Jump to content

முள்ளிவாய்க்காலில் “காக்கா அண்ணன்” மௌனவிரதம்…


Recommended Posts

முள்ளிவாய்க்காலில் “காக்கா அண்ணன்” மௌனவிரதம்…

Kakka1.jpg?resize=800%2C533

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் நேற்றைய(18.05.18) தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட காக்கா அண்ணன் மே,18, மற்றும் நவம்பர் 27 ஆகிய நாட்கள் மௌனவிரதத்திற்கு உரிய நாள் என தனது பதிவேட்டில் எழுதியிருந்தார். “தமிழனின் குரல் மௌனிக்கப்பட்ட நாள் இன்று எங்களை நிம்மதியாக அழவிடுங்கள் என்று விடும் கோரிக்கை பரிகசிப்படும் போது நாம் என்ன செய்வது” என்று எழுதிய குறிப்பு ஒன்றையும்  கையில் ஏந்தியவாறு மௌன விரதத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

காக்கா அண்ணன் விடுதலைப் புலிகளின்  மூத்த பேராளி என்பதோடு, ஒரு மாவீரரின் தந்தை என்பதோடு, ஒரு மகனை முள்ளிவாய்க்காலில் இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kakka3.jpg?resize=800%2C533

Kakka2.jpg?resize=800%2C604

http://globaltamilnews.net/2018/79889/

Link to comment
Share on other sites

யார் இந்த காக்கா... ஏன் அவர் அழவேண்டும் ..? சிறைக் கைதி நண்பனின் பதிவு

 

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத்த பல களம் கண்ட மூத்த போராளி காக்கா அண்ணை அவர்களை பல்கலைக்கழக மாணவர்கள் புறந்தள்ளி ஒதுக்கி விட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் பலரது தாங்க முடியாத வேதனை உணர்வுகள் வெளிப்பட்ட வண்ணமுள்ளன.

அந்த வகையில் மூத்த போராளி காக்கா அண்ணையுடன் சிறையில் கூட இருந்த சு.பிரபா அவர்களது பதிவு பலரையும் பாதித்து கண்கலங்க வைக்கின்றது.

நான் காக்கா அண்ணையுடன் பூசா, வெலிக்கடையென 2 ஆண்டுகள் சிறைச்சாலையில் இருந்திருக்கிறேன்.

பசீர் காக்கா புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர் தேசியத்தலைவர் பிரபாகரனின் நெருங்கிய சகா ஆரம்பகாலங்களில் இருவரும் ஒரே சைக்கிளில் பயணித்து புலிகள் அமைப்பை கட்டமைக்க பாடுபட்டவர்கள்.

ஒரே தட்டில் உணவுண்டவர்கள். காக்கா அண்ண போராளியாக இருந்த காலத்தில் பல்வேறு சண்டைகளில் பங்குபற்றிய களமுனை போராளி. அத்துடன் ஒரு மாவீரரின் தந்தை, ஒரு பிள்ளையை முள்ளிவாய்க்காலில் பறிகொடுத்தவர்.

இதைவிடவும் அவரைப்பற்றி விரிவாய் எழுத வியத்தகு சம்பவங்கள் இருக்கின்றன. அவரின் பாதுகாப்பு கருதி தவிர்க்கிறேன். அவற்றையும் எழுதினால் அவர் காலத்தால் மறக்கப்பட்டுவிட முடியா பொக்கிசம் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அவரை அறிந்தவர்கள், அதை அறிவார்கள்.

இதற்கு அப்பால் அன்று தொட்டு இன்றுவரை போராட்டத்தையும் மாவீரர்களையும் உயிராய் நினைப்பவர். சிறையில் இருந்த காலங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மற்றும் மாவீரர் நாளில் மெளன விரதம் இருப்பதை ஒரு கடனாக கடமையாக நினைத்து கடைபிடிப்பவர். அதை இன்றும் தொடர்பவர்.

விசாரணையில் கூட எதையும் ஒழித்தோ மறைத்தோ அவர் பேசியிருக்கவில்லை. நான் அவரிடம் சொல்வேன் காக்கா அண்ண நீங்கள் பழைய கதைகளையெல்லாம் சொல்லாமல் நான் ஈழநாதம் பேப்பரின் சாதாரண ரிப்போட்டர் என்று சொல்லிப்போட்டு வெளிய போயிருக்கலாம். ஆனால் ஒன்றுவிடாமல் எல்லாம் சொல்லிப்போட்டு இப்ப உள்ளுக்க இருக்கிறீங்க என்பேன்.

அதற்கு அவர் போடா இந்த சிங்களவனால் எனக்கு எந்த தண்டனையும் முழுமையா தரமுடியாது. ஆயுள் தண்டனை தந்தாலும் ஆகக்குறைஞ்சது 15 வருசம் இருக்கோனும். நான் 15 வருசம் இருப்பன் என்றதில எனக்கு நம்பிக்கை இல்ல, ஆகக்கூடினது 10 வருசம் அவ்வளவுதான் எனக்கான தண்டனை அது ஒரு பெரிய தண்டனையா என்று சிரித்துகொண்டே சொல்வார்.

