதவாசத்தை துறந்து, அந்த மரண வீட்டுக்குப் போனார். அந்த மரண வீட்டுக்கு அவரது மகன் சைக்கிளில் வந்தான். போராடப் போன மகன் நீண்ட நாட்களுக்குப் பின் தன்னை வந்து சந்தித்ததில் முதலாளிக்கு மகிழ்ச்சி.

 “அப்பா உங்களோடை கதைக்கோணும். வாங்கோ என்று சைக்கிளில் முதலாளியை ஏறச் சொன்னான்.

 “போட்டு இப்ப வந்திடுறன் என்று முதலாளி சொல்லிப் போட்டு போனதால் உடலத்தை எடுக்காமல் மரணவீட்டில் முதலாளிக்காக எல்லோரும் காத்திருந்தார்கள்.  

 “என்ன போனவரை இன்னும் காணேல்லை என்று காத்திருந்தவர்களுக்கு சற்று நேரத்துக்குப் பின் ஒரு செய்தி வந்தது,

 “முதலாளி செத்துப் போனார்

 ஏற்கெனவே தோண்டியிருந்த கிடங்குக்குள் படுக்கச் சொல்லிவிட்டு, அவரை அவரது மகனே சுட்டான் என்று ஒரு கதையும், மகன் கூட்டிக் கொண்டு போனது மட்டும்தான், முதலாளியைச் சுட்டது  வேறொரு போராளி என்றும் இரண்டு கதைகள் ஊருக்குள் வந்தன.

 முதலாளி முதலாளி என்று மரியாதையாக இந்தப் பத்தியில் நான் எழுதியதால் அவரது பெயரை இங்கே நான்  விழிக்கவில்லை. தேர்தலில் வென்று பாராளுமன்றம் போகாவிட்டாலும் தனது பெயருக்கு முன்னால் MP என்ற எழுத்துக்களைக் கொண்ட அவரது பெயர் மு.பொ.வீரவாகு. 

 அவரைப் பார்க்க  விரும்பினால் இங்கே போய்ப் பாருங்கள். 

http://www.uharam.com/2018/01/19.html

 

கவி அருணாசலம்

01.05.2018

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1970´களில்  நடந்த உண்மைச்  சம்பவங்களை மறக்காமல், ஒரு கோர்வையாக எழுதியுள்ளீர்கள்.
யாராக இருக்கும்.. என்று மனதிற்குள் எழுந்த கேள்விகளுக்கு,  விடைதேடி... தொடர்ந்து வாசித்துக் கொண்டு இருந்த போது  இறுதில்  அவரின் பெயரை பார்த்து....  கேள்விப் பட்ட  பெயராக இருந்தது. கதையின் சிறப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்காலத்தில் கராட்டி க்ளாஸ் எப்படி இருந்தது அருணாசலம்? குட்டிமணி ஒரு சிறந்த கராட்டி வீரர் என கேள்விப்பட்டுள்ளேன் இது உண்மையா? 

வெளி நாடுகளில் இன்னும் இப்படி தமிழர்கள் எதிரும் புதிருமாக கடைகள் போட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள். ஆனால் பீமுட்டி அடிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2018 at 3:36 PM, colomban said:

அக்காலத்தில் கராட்டி க்ளாஸ் எப்படி இருந்தது அருணாசலம்? குட்டிமணி ஒரு சிறந்த கராட்டி வீரர் என கேள்விப்பட்டுள்ளேன் இது உண்மையா? 

வெளி நாடுகளில் இன்னும் இப்படி தமிழர்கள் எதிரும் புதிருமாக கடைகள் போட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள். ஆனால் பீமுட்டி அடிப்பதில்லை.

Colombian நான் கராட்டி விளையாட்டுப் பக்கம்  போனதேயில்லை.

குட்டிமணிக்கு கராட்டி தெரியுமா என்பது பற்றி எனக்குத் தெரியாது

ஒருவரை ஒருவர் தாக்கும் போது வாயில் இருந்து  சிலேளைகளில்  உதிரும் வார்த்தைகள் பீமுட்டியைவிட நாத்தமாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவாகு கட்டடம், யுனைரெட் புத்தகசாலை எல்லாம் நன்றாகத் தெரிந்த இடங்கள். ஆனால் வீரவாகுவின் முடிவு இப்படி நடந்தது தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நல்ல பழைய காய் போல ஊர்ல நடந்த அத்தனை கொசிப்புக்களும் தெரிந்திருக்கு. எனக்கு நீங்கள் பெண்ணாக இருப்பியங்களோ என்று ஒரு சந்தேகம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவாகுவின் கதையை முழுமையாகத்தெரியாது ஆனால் அவருடைய மரணம் டொடர்பாக கேள்விப்பட்டிருக்கிறேன் அதன் உண்மைத்தன்மை தெரியாது, இலங்கை இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்ததிற்காகவே அவர் கொல்லபட்டதாகவும் , இலங்கை இந்திய ஒப்பந்த்தின் பின்னர் புலிகளும் அரச படையினரும் போர் முடிவுக்கு வந்து விட்டது என்றநிலையில் பரஸ்பரம் சந்த்தித்துக்கொள்ளும் ஒருநிகழ்வில் சிங்களத்தளபதி கொடுத்த தகவலின் அடிப்படையிலே புலிகளுக்கு தெரியவந்த்தாகவும் அதுவரை அவர் புலிகளின் ஆள் என்றநில்யிலேயே கருதப்பட்டதாகவும் ஒரு கருத்துநிலவுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

12 hours ago, கந்தப்பு said:

முதலாளியின் மகன் இப்பொழுது எங்கே

ஏதோ ஒரு வெளிநாட்டில் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறுயாராவது கூப்பிட்டால் வீரபாகு வரமாட்டார் என்பதாலேயே மகனை கூட்டிவர சொன்னதாக கதை அடிபட்டது,

கவி, சேர்மன் நடராசா பற்றியும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

கவி, சேர்மன் நடராசா பற்றியும் எழுதுங்கள்.

சேர்மன் நடராஜாவுக்கு இந்த ஆண்டு நூறாண்டு. ஏதும் நினைவுக்கு வந்தால் எழுதுகிறேன் மீரா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.