Jump to content

எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்த்தேன்?


Recommended Posts

எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்த்தேன்?

சுய இன்பப் பழக்கத்திலிருந்து விடுபடுவதால் கிடைக்கும் `சுகம்' கோடிபடத்தின் காப்புரிமைREBECCA HEALTH / BBC THREE

சுய இன்பப் பழக்கத்திலிருந்து விடுபடுதல் சித்ரவதையாக தோன்றலாம், ஆனால் இதற்கு வியப்பூட்டும் பலன்கள் கிடைத்தன.

கட்டுரையாசிரியர் தன் பெயரை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார்.

இந்த கட்டுரையில் வயது வந்தோருக்கான கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

சுய இன்பத்தில் ஈடுபடாமல் விட்டு 13 மாதம் சாதனை படைத்துள்ளேன். அது அவ்வளவு எளிதாக இல்லை. ஆனால் என் வாழ்வு இதை விட சிறப்பாக இருந்ததில்லை.

சுய இன்பத்தில் ஈடுபடாமல் இருப்பதால் எனக்கு வியப்பூட்டும் அளவிற்கு நல்லது நடந்துள்ளது. என்னுடைய இருபதாவது வயதில் இப்பழக்கத்தை நான் சில வாரங்கள் விட்டுள்ளேன், சில நேரங்களில் சில மாதங்கள் இருந்துள்ளேன். நான் மட்டும் தனியே இல்லை. உலகெங்கும் லட்சக்கணக்கானோர் (பெரும்பாலும், ஆனால் ஆண்கள் மட்டும் அல்ல) "நோஃபேப்" என்ற இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர். இந்த இயக்கம் மக்களை சுய இன்பம் மற்றும் ஆபாச படங்கள் பார்ப்பதில் இருந்து விடுபட ஊக்கப்படுத்தும் இயக்கமாகும்.

ஆபாசப்படங்களை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளை நான் 19 வயது முதற்கொண்டே யோசிக்கத் தொடங்கிவிட்டேன். என் தலைமுறையைச் சேர்ந்த மற்றவர்களைப்போல் தேவைப்படும்போதெல்லாம் ஆபாசப்படங்களை பார்க்க முடியும் என்ற நிலையில் நான் வளர்ந்தேன். எனக்கு 14 வயதாகும் போது நான் இன்டர்நெட்டில் 'லிங்கரி' என்ற சொல்லைத் தேடியது நினைவுக்கு வருகிறது. அங்கிருந்து தான் ஆபாசப் படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

என் பதின்ம வயதின் பிற்பகுதியில், நான் என் அறையில் தனியாக இருந்ததாலேயே நான் ஆபாசப்படங்களைப் பார்ப்பதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. நான் இதற்கு அடிமையாகிவிட்டேனோ என்று அஞ்சத் தொடங்கினேன். நான் ஏதோ இழந்துவருவதைப் போல உணர்ந்தேன். வாழ்வில் பெண்களை சந்திக்க முடியாதவன், இன்டர்நெட் துணையுடன் சுய இன்பத்தை தனியே அனுபவிக்கும் நிலையைக் கொண்டவன் போல் உணர்ந்தேன்.

19 வயதில் நான் ஒற்றையாக கன்னி கழியாமல்தான் இருந்தேன். என்னுடைய உறவுகள் தீவிரமடையவில்லை, பாலுறவு பற்றி அதிகம் தெரியாதவனாகத்தான் இருந்தேன். வீட்டில் தங்கி சுய இன்பத்தில் ஈடுபடுவது பாதுகாப்பானது என்றும் மாட்டிக்கொள்ளாமல் இருக்க முடியும் என்றும் நினைத்தேன். பெண்களுடன் சாட் செய்ய நான் முயற்சித்த போதெல்லாம், இரவில் அது பற்றி நினைக்காமல், நிர்வாணமான பெண்களின் படங்களைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இதை அவர்கள் மட்டும் அறிந்தால் என்னை எவ்வளவு கேவலமானவனாக நினைப்பார்கள் என்று உறுதியாக சொல்ல முடிந்தது.

