Jump to content

Recommended Posts

திருக்குறள் ஆரிய சாத்திர நூற்களின் வழிநூலா? ஆய்வுத் தொடர்-1

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"

-பாவேந்தர் பாரதிதாசன்

இப்போது இந்தக் கேள்வியின் அவசியம் ஏன் வந்தது என்று தமிழ் கூறும் நல்லுலகம் நினைக்கலாம். திருக்குறள் ஆரிய சாத்திரங்களிலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு வழிநூலே என்றும், குறிப்பாக, பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று தரப்படுத்தி, பிராமணருக்கு ஏனையோர் கீழ்நிலை என்றும், குறிப்பாக, சூத்திரர் பிராமணருக்கு அடிமை ஊழியம் செய்யவே கடவுளால் படைக்கப்பட்டவர் என்று சொல்லும் நால்வருண வருணாசிரம தருமத்தைத் தூக்கிப்பிடிக்கும் மனுதரும சாத்திரத்தைப் பின்பற்றியே திருக்குறள் எழுதப்பட்டது என்றும் ஆங்கிலத்தில் நூல் எழுதியுள்ளார்  தமிழ்நாட்டில் வசிக்கும் முனைவர்.நாகசாமி என்னும் ஓர் ஆரியர்; இவர் 'தொல்லியல் அறிஞர்' என்றும் 'கல்வெட்டு ஆய்வாளர்' என்றும்  அறியப்பட்டவர்; திருக்குறள் ஆரிய தர்ம சாத்திரங்களின் வழிநூல் என்றும், தமிழ்நாடு என்று எதுவும் தமிழர்களுக்குக் கிடையாது என்றும் இது பண்டைய சமற்கிருத சாத்திரங்களில் ஆரியதேசம் என்றே அறியப்படுகின்றது என்றும்  இவர் வெளியிட்டுள்ள ஆங்கில நூலில் எழுதி நிறுவ முனைந்துள்ளார்.

"Thirukkural - an Abridgement of Vedic Dharma Sastras" என்பது திருவாளர் நாகசாமியின் ஆங்கில நூலின் தலைப்பு.  உண்மைக்குப் புறம்பான கருத்துக்களையும், உண்மையைத் திரித்தும் இவர் நிறுவ முயலும் கருத்துக்கள், திருக்குறளின் மாண்பை ஒருக்காலும் சிதைக்க இயலாது. ஆயினும், தமிழர்களின் கலை, பண்பாடு, வரலாறு, சமயம், மெய்யியல், வழிபாடு உள்ளிட்ட அனைத்துக் கூறுகளும் ஆரியர்கள் போட்ட பிச்சை என்றும், மொத்த இந்தியாவும் ஆரிய தேசமே என்னும் ஒற்றைக் கலாச்சாரத்தை ஆட்சிக்கு உள்ளும் வெளியும் நிலைநிறுத்த முற்படும் பாசிச சக்திகள் செய்யும் பல்வேறு முயற்சிகளின் ஒரு பரிமாணமே திரு.நாகசாமியின் இம்முயற்சி என்பதை youtube இணையதளத்தில் வெளிவந்துள்ள பின்வரும் காணொளி வெளிச்சம்போட்டுக் காட்டும். ராஜீவ் மல்கோத்திரா என்னும் வடஇந்திய ஆரியர், தமிழ் நாட்டில் பலநூறு தலைமுறைகளாகத் தமிழர்களோடு தமிழர்களாக வாழும் கருப்பு ஆரியரான முனைவர் நாகசாமியைக் காணும் பேட்டியில் இவ்விரு ஆரியர்களும் கூறும் விஷமத்தனமான கருத்துக்களைக் கேட்டு, கொதிக்கும் உங்கள் ரத்தம் சொல்லும் "ஏன் இன்னும் இக்காணொளியை மறுத்தும், இந்நூலுக்கு மறுப்பும் எழுதாமல் மென்மையான கட்டுரை எழுதுகிறீர்கள்?" என்று.

