Jump to content

யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்கள் – வைத்தியசாலையில் அனுமதிப்பு…


Recommended Posts

யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்கள் – வைத்தியசாலையில் அனுமதிப்பு…

accident.jpg?resize=275%2C183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்களை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் மது போதையில் பயணித்த இரு பெண்கள் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

 

விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது இரு பெண்களும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இரு பெண்களையும் அவ்விடத்தில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

http://globaltamilnews.net/2018/79286/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு சம உரிமை கிடைச்சிட்டுது...tw_tounge:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

பெண்களுக்கு சம உரிமை கிடைச்சிட்டுது...tw_tounge:

 Putthan, குடியுரிமை கிடைச்சிட்டுது.?

Link to comment
Share on other sites

போதையில் பயணித்த இரு பெண்களில் ஒருவர் மீது வழக்கு!!

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றில் முற்படுத்தப்படும் முதலாவது பெண் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 
 
 
bill-gonzalez.png
 
 

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்துக்குள்ளான இளம் பெண்கள் இருவரில் ஒருவர் மீது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றில் முற்படுத்தப்படும் முதலாவது பெண் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.இருபாலைச் சந்திப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது, அவர்கள் இருவரும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தனர். அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக பெண்கள் இருவரும் அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டு யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சிகிச்சை பெற்ற அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்து இன்று வெளியேறியதுடன் அவர்களில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த பெண், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சம்பவத்தில் தொடர்புடைய இரு பெண்களும் 23, 24 வயதுகளையுடையவர்கள் என்றும், இவர்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவைச் சேரந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

http://newuthayan.com/story/16/போதையில்-பயணித்த-இரு-பெண்களில்-ஒருவர்-மீது-வழக்கு.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் தண்ணியடிச்சது தவறில்லை அவர்கள் தனிப்பட்ட விஷயம்  மோட்ட சைக்கிளை எடுத்துக்கொண்டு ரோட்டுக்கு இறங்கியதுதான் தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எதிலும் சளைத்தவர்களல்ல எனவும் எடுத்துக்கொள்ளலாம்1f601.png?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

பெண்கள் தண்ணியடிச்சது தவறில்லை அவர்கள் தனிப்பட்ட விஷயம்  மோட்ட சைக்கிளை எடுத்துக்கொண்டு ரோட்டுக்கு இறங்கியதுதான் தவறு.

இதே முன்பு ஒருக்கா ராமானாதன் கல்லுரி பளைய மாணவிகள சேலை களர களர தண்னி அடிச்சுப்போட்டு ஆடிய ஆட்டம் இதே யாழ் களத்தில் பார்த்தனான்கள்.இது நடந்தது அவுசில்.தண்னியும் போதையும் எப்பவும் எங்கும் எந்தப் பாலினருக்கும் தீமையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

இதே முன்பு ஒருக்கா ராமானாதன் கல்லுரி பளைய மாணவிகள சேலை களர களர தண்னி அடிச்சுப்போட்டு ஆடிய ஆட்டம் இதே யாழ் களத்தில் பார்த்தனான்கள்.இது நடந்தது அவுசில்.

எங்க யப்பா சொல்லவே இல்லை ....அடுத்த முறை போய் பார்க்கத்தான் வேணும்...

Link to comment
Share on other sites

போதையில் இருந்த இளம் பெண்ணுக்கு யாழ். நீதிமன்று பிறப்பித்த உத்தரவு!

யாழ்ப்பாணம் இருபாலைச் சந்தியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் கட்டைப்பிராய் சந்திக்கு அண்மையில் விபத்துக்குள்ளாகினர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் மன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

கோப்பாய் பொலிஸார் இன்று குற்றப் பத்திரத்தைத் தாக்கல் செய்தனர். வழக்கு திறந்த மன்றில் அழைக்கப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட பெண் நீதிமன்றில் தோன்றவில்லை. அவரைக் கைது செய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இருபாலைச் சந்தியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் கட்டைப்பிராய் சந்திக்கு அண்மையில் விபத்துக்குள்ளாகினர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 

விபத்தில் சிக்கியவர்களை மக்கள் மீட்டபோது இளம் பெண்கள் இருவரும் மதுபோதையில் இருந்தமை அவதானிக்கப்பட்டது. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்ட்டது. கோப்பாய் பொலிஸார் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூலம் பெண்களை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்ற இரு பெண்களும் நேற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த பெண் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவர் மீது மது போதையில் வாகனம் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக இளம் பெண் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை யாழ். நீதித் துறையில் இதுவே முதன்முறை என்று கூறப்படுகின்றது.

http://newuthayan.com/story/16/போதையில்-இருந்த-இளம்-பெண்ணுக்கு-யாழ்-நீதிமன்று-பிறப்பித்த-உத்தரவு.html

Link to comment
Share on other sites

மது அருந்திய காரணத்தை நீதிமன்றில் கூறிய இளம் பெண்! – யாழ். நீதிமன்று எடுத்த முடிவு!!

யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகினர். இந்தச் சம்பவம் கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

 
 

மது போதையில் வாகனம் செலுத்திய பெண்ணுக்கு 7 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது. அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தை ஒரு ஆண்டுக்கு இடைநிறுத்த வேண்டும் என்று நீதிமன்று உத்தரவிட்டது.

தோழி எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அவர் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் வேதனைப்படுகிறார். அவருக்கு சாரயம் வழங்கப்பட்டது. அதில் சிறிதளவை இந்தப் பெண்ணும் பருகிவிட்டார் என்று மூத்த சட்டத்தரணி மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகினர். இந்தச் சம்பவம் கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

 

விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது, அவர்கள் இருவரும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக பெண்கள் இருவரையும் அவ்விடத்தில் இருந்து மீட்டு யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்ற அவர்கள் இருவரும் வைத்தியசாலையிலிருந்து மறுநாள் வெளியேறினர். அவர்களில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மது போதையில் வாகனத்தைச் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட பெண் மன்றில் முன்னிலையாகததால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் மூத்த சட்டத்தரணி ஊடாக அந்தப் பெண் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரண்டைந்து குற்றத்தை ஏற்றுக்கொண்டார். அவருடன் எரிகாயங்களுக்குள்ளானவர் எனத் தெரிவிக்கப்பட்ட பெண்ணும் மன்றில் இருந்தார். அவரைக் காண்பித்தே மூத்த சட்டத்தரணி மன்றில் மேற்கண்டவாறு சமர்ப்பணம் செய்தார்.

மன்று : எத்தனை வயது?
பெண் : 21 வயது
மன்று : என்ன வேலை செய்கிறீர்கள்?
பெண் : —————————

குற்றப்பத்திரத்தை ஆராய்ந்த மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், 7 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த உத்தரவிட்டார். சாரதி அனுமதிப் பத்திரத்தை ஒரு வருடங்களுக்கு இடைநிறுத்துமாறும் மன்று கட்டளையிட்டது.

http://newuthayan.com/story/14/மது-அருந்திய-காரணத்தை-நீதிமன்றில்-கூறிய-இளம்-பெண்-யாழ்-நீதிமன்று-எடுத்த-முடிவு.html

Link to comment
Share on other sites

போதையிலும் ஆண்களை வெல்ல வேண்டும்!!

 

சில தினங்­க­ளுக்கு முன்­னர் இரவு. இரு­பா­லைச் சந்­தி­யில் இரண்டு இளம் பெண்­பிள்­ளை­கள் மோட்­டர் சைக்­கி­ளில் செல்­லும்­போது விபத்­துக்­குள்­ளாகி மீட்­கப்­பட்­டார்­கள்.  அப்­போ­து­தான் தெரி­யவந்தது அவர்­கள் குடித்­து­விட்டு மோட்­டார் சைக்­கிள் ஓடி­ய­து. இதில் என்ன விசே­ஷம் என்றா கேட்­கி­றீர்­கள்?

இன்­றைக்கு யாழ்ப்­பா­ணத்­தில் (ஏனைய இடங்­க­ளைப் பற்­றிக் கதைக்க வர­வில்லை) பெண்­கள் எல்லா இடங்­க­ளி­லும்… இடங்­கள் என்­றால்… பரீட்­சை­யில் சித்­தி­ய­டை­வது… கோவில் திரு­வி­ழாக்­க­ளில் ஒன்­று­கூ­டு­வது… , அரச திணைக்­க­ளங்­கள், அரச தனி­யார் வங்­கி­க­ளில் பணி­யாற்­று­வது என்­பது தொடங்கி எல்­லா­வற்­றி­லும் பெண்­கள் முன்­னிலை வகிக்­கி­றார்­கள். அது ஒன்­றும் தவ­றில்லை. தேவை­யும் அதுவே.