என் வாழ்வில் ஆபாசப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து கவலைப்பட்டு இரவெல்லாம் உறங்காமல் தவித்த நாள் உண்டு.

பண்டைய குண்டலினி முறை

என் வாழ்வில் ஆபாசப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து கவலைப்பட்டு இரவெல்லாம் உறங்காமல் தவித்த நாள்கள் உண்டு. இதுபற்றி நண்பர்களிடம் பேசியதில்லை- அந்தரங்கம் பற்றி எளிதாக பகிர்ந்து கொள்ளக் கூடிய நட்பு வட்டம் அல்ல எனது நண்பர்கள் வட்டம்.

என்னுடைய 20வது பிறந்த நாளைக்குப் பின், நான் அனைத்தையும் விட்டுவிட முடிவு செய்தேன். என் தாயார், ஆன்மிகத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் புத்தக அலமாரியை புரட்டியபோதே இது தெரிந்தது. அப்போதுதான் தியானம் பற்றி அறிந்து கொண்டேன். காமத்தை விலக்குதல் மூலம் என்னுடைய சக்தியை மேம்படுத்தி,தன்னம்பிக்கையை மீட்க முடியும் என்று நான் கண்டுபிடித்தேன். பண்டைய குண்டலினி முறைபோன்றது தான் இந்த யோசனை. இதுபற்றி என் தாயிடம் கேட்பதற்கு மிகவும் தயங்கினேன்., ஆனால் இதுபற்றி மேலும் கண்டறிய எண்ணினேன். இப்படித்தான் இது தொடங்கியது.

காமத்தை விலக்குதல் மூலம் என்னுடைய சக்தியை மேம்படுத்தி,தன்னம்பிக்கையை மீட்க முடியும் என்று நான் கண்டுபிடித்தேன். பண்டைய குண்டலினி முறைபோன்றது தான் இந்த யோசனை.

முதலில், என் வாழ்நாள் முழுவதும் சுயஇன்பப் பழக்கத்தை கைவிட்டுவிடுவது என்றுதான் எண்ணினேன். ஆனால் ஒருமாதம் வரைதான் என்னால் தாக்குபிடிக்க முடிந்தது என்பது எனக்கு ஏமாற்றத்தைத் தந்தது. எனவே நான் நடக்கக்கூடிய இலக்குகளை நிர்ணயிக்க விரும்பினேன்.

சுய இன்பப் பழக்கத்திலிருந்து விடுபடுவதால் கிடைக்கும் `சுகம்' கோடிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

நோஃபேப் இயக்கம் 90 நாள் நோன்பு பற்றி பரிந்துரைக்கிறது. இன்டர்நெட் ஆபாசப்படங்களின் தாக்கம் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து டெட் சொற்பொழிவு ஒன்றிலிருந்து கேட்டறிந்தேன். ஆபாசப்படங்களை பார்ப்பது என்பது மிகவும் கடினமான போதைப் பொருளை எடுத்துக் கொள்வதற்கு சமமானது என்று இந்த சொற்பொழிவு கூறியது. அளவுக்கு அதிகமாக ஆபாசப்படங்களை பார்ப்பதால் இளைஞர்களுக்கு விறைப்புத் திறன் குறைந்து வருகிறது என்றும் சொன்னது. ஏராளமானோர் நோஃபேப் ஐ கடைபிடிப்பதற்கு காரணம், அவர்களுக்கு தங்கள் விறைப்புத் திறன் குறித்த பயம் தான். எனக்கு அந்த பயம் இல்லை என்பது வேறு விஷயம்.

