Jump to content

தென்னிலங்கையில் புலிகளின் கொடிகளை எரித்து யுத்த வெற்றி கொண்டாட்டம்!


Recommended Posts

தென்னிலங்கையில் புலிகளின் கொடிகளை எரித்து யுத்த வெற்றி கொண்டாட்டம்!

I

IMG-20180518-WA0003-720x450.jpg

 

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை வடக்கு மக்கள் கண்ணீருடன் நினைவுகூர்ந்து வருகின்ற நிலையில், தெற்கில் சில இளைஞர்களின் செயற்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

கிரிபத்கொட பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் யுத்த வெற்றியை கொண்டாடும் முகமாக இன்று (வெள்ளிக்கிழமை) இனவாதத்தை தூண்டும் வகையிலும், இலங்கையில் மௌனித்துப்போன விடுதலைப் புலிகளை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டும் வகையிலும் செயற்பட்டுள்ளனர்.

இவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் கொடிகளை ஏந்தியவாறு அனைவருக்கும் பாற்சோறு வழங்கி யுத்த வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் கொடிகளை குறித்த இளைஞர்கள் வீதியில் போட்டு காலால் மிதித்து, தீயிட்டு எரித்துள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு போராடிவருவோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-20180518-WA0004.jpgIMG-20180518-WA0006.jpg

http://athavannews.com/?p=674306-தென்னிலங்கையில்-புலிகளின்-கொடிகளை-எரித்து-யுத்த-வெற்றி-கொண்டாட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை வருடங்களுக்கு அப்புறமும் யுத்தவெற்றியை கொண்டாடுகிறார்கள் என்றால், 

அவ்வளவு தூரம் நினைவில் வைத்திருப்பதற்கு அவர்களுக்கு நாம் தோல்வியை ஒரு காலம் கொடுத்திருக்கிறோம் என்றுதான் அர்த்தம்..

இதில் கவலைப்பட ஒன்றுமில்லை, பெருமை வேண்டுமென்றால் பட்டுக்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, valavan said:

இத்தனை வருடங்களுக்கு அப்புறமும் யுத்தவெற்றியை கொண்டாடுகிறார்கள் என்றால், 

அவ்வளவு தூரம் நினைவில் வைத்திருப்பதற்கு அவர்களுக்கு நாம் தோல்வியை ஒரு காலம் கொடுத்திருக்கிறோம் என்றுதான் அர்த்தம்..

இதில் கவலைப்பட ஒன்றுமில்லை, பெருமை வேண்டுமென்றால் பட்டுக்கொள்ளலாம்.

சிங்களவன் கொண்டாடுவதில், ஆச்சரியப்  பட வேண்டிய நிலை, எமக்கு இல்லை என்றாலும்,
எம்மை... இந்த  நிலைக்குத் தள்ளிய..... ஒட்டுக் குழுக்கள், ஓணான் குழுக்கள்.... 
இந்த நாளை, எப்படி அணுகுகின்றார்கள் என்று.. ஒரு செய்தியும் வரவில்லை.
ஆட்கள்... இன்னும், இருக்கின்றார்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சிங்களவன் கொண்டாடுவதில், ஆச்சரியப்  பட வேண்டிய நிலை, எமக்கு இல்லை என்றாலும்,
எம்மை... இந்த  நிலைக்குத் தள்ளிய..... ஒட்டுக் குழுக்கள், ஓணான் குழுக்கள்.... 
இந்த நாளை, எப்படி அணுகுகின்றார்கள் என்று.. ஒரு செய்தியும் வரவில்லை.
ஆட்கள்... இன்னும், இருக்கின்றார்களா? 

முள்ளிவாய்க்கால் முடிவோடு எல்லோரையும்விட அதிகம் பாதிக்கப்பட்டது அவர்களே,

சொந்தமாய் எந்த தொழிலும் தெரியாத அவர்கள், காலம் முழுவதும் புலிகள் இருப்பார்கள், புகை,போதை,பொண்ணு,பொருள் எல்லாம் காலம் முழுவதும் சிங்களவன் கால் கழுவி பெற்றுக்கொண்டு,

காலம் முழுவதும் இப்படியே ஓட்டிவிடலாம் என்று எத்தனையோ கனவு கண்டிருப்பார்கள்...