ஆனால், யாழ்ப்­பா­ணத்­தில் மது போதை­யில் மோட்­டார் சைக்­கிள் ஓடி வழக்­குப் பதி­வு­செய்­யப்­பட்ட முத­லா­வது பெண் என்ற பெரு­மையை அந்­தப் பெண்­க­ளில் ஒரு­வர் பெற்­றுக்­கொண்­ட­தாக அறியப்படுகிறது. இறு­தி­யா­கக் கிடைத்த தக­வ­லின்­படி நீதி­மன்­றுக்­குச் சமூ­க­ம­ளிக்­காத அந்­தப் பெண்­மீது பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக…

 

பெண்­கள் குடிக்­கின்­றார்­களா…?
ஆண்­கள் குடித்­தால், பெண்­கள் குடிப்­ப­தில் என்ன பிழை என்ற கேள்­வி­கள் பல முனை­க­ளி­லும் கேட்­கப்­ப­டு­கின்­றன. பொது வெளி­யில் இது தொடர்­பாக யாரும் அதி­கம் கதைக்­கா­விட்­டா­லும், முக­நூல்­க­ளி­லும் சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் கருத்­துக்­களை அள்­ளி­வீ­சும் பல சமூக ஆர்­வ­லர்­கள் இது தொடர்­பா­கக் கதைக்­கத் தவ­ற­வில்லை.

பாரம்­ப­ரிய கிடுகு வேலிக் கலாசா­ரம் கொண்ட யாழ்ப்­பா­ணத்­தில் சைக்­கிள்­கூட ஓடப்­ப­ழ­காத, ஓடத்­தெ­ரி­யாத ஒரு சூழ­லில் இருந்த யாழ்ப்­பா­ணத்­துப் பெண்­கள், தாய், தகப்­பன், சகோ­த­ரங்­கள், பின்­னர் கண்­ணான கண­வன் என்று அடி­தொ­ழுது வாழ்ந்து பழக்­கப்­பட்ட யாழ்ப்­பா­ணத்­துப் பெண்­கள் இன்று ஆண்­க­ளுக்கு நிக­ரா­கக் குடித்­து­விட்டு நீதி­மன்ற வாச­லில் நிற்­கி­றார்­கள் என்­றால் இது எவ்­வ­ளவு மேன்­மை­யான விட­யம்…?

நன்­றா­கக் குடி­யுங்­கள்… குடித்­து­விட்டு மோட்­டார் சைக்­கிள் ஓடா­தீர்­கள் அல்­லது போதை இல்­லாத ஒரு­வரை மோட்­டார் சைக்­கி­ளைச் செலுத்­த­வி­டுங்­கள் என்ற போத­னை­கள் வேறு செய்­யப்­ப­டு­கின்­றன. போதை­யே­றித் தெரு­வில் விழுந்த பெண்­கள் தொடர்­பாக ஏன் ஊட­கங்­க­ளில் வெளி­யிட்டு அந்­தப் பெண்­க­ளைச் சந்தி சிரிக்க வைக்­கி­றீர்­கள்?

அவர்­க­ளுக்கு நல்ல அறிவுரைகளைச் சொல்­லிக்கொடுத்துத் திருத்­துங்­கள் என்று வேறு சில­ரும் சொல்­கி­றார்­கள். குடிப்­ப­தைப் பிழை­யா­கப் பார்க்­கா­தீர்­கள், நவீன உல­கில் பியர் அடிப்­பதோ விஸ்கி குடிப்­பதோ மோச­மான விட­யம் அல்ல. ஒக்­கே­ச­னாக அடிப்­பது ஒன்­றும் தவ­றில்லை என­வும் சம காலத்­துப் பின்­ந­வீ­னத்­துவ வாதி­கள் கருத்­துச் சொல்­கி­றார்­கள்.

அன்­றைய தினம் குடித்த பெண்­கள் ஒரு பிறந்­த­நாள் கொண்­டாட்­டத்­தில் கலந்­து­கொண்டு மது அருந்­திப் பின்­னர் புறப்­பட்­ட­தாக முக­நூல் நண்­பர்­கள் தெரி­விக்­கி­றார்­கள். அந்த இடத்­தில் இந்­தப் பெண்­கள் மட்­டும்­தான் கலந்­து­கொண்­டார்­கள் என்று சொல்­ல­மு­டி­யாது. வேறு பல பெண்­க­ளும் கலந்­து­கொண்­டி­ருப்­பார்­கள். எனவே இது ஒன்­றும் மறை­பொ­ரு­ளான விட­யம் என்று கூறு­வ­தற்­கில்லை.