 

இக்காணொளி ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளதால், ஆங்கிலத்தில் வெளிவந்த இந்நூல் உலகெங்கிலும் பேசப்படுகின்றது; குறிப்பாக, வடஇந்தியாவில்  இந்நூல் முக்கியத்துவம் பெறுகின்றது  என்ற நோக்கில், இந்நூலுக்கு ஒரு மறுப்புநூல் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதவேண்டியது மிகமிக அவசியம். ஆங்கிலத்தில் வெளிவரும் மறுப்பு நூல், தமிழறியாத அறிவுலகத்துக்கு உண்மையைத் தெரிவிக்கப் பயன்படும்; தமிழில் வெளிவரும் மறுப்பு நூல், தமிழர்களுக்குப் பயன்படுவதற்கு ஏதுவாக இருக்கும்.

ஆரியரான திரு.நாகசாமி, திருக்குறளைப் பற்றி ஏன் இப்படியொரு பொய்யான நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிடவேண்டும் என்பதைத் தமிழர்கள் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். உலகப்பொதுமறை திருக்குறளுக்கு ஒப்பிட்டுச் சொல்லுமளவு ஒரு அறம்-நீதி-வாழ்வியல்நெறி பேசும் நூல் உலகெங்கிலும் உள்ள எந்நாட்டு இலக்கியத்திலும் இல்லை. சமயம் சாராது, காலம்-இடம் என்னும் பரிமாணங்களைக் கடந்து விளங்கும் திருக்குறளின் பெருமை எந்நூலுக்கும் இல்லை. "தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு" என்று உலக அரங்குக்கு உரக்கச் சொல்லும் நூல் திருக்குறள்.

[உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூலான பைபிள் ஒரு மதநூல்.  பெரும்பாலான நாடுகளின் அரசுமதமாகக் கிறித்துவமதம் விளங்குவதால், பைபிள் அந்தந்த நாட்டு அரசுகளின் துணையால் அந்தந்த நாட்டு மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டது என்பதால், பைபிள் எண்ணிக்கையை திருக்குறள் எண்ணிக்கைக்கு ஒப்பிட இயலாது.]

எந்நாட்டு அரசுகளின் உதவியுமின்றி, நூலின் கருத்துப் பொருண்மை ஒன்றால் ஈர்க்கப்பட்ட பன்னாட்டு அறிஞர் பெருமக்களின் தனிமுயற்சியின்  துணைகொண்டு மட்டுமே,  அதிகமான பன்னாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூலாக விளங்குகிறது திருக்குறள்.  ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்பெருமையினைத் தாங்கி நிற்கும் திருக்குறளின் பெருமைகண்டு தாங்கொணாப் பொறாமை மேலிட்டு, அந்நூலினை விழுங்கிச் செரித்துவிடத் துடிக்கின்றனர் ஆரியர்கள். இங்கு ஆரியர்கள் என்று குறிப்பிடப்படுபவர்களில், ஆரியக் கொள்கையைத் தூக்கிப்பிடிக்கும் தமிழரும் அடக்கம் என்பதைக் கவனத்தில் கொள்க.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" என்று சங்ககாலம் தொட்டு முழங்கிவரும் பாரதிதாசர்களால் அவ்வப்போது இடர்களையப்பட்டுத் தமிழன்னையின் மணிமுடி மகுடத்தில் ஒளிரும் மாணிக்கமாக திருக்குறள் போற்றப்பட்டு வருகின்றது. என்றாலும், தமிழகத்தில் வாழ்ந்துவரும் ஆரியர்கள், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், திருக்குறளுக்கு எதிராக எழுதுவதையோ, அல்லது திருக்குறளை ஆரியக் கருத்தியலில் அடைக்க முயல்வதையோ செய்யத் தவறுவதேயில்லை.