ஆக அவர் உள்ளே இருக்கும்போது கூட உறுதியோடுதான் இருந்தார் தான் விடுதலை ஆகமாட்டேன் என்ற கொள்கையோடுதான் இருந்தார். தினமும் ஏதாவது குறிப்புகள் எழுதி சேர்த்து வைத்து மாதம் ஒரு முறை பார்க்கவரும் மகளிடம் கொடுத்து ஆவணமாக்கி வைக்கச் சொல்வார்.

இன்று முள்ளிவாய்க்கால் நிகழ்வு செய்துவிட்டோம் என்று சட்டைக்கொலரை தூக்கிவிடும் தம்பிகளுக்கு ஒரு சின்ன விடயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நாம் 2009 ஆண்டுக்கு பின் பூசா, வெலிக்கடை, அனுராதபுரம், மகசின் என சிறைகளுக்குள் பல வருடங்கள் அடைபட்டுக்கிடந்தோம்.

அந்த கொடிய சிறைச்சாலைக்குள் கூட நாம் முள்ளிவாய்க்கால் நினைவுதினம், கரும்புலிகள் நாள், தியாகி திலீபன் நினைவுநாள், மாவீரர் நாள் என அனைத்து எழுச்சி நாட்களையும் நினைவுநாட்களையும் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியிலும் தடைகளுக்கு மத்தியிலும் கடைப்பிடித்தே வந்தோம்.

தியாகி திலீபன் நினைவுதினத்தில் உணவு தவிர்த்து உண்ணா நோன்பிருந்திருக்கிறோம். சிறைச்சாலைக்குள் உண்ணாநோன்பென்பது இலகுவான விடயமல்ல.

ஏனெனில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டதென்றும் என்ன என்ன உணவு வழங்கப்பட்டதென்றும் உறுதிப்படுத்தி சிறைக்காவலர்கள் கையொப்பம் இட்டு பிரதான ஜெயிலரிடம் தினமும் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.

நாம் உணவை எடுக்காதுவிட்டால் அது சீப் ஜெயிலர் வரைக்கும் போகும் அப்படிப்போய் அவர்கள் வந்து எம்மை வற்புறுத்தி உணவை பெற்றுக்கொள்ள சொல்லும் போதுகூட நாம் மறுத்துப்பேசி அதனால் பல அசெளகரியங்களையும் சந்தித்திருக்கிறோம்.

ஜெயில் மாற்றப்பட்டிருக்கிறோம், வெளியே திறந்துவிடப்படாமல் அறைகளின் உள்ளே அடைக்கப்பட்டிருந்திருக்கிறோம். மாதம் ஒருமுறை பார்க்க வரும் உறவினர்களை சந்திக்க விடாமல் திருப்பி அனுப்பியிருக்கின்றனர்.

இவையெல்லாம் நாம் இந்த நிகழ்வுகளை கடைப்பிடித்ததால் அனுபவித்த துயர்கள் இதற்காக நாம் அவற்றில் இருந்து ஒதுங்கிவிடவோ அவற்றை கைவிட்டுவிடவோ இல்லை. இன்று சிறையில் இருப்பவர்கள் கூட இதை கடைப்பிடித்தே வருகின்றனர்.

நாம் இன்று முகநூலில் வந்துநின்று வீரம் பேசுபவர்கள் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இம்முறை முள்ளிவாய்க்கால் நிகழ்வை நான் செய்வதா, நீ செய்வதா என்ற சண்டைகள் ஆரம்பித்த போது அதை சமரசமாக தீர்க்க அழுது தீர்க்கும் இடத்தை அரசியல் மேடையாக்காதீர்கள் என்று கண்ணீர் மல்க எல்லோரிடமும் கோரினார் காக்கா அண்ணா.

அத்துடன் நிற்காமல் இந்த வயதிலும் முள்ளிவாய்க்கால் மே - 18 நிகழ்வுக்காக முதல் நாளே அங்கு போய் நின்று எல்லா வேலைகளையும் ஏற்பாடுகளையும் உடனிருந்து செய்துவிட்டு 18 ஆம் திகதி வழமை போன்று மெளன விரதம் இருந்தார்.

அன்று தொட்டு இன்று வரை தேசியத்தில் பற்றுறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்ட அந்த மூத்த மனிதனை ஒரு ஓரமாய் புறந்தள்ளிவிட்டு நேற்றைக்கு முதல்நாள் வடக்கு மாகாணதிற்கு வந்தவரும் எல்லா மாகாணசபை உறுப்பினரும் முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று சத்தியப்பிரமாணம் செய்ய தனக்கு அதில் உடன்பாடில்லையென்று கூறி தன் சிங்கள சம்பந்தி வாசுதேவ நாணயக்கார சகிதம் மகிந்தவின் காலடி தேடிச்சென்று மகிந்தவின் முன் நின்று சத்தியப்பிரமாணம் செய்த முதல்வர் விக்கினேஸ்வரனை கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் நினைவஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தது தமிழர் வரலாற்றில் ஒரு கறுப்பு தினம் என்றே சொல்ல வேண்டும்.

இறந்துபோன அந்த மக்களின் ஆத்மாக்கள் கூட இச்செயலை மன்னிக்காது. அரசியலுக்கு அப்பால்ப்பட்டு நிகழ்வை ஒழுங்கமைக்கிறோம் என்று கூறிய பல்கலைக்கழக வீரர்கள் அரசியலுக்கு அப்பால்ப்பட்ட மூத்தவர் காக்கா அண்ணாவைக் கொண்டு அந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்திருக்க வேண்டியதுதானே அறம்.

