Jump to content

Recommended Posts

இது சிக்ஸர்களின் காலம்

 
 

 

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே பாவிக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியச் சிறுவனும் வெகு இயல்பாக கிரிக்கெட் விளையாட துவங்கிவிடுகிறான். ஊருக்கு நான்கைந்து கிரிக்கெட் அணியை நம்மவர்கள் நடந்திக்கொண்டிருக்கிறார்கள். கூட்டு விளையாட்டான கிரிக்கெட் பல மனிதர்களையும் உணர்வுபூர்வமாக பிணைக்கிறது. எவ்வித சுய அடையாளமுமற்று கிரிக்கெட் என்ற சங்கிலியால் இந்தியர்கள் இணைகிறார்கள். கிரிக்கெட் இந்திய மக்களிடம் உணர்வுகளுடன் நேரடியாக தொடர்புடையது. கிரிக்கெட் வீரர்கள் நட்சத்திரங்களாக ஒளிர்கிறார்கள்.

முன்பெல்லாம் ஐம்பது ஓவருக்கு 250 ரன்கள் சேர்ப்பதே பெரிய விஷயமாக கருதப்பட்டது. இன்றைக்கு ஒருநாள் போட்டிகளில் வெகு இயல்பாக 400 ரன்களை கடக்கிறார்கள். பவர் பிளே, ஃப்ரீஹிட், இருபது ஓவர் கிரிக்கெட் என பல புதிய முறைகள் கிரிக்கெட் விளையாட்டில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது மேலும் மேலும் உணர்வுகளை சீண்டியபடியே இருக்கிறது. முன்காலங்களில், நின்று நிதானித்து இவ்விளையாட்டில் ஈடுபட்ட வீரர்களை இன்றைக்கு களத்தில் பார்க்க முடிவதில்லை. எல்லோரும் இளையவர்கள். துடிப்புமிக்கவர்கள். சாதனைகளை விரைவாக அடையத் துடிக்கும் சுறுசுறுப்புமிக்கவர்கள்.

இன்றைய கால கிரிக்கெட் ரசனையிலேயே மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு நிதானமாக கிரிக்கெட் போட்டியை பார்வையிட்ட மக்கள் இன்று பரபரப்பையும், சீட்டின் நுனியில் குதித்துக்கொண்டு பார்க்கவுமே விரும்புகிறார்கள். ‘வீ வாண்ட் சிக்ஸர்’ என்ற முழக்கங்கள் தொடர்ந்து மைதானத்தில் ஒலித்தபடியே இருக்கிறது. அப்படி உலகளவில் தங்களது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற அடித்தவர்கள் குறித்து அறிந்துகொள்வதையே இந்தத் தொடர் நோக்கமாக கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாட்டின் அதிரடி விளையாட்டாளரையும் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம். ஒவ்வொருவரைப் பற்றியும் நிதானமாக படித்துக்கொண்டிருக்க யாருக்கும் பொறுமை இருக்காது என்பதால், வீரருக்கு ஐந்து நல்லது நான்கு பகுதிகள் என இந்தத் தொடர் பிரிக்கப்படுகிறது. சிக்ஸர்களின் காலத்தில் சக்ஸஸ்களை அடைந்துகொண்டிருக்கும் கிரிக்கெட் வீரர்களை அறிந்துகொள்வோம் வாருங்களேன்.

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam

 

தொடரும்....

 

Link to comment
Share on other sites

முதல் நாயகன்: விராட் கோலி

 

 
kohli-pti-759

 

‘நான் ஒரே சமயத்தில், மனிதர்களுடன் நெருக்கமாக பழகவும், விலகியிருக்கவும் விரும்புகின்றேன். ஒரு துறவியைப் போல என்னுடைய சமூக வாழ்க்கை இருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன்’ - விராட் கோலி

விராட் கோலியின் இந்த ஒற்றைச் சொல்லை இந்திய கிரிக்கெட் ஆர்வலர்கள் ஜெபம் போல மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்வரவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இந்திய அணியை தலைமை ஏற்று வழி நடத்தவிருப்பவர் கோலிதான். தனது 30-வது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் விராட் கோலிக்கு காத்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால்களில் முக்கியமானது உலகக் கோப்பை.

இளம் வயதுக்கே உரிய துடிப்பும், அவ்வப்போது கொந்தளிக்கும் குணமும் உடைய கோலி, மைதானத்தில் தன் சக இந்திய அணியினரிடத்திலும் தீ கங்கை மூட்டி விடக் கூடிய வல்லமை கொண்டவர். அதிக எதிர்வினை ஆற்றாத  நிதானமான பாங்கையே, நமது இந்திய கிரிக்கெட் வீரர்கள் காலம் காலமாக பின்பற்றி வந்திருக்கிறார்கள். விளையாட்டை சீராக நடத்திச் செல்வதில் மட்டுமே அவர்களது முழுக் கவனமும் இருந்திருக்கிறது. இந்திய அணியின் தலைசிறந்த சாதுர்யம் மிக்க கேப்டனாக விளங்க மகேந்திர சிங் தோனி கூட ‘மிஸ்டர் கூல் கேப்டன்’ என்றே பெயரெடுத்திருக்கிறார். 

590961-445311-virat-kohli-10-afp.jpg

இங்திலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டி ஒன்றின்போது இந்தியா வெற்றி அடைந்ததன் பின்பாக, அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி, தனது மேலாடையை கழற்றி தலைக்கு மேலாக உயர்த்தி எதிர் அணியினரைப் பார்த்து கோபத்துடன் குரலெழுப்பியது, வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் சிக்ஸர் அடித்த பிறகு, பேட்டை சுழற்றி மைதானத்திலேயே ஆடிய நிகழ்வு என ஆங்காங்கு இந்திய வீரர்கள் தமது பொறுமையை கலைத்து எதிர்ப்பை கலகத்தனமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்றாலும், கோலியை போல முழுமையான போர்க் குணம் உடைய, களத்தில் சீறும் வீரரை இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கண்டதில்லை. இது ஒரே சமயத்தில் ஆதரவையும், எதிர்பையும் பெற்றிருக்கிறது.

kohlifb-story_647_0123170900531.jpg

இத்தகைய எதிர்ப்புணர்வு இந்திய அணியனியினருக்கு அவசியம்தானா எனத் தொடர்ந்து விவாதங்கள் ஒருபுறம் எழுந்தபடியே இருக்கிறது. கோலி, ‘ஆஸ்திரேலிய வீரர்கள் நம்மை தொடர்ந்து வெறுப்பேற்றும் விதமாக தொந்தரவுகளை கொடுத்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் ஒருவரும் அது குறித்து பேசுவதில்லை. ஆனால், நாம் நமது எதிர்வினையை புரிந்தால் மட்டும் எல்லோரும் வரிந்துக் கட்டிக்கொண்டு விவாதிக்க தொடங்கி விடுகிறார்கள்’ என இத்தகைய விமரிசனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

media.jpg

ஊடகவியலாளர்களுடனான அவரது கலந்துரையாடல்கள் பெரும்பாலும் காரசாரமாகவே இருந்திருக்கிறது. தனது ஆட்டத்திறன் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு கோலி எப்போதுமே கோபத்துடன்தான் பதிலளித்திருக்கிறார்.

தனது இருபதாவது வயதில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி ஒன்றில் அறிமுக வீரராக களமிறங்கிய கோலி, அடுத்த பத்து வருடங்களுக்குள் இந்திய அணியின் தலைமை பொறுப்பை ஏற்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். இந்தப் பத்து வருடங்களில் அவரது வாழ்க்கையில் பல சறுக்கல்களும், தொய்வுகளும், சாத்தியமற்ற வெற்றிகளுமாக இருந்திருக்கிறது. கோலியின் வளர்ச்சிக்கு தோனியின் ஆதரவு எப்போதும் இருந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கிரிக்கெட் ஆட்டத்தை பொருத்தவரையில் மிகவும் சவாலான காரியங்களில் ஒன்று, நடுவில் இறங்கி விளையாடுவது. வீழ்ந்து  கொண்டிருக்கும் விக்கெட்டுகளுக்கு இடையில் களமிறங்கி, பொறுமையுடன் அடுத்தடுத்த விக்கெட்டுகள் வீழ்ந்துவிடாதபடி தடுப்பதோடு, ரன்களை விரைவாக குவிக்க வேண்டிய பொறுப்பையும் நடுவில் இறங்கும் ஆட்டக்காரர்கள் சுமந்திருப்பார்கள்.

kohli.jpg

இந்தியாவில் மிகச் சிறந்த மைய நிலை ஆட்டகாரராக விளங்கியவர் ராகுல் டிராவிட். மிக நுணுக்கமான நிதானத்துடன் ரன்கள் சிறுகச் சிறுக சேர்த்து, கடைசி ஓவர்கள் வரையிலும் அணியை நகர்த்திச் செல்லும் சாமர்த்தியம் உடையவராக டிராவிட் இருந்தார். இந்தியாவின் தடுப்பு சுவர் என்றே டிராவிட் பெயரெடுத்திருந்தார். அவரைப் போலொரு நிதான ஆட்டக்காரர்கள் உலகளவில் கூட இல்லையென்றே உறுதியாக சொல்லலாம். காம்ளி, மொகமத் அசாரூதின், அஜய் ஜடேஜா, யுவராஜ் சிங், ரெய்னா போன்றவர்கள் அத்தகைய மைய நிலை ஆட்டக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் என்றாலும், டிராவிட்டின் மாற்றாக அவர்களை வகையிடுதல் ஆகாது. விவிஎஸ் லஷ்மண் ஒரளவுக்கு டிராவிட்டின் மாற்றாக கருதப்படும் தகுதி உடையவர் என்றாலும், அவரது முழு ஆட்டத்திறனும் டெஸ்ட் போட்டிகளில்தான் வெளிப்பட்டிருக்கிறது.

virat.jpg

விராட் கோலி ஒரே தருணத்தில், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்துவராகவும், அதிரடியாக ரன்களை குவிக்கக் கூடிய திறன் மிக்கவராகவும் இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் மைய ஓவர்களின் நிதானமான ஆட்டத்திற்கு கோலியே முழு பொறுப்பு. அவ்வப்போது அடித்துத் தள்ளும் பவுண்டரிகளின் மூலமாக ஸ்கோரையும் அவர் தொடர்ந்து உயர்த்திவிட்டுக் கொண்டே இருப்பார். அவரது விக்கெட் விரைவாக வீழ்ந்துவிட்டால், பின்வரும் ஆட்டக்காரர்களின் நிலை அதோகதிதான்.

தரையில் ஊர்ந்து செல்லும்படியாக கோலி அடிக்கும் ஆஃப் டிரைவுகள் வசீகரத்தன்மையை பெற்றிருக்கும். இக்கட்டான நிலைகளிலும் பந்தை அடிப்பதில் முழு கட்டுப்பாட்டை கோலி கொண்டிருப்பது அனைவரின் புருவங்களை உயர்த்தச் செய்யும் விஷயம்.  உறுதியான முழுமையான ஆட்டக்காரராக கோலி களத்தில் பார்வைக்கு தெரிவார். கட்டுக்கோப்பான உடல்வன்மையை பயிற்சியின் மூலமாக அடைந்திருக்கும் கோலி, தொடர்ச்சியாக ஜிம்களில் அதிக நேரத்தை செலவிடும் வழக்கமுடையவர்.

‘மிக முக்கியமான போட்டித் தொடர்களுக்கு செல்லும் முன்பாக தீவிரமான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம், உடலும் மனமும் ஒரு இறுக்கமான நிலையை அடைகிறது. அந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட உடலில் தோற்றுவித்திருக்கும் அத்தகைய இறுக்கம், மிக முக்கிய பங்காற்றுகிறது. அவசியமான மனோதிடத்தை இந்த உடற்பயிற்சிகள் எனக்கு தருகின்றன’ என கோலி தனது பயிற்சி குறித்து தெரிவிக்கிறார். சம காலத்திய இந்திய கிரிக்கெட்டு வீரர்களிலேயே தடகள விளையாட்டு வீரருக்கு ஒப்பான உறுதியான கச்சிதமான உடலமைப்பை கொண்டிருப்பவர் விராட் கோலி மட்டும்தான்.

viraat-15090891371.jpeg

கிரிக்கெட் விளையாட்டு திறன் மட்டுமல்லாமல், அவரது விதவிதமான ஹேர் ஸ்டைல்களும் அவ்வப்போது பிரபலமாகி இருக்கின்றன. அவரது ஹேர் ஸ்டைல், ஆடை அலங்காரம் முதலியவை ‘கோலி ஸ்டைல்’ என்றே வகைப்படுத்தப்படுகின்றன. சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகும். தன் உடலில் டாட்டூ போட்டுக் கொள்வதிலும் கோலிக்கு பெரும் விருப்பம் உண்டு. உள் அமைதியும் புற வேகத்தையும் ஒருங்கே பெற்றவராக கோலி தம்மை கட்டமைத்துக் கொண்ட விதம் ஆச்சரியமானது. கிராமத்தில் மைதானங்களில் கோலி ஸ்டைல் தலை சிராய்ப்புடன் கையில் மட்டையடித்துக் கொண்டிருக்கும் சிறுவர்களை நம்மால் பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் சச்சினுக்கு இருந்ததைப் போலவே இன்றைக்கு கோலியின் மீது பல இளைஞர்கள் மோகம் கொண்டு அலைகிறார்கள்.

கோலியின் ஆட்டத்தை முன்னாள் இந்திய ஆட்டக்காரரும், 1983-ல் இந்திய உலக கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்தவருமான தமிழ்நாட்டு வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தொடர்ந்து பாராட்டியபடியே வந்திருக்கிறார். கோலியின் துவக்க நாட்களில் இருந்தே, ஸ்ரீகாந்த் அவரை பலமுறை புகழ்ந்திருக்கிறார். ‘கோலியிடம் அசாதாரமாண மனோதிடம் நிரம்பியிருக்கிறது. அவரால், எத்தகைய சூழலையும் பொறுமையுடன் வழி நடத்திச் செல்ல முடியும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகக் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் (52 பந்துகளில்), மிக விரைவாக ஆயிரம் சர்வதேச ரன்களை கடந்தவர், மிக விரைவாக பத்து சதங்கள் அடித்த வீரர், கேப்டனாக தொடர்ந்து அதிகமுறை (ஒன்பது தொடர்கள்) டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வெற்றிப் பெற செய்த வீரர், அயல் நாட்டில் இரட்டை சதமடித்த முதல் இந்திய கேப்டன், 2013-ம் ஆண்டின் அர்ஜுனா விருது, 2017-ல் பத்மஸ்ரீ விருது என மிக குறுகிய காலக்கட்டத்தில் பல்வேறு சாதனைகளை அடைந்திருக்கும் கோலிக்கு, பல சோதனைகளும் ஏற்பட்டிருக்கின்றன.

71a093cfd12ea9946b84fb18f8226be1.jpg

அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதும் அவரது வழக்கமாகவே பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு விளையாட சென்றிருந்தபோது அங்கிருந்த பார்வையாளர்களை பார்த்து நடு விரலை உயர்த்து பழித்துக் காட்டியதால், அந்தப் போட்டியின் ஐம்பது சதவிகித சம்பளத் தொகை தண்டனையாக விதிக்கப்பட்டது. போலவே, சக விளையாட்டு வீரர்களுக்கு மத்தியில் சமரசமற்ற போக்கு, பயிற்சியாளருடன் முரண்டுபாடு கொண்டிருத்தல் என கோலியின் எதிர்மறையான போக்கும் தொடர்ந்து ஊடகங்களில் சர்ச்சையாக எழுந்தபடியும் இருக்கிறது. விமரிசனங்களுக்கு அஞ்சாத கோலி இவற்றையெல்லாம் புறம்தள்ளி தன் விளையாட்டு ஒன்றே குறிக்கோளாக இருப்பவர்.

இந்தியா போன்ற பெரும் பரப்பளவும், ஜனத்தொகையும் மிகுந்த நாட்டில், ஒற்றை பிரதிநிதியாக ஒரு மனிதர் உருவாகுவது என்பது சாத்தியமற்றது. அதீத நெருக்கடியையும், மன உளைச்சலையும், கடுமையான சூழலை எதிர்த்தும்தான் இங்கு அத்தகைய அடையாளத்தை கட்டியெழுப்ப முடியும். இன்றைக்கு உலகளவில் கவனிக்கப்படும் மனிதராக கோலி உயர்ந்துள்ளார் என்றால் அது சாதாரண விஷயமன்று. நூறு கோடி மக்களின் சார்பாக, இந்திய அணியை தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிறார் அவர். கோலியின் தினசரி செயல்பாடுகளை ஒற்றறிய ஊடகங்கள் விழிப்புடன் அலைகிறார்கள். பிரபல பாலிவுட் நடிகையான அவரது காதல் மனைவி அனுஷ்கா சர்மாவையும் கேமராக்கள் சூழ்ந்திருக்கின்றன. அவர்கள் காதலர்களாக இருந்த காலகட்டத்தில் இது இன்னும் அதிகமாக இருந்தது. ஆனால், இருப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு எந்தவொரு இந்திய நடுத்தர குடும்பத்து சிறுவனையும் போல கைகளில் மட்டையுடன் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த கோலியை எவர் ஒருவரும் அறிந்திருக்கவில்லை.  

