Jump to content

ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு; 17 வயது மாணவியும் பலியான பரிதாபம்


Recommended Posts

போர்க்களமான ஸ்டெர்லைட் போராட்டம்! போலீஸ் தடியடியால் சிதறி ஓடிய பொதுமக்கள்; தூத்துக்குடியில் பதற்றம்

 
 

sterlite_protest_today_6_11304.jpg

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள்மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் தூத்துக்குடியில் பதற்றம் நிலவுகிறது. 

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் 21 கிராம மக்கள், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதால், தூத்துக்குடி மாநகரம் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர், இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவெடுத்து ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

sterlite_protest_today_5_11304.jpg

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  சப்-கலெக்டர் பிரசாத்  மற்றும் எஸ்.பி., மகேந்திரன் ஆகியோர்  தலைமையில் நடைபெற்ற வணிகர்கள் சங்கம், மீனவர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர் சமாதானக் கூட்டத்தில்  உடன்பாடு ஏற்பட்டு,  ஆட்சியர் அலுவலகத்தின் முன் நடைபெறுவதாக இருந்த முற்றுகைப் போராட்டம், பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள எஸ்.ஏ.வி., பள்ளி  மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு, பனிமய மாதா ஆலய வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மீனவர்கள் ஏற்க மறுத்தனர்.

sterlite_protest_today_4_11517.jpg

இதையடுத்து, அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டனர். அப்போது, காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்பு வேலிகளைத் தூக்கி எறிந்தனர். இதையடுத்து, காவல்துறையினர் பொதுமக்கள்மீது தடியடி நடத்தினர். பதிலுக்கு பொதுமக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் பெண் காவலர்கள், அருகில் உள்ள அலுவலகத்திற்குள் புகுந்தனர். தென் மண்டல டி.ஐ.ஜி., கபில் குமார் சாரத்கர் தலைமையில் குவிக்கப்பட்ட காவலர்கள் சிதறி ஓடினர். பொதுமக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

வீடியோவைக் காண க்ளிக் செய்க...

 

 

sterlite_protest_today_3_11599.jpg

பொதுமக்கள்மீது வஜ்ரா வாகனம்மூலம் 5 முறை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.  அதை பொருட்படுத்தாத பொது மக்கள், 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு சாலை வழியாகச் சென்றுவருகின்றனர். காவல்துறையினர் இல்லாததால், முக்கிய சாலைகளில் தடுப்புகள் எதுவும் இல்லை. நான்கு வழிச்சாலையில் உள்ள மேம்பாலத்தில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளனர். கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் செல்லாத வகையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தை நோக்கிச் செல்வதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில், காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்று கூறப்படுகிறது. போராட்டத்தால் தூத்துக்குடியே பதற்றமாக இருக்கிறது.

கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள்! 

 

இதனிடையே, கலெக்டர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழையவிடாமல் தடுக்க காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். இதனை போராட்டக்காரர்கள் தூக்கி எறிந்து கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்தனர். இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் பதற்றத்துடன் காணப்படுகிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/125633-sterlite-protest-gets-worse-police-attack-people-as-well-as-protestors.html

 

 

 

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு! ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்

 
 

sterlite_protest_today_6aa_12425.jpg

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி தூத்துக்குடியில் நூற்றுக்கணக்கான மக்கள் 144 தடையை மீறி பேரணியாகச் சென்ற பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதால் பதற்றம் நிலவி வருகிறது. காவல்துறையினர் நடத்தி துப்பாக்கி சூடுட்டில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

 

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 100 நாள்களாக பல்வேறு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் ஒருபகுதியாக ஆலையை நிரந்தரமாக மூடும் வரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக எதிர்ப்புக் குழுவினர் அறிவித்தனர். 

இதையடுத்து, டி.ஐ.ஜி., கபில்குமார் சாரட்கர் தலைமையில் 3 மாவட்டப் போலீஸார் தூத்துக்குடியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். ஆனால், தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டதால் போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. 

கூட்டத்தினைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீசிய போதிலும், கலைந்து செல்லாத கூட்டத்தினர் நடந்தே ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்தே சென்றனர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த கூட்டத்தினர் அலுவலக முகப்பில் உள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினர். 

sterlite_protest_today_6a_12066.jpg

தொடர்ந்து கூட்டம் அதிகரித்தபடியே இருப்பதால் தூத்துக்குடியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனிடையே போலீஸார் தாக்கியதிலும் துப்பாக்கிச் சூட்டிலும் பொதுமக்களில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதில் காவல் துறையினரும் காயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது. அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. துப்பாக்கி சூட்டில் போராட்டக்காரர் ஒருவர் பலியானதால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/125636-one-die-three-heavily-injured-as-sterlite-protest-intensifies.html

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட 6 பேர் பலி

  •  
collagejpg

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள்.

 

 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் உட்பட 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசடைவதாகவும், அதிலிருந்து வெளியேறும் மாசடைந்த புகையால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் 100-வது நாளை எட்டுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

அதன்படி, 21-ம் தேதி இரவு 10 மணி முதல் 23-ம் தேதி காலை 8 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி இன்று காலை 9 மணிமுதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பனிமய மாதா கோயிலில் இருந்து பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, பொதுமக்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதில், போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸார் பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸாரின் 3 இருசக்கர வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.