அவருக்கு என்ன தகுதி இருக்கவில்லை அந்த நிகழ்வை ஆரம்பித்து வைக்க? முதல்வருக்கு என்ன தகுதி இருந்தது ஆரம்பித்து வைக்க?

அவர் தன் பிள்ளையை முள்ளிவாய்க்கால் மண்ணில் இழந்தாரா? இல்லை இந்த தேசம் மீட்க போராடினாரா? இல்லை பலவருடங்கள் சிறையில் இருந்தாரா? என்ன தகுதி இருக்கிறது?

பல்கலைக்கழக மாணவர்கள் என்ற பெயரில் இனியும் இவ்வாறான கேலிக் கூத்துக்கள் ஆடுவதையும் அரங்கேற்றப்படுவதையும் எம் சமூகம் அனுமதிக்கக்கூடாது. எம் இனத்திற்காய் சிலுவை சுமந்தவர்களை புறந்தள்ளிவிட்டு மீட்சிகளை தேட முயற்சிக்க கூடாது.

இந்த நாட்டுக்காக போராடிய ஒவ்வொறுவனும் மதிக்கப்பட வேண்டியவனே இன்று நீங்கள் படிக்கவும் பண் எடுக்கவும் திரியும் வயதில் அவர்கள் பசி தூக்கம் மறந்து களத்தில் நின்றவர்கள் அவர்கள் ஒன்றும் அநாதைகள் அல்ல இந்த தேசத்தையும் இனத்தின் மாண்பையும் கட்டமைத்தவர்கள் இவர்களின் ஈகங்களால்தான் எங்கள் அடையாளம் இன்றுவரை நின்று நிலைக்கிறது.

மூத்தபோராளிகள் வெளியில் நிற்கவைத்துவிட்டு நேற்றுப்பிறந்தவர்கள் நாட்டாமை செய்ய வெளிக்கிடுவது காலப்பிழையென்றே கருதவேண்டியிருக்கிறது.

ஒரு போராளி கண்ணீர் விடுவது சாதாரண நிகழ்வல்ல அதுவோர் பெருந்துயர் அத்துயரில் அவர்களை ஆழ்த்தாதீர்கள் காலம் உங்களை மன்னிக்காது.

தம் எதிர்கால அரசியலுக்காக இவற்றையெல்லாம் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்த அரசியல்வாதிகளை கையாலாகாதவர்கள் என்றே நான் சொல்வேன் என காக்கா அண்ணனுடன் சிறையில் இருந்த சிறைக் கைதியான சு.பிரபா பதிவிட்டுள்ளார்.

 

http://www.tamilwin.com/community/01/183121?ref=home-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில்  தன்னால் முடிந்த இதய பூர்வமான பங்களிப்பை தாயக போராட்டத்துக்காக அந்தகாலத்தில் இருந்தே...

சத்தமில்லாமல்   வழங்கிய பஷீர் காக்கா அண்ணர் ...பற்றி...

எதுவுமே பண்ணியிருக்காத இந்த இணைய தளங்கள் சத்தமாக அவர்பற்றி பேசி   விளம்பரம் தேடுது என்று சொல்லுங்கள்...

சாமானிய எந்த மனிதனுக்கும் எம் நாகரிகத்தை எண்ணி எம்மீதே  காறி துப்ப தோன்றும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையில்லாமல் தாயகத்தில் உள்ள நியாயமான முன்னாள் போராளிகள் முன்னுக்குப் போய் நின்று தம்மை தாமே இன்னும் இன்னும் துன்பத்தில் ஆழ்ந்திக் கொள்ளும் வகையில்.. எம் ஊடகங்கள் சில காட்டிக்கொடுப்புத் தனமாக எழுதுவதை தவிர்த்து.. அடக்கி வாசிப்பது நலம்.

இன்றைய சூழ்நிலையில்.. வடக்குமாகாண அரசும் முதலமைச்சரும்.. சிலவற்றை செயற்படுத்துவது தான்.. சர்வதேசத்தின் கவனத்தையும்.. சிங்கள இனவெறியர்களின் கவனத்தையும் ஈர்க்கும். 

வெறும் அஞ்சலி மட்டும் செய்வதால் மட்டும் எம் மக்களை கொன்று குவிக்க உதவிய சர்வதேசம்... எம் மக்களுக்கான நீதியை பெற்றுத் தராது. 

சர்வதேசம் மனச்சாட்சியை தட்டி எழுப்பும் வகையில் எமது செயற்பாடுகள் அமைவது.. மிக மிக அவசியமான இன்றைய காலத் தேவையும் ஆகும். 

விக்னேஸ்வரன் 5 வருடங்களுக்கு முன்னாள் செய்ததை இன்று பிடிச்சு வைச்சுக் கொண்டு கதைப்பதிலும்..மக்கள் மீதான புரிந்துணர்வை உள்வாங்கிக் கொண்டு அவரிடம் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு எழுதுவது மிகவும் அவசியம். இன்றைய காலத் தேவையும் ஆகும். ?