மக்களின் முழுமையான ஆன்லைன் துணைக் கலாசாரம் குறித்து கண்டறிவது பெரும் ஆறுதல் அளிப்பதாக இருந்தது. நான் எப்போதுமே நான் செய்வது சரியானதுதான் என்று எண்ணியதுண்டு, ஏராளமானோர், ஆபாசப்படங்களைப் பார்த்து ஆரோக்கியமான உறவுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்றே நான் கருதினேன். ஆனால் சுய இன்பத்தின் கேடுகளால் நான் நினைத்ததை விட கூடுதல் ஆண்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்களோ என்று எண்ண வைத்தது.

நோஃபேப் இயக்கம்

நோஃபேப் இயக்கம் 2011 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ரெடிட் என்ற சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் அலெக்சாண்டர் ரோட்ஸ் என்பவர், ஒரு விவாத இழையைத் தொடங்கினார். சுய இன்பம் செய்யாமல் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்து அவர் அதில் விளக்கினார். இந்த இழை வைரல் ஆனது. 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களானார்கள். "ஃபேப்ஸ்டிரானட்ஸ்" என்று இந்த இழையின் உறுப்பினர்கள் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். ஆபாசம் இல்லா வாழ்க்கை குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள அலெக்சாண்டர் இணையதளம் ஒன்றையும் தொடங்கினார்.

ஆபாசப்படம் பார்ப்பதால் தங்களுக்கு ஏற்பட்ட விறைப்புத் தன்மை இழப்பு குறைபாடு இந்த நோஃபேப் மூலம் சரியாகிவிட்டதாக ஏராளமானோர் நம்பத் தொடங்கினார்கள். என்னைப் பொறுத்தவரையில் நோஃபேப்பிங், எனக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது, தெளிவாக இருக்க உதவுகிறது, ஊக்கமளிக்கிறது என்று உணர்கிறேன். என் காமவெறி கட்டுக்குள் இருப்பது எனக்கு தெரிவதால் நான் ஆசுவாசமடைந்துள்ளேன், பெண்களுடன் நான் நன்றாக பேசுகிறேன்.

சுய இன்பத்தில் ஈடுபடக்கூடாது என்றும் ஆபாசப்படங்களைப் பார்க்கக் கூடாது என்றும் எனக்கு நானே தடை விதித்துக் கொண்டுள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக நான் இதை சாதித்துள்ளேன். முதல் வாரம் எப்போதும் போல் மிகவும் கடினமாக இருந்தது. பார்க்கும் அனைத்தும் காமத்தை நினைவு படுத்தின. அழகான பெண்ணை டிவியில் பார்த்தாலோ, யூடியூபில் பார்த்தாலோ எனக்கு விறைக்கும். சில நேரங்களில் என்னை ஒரு பெண் புறக்கணித்தபோது, எனக்கு சுய இன்பம் செய்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள நினைத்ததுண்டு.

சுய இன்பப் பழக்கத்திலிருந்து விடுபடுவதால் கிடைக்கும் `சுகம்' கோடிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

வேலையின் மீது கவனம்

ஒவ்வொரு முறை நான் தவறும்போதும், அதன் பின் சில நாட்களில் மிகவும் மோசமாக உணர்வேன். தோற்றுப் போனதற்காக, பலவீனமாக இருந்ததற்காக, கட்டுப்பாடு இல்லாமல் போனதற்காக என்னை நானே அடித்துக் கொண்டதுண்டு. என் மனப்போக்கு நிலைப்படுத்த சில நாட்கள் பிடிக்கும் அதன் பின் மீண்டும் நான் என் உபவாசத்தை தொடருவதுண்டு.

சமீபத்தில் நோஃபேப் நோன்பு இருந்த ஒரு வருடம் என் பணிச்சுமை காரணமாக முடிவுக்கு வந்தது. பெரிய பணி ஒன்றை நிறைவு செய்து, தளர்ந்து போய், என்னை நானே இளைப்பாறிக்கொள்ள விரும்பியதுண்டு. யாருடனும் உறவில் இல்லை. என் குடியிருப்பு தோழர்கள் அறையில் இல்லையென்றால் செய்வதறியாமல் சோபாவில் முடங்கிப் போவதுண்டு.