இதையடுத்து, அங்கு மேலும் பொதுமக்கள் கூடிய வண்ணம் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை கலைக்க முற்பட்டனர். இதனால், அப்பகுதியே வன்முறைக் களமாக காட்சியளிக்கிறது.

போலீஸ் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு காரணமாக பொதுமக்களில் பலருக்கு காயம் ஏற்பட்டது. மோதலைக் கட்டுப்படுத்த மதுரை, விருதுநகர் மாவட்ட காவல் துறையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்களைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில், ஒரு பெண் உட்பட 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு; 17 வயது மாணவியும் பலியான பரிதாபம்

 

2051aac2-f2ae-4328-afc9-77cade5f0f96jpg

துப்பாக்கிச் சூட்டில் பலியான வெனிஸ்டா (17)

 

 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசடைவதாகவும், அதிலிருந்து வெளியேறும் மாசடைந்த புகையால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் 100-வது நாளை எட்டுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி இன்று காலை 9 மணிமுதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பனிமய மாதா கோயிலில் இருந்து பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு மேலும் பொதுமக்கள் கூடிய வண்ணம் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை கலைக்க முற்பட்டனர்.

மேலும், போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 பேர் பலியானதாக தகவள் வெளியானது. தற்போது பலியானவர்கள் எண்ணிககி 9 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர். பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

வெனிஸ்டா, அந்தோனி, கிளாஸ்டன், வினிதா, ஜெயராம், மணிராஜ், சண்முகம், தமிழரசன், கந்தய்யா இறந்தவர்கள் ஆகியோர் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் ஆவர். இதில், வெனிஸ்டா 17 வயது மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் தெருத்தெருவாக காவல்துறையினர் சுற்றி வருவதால் கோரம்பள்ளம், அய்யனடைப்பு, சோரிஸ்புரம், மடத்தூர் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

The Hindu

http://tamil.thehindu.com/tamilnadu/article23959504.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

 
 

sterlite_protest_today_6aa_12425.jpg

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதால் பதற்றம் நிலவிவருகிறது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடுட்டில்7 பேர் பலியாகியுள்ளனர். சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவிவருகிறது.

 

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, கடந்த 100 நாள்களாக பல்வேறு கிராம மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தின் ஒருபகுதியாக, ஆலையை நிரந்தரமாக மூடும் வரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக எதிர்ப்புக் குழுவினர் அறிவித்திருந்தனர். 

sterlite_death_12187.jpg

இதையடுத்து, டி.ஐ.ஜி., கபில் குமார் சாரட்கர் தலைமையில், 3 மாவட்டப் போலீஸார் தூத்துக்குடியில் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். ஆனால், தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டதால், போலீஸாரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீசியபோதிலும், கலைந்து செல்லாத கூட்டத்தினர், ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்தே சென்றனர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தவர்கள், அலுவலக முகப்பில் உள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அதோடு, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்துக் கொளுத்தினர். 

sterlite_death_1_15247.jpg

தொடர்ந்து கூட்டம் அதிகரித்தபடியே இருப்பதால், தூத்துக்குடியில் பதற்றம் அதிகரித்துவருகிறது. இதனிடையே, போலீஸார் தாக்கியதிலும் துப்பாக்கிச் சூட்டிலும் பொதுமக்களில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதில் காவல் துறையினரும் காயம் அடைந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்த 200 இருசக்கர வாகனங்கள், 20 துறைகள் சம்பந்தப்பட்ட வாகனங்களை எரித்த போராட்டக்காரர்கள், அருகில் இருந்த ஸ்டெர்லைட் குடியிருப்பில் புகுந்தனர். அங்கிருந்த வாகனங்களை அவர்கள் தீவைத்து எரித்தனர். பின்னர் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதுவரைக்கும் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் இரண்டு பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  பலர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை உயரும் என்ற அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில், போராட்டக்காரர் 9 பேர் பலியானதால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் விவரம்:

1) ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள் அதிகாரம்)

2) கிளாஸ்டன்  (லூர்தம்மாள் புரம்- தூத்துக்குடி) 

3) கந்தையா  (சிலோன் காலனி - தூத்துக்குடி) 

4) வெனிஸ்டா (மாணவி- தூத்துக்குடி) 

5) தமிழரசன்  - புரட்சிகர இளைஞர் முன்னணி-  (குறுக்குசாலை - தூத்துக்குடி) 

6) சண்முகம்  (மாசிலாமணி புரம்- தூத்துக்குடி) 

7) அந்தோணி செல்வராஜ்  (தூத்துக்குடி) 

? மணிராஜ் (தாமோதர் நகர்- தூத்துக்குடி)

9வது நபரின் பெயர் இதுவரை தெரியவில்லை. காயம் அடைந்தோர் 65 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/125636-one-die-three-heavily-injured-as-sterlite-protest-intensifies.html

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம்; அமைதி காக்க வேண்டும்: தமிழக அரசு வேண்டுகோள்

 

 
eps%20editjpg

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் தமிழக அரசு சட்டபூர்வமான மேல் நடவடிக்கை எடுக்கும். இதை ஏற்று தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரு பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு திமுக, மதிமுக, தேமுதிக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக  தமிழக அரசின் சார்பில் இன்று வெளியிட்ட அறிக்கையில், “வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில் அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகின்றது. கடந்த 23.3.2013-ல் அந்த ஆலையிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில், தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 29.3.2013 அன்று உத்தரவிட்டார். இதனை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முதன்மை அமர்வு முன்பு தொழிற்சாலை முறையீடு செய்தது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், தொழிற்சாலையை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்து, அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மூடுதல் உத்தரவை ரத்து செய்து தொழிற்சாலையை இயக்குவதற்கு 31.5.2013 அன்று தனது உத்தரவில் அனுமதி அளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, ஜெயலலிதா 2013-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இவ்வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது. இந்நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவதற்கான உரிமம் 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இந்நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையின் 2018-2023 ஆண்டுக்கான உரிமத்தைப் புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பம் செய்தது. இதனை பரிசீலனை செய்ததில், பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது.

