Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பிறந்த நாள் தொட்டு பெற்றோரை, கணவனை, பிள்ளைகளை நம்பித்தான்  அல்லது சார்ந்துதான் வாழவேண்டுமா??? என்றால் இல்லை என்னும் பதில் பல ஆண்களிடம் இருந்து வரலாம். ஆனால் அவள் பிறப்புத் தொடக்கம் இறப்புவரை ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்டு தன் சுய விருப்பு வெறுப்புக்களை மென்று விழுங்கியபடி மற்றவருக்காக வாழவேண்டிய நிலைதான் எம் பெண்களுக்காக விதிக்கப்பட்டிருக்கிறது. தாயகத்தை விடுவோம். புலம் பெயர்ந்து  மற்றைய சமூகத்துடன் வாழும் எம்சந்ததிப் பெண்கள் அந்நாடுகளில் பல நிலைகளில் இருந்தாலும் இன்னும் ஆணுக்கு ஆணின் விருப்பு வெறுப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாது வாழ்ந்து வருவது உங்களுக்குத் தெரியாததல்ல.

ஆண்கள் சிறுவர்களாக இருந்தபோதும் சரி வாலிபர்களானபின்னும்சரி மணமுடித்த பின்னும்கூட தம் நண்பர்களுடன் சுதந்திரமாக திரிவதும், விடுமுறைக்குச் செல்வதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எம் சமூகத்தில் பெண்கள் தனியாக இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து விடுமுறைக்குச் செல்வது இலகுவாக ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. இள வயதுப் பெண்கள் குழந்தைகளைத் தனியே விட்டுவிட்டுச் செல்வது முடியாதது. பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானபின்னும் பெண்ணுக்கு கணவனுடன் மட்டுமே விடுமுறையைக் கழிக்க வேண்டிய கட்டாயம்.

ஏன் இரு பெண்களோ அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களோ சுதந்திரமாக ஓரிடத்துக்குச் சென்று கணவனோ பிள்ளைகளோ இன்றி ஒரு மாதம் இளைப்பாறி, விருப்பமானதை துணிவாகச் சுதந்திரமாகக் கதைத்துச் சிரித்துவிட்டு வருவதை எத்தனை கணவர்கள் மனதார அனுமதிக்கிறார்கள்???????

இன்னும் நான் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் உங்கள் மனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம் உறவுகளே. உங்கள் கருத்துக்களை மனம் திறந்து எழுதுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • Replies 85
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்னும் நான் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் உங்கள் மனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம் உறவுகளே. உங்கள் கருத்துக்களை மனம் திறந்து எழுதுங்கள்.

நிஞாயமான கேள்வி தான்.ஆனால் இன்னமும் மேலைத் தேச பெண்களுக்கே முழு சுதந்திரமும் விடைக்கவில்லை.அவர்களைப் பார்த்து தானே நமது சந்ததி வளர்ந்து கொண்டிருக்கிறது.உங்களுக்கில்லாவிட்டாலும் உங்கள் பிள்ளைகள் நீங்கள் நினைத்த மாதிரி வாழ்வார்கள்.

இப்போதே திருமணத்திற்கு முன்னர் பச்சுலர் பாட்டி என்று மணமகனின் நண்பர்கள் தனியாகவும் மணமகளின் நண்பிகள் தனியாகவும் வெவ்வேறு இடங்களுக்கு போய் 5 6 நாள் என்று நின்று குத்தாட்டம் போடுகிறார்கள்.

இதுக்காகத் தான் வேலை தவிர்ந்த வேறெங்கும் தனியே போவதில்லை.போனால் மனைவியுடன் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஏதோ பொம்புளையள் கஸ்டப்படுற மாதிரி கதையும் கட்டுரையும் பீலாக்களும்.....
நூற்றுக்கு தொண்ணூறு வீதமான பொம்புளையள் தாங்கள் நினைச்சதை செய்துகொண்டுதான் இருக்கினம்.....நேரத்துக்கு ஒரு சாறி...சட்டையள்....செருப்பு...நகை நட்டுகள் எண்டு சொல்லி வேலையில்லை.....ஆனால் நாங்கள் அண்டைக்கு வாங்கின சாரமும் கோட்டுச்சூட்டும்.....எப்பவும் எங்கையும்......

