Jump to content

பாரிய மாற்றம் காணும் வங்கியல் துறை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிராமம் என்னும் போது  வங்கி, போஸ்ட் ஆபிஸ், பாடசலை, நிர்வாக அலுவலகம், ஒரு பலசரக்கு கடை, போலீஸ் நிலையம் இவ்வளவும் உடனடியாக நினைவுக்கு வரும்.

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் இந்த வகையான பல தூண்கள் சரியத் தொடங்கி விட்டன. 

இவற்றில் முதலில் சரிந்தது தபால் நிலையங்கள். ஊருக்கு ஒரு பெரிய தபாலகம், 5, 10 கவுண்டர்கள் என்ற நிலை போய்.... பெரிய நிறுவனங்களில் ஒரு மூலையில் ஒரு ஆளுடன் தபால் நிலையம் நடக்கும் நிலைக்கு போய் விட்டது. ஈமெயில் காரணமாக, கடிதத் துறை பாதிப்புக்கு உள்ளாக, எதிர்காலத்தில் பார்சல் டெலிவரி தான் கை கொடுக்கும் என்று முடிவு செய்து விட்டார்கள்.

இந்த துறையில் இருந்து முதலில் வெள்ளையர்களும், பின்னர் இந்தியர்களும் ஓட, நம்மவர்கள் விசயம் புரியாமல், போஸ்ட் ஆபீஸ் ஒன்று வருகுது... எடுத்து நடத்துவம் என்று யோசிக்கிறம் என்று ஓடுவது வேற கதை. விவேகமாக நடக்க வேண்டும்.

சரி இனி வங்கி துறையினை பார்ப்போமா.

நான் வங்கிக்கு சென்று ஆண்டுக் கணக்கில் இல்லாவிடில் பல மாதங்கள் ஆகின்றன.

காரணம் போக வேண்டிய தேவையே இல்லை.

உலகிலேயே மிகச் சிறந்த வங்கித்துறை பிரித்தானியாவினுடையது. அவர்கள் தொழில் நுட்பத்தினை சரியாக பயன் படுத்துவதில் முன்னணியில் நிற்க்கின்றார்கள். முதன் முதலில் ATM - cashpoint மெசினை அறிமுகம் செய்தவர்கள் பிரித்தானியர்கள்.

இதன் மூலம் காசுத்தாள் தேவையை கணிசமான அளவுக்கு குறைத்து விட்டார்கள்.

முன்பெல்லாம் எனது பணப்பையில் (பேர்ஸ்), வங்கி மட்டைகளுடன், 10, 20 பவுண்ட் பணமும், கொஞ்சம் சில்லரையும் இருக்கும். 

இப்போது கொஞ்ச நாளாக, அதை எடுத்து செல்லவேண்டிய தேவை இல்லாமல் தெரிவதால்... கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அதுவும் இல்லாமல் வேலைக்கு போகும் போது செல்கிறேன்.

அதன் தேவையினை... இப்போது கைபேசி பூர்த்தி செய்கிறது.

ரயில் நிலைய எக்ஸிட், என்ட்ரி பெரியர்கள் கைபேசிகள் மூலமான பணத்தினை எடுக்கின்றன. பஸ்களும் அவ்வாறே. பஸ்கள் பணம் எடுப்பதில்லை என அறிவித்து விட்டன.

வங்கியின் ஆஃபிஸினை இறக்கி வைத்தால் கதை முடிந்தது. பொருட்களுக்கு பணத்தினை செலுத்தலாம். எம்மிடம் பொருள் இருந்து இன்னொருவருக்கு வித்து பணத்தினை, காசுத்தாள் கை மாறாமல்,  பெற முடியும்.

Image result for paying with mobileImage result for paying with mobile

இதில முக்கியமான வசதி என்னெவென்றால்.... மட்டை, அதற்க்கான  PIN இல்லாமலே பணத்தினை பெரும் வசதி. இது குடும்பத்தினை பொறுத்தவரையில் மிக மிக பெரிய வசதி. மேலும் இது வியாபாரத்தினை பெருக்கக்கூடிய வகையிலும் பாவிக்கலாம்.

இது முதலில் NatWest வங்கியால் அறிமுகப் படுத்தப்பட்டாலும்... சில பல பாதுகாப்பு பிரச்சனைகள் இருந்த படியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, குறைபாடுகளை திருத்தி மீண்டும் அறிமுகப் படுத்தி உள்ளனர்.