1. தொழிற்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

2. உப்பார் ஆற்றங்கரை மற்றும் தனியார் நிலங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தாமிர உருக்குக் கழிவுகளை அகற்றுவதற்கும், உருக்குக் கழிவுகள் உப்பாற்றில் கலப்பதை தடுப்பதற்கு தடுப்புச் சுவர் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

3. தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கையாள்வதற்கான அங்கீகாரம் முடிவடைந்து விட்டது. ஆனால், தொழிற்சாலை தீங்கு விளைவிக்கும் மற்றும் பிற கழிவுகள் விதிகள் 2016-ன்கீழ் அங்கீகாரம் பெறாமல், கழிவுகளை தொடர்ந்து வெளியேற்றி வந்துள்ளது.

4. தொழிற்சாலை காற்றின் தரத்தை அறிவதற்கு நைட்ரஸ் ஆக்ஸைடு, மிதக்கும் துகள்கள் மற்றும் சல்ஃபர்-டைஆக்ஸைடு போன்ற காரணிகளை வாரிய ஆய்வகத்தில் பரிசோதனை செய்யும்போது, ஆர்சனிக் போன்ற கன உலோகக் காரணியையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், காற்றில் ஆர்சனிக் இல்லை என்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

5. ஜிப்சம் கழிவுகளை சேகரிப்பதற்கான குளங்கள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியதை தொழிற்சாலை நடைமுறைப்படுத்தவில்லை.

மேற்கூறிய காரணங்களினால், உரிமம் புதுப்பிப்பதற்கான தொழிற்சாலையின் விண்ணப்பத்தினை 9.4.2018 அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நிராகரித்தது. மேலும், வாரியத்தின் முன் அனுமதி இல்லாமல் தொழிற்சாலை இயக்கத்தினை தொடங்கக் கூடாது என்று 12.4.2018 நாளிட்ட நடப்பாணையின் மூலம் இந்நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9.4.2018 தேதியிட்ட நிராகரித்தல் ஆணையை எதிர்த்து, இந்நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இம்மனு மீதான விசாரணையின்போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் வாதிட்ட தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைவழக்கறிஞர், இத்தொழிற்சாலையை மீண்டும் இயக்க அனுமதிக்கக் கூடாது என கடுமையாக வாதிட்டார்.

தமிழக அரசு பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழு மற்றும் சில அமைப்புகள் சார்பில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவதென முடிவு செய்து சுமார் 20 ஆயிரம் நபர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, அக்கூட்டத்தினர் வன்முறையில் ஈடுபட்டு, காவல்துறை வாகனங்களைத் தீயிட்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் கல்வீசித் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

இக்கூட்டத்தினரின் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு, கூடுதலாக காவல் துறையினர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் தமிழக அரசு சட்டபூர்வமான மேல் நடவடிக்கை எடுக்கும். இதனை ஏற்று மக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/article23960166.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது: அமைச்சர் ஜெயக்குமார்

 

 
WhatsApp%20Image%202018-05-22%20at%20122

 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியதால், போலீஸாரின் துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது என, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) 144 தடை உத்தரவை மீறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, போலீஸார் தடியடி நடத்தி பொதுமக்களைக் கலைக்க முற்பட்டனர்.

 

இதையடுத்து, அங்கு மேலும் பொதுமக்கள் கூடிய வண்ணம் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களைக் கலைக்க முற்பட்டனர். மேலும், போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்களில் ஒரு பெண் உட்பட 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  “2013-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், அதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் ஆலையைத் திறக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழக அரசு எந்தவித அனுமதியும் வழங்கவில்லை.

தமிழக அரசு மக்களுடைய உணர்வை மதிக்கின்ற அரசாக உள்ளது. மக்களின் உணர்வுக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். பசுமை தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் ஆலைக்கு எதிரான வாதங்களை தமிழக அரசு கடுமையாக முன்வைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கக்கூடாது என பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

மக்கள் விரும்புகின்ற எந்தவொரு திட்டத்திற்கும் தமிழக அரசின் ஆதரவு உண்டு. மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு அரசின் ஆதரவு இல்லை. இந்த நிலையில் வன்முறை என்பது எதற்குமே தீர்வாகாது. வன்முறையால் சாதித்து விடலாம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மக்களின் போராட்டம் ஜனநாயகத்துக்கு உட்பட்டது என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே சென்று கலவரம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால், துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

துப்பாக்கிச் சூடு தமிழக அரசின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதா என்பது விசாரணைக்குப் பின் தான் உண்மை நிலை தெரியவரும். தொலைக்காட்சிகளில் இதுகுறித்த செய்தி ஒளிபரப்ப தடை செய்யுமாறு தமிழக அரசு எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதனை இருட்டடிப்பு செய்ய வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. யார் செய்தாலும் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. தூத்துக்குடியில் கலவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்தும் கலவரம் நடைபெற்றுள்ளது கேள்விக்குறியாக உள்ளது. இதுதொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பது குறித்து அரசு தான் முடிவெடுக்கும்.

நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளபோது இதுபற்றி பேச முடியாது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. தமிழக அரசின் நிலைப்பாடும், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிலைப்பாடும் ஒன்று தான். எந்த சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து பின்னர் தெரியவரும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்படும்.

துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவம் குறித்து முதல்வர் வருந்தினார். இந்த கலவரம் குறித்த அறிக்கையை அரசு வெளியிடும்'' என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article23958769.ece

 

 

 

ஸ்டெர்லைட் போராட்டம்; அசம்பாவிதத்திற்கு முழு காரணம் உளவுத்துறையின் தோல்வி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

 

 
download%207jpgjpg

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற அசம்பாவிதத்திற்கு முழு காரணம் தமிழக அரசின் கையாலாகாத்தனமும், உளவுத்துறையின் தோல்வியும் தான் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) 144 தடை உத்தரவை மீறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, பொதுமக்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

 

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டனர். இதில், போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.இதில் போலீஸார் பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸாரின் 3 இருசக்கர வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.

இதையடுத்து, அங்கு மேலும் பொதுமக்கள் கூடிய வண்ணம் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை கலைக்க முற்பட்டனர். இதனால், அப்பகுதியே வன்முறைக் களமாக மாறியது.

இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பக்கத்தில், “நீண்ட நாட்களாக தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருவதை தமிழக அரசு கண்டுகொள்ளவும் இல்லை, சுமுகத் தீர்வு காணவும் இல்லை. வழக்கம்போல் மக்கள் போராட்டத்தை முடக்க நினைத்த தமிழக அரசின் அலட்சியத்தாலேயே, இன்று மக்கள் பேரணி நடத்தி, அது துப்பாக்கிச் சூடு வரை சென்றுள்ளது.

இன்றைய பேரணி பற்றி முன்பே அறிந்த காவல்துறை, எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது. இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற அசம்பாவிதத்திற்கு முழு காரணம் தமிழக அரசின் கையாலாகாத்தனமும், உளவுத்துறையின் தோல்வியும் தான். இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை அரசு உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் மக்களின் நலனுக்காக நடைபெறும் போராட்டங்கள் ஜனநாயக ரீதியிலும், அறவழியிலும் நடந்திடும் வகையில் எதிர்காலத்திலாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article23957937.ece

Link to comment
Share on other sites

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ‘அரச பயங்கரவாதம்’: தமிழக அரசை விளாசிய ராகுல் காந்தி

 

 
Rahul%20Gandhi

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி : கோப்புப்படம்

தமிழகத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 9 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது மாநில அரசே மக்களைக் கொன்று குவிக்கும் அரசு பயங்கரவாதச் செயலுக்கு கொடூரமான உதாரணமாகும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து தமிழக அரசைச் சாடியுள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

 
 

தமிழகத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 9 பேரை போலீஸார் துப்பாக்கி சூடு நடத்திக் கொன்று இருக்கின்றனர். இது ஒரு மாநில அரசே தனது மக்களைக் கொன்று குவிக்கும் அரச பயங்கரவாதத்துக்கு கொடூரமான உதாரணமாகும். அநீதிக்கு எதிராகப் போராடி, நீதி கேட்ட மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்து வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் என அனுதாபத்தையும், காயம் அடைந்தவர்களுக்கும் விரைவில் குணமடைய பிரார்த்தனையும் செய்கிறேன்

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் ஆலையைச் சுற்றியுள்ள குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசு அடைந்து வருவதாகவும், அதிலிருந்து வெளியேறும் மாசடைந்த புகையால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் 100-வது நாளை எட்டியது. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பனிமய மாதா கோயிலில் இருந்து பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட மக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு மேலும் பொதுமக்கள் கூடிய வண்ணம் இருந்ததால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை கலைக்க முற்பட்டனர்.

மேலும், போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர். பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

http://tamil.thehindu.com/india/article23960913.ece?homepage=true

துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணை பிறப்பித்தது யார்? - ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து கொதிக்கும் கமல்

 

ஸ்டெர்லைட் போரட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன்

 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நடந்த மக்கள் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 10-ம் வகுப்பு மாணவி வெனிஸ்டா உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் தமிழக அரசு மற்றும் காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தவிர்க்க முடியாத சூழலில்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ``அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்தவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. சட்ட திட்டங்களுக்கு உட்படாமல், உரிமம்கூட இல்லாமல் அந்தப் பகுதியை மாசுபடுத்திக்கொண்டிருக்கும் அந்த ஆலைகளுக்கு ஆதரவாகச் சட்டத்தை ஏவுவது என்பது பொறுக்க முடியாத ஒன்று. வணிக வெற்றிக்காக மனித உயிர்கள் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணம் கண்டித்தக்கது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் பல்வேறு வயதுடைய 10 பேர் இறந்துள்ளார்கள் என்பதுதான் எனக்கு வந்த செய்தி. அதில், வெனிஸ்டா என்ற பள்ளி மாணவியும் அடக்கம். அவர், தனது தேர்வு முடிவுக்காகக் காத்துக்கொண்டிருந்தவர். 