ஸ்கூட்டி ஓடும் பெண்­கள் எல்­லோ­ரும் சாதா­ரண நிலை­யில் உள்ள பெண்­க­ளாக இங்கு இல்லை. சிறந்த கல்­வி­ய­றி­வும், ஆற்­ற­லும் உள்ள இவர்­க­ளில் அநே­க­மா­னோர் நிரந்­த­ர­மான அரச, தனி­யார் வேலை­க­ளில் உள்­ள­வர்­கள்.

இந்­தச் சமூ­கத்­தில் நீண்ட பாரம்­ப­ரி­யங்­க­ளைக் கொண்ட குடும்­பங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள். இவர்­க­ளுக்கு குடி­யால் ஏற்­ப­டும் தீமை­களோ அல்­லது அதன் பின்­னணி தரும் சிக்­கல்­களோ தெரி­யா­ம­லி­ருக்க வாய்ப்­பில்லை. புத்தி கேட்­டுத் திருந்­த­வேண்­டிய நிலை­யில் அவர்­க­ளும் இல்லை. அவர்­க­ளு­டைய அறி­வும் இல்லை. உண்­மை­யில் என்ன தான் நடக்­கி­றது?

மாலை வேளை­யில் மங்­கிய இரு­ளில் ஒன்­று­சே­ரும் ஆண்­கள் தண்ணி தண்­ணி­யாக அடித்­துச் சில­வே­ளை­க­ளில் கஞ்­சா­போன்ற போதைப் பொருள்­க­ளை­யும் பாவித்து வெறி ஏறி, ஒரு மோட்­டார் சைக்­கி­ளில் மூன்­று­பே­ராக உட்கார்ந்து கூச்­ச­லிட்­ட­வாறு வளைந்து வளைந்து காப்­பெற் சாலை­யில் வேக­மாக ஓடித் திறில் காட்­டு­வதும், சம­யங்­க­ளில் சண்­டை­பி­டிப்­ப­தும், வாய்த்தர்க்கம் கைகலப்பாகி வாள்­வெட்டு வரை­போ­வ­தும் அவர்­க­ளின் கதா­நா­ய­கத்­த­ன­மா­கப் பார்க்­கப்­ப­டு­கி­றது.

அவ்­வாறு எந்­தக் கட்­டுப்­பெட்­டித்­த­ன­மும் இல்­லா­மல் யாருக்­கும் பயப்­ப­டா­மல் சுதந்­தி­ர­மா­கச் செயற்ப­டு­வோம் எனத் தலை­தூக்­கும் சில பெண்­க­ளின் கதா­நா­ய­கித் தனங்­களே இத்­த­கைய விளை­யாட்­டுக்­க­ளின் பின்­ன­ணி­யா­கப் பார்க்­கப்­ப­டு­கி­றது.

ஐஸ்­கி­றீம் கடை­யில் கேக் வெட்டி, றோல் சாப்­பிட்டு, ஐஸ்­கி­றீம் குடித்­துக் கொண்­டா­டப்­பட்ட பிறந்த நாள்­களை ஒத்த கொண்­டா­ட்டங்­கள் இன்று தண் ணி­ய­டித்­துத் தலை­கீ­ழா­கும் நிலை­வரை வந்­துள்­ளதை இளம் தலை­மு­றை­யின் முன்­னேற்­றம் என்று சொல்ல முடி­யுமா?

எத்­த­கைய வச­தி­கள் இருந்­த­போ­தும் உயர் பதவி நிலை­க­ளில் இருந்­தா­லும் கட்­டிய மனை­வியை, அல்­லது கண­வ­னை­விட வேறு தொடுசல் வைத்­தி­ருப்­பதை யாரும் மதிப்­ப­தில்லை ஏற்­றுக்­கொள்­வ­தில்லை. தனி­ ம­னித ஒழுக்­கத்தை எவ­ரும் தூக்கி எறிந்­து­விட்­டுப்­போக முடி­யாது. இன்று பெண்­கள் தண்­ணி­ய­டிப்­பது சரி என வாக்­க­ளத்து வாங்­கும் எந்த ஆண்­ம­க­னும் அத்­த­கைய பின்­னணி உள்ள ஒரு பெண்­னைத் திரு­ம­ணம் செய்ய முன்­வ­ரு­வானா?