Gone phishing: Fraudsters have been using part of NatWest's mobile app to withdraw cash from customer's accounts.

GET CASH என்னும் சேவையினை அறிமுகப்படுத்தி உள்ளது NatWest வங்கி. இதனை பார்த்து இவர்களது போட்டி வங்கிகள் பொறாமைப் படுகின்றன.

இவர்கள் இந்த தொழில் நுட்பத்தினை அடுத்த வங்கிகளுக்கு உலகளாவிய வகையில் வித்தே செலவழித்த பணத்தினை மீட்டு விடுவர்.
 
கைபேசியில், அவர்களது ஆப்ஸில் வரும் get cash பட்டனை அழுத்தினால்... எவ்வளவு வேண்டும் என்று கேட்க்கிறது.... உங்கள் வங்கி இருப்புக்கு அமைய பணம், இவ்வளவு வேண்டும் என குறியிட்டால், உடனே உங்களுக்கு ஒரு விசேட code தெரியும். அந்த கோட்டினை ATM ல் பாவித்தால்... நீங்கள் மட்டை இன்றி பணம் பெற முடியும்.

இதில மிகப் பெரிய வசதி என்னவெனில்.... எங்காவது பர்சினை துளைத்து, பணம் இன்றி தவித்துக் கொண்டிருக்கும் குடும்ப உறவுக்கும், பொருள் வழங்கும் வியாபாரிக்கும் கூட, கோடினை SMS மூலம் அனுப்பி, இந்த முறையில் பணம் கிடைக்க செய்ய முடியும் என்பதே வரப்பிரசாதம்.

கோடினை பாவிப்பவர், நீங்கள் குறித்த தொகைக்கு மேல் எடுக்க முடியாது என்பது சிறப்பு அம்சம்.

இதன் மறு புறத்தே வங்கிகள் மிக வேகமாக கதவுகளை இழுத்து மூடுகினறன. 2020 ஆண்டுடன் பல நூறாண்டுகளாக இருந்த காசோலைக்கு மூடு விழா நடத்த திட்டம் போட்டாலும், பல வயதான குடிமக்களின் கடும் எதிர்ப்பினால் அந்த திட்டத்தினை கிட்ப்பில் போட்டு விட்டனர்.

வேலை செய்த பலர் வீட்டுக்கு அனுப்பி, பெரிய இடத்தில் நடந்த வங்கிகள் சிறியதாக ஒருவர் அல்லது இருவர் உடன் சில மெஷின்கள் உடன் குறுகி விட்டன.

முன்பு.... வங்கி முகாமையாளர் என்றால் சமூகத்தில் பெரும் மதிப்பு... ஒரு லோன் வேண்டும் என்றால் அவர் பண்ணும் அலம்பரை.... ம்.. அது வேற கதை.

இப்போது லோன் விண்ணப்பம் முடிவு, விண்ணப்பித்த அடுத்த 60 வினாடிகளில் தொழில் நுட்பம், மனிதரே இன்றி தீர்மானிக்கிறது. முடிவினையும் தெரிவிக்கின்றது.

மொபைல் மூலமாக பணம் தருகிறேன் என்பார் வாங்குபவர். வியாபாரம் செய்பவருக்கு வேறு வழி இருக்காது. ஆகவே இரு பகுதியும் யார், யார் என வங்கிகள், மூலம் அரசுக்கு தெரிய வரும்.

காசுத்தாள் தேவை இனி போதைப்பொருள் விறகும் கிரிமினல்களுக்கே தேவை போலுள்ளது. அதுவும் பல நாட்களுக்கு நிலைத்து நில்லாது.

கறுப்பை, வெள்ளை ஆக்கும் விசயத்தில்.... வங்கித்துறையினை அரசு மிக கடுமையாக கண்காணிக்கிறது.

உதாரணமாக, நான் வங்கியில் வேலை செய்து, எனது மேல் அதிகாரி, ஒரு குறித்த வாடிக்கையளார் குறித்து போலீஸ் விசாரணை ரகசியமாக நடக்கிறது...அவரது வாடிக்கை தொடர்பில் சட்டப்படி நடந்து கொள் என்று சொன்னால்.... அந்த வாடிக்கை யாளரை வெளியே சந்தித்து.... உன்னை பத்தி எதையோ விசாரிக்கிறார்கள் போல் உள்ளது, கவனமாக இரு என்று சொன்னால் அது தண்டனைக்குரிய  கிரிமினல் வேலை. அது போலவே வேலை செய்யும் சக ஊழியர் ஒரு வாடிக்கையாளருக்கு உதவுகிறார் என்பது குறித்து கண்காணிக்குமாறு சொல்லப்படடால், அதை அந்த சகல ஊழியருக்கு சொல்வதும் தண்டனைக்குரிய  கிரிமினல் வேலை.