இந்தச் சோகத்தை, துரோகத்தைத் தமிழகம் மறக்காது. வன்முறை ஏற்பட்டது என்ற ஒரு காரணத்தைக் கூறி, நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினோம் என்ற ஒரு காரணத்தைச் சொல்லப்போகிறார்கள். என்னுடைய கேள்வியெல்லாம் இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தலாம் என ஆணை பிறப்பித்தவர் யார்? அதைத் துப்பாக்கிச்சூடு வரை கொண்டு போகலாம் என அனுமதி அளித்தது யார்? இது மக்கள் நீதி மய்யத்தின் கேள்வி மட்டுமல்ல; தமிழகத்தின் கேள்வி. இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். யாராவது ஓர் அதிகாரியைப் பதவி நீக்கம் செய்வது மட்டும் போதாது. மேலிடத்திலிருந்து ஓர் உத்தரவு வராமல் இந்தச் சம்பவம் நடக்க வாய்ப்பில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற அரச வன்முறையை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஆலையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதுதான் இன்றைய நிலை’’ என்றார்.  

https://www.vikatan.com/news/tamilnadu/125678-mnm-chief-kamal-condemns-police-firing-in-sterlite-protest.html

Link to comment
Share on other sites

ஸ்டெர்லைட் போராட்டத்தால் அதிர்ந்த ’முத்து நகரம்’ (புகைப்படத் தொகுப்பு)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போலீஸ் தடையை மீறி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பெண் உள்பட ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆலைக்கு மிக அருகில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று போரட்டம் மேலும் தீவிரமடைந்தது. அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு.

ஸ்டெர்லைட் போராட்டத்தால் அதிர்ந்த 'முத்து' நகரம் (புகைப்படத் தொகுப்பு) ஸ்டெர்லைட் போராட்டத்தால் அதிர்ந்த 'முத்து' நகரம் (புகைப்படத் தொகுப்பு) ஸ்டெர்லைட் போராட்டத்தால் அதிர்ந்த 'முத்து' நகரம் (புகைப்படத் தொகுப்பு) ஸ்டெர்லைட் போராட்டத்தால் அதிர்ந்த 'முத்து' நகரம் (புகைப்படத் தொகுப்பு) ஸ்டெர்லைட் போராட்டத்தால் அதிர்ந்த 'முத்து' நகரம் (புகைப்படத் தொகுப்பு) ஸ்டெர்லைட் போராட்டத்தால் அதிர்ந்த 'முத்து' நகரம் (புகைப்படத் தொகுப்பு) ஸ்டெர்லைட் போராட்டத்தால் அதிர்ந்த 'முத்து' நகரம் (புகைப்படத் தொகுப்பு) ஸ்டெர்லைட் போராட்டத்தால் அதிர்ந்த 'முத்து' நகரம் (புகைப்படத் தொகுப்பு) ஸ்டெர்லைட் போராட்டத்தால் அதிர்ந்த 'முத்து' நகரம் (புகைப்படத் தொகுப்பு) ஸ்டெர்லைட் போராட்டத்தால் அதிர்ந்த 'முத்து' நகரம் (புகைப்படத் தொகுப்பு) ஸ்டெர்லைட் போராட்டத்தால் அதிர்ந்த 'முத்து' நகரம் (புகைப்படத் தொகுப்பு)

 

https://www.bbc.com/tamil/india-44208298

Link to comment
Share on other sites

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 11 பேரின் குடும்பங்களுக்கு ஆளுநர் இரங்கல்!

 
 

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இன்றைய போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகத்தைப் பரபரக்க வைத்துள்ளது. மேலும் பலரும் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே,  துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தூத்துக்குடியில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து எனது மனம் துக்கத்தால் நிறைந்துள்ளது. உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த இக்கட்டான நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் மாநிலத்தில் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். 

https://www.vikatan.com/news/tamilnadu/125681-governor-gives-condolences-for-sterlite-firing-death.html

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் உண்மையான எதிரி யார் என்று இன்னமும் டமில்சுக்கு புரியுதில்லை.

புலிக்கு எதிரா புத்தகம் எழுதினால் 
இந்திய புலனாய்வு அதிகாரியே வெளியிட வருவார்.

யார் ஊட்டி வளர்க்கிறார்கள் ?
ஏன் வளர்க்கிறார்கள் ? 

Link to comment
Share on other sites

ஸ்டெர்லைட் போராட்டம்: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

 

 
protestcollage

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உட்பட 50 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோருக்கு வயிற்றுப் பகுதிக்கு மேல்தான் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளன.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியது. இதை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும், ஏராளமான காவல்துறையின் தடுப்புகளையும் தாண்டி ஆயிரக்கணக்கான கிராம மக்கள் திரண்டு வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

போராட்டக்காரர்களுக்கும், அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறைக்கும் இடையே மோதல் வெடித்ததை அடுத்து, போராட்டம் வன்முறையில் முடிந்தது.

போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உயிரிழந்த 10 பேரில் 3 பேரின் அடையாளம் முன்னதாக தெரிய வந்தது. ஒருவர் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன்  என்பதும், மற்றொருவர் லூர்தமாள்புரம் கிளாஸ்டின் என்பதும் தெரிய வந்துள்ளது.