Link to comment
Share on other sites

இத்தனை காலமும் அறியத்தராத ஒரு மூத்த போராளி காக்கா அண்ணன் பற்றிய செய்தியை தமிழ்வின் இணையம் அறியத் தந்திருப்பது பாராட்டுக்குரிய விடயம். அதேநேரம், இன்றுவரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்நின்று நடாத்தியவர்கள் எவரையுமே விமர்ச்சிக்காத இந்த இணையம், முதல்வர் விக்னேசுவரன் அவர்கள் நடாத்தியதும் அவரை விமர்ச்சிக்க... அதுவும் மிக இழிவாக விமர்ச்சிக்க வேண்டிய காரணம் என்ன...?? மூத்த போராளி காக்கா அண்ணனை ஒரு பகடைக்காயாக பாவிக்க முயலும் அரசியல் விபச்சாரிகளைக் கொண்ட பின்னணி ஒன்று சு.பிரபா என்பவரையும் வைத்து இந்த இணையத்தையும் பாவித்திருப்பதாக, அல்லது தமிழ்வின் விலைபோய்விட்டது, எனவும் எண்ணத் தோன்றுகிறது.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Paanch said:

இத்தனை காலமும் அறியத்தராத ஒரு மூத்த போராளி காக்கா அண்ணன் பற்றிய செய்தியை தமிழ்வின் இணையம் அறியத் தந்திருப்பது பாராட்டுக்குரிய விடயம். அதேநேரம், இன்றுவரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்நின்று நடாத்தியவர்கள் எவரையுமே விமர்ச்சிக்காத இந்த இணையம், முதல்வர் விக்னேசுவரன் அவர்கள் நடாத்தியதும் அவரை விமர்ச்சிக்க... அதுவும் மிக இழிவாக விமர்ச்சிக்க வேண்டிய காரணம் என்ன...?? மூத்த போராளி காக்கா அண்ணனை ஒரு பகடைக்காயாக பாவிக்க முயலும் அரசியல் விபச்சாரிகளைக் கொண்ட பின்னணி ஒன்று சு.பிரபா என்பவரையும் வைத்து இந்த இணையத்தையும் பாவித்திருப்பதாக, அல்லது தமிழ்வின் விலைபோய்விட்டது, எனவும் எண்ணத் தோன்றுகிறது.  
 

எல்லாம் சின்னக்கவுண்டரின் திருவிளையாடல்.... தன்னையும் தனது கட்சியையும் காட்சிக்கு வெளியே அனுப்பிய காண்டு....

Link to comment
Share on other sites

17 hours ago, நவீனன் said:

யார் இந்த காக்கா... ஏன் அவர் அழவேண்டும் ..? சிறைக் கைதி நண்பனின் பதிவு

 

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத்த பல களம் கண்ட மூத்த போராளி காக்கா அண்ணை அவர்களை பல்கலைக்கழக மாணவர்கள் புறந்தள்ளி ஒதுக்கி விட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் பலரது தாங்க முடியாத வேதனை உணர்வுகள் வெளிப்பட்ட வண்ணமுள்ளன.

அந்த வகையில் மூத்த போராளி காக்கா அண்ணையுடன் சிறையில் கூட இருந்த சு.பிரபா அவர்களது பதிவு பலரையும் பாதித்து கண்கலங்க வைக்கின்றது.

நான் காக்கா அண்ணையுடன் பூசா, வெலிக்கடையென 2 ஆண்டுகள் சிறைச்சாலையில் இருந்திருக்கிறேன்.

பசீர் காக்கா புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர் தேசியத்தலைவர் பிரபாகரனின் நெருங்கிய சகா ஆரம்பகாலங்களில் இருவரும் ஒரே சைக்கிளில் பயணித்து புலிகள் அமைப்பை கட்டமைக்க பாடுபட்டவர்கள்.

ஒரே தட்டில் உணவுண்டவர்கள். காக்கா அண்ண போராளியாக இருந்த காலத்தில் பல்வேறு சண்டைகளில் பங்குபற்றிய களமுனை போராளி. அத்துடன் ஒரு மாவீரரின் தந்தை, ஒரு பிள்ளையை முள்ளிவாய்க்காலில் பறிகொடுத்தவர்.

இதைவிடவும் அவரைப்பற்றி விரிவாய் எழுத வியத்தகு சம்பவங்கள் இருக்கின்றன. அவரின் பாதுகாப்பு கருதி தவிர்க்கிறேன். அவற்றையும் எழுதினால் அவர் காலத்தால் மறக்கப்பட்டுவிட முடியா பொக்கிசம் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அவரை அறிந்தவர்கள், அதை அறிவார்கள்.

இதற்கு அப்பால் அன்று தொட்டு இன்றுவரை போராட்டத்தையும் மாவீரர்களையும் உயிராய் நினைப்பவர். சிறையில் இருந்த காலங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மற்றும் மாவீரர் நாளில் மெளன விரதம் இருப்பதை ஒரு கடனாக கடமையாக நினைத்து கடைபிடிப்பவர். அதை இன்றும் தொடர்பவர்.

விசாரணையில் கூட எதையும் ஒழித்தோ மறைத்தோ அவர் பேசியிருக்கவில்லை. நான் அவரிடம் சொல்வேன் காக்கா அண்ண நீங்கள் பழைய கதைகளையெல்லாம் சொல்லாமல் நான் ஈழநாதம் பேப்பரின் சாதாரண ரிப்போட்டர் என்று சொல்லிப்போட்டு வெளிய போயிருக்கலாம். ஆனால் ஒன்றுவிடாமல் எல்லாம் சொல்லிப்போட்டு இப்ப உள்ளுக்க இருக்கிறீங்க என்பேன்.