சம­கா­லத்­தில் நவீன தொழில்­நுட்ப வச­தி­கள், வாழ்க்கை முறை­கள் எல்­லாம் மாறி­விட்ட பின்­ன­ணி­யில் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட அல்­லது அவ­தூறு பரப்­பப்பட்ட ஒரு பெண்ணை இந்­தச் சமூ­கம் எந்­தக் கேள்­விக்­கும் உட்­ப­டுத்­தா­மல் ஏற்­றுக்­கொள்­கின்­றதா?

திரு­ம­ணம் என்று வந்­த­வு­டன் சாத­கம் பார்த்து, சாதி குலம் கோத்­தி­ரம் எல்­லாம் விசா­ரித்து, ஆண் அல்­லது பெண்­ணின் சொந்த நடத்தை பற்­றித் துப்­ப­றிந்து இறு­தி­யில்­தானே திரு­ம­ணங்­கள் நிச்­ச­யப்­ப­டுத்­தப்­ப­டுகின் றன. ஒரு சில புற­ந­டை­க­ளைத் தவிர இவற்­றுக்கு மாற்­றீ ­டு­க­ளைக் கொண்­டு­வந்­து­விட்­டோமா?

பாட்­டுப் பாட விரும்­பு­வர்­களை மேலும் மேலும் பாடுங்­கள் என ஊக­கப்­ப­டுத்­து­கி­றோம். ஓவி­யம் வரை­ப­வர்­கள், கதை கவி­தை­கள் எழு­து­ப­வர்­கள் அவர்­கள் ஆண்­க­ளாக இருந்­தால் என்ன பெண்­க­ளாக இருந்­தால் என்ன அவர்களின் முன்­னேற்றம் காண முய­லு­கின்­றோம்.
அவ்­வாறே குடிப்­ப­ழக்­கத்­தில் உள்ள ஓர் ஆணையோ பெண்­ணையோ மேலும் மேலும் குடி­யுங்­கள் என ஊக்­கப்­ப­டுத்­த­லாமா? அல்­லது ஊக்கம் கொடுக்கத்தான் முடி­யுமா?

சும்மா ‘ஒக்­கே­ஷ­னாத்­தான் அடிக்­கி­றோம் ஒரு பெக் அடிப்­ப­தால் ஒன்­றும் பிரச்­சி­னை­ யில்லை. ஆக்­க­ளுக்கு முன்­னால கொஞ்­ச­மா­வது குடிக்­கா­மல் விடு­வது சரி­யில்லை, என்று தாம் குடிப்­ப­தற்கு நியா­யம் கற்­பிக்­கும் அன்­பர்­களே குடி­யின் எல்லை எது? குடித்­துக் குடித்து எல்லை தாண்­டும்­போது ஏற்­ப­டும் பிரச்­சி­னை­க­ளால்­தானே குடிக்கு எதி­ரான கருத்­துக்­கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. குடி­யால் ஏற்­ப­டும் பக்­க­வி­ளை­வு­களை சமூ­கத்­தில் நாளும்­பொ­ழு­தும் பார்த்­துக்­கொண்­டு­தான் எல்லை மீற மாட்டோம் என்று சொல்­லிக்­கொண்டு எல்­லோ­ருமாக குடிக்க ஆரம்­பித்து எல்­லோ­ரும் எல்லை மீறு­கின்றோம்.

அந்­தப் பெண்­கள்­கூட பிறந்தநாள் விருந்­துக்கு வெகு அட்­ட­கா­ச­மாக, அலங்­கா­ர­மாக சிறந்த ஆடை அணி­க­ளு­டன் அலட்­சி­ய­மாக வந்து முதல் றவுண்­டில் கலகலப்­பாக சிறிது சிறி­தா­கத் தண்­ணி­ய­டிக்க ஆரம்­பித்­தி­ருப்­பார்­கள்…? பின்­னர் அதன் நீட்­சி­தான் இரு­பா­லைச் சந்­தி­யில் காப்­பெற் றோட்­டில், விபத்­தாகி விழுந்து புரண்டு ஆடை­கள் அழுக்­கா­கும் வரை சென்றது.