அந்தக் கோலியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?

சிக்ஸர் பறக்கும்......

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/may/18/1-first-hero-virat-kohli-2917758.html

Link to comment
Share on other sites

2. எனது நாட்டிற்காக விளையாடுகிறேன்! விராட் கோலியின் நிறைவேறிய ஆசை!

 

 
viratkohlil

முதல் நாயகன் – விராட் கோலி - 2

‘நீங்கள் புகழ் அடைந்த பிறகு, பணம் வெகு இயல்பாக உங்கள் கைகளில் தவழத் துவங்கிவிடும். ஆனால், பணம் பற்றியெல்லாம் நான் பெரிதளவில் விருப்பம் கொள்வதில்லை. நான் ஒரு அடையாளத்தை விட்டுச் செல்ல விரும்புகின்றேன். பல வருடங்களுக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை ஒருவர் திரும்பிப் பார்க்கும்போது, அதன் முன்னேற்றத்தில் பாதை அமைத்துக் கொடுத்த வீரர்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இந்திய அணியில் சகாப்தங்களை உருவாக்கிய வீரர்களுள் நானும் ஒருவனாக நிச்சயம் நிலைபெறுவேன்’ - விராட் கோலி  

cricketer-virat-kohli-childhood-pictures

தலைநகர் தில்லியின் மேற்கு திசையில் இருக்கும் உத்தம் நகரில் மிக எளிய மத்தியவர்க்க பஞ்சாபி குடும்பமொன்றில் பிறந்தவர் விராட் கோலி. இவர் பிறந்தது 1988-ம் ஆண்டு நவம்பர் 5-ம் நாள். கோலியின் தந்தையான பிரேம் கோலி குற்றவியல் வழக்கறிஞராக பணி செய்து கொண்டிருந்தார். தாய் சரோஜ் கோலி எதார்த்தமான இந்தியக் குடும்ப பெண்மணி.

virat-kohli-and-his-family-originally-be

மிக எளிய மனிதரான கோலியின் தந்தைக்கு பெரியளவில் வழக்குகள் எதுவும் வந்து குவிந்துக் கொண்டிருக்கவில்லை. வாடகை வீட்டில்தான் வசிக்க வேண்டியிருந்தது. கோலிக்கு மூத்த சதோதர் ஒருவரும், மூத்த சகோதரி ஒருவரும் உள்ளார்கள். கோலிதான் வீட்டின் கடைக்குட்டி. அதனால் இயல்பாகவே அந்தக் குடும்பத்தில் இருந்த அனைவருக்கும் கோலியின் மீது கொள்ளை பிரியம்.

kohli-childhood_1456405479.jpg

பஞ்சாபி மக்களுக்கே உரிய உணவுகளின் மீதான நாட்டம் கோலிக்கும் சிறு வயதிலிருந்தே இருந்து வந்தது. கோலி தீவிரமான சிக்கன் பிரியர். சிக்கனை ருசித்து உண்ணக் கூடியவர். இந்திய அணியில் இடம்பெறுவதற்கு முன்பான கோலியின் புகைப்படங்களை பார்க்கையில், இன்றையை தோற்றத்திற்கு நேரெதிராக கன்னம் உப்பிய நிலையில் பருமனான உடல் கொண்டவராக கொழுகொழுவென்று இருக்கிறார்.

kohli-m3.jpg

ஒரு விளையாட்டு வீரனுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்தது அவனது உடலமைப்பே என்பதை பின்னாளில் உணர்ந்து கொண்டதாக சொல்லும் கோலி, அதன் பிறகே, உடற்பயிற்சியை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். உடற்தகுதியில் பிரபல செர்பிய நாட்டு டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிக்கே தனது போட்டியாளர் என கோலி விளையாட்டுத்தனமாக சொல்வதுண்டு.

cricketer-virat-kohli-childhood-pictures

கோலிக்கு மூன்று வயதிருக்கும் போதே, அவரது தந்தையுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. கிரிக்கெட்டின் மீது ஈடுபாடு கொண்டிருந்த பிரேம் தனது மகனை பேட் செய்யச் சொல்லி, கோலிக்கு மகிழ்ச்சியுடன் பந்து வீசுவாராம். இருவரும் அருகில் இருக்கும் மைதானதிற்கு ஸ்கூட்டரில் சென்றுவிடுவார்கள். உடல் சோர்ந்து வியர்வை துளிர்த்து மண்ணில் விழும் வரை இருவரும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். பிரேம் தனது மகனை சந்தோஷமடையச் செய்வதில் அலாதியான விருப்பம் கொண்டவர். சிறு வயதில் விளையாட்டு போக்காய் தொடங்கிய கோலியின் கிரிக்கெட் ஆர்வத்தை, மேற்கு தில்லி கிரிக்கெட் அகாதெமியில் சேர்த்துவிட்டு மேலும் விஸ்தாரமாக்கியவர் அவர்தான்.

கோலிக்கு அந்த கிரிக்கெட் அகாதெமியில் சேர்ந்தபோது ஒன்பது வயது. துறுதுறுவென சுட்டித்தனமாக ஆர்வ மிகுதியுடன் அலைந்துக் கொண்டிருக்கும் கோலியை இயல்பாக அகாதெமியில் இருந்த எல்லோருக்கும் பிடித்துப் போனது. அவரது திறனை அவர்களும் ஊக்கப்படுத்தியபடியே இருந்தனர்.

இந்திய கிரிக்கெட்டின் விளையாட்டின் கடவுளாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு, ஆக்ரேக்கர் என்ற பயிற்சியாளர் கிடைத்ததைப் போலவே, கோலிக்கு மேற்கு தில்லி கிரிக்கெட் அகாதெமி கிடைத்திருந்தது.

kohli_young.jpg

 

 

கோலியின் துவக்க கால பயிற்சியார்களுள் ஒருவரான ராஜ்குமார் ஷர்மா கோலியைப் பற்றிக் கூறுகையில், ‘கோலி அசாத்தியமான திறன் மிக்கவர். அவரை அமைதியாக ஓரிடத்தில் கட்டுப்படுத்தி உட்கார வைப்பதே பெரும்பாடு. அவர் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருப்பார். எந்த ஒரு செயலையும் மிகத் தீவிரமாகவும், எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாமலும் செயல்படுத்திவிடுவார். ஆட்ட வரிசையில் எந்த நிலையில் இறக்கிவிட்டாலும், தனது பணியை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தக் கூடியவராக கோலி இருந்தார். உண்மையில், ஒவ்வொரு பயிற்சி நாளின் இறுதியிலும் அகாதெமியிலிருந்து கோலியை நீங்கள் பலவந்தமாக வெளியேற்ற வேண்டும். ஏனெனில், அவர் அகாதெமியை விட்டு வெளியே செல்லவே விரும்ப மாட்டார்’ என்று அந்நாளின் நினைவுகளை விவரிக்கிறார்.

169050-tendulkar-sachin-virat-kohli.jpg

கோலி சச்சினின் மிகப்பெரிய ரசிகர். பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சச்சினின் ஆட்டத்தை மிகவும் விரும்பிப் பார்ப்பார். அவரது விளையாட்டு நுணுக்கங்களை கூர்ந்து அவதானிப்பார். சச்சின் என்கின்ற ஆளுமையின் மீது கோலியின் மனதில் மிகப் பெரிய எண்ணம் உருவாகியிருந்தது. எந்தவொரு இந்திய கிரிக்கெட் ரசிகனையும்போல சச்சினின் ஆட்டத்தை அலாதியான முறையில் கொண்டாடியவர் கோலி. ‘சச்சின் வெறும் விளையாட்டு வீரர் என்கின்ற நிலையையும் கடந்து, இந்திய கிரிக்கெட் ஆர்வலர்களின் மனங்களில் ஆழமிக்கதும் உணர்வுப்பூர்வமானதுமான நினைவலைகளை உருவாக்கியவர்’ என சச்சினின் மீதான தனது நேசத்தை கோலி வெளிப்படுத்தியிருக்கிறார்.    

cricketer-virat-kohli-childhood-pictures

கோலி படிப்பிலும் படு சுட்டி. பள்ளித் தேர்வுகளில் எப்போதும் முதல்நிலை மதிப்பெண்களை பெறுவதே அவரது இயல்பாய் இருந்தது. தான் சார்ந்திருக்கும் எதுவொன்றின் மீதும் அதீதமான முழுமையான அர்ப்பணிப்போடு செயல்படுத்தக் கூடியவர் கோலி. அத்தகைய ஆற்றல்தான் அவரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பொறுப்பை மிக விரைவாக ஏற்கும் நிலை வரை உயர்த்திவிட்டது.

இதனிடையே கோலியின் குடும்பம் மீரா பாக் பகுதிக்கு இடம்பெயர வேண்டிய நிலை உருவானது. மீரா பாக் கோலியின் கிரிக்கெட் அகாதெமி அமைந்திருந்த இடத்திற்கு வெகு அண்மையில் இருந்ததால், கோலியின் பயிற்சிகள் மேலும் மேலும் உறுதியுடன் நகர்ந்துக் கொண்டிருந்தன. அப்போதெல்லாம் தினமும் கோலியை பயிற்சிக்கு அவரது தந்தைதான் அழைத்துச் செல்வதும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதுமாக இருப்பார். கோலி மிக பிரபலமான கிரிக்கெட் வீரராக உருவாக வேண்டுமென விருப்பம் கொண்டிருந்த பிரேம் ஒவ்வொரு நாளும் அந்த நம்பிக்கையை கோலியின் மனதுக்குள் ஆழமாக விதைத்தபடியே இருந்தார்.

virat%20kohli33.jpg

தொடர் பயிற்சியின் பயனாகவும், அகாதெமியின் ஆதரவாலும், கோலிக்கு 2002-ம் ஆண்டு தில்லி அணியில் பதினைந்து வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் (அண்டர் 15) விளையாடும் சந்தர்ப்பம் உண்டாகிறது. பாலி உம்ரிகர் கோப்பை என்ற தொடரில் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 172 ரன்கள் அந்த தொடரின் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற நிலையை அடைந்தார். கோலியின் தந்தைக்கு மகனின் செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. பின்னாளில் மிக திறன்வாய்ந்த கிரிக்கெட் வீரராக கோலி பரிணமிக்கப் போகிறார் என்பதை அப்போதே உணர்ந்திருந்தார் பிரேம்.

dc-Cover-3ivncn3dkmamhr0iio46irr0k2-2017

கோலி அடுத்தடுத்த போட்டிகளிலும் அதிகளவில் ரன்களை குவித்துக் கொண்டிருந்தார். அவரது வளர்ச்சி அதிவேகமாக இருந்தது. 2003-ல் பாலி உம்ரிகர் தொடரில் கேப்டன் பொறுப்பு அவர் வசம் ஒப்படைக்கப்படுகிறது. 2004-ல் அண்டர் 17 தில்லி அணியில் சேர்ந்து, விஜய் மெர்சண்ட் தொடரிலும் அதிக ரன்களை குவிக்கிறார். அதற்கு இரண்டு ஆண்டுகள் கடந்து, இந்தியாவின் அண்டர் 19 அணியில் அவருக்கு இடம் கிடைக்கிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற அந்த சர்வதேச போட்டித் தொடரிலும் கோலி தனது திறன்வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

2006-ல் முதல்நிலை தில்லி அணியில் இடம்பிடிக்கும்போது தமிழக அணிக்கு எதிராக விளையாடியபோது அவரது வயது 18. இந்த போட்டித் தொடரில் கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவருக்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல் ஒன்று வந்துச் சேர்கிறது. நீண்ட நாட்களாக நோயுற்றிருந்த அவரது தந்தையின் மரணச் செய்தியே அது. கோலி இந்தச் செய்தியால் மிகப்பெரிய அதிர்வடைகிறார். மனம் முழுக்க அழுகையால் நிரம்பி தளும்புகிறது. தந்தையுடனான நினைவுகள் அனைத்தும் அக்கணத்தில் திரும்ப திரும்ப நினைவில் எழுந்தபடியே இருக்கின்றன. அதி தொலைவில் தந்தையின் உடல் உயிரற்ற நிலையில் தரையில் கிடத்தப்பட்டிருப்பதான காட்சிகள் மனதில் அரங்கேறியபடியே இருக்கின்றன. எனினும், கோலி பொறுமையுடன் இருந்தார்.

kohli122.jpg

உள்ளுக்குள் நேர்ந்துகொண்டிருக்கும் தவிப்புகளை வெளியில் காட்டாமல், மிக நிதானமாக ஆட்டத்தை தொடருகிறார். ரன்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன. அந்த ஆட்டத்தில் கோலி சேர்த்தது 90 ரன்கள். ‘அன்றைய போட்டியில் எனது ஆட்டம் மெல்ல மாற்றமடைந்திருந்தது. நான் ஒன்றை மட்டும் மனதில் நிறுத்திக் கொண்டேன். நான் எனது நாட்டிற்காக விளையாடுகின்றேன். நான் நாட்டிற்காக விளையாட வேண்டுமென்று விரும்பிய என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்’. கோலி அன்றைய போட்டியில் ஆட்டமிழந்ததும் விரைந்து சென்று தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்.

hqdefault-1473421034-800.jpg

சிறுவயதில் தந்தையின் ஸ்கூட்டரில் பின் இருக்கையில் அமர்ந்து கிரிக்கெட் மட்டையைச் சுமந்து சென்ற தினங்கள் அவருக்கு நினைவுக்கு வந்தபடியே இருக்கிறது. தொலைவில் தந்தை புன்னகைத்தபடியே பந்துவீச தன்னை நோக்கி ஓடி வருகிறார். அவரது மூச்சுக்காற்று கோலியின் முகத்தில் மோதி வருடுகிறது. நாட்கள் அதிவிரைவாக தன்னை கடந்துச் செல்வதை கோலி பார்க்கிறார். இப்போது தந்தை தன்னிடமில்லை என்கின்ற நினைவு மனத்தை அழுத்துகிறது. இறுதி காரியங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு வெறுமை கவிந்த நிலையில் அமைதியுடன் தனது அறையில் அமர்ந்திருக்கிறார்.

கோலியின் தாய் அன்றைய தினத்தை நினைவு கூர்கிறார். ‘கோலி அன்றைய தினத்திற்கு பிறகு வெகுவாக மாறிவிட்டான். அப்போது அவன் என் பார்வைக்கு முழு மனிதனாக தோன்றினான். சுயமாக எழுந்து நிற்க வேண்டியதை உணர்ந்து கொண்டான். அதன்பிறகு, ஒவ்வொரு போட்டியையும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளத் துவங்கினான். முழுக்க முழுக்க தனது வாழ்க்கை இனி கிரிக்கெட் விளையாட்டுக்கே அர்ப்பணிக்கப்பட்டதைப்போல அவன் மாறியிருந்தான். இப்போது, அவன் தனது தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டான். அது அவனது கனவும்கூட’.

சிக்ஸர் பறக்கும்…...

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/may/25/i-wish-to-play-for-my-country-said-virat-kohli-2926063--3.html

Link to comment
Share on other sites

3. ஊடகங்கள் சிலவற்றை மிகைப்படுத்தின என்றாலும், என் தவறுகளை ஒப்புகொள்கிறேன்! விராட் கோலி

 

 
13kohli

முதல் நாயகன் – விராட் கோலி - 3

‘நான் விராட் கோலியின் ஆட்டத்தை மிகவும் ரசித்துப் பார்க்கிறேன். எனது அந்தரங்க பிரதிப்போல அவர் எனககு காட்சி அளிக்கிறார். சீறும் குணம், அணியை வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்லும் விடாப்பிடியான ஆற்றல் என நான் கொண்டிருந்த இயல்புகளையே அவரும் பெற்றிருக்கிறார். கோலியை பார்க்கும்போது, நானே மீண்டும் விளையாடிக் கொண்டிருப்பதாக எனக்குள் எண்ணம் எழுகிறது’ - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் (முன்னாள் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்)

viv-richards-virat-kohli.jpg

2008-ம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டிதான், இந்திய அணிக்காக கோலி விளையாடிய முதல் போட்டி. அப்போது கோலிக்கு வயது 19. துவக்க ஆட்டக்காரர்களான சச்சினும், சேவாக்கும் காயங்களின் காரணமாக அந்த தொடரில் பங்கேற்காததால், கோலிக்கு அந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. 12 ரன்களை தனது பங்களிப்பாக முதல் போட்டியில் கோலி சேர்ப்பித்தார். இந்த தொடரின் நான்காவது போட்டியில் தனது முதல் அரை சதத்தை அடித்து, இந்தியாவை வெற்றிப் பெற செய்த கோலி மற்ற போட்டிகளில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

அதன் பிறகு, மீண்டும் தனது வாய்ப்புக்காக கோலி சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. அவ்வப்போது ஷீகர் தவான், ரெய்னா போன்றவர்கள் விளையாட முடியாமல் போகும் தருணங்களில் மட்டுமே கோலிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

virat_kohali.JPG

இதற்கிடையில், இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் கோலி பங்கேற்றார். மிக அதிக பணமும், ஊடக கவர்ச்சியும் மிகுதியாக இருக்கும் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்றவுடன் கோலியின் ஆட்டத் திறன் புகழப்படுகிறது. புகழ் போதை கோலியை ஆட்டுவிக்கிறது. விளையாட்டுக்கு பின்பான இரவு பார்ட்டிகளில் அதிகளவில் பங்கெடுத்துக் கொள்கிறார். அணியினரிடத்தில் தனது அதிகாரத்தை செலுத்தியதால், கோலிக்கு எதிர்மறையான பிம்பம் உருவாகிறது. இதன் காரணமாகவே கிட்டதட்ட ஓராண்டு காலம் இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை புறக்கணித்திருந்தது.