அதற்கு அவர் போடா இந்த சிங்களவனால் எனக்கு எந்த தண்டனையும் முழுமையா தரமுடியாது. ஆயுள் தண்டனை தந்தாலும் ஆகக்குறைஞ்சது 15 வருசம் இருக்கோனும். நான் 15 வருசம் இருப்பன் என்றதில எனக்கு நம்பிக்கை இல்ல, ஆகக்கூடினது 10 வருசம் அவ்வளவுதான் எனக்கான தண்டனை அது ஒரு பெரிய தண்டனையா என்று சிரித்துகொண்டே சொல்வார்.

ஆக அவர் உள்ளே இருக்கும்போது கூட உறுதியோடுதான் இருந்தார் தான் விடுதலை ஆகமாட்டேன் என்ற கொள்கையோடுதான் இருந்தார். தினமும் ஏதாவது குறிப்புகள் எழுதி சேர்த்து வைத்து மாதம் ஒரு முறை பார்க்கவரும் மகளிடம் கொடுத்து ஆவணமாக்கி வைக்கச் சொல்வார்.

இன்று முள்ளிவாய்க்கால் நிகழ்வு செய்துவிட்டோம் என்று சட்டைக்கொலரை தூக்கிவிடும் தம்பிகளுக்கு ஒரு சின்ன விடயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நாம் 2009 ஆண்டுக்கு பின் பூசா, வெலிக்கடை, அனுராதபுரம், மகசின் என சிறைகளுக்குள் பல வருடங்கள் அடைபட்டுக்கிடந்தோம்.

அந்த கொடிய சிறைச்சாலைக்குள் கூட நாம் முள்ளிவாய்க்கால் நினைவுதினம், கரும்புலிகள் நாள், தியாகி திலீபன் நினைவுநாள், மாவீரர் நாள் என அனைத்து எழுச்சி நாட்களையும் நினைவுநாட்களையும் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியிலும் தடைகளுக்கு மத்தியிலும் கடைப்பிடித்தே வந்தோம்.

தியாகி திலீபன் நினைவுதினத்தில் உணவு தவிர்த்து உண்ணா நோன்பிருந்திருக்கிறோம். சிறைச்சாலைக்குள் உண்ணாநோன்பென்பது இலகுவான விடயமல்ல.

ஏனெனில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டதென்றும் என்ன என்ன உணவு வழங்கப்பட்டதென்றும் உறுதிப்படுத்தி சிறைக்காவலர்கள் கையொப்பம் இட்டு பிரதான ஜெயிலரிடம் தினமும் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.

நாம் உணவை எடுக்காதுவிட்டால் அது சீப் ஜெயிலர் வரைக்கும் போகும் அப்படிப்போய் அவர்கள் வந்து எம்மை வற்புறுத்தி உணவை பெற்றுக்கொள்ள சொல்லும் போதுகூட நாம் மறுத்துப்பேசி அதனால் பல அசெளகரியங்களையும் சந்தித்திருக்கிறோம்.

ஜெயில் மாற்றப்பட்டிருக்கிறோம், வெளியே திறந்துவிடப்படாமல் அறைகளின் உள்ளே அடைக்கப்பட்டிருந்திருக்கிறோம். மாதம் ஒருமுறை பார்க்க வரும் உறவினர்களை சந்திக்க விடாமல் திருப்பி அனுப்பியிருக்கின்றனர்.

இவையெல்லாம் நாம் இந்த நிகழ்வுகளை கடைப்பிடித்ததால் அனுபவித்த துயர்கள் இதற்காக நாம் அவற்றில் இருந்து ஒதுங்கிவிடவோ அவற்றை கைவிட்டுவிடவோ இல்லை. இன்று சிறையில் இருப்பவர்கள் கூட இதை கடைப்பிடித்தே வருகின்றனர்.

நாம் இன்று முகநூலில் வந்துநின்று வீரம் பேசுபவர்கள் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இம்முறை முள்ளிவாய்க்கால் நிகழ்வை நான் செய்வதா, நீ செய்வதா என்ற சண்டைகள் ஆரம்பித்த போது அதை சமரசமாக தீர்க்க அழுது தீர்க்கும் இடத்தை அரசியல் மேடையாக்காதீர்கள் என்று கண்ணீர் மல்க எல்லோரிடமும் கோரினார் காக்கா அண்ணா.

அத்துடன் நிற்காமல் இந்த வயதிலும் முள்ளிவாய்க்கால் மே - 18 நிகழ்வுக்காக முதல் நாளே அங்கு போய் நின்று எல்லா வேலைகளையும் ஏற்பாடுகளையும் உடனிருந்து செய்துவிட்டு 18 ஆம் திகதி வழமை போன்று மெளன விரதம் இருந்தார்.

