Jump to content

ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம்


Recommended Posts

ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம்

puvitharan-696x460.jpg
 

இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளின் இரண்டாவதும், இறுதியுமான கட்டம் நேற்று (12) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்தப் போட்டிகளில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த ஏ. புவிதரன், ஆண்களுக்கான தட்டெறிதலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம். ஆஷிக் மற்றும் ஆண்களுக்கான 10, 000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் ஆகியோர் வெற்றிகளைப் பதிவு செய்தனர்.

இதில், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக தேசிய மட்ட போட்டியொன்றில் பங்குபற்றியிருந்த யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ. புவிதரன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்தப் போட்டிக்காக தேசிய மட்டத்தில் சிறந்த உயரங்களைத் தாவியிருந்த 6 வீரர்களுக்கு மாத்திரமே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அண்மைக்காலமாக பாடசாலை மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சன் மற்றும் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ. புவிதரன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

 

எனினும், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கை சாதனைக்கு சொந்தக்காரரும், நடப்புச் சம்பியனுமாகிய இஷார சந்தருவன் மற்றும் வட மாகாணத்தைச் சேர்ந்த அனுபவமிக்க வீரரான கே. நெப்தலி ஜொய்சன் ஆகியோர் முதல் சுற்றுடன் வெளியேறிமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த மாத இறுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் (4.70 மீற்றர்) புதிய போட்டி சாதனை நிகழ்த்தியிருந்த ஏ. புவிதரன், முதற்தடவையாக தேசிய மட்டப் போட்டியொன்றில் கலந்து கொண்டிருந்தார்.

இதன்படி, குறித்த போட்டியின் ஆரம்பத்தில் நடுவர்களால் வழங்கப்பட்டிருந்த 4.40 மீற்றர் உயரத்தை முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாகத் தாவிய புவிதரன், அதனைத் தொடர்ந்து 4.60 மீற்றர் உயரத்தையும் 2 ஆவது முயற்சியிலேயே தாவினார்.

Untitled-46-300x200.jpgஅடுத்த இலக்காக வழங்கப்பட்ட 4.70 உயரத்தை தாவுவதற்கான முதலிரண்டு முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவிய புவிதரன், 3 ஆவது முயற்சியை வெற்றிகரமாகக் கடந்து அசத்தினார்.

இதனையடுத்து புவிதரனுக்கு அடுத்த இலக்காக 4.80 மீற்றர் உயரம் நடுவர்களினால் வழங்கப்பட்டது. எனினும், குறித்த உயரத்தை தாவுவதற்காக அவரால் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிவடைய இறுதியில் 4.70 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, ஜப்பானின் கிபு நகரில் எதிர்வரும் ஜுன் மாதம் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை 18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பின்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான 12 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

 

 

எனினும், குறித்த போட்டித் தொடரில் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளும் இடம்பெற்றிருந்தாலும், இலங்கையிலிருந்து எந்தவொரு வீரர்களும் அதற்காக அறிவிக்கப்பட்ட அடைவுமட்டங்களை பூர்த்தி செய்து இருக்கவில்லை. இதில் ஆண்களுக்கான அடைவுமட்டமாக 4.90 மீற்றரும், பெண்களுக்கான அடைவுமட்டமாக 3.60 மீற்றரும் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.70 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட புவிரதனுக்கு இப்போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு 0.2 மீற்றர்களினால் பறிபோனது.

எது எவ்வாறாயினும், கடைசி நேரத்தில் கிடைத்த அறிவிப்புடன், போட்டிகள் நடைபெறுகின்ற தினத்தன்று காலை தனது பயிற்றுவிப்பாளர் மற்றும் பாடசாலை உடற்கல்வி ஆசியருடன் கொழும்புக்கு வருகை தந்து கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பங்குபற்றியிருந்த புவிதரன், தேசிய மட்டத்தில் முன்னிலையில் உள்ள வீரர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

எனவே, ஒரு பாடசாலை மாணவனாக கோலூன்றிப் பாய்தலில் நாளுக்கு நாள் திறமைகளை அதிகரித்துக் கொண்டே செல்கின்ற புவிதரன், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுகின்ற வாய்ப்பினை கடைசி நேரத்தில் தவறவிட்டாலும், மிக விரைவில் தேசிய சாதனையை முறியடித்து சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி இலங்கைக்கு பெருமையைப் பெற்றுக்கொடுப்பார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

அனித்தாவுக்கு உபாதை

anitha-2-1-300x200.jpgஇம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக கலந்துகொள்வதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன், காலில் ஏற்பட்ட உபாதையினால் நேற்று நடைபெற்ற ஆசிய தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றவில்லை.

கடந்த மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற முதல் கட்ட தகுதிகாண் போட்டிகளில் தனது பாதணி காரணமாக அசௌகரியத்துடன் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் போட்டியிட்ட அனித்தாவால் 3.30 மீற்றர் உயரத்தையே தாவ முடிந்தது.