உடம்பு நோகாமல்  புலியெதிர்ப்பு பிரச்சாரம்,காட்டி கொடுப்பு ,கப்பம் கையில் ஆயுதம்,புதிய வாகனம் என்று சுகபோகியாக வலம் வந்தவர்களிடம், யுத்தம் முடிந்ததும் சில மாதங்களுக்குள்ளேயே அவர்கள் கையில் இருந்த ஆயுதத்தை சிங்களவன் பறித்ததும், அவர்களுக்கான கொடுப்பனவுகள் வசதிகள் அனைத்தையும் நிறுத்தியதும்...

அவர்களின் மேலிடத்தில் உள்ள பெரும் தலைகளை தவிர மற்றவர்கள் நிலை எல்லாம் அம்போதான்...

நானறிந்து கீழ்மட்டத்திலிருந்து வண்டியோட்டியவர்கள் பலர் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதை வைத்து சவுதி,குவைத்,கட்டார் பக்கம் கிளம்பி சென்றுவிட்டார்கள். அங்கே இலங்கையிலிருந்து எட்டப்ப தொழில் செய்து ஒரு மாதம் சம்பாதித்ததை, ஒரு வருஷம் உடம்பு முறிந்து வேலை செய்து உழைக்கணும்,

இப்போது அவர்கள் இறுதி யுத்தத்தை எண்ணி கண்ணீர் வடிப்பார்கள்...நாங்களும் வடிப்போம்...

ஆனால் இரண்டு கண்ணீருக்கும் வித்தியாசம் இருக்கும்...

அவர்கள் தாங்கள் இழந்ததை எண்ணி...நாம் நாங்கள் இழந்ததை எண்ணி!

Link to comment
Share on other sites

வெற்றிக் கொண்டாட்டம் என்றால், வெற்றியைத் தேடித் தந்தவர்களையும், அந்த வெற்றிக்கு உதவியவர்களையும் போற்றிச் சிறப்பித்துக் கொண்டாடுவது உலக வழமை. இங்கு தங்கள் எதிரியான புலிகளின் கொடியை எரித்துக் கொண்டாடுவதானது புலிகள்மேல் இன்னமும் உள்ள பயத்தையே காட்டுகிறது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களில் உள்ள சில ஈனத்தமிழர்கள்.. புலிக்கொடியை அடிப்பெட்டிக்குள் மடிச்சு வைக்கச் சொன்னார்கள்.. ஆனால்.. சிங்களவன் அதை மறக்காமல்.. தூக்கிப் பிடிக்கிறான்.. கொழுத்திறான்.

அவனுக்குத் தெரியுது... புலிக்கொடியின் யதார்த்தம்.. வலிமை. 

ஆனால்.. எம்மில் சிலதுகளுக்கு.. சராணகதின்னா.. கோடி சுகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ போராட்டத்தையும் அதன் கொடியையும் பிரபாகரனையும் இணையத்தளங்களில் சக தமிழர்கள் கேவலப்படுத்தும் அளவிற்கு சிங்கள அரசியல் இனவாதிகள் கேவலப்படுத்தவில்லை என்பதை பலரும் சிந்திக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

ஈழ போராட்டத்தையும் அதன் கொடியையும் பிரபாகரனையும் இணையத்தளங்களில் சக தமிழர்கள் கேவலப்படுத்தும் அளவிற்கு சிங்கள அரசியல் இனவாதிகள் கேவலப்படுத்தவில்லை என்பதை பலரும் சிந்திக்க வேண்டும்.

அப்படிக் கேவலப்படுத்துபவர்கள் நாங்கள் தமிழரல்ல, வேறு ஒரு இனம் அல்லது ஒட்டுண்ணிகள், கலப்பினம் என்று தங்களைத் தாங்களே வெளிப்படுத்தி நிற்கின்றனர் என்பதையும் சிந்திப்பது அவசியம். :rolleyes:  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டின் மீது கோபம் ஏற்படும் அதன் கொடியை எரிப்பதும் கிழிப்பதும் வழமைதானே லண்டனில நம்மவர்கள் சிங்க கொடியை கிழிச்சு தொங்கப்போடலயா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

தமிழர்களில் உள்ள சில ஈனத்தமிழர்கள்.. புலிக்கொடியை அடிப்பெட்டிக்குள் மடிச்சு வைக்கச் சொன்னார்கள்.. ஆனால்.. சிங்களவன் அதை மறக்காமல்.. தூக்கிப் பிடிக்கிறான்.. கொழுத்திறான்.