அன்று தொட்டு இன்று வரை தேசியத்தில் பற்றுறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்ட அந்த மூத்த மனிதனை ஒரு ஓரமாய் புறந்தள்ளிவிட்டு நேற்றைக்கு முதல்நாள் வடக்கு மாகாணதிற்கு வந்தவரும் எல்லா மாகாணசபை உறுப்பினரும் முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று சத்தியப்பிரமாணம் செய்ய தனக்கு அதில் உடன்பாடில்லையென்று கூறி தன் சிங்கள சம்பந்தி வாசுதேவ நாணயக்கார சகிதம் மகிந்தவின் காலடி தேடிச்சென்று மகிந்தவின் முன் நின்று சத்தியப்பிரமாணம் செய்த முதல்வர் விக்கினேஸ்வரனை கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் நினைவஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தது தமிழர் வரலாற்றில் ஒரு கறுப்பு தினம் என்றே சொல்ல வேண்டும்.

இறந்துபோன அந்த மக்களின் ஆத்மாக்கள் கூட இச்செயலை மன்னிக்காது. அரசியலுக்கு அப்பால்ப்பட்டு நிகழ்வை ஒழுங்கமைக்கிறோம் என்று கூறிய பல்கலைக்கழக வீரர்கள் அரசியலுக்கு அப்பால்ப்பட்ட மூத்தவர் காக்கா அண்ணாவைக் கொண்டு அந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்திருக்க வேண்டியதுதானே அறம்.

அவருக்கு என்ன தகுதி இருக்கவில்லை அந்த நிகழ்வை ஆரம்பித்து வைக்க? முதல்வருக்கு என்ன தகுதி இருந்தது ஆரம்பித்து வைக்க?

அவர் தன் பிள்ளையை முள்ளிவாய்க்கால் மண்ணில் இழந்தாரா? இல்லை இந்த தேசம் மீட்க போராடினாரா? இல்லை பலவருடங்கள் சிறையில் இருந்தாரா? என்ன தகுதி இருக்கிறது?

பல்கலைக்கழக மாணவர்கள் என்ற பெயரில் இனியும் இவ்வாறான கேலிக் கூத்துக்கள் ஆடுவதையும் அரங்கேற்றப்படுவதையும் எம் சமூகம் அனுமதிக்கக்கூடாது. எம் இனத்திற்காய் சிலுவை சுமந்தவர்களை புறந்தள்ளிவிட்டு மீட்சிகளை தேட முயற்சிக்க கூடாது.

இந்த நாட்டுக்காக போராடிய ஒவ்வொறுவனும் மதிக்கப்பட வேண்டியவனே இன்று நீங்கள் படிக்கவும் பண் எடுக்கவும் திரியும் வயதில் அவர்கள் பசி தூக்கம் மறந்து களத்தில் நின்றவர்கள் அவர்கள் ஒன்றும் அநாதைகள் அல்ல இந்த தேசத்தையும் இனத்தின் மாண்பையும் கட்டமைத்தவர்கள் இவர்களின் ஈகங்களால்தான் எங்கள் அடையாளம் இன்றுவரை நின்று நிலைக்கிறது.

மூத்தபோராளிகள் வெளியில் நிற்கவைத்துவிட்டு நேற்றுப்பிறந்தவர்கள் நாட்டாமை செய்ய வெளிக்கிடுவது காலப்பிழையென்றே கருதவேண்டியிருக்கிறது.

ஒரு போராளி கண்ணீர் விடுவது சாதாரண நிகழ்வல்ல அதுவோர் பெருந்துயர் அத்துயரில் அவர்களை ஆழ்த்தாதீர்கள் காலம் உங்களை மன்னிக்காது.

தம் எதிர்கால அரசியலுக்காக இவற்றையெல்லாம் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்த அரசியல்வாதிகளை கையாலாகாதவர்கள் என்றே நான் சொல்வேன் என காக்கா அண்ணனுடன் சிறையில் இருந்த சிறைக் கைதியான சு.பிரபா பதிவிட்டுள்ளார்.

 

http://www.tamilwin.com/community/01/183121?ref=home-latest

தமிழ்வின்  வியாபார நோக்கில் இயங்கும் இணையம்.  அதற்கு தேசீயம் போராட்டம் நினைவேந்தல் சினிமா எல்லாம் செய்திதான் எனபது எல்லோரும் அறிந்தது. 

நினைவேநதல் நிகழ்வுக்கு முன்னாள் போராளிகள் தலமை தாங்கவேணும் அல்லது அரசியல்வாதிகள் அல்லது மாணவர்கள் என எந்த பாகுபாடும் தேவையில்லை. தலமையே இதற்குத் தேவையில்லை. மக்களே சென்று விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதே முறை.  முன்னாள் போராளிகளோ அரசியல்வாதிகளே மக்களாகவே சென்று அஞ்சலி செலுத்தவேண்டியதுதான் ஆனல் இங்கே நினைவேந்தலைவைத்து அடயாளம் தேட முற்படுகின்றார்கள். இவ்வாறு புலம்பெயர் தேசங்களில் அடயாளம் தேடி ஒரே இடத்தில் நாலு மாவீரர் தினம் வைப்பதும் பத்துபேர் மாவீரர் தின உரை வெளியிடுவதும் என்று போட்டி போட்டு இப்போது மாவீரர் தினமோ அல்லது வேறு தினங்களோ முன்புபோல் இல்லை. அவற்றை விட்டு மக்கள் அந்நியப்பட்டுவிட்டார்கள். அதேதான் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும். நினைவேநதலை விட அதற்கு தலமைதாங்கும் போட்டியானது நினைவேந்தலை நீர்த்துப்போகச் செய்யும். காலப்போக்கில் கொல்லப்பட்ட மக்களுக்கு சிங்கள ராணுவமே விளக்கேத்தி அஞ்சலி செலுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

போராட்டத்திலும் தமிழன் ஒன்றாக இல்லை போரடிச் செத்தவனுக்கு விளக்கு வைப்பதிலும் ஒன்றாக இல்லை ஆனால் விடுதலைவேண்டும் !!  எல்லாம் கைவிட்டுப்போய் நினைவுதினங்கள் தான் மிச்சம் இருக்கின்றது, எரியிறவீட்டில் புடுங்குவதுவரை லாபம் என்று அதையும் வைத்து அடயாளம் தேடி பிழைப்புநடத்தவேண்டியதுதான். 