இந்த வேப்பங்காய் பள்ளிக்கூடத்து குத்தியாட்ட வீடியோவை  பாக்க அவையின்ர சுதந்திரம் வீட்டிலை எப்பிடியிருக்குமெண்டு தெரிய வேணுமெல்லோ...


 

Link to comment
Share on other sites

6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் இரு பெண்களோ அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களோ சுதந்திரமாக ஓரிடத்துக்குச் சென்று கணவனோ பிள்ளைகளோ இன்றி ஒரு மாதம் இளைப்பாறி, விருப்பமானதை துணிவாகச் சுதந்திரமாகக் கதைத்துச் சிரித்துவிட்டு வருவதை எத்தனை கணவர்கள் மனதார அனுமதிக்கிறார்கள்???????

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்து மருத்துவ துறையில் கற்று வைத்தியராகி பல நாடுகளிலும் வாழும் பலர் ஒன்று கூடி இலங்கைக்கு போனார்கள். இவர்களில் பெண்களும் அடங்குவர். ஆண்கள் இவர்களின் கணவர்கள் அல்ல. இப்படி பல ஒன்று கூடல்களும் விடுமுறைகளும் இடம் பெறுகின்றன. இது வித்தியாசமான சமுக நிலையுடன், தொழில் துறையுடன் மற்றும் கல்வி நிலையுடன் சம்பந்தபட்டதாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறையக் காலம் பின் தங்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்தப் பக்கம் வேறை மாதிரி.  ஏனுங்க வீட்டில் பிரச்சினையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை மேலை நாடுகளில் தனியாக போகலாம், ஓரளவிற்கு சமூக பாதுகாப்பு இருக்கும்..

ஆனால் ஆசிய நாடுகளில் 3 வயது பெண் குழந்தைகள் முதல் எழுபது வயது பாட்டிகளுக்குமே பாதுகாப்பு இல்லை.. இதில் தனியாக சுற்றினால்.. என்னாவது..?

சில சுய விருப்பு வெறுப்புகளுக்கு, திருமணமான பெண்களுக்கு முழுசுதந்திரம் இல்லை என்பது உண்மைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் கூட்டமாக வெளியே சென்றால் சந்தோஷமாக பார்க்கப்படுகிறது...பெண்கள் கூட்டமாக வெளியே சென்றால் சந்தேகமாக பார்க்கப்படுகிறது...

...இதை கல்யாணத்தின்போது தலையை குனிந்தபடி தாலியை நீயே கட்டு என்று கழுத்தை நீட்டியபோது,  நீ எதுக்கு தாலிகட்டி என்னை உன் பொறுப்பில் எடுக்கவேண்டும்?, நான்தான் தாலி கட்டுவேன் என்று புரட்சிகரமாக அப்போதே யோசித்திருக்கவேண்டும் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

 

இப்போதே திருமணத்திற்கு முன்னர் பச்சுலர் பாட்டி என்று மணமகனின் நண்பர்கள் தனியாகவும் மணமகளின் நண்பிகள் தனியாகவும் வெவ்வேறு இடங்களுக்கு போய் 5 6 நாள் என்று நின்று குத்தாட்டம் போடுகிறார்கள்.

நான் எமக்கு அடுத்த சந்நிதி பற்றிக் கதைக்கவில்லை ஈழப்பிரியன்.

11 hours ago, குமாரசாமி said:

சும்மா ஏதோ பொம்புளையள் கஸ்டப்படுற மாதிரி கதையும் கட்டுரையும் பீலாக்களும்.....
நூற்றுக்கு தொண்ணூறு வீதமான பொம்புளையள் தாங்கள் நினைச்சதை செய்துகொண்டுதான் இருக்கினம்.....நேரத்துக்கு ஒரு சாறி...சட்டையள்....செருப்பு...நகை நட்டுகள் எண்டு சொல்லி வேலையில்லை.....ஆனால் நாங்கள் அண்டைக்கு வாங்கின சாரமும் கோட்டுச்சூட்டும்.....எப்பவும் எங்கையும்......

இந்த வேப்பங்காய் பள்ளிக்கூடத்து குத்தியாட்ட வீடியோவை  பாக்க அவையின்ர சுதந்திரம் வீட்டிலை எப்பிடியிருக்குமெண்டு தெரிய வேணுமெல்லோ...