ரயில்வே காலணி பகுதியைச் சேர்ந்த வெனிஸ்டா என்ற பெண்ணும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி பலியாகியுள்ளார். இவர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் விவரம்
1. ஜெயராமன்
2. வெனிஸ்டா
3. கிளாஸ்டின்
4. கந்தையா
5. தமிழரசன்
6. சண்முகம்
7. அந்தோணி செல்வராஜ்
8. மணிராஜ்
9. வினிதா

காவல்துறையின் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் பெண்கள் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

காவல்துறையினர், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசியும், தடியடி தடத்தியும் அவர்கள் கலைய மறுத்துவிட்டனர். இதனால், போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால், 50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் தீக்கிரையாகின. இந்த வன்முறையில் இரண்டு போலிஸ் ஜீப்களுக்கு தீ வைக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

காவல்துறையின் தடியடியால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புகளுக்கும் தீ வைத்தனர்.

தூத்துக்குடியில் நிலைமையைக் கட்டுக்குள் வைக்க மதுரை மற்றும் மணிமுத்தாறு பகுதிகளில் இருந்து கூடுதல் காவல்துறை படைகள் வரவழைக்கப்பட்டன.

சுமார் 12.50 மணியளவில், போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்பகுதியே வன்முறைக் களமானது. 

சமூக வலைத்தளங்கள் மூலமாக, போராட்டம் குறித்து தகவல் பரவி, ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் திரண்டதால், நிலைமை கட்டுக்கடங்காமல் போனதாகக் கூறப்படுகிறது.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்ஏவி மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தடையை மீறி இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

காவல்துறை எதிர்பாராத வகையில், மடத்தூர், பனிமயமாதா தேவாலயம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஒன்றுதிரண்ட பக்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நாலா திசைகளில் இருந்தும் திரண்டு வந்தனர். இதனால், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இதே போல, தமிழகத்தில் சென்னை, சேலம் உட்பட பல பகுதிகளிலும், துப்பாக்கிச் சூடு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்தன.

http://www.dinamani.com/tamilnadu/2018/may/22/ஸ்டெர்லைட்-போராட்டம்-போலீஸ்-துப்பாக்கிச்-சூட்டில்-பலி-எண்ணிக்கை-10-ஆக-உயர்வு-2924781.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி.
100 நாட்கள் அமைதியாக போராடிய மக்களுக்கு...  நியாயத்தை பெற்றுக்  கொடுக்காமல்,  
அந்நிய நாட்டு, மக்களை போரில் கொல்வது போல்,  சொந்த நாட்டு மக்களையே....
நெஞ்சிலும், கழுத்திலும்....   துப்பாக்கியால்  சுட்டுக் கொன்ற செயலை  மன்னிக்க முடியாது.
இறந்தவர்களுக்கு... ஆழ்ந்த அனுதாபங்கள். ?

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்

இப் படுகொலை  திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. சிவில் உடுப்பில் உயரத்தில் நின்று சுட்டுள்ளார்கள். வேணுமென்றால்  காலுக்கு கீழே சுட்டிருக்கலாம். மோடிக்கு கறுப்பு பலூன் பறக்கவிட்டதற்கு  பதிலடியாக இருக்கலாம்.  பத்துபேரை கொல்வதென்று ஏற்கனவே முடிவெடுத்துள்ளார்கள் போல் தெரிகின்றது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழ்ந்த அனுதாபங்கள்  . இதில் கொல்லப்பட்ட கந்தையா என்பவர் சிலோன் காலனி - தூத்துக்குடியினைச் சேர்ந்தவர். சிலோன் காலனியில் இருப்பவர்கள் ஈழத்து அகதிகளா?

Link to comment
Share on other sites

போராட்டத்தில் பங்கேற்காத ஜான்சி துப்பாக்கிச் சூட்டில் தலை சிதறி இறந்தாரா? #Ground_Report

 
குடும்பப் படத்தில் ஜான்சி Image captionதுப்பாக்கிச் சூட்டில் பலியான ஜான்சி கைக்குழந்தையுடன், குடும்பப் புகைப்படம்.

உடைந்த மண்டை ஓட்டின் ஒரு துண்டும், சிதறிய மூளையும் தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கிராமத்தின் நுழைவுப்பகுதியில் கிடந்தன.

அவை, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மே22 நடந்த போராட்டத்தில் கலந்துகொள்ளாத ஜான்சியின் மண்டை ஓடும், மூளையும் என்கிறார்கள் திரேஸ்புர கிராமவாசிகள்.

தன்னுடைய வீட்டில் இருந்து அவரது சகோதரி வீட்டுக்கு செல்வதற்காக வெளியேவந்த சிலநிமிடங்களில் துப்பாக்கிச்சூட்டிற்கு ஜான்சி(48) பலியானார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

மாவட்ட ஆட்சியரின் இல்லம் அமைந்துள்ள இடத்தில் இருந்து வெறும் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் திரேஸ்புரம் ஒரு மீனவர் பகுதி. போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர், திரேஸ்புரத்திற்குள் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் நடுக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை என்கிறார்கள் மக்கள்.

''பத்து நிமிஷத்துல ஜான்சி கீழே கிடக்கு. போலீஸ் வண்டியில வந்த நாலு பேரு, நாயை தூக்கறமாதிரி இழுத்து வண்டியில போட்டுட்டு போய்டாங்க,'' என சம்பவத்தை நேரில் பார்த்த சுதாகர்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)அச்சத்துடன் தெரிவித்தார்.