 

 

Link to comment
Share on other sites

புலிகள் இல்லையென்றால் அரசியல்/வியாபாரம் நடாத்தமுடியாத வறட்சிக்கு கட்சிகளும், ஊடகங்களும், பொது அமைப்புகளும், முகநூல் பதிவர்களும் வந்து நிறைய காலமாயிட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எஸ். ஹமீத்.
 
முந்தாநாள்  (18-05-2018) முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தன. அந்நிகழ்வின் போது ஓர் ஓரமாக மௌன விரதம் அனுஷ்டித்தபடி அழுது கொண்டிருந்த பசீர் காக்கா பற்றித் தமிழ் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
 
பசீர் காக்கா புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர். புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனோடு ஒரே சைக்கிளில் பயணம் செய்து அந்த அமைப்பைக் கட்டமைக்கப் பாடுபட்டவர். பிரபாகரனோடு ஒன்றாய் உண்டு, உறங்கியவர். போராளியாக இருந்து பல களங்களில் நின்று போர் செய்தவர். ஒரு மாவீரரின் தந்தை. முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது ஒரு பிள்ளையைப் பறி கொடுத்தவர்.
 
2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பூசா, வெலிக்கடை, மகசின், அனுராதபுரம்  சிறைச்சாலைகளில் அடைபட்டுக் கிடந்தவர் பசீர் காக்கா.
 
வழக்கம் போல இம்முறையும் பசீர் காக்கா முள்ளிவாய்க்காலுக்கு முதல் நாளே சென்று, ஏற்பாடுகளில் பூரண பங்கெடுத்தார். மறுநாள், ஓர் ஓரமாக உட்கார்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.
 
இந்நிலையில் அஞ்சலி நிகழ்வுகளை முடித்துக் கொண்டு வெளியேறிய வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தற்செயலாக பசீர் காக்காவைக் கண்டார். அவரை நோக்கிச் சென்று அவரைக் கட்டித் தழுவி, தனது துயரத்தைப் பகிர்ந்து கொண்டார்.
 
தமிழ் இணையத் தளங்கள் பலவும் பசீர் காக்காவின் செய்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஆனாலும், பல செய்திகளில் பசீர் காக்காவின் உண்மையான பெயரோ, ஊரோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
 
பெயரைப் பார்த்து பசீர் காக்கா ஒரு முஸ்லிம் என்று பலரும் நினைத்திருக்கலாம். அதுபற்றிய விமர்சனங்களை முன்வைத்திருக்கலாம். சிங்கள இனவாதிகள் கூட மேலோட்டமாக அர்த்த்தப்படுத்திக் கொண்டு கருத்துகளைப் பகிரலாம்.
 
உண்மையில் பசீர் காக்கா அல்லது காக்கா அண்ணை எனப்படுபவர் ஒரு முஸ்லிம் அல்ல. அவரது சொந்தப் பெயர் முத்துக்குமார் மனோகர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.
 
ஒரு தெளிவுக்காகவே இந்தச் செய்தி!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, colomban said:
எஸ். ஹமீத்.
 
முந்தாநாள்  (18-05-2018) முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தன. அந்நிகழ்வின் போது ஓர் ஓரமாக மௌன விரதம் அனுஷ்டித்தபடி அழுது கொண்டிருந்த பசீர் காக்கா பற்றித் தமிழ் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
 
பசீர் காக்கா புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர். புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனோடு ஒரே சைக்கிளில் பயணம் செய்து அந்த அமைப்பைக் கட்டமைக்கப் பாடுபட்டவர். பிரபாகரனோடு ஒன்றாய் உண்டு, உறங்கியவர். போராளியாக இருந்து பல களங்களில் நின்று போர் செய்தவர். ஒரு மாவீரரின் தந்தை. முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது ஒரு பிள்ளையைப் பறி கொடுத்தவர்.
 
2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பூசா, வெலிக்கடை, மகசின், அனுராதபுரம்  சிறைச்சாலைகளில் அடைபட்டுக் கிடந்தவர் பசீர் காக்கா.
 
வழக்கம் போல இம்முறையும் பசீர் காக்கா முள்ளிவாய்க்காலுக்கு முதல் நாளே சென்று, ஏற்பாடுகளில் பூரண பங்கெடுத்தார். மறுநாள், ஓர் ஓரமாக உட்கார்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.
 
இந்நிலையில் அஞ்சலி நிகழ்வுகளை முடித்துக் கொண்டு வெளியேறிய வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தற்செயலாக பசீர் காக்காவைக் கண்டார். அவரை நோக்கிச் சென்று அவரைக் கட்டித் தழுவி, தனது துயரத்தைப் பகிர்ந்து கொண்டார்.
 