தமிழ்நாட்டில் வசிக்கும் ஆரியர்கள் அனைவரின் வீட்டிலும் ஆரியரின் தாய்மொழியான வடமொழி பேசப்படுவதில்லை; ஏனெனில், வடமொழி என்னும் ஆரியம் உலகவழக்கு அழிந்து, ஒழிந்து சிதைந்து செத்துப் போய்விட்டது. எனவே, தமிழகத்தில் வாழும் வடஆரியர்கள் தமிழில்தான் உரையாடுகின்றனர். ஆயினும், தமிழ் அவர்களின் தாய்மொழி அன்று என்பதிலும், வடமொழி செத்துவிட்டாலும், அதன்பின்னர் ஆரியர்கள் உருவாக்கிக்கொண்ட அரைச்செயற்கை மொழியான சமற்கிருதமே உயர்வான மொழியென்றும் உறுதியாகப் பேசுபவர்கள்; சமற்கிருதம் தேவமொழி என்றும், தமிழ் 'நீசமொழி' என்றும் நம்மிடமே உரக்கப் பேசுவார்கள். தமிழர்களுக்கு நலம்பயக்கும் திட்டங்கள் எதுவாயினும் சரி அல்லது காவிரி உள்ளிட்ட தமிழர்களின் உரிமைகள் தொடர்பான எவையாக இருந்தாலும் சரி, வரிந்து கட்டிக்கொண்டு, எதிர்நிலைக் கருத்தியல்களைப் பரப்புவதில் முழுமூச்சுடன் ஈடுபடுவர்.

ஆரிய தரும சாத்திரங்களுக்கும் திருக்குறளுக்கும் தத்துவ அடிப்படையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று நிறுவ,  "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" என்னும் குறள் ஒன்றே போதும்.

பிறப்பினால் அனைத்து உயிர்களும் ஓர் நிலை(சமம்-ஒக்கும்); அவ்வுயிர்கள் வாழும் உடல்களின் தன்மையைப் பொருத்தும், தொழிற்படும் செய்தொழில் பொருத்தும், உயிர்களின் சிறப்புகள் வேறுபடுகின்றன என்கிறார் பொய்யாமொழிப் புலவர்.

காட்டாக, தொடு உணர்ச்சி மட்டுமே கொண்ட ஓரறிவு உயிரான மரம், நாம் வெளியிடும் கரியமில வாயுவை காற்றில் இருந்து சுத்திகரித்து நீக்கி, நமக்கான உயிர்வளி என்னும் 'Oxygen'-ஐ வெளியிடுகின்றது; சூரிய ஒளியின் துணைகொண்டு, தனக்கான உணவையும், ஏனைய உயிர்களுக்கான உணவாக இலைகளையும், காய்களையும், பழங்களையும் உற்பத்தி செய்கின்றது. இவை அனைத்திற்கும் தேவையான நீர்ச்சத்தை, காற்றிலிருந்தும், நிலத்தடியிலிருந்தும் பெறக் கடினமாக உழைக்கிறது. கடும் தட்பவெட்பச் சூழல்களில் தன்னைக் காத்துக்கொள்ளக் கடுமையாகத் தனியே போராடுகின்றது; ஏனென்றால், மரங்களால் நடக்கவோ, ஓடவோ, பறக்கவோ இயலாதல்லவா? இத்துணைப் போராட்டங்களின் வெளிப்பாடாகத்தான் மனிதர்களுக்காகப் பூப்பதும், காய்ப்பதும், கனிவதும் நிகழ்த்துகின்றது.  

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே! வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!" என்று ஓருயிர்த் தாவரத்தின் வலியைக் காட்சிப்படுத்துகின்றார் தற்காலத் தமிழ்க் கவிஞர் பா.விஜய். இத்துணை சேவைகளைத் தன் சக உயிர்களுக்குச் செய்யும் ஓருயிர்த் தாவரத்தைக் காட்டிலும், ஆறறிவு மனிதப்பிறவிகளாகிய நாம் எவ்வகையில் உயர்ந்தவர்கள்? மற்ற உயிர்களுக்கு எவ்வகையில் சேவை செய்தவர்கள்? மனிதர்களாகிய நாம், நம் அனைத்துத் தேவைகளுக்கும் மற்ற உயிர்களைக் கொன்றும், தொழிநுட்ப வளர்ச்சி என்ற பெயரால் ஏனைய உயிர்களின் வாழ்வாதாரங்களைப் பாழ்படுத்தியும், வருங்காலத்தில் இப்புவியை உயிர்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற பாழிடமாக ஆக்கும் போக்கில்  கேவலமாகவே வாழ்ந்து வருகின்றோம்.

