Jump to content

‘கேமிராவே என் ஆயுதம்’ - குப்பை சேகரிக்கும் பெண்மணியின் வெற்றிக் கதை!


Recommended Posts

‘கேமிராவே என் ஆயுதம்’ - குப்பை சேகரிக்கும் பெண்மணியின் வெற்றிக் கதை!

 

"ஒரு நாள் போலீஸ்காரர் என் கையில் விலை உயர்ந்த கேமிரா இருப்பதை கண்டார். என்னிடம் எதுவும் கேட்காமல் அவர் என்னை அறைந்தார்."

மாயா கொட்வேபடத்தின் காப்புரிமைMAYA KHODVE / FACEBOOK Image captionமாயா கொட்வே

மஹாராஷ்ட்ரா நாசிக் பகுதியை சேர்ந்த குப்பை சேகரிக்கும் மாயா கொட்வே இப்படியாகத்தான், அதாவது இந்த அடியுடன்தான் புகைப்பட பயிற்சியை தொடங்கினார்.

"நாசிக்கில் உள்ள ஓர் அமைப்பு குப்பை பொறுக்கும் எங்களில் சிலரை தேர்ந்தெடுத்து புகைப்பட கருவியை கையாளும் பயிற்சி அளித்தது. எங்களுக்கு பயிற்சி அளிக்க காரணமும் இருந்தது. அதாவது, எங்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் எங்களின் வாழ்நிலையை நாங்களே குறும்படமாக எடுக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்." என்கிறார் அவர்.

விலையுயர்ந்த கேமிரா எப்படி இருக்கும்?

ஒரு நாள் பயிற்சியின் போது நடந்த நிகழ்வொன்றை நினைவு கூர்கிறார். "எங்களுக்கு பயிற்சி முடிந்தவுடன், ஒரு நாள் எங்களுக்கு பயிற்சி அளித்த பயிற்றுநர்கள் எங்களை குப்பைக்கூடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சில புகைப்படங்களையும், காணொளிகளையும் எடுத்தோம். பின் அனைவரும் தேநீர் அருந்த சென்றனர். ஆனால், நான் செல்லாமல் அங்கேயே தங்கி புகைப்படம் எடுத்தேன். அப்போது இரண்டு போலீஸார் அங்கே வந்தனர். விலையுயர்ந்த புகைப்படக் கருவியில் புகைப்படம் எடுப்பதை கண்டவுடன், என்னிடம் எதுவும் கேட்காமல் என்னை அடித்தனர். என் போன்ற குப்பை பொறுக்கும் ஒரு பெண்ணிடம் எப்படி இப்படியான விலையுயர்ந்த கேமிரா இருக்கும்? நான் ஒரு திருடி என்று அவர்கள் நினைத்து இருக்கலாம்." என்கிறார் மாயா.

இன்று கேமிராவே என் ஆயுதம்

முன்பு கையில் கேமிரா இருந்ததால் போலீஸாரால் நான் தாக்கப்பட்டேன். ஆனால், இன்று அந்த கேமிராவே என் ஆயுதமாக இருக்கிறது என்கிறார் மாயா.

சிறு வயதில் மாயா தன் தாயுடன் குப்பை பொறுக்கும் பணியை மேற்கொண்டார். அவருக்கு முறையான கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மாயா கொட்வே Image captionமாயா கொட்வே

"எங்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால்தான், நாங்கள் குப்பை பொறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். ஆனால், மக்கள் எங்களையும் குப்பையாகவே கருதுகின்றனர். நாங்கள் சாலையில் நடந்து செல்லும் போது, அவர்கள் தங்கள் மூக்கினை மூடிக் கொள்கிறார்கள். அது எங்களுக்கு சங்கடத்தினை ஏற்படுத்துகிறது. சங்கடம் மட்டும் அல்ல மனவலியையும் ஏற்படுத்துகிறது. நான் யோசிப்பேன், நாங்கள் குப்பைகளை அகற்றுகிறோம். பிறர் நல்வாழ்வு வாழ குப்பைகளை சுத்தம் செய்கிறோம். பின் ஏன் மக்கள் எங்களை மோசமாக நடத்துகிறார்கள்? இது மாற வேண்டும், ஆனால் என்னால் எப்படி இதனை மாற்ற முடியும்?" மாயா நினைவுகூர்கிறார்.

புகைப்பட கருவி மூலமாக

இந்த யோசனைதான் அவரை நாசிக் வளர்ச்சிக்கான அபிவியக்தி ஊடக நிறுவனத்தில் சேர தூண்டியது. 2011 ஆம் ஆண்டு, இந்த நிறுவனம் அவருக்கு புகைப்பட கருவியை கையாளும் பயிற்சி அளித்தது.

"நான் எப்போதும் பள்ளிக்கு சென்றதில்லை. எனக்கு எழுத, படிக்க தெரியாது. உங்களுடைய எண்ணம் பலரை சென்று சேர வேண்டுமானால், உங்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆனால், இதற்காக நான் வேறொரு வழியை கண்டறிந்தேன். புகைப்பட கருவி மூலமாக என் எண்ணத்தை சொல்ல தொடங்கினேன்." என்கிறார் மாயா.