Virat_Kohli_Wallpaper1.jpg

'சிலவற்றை ஊடகங்கள் மிகைப் படுத்தி இருக்கின்றன என்றாலும், என் மீதுள்ள தவறுகளை நான் ஒப்புகொள்கிறேன்’ என கோலி தெரிவித்திருக்கிறார்.

2009-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கான போட்டித் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு கோலிக்கு கிடைக்கிறது. தனது வாழ்க்கையின் திருப்புனை என இத்தொடரை வர்ணிக்கும் கோலி, இந்த தொடரில் மொத்தம் 398 ரன்களை எடுத்திருந்தார். அதில் ஒரு சதமும் அடக்கம். அவரது ஆட்டத்திறன் வெகுவாக கவனிக்கப்படுகிறது. கிரிக்கெட் வாரியத்திற்கு கோலியின் மீது நம்பிக்கை உண்டாகிறது.

kohli-ind-aus-afp.jpg

2009 டிசம்பரில் இலங்கைக்கு எதிரான நான்காவது போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கபெற்றதும், அதனை கோலி மிக சரியாக பயன்படுத்திக்கொண்டார். இந்த போட்டியில் கம்பீருடன் இணைந்து 224 ரன்களை இருவருமாக இந்திய அணிக்கு சேர்த்தனர். இந்த போட்டியில்தான் கோலி தனது முதல் சதத்தை அடித்தார்.

Kohli-Gambhir.jpg

காம்பீர் இந்த போட்டியில் 150 ரன்கள் குவித்ததால், அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்படுகிறது. 'இந்த போட்டியில் கோலியின் பங்களிப்பு மகத்தானது, அதனால் ஆட்ட நாயகன் விருதினை கோலியுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்’ என கோலியை பாராட்டி தனது பரிசு தொகையினை கோலியுடன் பகிர்ந்துக் கொண்டார் கவுதம் காம்பீர்.

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லஷ்மண், விரேந்திர சேவாக் என பல முக்கிய இந்திய கிரிக்கெட் ஆளுமைகளுடன் இணைந்து விளையாடும் சந்தர்ப்பம் கோலிக்கு வாய்க்கிறது. தனது துவக்க காலத்தில் இத்தகைய அனுபவமிக்க ஆட்டக்காரர்களுடன் விளையாட நேர்ந்த அனுபவம் தனது கிரிக்கெட் வாழ்க்கையை கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் என கோலி குறிப்பிடுகிறார்.

 

 

kohli-2.jpg

சச்சின் டெண்டுல்லர் கோலியிடம், 'எந்த வகையான பவுலிங்கையும் கண்டு பயம் கொள்ள வேண்டாம். ஸ்பின் பவுலிங்கையும், பாஸ்ட் பவுலிங்கையும் சரி நிகராக எடுத்துகொள்ள பழக வேண்டும். உன்னை நோக்கி எறியப்படுகின்ற பந்து மட்டுமே உன் கண்ணுக்கு தெரிய வேண்டும். அதனை நீ மிக துல்லியமாக நெருங்கிச் செல்ல வேண்டும். அப்போதுதான் பந்து உன்னை வெற்றிக் கொள்வதை உன்னால் தவிர்க்க முடியும்’ என சச்சின் தன்னிடம் கூறிய அறிவுரை தனக்கு மிகவும் உபயோகமாக இருந்ததாக கோலி தெரிவித்திருக்கிறார்.

virat-kohli-7592.jpg

ஒவ்வொரு சீனியர் பிளேயர்களும் கோலிக்கு வழக்காட்டியாக இருந்திருக்கிறார்கள். ஒரு இக்கட்டான சூழ்நிலையை எவ்விதம் எதிர்கொள்ள வேண்டுமென்று அவர்கள் தங்களது அனுபவத்தின் வாயிலாக கோலியிடம் விவரித்திருக்கிறார்கள். கோலி இந்த அனுபவங்களை தனக்குள் சேகரித்துக் கொண்டாலும், உண்மையில் நாம் களத்தில் அத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ள நேர்கையில் நாம் எவ்வாறு அதனை வெற்றிக் கொள்கிறோம் என்பதில்தான் நமக்கான சுய பாடம் இருக்கிறது என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். இந்திய அணியில் நெடுங்காலம் நிலைத்திருக்க போகிற அவரது ஆட்டத்திறனை இந்திய அணியின் மூத்த வீரர்கள் கணக்கிட்டிருந்தார்கள். 

2010-ல் வங்க தேசத்துக்கு எதிராக தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்ததன் பின்பாக, 22 வயதுக்குள் இரண்டு சதங்களை அடித்திருக்கும் மூன்றாவது இந்திய வீரர் (முதல் இரண்டு வீரர்கள்: சச்சின் மற்றும் ரெய்னா) என்ற சாதனையை கோலி செய்கிறார். இதன் பிறகே, தோனியின் முழு ஆதரவு கோலிக்கு கிடைக்கிறது. தோனி தொடர்ந்து கோலியை முன்னிலைப்படுத்த துவங்குகிறார்.

kohli-m2.jpg

தோனியின் ஆட்ட சாதுர்யம் பல மன கணக்குகளை கொண்டது. அதிரடியாக விளையாடி தனது இருப்பை இந்திய அணியில் தக்க வைத்துக்கொண்ட தோனி, தன்னை மிக மிகக் கீழ்நிலையில் ஆட்ட வரிசையில் இறக்கிக் கொண்டார். இதன்மூலம், அவருக்கிருக்கும் அழுத்தங்கள் முன்னால் இருக்கும் வீரர்களிடம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. தோனிக்கு பல போட்டிகளில் விளையாடும் வாய்ப்பே கிடைக்காமல் போகிறது. இதனால், மிக முக்கியமான பொறுப்புகள் அனைத்தையும் கோலி சுமக்க வேண்டியிருந்தது.

dhoni_and_kohli.jpg

தோனி அணியில் இடம்பெறாத சூழல்களில் ரெய்னாவும், கோலியும் இந்திய அணியின் தலைமை பொறுப்புகள் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் துணை கேப்டனாக விளையாடிய கோலி, அந்த தொடரில்தான், மிக குறைந்த போட்டிகளில் விரைவாக 1000 ரன்களை கடந்த கிரிக்கெட் வீரர் எனும் சாதனையை படைக்கிறார். கோலியின் மீது மெல்ல புகழ் வெளிச்சம் படருகிறது. இந்திய இளைஞர்கள் அவரை நம்பிக்கை நாயகனாக நம்ப தலைபடுகின்றனர். இந்திய அணியில் கோலியின் இடம் நிரந்தமாக உறுத்திப்படுத்தப்படுகிறது.

736d198a12b9224a935b3a05cac0a3f31.jpg

தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை கோலி வெளிப்படுத்தி வந்ததால், மிக விரைவிலேயே தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் தனக்கான இடத்தை பிடிக்கிறார். சர்வதேச ஊடகங்களின் வெளிச்சமும் அவருக்கு கிடைக்கிறது. இந்திய ஊடகங்கள் அவரது நுணுக்கமான ஆட்டத்திறனை விவாதங்களில் முக்கியத்துவம் அளிக்கிறது. கோலி மிக விரைவாகவே, வளரும் தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னுதாரணமாக நிறுத்தப்படுகிறார். அவரது பேட்டிங் சாதுர்யங்கள் விரிவாக அலசப்படுகின்றன.

 

Sachin+Tendulkar+Virat+Kohli+India+v+Sri

ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த கோலி, 2011-ம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்து டெஸ்ட் போட்டிகளிலும் அழுத்தமாக காலூன்ற துவங்குகிறார். 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியா கைகளில் கோப்பை ஏந்திய 2011 உலககோப்பை தொடரிலும் கணிசமான பங்களிப்பை வழங்கினார். இந்த போட்டித் தொடரோடு சச்சின் உட்பட பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணி இளைஞர்களால் கோர்க்கப்பட்டு புத்துயிர்ப்பு பெறுகிறது. கோலி அதன் மைய நாயனாக முன்னிற்கிறார்.

virat-kohli1.jpg

அயல் நாடுகளில் வெளிப்பட்டுள்ள கோலியின் ஆட்டத்திறனும் போற்றதக்கதே. இந்தியாவை போலல்லாமல் பிற நாடுகளின் பிட்ச் பவுலிங்கிற்கு உதவி புரியும்படியாக அமையப் பெற்றிருக்கும். அதனால், பொதுவாகவே இந்திய கிரிக்கெட் அணியினர் வேறு தேசங்களில் சிறப்பாக விளையாடுவதில்லை, சொந்த தேசத்தில் மட்டுமே அவர்களது திறன் பளிக்கிறது என விமரிசனங்கள் முன்வைக்கப்படுகிறது. கோலிக்கும் இத்தகைய அழுத்தங்கள் சவாலாக நிறுத்துப்பட்டது. 2014 இங்கிலாந்து தொடரை எதிர்ப்பார்த்திருந்த கோலி, ஏன் எப்போதும் வெளிநாடுகளில் விளையாடும்போது இது மாதிரியான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன என கடுமையாக விமரிசகர்களை சாடியிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைப்பெற்ற டெஸ்ட் தொடரில் சதம் அடித்ததன் மூலமாக, 1998-க்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவில் சதமடித்த முதல் இந்தியர் என்ற சாதனைக்கும் கோலி சொந்தக்காரர் ஆகிறார்.

chi-cricket-australia-phil-hughes-dies-2

தொடர்ந்து சீற்றத்துடன் தனது ஆட்டத்தை வடிவமைத்துக் கொண்டுள்ள கோலி முதல் முதலாக, கிரிக்கெட் விளையாட்டில் உள்ள அபாயத்தை உணர்ந்து கொண்டது, ஆஸ்திரேலேய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹுக்ஸ் ஆடுகளத்திலேயே உயிரிழந்த போதுதான். வேகப்பந்து வீச்சால் தாக்கப்பட்டு ஹுக்ஸ் உயிரிழந்த சம்பவம் கோலியை வெகுவாக பாதிக்கிறது. ஹுக்ஸ் உயிரிழந்த சில தினங்களிலேயே மிட்சில் ஜான்சன் பந்து வீச்சை எதிர்கொண்டபோது, பந்து அவரது ஹெல்மட்டை தாக்கி சிதைத்தது.

kohli-hughes-funeral.jpg

கோலி இந்த சம்பவத்தினால் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அவரிடமிருந்த கொந்தளிப்பான மனநிலை ஒருகணம் உறைந்துப் போயிருந்தது. ஆனால், விரைவாகவே கோலி அதிலிருந்து மீண்டுவிட்டார். இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறிப்பிடுவதைப்போல, “கோலியை எதுவொன்றும் அசைத்துவிட முடியாது. கண்களில் தீக் கொண்டிருக்கும் கோலி என்றென்றும் அதே எதிர்புணர்வோடு தனது விளையாட்டை தொடர்கிறார்’.

சர்வதேச அளவில் மிக முக்கியமான வீரரென கொண்டாடப்பட்ட சூழலில் அவருக்கு அளிக்கப்படும் மிக முக்கியமான சவாலாக இந்திய அணியின் கேப்டன் பதவியும் அவருக்கு அளிக்கப்படுகிறது.

சிக்ஸர் ப ற க் கு ம்...

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/jun/01/life-and-success-of-virat-kohli-2930541--3.html

Link to comment
Share on other sites

4. தோனியா கோலியா? யார் சிறந்த கேப்டன்?

 

 
dhoni_and_kohli

 

உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் எனது தனிப்பட்ட கிரிக்கெட் வாழ்க்கை குறித்து எவ்வித எதிர்கால திட்டங்களையும் வைத்திருக்கவில்லை. ஆனால், ஒரு அணியாக இந்தியா உலகில் உள்ள மற்றைய அனைத்து நாட்டு கிரிக்கெட் அணியின் மீதும் தனது ஆளுமையை செலுத்த வேண்டுமென விரும்புகின்றேன். இந்தியா அதற்கு முழு தகுதியுடைய நாடு. இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதற்கு முழு தகுதியுடைய விளையாட்டாளர்கள் - விராட் கோலி

தோனிக்கு பிறகான இந்தியா அணியை தலைமை தாங்கி வழிநடத்துவது சாதாரண காரியமல்ல. தோனியின் தலைமையில்தான் இந்தியா மிகச் சிறந்த கிரிக்கெட் அணியாக உருவெடுத்தது. 2007-ம் ஆண்டில் இருபது ஓவர் உலக கோப்பை, 2011-ல் உலக கோப்பை, 2013-ல் செம்பியன்ஸ் கோப்பை என தோனியின் தலைமையிலான இந்திய அணி புரிந்த சாதனைகள் இதற்கு முன்பு வரலாறு காணாதது.

dhoni.jpg

உளவியல் ரீதியாக எதிர் அணியினரை அணுகும் போக்கினை தோனி கைக் கொண்டிருந்தார். ஸ்டம்புகளின் பின்னால் உறுதியுடன் நின்று கொண்டு ஒவ்வொரு விளையாட்டு வீரரையும் அவர் வழி நடத்தும் விதம் ஆளுமை மிக்கது. இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டனாக தோனியே கருதப்படுகிறார். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இன்னமும் தோனி கேப்டனில்லை என்பதை ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். ‘தோனி தோனி’ என்ற சொல் மந்திரம் போல விளையாட்டு அரங்கங்களில் ஒலிப்பதை நம்மால் கேட்க முடிகிறது. மற்றைய எந்தவொரு இந்திய கேப்டனைவிடவும், படிப்பறிவற்ற பாமரர்களின் மனம் வரை ஆழமாக ஊடுருவியிருக்கும் பெரும் ஆளுமையாக தோனி இருந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையில்லை.  

Virat-Kohli-century-Australia-v-India-1s

முதன்முதலாக, கோலியிடம் கேப்டன் பொறுப்பு கையளிக்கப்பட்டது 2014-ம் ஆண்டில். ஆஸ்திரேலியாகவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியான அதில் தோனி பங்கேற்கவில்லை என்பதால், கேப்டன் பொறுப்பு இயல்பாக விராட் கோலியின் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கோலி கேப்டனாக பொறுப்பேற்ற தனது முதல் இன்னிங்ஸிலேயே சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம், கேப்டனாக பொறுப்பேற்கும் முதல் போட்டியில் சதமடித்த நான்காவது இந்திய வீரர் என்கின்ற பெருமை கோலியை வந்தடைகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் கலந்து கொண்டதோடு, டெஸ்ட் போட்டிகளில் இருந்து தான் முழுமையாக ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். இதனை அடுத்து, டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பு கோலியின் வசம் வந்து சேர்கிறது. கோலி அடுத்தடுத்த போட்டிகளிலும் சதமடித்து, கேப்டனாக பொறுப்பேற்ற முதல் மூன்று டெஸ்ட் போட்டியிலும் சதமடித்த ஒரே சர்வதேச வீரர் என்ற புதிய சாதனையை படைக்கிறார்.

sachin.jpg

இந்திய அணியின் தலைமை பொறுப்பை சிறப்பாக பிரயோகிக்க வேண்டும் என்ற அழுத்தம் ஒருபுறம் இருந்தாலும், தனிப்பட்ட பல சாதனைளையும் கோலி தொடர்ந்து செய்தபடியே இருந்தார். ஒருகாலத்தில், சாதனை மன்னன் என வர்ணிக்கப்பட்ட சச்சினின் சாயைகளை கோலியில் எல்லோரும் உணர துவங்கினார்கள். ‘எனது சாதனைகளை முறியடிக் கூடிய தகுதியுள்ள பிளேயராக நான் கோலியை பார்க்கிறேன்’ என கோலியை சச்சின் பாராட்டியுள்ளார். ஆச்சர்யப்படத்தக்க ஒற்றுமையாக இருவரும், ஆறடிக்கும் குறைவான உயரம் கொண்டவர்கள்.

virat-kohli-knock-640.jpg

கோலியின் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பான வெற்றியென கருத்தப்படுவது, தென் ஆப்பிரிக்கா அணியினரை 3-0 என்ற கணக்கில் தோல்வியடைய செய்ததுதான். இந்த தொடருக்கு பின்பாக இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசை பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு உயர்ந்தது.