வங்கிகள்... அரசு சொல்லாத நிலையிலும்... இந்த கடுமையான சட்டங்களில் இருந்து தமது வியாபாரத்தினையும், ஊழியர்களையும் பாதுகாக்க என, மத்திய கிழக்கு நாடுகளுடன் தொடர்பான  பல முஸ்லீம் தர்மத்தாபனங்களுக்கு தமது கணக்குகளை மூடுவதாக அறிவித்து விட்டன... 

பல்கெரியா என்ற நாடு VAT என்ற வியாபார வரி விடயத்தில் ஒரு சிறப்பான சிஸ்டத்தினை அறிமுகம் செய்தது. ஒரு வியாபாரம் பதிவு செய்தால், அரசு கொடுக்கும் till தான் பாவிக்க முடியும். பிரச்சனை என்னவெனில் அது அரச வரி திணைக்களத்துடன் இணைய மூலமாக தொடர்பினை பேணும். ஆகவே மாத முடிவில்.. அரசு நேராக வங்கியில் இருந்து தனக்கு வர வேண்டிய பணத்தினை எடுத்துக் கொள்ளும். இந்த சிறந்த திட்டம்... ஆப்பிரிக்காவின் கென்யா நாடு அறிமுகம் செய்துள்ளது.... இதனை பிரித்தானிய அரசும் பரிசீலிக்கிறது என செய்தி வருகிறது.

ஆகவே வெகு விரைவில்... பணம் மறைந்து விடும் என்கிற விடயத்துக்கு முன்னாள்... அரசுக்கு தெரியாமல் எந்த வித கொடுக்கல் வாங்கல்களும் நடக்காது போலவே தெரிகிறது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி நாதமுனி.

அதுசரி எங்கட உண்டியலுக்கு பிரச்சனை ஒன்றும் இல்லைத் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி நாதமுனி.

அதுசரி எங்கட உண்டியலுக்கு பிரச்சனை ஒன்றும் இல்லைத் தானே?

உண்டியல் காரர்கள்... எமது அடையாள விபரங்கள் வாங்க்கிக் கொண்டு தான் சேவை தர வேண்டும் என்ற சட்ட விதியின் மீறினால் லைசென்ஸ் பறி போகும். மேலும் உண்டியல் காரர்கள் டெபிட் கார்ட், கைபேசி பெமென்ட் எடுக்கிறார்களே.

உண்டியல் அனுமதிக்கப் பட்டிருப்பதன் அடிப்படை நோக்கம் வேறு. பணம் வங்கி மூலம் அனுப்பப்படும் போது, நாட்டினை விட்டு வெளியே போகின்றது...

உண்டியல் மூலம் நாட்டினுள்ளே தங்குகிறது. அங்கே அரசியல் வாதிகளின் ஊழல் பணம் கொடுக்கப் படுகின்றது.

இங்கே, ஒருவர் செலுத்தும் சட்ட ரீதியாக உழைத்த பணம்... இங்கே உள்ள, அந்த நாட்டின் ஊழல், அரசியல் வாதியின் கணக்கில் அல்லது அவரது முகவர் கணக்குக்கு உண்டியல் காரரினால் செலுத்தப் படுகின்றது. 

ஜெயலலிதா வழக்கில் ஒரு பகுதி, லண்டன் பார்கிலேஸ் வங்கி டெபாசிட்.

(பாடு பட்டு தேடி பணத்தை பிற நாட்டு வங்கிகளில் புதைத்து வைக்கும் கேடு கெட்ட மானிடரே கேளுங்கள் கூடு விட்டு ஆவிதான் போனபின் யாரோ அனுபவிப்பார், பாவிகாள் அந்தப்பணம்.)