காலை முதல் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சிலர் வீடு திரும்பிய நேரத்தில் போலீஸ் வாகனம் திரேஸ்புரம் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், ஜான்சி தவிர மேலும் ஒரு இளைஞரையும் துப்பாகியால் சுட்டதாகவும் உள்ளுர்வாசிகள் கூறுகிறார்கள்.

ஸ்டெர்லைட்

அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் ஜான்சியின் கணவர் ஜெசுபாலனிடம்(50) பேசமுடியவில்லை. அவரது மூன்று மகள்களும் தாயை இழந்த தவிப்பில் அவரைக் கட்டி அணைத்துக் கதறிய காட்சி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

''போலீஸ் வந்து போன சில மணி நேரம் கழித்துதான் ஊர் மக்கள் வெளியே வந்தோம். ஜான்சியை காணலனு ஜேசுபாலன் சொல்லவும், பக்கத்துக்கு வீடுகள்ல விசாரிச்சோம். நேர்ல பாத்தவுங்க சொன்னப்பதான் ஜான்சி செத்திடுச்சு ஜேசுபாலனுக்கு தெரியும். ஜி எச்ல வச்சிருக்காங்கனு தகவல் வந்துச்சு. போய் பாத்தா, இறந்தது ஜான்சிதான். அவரோட தலையில் ஒரு பகுதி இல்லை. ஒரு கண் இல்லை,'' என சம்பவத்தை விவரித்தார் ஜான்சியின் உறவினர் ஜான்சன்.

ஜான்சி போரட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகிவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்கிறார் ஜான்சன்.

''ஜான்சி தலை சிதறிப்போனத பாத்தா, ரொம்பவும் பக்கத்தில் நின்னுதான் சுட்டுருக்காங்கனு தெரியும். நாங்க அமைதி முறையில போராட வந்தோம், எங்களை அடிச்சாங்க. ஜான்சி எதிலயும் கலந்துக்கிடல. ஆன அவுங்கள ஏன் சுட்டாங்க,'' என குடும்ப உறவினரை இழந்த வருத்தத்திலும், கோபத்திலும் ஜான்சன் பேசினார்.

பலர் கைது, காணவில்லை...

திரேஸ்புரம் பகுதியில் காவல்துறையினர் நுழைந்து பல இளைஞர்களை இழுத்துச் சென்றதாகவும் கிராமவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

தனது தம்பியை தேடிப் பல மணிநேரமாக அலைந்துவிட்டு, காவல்துறையிடம் புகார் கொடுக்க மனமற்றவராக இருக்கிறார் ராஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

''எங்க ஊர்ல பல பேரை காணல. போலீஸ் ஸ்டேஷன்ல இருப்பாங்கனு தகவல் வருது. நாங்க தேடி போன அவுங்கள அடிப்பாங்கனு பயமா இருக்கு. அமைதியா போராட்டம் நடத்தினோம். வன்முறையைத் தூண்டியது காவல்துறைதான்,'' என்கிறார் ராஜா.

திரேஸ்புரத்தில் நடந்த சாலை மறியல் மற்றும் கல்வீச்சு சம்பவங்களை தடுப்பதற்காகவே காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது என தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் டிகே ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

''ஒரு பகுதியினர் திரேஸ்புரம் சென்று சாலை மறியலில் ஈடுபட்டு பொது மக்களின் உடைமைக்கும், உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் கல் வீச்சில் ஈடுபட்ட போது, காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியும், கலைந்து செல்லாமல் வன்முறையில் ஈடுபட்டதால், தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பின் துப்பாக்கி பிரயோகம் செய்து கலைந்து போகச் செய்தனர்,'' என டிகே ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் பற்றிய அறிவிப்பை கொடுத்திருந்தால், போராட்டத்தில் ஈடுபடாத ஜான்சி நிச்சயம் வீட்டுக்குள் சென்றிருப்பார்; இன்று ஜான்சியின் இழப்பு அவரது குடும்பத்தில் மட்டுமல்ல, அந்த சம்பவத்தை நேரில் பார்த்த பலர், துப்பாக்கிச் சூட்டின் போது தவித்துபோன குழந்தைகள் என திரேஸ்புரத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உணரப்படுகிறது என்கிறார்கள் உள்ளுர்வாசிகள்.

(திரேஸ்புரத்தில் பிபிசிதமிழிடம் பேசிய பலரும் பாதுகாப்பு கருதி தங்களது பெயர்களை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்).

https://www.bbc.com/tamil/india-44220223

Link to comment
Share on other sites

போராட்டத்தைத் தூண்டியதாக 10 பேர் கைது - அடங்க மறுக்கும் தூத்துக்குடி போராட்டம்

 

நேற்று, தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தைத் தூண்டியதாகக் கூறி, 10-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

தூத்துக்குடி

 

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 100 நாள்களாக தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். தங்களின் 100-வது நாள் போராட்டத்தின் அடையாளமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெறும் என முன்னதாக அறிவித்திருந்தனர். இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முன் தினம் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை மீறி, தங்களின் போராட்டத்தை நடத்த மக்கள் முடிவுசெய்தனர். இதனால், பாதுகாப்புப் பணிகளுக்காக 2000 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டக்காரர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கும்போது, அவர்களை காவல்துறை தடுத்ததால் போராட்டம் கலவரமாக மாறத் தொடங்கியது. வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது, கல்வீச்சு, கண்ணீர்ப்புகை குண்டுகள் ஆகிய சம்பவங்களும் நடைபெற்றன. இதில், 67 இருசக்கர வாகனங்கள், 42 கார்கள் , ஒரு போலீஸ் வாகனம் மற்றும் 2 ஆம்புலன்ஸ் என மொத்தம் 110 வாகனங்கள் எறிக்கப்பட்டன. அதன்பின், கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, அனைத்துத் தலைவர்களும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று இரவு, போராட்டத்தைத் தூண்டியதாகக் கூறி, தூத்துக்குடியில் 10-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர். 