 

 

எனினும், அதற்கு ஒருசில தினங்களுக்கு முன் இதே மைதானத்தில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி தனது சொந்த சாதனையை முறியடித்த அனித்தா, புதிய தேசிய சாதனையொன்றையும் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சண்முகேஸ்வரனுக்கு முதல் வெற்றி

shanmugeswaram-300x200.jpgஆசிய தகுதிகாண் போட்டிகளில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட ஹற்றன் வெலி ஓயாவைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

குறித்த போட்டியை 31 நிமிடங்கள் மற்றும் 16.84 செக்கன்களில் நிறைவு செய்த அவர் இவ்வருடத்துக்கான தனது சிறந்த நேரத்தையும் பதிவு செய்தார்.

ரொசல்ல குயில்வத்த தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான 26 வயது நிரம்பிய சண்முகேஸ்வரன், கடந்த 3 வருடங்களாக தேசிய மட்டப் போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றிகளைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 4 வருடங்களாக இலங்கை பிரபல மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளரான சஜித் ஜயலாலிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற சண்முகேஸ்வரன், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் மற்றும் முப்படை மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தட்டெறிதலில் ஆஷிக் முதலிடம்

Aashiq-discuss-1-300x200.jpgஇலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்து கொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம் ஆஷிக், 42.88 மீற்றர் தூரத்தை எறிந்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

எனினும், கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற முதல் கட்ட தகுதிகாண் போட்டியில் பங்குபற்றியிருந்த அவர், 42.87 மீற்றர் தூரத்தை எறிந்து 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

இதேநேரம், முதல் கட்டப் போட்டியில் ஆஷிக்குடன் போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை பல்கலைக்கழக மெய்வல்லுனர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட பி. ஜயவர்தன 40.01 மீற்றர் தூரத்தை எறிந்து இரண்டாவது இடத்தையும், இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எஸ். நிரோஷன 39.90 மீற்றர் தூரத்தை எறிந்து மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

100 மீற்றரில் அஷ்ரப்புக்கு பின்னடைவு

ashraff-100m-300x200.jpgஆசிய விளையாட்டு விழாவுக்கான இரண்டாவது கட்ட தகுதிகாண் போட்டிகளில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மொஹமட் அஷ்ரப் மற்றும் பாசில் உடையார் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் மொஹமட் அஷ்ரப், அசௌகரியத்துக்கு மத்தியில் ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குபற்றி 4 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் குறித்த போட்டியை 10.63 செக்கன்களில் நிறைவு செய்தார். அத்துடன், இவ்வருடத்தில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அஷ்ரபினால் பெற்றுக் கொள்ளப்பட்ட 2 ஆவது சிறந்த நேரப் பெறுமதியாகவும் இடம்பிடித்தது.

முன்னதாக, கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான 4 x 100 அஞ்லோட்ட அணிக்கான வீரர்களைத் தெரிவு செய்வதற்கான 100 மீற்றர் போட்டிகளில் பங்குபற்றியிருந்த அவர், முதல் சுற்றில் போட்டித் தூரத்தை 10.65 செக்கன்களில் நிறைவு செய்து 2 ஆவது இடத்தையும், இறுதி தகுதிகாண் போட்டியில் போட்டித் தூரத்தை 10.62 செக்கன்களில் நிறைவு செய்து 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், நேற்று நடைபெற்ற ஆசிய தகுதிகாண் போட்டிகளின் தகுதிச் சுற்றில் பங்குபற்றியிருந்த அஷ்ரப், போட்டியை 10.72 செக்கன்களில் நிறைவுசெய்து 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

இதேநேரம், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட மற்றுமொரு கிழக்கு மாகாண வீரரான பாசில் உடையார், 10.84 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 7 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றில் கலந்துகாண்ட அவர், போட்டியை 10.73 செக்கன்களில் நிறைவுசெய்து 3 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முப்பாய்ச்சலில் சப்ரினுக்கு மூன்றாவது இடம்

safrin-triiple-300x200.jpgஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இலங்கை இராணுவத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட சப்ரின் அஹமட், 16.03 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 3 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இது சப்ரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த தூரமாகவும் பதிவாகியது.

எனினும், கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற முதல் கட்ட தகுதிகாண் போட்டியில் பங்குபற்றியிருந்த அவர், 15.68 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 4 ஆவது இடத்தினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2015 முதல் இப்போட்டித் தொடரில் பங்குபற்றி வருகின்ற சப்ரின், குறித்த வருடத்தில் முப்பாய்ச்சலில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதனைத் தொடர்ந்து 2016 இல் முப்பாய்ச்சல் மற்றும் நீளம் பாய்தலில் வெள்ளிப் பதக்கங்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இப்போட்டியில், 16.29 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சன்ஜய ஜயசிங்க முதலிடத்தையும், 16.28 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த என். கருணாசிங்க இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.