இவ்வளவு நாள் உபவாசம் இருப்பதால் என் வேலையின் மீது கவனம் செலுத்த முடிந்தது. இப்போதெல்லாம், நான் என் அறையில் நீண்ட நேரம் தனிமையில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை பார்க்க முடிகிறது, சுய இன்பம் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதே இல்லை. நோஃபேப் இல்லாமல் என்னால் இதைச் செய்திருக்க முடியாது.

நான் மீண்டும் என் விரதத்தை தொடங்க உள்ளேன். என் சாதனையை மீண்டும் நானே உடைக்க எண்ணுகிறேன். இந்த முறை 18 மாதம் சுய இன்பத்தில் ஈடுபடாமல் ஆபாசப்படம் பார்க்காமல் இருக்கப் போகிறேன். என் நீண்டகால இலக்கு, சுய இன்பம் அனுபவிப்பதை நிறுத்துவதற்குத்தான்.

(லூக் சில்ட்டனிடம் தெரிவித்த கருத்துகள்).

https://www.bbc.com/tamil/science-43962188

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுய இன்பம் சார்ந்த குற்றவுணர்வும், வெட்கவுணர்வும்,  அதனால் உடல் பாதிக்கப்படும் என்ற அச்சவுணர்வுமே இன்னல் பயப்பவை.. எப்போதும் அதிலேயே நாட்டம் வைத்தல் வளரும் பருவத்தில் கவனச் சிதறலை ஏற்படுத்தி மற்ற துறைகளில் வளர்ச்சிக்கு இடையூறு ஆகலாம். எனவே வேறு விடயங்களில் மனதைச் செலுத்துதல் நல்லதே. ஆனால் அவ்வப்போது அதன்பால் ஈர்ப்பு கொள்வது இயற்கையான ஒன்றே. அளவுக்கு மிஞ்சினால்(தான்) அமிர்தமும் நஞ்சு. எனவே இதற்காக உளவியலும் உடற்கூறியலும் அறியாத அரைகுறை மருத்துவர் எவரையும் அணுக வேண்டியதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனனின் இப்பதிவு இளையோருக்கு மிகவும் தேவையான விடயம் என்பதைக் கூற மறந்து விட்டேன். அதே சமயம் காமத்தை விலக்கி சக்தியை மேம்படுத்துதல் என்பது நவீன (!) மருத்துவமும் உளவியலும் ஏற்றுக் கொள்ளாதது என்பதைக் கூற விழைகிறேன். காமத்தை சிற்றின்பம் எனக் கொண்டோர் அதனை ஏற்கலாம். சிற்றின்பம் என பக்தி இலக்கியங்கள் சுட்டுவது கூட வைதீக மரபுகளை உள்வாங்கியதன் விளைவே.

"மலரினும் மெல்லிது காமம் சிலர்தன்

செவ்வி தலைப்படு வார்" 

எனும் வள்ளுவத்தின் வழி பேரின்பம் என்பதே தமிழர் மாண்பு. சங்க கால மரபும் அதுவே.  ( இந்த அளவு போற்றியது காமத்தை. சுய இன்பத்தை அல்ல, தோழர் ! )

 

Link to comment
Share on other sites

https://www.nofap.com

இந்த இணையத்தளம் தான் அதில் குறிப்பிடப்படும் தளம்.

அதனோடிணைந்த கருத்துகளமும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்து வளர்ந்து வாழப்போறதோ கொஞ்சக்காலம் தான்......அதற்குள் உடல் ரீதியாய் வாற சுகங்கள் அனைத்தையும் அனுபவிச்சிடணும்....அதுக்கு அப்புறம்தான் ஆன்மீகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2018 at 12:29 PM, சுப.சோமசுந்தரம் said:

சுய இன்பம் சார்ந்த குற்றவுணர்வும், வெட்கவுணர்வும்,  அதனால் உடல் பாதிக்கப்படும் என்ற அச்சவுணர்வுமே இன்னல் பயப்பவை.. எப்போதும் அதிலேயே நாட்டம் வைத்தல் வளரும் பருவத்தில் கவனச் சிதறலை ஏற்படுத்தி மற்ற துறைகளில் வளர்ச்சிக்கு இடையூறு ஆகலாம். எனவே வேறு விடயங்களில் மனதைச் செலுத்துதல் நல்லதே. ஆனால் அவ்வப்போது அதன்பால் ஈர்ப்பு கொள்வது இயற்கையான ஒன்றே. அளவுக்கு மிஞ்சினால்(தான்) அமிர்தமும் நஞ்சு. எனவே இதற்காக உளவியலும் உடற்கூறியலும் அறியாத அரைகுறை மருத்துவர் எவரையும் அணுக வேண்டியதில்லை.

à®à¯à®²à®®à¯ à®à®¿à®µà®°à®¾à®à¯ à®à®¿à®µà®à¯à®®à®¾à®°à¯ வà¯à®¤à¯à®¤à®¿à®¯à®°à¯ 

சுய இன்பத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு,
கடந்த 11 தலைமுறையாக...  "சிட்டுக் குருவி லேகியம்"  விற்கும்....
டாக்டர் காளிமுத்து, சேலம் டாக்டர்  சிவராஜ் எல்லாரும்  தமிழ்நாடு முழுக்க,  சூறாவளி  பயணம் செய்து,
தங்கள் மருத்துவ  கண்டு பிடிப்புகளை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதை.... தவறென்று சொல்லப் படாது.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2018 at 7:59 PM, தமிழ் சிறி said:

à®à¯à®²à®®à¯ à®à®¿à®µà®°à®¾à®à¯ à®à®¿à®µà®à¯à®®à®¾à®°à¯ வà¯à®¤à¯à®¤à®¿à®¯à®°à¯ 

சுய இன்பத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு,
கடந்த 11 தலைமுறையாக...  "சிட்டுக் குருவி லேகியம்"  விற்கும்....
டாக்டர் காளிமுத்து, சேலம் டாக்டர்  சிவராஜ் எல்லாரும்  தமிழ்நாடு முழுக்க,  சூறாவளி  பயணம் செய்து,
தங்கள் மருத்துவ  கண்டு பிடிப்புகளை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதை.... தவறென்று சொல்லப் படாது.  ?

சுய இன்பத்தால் பாதிப்பு எப்படி வரும்?
ஓரினச்சேர்க்கையும் கிட்டத்தட்ட சுய இன்பத்திற்கு சமனாகத்தானே இருக்கின்றது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுய இன்பம் தவறென்றால், உடலுறவும் தவறுதானே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவிதமான இன்பங்களும் கூடாததே.

கையைவிட்டுடுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

சுய இன்பத்தால் பாதிப்பு எப்படி வரும்?
ஓரினச்சேர்க்கையும் கிட்டத்தட்ட சுய இன்பத்திற்கு சமனாகத்தானே இருக்கின்றது...

அது எப்புடி....  சுய இன்பத்துக்கு, ஒரு  கை  போதும்.
ஓரினச்  சேர்க்கைக்கு, நாலு கை  வேணும். அவ்.... 

(இந்தக் கருத்தை, நிர்வாகத்தினர்  ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று தெரியும். ஆனாலும், பதில் சொல்ல வேண்டியது எனது கடமை.) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2018 at 3:38 AM, குமாரசாமி said:

பிறந்து வளர்ந்து வாழப்போறதோ கொஞ்சக்காலம் தான்......அதற்குள் உடல் ரீதியாய் வாற சுகங்கள் அனைத்தையும் அனுபவிச்சிடணும்....அதுக்கு அப்புறம்தான் ஆன்மீகம்.