அது வேறு சூழ­லாக இருந்­தால் போதை­யில் சுய­மி­ழந்த பெண்­க­ளுக்கு நடக்­கும் கொடு­மை­களை அறி­யா­த­வர்­களா? அந்­தப் பெண்­க­ளும் அவர்­களை ஒத்த பெண்­கள் சமூ­க­மும்போதை ஏற்­றியே பெண்­களை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தும் எத்­த­னையோ சம்­ப­வங்­கள் சமூ­கத்­தில் நடப்­பதை இவர்­க­ளும் இவர்­க­ளுக்கு வக்­கா­லத்து வாங்­கு­ப­வர்­க­ளும் அறிய மாட்­டார்­களா?

ஒரு புறத்­தில் வீறு­கொண்டு எழுந்த விடு­த­லைப்­போ­ராட்­டத்­தின் பின், அதைக் கட்­டிக்­காக்க முடி­யா­மல் அதன் தொடர் பயன்­களை அறு­வடை செய்ய முடி­யாத எங்­கள் தமிழ்த் தலை­வர்­கள் இன்று முள்­ளி­ வாய்க்­கால் நினைவு தினத்தை எப்­ப­டிக் கொண்­டா­டு­வது என்ற பிரச்­சி­னை­யில் நிற்­கும் நிலை­யில் இது­போன்ற சம்­ப­வங்­க­ளைத்­த­விர வேறு என்­ன­தான் நடக்­கும்?

பண்­பாடு மிக்க மக்­கள் கூட்­ட­மாக இருந்த எங்­கள் மக்­க­ளும் அவர்­க­ளின் விடு­ த­லைப்­போ­ராட்­டமும் உச்­ச­மாக இருந்த காலத்­தில் விடு­த­லைப் போ­ரா­ளி­க­ளாக ஆயு­தம் ஏந்­திப்­போ­ரா­டிய பெண்­க­ளும், அதற்கு ஏனைய உத­வி­க­ளைச் செய்த சமூக அமைப்­பில் இருந்த பெண்­கள் கூட்­ட­மா­க­வும் இருந்த எங்­கள் சூழல் இன்­றைக்கு எந்த நிலை­யில் வந்து நிற்­கி­றது என்­பதை யோசித்­துப் பார்க்­க­வேண்­டும்.

இதற்கு எங்­கள் அர­சி­யல் சமய சமூ­கத் தலை­வர்­கள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், மாகாண, பிர­தேச சபை உறுப்­பி­னர்­கள்­தான்­பொ­றுப்­பேற்க வேண்­டும். இது­பற்றி இவர்­கள் சிந்­திக்­க­ மாட்­டார்­களா?

http://newuthayan.com/story/11/போதையிலும்-ஆண்களை-வெல்ல-வேண்டும்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/16/2018 at 3:11 PM, சுவைப்பிரியன் said:

இதே முன்பு ஒருக்கா ராமானாதன் கல்லுரி பளைய மாணவிகள சேலை களர களர தண்னி அடிச்சுப்போட்டு ஆடிய ஆட்டம் இதே யாழ் களத்தில் பார்த்தனான்கள்.இது நடந்தது அவுசில்.தண்னியும் போதையும் எப்பவும் எங்கும் எந்தப் பாலினருக்கும் தீமையே.

 முதல் இரண்டு வரிகளையும் படிச்சபோது சிரிப்பு தாங்கவே முடியல... உண்மைதான்.

ஆனால் ஒன்று சொல்லவேண்டும், இப்போதெல்லாம் தமிழர்கள் பார்ட்டி 

வெள்ளைக்காரனே இதுவரை செய்யாத அளவிற்கு வளர்ச்சி பெற்றுவிட்டது.

வெள்ளைக்காரன் நூறுபேர் சேர்ந்து தண்ணி அடிச்சாலும், கோர்ட் சூட்டில் ஒரு புள்ளிகூட அழுக்கு வராமல் நடந்துக்குவான்..

எவ்வளவுதான் அதி போதையாக இருந்தாலும் கூட்டமாய் நின்று பேசுவார்கள் , ஆனால் கிட்ட நீங்கள் நெருங்கி போனாலும் சத்தம் எதுவும் பெரிதாக கேட்காது...

இப்போலாம் புலம்பெயர் தேச நம்மவர்  பார்ட்டிகளில் ..