pro_09091.jpg

இந்நிலையில், போராட்டக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்குக் கண்டனம் தெரிவித்து, இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் வணிகர் சங்கப் பேரவை சார்பில் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. பிற மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் பேருந்துகள்,மாவட்டத்தின் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் கல்லூரிகளில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. மறு தேர்வுகள் பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களைப் பார்வையிடவும் ஆறுதல் கூறவும், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், ம.தி.மு.க தலைவர் வைகோ, பி.ஆர். பாண்டியன் ஆகியோர் இன்று தூத்துக்குடிக்கு வர உள்ளனர். 

https://www.vikatan.com/news/tamilnadu/125722-10-people-arrested-for-protesting-in-thuthukudi.html

Link to comment
Share on other sites

ஸ்டெர்லைட் போராட்டம்: கள நிலவரம்

 

 
eps%20editjpg

முதல்வர் பழனிசாமி | கோப்புப் படம்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயி ரிழந்தனர். தடியடி, கல்வீச்சு சம்பவங்களில் 12 போலீஸார் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாகனங்கள் கொளுத்தப்பட்டன. தூத்துக்குடி நகரமே கலவர காடாக மாறியது. பதற்றம் நீடிப்பதால் பெருமளவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நிகழ் நேரப் பதிவு:

 

11.05 AM: ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் 2-வது நாளாக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை . துணை முதல்வர், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலர் மற்றும் டிஜிபி பங்கேற்பு..

11.00 AM: நெல்லை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இடிந்தக்கரை, கூத்தன்குழியை உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் போராட்டம்

10.30 AM: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி அளித்தது யார் என கேட்டு சங்கரசுப்பு, பார்வேந்தன், காளிமுத்து உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழு சார்பாக முறையீடு.

10.15 AM: தூத்துக்குடி மாவட்டத்திற்கு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு இன்று மாலை 1 மணி - மே 25 காலை 8 மணி வரை நீட்டிப்பு

10.10 AM: தூத்துக்குடியில் நேற்று நடந்த பயங்கர கலவரத்தை அடுத்து, தென்மாவட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். விரிவாக வாசிக்க: தூத்துக்குடியில் தென்மாவட்ட போலீஸ் குவிப்பு

10.00 AM: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

9.50 AM: சென்னை மெரினா கடற்கரை, டிஜிபி அலுவலகத்திற்கு 3 கூடுதல் ஆணையர் தலைமையில் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

9.45 AM: சென்னை மெரினா கடற்கரை, டிஜிபி அலுவலகத்திற்கு 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக வந்த தகவலை அடுத்து நடவடிக்கை.

9.00 AM: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் கலவரமாக மாறியதற்கு, போதிய எண்ணிக்கையில் போலீஸார் இல்லாததும், போராட்டம் குறித்த உளவுத் துறையினர் சரியான தகவல் தராததே காரணம் எனக் கூறப்படுகிறது. விரிவாக வாசிக்க: உளவுத்துறையினர் தகவல் இல்லாததே கலவரத்துக்கு காரணமா?

http://tamil.thehindu.com/tamilnadu/article23966065.ece?homepage=true

Link to comment
Share on other sites

'ஸ்டெர்லைட்டை மூடினால்தான் உடலை வாங்குவோம்'- சொந்தங்களைப் பறிகொடுத்த உறவினர்கள் கொந்தளிப்பு

 

1_10376.jpg

``ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவிக்காவிட்டால் உடலை வாங்க மாட்டோம். துப்பாக்கிச்சூடு நடத்தக் காரணமான ஆட்சியர் மீதும் காவல்துறை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என துப்பாக்கிச் சூட்டில் பலியான உறவினர்கள் கொந்தளிப்புடன் கூறினர்.

 

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நேற்று தூத்துக்குடி பனிமய மாதா ஆலைய வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பேரணியாகச் சென்றபோது போலீஸாருக்கும் போராட்ட மக்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில் மக்கள், போலீஸார்மீது கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டு ஆட்சியர் அலுவலகத்தில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தி, 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 110 வாகனங்கள் முற்றிலும் சேதமானது. 

வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி ஆகி உள்ளனர். தொடர்ந்து, நேற்று இரவில் வன்முறையைத் தூண்டியதாக 10க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மருத்துவமனை முன்பு இறந்தவர்களின் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ``துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரி ஆகியோர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்படும் என ஆட்சியர் எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே உடலைப் பெற்றுக் கொள்வோம்" என ஆவேசமாக கூறினர்.

2_10575.jpg

மருத்துவமனை வளாகத்தில் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மருத்துவமனையைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 3 தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து 2-வது நாளாக இன்றும் தூத்துக்குடி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. தூத்துக்குடி மாநகரம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/125728-sterlite-protestors-refuse-to-get-the-bodies-of-the-deceased.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.