2017-ம் ஆண்டு ஜனவரியில் தான் ஒரு நாள் போட்டியின் கேப்டன் பதவியை துறப்பதாக அறிவித்த மகேந்திர சிங் தோனி, ‘விராட் கோலியிடம் கேப்டன் பொறுப்பை கைமாற்றம் செய்ய சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். இப்போது நேரம் கைக்கூடி விட்டது என கருதுகிறேன். ஒரு கேட்பனாக செயல்படுவது ஒருநாள் போட்டியை விட டெஸ்டில்தான் மிகுந்த சவாலான காரியம். கோலி அதனை மிகச் சிறப்பாக செயல்படுத்துகிறார்.

 

 

 

virat-kohli-and-ms-dhoni1.jpg

இனி ஸ்டம்பின் பின்னால் நின்று எனது கருத்துக்களை கோலியிடம் பகிர்ந்துக் கொள்வேன். நான் என்னால் முடிந்த அளவுக்கு ஐடியாக்களை கொடுத்துக் கொண்டே இருப்பேன். கோலியிடம் நான் 100 யோசனைகளை முன்மொழிந்தால், அதில் சரியானதை தேர்வு செய்யும் நுண்ணுர்வை அவர் பெற்றிருக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

i.jpg

கோலியின் தலைமையிலான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் நிகழ்த்திய சாதனை அபாரமானது. 5-1 என்ற கணத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்ததன் மூலம், தென் ஆப்பிரிகாவில் ஒருநாள் தொடரை வென்ற முதல் கேப்டன் என்ற சாதனை கோலிக்கு கிடைத்தது. கோலி அந்த தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினார். மூன்று சதங்கள் உட்பட 558 ரன்களை தனது பங்களிப்பாக கோலி சேர்பித்திருந்தார். கோலியின் சாதனை மகுடங்களில் மற்றுமொரு மைல்கல்லாக இந்த வெற்றி போற்றப்படுகிறது.

கோலி இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று ஓராண்டு காலம்தான் ஆகிறது என்றாலும், அதற்குள் தோனியின் தலைமை பண்பையும், கோலியின் தலைமை பண்பையும் விளையாட்டு ஆய்வாளர்கள் அலச தொடங்கிவிட்டார்கள். ஐந்து முக்கிய வேறுபாடுகள் இருவருக்குமிடையில் இருப்பதாக கூறப்படுகிறது.

MS-Dhoni-Virat-Kohli.jpg

முதலாவது, ஒவ்வொரு போட்டியின் போதும் அணியினரை மாற்றும் வழக்கம் கோலியிடம் மிகுதியாக காணப்படுகிறது. அவர் அவ்வப்போது தனது அணியில் மாற்றம் செய்தபடியே இருக்கிறார். மாறாக, தோனி தனது தலைமையில் வெற்றிப் பெறுகின்ற அணியையே தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பார். தோனியின் அணியில் மிக அரிதாகவே மாற்றங்கள் நிகழும்.

118113-kohlipti700.jpg

இரண்டாவது, கூல் கேப்டன் என பெயரெடுத்திருக்கும் தோனிக்கு அப்படியே நேரெதிராக, சீற்றம் கொண்ட சூறாவளியாக கோலி களத்தில் சுழன்றுக் கொண்டிருப்பார்.

மூன்றாவது, தோனியின் அணியில் பெரும்பாலும் சுழல் பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பார்கள். அஸ்வின், ஓஜா, ஜடேஜா என தோனி தனது சுழல் பந்து வீச்சாளர்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், கோலியின் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

press.jpg

நான்காவது, ஊடகத் துறையினரை எதிர்கொள்வது. தோனி தனது கோபத்தை ஊடகவியலாளர்களிடம் நேரடியாக வெளிப்படுத்த மாட்டார் என்றாலும், சாதுர்யமான பதில்களை சொல்வதன் மூலமாக, நெருக்கடியான சூழலை எளிதாக தவிர்த்து விடுவார். கோலி உடனுக்குடன் வெடித்து தள்ளுபவர். பலமுறை கலந்துரையாடல்களில் கோலி ஆக்ரோஷமாக நடந்துக் கொண்டிருக்கிறார்.

377717-dhoni-kohli-worried-700.jpg

ஐந்து, அணியில் உள்ள வீரர்களுக்கு தங்களது திறனை நிரூபிக்க போதிய அவகாசம் அளிப்பது. இத்தகைய முறைமை தோனியின் தலைமையில்தான் நிகழ்ந்திருக்கிறது. ரோஹித் சர்மா போன்ற சிலர் பார்ம் இன்றி தவித்தபோது, தோனி அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறார். ஆனால், கோலியின் அணியில் செய் அல்லது செத்து மடி என்பதாகத்தான் வீரர்களின் நிலை இருக்கும். தனக்கு கொடுக்கப்படுகின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறவர் அணியில் நீடிக்கலாம், மற்றவர்களுக்கு அங்கு இடம் கிடையாது என்பதே கோலியின் வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.

 
 

dc-Cover-3ivncn3dkmamhr0iio46irr0k2-2017

கோலி யாருடனும் எமோஷனலான உறவை வளர்த்துக் கொள்வதில்லை. ‘நான் பெரியளவில் யாருடனும் நட்புணர்வுடன் பழகுவதில்லை. அதற்கு எனக்கு அவசியமும் இல்லை. நெருக்கமாக நட்பு கொண்டிருந்தால் பல வகையிலும் நாம் சமரசம் செய்ய நேரிடும். அது நமது உறுதியை குலைக்கவும் சாத்தியமுண்டு’ என்கிறார் கோலி.

கேப்டனாக இருப்பது கோலிக்கு அவரது விளையாட்டில் எவ்விதமான அழுத்தங்களையும் உண்டாக்கவில்லை. தொடர்ந்து சாதனைக்கு மேல் சாதனைகளை குவித்து கொண்டே இருக்கிறார். அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து இரட்டை சதம் அடித்தது, மிக குறுகிய காலத்தில் 25 ஒருநாள் சதங்களை கடந்தது, ஏழாயிரம் ரன்களை விரைவாக அடைந்தது என கோலியின் சாதனை பட்டியல் நீண்டபடியே இருக்கிறது.  

கேப்டனாக அவரது செயல்பாடு எத்தகைய மாற்றங்களை எதிர் வரவிருக்கும் தலைமுறையினருக்கு அமைத்துக் கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுவரையிலான போட்டிகளில், தன் சக இந்திய அணி வீரர்களை பரபரப்புடன் செயல்பட வைப்பதை கோலி வழக்கமாக கொண்டிருக்கிறார். அவசியம் இருக்கும் சமயங்களில் கோபமாக திட்டியும், சில நெருக்கடியான தருணங்களில் தவறுகளே நேர்ந்தாலும் தட்டிக் கொடுப்பவராகவும் கோலி இருந்திருக்கிறார்.

toss_win_kohli.JPG

அவரைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் வீரரும் போர்க்குணம் மிக்கவராக இருக்க வேண்டும். நமது ஆளுமை அழுத்தமானதாக எதிர் அணியினரை கலக்கமுற செய்வதாக இருக்க வேண்டுமென்பதே அவரது எண்ணமாக இருக்கிறது. மைதானத்தில் துளி இரக்கமும் அற்ற இறுகிய முகத்துடன்தான் கோலியை பெரும்பாலும் பார்க்க முடிகிறது.

இந்தியாவின் கேப்டன் பொறுப்பு என்பது சாதாரண காரியமல்ல. முந்தைய கேப்டன்களின் சாதனைகளை முறியடிப்பதோடு, எதிர் வரும் தலைமுறையினருக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும். சரியான பாதையை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

‘என்னை முன் உதாரணமாகக் கொண்டு எந்த ஒரு சிறுவனாவது கிரிக்கெட் விளையாட தலைப்பட்டால், என்னை வழிப்பற்றி நம் நாட்டின் இளைஞர்கள் இந்திய அணியில் இணைந்து டெஸ்ட் போட்டிகளில் சாதனைகளை புரிந்தால், அதுதான் எனது வாழ்க்கையின் மிகப் பெரிய சாதனையாக இருக்கும். அதுதான் நான் இந்த சமூகத்துக்கும், எனது விளையாட்டிற்கும், எனது வாழ்க்கைக்கும் நான் செய்யும் மிகப் பெரிய அர்ப்பணிப்பாக இருக்க முடியும்’

சிக்ஸர் ப ற க் கு ம்……

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/jun/08/is-it-dhoni-or-kohli-who-is-the-best-captain-2934946--3.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

5. 'நான் சச்சினைப் போல 24 ஆண்டுகள் இந்திய அணியில் விளையாட முடியாமல் போகலாம்!' விராட் கோலி

 

 
kohli_nice

 

‘பல விளையாட்டு வீரர்கள் கூறியுள்ளதைப்போல, விளையாட்டு உங்களை மெல்ல மெல்ல நற்பண்புகள் மிக்கவனாக உருவாக்குகிறது. நான் ஒவ்வொரு நாளும் மிகச் சிறந்த மனிதனாக வளர்ந்து கொண்டு இருக்கவே விரும்புகின்றேன். அதுதான் எனது ஒற்றை இலக்கு. நான் ஒவ்வொன்றையும் நிதானமாக, எவ்வித சார்பும் இல்லாமல், சாத்தியமுள்ள வகையில் புரிந்து கொள்ளவும், மக்களின் வாழ்க்கையில் என்னால் இயன்ற மாற்றங்களை நிகழ்த்தவும் விரும்புகின்றேன்’ - விராட் கோலி

விகாஸ்புரியில் உள்ள தனது வீட்டில் அமைதியாக உட்கார்ந்து, தனது சுய சரிதையை எழுதிக் கொண்டிருக்கிறார் விராட் கோலி. மிகக் குறுகிய காலகட்டத்தில் பல சாதனைகளை புரிந்துவிட்ட கோலிக்கு தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பகிர்ந்துகொள்ள ஏராளமான அனுபவங்கள் இருக்கின்றன. விராட் கோலி அதனை மிகவும் சுவாரஸ்யமாக, குறும்புத்தனமான மன நிலையில்தான் எழுதிக் கொண்டிருப்பதாக ஊடக நண்பர் ஒருவரிடத்தில் பகிர்ந்து கொள்கிறார்.

virat-kohli.jpg

கோலியை பலரும், ‘சிக்கூ’ (Chikoo) என்ற பெயரிலேயே அழைப்பார்கள். (சம்பக் எனும் குழந்தைகள் புத்தகத்தில் வரும் முயல்குட்டியின் பெயர் அதுதான்). அண்டர் 17 போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த போது, தலைமுடியை மிக நெருக்கமாக வெட்டியதாகவும், அதனால் அவரது காது நீண்டு தனியே தெரிந்ததாகவும், அதன்பிறகு அவரது சக அணியினர் சிக்கூ என அழைக்கத் துவங்கிவிட்டார்கள் எனவும் சொல்லும் கோலி, தனது சுய சரிதையை சிக்கூ என்ற பெயர் தனக்கு எப்படி உண்டானது என்பதை குறித்த விரிவான விவரணைகளுடன்தான் அந்த புத்தகத்தை துவங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

chickoo.jpg

சர்வதேச விளையாட்டு போட்டி ஒன்றின்போது, தோனி கோலியை சிக்கூ என உரக்கமாக அழைக்க, ஸ்டம்புக்கு அருகில் இருந்த மைக்கில் அது பதிந்துவிட்டதால், கோலிக்கு விளையாட்டு வீரர்களிடத்தில் சீக்கு என்றொரு பெயர் இருப்பது கசிந்துவிடுகிறது. ‘நான் எங்கு சென்றாலும், என்னை எல்லோரும் சிக்கூ என்றே அழைக்கிறார்கள். உண்மையில் எனக்கு அந்த பெயர் துளியும் விருப்பமில்லை’ என்கிறார்.

சிறு வயதுகளில் கோலியிடம் காணப்பட்ட அதே துறுதுறுப்பு இன்னமும் குறைந்தபாடில்லை. இப்போதும் தனக்கு விருப்பமானவற்றை நிறைவேற்றுவதில் விடாப்பிடியாக இருக்கும் பண்பையே தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

virat-kohli.jpg

அவரது சுயசரிதை புத்தகத்தை படிப்பவர்களை துயரத்தில் ஆழ்த்த அவருக்கு விருப்பமில்லை. அதனால், தான் உடலில் தேள் உருவத்தை பச்சை குத்தியிருப்பது தொடர்பாக விலாவரியாக எழுதப் போவதாக தெரிவிக்கிறார். அவரது புத்தகத்தின் ஒரு அத்தியாயமே ‘டேட்டூஸ்’- களுக்காக அவர் சமர்ப்பணம் செய்யப் போகிறாராம். ‘இதன் மூலம் எனது இயல்பை மக்கள் புரிந்து கொள்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்’ என்று சொல்லும் விராட் கோலி தன்னைப் பற்றி முன்னுக்கு பின் முரணான பல தகவல்கள் பகிரப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

virat-anushka-44.jpg

‘ஊடகத் துறையினர் எனது விளையாட்டுத் திறன் குறித்து கவலைக் கொள்வதை விட எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் என்ன செய்கிறேன் என்பதைப் பற்றிதான் அதிக கவலையுடன் இருக்கிறார்கள்’. அதிகம் அறியப்பட்ட மனிதராக உருவாதில் எப்போதும் சிக்கல்கள் இருக்கின்றன. கோலியை சுற்றி மீடியாக்களின் செயற்கை ஒளி உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் மிக அதிக கவனமாக பின் தொடரப்படுகிறது.

images_(2).jpg

இதனை துளியும் விரும்பாத கோலி, தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முடிச்சிடப்படுவதை வெறுத்தபடியே இருந்திருக்கிறார்.

dc-Cover-7qtugbba0uqhgcbeg5ea08lkd5-2018

சில காலம் முன்பு, பாலிவுட்டின் மிக பிரபலமான நடிகையான அனுஷ்கா சர்மாவுடன் இணைத்து கோலி கிசுகிசுக்கப்பட்டார். தொடர்ச்சியாக அவர்களின் உறவு குறித்து மீடியாக்களில் கேள்வி எழுப்பப்பட்டது. துவக்கத்தில் வெறும் நட்பு ரீதியிலான உறவு என சொல்லிக் கொண்டாலும், அதன்பின் இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார் என்பதை இருவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அணி விளையாடும் பல போட்டிகளின்போது அனுஷ்கா சர்மா பார்வையாளராக மைதானத்திற்கு வருவது வழக்கமாக இருந்தது. அதன் பின் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமணத்துக்குப் பின் காதல் மனைவி தொடர்ந்து நடிப்பதற்கு பச்சைக் கொடி காட்டியவர் கோலி.

marriage.jpg

அனுஷ்கா சர்மா பற்றி கோலி சொல்லும்போது, ‘அனுஷ்கா என் மீது எப்போதும் மிகுந்த அன்பு செலுத்தக் கூடியவராக இருக்கிறார். நாங்கள் ஒருவரை ஒருவர் ஆழமாக புரிந்து வைத்துள்ளோம். கடந்த 3 – 4 ஆண்டுகளில் அனுஷ்கா எனக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருந்திருக்கிறார். நான் ஒரு சிறந்த மனிதனாக உருவாவதற்கு காரணமாக இருப்பவர் அனுஷ்காதான், ஆனால், எப்போதும் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை எங்களின் சந்திப்புகளின் போது தாமதாக வருவது மட்டும் எனக்கு பிடிக்காது’ என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் கோலி.

anushka_kohli.jpg

மனைவி அனுஷ்கா சர்மா காதலியாக இருந்த சமயத்தில் அனுஷ்காவின் பிறந்த நாளை இருவரும் ஒன்றாக கொண்டாடினார்கள். தங்களது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துக் கொண்டார்கள். அதில் அனுஷ்கா, 'உலகத்தின் அதீத துணிச்சல்காரனான எனது காதலனுக்கு எனது காதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என பதிவிட்டிருந்தார்.

2017_11image_19_56_352386000viratkohli1-

கோலி கிரிக்கெட் விளையாட்டோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார். கிரிக்கெட்டிலிருந்து தான் ஒருநாள் ஓய்வு பெற நேர்ந்தால், நிச்சயமாக அப்போது தனக்கென்று பிசினஸ் செய்ய சில வாய்ப்புகள் இருக்க வேண்டும் என சொல்லும் விராட் கோலி, விளம்பரங்களில் நடிப்பதை மிகுந்த விருப்பத்துடன் மேற்கொண்டு வருகிறார்.

Virat-Kohli-fitness-image-for-inuth.jpg

தன்னுடைய உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புகிறவர் கோலி. ஜிம் பயிற்சிகள் மேற்கொள்வதுடன், தினந்தோறும் 8 மணி நேரம் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார். மனம் புத்துணர்வு பெற யோகாசன முறையை பின்பற்றுகிறார். உணவிலும் தனி கவனம் செலுத்து வருகிறார். கோலிக்கு மிகவும் பிடித்தது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள்தான். அதுவும் அவரது அம்மா சமைக்கும் உணவு வகைகளை மிகவும் விரும்பி உண்பார்.

kohli_food.jpg

பேலியோ டயட் முறை போல கோலி மாவுச் சத்துள்ள உணவை அறவே தவிர்த்து புரதச் சத்துள்ள உணவுகளையே சாப்பிடுகிறார். நட்ஸ், உலர் திராட்சை, ப்ளாக் காபி - இவற்றை குறித்த நேரத்தில் சரியான அளவில் எடுத்துக் கொள்வது அவரது வழக்கம். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், 'இவியன்' என்னும் நிறுவனம் தயாரிக்கும்  குடிநீரை மட்டுமே உபயோகிக்கிறார் கோலி. பிரான்ஸ் நாட்டிலுள்ள மிகவும் தூய்மையான அருவியில் இருந்து இந்தத் தண்ணீரை எடுத்து அதில் உள்ள மினரல் சத்துக்கள் சிறிதும் குறையாமல் இந்த குடிநீரைத் தயாரிக்கின்றனர். 