மனித வாழ்வு என்பதே ஏனைய உயிரினங்களின் நல்வாழ்வைச் சார்ந்தது; ஏனைய உயிர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதால் மட்டுமே மனிதகுலம் தன்னைப் பாதுகாக்க இயலும் என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்த தமிழர்களின் அறநூல் திருக்குறள் சொல்லும் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் அனைத்து உயிர்களுக்கான சமநீதித் தத்துவம் எங்கே?

ஆரிய பிராமணர்குலம் ஒன்றன் நன்மையையே கருத்தில்கொண்டு,      பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைச் சூத்திரர்கள் என்னும் இழிமக்களாக்கி, அவர்களை என்றும் ஆரியப் பிராமணர்களுக்கு அடிமைப்படுத்த வடிவமைக்கப்பட்ட  மனுதருமம், சநாதன தருமம் என்ற பெயர்களில் உலாவரும் பாசிச, மனிதவிரோத ஆரிய தர்ம சாத்திர நூற்கள் எங்கே?

எவ்வகையிலாவது இவ்விரண்டு நூற்களையும் ஒப்பிடவே இயலாதபோது, திருக்குறளை ஆரிய தர்ம சாத்திரங்களின் சுருக்கம் என்று சொல்லும் அடாவடித்தனத்தை நூலில் வடித்த ஆரியருக்கு, நாம் வடிக்கும் பொருத்தமான மறுப்பு நூல் ஒன்றே காலத்தை வென்ற விடையாக அமையும்.

நூல் முழுவதையும் எழுதி முடித்தபின், ஒரு புத்தமாக வெளியிடலாம் என்றிருந்தேன். அப்படி வெளியிட்டிருந்தால், அதில் உலகத் தமிழர்களின் பங்களிப்பு இல்லாதிருக்கும்; பல குறைபாடுகளையும் கொண்டிருக்கும். கிருஷ்ணன் என்னும் தனித்தமிழனாக மறுப்பு நூல் எழுதுவதைப் பார்க்கிலும், 'யாழ்' போன்ற உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் தளத்தில் தொடர் கட்டுரையாக எழுதினால், உலகத்தமிழர்களின் அறிவார்ந்த பங்களிப்புடன் ஒரு நிறைவான நூலாக வெளிவரும் வாய்ப்புகள் அதிகம் என்று உணர்ந்ததால், இந்நூலைத் தொடர்கட்டுரையாக எழுத முனைகின்றேன். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு தனிக் கருத்தை மையமாகக் கொண்ட கட்டுரையாக இருக்கும். எனவே, முந்தைய கட்டுரைகளைப் படித்தால்தான் நடப்புக் கட்டுரை புரியும் என்ற தொடர்கதை இலக்கணம் இத்தொடருக்குப் பொருந்தாது.

மனிதகுல விரோத நூலாகிய சநாதன மனுதரும சாத்திர நூற்களின் சுருங்கிய வடிவமே திருக்குறள் என்று கொடுமை பறையும் "Thirukkural - an Abridgement of Vedic Dharma Sastras"  ஆரியப் பேரினவாதப் பாசிச நூல் சொல்லும் மையக் கருத்துக்களின் சுருக்கத்தையும், அந்நூலின் ஒவ்வொரு கருத்துக்குமான பதிலாக ஒவ்வொரு கட்டுரையுமாகத் தொடர்ந்து எழுத உள்ளேன். தமிழர்கள் அனைவரும் ஒவ்வொரு கட்டுரையையும் திறனாய்வு செய்து, குறைகளைச் சுட்டி, தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தால், ஒரு வலிமையான நூலாக இத்தொடர் கட்டுரைகள் உருவெடுக்கும். தமிழரெல்லாம் இணைந்து உருவாக்குவோம்.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே!   மற் றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ!       -   புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

 

குரளறம் தொடர்ந்து பேசுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியத்தின் இந்தக் பிதற்றலுக்கு காரணம் கீழடி.

கீழடி என்ற வராலாற்று தொல்பொருள் என்ற நிலப் பிரளயம், வரலாற்று பிரளயமாக உருவெடுத்து, ஆரியத்தையம் அதன் பொய்யான வரலாற்று அத்திவாரத்தையும் பெயர்த்தெடுத்து, ஆதி அந்தம் உள்ள  ஆரியமே  என்னுடானா சாவல் விடுகிறாய், வரலாற்றில் இருந்து துடைத்தெறிவதற்கு சர்வ சாதாரணமாக இருக்கும் கீழடியே போதும், வரலாற்றில் உன் இடத்தையும் காலத்தையும் தெரிந்து நடந்துகொள் என்று முகத்தில் அறைந்து சொல்லியிருக்கிறது.