பிறந்தோ வளர்ந்தோ கொஞ்ச‌காலமே
அனுபவித்துவிடு உடல் தரும் சுகங்களை

இப்படி சுருக்கமாக மற்றவர்களுக்கு புரியாத படி எழுதினால் அது தான் 
கு.சா குறள் அடுத்த சந்ததி படிக்கும்tw_tounge:

Link to comment
Share on other sites

  • 5 months later...
On 5/11/2018 at 10:46 PM, தமிழ் சிறி said:

அது எப்புடி....  சுய இன்பத்துக்கு, ஒரு  கை  போதும்.
ஓரினச்  சேர்க்கைக்கு, நாலு கை  வேணும். அவ்.... 

(இந்தக் கருத்தை, நிர்வாகத்தினர்  ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று தெரியும். ஆனாலும், பதில் சொல்ல வேண்டியது எனது கடமை.) 

ம்ம்ம். ஒரு எக்ஸ்பேர்ட்டின்  கடமை தான்!

Link to comment
Share on other sites

  • 2 months later...
On 5/11/2018 at 7:02 PM, ஏராளன் said:

சுய இன்பம் தவறென்றால், உடலுறவும் தவறுதானே?!

திருமணமாகாதவருக்கு சுய இன்பம் தவறில்லை... 

உண்மையான காதலை உணர்ந்தால் சுய இன்ப எண்ணம் தோன்றாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மியாவ் said:

திருமணமாகாதவருக்கு சுய இன்பம் தவறில்லை... 

உண்மையான காதலை உணர்ந்தால் சுய இன்ப எண்ணம் தோன்றாது...

எல்லா அழிவுக்கும்  முக்கிய காரணம் 
நாம் சைவ மதத்தை மறந்து (எமது முன்னையோரை).
இந்து மதம் என்ற சாக்கடையினுள் வீழ்ந்ததுதான்.
இந்துமதம் முழுதும் புராணத்தால் ஆனது 

சைவ மதம் சிவம் சக்தி எனும் இரு புள்ளிகளை உணர்வது.

சுய இன்பம் என்பது உண்மையிலேயே கேடானது 
இதை எமது மூதையோர் ஆழமாக சொல்லி வைத்திருக்கிறார்கள் 
ஆண்மையை கெடுக்கும். ஆண்சக்தி எனும் டெஸ்டரோனை அழித்து 
ஒரு சோம்பேறி மனநிலையை உருவாக்கும்.

காமசூத்த்ரா வர முன்னரே காமத்தை பல கோணமாக பிரித்து 
மேய்ந்து எழுதியவர்கள் தமிழ் முனிவர்கள். 
ஒருவர் 18 மணித்தியாலம் வரை உடலுறவு வைத்து காட்டியும் இருக்கிறார் 
18 மணித்தியாலம் உடலுறவு வைப்பது என்பது ... அந்த 18 மணிநேரமும் பெண்ணையும் 
ஒரு இன்ப நிலையில் வைத்திருக்க வேண்டும் அப்படி பல சூத்திரம் அறிந்தவர்கள்.
முற்றும் வெறும் சுவாச பயிற்சியால் சாதித்தவர்கள். 

சைவம் என்பது ஒரு மதம் அல்ல அது ஒரு மார்க்கம் 
எமது நாயனார்கள் காலத்து முன்புதான் உண்மையான சைவத்தை காணமுடியும் 
பின்பு அவர்களும் வைஷ்ணவர்கள்போல் சிலை வைத்து பாடி புராணம் புனைய 
தொடங்கிவிட்டார்கள்.

இறைக்க இறைக்க ஊறும் ....
திருமணமானவர்கள் செய்வதில்லையா?
போன்ற விசர் கதை பேசி இளைஞர்களை கெடுத்துவிடார்கள் 

விந்தை கட்டி வைக்க வேண்டும் உடல் வெப்பநிலையை ஒரு 
சீராக பேணவேண்டும் குளிப்பு தயிர் வெந்தயம் போன்ற உணவுகளை உண்டு 
உடல் வெப்பம் அடையாமல் பார்க்க வேண்டும்.
எமது விதை பை எமது உடலில் இருந்து அதானல்தான் பிறிம்பாக 
தூங்கும்படி அமைந்து இருக்கிறது. விந்து ஒரு வித கட்டி நிலையில்தான் இருக்கும் 
உணர்ச்சி பொங்கி வெப்பம் போகும்போதுதான் முழு திரவ வடிவம் ஆகி வெளியேறும்.
வெளியேறா விட்டாலும் திரவ வடிவம் ஆகிய விந்து மீண்டும் திண்ம நிலை பெறாது.