* தம்பதிகள் பலூன் உடைக்கும் பார்ட்டி நடக்கும், கையால் உடைப்பதல்ல கணவன் மனைவி , அல்லது நண்பர்கள் கூட்டத்தில் இருவரோ  ஆண் பெண்  சேர்ந்து இருவர் நெஞ்சுக்கு இடையில் வைத்து அழுத்தி வெடிக்க வைக்க வேண்டும், அது முடிய நீண்ட நேரமாகும்.. அதை எல்லோரும் பார்த்து கொண்டிருப்பார்கள் சும்மா  சமாளிக்குறதுக்காக சிரிச்சு கொண்டு..

Heineken  பியரை  ஆண்/பெண் ‘’போட்டியாளர்கள்’’ ஒரே மூச்சில் குடித்து முடிக்கவேண்டும், பார்வையாளர்கள் கைவேற தட்டி ஊக்க படுத்துவார்கள், முடிவில் பரிசு வேற உண்டு...

போதை உச்சத்தில் போனால் பிற ஆணை ...  Give me a hug   என்று நம் தாய்குலங்களில்  சிலர் கழுத்தை சுற்றி கைபோட்டு இறுக அணைப்பார்கள்...

கணவன் முன்னாடிகூட...

 கார் சாவி/டோக்கன் எல்லாம் ஒரு பெட்டியில் போட்டு,குலுக்குவார்கள் குலுக்கல் முறையில் ... எவர்  சாவி  எவர் டோக்கன் யாரிடம் போகிறதோ அவர்கள் ஜோடி சேர்ந்து அப்படி போடு போடு போடு பாட்டுக்கு வெறிதனமா ஆடும் அற்புதமும் உண்டு...

ஒரே சிகரெட்டை நாலு இழுவையில் ஆணோ பெண்ணோ பில்டர் வரை இழுத்து முடிக்கவேண்டும் அப்படி ஒரு போட்டிகூட உண்டு.. புகைத்தல் மண்டபங்களில் அனுமதிக்கப்படாது என்ற அரச சட்டம் இருந்தாலும், மண்டமும் எங்களது, மக்களும் எங்களது என்ற நம்மவர்கள் இடங்களில் சட்டத்தைமீறி அந்த போட்டி வேற இருக்கு...

அதற்காக புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்கள் எல்லோருமே அப்படி என்று அல்ல.. தாயகத்தில் இருந்ததைவிட மிக இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் தாமும் தம் குழந்தைகளுடனும் வாழ்பவர்கள் பல லட்சம் உண்டு...

இன்னும் சொல்லபோனால் வெளிநாட்டு பாஸ்போட் இருந்தாலும் தாயகத்துக்கு திரும்பிபோய் அங்கே குழந்தைகளை படிக்க வைப்பவர்கள்கூட உண்டு...

தாயகத்தில் இருப்பவர்களின் தப்புக்களை ஏதோ உலக அதிசயம்போல் , அவர்கள் கெட்டு போனார்கள் என்பதுபோல் நாங்கள் என்னவோ உத்தம புத்திரர்கள்போல், தமது தளங்களுக்கான வாசகர் எண்ணிக்கையை அதிகரிக்க  ஊடகங்கள் செய்யும்  கலாச்சார காவல் மிக உறுத்தலான ஒன்று...

அதைதான் சொல்ல வந்தேன்... மற்றும்படி அளவுக்கு மீறிய குடி ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆபத்தான ஒன்றே.

இப்படி எதுவும் நடப்பதில்லை , இது வெறும் புரளி என்று யாழ் நிர்வாகம் நினைத்தால் உடனடியாகவே இந்த  கருத்தை நீக்கிவிடலாம்..

கருத்தாளர்களுக்கோ நிர்வாகத்திற்கோ முதலில் உண்மைதான் முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/16/2018 at 7:42 AM, putthan said:

பெண்களுக்கு சம உரிமை கிடைச்சிட்டுது...tw_tounge:

On 5/16/2018 at 7:51 AM, Kavi arunasalam said:

 Putthan, குடியுரிமை கிடைச்சிட்டுது.?

எந்த விதத்திலை எப்பிடியான் சம உரிமை உங்களுக்கு வேணுமெண்டு கேட்டுப்பாருங்கோ....பேந்தப்பேந்த முழுசுவினம்..:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.