இது ஆரியதின் குலையை இழுத்து உலுக்கி இருக்கிறது.

ஆரியத்தின் இந்த  பிதற்றலை முடிப்பதற்கு, வள்ளுவத்தின் "மான் பபுலியை வேட்டையாடுமிடம் காமத்தில்" என்ற காமத்து பாலே போதும்.

அதாவது, அன்றே வள்ளுவம்  பெண் ஆணை  மேவுவதை, ஆகக் குறைந்தது காமத்திலே காட்டியிருக்கிறது.

ஆரியத்தின் வருண சாத்திரம் என்ற பிதற்றல் உண்மையானால், சூத்திரப் பெண் பிராமணிய ஆணை ஆக்க குறைந்தது காமத்திலே வேட்டையாடுவாள் என்பதினால் அடிபட்டுப் போகிறது.  

ஆரியம் இதற்கு  என்ன சொல்லப்போகிறது?

Link to comment
Share on other sites

நன்றி தோழர்  Kadancha,

மிகவும் பயனுறு தகவல். உங்கள் பங்களிப்பு நன்றியோடு என் நூலிலே குறிக்கப்பெறும்.

கிருஷ்ணன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனவெறி பிடித்த ஆரியம் தனது மேலாதிக்கத்தை நிறுவ அனைத்துக் குறுக்கு வழிகளையும் கையாளும். வரலாற்று ரீதியாக சிங்களப் பேரினவாதமும் இந்த வரையறைக்குள் அடங்கும். பெரியார் சொன்னதுபோல் தமிழகத்திலாவது அவர்களைத் தட்டி வைத்துக் கொண்டே இருந்தால்தான் தமிழன் இந்த மண்ணில் வாழ முடியும்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

திருவள்ளுவர் தமிழ் மரபில் வேதங்களை போற்றி அந்தணர் வேதங்களை காப்பதே மன்னவர் வேலை என்கிறார்.

திருவள்ளுவரும் வேதங்களும் - பார்ப்பனர்களும்

 
தமிழில் இலக்கணம் செய்த தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பார்ப்பனர்களே என்பது தமிழ் பாரம்பரிய வரலாறு. வள்ளுவரை - பஞ்சாங்கம் செய்யும் வள்ளுவர் சாதி எனச் சொல்வோரும் உண்டு.
 
 
thiruvalluvar.png
                                   திருவள்ளுவரின் 14ம் நூற்றாண்டு சிலை
தமிழர்களின் மூத்த தொல்குடி அந்தணர்கள் அல்லது பார்ப்பனர்கள் என மிகத் தெளிவாய் சிலப்பதிகாரம் கூறுகிறது.
 பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து  சிலம்பு 7. வரந்தரு காதை
 
திருக்குறளில் வள்ளுவர் வேதங்களையும், பார்ப்பனர்களையும் போற்றியே குறளில் கூறி உள்ளார்.
                                              download.jpg
 
திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார்
ஒரு அரசன் நல்லாட்சியை கூறும் அதிகாரம் -செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.
   
“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)
வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை
மோசமான ஆட்சியினால் வரும் கேடு  கொடுங்கோன்மை
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.
தமிழ் பகைவர்களான கிறிஸ்துவ பாதிர்கள், மற்றும் அவரோடு பொருள் பெற்று துணை நின்ற திராவிட அரசியல்வாதிகளின் விஷபோதனையாலும் பல உரைகள் பிதற்றலாய் எழுதப்பட்டுள்ளன, அதில் அறு தொழிலார் என்பதை ஆறு தொழில் என மட்டுமின்றி நூல் என்பதைக் கொண்டு நெசவு, அறுக்கும் நூல் என்றெல்லாம் வள்ளுவரையும், தமிழர் மெய்யியலையும் பழித்து உரைகள் வந்துள்ளன.