13kohli.jpg

முன்பொரு காலத்தில், இந்திய அணியின் வலுவை ஒற்றை ஆளாக சச்சின் தாங்கி நின்றிருந்த பொறுப்பு இன்று விராட் கோலியிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. 24 ஆண்டுகள் சச்சின் சுமந்திருந்த கடமையை இன்றைக்கு விராட் கோலி சுமந்துக் கொண்டிருக்கிறார். இந்திய அணி தற்போது முழுக்க முழுக்க இளைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகத்தின் பெரும்பாலான அணிகளும் இக்காலத்தில் இளைஞர்களை கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. சோர்வும், ஆசுசையுமாக களத்தில் நகர்ந்துக் கொண்டிருக்கும் வீரர்களை இனி எந்தவொரு கிரிக்கெட் ரசிகனும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.   

இது சிக்ஸர்களின் காலம். இருபது ஓவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் சுருங்கிவிட்டன. அதனால், ஒவ்வொரு வீரரும் தம்மை நிலை நிறுத்திக் கொள்ள அதிக சிரத்தை மேற்கொள்ள வேண்டும். துடிப்புடனும் சுறுசுறுப்பாகவும் இயங்க வேண்டும். கோலி இதனை முழுமையாக உணர்ந்திருக்கிறார். அதனால்தான், சக வீரர்களிடம் அத்தகைய கடுமையை அவர் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.

Kohli-Blue.jpg

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனது இடத்தை மேலும் மேலும் உறுதியுடன் நிறுவிக் கொண்டிருக்கும் கோலி, ‘நான் சச்சினைப் போல 24 ஆண்டுகள் இந்திய அணியில் விளையாட முடியாமல் போகலாம். ஆனால், நான் 200 டெஸ்ட் போட்டிகளையும், 100 சர்வதேச சதங்களை அடிக்க வேண்டுமென்று விரும்புகின்றேன். கிரிக்கெட்டை விட்டு விலகி செல்லும் நிலை என்றாவது உருவாகும் என்றால், எனது சாதனையாக நான் இதனை அடைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்’ என்று உருக்கமாக சொல்கிறார்.

images_(3).jpg

இந்திய அணியில் இடம்பிடித்த பத்தே ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை புரிந்து, கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களில் நம்பிக்கையை ஊன்றியிருக்கும் கோலி, மேலும் மேலும் சாதனைகளை படைப்பார் என்பது உறுதி. இப்போதே ரிக்கி பாண்டிங்குக்கு நிகராக அவரது சாதனைகள் ஒப்பிடப்படுகின்றன. இன்னும் வருங்காலங்களில் தனது தனிப்பட்ட சாதனைகளோடு, அவரது விருப்பப்படியே இந்திய அணியையும் ஆளுமைமிக்கதாக கட்டமைப்பார் என்பதை ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனும் ஆவலோடு நம்பிக் கொண்டிருக்கிறான்.

winner.jpg

எதிர்வரும் உலக கோப்பையில் இந்திய அணி கோலியின் தலைமையில் களம் காணவிருக்கிறது. கோலி கேப்டனாக அதுவொரு புது அனுபவமாக இருக்கும். போலவே, இரண்டு உலக கோப்பை போட்டிகளில் விளையாட்டி உள்ள அனுபவம் அவருக்கும் இருக்கிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் விரும்பும் உலக கோப்பை கனவை கோலியின் தலைமையிலான இந்திய அணி இப்போது சுமந்து கொண்டிருக்கிறது. கோலி பல நெருக்கடி தருணங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைப் போலவே உலக கோப்பையிலும் விளையாட வேண்டுமென இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். அசாதாரண திறன் மிக்கவரான கோலி தனது தலைமையை உறுதியுடன் நிலை நாட்டுவார் என்பதில் எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கிறது. அவரது தந்தை பிரேம் கோலியின் ஆன்மாவும், ஆசிகளும், அதனை செயல்படுத்த கோலிக்கு என்றென்றைக்கும் உறுதுணையாக இருக்கும்.

சிக்ஸர் ப ற க் கு ம்......

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/jun/15/virat-kohlis-true-wish-as-captain-of-indian-cricket-team-2939554--3.html

Link to comment
Share on other sites

6. இரண்டாம் நாயகன்: ஏபி டிவில்லியர்ஸ்

 

 
images

 

'நான் எனது சிறுவனுக்குரிய துறுதுறுப்புகளை எப்போது இழக்கின்றோனோ, அன்றைய தினம்தான் நான் கடைசியாக கிரிக்கெட் விளையாடும் தினமாக இருக்கும். இதுநாள்வரையில் அது நிகழவில்லை என்பதோடு, இன்னும் சில காலத்துக்கு அப்படியொரு தருணம் நேராது என உறுதியாக நம்புகின்றேன். ஆனால், விதி எவரையும் விடாது. எனது இறுதி காலத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் எவ்விதமான முன் அறிவிப்பும் இல்லாமல், திடீரென தோன்றவும் வாய்ப்பிருக்கிறது. அதன்பிறகு, கிரிக்கெட் விளையாட்டில் நான்  நீடித்திருக்க மாட்டேன்.' ஏபி டிவில்லியர்ஸ் (தனது சுயசரிதையில்)

மே 23, 2018  கிரிக்கெட் வரலாற்றில் மற்றுமொரு சகாப்தம் முடிவுக்கு வந்த தினம். இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணி வெளியேற்றப்பட்ட உடனேயே சர்வதேச அளவில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் தென் ஆப்பிரிக்க வீரரான ஏபி டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் டிவில்லியர்ஸின் இந்த திடீர் முடிவு அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  

AB-de-Villiers.jpg

இந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்திய டிவில்லியர்ஸ், தனது ஓய்வு முடிவை அறிவிக்கும் சில தினங்களுக்கு முன்பாகத்தான், அதிகம் வியந்து போற்றப்பட்ட 'ஸ்பைடர்மேன் கேட்ச்’ பிடித்திருந்தார். சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் அலெக்ஸ் ஹெய்ல்ஸ் விளாசிய பந்தை அந்தரத்தில் பறந்து ஒற்றை கையில் டிவில்லியர்ஸ் பிடித்த போது ஒட்டுமொத்த அரங்கமும் ஆர்ப்பரித்து கொண்டாடியது.

தனது அதிரடி ஆட்டத்துக்கும், பீல்டிங்கின்போது எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகின்ற வல்லமைக்கும் பெயர் பெற்ற டிவில்லியர்ஸ் தனது திடீர் ஓய்வு முடிவுக்கு காரணமாக கூறியது, 'நான் மிகவும் சோர்ந்துவிட்டேன்' என்பதைதான்.

இதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. தனது 20-வது வயதில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 2004-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானதில் இருந்து, தனது 34-வது வயதில் ஓய்வு முடிவை அறிவிக்கும் தருணம் வரையில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடியவர் டிவில்லியர்ஸ்.

ஒரேயொரு தருணத்தில் மட்டும்தான், அவர் தனது பர்சனல் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதமான தருணம் ஒன்றிற்காக டெஸ்ட் போட்டியில் இருந்து விருப்ப விடுப்பு எடுத்துக் கொண்டார். 2015-ல் அவரது மகன் பிறந்த தினமே அது. சர்வதேச அளவில் டிவில்லியர்ஸ், நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் மெக்மெல்லன் போன்ற ஒரு சிலரே இவ்வாறாக தொடர்ச்சியாக ஓய்வின்றி கிரிக்கெட் போட்டிகளில் பங்கு கொண்டவர்கள்.

மிஸ்டர் 360 என்பதே டிவில்லியர்ஸை பொதுவாக கிரிக்கெட் ரசிகர்கள் அழைக்கும் பெயர். மைதானத்தில் அனைத்து பகுதிகளுக்கும் பந்தை விளாசி தள்ளக்கூடிய பேராற்றல் கொண்டவர் டிவில்லியர்ஸ். டி வில்லியர்ஸின் 34-வது பிறந்த நாளையொட்டி கிரி்க்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்த விநோத வாழ்த்தில், டி வில்லியர்ஸின் 360 டிகிரி பேட்டிங் ஸ்டைலை குறிக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் புகழ்பெற்ற 360 டிகிரி வகை புகைப்படத்துடன் தனது வாழ்த்துச் செய்தியாக பதிவிட்டிருந்தார் சச்சின் டெண்டுல்கர்.

டிவில்லியர்ஸ் தரையில் முட்டிப்போட்டு ஸ்கொயர் லெக் பகுதியில் அவர் அடிக்கும் சிக்ஸர்கள் ராட்சஸத் தன்மையை கொண்டிருக்கும். டிவில்லியர்ஸ் ஓரிரு ஓவர்கள் களத்தில் நிலைத்து நின்று விட்டால் போதும், நாலாபுறமும் பந்து சிதறப் போவது உறுதி. வேகப்பந்து வீச்சாக இருந்தாலும், சுழல்பந்து வீச்சாக இருந்தாலும், அவரது அசுரத்தனமான ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாது.

ab-de-villiers980-1443013901_1100x513.jp

2015-ல் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான போட்டியில், மிகக் குறைந்த பந்துகளில் (16 பந்துகளில்) அரை சதம், 31 பந்துகளில் சதம் எனபல புதிய உலக சாதனைகளை ஏபி டிவில்லியர்ஸ் நிகழ்த்தினார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், குறுகிய நேரத்திற்குள் இத்தகையை விரைந்து ரன் சேர்க்கும் ஆட்டத்திறன் பெற்ற வீரர்கள் வெகு சொற்பமானவர்களே. சாஹித் அப்ரிடி, பிரயன் லாரா, ஆடம் கில்கிரிஸ்ட் போன்ற ஜாம்பவான்களின் பெயர்களோடு டிவில்லியர்ஸின் பெயரும் இந்த தருணத்திற்கு பின்பாக இணைந்துக் கொண்டது.

ஐ.பி.எல் போட்டித் தொடரில், ஏபி டிவில்லியர்ஸ் பங்கேற்றிருந்த பெங்களூரு அணியின் கேட்பனான விராட் கோலி, டிவில்லியர்ஸை 'நம் காலத்தின் முழுமையான பேட்ஸ்மேன்’ என புகழாரம் சூட்டுகிறார்.  அதேப்போல, 1970 – 80-களில் நட்சத்திர அந்தஸ்து பெற்றிருந்த மேற்கு இந்திய கிரிக்கெட் வீரரான சர் விவியன் ரிச்சர்ட்ஸ், டிவில்லியர்ஸிடம் நேரடியாகவே, 'காலம் காலமாக விளையாடப்பட்டு வரும் கிரிக்கெட் விளையாட்டின் தன்மையையே நீ மாற்றிக் கொண்டிருக்கிறாய். ஒரு காலத்தில் என்னை மக்கள் இப்படித்தான் சொன்னார்கள். இன்று உனக்கு அந்த இடம் கிடைத்திருக்கிறது. நீ கிரிக்கெட் விளையாட்டை அடுத்த நிலைக்கு உயர்த்திச் செல்கிறாய். வாழ்த்துக்கள்’ என பாராட்டியிருக்கிறார்.

14DAF33C000005DC-3775735-image-a-30_1473

டிவில்லியர்ஸ் பொதுவாக டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பதில்லை. பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தையே அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அரிதான ஒன்றிரண்டு தருணங்களை தவிர்த்து விரைவாக ரன்களை குவிப்பதையே தனது இலக்காக டிவில்லியர்ஸ் கொண்டிருந்தார். அதேப்போல, பல விநோதமான ஷாட்டுகளுக்கும் அவர் பிரசித்திப் பெற்றவர். ரசிகர்களின் ஆரவாரத்திற்கு நடுவில் களமிறங்கும் டிவில்லியர்ஸ் தனது புதிய புதிய ஷாட்டுகளால், ரசிகர்களின் வியப்பை அதிகரித்தபடியே இருப்பார். இது சில தருணங்களில் எதிர்மறையான போக்குகளையும் உண்டாக்கியிருக்கிறது.

718474233-ABDeVilliers_6.jpg

சில விமரிசகர்கள் அவரது இத்தகைய சில ஷாட்டுகளை 'இது கிரிக்கெட் விளையாட்டுக்கு உரிய ஷாட்டே அல்ல’ என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். ஆனால், டிவில்லியர்ஸ் 'எனது மனதில் சரியான ஷாட், தவறான ஷாட் என்றெல்லாம் எதையும் நான் கருதுவதில்லை. ஏராளமான ஷாட்டுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் பிரத்யேக தேவையையும், அபாயத்தை ஒருங்கே கொண்டிருக்கிறது. ஒரு சிறந்த ஆட்டக்காரனின் திறன், சூழலுக்கு பொருத்தமான ஷாட்டை தேர்ந்தெடுத்து, அதனை சரியான முறையில் வெளிப்படுத்துவதில் தான் இருக்கிறது’ என்று இத்தகைய விமரிசனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர விளையாட்டாளரான அவருக்கு, இந்தியாவிலும் அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஐ.பி.எல் போட்டித் தொடரின் பயனாக, அவரது ஆட்டத்தை வெகுவாக ரசித்து கொண்டாடும் பலர் உருவாகி விட்டார்கள். டிவில்லியர்ஸுக்கு அவரது இரண்டாவது தாய்நாடு போலவே இந்தியா மாறிவிட்டது. அவர் செல்லும் பகுதிகளில் எல்லாம் ரசிகர்கள் அவரை சூழ்ந்து உணர்ச்சிவயப்பட வைக்கிறார்கள். தனது உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாத டிவில்லியர்ஸ் இது போன்ற தருணங்களை எதிர்கொள்ள முடியாமல் பலமுறை தடுமாறி இருக்கிறார்.

abd.jpg

இவையெல்லாம் துவங்கியது 2012 ஐ.பி.எல் தொடரில்தான். இந்த தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரில் நடைப்பெற்ற போட்டியில் ஆர்.சி.பிக்கு 18 பந்துகளில் 39 ரன்கள் அடிக்க வேண்டிய நெருக்கடியான சூழல் நிலவுகிறது. டிவில்லியர்ஸின் நெருக்கமான நண்பரும், தான் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக அறிமுகமான அதே நாளில் தனது அறிமுகத்தை நிகழ்த்தியவருமான ஸ்டெயின் இப்போது எதிரணியில் இருந்தபடி டிவில்லியர்ஸுக்கு பந்து வீசுகிறார்.

MERGE.jpg

சூழலின் அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை டிவில்லியர்ஸுக்கு உண்டாகிறது. தனது நெருக்கமான நண்பன் என்ற எண்ணத்தை கலைத்துவிட்டு எதிரணி வீரர் என்ற நினைப்புடன் முதல் பந்தை டிவில்லியர்ஸ் எதிர்கொள்கிறார். பந்து சிக்ஸர் பறக்கிறது.

அதுவரையிலும் ஆர்.சி.பி, ஆர்.சி.பி என்று கோஷமிட்டுக் கொண்டிருந்த ரசிகர்கள் உடனடியாக, ஏ.பி.டி, ஏ.பி.டி என மாற்றி உரக்க குரலெழுப்புகிறார்கள். டிவில்லியர்ஸுக்கு மேலும் பொறுப்பு கூடுகிறது. அடுத்தடுத்த பந்துகளையும் விலாசி தள்ளுகிறார். முடிவில் தனது நெருக்கமான நண்பரான ஸ்டெயினின் ஓவரில் தயவு தாட்சணமின்றி 23 ரன்களை சேர்த்திருந்தார். அரங்கத்தில் ஏ.பி.டி, ஏ.பி.டி என்ற சொற்கள் மேலும் மேலும் உறுதியுடன் ஒலித்தபடியே இருக்கிறது.

அடுத்த ஓவரிலும் அதிரடி ஆட்டம் தொடர்ந்தபடியே இருக்கிறது. முடிவில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் ஆர்.சி.பி வெற்றிப் பெறுகிறது. லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்த அந்த மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் திரையில், 'திரைப்படங்களில் மட்டுமே இத்தகைய தருணங்கள் நிகழும்' என்ற சொற்கள் ஒளிர்கின்றன. ஏபி டிவில்லியர்ஸ் ஒட்டுமொத்த இந்திய மக்களின் மனங்களில் அக்கணத்திலேயே இடம் பிடித்துவிட்டார்.