 

நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் ஒழுங்காகப் பதில் சொல்லவில்லை. சீரை சட்டை உடுப்பதை விடுங்கள். உங்கள் மனைவி தன் நண்பிகளுடன் ஒருவாரம் விடுமுறையில் செல்ல விடுவீர்களா????

7 hours ago, Jude said:

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்து மருத்துவ துறையில் கற்று வைத்தியராகி பல நாடுகளிலும் வாழும் பலர் ஒன்று கூடி இலங்கைக்கு போனார்கள். இவர்களில் பெண்களும் அடங்குவர். ஆண்கள் இவர்களின் கணவர்கள் அல்ல. இப்படி பல ஒன்று கூடல்களும் விடுமுறைகளும் இடம் பெறுகின்றன. இது வித்தியாசமான சமுக நிலையுடன், தொழில் துறையுடன் மற்றும் கல்வி நிலையுடன் சம்பந்தபட்டதாக தெரிகிறது.

இப்படித் துறைசார் காரணங்களுக்காகப் பல கணவர் அனுமதிப்பதுதான். ஆனால் தனியாக விடுமுறை என்றால்  சிக்கல்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

நிறையக் காலம் பின் தங்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்தப் பக்கம் வேறை மாதிரி.  ஏனுங்க வீட்டில் பிரச்சினையா?

நான் ஒன்றும் பின்தங்கவில்லை. ஒருவீதம் நடப்பதைப்பற்றிப் பேசவும் இல்லை. தாயகத்துக்கு அல்லது இந்தியாவுக்கு உறவினரைப் பார்க்க தனியாகச் செல்வதையும்கூடக் குறிப்பிடவில்லை. 

ஏனுங்க உங்கவீட்டில் நடக்கிற பிரச்சனையைத் தான் நீங்கள் பொதுவெளியில் எழுதுவீர்களா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாராளமாக பெண்கள் தனியாக போகலாம் வரலாம்.... அவர்கள் பத்திரமாக திரும்பி வருகின்றார்கள் அல்லது வருவதை சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளுமே தீர்மானிக்கின்றன....!ஆபத்துகள் ஆண்களால் மட்டும்தான் வரவேண்டும் என்பதில்லை. கூட பயணிக்கும் பெண்களாலும் கூட வரலாம். விவாதிக்க வேண்டிய விடயத்தை எடுத்திருக்கின்றிர்கள் சகோதரி.....!   tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னக்கா அங்காலை வாகனம் பழுகினால் ஆண்கள் தான் தள்ளவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் பிறகு இங்காலை சம உரிமை பற்றி கதைக்கிறியள். ஏன் பழுதாகின வாகனத்தை நீங்கள் இறங்கி தள்ளியிருக்கலாம் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, வாதவூரான் said:

என்னக்கா அங்காலை வாகனம் பழுகினால் ஆண்கள் தான் தள்ளவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் பிறகு இங்காலை சம உரிமை பற்றி கதைக்கிறியள். ஏன் பழுதாகின வாகனத்தை நீங்கள் இறங்கி தள்ளியிருக்கலாம் தானே?

நானும் சேர்ந்துதான் தள்ளினது கடைசியில கதிர்காமத்தில

 

4 hours ago, suvy said:

தாராளமாக பெண்கள் தனியாக போகலாம் வரலாம்.... அவர்கள் பத்திரமாக திரும்பி வருகின்றார்கள் அல்லது வருவதை சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளுமே தீர்மானிக்கின்றன....!ஆபத்துகள் ஆண்களால் மட்டும்தான் வரவேண்டும் என்பதில்லை. கூட பயணிக்கும் பெண்களாலும் கூட வரலாம். விவாதிக்க வேண்டிய விடயத்தை எடுத்திருக்கின்றிர்கள் சகோதரி.....!   tw_blush:

 

ஆனால் விவாத்துக்குத்தான் ஆரும் வருகினம் இல்லையே

9 hours ago, ராசவன்னியன் said:

ஒருவேளை மேலை நாடுகளில் தனியாக போகலாம், ஓரளவிற்கு சமூக பாதுகாப்பு இருக்கும்..