இவ்வாறு அனாமத்தாக பெரும் பணம் பிரித்தானியவங்கிகளில் இருப்பதை அறிந்த முன்னாள் பிரதமர் டேவிட் காமோரான் ஒரு சட்டம் கொண்டு வந்தார். 15 வருடங்களுக்கு மேலாக உரிமை கோராமல் இருக்கும் வைப்புக்கள் அரசுரிமையாகி... அரசால் அமைக்கப் பட்ட ஒரு அமைப்புக்கு போகும். அது மக்கள் நல திட்டங்களுக்கு பயனாகும். இந்த வகையில் இந்திய, இலங்கை போன்ற நாடுகளின் ஊழல் அரசியல் வாதிகளுக்கு நன்றி. அம்மாவுக்கும் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

வெகு விரைவில்... பணம் மறைந்து விடும் என்கிற விடயத்துக்கு முன்னாள்... அரசுக்கு தெரியாமல் எந்த வித கொடுக்கல் வாங்கல்களும் நடக்காது போலவே தெரிகிறது.

அப்ப இனி கள்ளவேலை செய்து நாலுகாசு நிம்மதியாய் வைச்சிருக்கேலாது....:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அப்ப இனி கள்ளவேலை செய்து நாலுகாசு நிம்மதியாய் வைச்சிருக்கேலாது....:rolleyes:

பாக்கிகள் இருக்கும் வரை உதுகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

எக்கசக்கமாய் வைச்சிருக்கிறியள் போல கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

பாக்கிகள் இருக்கும் வரை உதுகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

எக்கசக்கமாய் வைச்சிருக்கிறியள் போல கிடக்கு.

 

7 hours ago, குமாரசாமி said:

அப்ப இனி கள்ளவேலை செய்து நாலுகாசு நிம்மதியாய் வைச்சிருக்கேலாது....:rolleyes:

ஏர்போர்ட்டில இமிகிரேஷனிலே எங்கண்ட ஆக்கள் இப்ப இருக்கினம். எவ்விடம் மயிலிட்டியே.... யாழ் தேவிலயா, பஸ்சிலேயே கொழும்பு வந்தனியல்... எண்ட மாதிரி கேள்வியல்... இலங்கையில் இருந்து வருகிறோம் என்று வரும் பாக்கிஸ்தான், இந்திய ஆட்களை தலை சுத்த வைக்கிறது.

சொல்ல வருவது என்னெண்டால்... வெள்ளையளுக்கு, களவு பிடிக்க, கள்வருக்குள்ள இருந்து ஆள் எடுக்க வேண்டும் என்ற ஐடியா விளக்கீட்டுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

பாக்கிகள் இருக்கும் வரை உதுகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

எக்கசக்கமாய் வைச்சிருக்கிறியள் போல கிடக்கு.

எக்க சக்க  காசு இருந்தும் இந்த தங்கச்சிக்கு கொஞ்ச்ம கூட கொடுக்காமல் எல்லாத்தையும் பதுக்கி வைத்து இருக்கிறார். தங்கச்சிக்கு கொஞ்ச்ம கொடுத்தால் குறைந்து போய் விடுமா என்ன?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

எக்க சக்க  காசு இருந்தும் இந்த தங்கச்சிக்கு கொஞ்ச்ம கூட கொடுக்காமல் எல்லாத்தையும் பதுக்கி வைத்து இருக்கிறார். தங்கச்சிக்கு கொஞ்ச்ம கொடுத்தால் குறைந்து போய் விடுமா என்ன?
 

உயில் எழுதி வைத்திருப்பாரோ?
மனுசன் சத்தம் போடாமல் செய்யக் கூடியளாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

உயில் எழுதி வைத்திருப்பாரோ?
மனுசன் சத்தம் போடாமல் செய்யக் கூடியளாள்.

நீங்கள் வேற அவர் எத்தனை தரம் லண்டன் வந்து போறார். ஒரு நாள் கூட தங்கச்சியை  வந்து பார்க்கோனும் என்று தோணேல்ல

 

Link to comment
Share on other sites

பாரிய மாற்றம் காணும் வங்கியல் துறை.

ஆமா இதெல்லாம் லண்டனுக்கு புதுசா☺️

சரி சரி இங்கிலாந்து எப்பவும் இப்படித்தான் -நல்லா பீத்திக்குவானுங்க 

உருப்பட்டமாதிரித்தான் 

நானே நோர்வேயில் எப்ப வங்கிக்கு போனான் என்றதே மறந்து போச்சு. எப்படியும் ஒரு 20 வருசமாவது இருக்கும். இறுதியாக நான் வீடு வாங்கும் போதும் 1999 வங்கிக்கு போனதில்லை.

வாழ்க வளர்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஜீவன் சிவா said:

பாரிய மாற்றம் காணும் வங்கியல் துறை.