தமிழ் இணையத் தளங்கள் பலவும் பசீர் காக்காவின் செய்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஆனாலும், பல செய்திகளில் பசீர் காக்காவின் உண்மையான பெயரோ, ஊரோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
 
பெயரைப் பார்த்து பசீர் காக்கா ஒரு முஸ்லிம் என்று பலரும் நினைத்திருக்கலாம். அதுபற்றிய விமர்சனங்களை முன்வைத்திருக்கலாம். சிங்கள இனவாதிகள் கூட மேலோட்டமாக அர்த்த்தப்படுத்திக் கொண்டு கருத்துகளைப் பகிரலாம்.
 
உண்மையில் பசீர் காக்கா அல்லது காக்கா அண்ணை எனப்படுபவர் ஒரு முஸ்லிம் அல்ல. அவரது சொந்தப் பெயர் முத்துக்குமார் மனோகர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.
 
ஒரு தெளிவுக்காகவே இந்தச் செய்தி!
 

ரெம்ப முக்கியம்,

Link to comment
Share on other sites

49 minutes ago, colomban said:
எஸ். ஹமீத்.
 
முந்தாநாள்  (18-05-2018) முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தன. அந்நிகழ்வின் போது ஓர் ஓரமாக மௌன விரதம் அனுஷ்டித்தபடி அழுது கொண்டிருந்த பசீர் காக்கா பற்றித் தமிழ் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
 
பசீர் காக்கா புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர். புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனோடு ஒரே சைக்கிளில் பயணம் செய்து அந்த அமைப்பைக் கட்டமைக்கப் பாடுபட்டவர். பிரபாகரனோடு ஒன்றாய் உண்டு, உறங்கியவர். போராளியாக இருந்து பல களங்களில் நின்று போர் செய்தவர். ஒரு மாவீரரின் தந்தை. முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது ஒரு பிள்ளையைப் பறி கொடுத்தவர்.
 
2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பூசா, வெலிக்கடை, மகசின், அனுராதபுரம்  சிறைச்சாலைகளில் அடைபட்டுக் கிடந்தவர் பசீர் காக்கா.
 
வழக்கம் போல இம்முறையும் பசீர் காக்கா முள்ளிவாய்க்காலுக்கு முதல் நாளே சென்று, ஏற்பாடுகளில் பூரண பங்கெடுத்தார். மறுநாள், ஓர் ஓரமாக உட்கார்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.
 
இந்நிலையில் அஞ்சலி நிகழ்வுகளை முடித்துக் கொண்டு வெளியேறிய வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தற்செயலாக பசீர் காக்காவைக் கண்டார். அவரை நோக்கிச் சென்று அவரைக் கட்டித் தழுவி, தனது துயரத்தைப் பகிர்ந்து கொண்டார்.
 
தமிழ் இணையத் தளங்கள் பலவும் பசீர் காக்காவின் செய்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஆனாலும், பல செய்திகளில் பசீர் காக்காவின் உண்மையான பெயரோ, ஊரோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
 
பெயரைப் பார்த்து பசீர் காக்கா ஒரு முஸ்லிம் என்று பலரும் நினைத்திருக்கலாம். அதுபற்றிய விமர்சனங்களை முன்வைத்திருக்கலாம். சிங்கள இனவாதிகள் கூட மேலோட்டமாக அர்த்த்தப்படுத்திக் கொண்டு கருத்துகளைப் பகிரலாம்.
 
உண்மையில் பசீர் காக்கா அல்லது காக்கா அண்ணை எனப்படுபவர் ஒரு முஸ்லிம் அல்ல. அவரது சொந்தப் பெயர் முத்துக்குமார் மனோகர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.
 
ஒரு தெளிவுக்காகவே இந்தச் செய்தி!
 

ஆடான ஆடெல்லாம் தான் வந்து  தொலைக்குது.

Link to comment
Share on other sites

45 minutes ago, nunavilan said:

 

இணைப்பிற்கு நன்றிகள்..

முள்ளிவாய்க்கால் தமிழர்களின் பெரும் துயரம். நீண்ட விடுதலைப் பயணத்தின் முடிவு அடயாளம் எல்லாமும் ஆகும். அங்கிருந்துதான் புதிதாக எதுவும் ஆரம்பமாக முடியும் என்பதை எவராயினும் உணர்ந்து ஒற்றுமையுடன் எதிர்வரும் காலங்களில் முன்னெடுப்பது அவசியமாகின்றது. இது நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு கவிதை வாசிப்பு உரையாற்றுவது நாட்டியமாடுவது நன்றியுரை வாசிப்பது என வழமையான பாணியில் அணுகுவது ஆரோக்கியமாக இருக்காது. அக் கடசி நாடகளை அதே போன்ற உணரவோடு தக்கவைக்கவேணும். அதில் தான் இவ் நினைவேந்தலுக்கு அர்த்தம் இருக்கின்றது. இத் துயரம் எக்காலத்திலும் உலகால் மறக்க முடியாதவாறு அமையவேணும். அதற்கு தாயகத்தில் இருக்கும் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் ஒவ்வொருவரின் பொறுப்பு சார்ந்தது என்ற உண்மையை உணரவேணும் இந் நிகழ்வுக்கு தலமை என்று எதுவும் அமையமுடியாது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.