ஆனால் ஆசிய நாடுகளில் 3 வயது பெண் குழந்தைகள் முதல் எழுபது வயது பாட்டிகளுக்குமே பாதுகாப்பு இல்லை.. இதில் தனியாக சுற்றினால்.. என்னாவது..?

சில சுய விருப்பு வெறுப்புகளுக்கு, திருமணமான பெண்களுக்கு முழுசுதந்திரம் இல்லை என்பது உண்மைதான்.

நீங்களாவது ஒத்துக்கொண்டீர்களே அண்ணா முழு சுதந்நிரம் இல்லை என்று.

Link to comment
Share on other sites

வணக்கம் சுமே அக்கா.
போன வருடம் நானும் எனது நண்பிகளும் விடுமுறை போனோம். ஒவ்வொரு வருடமும் நண்பிகள் அவர்கள் கணவர்கள் பிள்ளைகள் என்று ஒன்றாக விடுமுறை போவோம். போன வருடம் ஒரு மாறுதலுக்காக 6 நண்பிகள் தனியாக போனோம். ( சில நண்பிகளுக்கு 4 வயதில் குழந்தை இருந்தது)  அனைவரது கணவர்களும் தமது குழந்தைகளை பார்த்துக்கொண்டு மனைவிமாரை அனுப்பிவைத்தார்கள்.
இரண்டு நாட்கள் தான் நின்றோம் ... நிறைய சிரித்தோம் நிறைய கதைத்தோம் ஆனால் என்ன ஒவ்வொருவரும் தனியாக போய்விட்டோமே தவிர உள்ளுக்குள் பிள்ளைகளை விட்டுவிட்டு போனதை நினைத்து கவலைப்பட்டோம்.........ஒழுங்காக சாப்பிட கூட முடியல. எமக்கு கணவர்கள் சுதந்திரம் தந்தாலும் எம்முள் இருகும் பாசப்பிணைப்பு எம்மை நிம்மதியாக இருக்கவிடல. இது தான் யதார்த்தம்.
நாம் என்ன தான் வெள்ளைகள் செய்கிறார்கள் என்று முயற்ச்சி செய்தாலும் நாம் நம் கலாச்சாரம் அன்பு பாசம் என்பது எம்மோடு கூடபிறந்தது. எம்மால் அவர்களை போல் குடும்பத்தை விட்டு விட்டு தனியா மகிழ்வாக இருக்க முடியல.
இனி போவதென்றால் பிள்ளைகள் 16 தாண்டியபின்பு தான் போவது என்று முடிவெடுத்து திரும்பிவந்தோம் :)

ஆனால் எனக்கு தெரிந்து பல வீடுகளில் பெண்கள் விரும்பினாலும் ஆண்கள் அனுமதிப்பதில்லை என்பது உண்மை. அதற்கு முதல் காரணம் எமது நாட்டு வளர்ப்பு முறை. சிறு வயதில் இருந்தே ஆண்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் பெண்களுக்கு கொடுத்து வளர்ப்பதில்லை அதைப்பார்த்து வளரும் ஆண்கள் அதையே தமது திருமணத்தின் பின்பும் பின்பற்றுகின்றார்கள். ( நான் எல்லா ஆண்களையும் குறிப்பிடவில்லை :) ).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி என்னமோ நியாமானது என்றாலும் ......
பதில் ஒரு வரியில் எழுத கூடியதில்லை.

எனக்கு பெண் சகோதரர்கள் இருக்கிறார்கள் 
ஒரு வீட்டிலேயே வளர்ந்தோம் ஒரே அப்பா ஒரே அம்மா 
நான் 15 வயதிலேயே வீட்டை  விட்டு வெளிக்கிட்டு விட்டேன் 
பின்பு வந்து வந்து போவது ..... போய் போய் வாறது 
என்ற மாதிரி இருக்கும்போது கூட என்னை அம்மாவோ அப்பாவோ 
எதுவும் கேட்பதில்லை.
பின்பு இந்திய இராணுவம் போர் தொடங்கியபின்பு ... நான் எங்காவது 
சென்றுவிட்டு திரும்பாது இருந்தால் ... அம்மா கொஞ்சம் பரபரப்பாக 
இருப்பதை அவதானிக்க தொடங்கினேன் ... அதன் பின்பு எங்கு போனாலும் 
இங்கு போகிறேன் எப்போது வருவேன் என்று சொல்லிவிட்டு போவதுண்டு.