"மேலும் அவர், குப்பை பொறுக்கும் பெண்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. ஆனால்,யாரும் எங்களுக்கு எதுவும் செய்வதில்லை. எங்கள் பிரச்சனைகள் வெகுஜன மக்களுக்கு தெரியுமா என்று கூட எங்களுக்கு தெரியவில்லை. அதனால், எங்கள் பிரச்சனைகள் குறித்து நானே படன் எடுக்க எண்ணினேன். உங்கள் பிரச்சனைகள் என்னவென்று நீங்கள் சொல்லும் போது யாரும் கேட்கவில்லை என்றால், உங்கள் பிரச்சனைகள் என்னவென்று நீங்கள் காட்ட வேண்டும். அதைதான் நான் செய்தேன்" என்கிறார் அவர்.

ஏளனம் செய்தனர்

மாயாவிற்கு புகைப்பட கருவியை கையாளும் பயிற்சியை அளித்த அமைப்பானது, சிறிது காலத்திற்கு பின் அவர்களது பயிற்சி திட்டத்தை நிறுத்தியது. மாயாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இதன் காரணமாக, குப்பை சேகரிப்பவர்களுக்கு நியாயத்தை கொண்டு வரும் மாயாவின் முயற்சிகள் தடைப்பட்டன.

மாயா கொட்வேபடத்தின் காப்புரிமைMAYA KHODVE / FACEBOOK Image captionமாயா கொட்வே

"நான் கற்றவை அனைத்தும் வீணாகிவிடுமோ என்று அஞ்சினேன். ஆனால், 'வீடியோ தன்னார்வலர்கள்' என்ற அமைப்புடன் 2013 ஆம் ஆண்டு எனக்கு தொடர்பு ஏற்பட்டது. காணொளிகள் மூலம் சமூக நீதியை வென்றெடுப்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம். நான் அவர்களுக்காக வேலை செய்ய தொடங்கினேன். முதன்முறையாக இந்த காணொளி சார்ந்த என் பணிக்காக ஊதியமும் பெற்றேன்." என்கிறார் மாயா.

மாயாவின் முதல் காணொளி

கழிவு நீர் குழாய் உடைந்து, கழிவு நீர் எங்கள் பகுதி முழுவதும் சூழ்ந்தது. நான் இதனை படம் பிடித்தேன். - மாயா

"என்னுடைய முதல் காணொளியை என் வீட்டின் அருகே எடுத்தேன். கழிவு நீர் குழாய் உடைந்து, கழிவு நீர் எங்கள் பகுதி முழுவதும் சூழ்ந்தது. நான் இதனை படம் பிடித்தேன். மக்கள் என்னை கண்டு சிரித்தனர். நான் பைத்தியம் ஆகிவிட்டேன் என்றனர். ஆனால் படம் பிடித்து முடித்தவுடன், பிறருக்கு அந்த காணொளியை காட்டினேன். அவர்களுக்கு அந்த காணொளி மிகவும் பிடித்துவிட்டது. பின் அந்த காணொளியை எடுத்துக் கொண்டு அரசு அலுவலகத்திற்கு சென்றோம். அந்த காணொளியை காட்டி நியாயம் கோரினேன். அன்று ஞாயிற்றுக்கிழமை, அலுவலர்கள் வந்தனர். கழிவு நீர் குழாயை சரி செய்தனர். என் புகைப்பட கருவி வென்ற முதல் தருணம் அதுதான். எனக்கு நம்பிக்கை ஏற்பட்டதும் அப்போதுதான்." என்கிறார் மாயா.

தொழிற்நுட்பங்களை புரிந்து கொள்ளுதல்

மாயா அனைத்து தொழிற்நுட்பங்களையும் கற்று கொண்டார். அவரிடம் பேசிய போது அவர் சரளமாக பல படத்தொகுப்பு மென்பொருள் குறித்து பேசுகிறார்.

முன்பெல்லாம் தொழிற்நுட்பம் குறித்தெல்லாம் அதிகம் கவலை கொள்ள மாட்டேன். படத்தொகுப்பு குறித்தெல்லாம் தெரியாது. ஆனால், காலம் செல்ல செல்ல தொழிற்நுட்பத்தின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டேன். குறைந்த வார்த்தைகளில் சொல்லி அதிக விளைவை ஏற்படுத்த தொழிற்நுட்பம் முக்கியம் என்பதை அறிந்து புரிந்து, அவற்றை கற்க தொடங்கினேன். ஆனால், படத்தொகுப்பு குறித்து பயிற்சி அளிக்கும் தரவுகள் எல்லாம் ஆங்கிலத்தில்தான் இருந்தது. என்னால் எதனையும் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

மெல்ல மெல்ல போராடி அனைத்தையும் கற்றேன். இப்போது என் விருப்பம் மற்றும் கனவெல்லாம் இன்னொரு மாயாவை உருவாக்க வேண்டும் என்பதுதான்.

https://www.bbc.com/tamil/india-44023581

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பெண்மணியின் கையில் கமரா ஆயுதமாய் இருக்கு....என்னிடமும்தான் ஒரு கமரா இருக்கு வெறும் அலங்காரமாய்.பல்லு குத்துற ஈக்கில் அளவு கூட நான் அதை பயன்படுத்திறதில்லை.....!  ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.