Jump to content

தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாடு


Recommended Posts

தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாடு   

 

 
 

(இரோஷா வேலு) 

அரசுக்கும் பிரஜைகளுக்குமிடையில் சிறந்த உறவை பேணவதற்கும் அரசாங்க மற்றும் அரச நிறுவனங்களின் பொறுப்புக் கூறல் தன்மையை உறுதிப்படுத்துவதற்குமான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாடு   இன்று கொழும்பில் அமைந்துள்ள கொள்கை ஆய்வு நிலையத்தில் இடம்பெற்றது. 

RTI1.jpg

 இலங்கையில் தகவலறியும் உரிமைச் சட்ட மூலம் அமுல்படுத்தப்பட்டு ஒரு வருட கால நிறைவினை முன்னிட்டு இம் மாநாட்டினை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் நோர்வே தூதுவராலயம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன், நோர்வே, இந்தியா, மெக்சிகோ, பங்களாதேஷ், மியன்மார் பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட ஏழு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். 

 

இரண்டு நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம் மாநாட்டில் இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளிலும் தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான நடைமுறைத் தன்மை குறித்தும், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நாட்டு பிரஜைகளுக்கு காணப்படும் உரிமைகளின்  ஸ்திரத்தன்மை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. 

தகவல் தேடுவோரின் பாதுகாப்பு ஆபத்து, தனிப்பட்ட தரவுகளை பாதுகாத்தல், ஊடகம் சிவில் சமூக அமைப்புகளின் வகிபாகம், எதிர்காலத்தில் தகவலறியும் உரிமைச் சட்டம் மற்றும் தகவல் வெளிப்படுத்தல் நுணுக்கங்கள் எனும் தலைப்புக்களின் விரிவுரைகள் என்பன வழங்கப்பட்டிருந்தமையயும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/33235

தகவல் அறியும் உரிமைச்சட்டம்  பொது மக்களை சென்றடைய வேண்டும் - இலங்கை பத்திரிகை ஸ்தாபனத் தலைவர் 

 

(நா.தனூஜா )

தகவல் அறியும் உரிமைச்சட்டமானது தற்போது எமது நாட்டின் நடைமுறையில் உள்ளதோடு , இது தொடர்பான விளக்கம் பொது மக்களை முறையாகச் சென்றடைய வேண்டும். தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் செயற்பாட்டை ஊடகவியலாளர்களால் இலகுவாக மேற்கொள்ள முடியும் என இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் தெரிவித்தார். 

kunna.jpg

இலங்கையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைவதனை முன்னிட்டு ' தகவல் அறியும் உரிமை தொடர்பில் மக்களை விழிப்பூட்டல்'  எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மாநாடு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் நோர்வே தூதுவராலயம் என்பவற்றின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய் கிழமை கொழும்பில் ஆரம்பமானது. அந்நிகழ்வில் தொடக்கவுரை ஆற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

 

 

இலங்கையில் முதன் முறையாக 1994 ஆம் ஆண்டிலே தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பிலான பரவலான கலந்துரையாடல் உருவான போதும் , அவை பூரண நிறைவினை எட்டவில்லை. அதனைத் தொடர்ந்து 1996 இல் ஊடகத்துறை அமைச்சரால் ஆர்.டி.குணசேகர ஆணைக்குழு நிறுவப்பட்டு இவ்விடயம் தொடர்பான பரிந்துரைகள் பெறப்பட்டன. அரசியல் அமைப்பிலே தகவல் அறியும் உரிமைச்சட்டம் சேர்க்கப்பட வேண்டும் எனவும், அதன் மூலம் மக்களின் தகவல் அறியும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டது. 

 

எனினும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக அப்பரிந்துரைகள் செயலிழந்தன. பின் 1998 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் தகவல் அறியும் உரிமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. தற்போது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததனைத் தொடர்ந்து இலஙகையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. 

தற்போது நமது நாட்டில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் நடைமுறையில் உள்ளதோடு , உரிய அலுவலகங்களுக்கான ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  8000 வரையான அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் அறிவூட்டப்பட்டுள்ளனர். 

தகவல் அறியும் உரிமைச்சட்டம் பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது. எனினும் எமது நாடு உட்பட பல நாடுகளில் இச்சட்டதினை அமுல்படுத்துவது தொடர்பில் குறைபாடுகள் உள்ளன. உரிய அமைச்சுக்களால் அலுவலகங்களுக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்படாமை ஆணையாளர்களை அணுக முடியாமை, மொழி தொடர்பான பிரச்சினை போன்றன தகவல் பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. எனவே இவ்வாறானதொரு சர்வதேச ரீதியான மாநாட்டின் தகவல் பெறும் உரிமைச்சட்டம் தொடர்பில் நாடுகளுக்கிடையில்  கருத்துப் பரிமாற்றத்தினை மேற்கொள்ள முடிவதுடன் , குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். 

அத்தோடு தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான போதிய தெளிவு பொது மக்களை சென்றடைய வேண்டும். என்பதுடன் , அதனை ஊடகவியலாளர்கள் முறையாக்க கையாள வேண்டும் என்றார். 

 

http://www.virakesari.lk/article/33241

 

 

தகவல் அறியும் சட்டத்தின் மூலத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தை பேண முடியும் - நோர்வே தூதுவர்

 

 
 

(இரோஷா வேலு)

தகவல் அறியும் சட்டம் மூலமானது நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதோடு அரசுக்கும் பிரஜைகளுக்குமிடையில் ஓர் உறவை பேண உதவும் பலமாகவும் காணப்படுகின்றது என நோர்வே நாட்டின் தூதுவர் எச்.ஈ.தொர்ப்ஜேர்ன் கெளஸ்தாஸ்தர் தெரிவித்துள்ளார்.

Norwegian-Ambassador-Thorbjorn-Gaustadst

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டு ஒரு வருட கால பூர்த்தியை முன்னிட்டு  தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான சர்வதேச மாநாடு கொழும்பில் அமைந்துள்ள கொள்கை ஆய்வு நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த வியாழக்கிழமை பத்திரிகை சுதந்திர தினத்தை கொண்டாடிய நாம் இன்றும் நாளையும் தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான மாநாட்டை நடத்துவது என்பது சிறந்தவொரு நிகழ்வாகும். 

இம்மாநாட்டின் மூலம் பல நாடுகளில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் நிலைப்பாடு குறித்து நாம் ஒப்பீடு செய்து அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இலங்கையில் 2016 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு தகவல் அறியும் சட்டமூலம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. 

 

 

இதன் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடிவதுடன் அரசுக்கும் பிரஜைகளுக்குமிடையில் ஓர் உறவை பேண உதவும் பலமாகவும் இச் சட்டமூலம் காணப்படுகிறது. 

மேலும் இச்சட்டத்தின் மூலம் அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்களின் பொறுப்பு கூறல் உறுதிப்படுத்தப்படுவதுடன் நாட்டின் பல்வேறு மட்டங்களில் இடம்பெறும் ஊழல்களை வெளிப்படுத்தவும்  இச் சட்டம் உதவ கூடும். 

இதுவரையில் 118 நாடுகள் இச் சட்டத்தை உள்வாங்கி தங்கள் பிரஜைகளும் இவ்வுரிமையை அனுபவிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளன . சிவில் சமூகம், ஊடகங்கள் மற்றும் பொது மக்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் தகவலறியும் உரிமைச் சட்ட மூலத்தின் முழுமையான பலனை அடைந்து கொள்ள முடியும் என்றார்.

 

http://www.virakesari.lk/article/33239

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.