இதே சுதந்திரம் எனது சகோதரர்களுக்கு இருந்ததா என்றால் இல்லை 
பள்ளி முடிந்து..... வந்தால் டியூசன்..... முடிந்து வந்தால் வீடு. இப்படித்தான் 
இருந்தார்கள். 

இரு வேறு பாரிய வேறுபாடு இருந்தது என்னவோ உண்மைதான்.
ஆனால் யாரை கை நீட்டுவது என்பதில்தான் பிரச்சனை.

பிள்ளைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டும் எண்ணம் பெற்றோரிடம் இருக்கவில்லை 
வெளியில் திரிய வேண்டும் எனும் எண்ணம் பெண் பிள்ளைகளிடமும் இருக்கவில்லை 
அப்படி திரிந்தால் ........... அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சமூகத்திடம் இருக்கவில்லை.
அதையும் மீறி திரிய போய் .... போனவராக திரும்பிய பெண்கள் யாரையும் எனக்கு தெரியாது.
ஒன்று காணவில்லை என்று இன்றும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் .... அல்லது அப்பாவை 
தெரியாத பிள்ளைகளுடன் அல்லல் படுகிறார்கள். 

யார்? ஏன் ? எங்கு ? எப்போது ?
என்பதுதுக்கான விடையை தேடுதல்தான் புரிந்துணர்வுக்கும் பக்குவத்துக்கும் 
உள்பட்ட்து. ஆண்கள் திரிகிறார்கள் என்றால்.........  
என்றுவிட்டு திரிய வெளிக்கிட்ட மேலை நாடுகளில்தான் இன்று மீ டூ ( )
அமைப்பு முழு வீச்சாக எழும்புகிறது? 

ஒரு பெண் தாய் ஆகும்போது அவளுக்கு ஒரு ஆன் பிள்ளை பிறக்கும்போது 
ஒரு வேளை ..... தனது முன்னை நாள் ஆச பாசங்கள் அடக்கு முறைகளை சொல்லி வளர்த்தால் 
பின்னாளில் ஆண்கள் பக்குவ படுவார்களோ தெரியாது ....... 
நடைமுறையில் .... ஆண் பிள்ளைக்காகவே காத்தருந்த மாதிரி நேர் எதிராகவே பெண்கள் 
செயல்படுகிறார்கள்   ..... சீதன கொடுமையில் ... இன்னொரு பெண் மறுபக்கத்தில் இருக்கிறாள் 
என்று எண்ணும் தாய்மாரை காண்பது அரிதிலும் அரிது. 

பலவிதமான தீர்வுகளை பெண்களும் தேடி பார்த்து இறுதியில் 
பெண்ணை பெண்ணே திருமணம் செய்யும் நிலையில் கூட அவர்கள் 
சுதந்திரமாக இருக்கிறார்களா? என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

ஆனால் எமக்கு தெரிந்து ஒவ்வையார் பல ஆயிரம் ஆண்டு முன்பு கோவில் கோவிலாக 
தன்பாட்டுக்கு திரிந்து இருக்கிறார் ....... ஆண்களும் பெருமைப்படுகிறார்கள் 
ஆட்டகாறி என்று ஒவ்வையாரை திட்டுபவர்களை நான் காணவில்லை.

இதைத்தான் நான் முன்பே குறிப்பிடடேன் ...
யார்? ஏன் ? எங்கு? எப்போது? என்று 
காரணம் நான்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது.

விமான பணி பெண்கள் நாடு நாடாக திரிகிறார்கள் ....
இஸ்லாம் ... தொட்டு  பிராமண பெண்கள் வரை நாம் 
நாளும் விமானத்தில் சந்திக்கிறோம்தானே?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மீ டு அமைப்பின் இணையதளம் 
இவர்களுடன் நீங்கள் தொடர்பை பேணினால் 
சில விடைகள் புரிந்து உணர்வுகள் வரலாம் 

https://metoomvmt.org/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் வரையான விடீயோக்கள் இருக்கும்போது 
இதை ஏன் இணைத்தேன் என்றால் .........
இவர்கள் ஆண்களுக்கு நிகராக யுத்த களத்தில் போராடுபவர்கள் 
மனோ வலிமை ... உடல் வலிமை என்று சாதாரண பெண்களை விட கொஞ்சம் 
உயர்வானவர்கள் ... இவர்கள் நிலைமையே இப்படித்தான் இருக்கிறது. 