இந்தியாவில் பெங்களூருதான் தனது விருப்பமான பகுதி என்று டிவில்லியர்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். ஒவ்வொருமுறை தான் பெங்களூருக்கு வரும்போதும் அந்த நகரம் வளர்ச்சியுற்றபடியே இருக்கிறது என்றாலும், அதன் பசுமையை இழக்காமல் இருப்பது ஆச்சர்யமளிக்கிறது என்று டிவில்லியர்ஸ் தெரிவித்திருக்கிறார். பெங்களூரின் பரபரப்பாக இயங்கும் சூழலும், அதன் மக்களையும் டிவில்லியர்ஸ் வெகுவாக  நேசிக்கிறார்.

 

டிவில்லியர்ஸ் பொதுவாக தனது உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாதவர். பல சாத்தியமற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் போதும், அதனை பொறுமையுடன் நிதானமாக கடந்துச் செல்வதையே அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். எதிரணியினரை குறித்த அவரது மதிப்பீடு எப்போதும் உயர்வானதாகவே இருந்திருக்கிறது. வெற்றிக்காக கடினமாக போராடும் அவர்களை உதாசீனப்படுத்துவதோ வெறுப்பேற்றும் விதமாக நடந்து கொள்வதோ அவருக்கு விருப்பமில்லை. அதனாலேயே உலகளவில் பல கிரிக்கெட் வீரர்களால் விரும்பப்படும் மனிதராக டிவில்லியர்ஸ் இருக்கிறார்.

Virat-Kohli-and-AB-de-Villiers.jpg

பல விளையாட்டுகளில் மிகச் சிறந்த திறன் பெற்றவராக இருந்தாலும், ஏபி டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டை தேர்வு செய்ததற்கான காரணம், இதுவொரு குழு விளையாட்டு என்பதால்தான். குழுவாக இணைந்து விளையாடுவதில் ஏற்படுகின்ற அதீத மகிழ்ச்சியும், மன உறுதியும் அவருக்கு எப்போதுமே பிடித்தமான விஷயங்கள். தனி நபர் சாதனைகளை விடவும், குழுவாக ஒரு அணி பெறும் வெற்றியே அவருக்கு முக்கியமானதாக இருந்தது.

main-qimg-b7dd9c88d7c8122be22a808cf938b3

டென்னிஸ், ரக்பி, ஹாக்கி, கொல்ஃப் என பல விளையாட்டுகளில் மிகச் சிறிய வயதிலேயே ஈடுபாடுக் கொண்டிருந்த ஏபி டிவில்லியர்ஸ், தான் ஒரு டென்னிஸ் வீரராக உருவெடுக்க வேண்டும் என்பதையே துவக்க காலங்களில் விரும்பினார். அவரது தாயார் ஒரு டென்னிஸ் விளையாட்டு பயிற்சியாளராக இருந்தவர். அதனால், டென்னிஸ் விளையாட்டின் மீது அவருக்கு பெருமளவில் விருப்பமிருந்தது. தாயாரை தவிர்த்து வேறொரு பயிற்சியாளரின் கீழும் டிவில்லியர்ஸ் பயிற்சி பெற்றிருக்கிறார்.

டிவில்லியர்ஸின் சுறுசுறுப்பையும், எதிலும் முனைப்புடன் தீவிரமாக ஈடுபட வேண்டுமென்கின்ற ஆற்றலையும், எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்காத போராட்ட குணத்தையும் கண்டுக்கொண்ட அந்த பயிற்சியாளரான டானி சுலிவன் டிவில்லியர்ஸின் பெற்றோரிடம் ஒருநாள் இவ்விதமாக  தெரிவித்தார்.

'இந்த சிறுவன் முற்றிலும் வேறானவன். இவன் என்றாவது ஒருநாளில் ஏதாவதொரு விளையாட்டில் தென் ஆப்பிரிக்காவின் தேசிய அணிக்காக பங்கெடுத்திருப்பான் அல்லது சிறையில் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள போகிறான்' என்றார். அப்போது ஏபி டிவில்லியர்ஸுக்கு வெறும் ஏழே வயதுதான் ஆகியிருந்தது.

சிக்ஸர் ப ற க் கு ம்...

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/jun/22/ab-de-villiers-and-his-superhuman-cricketing-abilities-2943625--3.html

Link to comment
Share on other sites

7. இரண்டாம் நாயகன்: ஏபி டிவில்லியர்ஸ் – 2

 

 
960c106d-8f91-4cc1-aac8-323279796803

 

1995 நவம்பர் 17ஆம் நாள். உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷான் பொல்லாக் தென் ஆப்பிரிக்க அணிக்காக தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய தினம். சென்ச்சூரியன் பார்க் மைதானத்தில் நடந்த அப்போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தை எதிர்த்து விளையாடிக் கொண்டிருந்தது. பின் காலத்தில் பெரும் சாதனைகளை குவித்த விளையாட்டு வீரரான பொல்லாக்கை அடையாளம் காட்டிய அப்போட்டி எவரும் அறியாத வண்ணம் மற்றொரு சிறப்பையும் பெற்றிருக்கிறது. ஆம். ஏபி டிவில்லியர்ஸ் முதல் முதலாக நேரடியாக மைதானத்தில் அமர்ந்து கிரிக்கெட் போட்டியைப் பார்த்தது அன்றைய தினத்தில்தான்.

மருத்துவரான டிவில்லியர்ஸின் தந்தை, அவரை அந்த போட்டியை காண அழைத்துச் சென்றார். தனது அசாத்தியமான ஃபீல்டிங் திறமையால், ஊடக வெளிச்சமும், பிரத்யேக ரசிகர் பட்டாளமும் ஒருங்கே வாய்க்கப் பெற்றிருந்த ஜான்டி ரோட்ஸின் பெயர் கொண்ட தொப்பியை அணிந்தபடி சென்ச்சூரியன் பார்க் மைதானத்தில் வியப்பு மேலிட போட்டியை டிவில்லியர்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார். டிவில்லியர்ஸும் ஜான்டி ரோட்ஸின் தீவிர பற்றாளர். தன்னை சுற்றி சில மீட்டர் தொலைவுக்கு, எந்தவொரு பந்தும் கடக்க முடியாதபடி அந்தரத்தில் பறந்து பல்டி அடித்து அனைத்தையும் தடுத்துக் கொண்டிருந்த ஜான்டி ரோட்ஸ் டிவில்லியர்ஸை வெகுவாக கவர்ந்திருந்தார். டிவில்லியர்ஸுக்கு அந்த நாளில் மனம் மகிழ்ச்சியில் பூரிந்திருந்தது.

images_(5).jpg

ஆனால், ஒருசில தினங்களுக்குள்ளாகவே ஜான்டி ரோட்ஸ் தொப்பி அவமானகரமாக சூழலை டிவில்லியர்ஸுக்கு உருவாக்கிக் கொடுத்தது. வழக்கமாக தங்களது வீட்டு தோட்டத்தில் தனது இரண்டு மூத்த சகோதரர்கள் மற்றும் அவர்களது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதைப் போலவே அன்றும் விளையாடிக் கொண்டிருந்தார்.

அவர்களுள் டிவில்லியர்ஸ்தான் மிகவும் இளையவர். 11 வயது மட்டுமே அப்போது அவருக்கு ஆகியிருந்தது. அதனால், அவருக்கு பேட்டிங் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நீண்ட நேரமாக ஃபீல்டிங் மட்டுமே செய்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவசமாக தனது கைகளுக்கு வந்த கேட்ச் ஒன்றை டிவில்லியர்ஸ் தப்பவிட்டுவிட்டார்.

கோபத்துடன் டிவில்லியர்ஸை நெருங்கி வந்த அவரது சகோதரரின் நண்பர், 'உனக்கு அந்த தொப்பியை போட அருகதை இல்லை. அதனால் உடனடியாக அதனை கழற்று' என்று உத்தரவிட்டார். டிவில்லியர்ஸுக்கு அழுகைப் பொத்துக்கொண்ட்டு வந்துவிட்டது. மெல்ல தொப்பியை கழற்றி வைத்துவிட்டு, பலவீனமான மனநிலையுடன் விளையாட்டை தொடர்ந்தார்.

அன்றைய நாளின் முடிவில்தான், அவருக்கு பேட்டிங் வாய்ப்பு வழங்கப்பட்டது. தன்னை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க வேண்டும் என்கின்ற உந்துதல் டிவில்லியர்ஸின் மனதில் வளருகிறது. அதனால், தனது விக்கெட்டை பறிக்கொடுக்காமல் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடியபடியே இருக்கிறார். எல்லோரும் சோர்வுக்குள்ளாகிறார்கள். ஆனால், டிவில்லியர்ஸ் விடுவதாக இல்லை. மிக அதிக உறுதியுடன் களத்தில் நிலைத்திருக்கிறார். சிலப்பல தந்திரங்களை கூட அங்கிருப்பவர்கள் நிகழ்த்த முயற்சிக்கிறார்கள். ஆனால், அன்றைய தினத்தில் டிவில்லியர்ஸை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. இறுதியில், பெருமிதத்துடன் தனது ஜான்டி ரோட்ஸ் தொப்பியை மீண்டும் கையிலெடுத்து அணிந்துக்கொள்கிறார்.

ab-de-villier-parents-say-why-he-chose-c

இக்காலங்களில் இருந்தே டிவில்லியர்ஸுக்கு சுய மரியாதை என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. எப்போதும் தன்னை எல்லோரும் சரிநிகராக நடத்த வேண்டுமென்பதே அவரது அதிகபட்ச எதிர்ப்பார்ப்பாக இருந்தது. தனது விடா முயற்சிக்கும், போராடும் குணத்திற்கும் கிடைக்கும் மரியாதையாக அது இருக்க வேண்டும் என டிவில்லியர்ஸ் கருதினார்.

பெலா பெலா பிராந்தியத்தில் தனது சிறுவயதுகளை கழித்த டிவில்லியர்ஸ் அனைத்துவிதமான விளையாட்டுகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த பிராந்தியத்தில் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிமுகமானவர்கள். அதனால், எவருடனும் சட்டென உரையாடலை துவங்கி, எந்த விளையாட்டையும் கண நேரத்தில் துவங்கிவிடும் வாய்ப்பு டிவில்லியர்ஸுக்கு இருந்தது.

திடீரென ஒரு தருணத்தில் கொல்ஃப் விளையாடிக் கொண்டிருப்பார். அல்லது டென்னிஸ் கோர்ட்டில் தனியாக யாரையும் பார்த்தால், அவருடன் இணைந்து உடனடியாக டென்னிஸ் விளையாட்டில் பங்குக்கொள்வார். டிவில்லியர்ஸுக்கு குறிப்பிட்ட ஒரு விளையாட்டு என்பதைவிட, நான் தேர்வு செய்கின்ற எந்தவொரு விளையாட்டிலும் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்கின்ற முனைப்பே அதிகமிருந்தது.

யாருமே இல்லையென்றாலும் கூட, வீட்டில் தனியாக , கிரிக்கெட் பந்தை துணி ஒன்றில் திணிந்து அதனை அந்தரத்தில் தொங்கவிட்டு தனது பேட்டால் அடித்துக்கொண்டிருப்பது டிவில்லியர்ஸுக்கு வாடிக்கையாகவே இருந்தது.

அதோடு அக்காலத்தில் அவர், தீவிரமான டென்னிஸ் பயிற்சியையும் மேற்கொண்டிருந்தார். டானி சுலிவன் மற்றும் அவரது தந்தையான ஓம் டெரிக்கே அவரது பயிற்சியாளர்கள். இருவரும் அவருக்கு பல நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார்கள். இந்த பயிற்சிகள்தான் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கே அடித்தளம் அமைத்துக்கொடுத்தது என பின்னாளில் டிவில்லியர்ஸ் நினைவு கூர்கிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரால் டென்னிஸில் நீண்ட தினங்கள் நீடிக்க முடியாமல் ஆகிறது.

BORIS-BECKER.jpg

புகழ்பெற்ற ஜெர்மானிய டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கரைப் போல பந்தை காற்றில் வீசி, அதனை தரையில் இருந்து எகிறி டென்னிஸ் மட்டையால் அடிக்கும் பயிற்சி டிவில்லியர்ஸுக்கு அளிக்கப்பட்டது. என்றாலும், அவரால் அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. தனது வயதுக்கும், உயரத்திற்கும் டென்னிஸ் ஒத்துவராது என்ற எண்ணம் டிவில்லியர்ஸுக்கு உண்டாகிறது.

பின்னர் தனது உயர்நிலை கல்வியை ஆஃபீயஸில் பயின்ற டிவில்லியர்ஸுக்கு மேலும் ஓரு பயிற்சியாளர் கிடைத்தார். ஆஃபீயஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான டியான் போட்ஸ், பேட்டிங் குறித்து தான் அறிந்து வைத்திருந்த அத்தனை விவரங்களையும் டிவில்லியர்ஸிடம் பகிர்ந்துக்கொண்டார்.

“டியான் போட்ஸ்தான் எனக்கு முதல் முதலாக பேட்டிங் சார்ந்த புரிதலை உண்டாக்கியவர். நான் எவ்விதமாக பேட்டை பிடிக்க வேண்டும். கிரீஸில் எப்படி நிற்க வேண்டும். எப்படி பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்றெல்லாம் நிதானமாக எனக்கு சொல்லிக் கொடுத்தார். அதற்கு முன்பு எத்தனை வேகமாக பந்தை விலாசி தள்ள முடியுமோ அந்தளவுக்கு வேகமாக அடிக்க வேண்டுமென்பதே எனது பேட்டிங் சார்ந்த புரிதலாக இருந்தது” என டியான் போட்ஸ் பயிற்சியை டிவில்லியர்ஸ் மிகுந்த போற்றுதலோடு பகிர்ந்துக்கொள்கிறார்.

நான்கு வருடங்கள் ஆஃபீயஸ் அணிக்காக விளையாடிய டிவில்லியர்ஸ் மொத்தமாக 1839 ரன்களை குவித்திருந்தார். ஆனால், அதைவிடவும் கூடுதலான ரன்களை குவித்தவர் ஒருவர் அப்பள்ளியில் இருந்தார். 3190 ரன்களை சேர்த்திருந்த அந்த மனிதர்தான் தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக பதவி வகிக்கும் டூப்ளஸிஸ். டிவில்லியர்ஸுன், டூப்ளஸிஸும் அக்காலத்தில் இருந்தே நெருக்கமான நண்பர்களாக வளர்ந்து வந்தார்கள்.

பள்ளி கல்வியை முடித்ததும், டிவில்லியர்ஸ் விளையாட்டு அறிவியல் பிரிவில் கல்லூரியில் இணைகிறார். தனது தந்தை ஒரு மருத்துவர் என்பதால் கல்வி குறித்த சகல சந்தேகங்களையும் மாலையில் அவருடன் உரையாடி அறிந்துக்கொள்வது டிவில்லியர்ஸுக்கு மகிழ்வு அளிக்கக்கூடிய தருணங்களாக இருந்தது. டிவில்லியர்ஸ் படிப்பில் அதிக கவனத்தை செலுத்தி வந்தார்.

இந்நிலையில் அவரது வாழ்க்கையையே அடியோடு மாற்றிப்போடும் தொலைப்பேசி அழைப்பொன்று அவருக்கு வந்தது. டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளரான டேவ் நாஸ்வர்த்திதான் தொலைபேசியில் அழைத்தவர்.

'2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வார்ம் அப் போட்டியில் டைட்டன்ஸ் அணியில் இணைந்து விளையாட விருப்பமா?' என்று டிவில்லியர்ஸிடம் முற்றிலும் எதிர்பாராத வகையில் அவர் கேட்டார். முன்னதாக, ஆஃபீயஸ் அணியில் டிவில்லியர்ஸின் ஆட்டத்தை பார்த்து அவரது திறனை வெகுவாக ரசித்திருந்த டேவ் நாஸ்வர்த்தி டிவில்லியர்ஸுக்கு இந்த வாய்ப்பினை அளிக்க முன்வந்திருந்தார்.

டிவில்லியர்ஸுக்கு ஒருகணம் எதுவுமே புரியவில்லை. புகழ்பெற்ற டைட்டன்ஸ் அணியில் தனக்கு விளையாட அழைப்பு விடப்பட்டிருப்பதை எண்ணி வியப்பில் பதிலேதும் பேசாமல் தொலைப்பேசியை காதில் வைத்தபடியே பரவசத்துடன் பேச்சற்று நின்றிருந்தார். அவரால் அக்கணத்தை நம்ப முடியவில்லை. உதடுகள் சொற்களை உளற தனது சம்மதத்தை டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

abd-1-1407648977.jpg

அந்த போட்டியில் டிவில்லியர்ஸுக்கு, தென் ஆப்பிரிக்கா அணியின் வரலாற்று நாயகனான காலிஸுடன் இணைந்து ஆட்டத்தை துவங்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒருபக்கம் தான் கனவுலகில் சஞ்சாரம் செய்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தாலும் மறுப்பக்கம் தனது ஆட்டத்தையும் மிகுந்த கவனத்துடன் டிவில்லியர்ஸ் வடிவமைத்துக் கொண்டார். முடிவில் 109 ரன்களில் அவர் அவுட் ஆக, டைட்டன்ஸ் அணிக்கான விளையாடிய தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்த வீரர் எனும் பெருமை அவருக்கு கிடைத்தது. டேவ் நாஸ்வர்த்தியின் நம்பிக்கை பொய்க்கவில்லை. எதிர்கால தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக மிகச் சிறந்த விளையாட்டு வீரர் ஒருவரை டேவ் நாஸ்வர்த்தி கண்டடைந்திருந்தார்.