ஆண்கள் ஒவ்வரு நாளும் ஓடி விளையாட வேண்டும் இல்லையேல் உடல்பயிற்சி செய்ய வேண்டும். 

ஒரு முழுமையான உடல் உறவை திருப்திகரமாக ஒரு பெண்ணுடன் 
அடைவது என்றால் புகை மது எல்லாம் கைவிடவே வேண்டும்.

எமது முன்னையோர் சுவாசத்தை பல முறைகளாக பிரித்து இருக்கிறார்கள் 
இதில் நாக சுவாசம் என்பது உடல் உறவை மேம்படுத்த இருக்கும் ஒரு சுவாச முறை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Maruthankerny said:

இறைக்க இறைக்க ஊறும் ....
திருமணமானவர்கள் செய்வதில்லையா?
போன்ற விசர் கதை பேசி இளைஞர்களை கெடுத்துவிடார்கள் 

Bildergebnis für thin man gif

"விந்து... விட்டார்,  நொந்து... கெட்டார்."  என்ற பழமொழி  உள்ளதை  நாம் மறந்து விடக்  கூடாது.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2018 at 11:08 PM, குமாரசாமி said:

பிறந்து வளர்ந்து வாழப்போறதோ கொஞ்சக்காலம் தான்......அதற்குள் உடல் ரீதியாய் வாற சுகங்கள் அனைத்தையும் அனுபவிச்சிடணும்....அதுக்கு அப்புறம்தான் ஆன்மீகம்.

இப்ப என்னமாதிரி ஆன்மீகம் போல நித்தியானந்தா சீடன் ஆகலாமே சாமி:27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப என்னமாதிரி ஆன்மீகம் போல நித்தியானந்தா சீடன் ஆகலாமே சாமி:27_sunglasses:

தனிக்காட்டு ராஜா... இன்னும் ஏன், இங்கு  வரவில்லை என்று தேடினேன். ம்ம்ம்.... வந்து விட்டார்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

தனிக்காட்டு ராஜா... இன்னும் ஏன், இங்கு  வரவில்லை என்று தேடினேன். ம்ம்ம்.... வந்து விட்டார்.  :grin:

களவும் கற்று மற ஒன்றை தெரிந்து கொண்ட பின் மறந்திட வேணுமாம் ஆனால் இதை மறக்க முடியாது மறைக்கலாம்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2018 at 11:06 PM, குமாரசாமி said:

சுய இன்பத்தால் பாதிப்பு எப்படி வரும்?
ஓரினச்சேர்க்கையும் கிட்டத்தட்ட சுய இன்பத்திற்கு சமனாகத்தானே இருக்கின்றது...

எப்படி சாமி இரண்டும் ஒன்றாகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நந்தன் said:

எப்படி சாமி இரண்டும் ஒன்றாகும்

நீங்கள் சம தரையில் சைக்கிள் ஓடுகின்றீர்கள். பதில்லை விளங்காது. ஓடிப்பாருங்கோ தெரியும்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2019 at 6:10 AM, குமாரசாமி said:

நீங்கள் சம தரையில் சைக்கிள் ஓடுகின்றீர்கள். பதில்லை விளங்காது. ஓடிப்பாருங்கோ தெரியும்...:grin:

இப்ப இலங்கையில் சைக்கிள் கட்சிதான்  புதிய கட்சி  எப்படித்தான் அரசியல் செய்ய போறாங்களோ தெரியல:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.