கணவர் உங்கள் மேல் உள்ள காதலால் கூட 
உங்களுக்கு ஏதும் ஆகிவிட கூடாது என்பதாலும் தடுக்கலாம் 
ஆணாதிக்க எண்ணத்தில் இருந்தும் தடுக்கலாம்.
ஆணாதிக்க எண்ணத்திலும் கொஞ்சம் பெண் ஆதிக்கம் இருக்கிறது. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள் மீது சேலை வீழ்ந்தாலும் சேலைக்குத்தான் சேதம் சேலை மீது முள் விழுந்தாலும் சேலைக்குத்தான் சேதம் எங்கும் செல்லலாம் ஆனால் ஒரு கரப்பான் பூச்சிக்கு இருக்கும் பயம் வரும் பிரச்சினைகளையும் வென்று திரும்புவார்கள் என்றால் அவர்களுக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் ஆனால் அப்படி நடப்பதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பதில்..

அக்காவின் மகள் GCSE தாண்டினாப் பிறகு, நானோ இந்த மாதிரி கேள்வி கேட்டனான் எண்டப்போறியள்.

உங்கண்ட வளர்க்கப்பட்ட கதை வேற, இப்பத்தையான் பிள்ளவளர்புக்கதை வேற...

கண தாய்தகப்பன்மார் மெல்லவும் முடியாம, விழுங்கவும் முடியாம திரியினம்.

உங்க ஒரு தாய் மனிசி, மகளுக்கு சமரில கல்யாணம். கொலிடே புக் பண்ணிப் போடாதீங்க எண்டு சொல்லிக் கொண்டு இருந்தவ.

மகள், தானே அரேஞ்ச் பண்ணிப் போட்டு, உங்கண்ட இரண்டு குடும்பம், அப்பாட இரண்டு குடும்பம் மட்டும் தான் வரலாம் எண்டு சொல்லிட்டா.

பின்ன, பண்ணிப் பாருங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

நீங்களாவது ஒத்துக்கொண்டீர்களே அண்ணா முழு சுதந்நிரம் இல்லை என்று.

நீங்கள் விரும்பும் முழு சுதந்திரம் தான் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் அல்லது தமிழகத்தில் அதிகளவு சுதந்திரம் இல்லாவிட்டாலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் வசிப்பர்களுக்கு கட்டற்ற சுதந்திரம் உண்டு.  எனவே தனியே என்றாலும் நண்பிகளோடும் விடுமுறையில் தாராளமாகச் செல்லலாம். பிள்ளைகள் இருந்தால் அவர்களைப் பொறுப்பாகப் பார்க்க கணவன்மார்கள் அல்லது உறவினர்களைக் கேட்கலாம்தானே.

ஆனால் பல பெண்கள் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், என்ன கதைப்பார்கள் என்று தாங்களாகவே வேலிகளையும், விலங்குகளையும் தங்களுக்குப் போட்டு புழுங்கிக்கொண்டிருப்பார்கள்.  இந்த நிலையும் மாறிக்கொண்டுதான் வருகின்றது. 