மீண்டும் மீண்டும் டேவ் நாஸ்வர்த்தி டிவில்லியர்ஸுக்கு பல வாய்ப்புகளை வழங்கியபடியே இருந்தார். இதனால், கல்லூரி படிப்பை தொடர முடியமல் ஆகிறது. விளையாட்டில் முழுமையான கவனத்தை செலுத்துகிறார். கடினமான உழைப்பை கோரும் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்கிறார்.

அவரது பெற்றோருக்கும், டிவில்லியர்ஸ் கல்லூரி படிப்பை விட விளையாட்டில் கவனம் செலுத்துவதுதான் முறையென்று படுகிறது. பல உலக நாடுகளுக்கு பயணிக்கும் சந்தர்ப்பமும் அவருக்கு வாய்த்தது. டிவில்லியர்ஸ் தனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்திக்கொண்டார். சதத்திற்கு மேல் சதம் பறந்துக்கொண்டே போனது. டிவில்லியர்ஸ் இந்த நாட்களில் முழுமையான அதிரடி ஆட்டக்காரராக மாறியிருந்தார்.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி டிவில்லியர்ஸுக்கு மீண்டும் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது. ஆனால், இந்த முறை அழைத்தது டேவ் நாஸ்வர்த்தி அல்ல. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைவர்களுள் ஒருவரான, ஹாரூன் லோர்காட்.

'ஏபி, இன்னும் இரண்டு வார காலத்தில் போர்ட் எலிசபெத் மைதானத்தில் இங்கிலாந்து எதிராக தொடங்கவுள்ள போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக உங்களை துவக்க ஆட்டக்காரராக களம் இறக்க விரும்புகிறோம். உங்களுக்கு சம்மதமா?'.

சிக்ஸர் பறக்கும்... ...  

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/jun/29/ab-d-2948469--2.html

Link to comment
Share on other sites

மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருந்தும் தென் ஆப்பிரிக்க அணி இதுவரை உலக கோப்பை வெல்லாதது ஏன்?

 

 
718474233-ABDeVilliers_6

என்னைப் பொருத்தவரையில் கிரிக்கெட் விளையாட்டின் வெற்றி என்பது, எந்த அளவுக்கு நாம் எதிரணி வீரர்களின் மீது அழுத்தத்தை சுமத்துக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. ஒரு பேட்ஸ்மேன் எப்போதும் சுதந்திரமாக ரன்களை சேர்ப்பதன் மூலம், பந்து வீச்சாளருக்கு நெருக்கடியை உண்டாக்க வேண்டும். ஒரு பந்து வீச்சாளர் ரன்களை அதிகம் விரயம் செய்யாமல் பேட்ஸ்மேனுக்கு நெருக்கடியை உண்டாக்க வேண்டும். கிரிக்கெட் விளையாட்டின் சாரம்சமே இவ்வாறு தங்களுக்கு நேர்கின்ற அழுத்தங்களை மற்றவருக்கு மடைமாற்றம் செய்வதில்தான் இருக்கிறது.’ - ஏபி டிவில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பல சிறப்பு வாய்ந்த வீரர்களை வரலாறு நெடுகிலும் கொண்டிருக்கிறது. கேரி கிரிஸ்டன், காலிஸ், ஆலன் டொனால்ட், லான்ஸ் குளூசினர், ஜான்டி ரோட்ஸ், கிப்ஸ், ஆம்லா என ஒவ்வொருவரும் பெரும் சாதனைகளை நிகழ்த்தியவர்கள். உலகின் நம்பர் 1 கிரிக்கெட் அணி என்கின்ற பெருமைக்கு எப்போதும் தகுதியுடைய அணி தென் ஆப்பிரிக்கா. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பல தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை பெற்றிருந்தாலும், இதுவரையிலும் உலக கோப்பை பெற்றிராத அணிகளில் ஒன்றாகவே அது இருக்கிறது. காலம்காலமாக, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்களின் பெரும் கனவுகளில் ஒன்றாக இன்னமும் உலக கோப்பை நிலைப் பெற்றிருக்கிறது.

south-african-team1.jpg

ஒவ்வொரு முறை தென் ஆப்பிரிக்கா அணி உலக கோப்பை தொடரில் பங்கேற்கும்போதும், பெரும் எதிர்பார்ப்புடன் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் அதனை ஏபி டிவில்லியர்ஸ் பார்த்துக் கொண்டிருப்பார். வெற்றி பெறுகின்ற போது பெருத்த ஆரவாரத்தையும், தோல்வி அடைகின்ற போது, கட்டுப்படுத்த முடியாத அழுகையையும் டிவில்லியர்ஸ் இயல்பாக வெளிப்படுத்தி விடுவார். அவரது பெரும் லட்சியங்களில் ஒன்றாகவே உலக கோப்பை சிறு வயதுகளில் இருந்தே இருந்து வந்தது. சர்வதேச அளவில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய பல வீரர்களை கொண்ட அணி தென் ஆப்பிரிக்கா என்கின்ற பெருமிதம் ஏபி டிவில்லியர்ஸுக்கு எப்போதும் உண்டு.

அதனாலேயே, 2004-ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம் பெற்றபோது, அங்கிருந்த ஒவ்வொரு சக வீரர்களிடம் பிரம்மிப்புடன் தானே நெருங்கிச் சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். ஆனால், அதே சமயத்தில், அவர்களை தொந்தரவு செய்யும் விதமாக தனது செயல் இருந்து விடக்கூடாது என்பதிலும் அதிக கவனத்துடன் இருந்தார். மிக நிதானமாக ஒவ்வொரு வார்த்தையையும் தேர்ந்தெடுத்து பேசினார்.

smith.jpg

முதல் தொடரிலேயே காலிஸ், ஸ்மித், பவுச்சர் போன்ற பெரும் சாதனையாளர்களுடன் இணைந்து விளையாடும் சந்தர்ப்பம் டிவில்லியர்ஸுக்கு உண்டாகிறது. இந்த மூவரும் தான், அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் துவக்க காலத்தில் மிகப்பெரிய நம்பிக்கையையும், அவரது ஆட்டத்திறனை வளர்த்தெடுக்க பல்வேறு அறிவுரைகளையும் சொல்லி டிவில்லியர்ஸை ஊக்கப்படுத்தியவர்கள்.

dc-Cover-fmktcbf40aj022j6tm70afu4d5-2016

குறிப்பாக, காலிஸுடன் 44 டெஸ்ட் போட்டிகளில் டிவில்லியர்ஸ் இணைந்து விளையாடி இருக்கிறார். அதில் 13 முறை 100 ரன்களுக்கும் மேலாக இவர்களது இணை சேர்த்திருக்கிறது. பல நெருக்கடி தருணங்களில் காலிஸ் டிவில்லியர்ஸுக்கு மிகப் பெரிய தன்னம்பிக்கையை விதைப்பவராக இருந்திருக்கிறார். காலிஸ் பொதுவாக எவருடனும் அதிகம் கலந்துப் பழக விரும்பாத இயல்பு கொண்டவர். விளையாட்டில் மட்டுமே அவரது முழுமையான கவனம் எப்போதும் இருந்த வண்ணமிருக்கும். உலகளவில்கூட காலிஸ் போன்ற திறன் வாய்ந்த ஆல் ரவுண்டர் எவருமில்லை என உறுதியாக சொல்லலாம்.

டிவில்லியர்ஸ் தானே நெருங்கிச் சென்று ஒவ்வொருமுறையும் காலிஸுடன் உரையாடலில் பங்குக கொள்வார்.  சர்வதேச அரங்கில் சில சதங்களையும் கடந்திருந்த நிலையிலும், காலிஸின் அதீத அனுபவ அறிவு டிவில்லியர்ஸுக்கு தேவையாய் இருந்தது. களத்தில் மட்டுமல்லாது, பயிற்சிகளின் போதும் காலிஸ் பல நுணுக்கங்களை டிவில்லியர்ஸுடன் பகிர்ந்து கொள்வார்.

Kallis1.jpg

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி ஒன்றில் தனது முதல் டெஸ்ட் சதத்தை நோக்கி டிவில்லியர்ஸ் நகர்ந்துக் கொண்டிருந்தபோது, அவருடன் களத்தில் இணைந்திருந்தது காலிஸ்தான். டிவில்லியர்ஸ் 98 ரன்களை கடந்துவிட்டதும் அவருக்கு பதற்றம் அதிகரித்துவிட்டது. சர்வதேச அளவில் முதல் முறையாக சதத்தை நெருங்கும் பரவசமான அதே சமயத்தில் ஷாட்டை தேர்வு செய்வதில் பெரும் குழப்பங்களும் மிகுந்திருக்கும் தருணம் அது. 

அப்போது அவரை நெருங்கிச் சென்ற காலிஸ், ‘அமைதியாக இரு இளைஞனே. சதம் உன்னை நெருங்கி வரும். அதுவாக உன்னை நெருங்கி வரும்’ என்று அறிவுரை கூறினார். அதிரடியாக விளையாடக் கூடிய இயல்பை பெற்றிருந்த டிவில்லியர்ஸ் காலிஸின் அனுபவ பகிர்வுகளின் மூலமாகவே டெஸ்ட் போட்டியில் நிதானத்தை கையாளும் திறனை கற்றறிந்தார்.

 

தென் ஆப்பிரிக்கா அணி இக்காலங்களில் ஸ்மித் தலைமையில் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தது. தனது 22-வது வயதிலேயே கேப்டன் பொறுப்புக்கு வந்துவிட்ட ஸ்மித், துடிப்புமிக்க இளைஞராக தென் ஆப்பிரிக்கா அணியை தலைமை ஏற்று பல சாதனைகளை கடக்க காரணமாக இருந்தவர். அவரது தலைமையில்தான் 1965க்கு பிறகு இங்கிலாந்து அணியை அவர்களது நாட்டிலேயே வீழ்த்திய சாதனையை தென் ஆப்பிரிக்கா அணி செய்தது.

Graeme-Smith.jpeg

அதே போல, ஆஸ்திரேலிய அணியையும் அவர்கள் நாட்டிலேயே வைத்து வீழ்த்தியது. ஸ்மித்தின் தலைமை பண்புகளை டிவில்லியர்ஸ் வெகுவாக வியந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவரது ஆட்ட சாதூர்யங்களும், அணியை கட்டுக்கோப்புடன் முன்னகர்த்தி செல்கின்ற திறனும் டிவில்லியர்ஸை வெகுவாக கவர்ந்தது.

டிவில்லியர்ஸ் மோசமான ஃபார்மில் தவித்துக் கொண்டிருந்த காலங்களில் கூட ஸ்மித் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை அளித்து அவர் மீண்டும் ஃபார்முக்கு வரக் காரணமாக இருந்திருக்கிறார்.

ஆனால், இவர்கள் இருவரையும் விட டிவில்லியர்ஸ் தனக்கு மிகவும் நெருக்கமான தோழமையாக உணர்ந்தது மார்க் பவுச்சரைதான். ஆட்டவரிசையில் ஆறு அல்லது ஏழாவது ஆட்டக்காரராக களமிறங்கும் பவுச்சர், எந்த நிலையில் இருந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லக் கூடிய அசாதாரண திறன் மிக்கவர். அவரது போராட்ட இயல்பு டிவில்லியர்ஸை வெகுவாக கவர்ந்திருந்தது. தானும் அதே போன்றே அணியை வெற்றியின் பாதைக்கு இழுத்துச் செல்கின்ற வீரராக இருக்க வேண்டும் என்றே டிவில்லியர்ஸ் விரும்பினார்.

இந்த நிலையில், பவுச்சர் இல்லாத தருணங்களில் டிவில்லியர்ஸ் விக்கெட் கீப்பர் பொறுப்பையும் சுமக்க வேண்டியிருந்தது. அதனால், தென் ஆப்பிரிக்காவின் அடுத்த விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸ்தான் என்ற பேச்சுகள் அதிகரித்தபடியே இருந்தது. பவுச்சருக்கும், டிவில்லியர்ஸுக்கும் இதனால் மனரீதியாக இடைவெளி உண்டாகலாம் என கருதப்பட்ட நிலையிலும், பவுச்சர் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல், டிவில்லியர்ஸை உற்சாகப்படுத்துவதை தொடர்ந்தபடியே இருந்தார்.

imgmark-boucher.jpg

‘ஒவ்வொருமுறை நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போதும், பவுச்சர்தான் என்னை முதலில் பாராட்டி உற்சாக மூட்டுவார். அதே போல, ஒவ்வொருமுறை மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மனம் வெளிறிய நிலையில் பெவிலியன் திரும்பும்போதும், பவுச்சர்தான் முதலில் என்னை அரவணைத்து ஆறுதல் வார்த்தைகள் கூறுவார்’ என்று பவுச்சர் உடனான தனது அனுபவங்களை டிவில்லியர்ஸ் பகிர்ந்து கொள்கிறார்.

உண்மையில், டிவில்லியர்ஸுக்கு விக்கெட் கீப்பராக நீடிப்பதில் அதிகளவில் விருப்பமில்லை. மைதானத்தில் அனைத்து திசைகளிலும் பாய்ந்து பாய்ந்து பீல்டிங் செய்வதையே அவர் விரும்பினார். ஜான்டி ரோட்ஸின் ரசிகர் அல்லவா? அதனால் அவருக்கு பீல்டிங்கில் சிறப்பாக பரிணமிக்க வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது. எனினும், அணியின் கட்டாயத்தால் விக்கெட் கீப்பராக நீடிக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது.

download_(5).jpg

தொடர்ச்சியாக விக்கெட் கீப்பராக நீடித்தது அவரது ஆட்டத்திறனையும் பாதித்ததாகவும் கருதப்படுகிறது. ஒரு இன்னிங்க்ஸ் முழுவதும் அதீத கவனத்துடன் ஸ்டம்புகளின் பின்னால் குனிந்து நின்றுவிட்டு, மீண்டும் வந்து பேட்டிங்கை தொடர்கையில் அவருக்கு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தது. எனினும், தென் ஆப்பிரிக்கா அணிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருந்த டிவில்லியர்ஸ் அதனை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் அணியின் தேவையை சிறப்புற பூர்த்தி செய்வதில் மட்டுமே தனது கவனத்தை குவித்திருந்தார்.

2008 ஏப்ரல் 4-ம் தேதி. அகமதாபாத்தில் இருக்கும் சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறது. அதற்கு முந்தைய தின மாலையில் பால் ஹாரீஸுடன் டிவில்லியர்ஸ் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் பால் ஹாரீஸ், ‘இந்தப் போட்டியில் நீ இரட்டை சதம் அடிக்கப் போகிறாய்’ என்கிறார். டிவில்லியர்ஸுக்கு தூக்கிவாரிப்போடுகிறது. ‘ஏன் அப்படி சொல்கிறாய்?’ என்று வியப்புடன் கேட்க, ‘எனது உள்ளுணர்வு அப்படிச் சொல்கிறது’ என எவ்வித பரபரப்புமின்றி சாத்விதமான முறையில் பால் ஹாரீஸ் டிவில்லியர்ஸிடம் தெரிவித்தார்.

man_of_the_match.jpg

 

 

விநோதமான முறையில் அவர் சொன்னது அப்படியே பலித்தது. அன்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 217 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பெரும் மகிழ்ச்சி அவரை சூழ்கிறது. வீட்டில் இருந்து தனது பெற்றோர் இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்கின்ற எண்ணம் எழுகிறது. மனம் கட்டுப்பாடற்ற நிலையில் பரவசத்தில் ஆழ்ந்திருந்தது. தான் தேர்வு செய்த கிரிக்கெட் விளையாட்டுக்கு முதல் முறையாக நியாயம் செய்திருப்பதாக டிவில்லியர்ஸ் கருதுகிறார். சுபர்மதி நதிக்கரையில் அமைந்திருக்கும் அகமதாபாத் நகரத்திலிருந்து, அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மற்றுமொரு இன்னிங்க்ஸ் அன்றைய தினத்தில் இருந்து துவங்கியது.

சிக்ஸர் பறக்கும்… …    

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/jul/06/the-south-african-cricket-teams-have-always-had-great-players-why-are-they-not-able-to-win-a-world-c-2953809--3.html

Link to comment
Share on other sites

9. ஏபி டிவில்லியர்ஸ் கடைபிடிக்கும் பிரத்யேக ஸ்டைல் எது தெரியுமா?

 

 
ABD

 

ஏபி டிவில்லியர்ஸ் பொதுவாக எப்போதும் தன்னுடன் நான்கைந்து பேட்டுகளை வைத்திருப்பார். ஒவ்வொரு போட்டித் துவங்கும் முன்பாகவும், அவைகளை ஒவ்வொன்றாக பரிசோதித்து சரியான பேட்டினை தேர்வு செய்வது அவரது வழக்கம். ஒரு பேட் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கிறதென்றால், அதனை உடையும் வரையில் தொடர்ச்சியாக பயன்படுத்துவது அவரது ஸ்டைல். அதே போல, மிகச் சிறந்த தன்மைகளை கொண்ட பேட்டினை வலைப் பயிற்சிகளின் போது தொடவே மாட்டார்.