ஆமா இதெல்லாம் லண்டனுக்கு புதுசா☺️

சரி சரி இங்கிலாந்து எப்பவும் இப்படித்தான் -நல்லா பீத்திக்குவானுங்க 

உருப்பட்டமாதிரித்தான் 

நானே நோர்வேயில் எப்ப வங்கிக்கு போனான் என்றதே மறந்து போச்சு. எப்படியும் ஒரு 20 வருசமாவது இருக்கும். இறுதியாக நான் வீடு வாங்கும் போதும் 1999 வங்கிக்கு போனதில்லை.

வாழ்க வளர்க

ஐயோ... ஐயோ...

இப்ப வந்த ஐபோன், ஆண்ட்ராய்ட் போனாலே வந்த தொழில் நுட்ப வளர்ச்சி பத்தி பேசுறோம்.

1999 ல் இதெல்லாம் இல்ல...

உங்களை மாதிரி பேங்க் அக்கௌன்ட் நிரம்பி வழிஞ்சு பக்கத்து அக்கவுண்டுக்கும் காசு போற மாதிரி இருந்தால் 1999 இல்ல 1990 லேயே பேங்க் பக்கம் போய் இருக்க மாட்டமே...☺️

சரி கண காலத்துக்கு பிறகு கண்டது மகிழ்ச்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி போற போக்கைப் பாத்தால் டிஜிட்டல் இந்தியாவை உங்கடை நாடு முந்திடும் போல.?

Link to comment
Share on other sites

18 hours ago, குமாரசாமி said:

அப்ப இனி கள்ளவேலை செய்து நாலுகாசு நிம்மதியாய் வைச்சிருக்கேலாது....:rolleyes:

தொழில்நுட்ப வளர களவும் வேறுபக்கம் வளரும் என்பதை இலகுவாக மறக்கிரம்.

Link to comment
Share on other sites

17 hours ago, ஈழப்பிரியன் said:

பாக்கிகள் இருக்கும் வரை உதுகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

எக்கசக்கமாய் வைச்சிருக்கிறியள் போல கிடக்கு.

ஓம் இப்ப அவர்கள் தடையம் இல்லா டிஜிட்டல் பணபரிவர்த்தனை பிட்கொயின் போன்றவற்றில் விளையாட தொடங்கிவிட்டனர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

எக்க சக்க  காசு இருந்தும் இந்த தங்கச்சிக்கு கொஞ்ச்ம கூட கொடுக்காமல் எல்லாத்தையும் பதுக்கி வைத்து இருக்கிறார். தங்கச்சிக்கு கொஞ்ச்ம கொடுத்தால் குறைந்து போய் விடுமா என்ன?
 

4 hours ago, ஈழப்பிரியன் said:

உயில் எழுதி வைத்திருப்பாரோ?
மனுசன் சத்தம் போடாமல் செய்யக் கூடியளாள்.

4 hours ago, ரதி said:

நீங்கள் வேற அவர் எத்தனை தரம் லண்டன் வந்து போறார். ஒரு நாள் கூட தங்கச்சியை  வந்து பார்க்கோனும் என்று தோணேல்ல

 

என்னடா அங்க சத்தம் ? 

à®à®©à¯à®©à®à®¾ à®à®à¯à® à®à®¤à¯à®¤à®®à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன் பழுதாப் போகாட்டிலும் நெற் வேர்க் அந்த நேரம் இல்லாட்டில் எப்படி அதை பயன்படுத்த முடியும்? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/13/2018 at 6:05 PM, ரதி said:

போன் பழுதாப் போகாட்டிலும் நெற் வேர்க் அந்த நேரம் இல்லாட்டில் எப்படி அதை பயன்படுத்த முடியும்? 

 

நெற் வேர்க் அந்த நேரம் இல்லாட்டி: யாவாரம் பார்கிறவரின்ற பிரச்சணை அது.

உந்த விண்ணானக் கேள்விக்கு முன்னம்.... அக்கவுண்டில காசு இல்லாட்டி என்ன செய்யுறது எண்டு சொல்லுங்கோ பார்ப்பம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

நெற் வேர்க் அந்த நேரம் இல்லாட்டி: யாவாரம் பார்கிறவரின்ற பிரச்சணை அது.

உந்த விண்ணானக் கேள்விக்கு முன்னம்.... அக்கவுண்டில காசு இல்லாட்டி என்ன செய்யுறது எண்டு சொல்லுங்கோ பார்ப்பம்..

டிஸ்போ இல்லாத பாங்க் காட்டை  என்ன நாக்கூத்தை வளிக்கவே ஊர் உலகம் முழுக்க கொண்டுதிரியிறான்...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வங்கியியல் தொழில் நுட்ப துறையில் கடும் போட்டி நிகழ்கின்றது என்று சொல்லி இருந்தேன்.