ஏன் ஆண்களின் அனுமதி வேண்டும் என்று பெண்கள் நினைக்கின்றார்கள்? இந்த அடிமைப் புத்தியை  பெண்கள் முதலில் விட்டுத்தள்ளவேண்டும். ஏதாவது அறிவுரை, விளக்கம் வேண்டுமென்றால் நெடுக்ஸை தனிமடலில் அணுகவும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வசிக்கும் கனடாவில் இப்போது பெண்களுக்கு எந்தவிதத்தடையும் இல்லை அவரவர் சிந்தனைக்கு ஏற்ப தம்மை வடிவமைத்து வாழ்பவர்கள் பெண்களே. அதி உச்ச சுதந்திரத்தை இங்கு வாழ்பவர்களிடையே காணக்கூடியதாக இருக்கிறது. விலங்குகளாக பொறுப்புகளை மாட்டிக் கொண்டு இருப்பவர்கள் நாம்தான். சுமே ஆண்கள் கட்டுப்படுத்துகிறார்கள் அடக்குகிறார்கள் என்று பேசுவது என்னைப் பொறுத்தவரை நான் வாழும் கனடாவில் சுத்த முட்டாள்த்தனம். ஆண்களை முட்டாள்களாகவும், கோமாளிகளாகவும் கோபக்காரர்கள் ஆக்குவதும் தற்போதைய நிலவரத்தின்படி பெண்களாகவே உணர்கிறேன். கலாச்சாரம் பண்பாடுகளைக்கடந்த எல்லையற்ற சுதந்திரம் இன்று பல பெண்களைத் தனிமரமாகவும், போதைக்கு அடிமையானவர்களாகவும், மன அழுத்தம் நிறைந்தவர்களாகவும்,  அதி உச்ச விரக்தியுற்றவர்களாகவும் மாற்றிப்போட்டிருக்கிறது. இந்தத் தரவு உவகை மணமக்கள் இணைப்பின் வாயிலாக பெற்றவை. எல்லையற்ற சுதந்திரவெளியை அனுபவிக்கும் திறமை பெண்களிடம் கிடையாது. இத்தகைய சுதந்திரவெளியை நமது சமூகம் சார்ந்தவகையில் சில பெண்களாலேயே இயலும். எல்லையற்ற சுதந்திரம் என்பதும் துறவு என்பதும் ஒன்று. உறவுகளுக்குள் ஒட்டு இல்லாமல் பெண்களால் வாழ்க்கையை அனுபவிப்பது என்பது சாத்தியமற்றது. பெண்களுக்கு இயற்கை தந்த தாய்மை.,

அது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகள் பறவைகள் ஆகிய அனைத்திற்கும் பொருந்தும். தன்னுடைய சந்ததியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பை முதலில் தாயே ஏற்கிறாள். ஆக தாயிலிருந்தே பிள்ளைகளுக்கான கட்டுப்பாடுகள் ஆரம்பிக்கின்றன. தற்காலத்தில் சமூகவட்டம் சிதறிப்போயுள்ளது. யாரும் எப்படியும் வாழலாம் என்ற கோலம் பற்றற்ற வாழ்க்கையைத்தவிர எந்த ஒரு பெருமையையும் தரப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் ஒழுங்காகப் பதில் சொல்லவில்லை. சீரை சட்டை உடுப்பதை விடுங்கள். உங்கள் மனைவி தன் நண்பிகளுடன் ஒருவாரம் விடுமுறையில் செல்ல விடுவீர்களா????

 அவசியம் என வரும்போது பல தடவைகள் சென்று வந்துள்ளார்.

நானும் என் நண்பர்களுடன் சென்று வந்துள்ளேன்.

நான் நினைக்கின்றேன் நீங்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு சுழல்கின்றீர்கள். வெளியில் வந்து பாருங்கள் ஒரு அழகான சமூகம் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

 அவசியம் என வரும்போது பல தடவைகள் சென்று வந்துள்ளார்.

நானும் என் நண்பர்களுடன் சென்று வந்துள்ளேன்.

நான் நினைக்கின்றேன் நீங்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு சுழல்கின்றீர்கள். வெளியில் வந்து பாருங்கள் ஒரு அழகான சமூகம் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கின்றது.

ஊர்ல இருந்து அப்படியே கிரேனால, அப்படியே தூக்கி வைத்த மாதிரி கொஞ்சப்பேர் தம்மை முன்னேற்ற முனையாமல் வாழ்கின்றனர். 

குறைந்தது ஆங்கில அறிவைக் கூட வளர்க்காத தம்மை பற்றி எந்த வித சுஜ மதிப்பு இன்றி, தாழ்வு மனப்பான்மையோடு வாழும் அவர்கள் குறித்தே இந்த திரி விவாதிக்கிறது என்றே நினைக்கின்றேன்.

அவர்கள் தான், தீடீரென தமக்கு சுதந்திரம் இல்லை என்பார்கள். இரண்டு சாரியும், ஒரு படமும் காட்டியவுடன்.... பழைய குருடி கதவை திறடி
கதை தான்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.