Jump to content

எண்ணங்களைச் சுமப்பதெப்படி ?????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

09sld1.jpg

முடிவுறாத் துயரத்தின் சாட்சியாய்

முடிவேயற்ற புதைகுழிக்குள்

மரணங்கள் மலிந்து மண்ணில்

உதிரங்கள் இறைத்த நன்னாள்

 

ஓலங்கள் ஒருங்கே கேட்டும்

உதவிட யாரும் எண்ணா

ஈனர்களாக்கி நாங்கள்

ஒடுக்கி அடக்கி மண்ணில்

உயிருடன் புதைத்த நன்னாள்

 

உன்மத்தம் கொண்ட மூடர்

ஊளைகளோடு ஊனை

உறிஞ்சியே  உதிர்த்தன அன்று

எரிந்தன  எங்கள் ஊர்கள்

சரிந்தன சடலங்கள் அங்கே

 

ஆணின் பெண்ணின் ஆடை அவிழ்த்து

அம்மணமாக்கியே அரக்கர் சிரிக்க

கூனிக் குறுகி நாம் மண்ணில் கரைய

கொடுமைகள் அங்கே குவியலாயின

கேடுகெட்டு நாம் பார்த்திருந்தோம்

 

கைகள் அறுந்தன அன்றே எமது

நெஞ்சு கிழித்து இதயம் தோண்டி

மங்கையர் மார்பறுத்து  மரணம் காட்டி

சிரசறுத்துக் சிசுவறுத்து எம் பெண்  

சினையறுத்து  செங்குருதியோட

சிங்கங்கள் அன்று சிறுத்துப்போயின

 

ஆண்டுகள் ஒன்பது ஆனது ஆயினும்

மீள முடியா வினைகளின் சுவடுகள்

வீழ்ந்த எம்மவர் வீடுகள் தோறும்   

மேன்மைகொள்ளும் வழிகள் இன்றி

கூன் விழுந்த குருடராய் எம்மவர்  

கூனிக் குறுகி நிற்கிறார் இன்றும்

 

மூன்று நேர உணவு உண்கிறோம்

முடிந்தவரை விடுமுறை செய்கிறோம்

மனம் களிக்க மணவறை வைக்கிறோம்

மேதினி எங்கும் மிதப்பாய் திரிந்து

மானத் தமிழர் நாம் எனச் சொல்கிறோம்

கூடிய இனம் குமுறலோடிருக்க

குலவையிட்டுக் கும்மாளமிடுகிறோம்

கோடி கோடியாய்க் காசும் சேர்த்துக்

குடும்பமாய் சேர்ந்து கூடிக்களிக்கிறோம்

 

குருட்டுத் தமிழா நீ கூன் நிமிர்ந்து

கம்பீரமாய் நடப்பதெப்படி????

வானுயர மனம் தெளிந்து

மானுடராய்த் தளைப்பதெப்படி ????

நாதியற்று நாமலையும் நாட்களை

நிரந்தரமாய் நிறுத்துவதெப்படி ?????

சுற்றமும் சூழலும் எமதாக்கி

சுதந்திரமாய்ச் சுவாசிப்பதெப்படி?????

மயக்கம் தெளிந்து நுணுக்கம்உணர்ந்து

மண்ணை நாம் மீட்பதெப்படி?????

உணர்வில் உறுதிகொண்டு

ஒன்றாய் நாம் சேர்வதெப்படி ?????

எமக்கான ஒரு நாட்டில் எண்ணங்களை

ஏகாந்தமாய்ச் சுமப்பதெப்படி ?????

ஏழைத் தமிழா நீ எண்ணங்களைச் சுமப்பதெப்படி????

 

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருட்டுத் தமிழர்கள் சிங்களத்து தேசியக்கொடியுடன் சங்கக்காரக்களையும், ஜெயவர்த்தனாக்களையும் பார்க்க செல்வதும், சிங்கள தேசத்தில் சுற்றுலா செல்வதுமாக பொழுதினைப் போக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.