நேற்று முதல் HSBC வங்கி விளம்பரம் செய்கிறது. தமது apps டவுன்லோட் பண்ணி உங்களது HSBC மற்றும் ஏனைய UK வங்கிகளில் உள்ள கணக்குகளின் இருப்பினை ஒரே இடத்தில அறிந்து கொள்ள முடியுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இங்கிலாந்தில் இப்பதான் வந்ததா தெரியவில்லை.

ஆனால் இஙு அரபு நாடுகளில் உள்ள வங்கிகளில் சில வருடங்களாக பாவிக்கின்றார்கள். குறித்த  apps ஐ டவுன்லோட் செய்துவிட மொபைலிலேயே எல்லா வேலைகளையும் செய்து கொள்ள்லாம். tender bond / performance bond போன்ற contingent liabilities ஆவணங்களியும் இதனூடு விண்ணப்பிக்கலாம். அத்துடன் மேலும் பலவித வசதிகள் உண்டு.

மேலும் இங்கு காலையில் ஒரு காசோலையை deposit செய்தால் பகல் 2 மணியளவில்  உடனடியாக credit செய்து விடுவார்கள். இங்கிலாந்தில் இதுக்கு ஒரு நாள் எடுக்கும் என நினக்கின்றேன். 

நான் என்னுடைய உதவியளர் இதில் மாதாந்த payroll process ஐ முடிந்தவுடன் முதல் அப்ருவல் என்னுடையது, இரண்டவது மனேஜரினுடையது  approved செய்து அழுத்தியவுடன் 30 செக்கன்களில் சம்பளம் உங்கள் கணக்கில் credit ஆகிவிடும்.  

மிகவும் திறன் வாய்ந்த apps

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

நெற் வேர்க் அந்த நேரம் இல்லாட்டி: யாவாரம் பார்கிறவரின்ற பிரச்சணை அது.

உந்த விண்ணானக் கேள்விக்கு முன்னம்.... அக்கவுண்டில காசு இல்லாட்டி என்ன செய்யுறது எண்டு சொல்லுங்கோ பார்ப்பம்..

மொபைல் நெட்நொர்க் கட்டாயம் அவசியம். OTP நம்பர் SMS ஆக வரும்.  இங்கு நான் Vodaphone எனும் network ஐ பாவிக்கின்றேன். இங்கிலாந்தில் பெரும்பாலும் அனேகர் T - MOBILE எனும் நெட்வேர்கை பாவிப்பார்கள். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

மொபைல் நெட்நொர்க் கட்டாயம் அவசியம். OTP நம்பர் SMS ஆக வரும்.  இங்கு நான் Vodaphone எனும் network ஐ பாவிக்கின்றேன். இங்கிலாந்தில் பெரும்பாலும் அனேகர் T - MOBILE எனும் நெட்வேர்கை பாவிப்பார்கள். 
 

நீஙகள் சொல்வது உங்கள் போன் நெற்வேக். 

ரதியக்கா கேள்வி, நெற்வேக் இல்லாட்டி பேமன்ற் செய்ய ஏலாதே என்று.

கடையில், வியாபார நிலையங்களில், எல்லா மோபைல் நெற்வேக்கும் இழுக்காவிடில், WIFI இலவசமாக கிடைக்க செய்து, யாபாரத்தை கவனிக்க தெரியாவிடில் வியாபாரத்தை மூடிவேண்டியது தானே.

Link to comment
Share on other sites

57 minutes ago, Nathamuni said:

நீஙகள் சொல்வது உங்கள் போன் நெற்வேக். 

ரதியக்கா கேள்வி, நெற்வேக் இல்லாட்டி பேமன்ற் செய்ய ஏலாதே என்று.

கடையில், வியாபார நிலையங்களில், எல்லா மோபைல் நெற்வேக்கும் இழுக்காவிடில், WIFI இலவசமாக கிடைக்க செய்து, யாபாரத்தை கவனிக்க தெரியாவிடில் வியாபாரத்தை மூடிவேண்டியது தானே.

ஆப் லைன் கார்டு ட்ரான்ஸஸ்க்ஷன் (Off line card transaction) எண்டு ஒண்டு இருப்பதாக அறிந்தனான். ஆனால்  எனக்கு அதுபற்றி சரியான புரிதல் இல்லை. அது பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.