நாம் அறுதொழிலோர் எனில் சங்க இலக்கிய நடைமுறையில் காண்போம்.
 
பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.

 
 ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
 ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்”                      – பதிற்றுப்பத்து 24)
 கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்   (பதிற்றுப்பத்து  பாட்டு - 74
 அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் புறம்  -126-11
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு புறம் 361/4,5
அறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2

நல்ல அரசன் அந்தணர்களின் வேத அற நூல்களை உறுதுணையாய் ஆட்சி செய்ய வேண்டும், அரசன் மோசமான ஆட்சி செய்தால் அந்தணர் வேதம் மறப்பர் என வள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி கூறுகிறார்.

வள்ளுவர் பார்ப்பனர் வேதம் ஓதுதலை மறந்தாலும் குடி பிறப்பால் உள்ள ஒழுக்கம் பேண வேண்டும் என்கிறார்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (-134 ஒழுக்கமுடைமை)
 பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

 ஓத்து - பார்ப்பான், அந்தணர் என்பது சங்க இலக்கிய முறையில்  வேதம்  பிராமணர்ளை தான் குறிக்கிறது.
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை  - சிலப்பதிகாரம் 15-70
ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25
ஓத்து இலாப் பார்ப்பான் உரை      இன்னா நாற்பது 21

வள்ளுவர் குறளின் அந்தணர் எனும் சொல்லை மேலும் இரண்டு குறளில் கூறி உள்ளார்.
 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.                                   (8-கடவுள் வாழ்த்து)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.                   (30-நீத்தார் பெருமை)
இதில் "அந்தணர் என்போர் அறவோர்" எனும் குறளை தமிழ் மெய்யியல் பகைவர்கள் திரித்து வள்ளுவர் கூறியதை விட்டு கூறாததை சொன்னதாய் கேவலமாய் பயன்படுத்துவர்
நீத்தார் பெருமை - அதிகாரத்தில்; அந்தணர் என்பதை   துறவி எனும் பொருளில் வள்ளுவர்  ஆண்டுள்ளதை,  அந்தணர் குல மரபை  ஏற்க வில்லை என தமிழர் மரபை மீறி பொருள் கூறுவர்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தால் தான் பிறப்பு கடலைக் கடக்க இயலும் என உள்ளதை - எந்த தமிழ் அறிஞரும் சுட்டுவதே இல்லை; கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எனும் சொல் அந்தணர் கடவுளைக் குறிக்கும், 
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,

                ..............அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்  - பரிபாடல் 5ல் -இவை முறையே பிரம்மாவையும், சிவ பெருமானையும் குறிக்கும்
 திருவள்ளுவர் தமிழர் மெய்யியல் மரபில் அந்தணர் என்பதை கடவுள் என கடவுள் வாழ்த்து  அதிகாரத்திலும், நீத்தார் பெருமை  துறவியர் அதிகாரத்திலும் என பயன்படுத்தி உள்ளதை சரியாய் சொல்ல வேண்டும்

திருவள்ளுவர் வேததை பார்ப்பான் ஓத்து, அறுதொழிலார் நூல் எனச் சொன்னது போலவே மறை எனவும் பயன் படுத்தி உள்ளார்.

 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.                  (28-நீத்தார் பெருமை)

தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.

வடமொழி வேதங்கள் முனிவர்களால் இயற்கையிலிருந்து கேட்டு பெற்றவை, இப்பொருளிலேயே ஸ்ருதி என அழைக்கப்படும்.
வேதங்களிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் எழுந்த பாணினியின் இலக்கண வரைமுறையினுள் வாராதமையால் எழுத்தில் வடிக்க மாட்டார்கள், குரு மூலமாய் ஒத்து கூற ஓதிக் கொள்வதால் ஓத்து. எழுதாமையால் மறை, எழுதாக் கற்பு எனும் பெயரில் சங்க இலக்கியத்தில் காணலாம்.

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 5
எழுதாக் கற்பினின் சொல்லுள்ளும் குறுந்தொகை 156

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப.   தொல்காப்பியம்-செய் 480

 மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,  திருமுருகாற்றுப்படை2.

 பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.    தொல் -பொருள-கற் 4
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் - தொல்  பொருள். கற்:5/29
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.