அவனுக்குத் தெரியுது... புலிக்கொடியின் யதார்த்தம்.. வலிமை. 

ஆனால்.. எம்மில் சிலதுகளுக்கு.. சராணகதின்னா.. கோடி சுகம். 

இதைத்தான்  நானும் நினைச்சேன்

அவனுக்கு இன்னும்  புலிகளின் பலம் மீது பயமும் 

அவர்கள்  மீண்டுவரக்கூடாது என்ற ஆத்திரமும் உண்டு என்பதையே  இவை  காட்டுகின்றன

வரலாற்றில்  தமிழரைவிட

எம்மை முன்னுக்க  தள்ளியவன்  சிங்களவன் தானே...

9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு நாட்டின் மீது கோபம் ஏற்படும் அதன் கொடியை எரிப்பதும் கிழிப்பதும் வழமைதானே லண்டனில நம்மவர்கள் சிங்க கொடியை கிழிச்சு தொங்கப்போடலயா 

அது தானே?

அப்போ  நாம  இன்னொரு நாடு  என்று  தானே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

அது தானே?

அப்போ  நாம  இன்னொரு நாடு  என்று  தானே..

அமையும் வரைக்கும் அப்படி நிகழுமானால் சந்தோசமே:34_rolling_eyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் கொடிகளை எரித்த சிங்களவர்கள் எத்தனை பேர்? இதே சிங்களவர்களில் போர்குற்ற ஆவணங்கள் வெளிவர உதவி செய்த சிங்களவர்கள் பலர் என்பதையும் மறக்கலாகது.

இதேவேளை புலிகளின் சொத்துக்களை பினாமி பெயரில் பராமரித்தவர்கள் (தமிழர்கள், தாங்களை புலிகளின் பிரதிநிதிகள் என அழைத்துக்கொண்டவர்கள்) யுத்தமுடிவிக்கு பின் எத்தனை பேர் ஞாயமாக நடந்து கொண்டார்கள்? ஆட்டையை போட்டவர்கள் எத்தனை பேர்?  யுத்த முடிவின் பின் அதிக லாபம் அடந்தவர்கள் இத்தகையா வியாபரிகளே.

கயவர்கள் எல்லா இனத்திலும் உண்டு.

கரிகாலன் அவர்களின் குடும்பம் கூட மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் ஆனலும் ஒருவரும் உதவி செய்யமாட்டர்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/19/2018 at 9:49 AM, தனிக்காட்டு ராஜா said:

ஒரு நாட்டின் மீது கோபம் ஏற்படும் அதன் கொடியை எரிப்பதும் கிழிப்பதும் வழமைதானே லண்டனில நம்மவர்கள் சிங்க கொடியை கிழிச்சு தொங்கப்போடலயா 

 புலம்பெயர் தேசங்களிலிருந்தபடி,

 பல பக்கம் நீண்ட விவாதம் பண்ணியும் பலபேரால் புரியாமுடியாத/புரியப்பட முடியாத கருத்தை இரண்டு வரிகளில் சொல்லி முடித்தது..

காலம் முழுவதும் உங்கள்  தாயகத்தில் இருந்தே கண்ட பட்டறிவு...!

திரும்ப திரும்ப உங்கள் கருத்தை படித்து பார்ப்பவர்களுக்கு புரியும் எதையெல்லாம் நாம் இழந்துவிட்டோம் என்று.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 5/21/2018 at 1:55 AM, valavan said:

 புலம்பெயர் தேசங்களிலிருந்தபடி,

 பல பக்கம் நீண்ட விவாதம் பண்ணியும் பலபேரால் புரியாமுடியாத/புரியப்பட முடியாத கருத்தை இரண்டு வரிகளில் சொல்லி முடித்தது..

காலம் முழுவதும் உங்கள்  தாயகத்தில் இருந்தே கண்ட பட்டறிவு...!

திரும்ப திரும்ப உங்கள் கருத்தை படித்து பார்ப்பவர்களுக்கு புரியும் எதையெல்லாம் நாம் இழந்துவிட்டோம் என்று.

மிக்க நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.