ஒரு பேட் மிக நீண்ட காலம் பயன் தரக் கூடியதாகவும் இருக்கலாம் அல்லது ஒரே வாரத்தில் உடைந்து சிதைவுக்குள்ளாவதும் நிகழலாம். டிவில்லியர்ஸ் கவனமாக, அடையாளத்துக்காக ஒவ்வொரு பேட்டின் கைப்பிடியிலும் 1,2,3,4 என எண்களை குறிப்பிட்டிருப்பார்.  

போலவே, கூக்காபுரா நிறுவன பேட்டுகளைதான் தனது 16 வயது வயதிலிருந்தே டிவில்லியர்ஸ் பயன்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலிய நிறுவனத்தின் உற்பத்தியான அதனை டிவில்லியர்ஸிடம் பாதுகாப்பாக சேர்க்கும் பொறுப்பினை கிரிஸ் ப்ரயனாட் என்பவர் ஏற்றிருந்தார். பேட் மட்டுமல்லாது, கை கிளவுஸ்கள், கால் பேடுகள், தொடை பேடுகள் என அனைத்தையும் டிவில்லியர்ஸிடம் சேர்க்கும் பொறுப்பு கிரிஸ் ப்ரயனாட் உடையதுதான். மிக உயரிய பண்புகளை கொண்ட அந்த மனிதரின் மீது டிவில்லியர்ஸுக்கு அதீத நம்பிக்கையும், அன்பும் இருந்து வந்தது.

டிவில்லியர்ஸ் ஒவ்வொரு முறை கிரிக்கெட் விளையாட களமிறங்கும் போதும், அவரது இடுப்பு பகுதியில் சிறிய கைக்குட்டை ஒன்று சொருகி இருக்கும். அவரது சுறுசுறுப்பான இயல்புக்கு அந்த கைக்குட்டை மேலும் கூடுதலான வசீகரத்தன்மையை அளிக்கும். ஆனால், எளிதாக உடல் வியர்க்கக் கூடிய இயல்பை கொண்டிருந்த டிவில்லியர்ஸ் கைக்குட்டை இல்லையென்றால், களத்தில் நிதானமாக விளையாட முடியாத சூழல் உண்டாகிவிடும். அந்த சிறிய கைக்குட்டை அவரது மனநிலையை சமன்படுத்தும் மிகப் பெரிய பாத்திரத்தை ஏற்றிருந்தது.

ab-de-villiers.jpg

பொதுவாக, தோள்பட்டையில் பேட் (Pad) அணிய விரும்ப மாட்டார். பந்து வீச்சாளரின் முன் தன்னை அது பலவீனமானவனாக காண்பிக்கிறது என்பதாலேயே அதனை பயன்படுத்துவதில்லை என கூறும் டிவில்லியர்ஸ், ஸ்பின் பவுலிங்கின் போது கூட ஹெல்மட்டை கழற்றும் வழக்கமில்லாதவர்.

‘ஏனெனில், மைதானத்தில் பந்து எவ்விதமாக எதிர்வினை புரியும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. மிக குறைவான வேகம் கொண்ட பந்து கூட சட்டென எகிறி என் முகத்தை சேதப்படுத்தி விடும் வாய்ப்பு இருக்கிறது. உண்மையில், ஹெல்மெட் அணியாமல் பேட்டிங் செய்யும் வீரர்களை பார்க்கும் போது, அது அவர்களது துணிச்சலின் வெளிப்பாடு என்ற எண்ணத்தை விட, அது மிக மிக முட்டாள்தனமான செயல் என்றே நான் நினைத்துக்கொள்வேன்’ என்று டிவில்லியர்ஸ் இதனை குறிப்பிடுகிறார்.

டிவில்லியர்ஸ் தனது உடல் நலத்தின் மீது அதிக அக்கறை செலுத்தக் கூடியவர் தான் என்றாலும், சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்ததில் அவரால் தனது உடலை நலத்தை கவனித்துக் கொள்ள முடியாமல் இருந்தது. பலமுறை மறுநாள் போட்டியை வைத்துக் கொண்டு முந்தைய இரவில் தூக்கமின்மையால் அவர் தவித்திருக்கிறார். ஒரு சில போட்டிகளில், பேட்டிங்கின் இடைவெளியில் விடப்படுகின்ற உணவு மற்றும் தேனீர் தருணங்களில் லேசாக கண்ணயர்ந்து தூங்கிவிடும் வழக்கமும் டிவில்லியர்ஸுக்கு உண்டு.

தனது 20-வது வயதில் தென் ஆப்பிரிக்க அணிக்காக முதல் டெஸ்ட்டை விளையாடிய டிவில்லியர்ஸ் 34 வயதுக்குள் முழுமையாக ஆற்றலை இழந்து விட்டதாக, ஓய்வு அறிவித்த தினத்தில் கூறியது இத்தகைய காரணங்களால் தான்.

சர்வதேச அளவில், மிகக் குறைந்த பந்துகளில் 50, 100, 150 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனை டிவில்லியர்ஸிடம்தான் இருக்கிறது. 2015 உலக கோப்பை தொடரின் பின்பாக, தர வரிசை பட்டியலில் முதல் இடத்தையும் டிவில்லியர்ஸ் பெற்றிருந்தார். உண்மையில், தனக்கு சோர்வாக இருக்கிறது அவர் அறிவித்திருந்தாலும், அவர் ஃபார்ம் இன்னமும் உச்சத்தில்தான் இருந்துக் கொண்டிருக்கிறது.

3588749423001_4893702617001_MOmab.jpg

பல போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தால், ரசிகர்களிடத்தில் நினைவலைகளை உருவாக்கி இருக்கும் டிவில்லியர்ஸ் தனது மிகச் சிறந்த இன்னிங்க்ஸ் என கருதுவது, பாகிஸ்தானுக்கு எதிராக 2010-ல் விளையாடிய இரண்டாவது டெஸ் போட்டியைத்தான். அபு தாபியில், நவம்பர் 21-ம் தேதி அந்த போட்டி நடந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் டிவில்லியர்ஸின் வாழ்க்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

அவரது தாயாரின் பிறந்த தினம் அது. டிவில்லியர்ஸின் துடிப்பான இயல்புக்கும், எதிலும் முனைப்புடன் ஈடுபடும் ஆற்றலுக்கும் முக்கிய காரணமாக விளங்குபவர் அவரது தாயார்தான். சிறுவயதில் பலவிதமான விளையாட்டுகளில் டிவில்லியர்ஸ் ஈடுப்பட்டிருந்த போதும், அவரை உற்சாகமூட்டி அவரது திறன்கள் வளர காரணமாக இருந்தவர் அவர்தான்.

அன்றைய போட்டியில், டிவில்லியர்ஸ் தாய் தனக்கு செய்துக் கொடுத்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி செலுத்த வேண்டுமென முடிவெடுக்கிறார். போட்டித் தொடங்குகிறது. பந்துகளை நாலாபுறமும் விளாசித் தள்ளுகிறார். ரன்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன. விரைவாக தனது இரண்டாவது இரட்டை சதத்தை அன்று நிறைவு செய்கிறார். அதோடு, அதுநாள் வரையிலும் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவரின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் என்றிருந்த ஸ்மித்தின் 277 ரன்களை கடந்து, புதிய சாதனையை நிகழ்த்துகிறார்.

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக ரன்களை குவித்தவர் என்கின்ற சாதனை டிவில்லியர்ஸுக்கு வந்து சேர்கிறது. இத்தனைக்கும் அன்றைய போட்டியில் அணியின் கேப்டனாக இருந்தவர் ஸ்மித். விரைந்து போட்டியை டிக்ளேர் செய்யாவிட்டால் எதிரணியினருக்கு சாதகமாக போட்டி போய்விடலாம் என்கின்ற நிலையிலும், தனது சாதனையை டிவில்லியர்ஸ் கடந்துச் செல்ல அனுமதித்தபடி அமைதியுடன் இருந்தார். டிவில்லியர்ஸ் தனது தாயாருக்கு மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசினை அன்றைக்கு அளித்திருந்தார். பின்னாளில், மற்றொரு அசுரத்தனமான தென் ஆப்பிரிக்க ஆட்டக்காரரான ஆம்லாவால் இந்த சாதனை முறியடிக்கப்பட்டது என்றாலும், அன்றைய தினத்தை டிவில்லியர்ஸால் ஒருபோதும் மறக்க முடியாது.     

skysports-ab-de-villiers-south-africa-od

டிவில்லியர்ஸ் பேட்டிங் அசாதாரணத்தன்மை கொண்டது. அவரைப் போல பந்துகளை அதிரடியாக எதிர்கொள்ளக் கூடிய வீரர் சமகாலத்தில் எந்தவொரு கிரிக்கெட் அணியிலும் இல்லை. பந்துகளை விளாசுவதில் பன்முகத்தன்மை கொண்டிருப்பார். இதுதான் அவரது பிரத்யேகமாக ஷாட் என எதையும் அடையாளமாக சொல்ல முடியாதபடி, புதிது புதிதான பேட்டிங் உத்திகளை டிவில்லியர்ஸ் தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதிலும் படைத்தபடியே இருந்தார். முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவானான ரிக்கி பாண்டிக், ‘டிவில்லியர்ஸ் ஒரு லெஜெண்ட்’ என்று வியந்தோதுகிறார்.

டிவில்லியர்ஸின் பெரும் எதிர்பார்ப்புகளில் ஒன்றான உலக கோப்பை போட்டித் தொடர் 2015ல் நடைப்பெற்றது. அந்த  தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு தலைமையேற்கும் பொறுப்பு டிவில்லியர்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. டிவில்லியர்ஸ் மிகுந்த தன்னம்பிக்கையுடன் அந்த போட்டித் தொடரை எதிர்ப்பார்த்திருந்தார்.

1999-ம் வருடத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டித் தொடரின், அரை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் வெற்றிப் பெற தென் ஆப்பிரிக்க அணிக்கு கடைசி ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே தேவையாய் இருந்தது. புகழ் பெற்ற இடதுகை ஆட்டக்காரரான லான்ஸ் க்ளூசினர் களத்தில் நிற்கிறார். எதிர் முனையில் ஆலன் டொனால்ட் இருக்கிறார். முதல் இரண்டு பந்துகளில் க்ளூசினர் பவுண்டரிகளை விலாசிவிட்டார் என்றாலும், அடுத்த பந்தை ரன் எதுவும் எடுக்காமல் விட்டுவிட்டார். இதனால் பதற்றம் அதிகரித்தபடியே இருக்கிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் பிட்ச்சுக்கு நெருக்கத்தில் வட்டமாக நின்றிருக்கிறார்கள்.

images_(5)1.jpg

நான்காவது பந்தை க்ளூசினர் விலாசுகிறார். ஆனால், பீல்டர் அதனை தடுத்து விடுகிறார். க்ளூசினர் மறுமுனை ஓடிவிட, டொனால்ட் அங்கேயே நின்று விட்டார். அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவியது. வீட்டு தொலைக்காட்சியில் இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஏபி டிவில்லியர்ஸ் தனது படுக்கை அறைக்குள் நுழைந்து எவரும் அறியாதபடி தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார். அன்றையிலிருந்தே டிவில்லியர்ஸுக்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தென் ஆப்பிரிக்க ரசிகர்களும் தகுதி வாய்ந்த தங்களது தேசம் ஒரு நாள் நிச்சயம் உலக கோப்பையை வென்றே தீரும் என்ற கனவுகளை வளர்த்து கொண்டனர்.

2015 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணியை டிவில்லியர்ஸ் தலைமையேற்று முன்னகர்த்தினார். அதீத நம்பிக்கை டிவில்லியர்ஸுக்கு இருந்தது. உலகின் மிகச் சிறந்த அணியான தாங்கள், பல ஆண்டுகளாக சுமந்து கொண்டிருக்கும் உலக கோப்பை கனவை நிஜமாக்கப் போகிறோம் என்று திடமாக நம்பினார். ஒரு சிறிய குறிப்பு புத்தகம் ஒன்றை உருவாக்கி, அதில் ஒவ்வொரு போட்டி முடிவடைந்த உடனும், தங்களது எண்ணத்தை வீரர்கள் பதிவு செய்ய வேண்டுமென சொல்லியிருந்தார். டிவில்லியர்ஸின் உலக கோப்பை கனவு, தோல்வி என்கின்ற எண்ணத்திற்கே இடமளிக்காமல் இருந்தது.

லீக் ஆட்டங்களில் ஒரு சில தோல்விகள் உண்டானது என்றாலும், கால் இறுதியை கடந்து, அரை இறுதிக்கு முன்னேறி இருந்தார்கள். சர்வதேச உலக கோப்பை வரலாற்றிலேயே நாக் அவுட் சுற்றில் தென் ஆப்பிரிக்கா வெற்றிப் பெற்ற முதல் போட்டி அதுதான். ஆனால், தென் ஆப்பிரிக்காவின் துரதிர்ஷ்டம் இந்த தொடரிலும் தொடர்ந்தது. அரை இறுதியில் நியூசிலாந்து அணியிடம் தென் ஆப்பிரிக்கா தோல்வியுற்றது. டிவில்லியர்ஸ் மனமுடைந்து மைதானத்திலேயே கண் கலங்கி அழுதார். தென் ஆப்பிரிக்க வீரர்கள் எல்லோரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தார்கள். கிரிக்கெட் வரலாற்றின் உணர்வுபூர்வமாக தருணங்களில் ஒன்றாக அந்த போட்டியின் முடிவு மாறியிருந்தது. அன்றைய தினத்திலேயே டிவில்லியர்ஸின் பல வருட கனவு கலைந்து போனது. தோல்விக்கு பொறுப்பேற்று, தனது கேப்டன் பதவியை துறந்துவிட்டாலும், அணியில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்.

AB-de-Villiers-CWC-bat-raise_3275617.jpg

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிகபட்ச ஃபார்மில் அக்காலத்தில்தான் இருந்தார் என்றாலும், மனதளவில் அப்போதே டிவில்லியர்ஸ் சோர்வுக்குள்ளாகி இருந்தார். இத்தனை வருடங்களில் தான் வெகுவாக இழந்திருந்த குடும்பம் சார்ந்த எண்ணங்கள் அவரது மனதை வதைத்தபடியே இருந்தது. இப்போது அவருக்கு திருமணமும் ஆகியிருந்தது. நீண்ட தினங்களாகவே தனது ஓய்வு குறித்த எண்ணத்தில் டிவில்லியர்ஸ் ஆழ்ந்திருந்தாலும், தனது ஆட்டத் திறன் வெகுவாக போற்றப்படுகிறது எனும் காரணத்தாலும், தென் ஆப்பிரிக்கா அணி நல்ல நிலையில் இருக்கும்போது, அதிலிருந்து விலக வேண்டும் என்பதால், அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தார்.

718474233-ABDeVilliers_6.jpg

மே 23, 2018 அதற்கு சரியான நேரமாக அவருக்கு பட்டிருக்கிறது. தனது ஓய்வு முடிவை ஐ.பி.எல் தொடரின் இறுதியில் டிவில்லியர்ஸ் அறிவித்தார்.

டிவில்லியர்ஸ் இல்லாமல் தென் ஆப்பிரிக்கா அணி மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட்டே எப்படி இருக்கப் போகிறது என்ற பேச்சுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஏனெனில், விவியன் ரிச்சர்ட்ஸின் கூற்றின் படி, கிரிக்கெட் ஆட்ட முறைமையை அடுத்த படி நிலைக்கு உயர்த்திச் சென்றவர் டிவில்லியர்ஸ்.

ஆனால், ஓய்வு என்பது ஒவ்வொரு வீரருக்கும் நிகழக் கூடியதுதான். காலம் முன்னேற முன்னேற புதிதாக ஒரு கிரிக்கெட் வீரர் அவரது இடத்தை இட்டு நிரப்பி விடுவார். சச்சின் இல்லாத இந்தியா என்பதை கற்பனை கூட செய்து  பார்க்க முடியாது என்கின்ற நிலை நிலவியது. ஆனால், சச்சினுக்கு பிறகு, தோனி பெரும் புகழடைந்து இன்று கோலி இந்தியாவை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்கா போன்ற அணிக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகச் சிறந்த விளையாட்டாளர்கள் கிடைத்தபடியே தானிருக்கிறார். எதிர் வரவிருக்கும் உலக கோப்பை தொடரில், எப்போதும் போல கோப்பையை வெல்லும் முனைப்பு தென் ஆப்பிரிக்க வீரர்களிடம் அதிகமிருக்கும்.

ஆனால், அந்த அணியில் டிவில்லியர்ஸ் இருக்க மாட்டார். தன் போன்ற தென் ஆப்பிரிக்க மக்களின் கனவினை சுமந்துக் கொண்டிருக்கும் இளைய விளையாட்டு வீரர்களின் போட்டியினை தனது காதல் மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் அமர்ந்து, சிறு வயதுகளில் ஆர்வத்துடன் உலக கோப்பை போட்டிகளை பார்த்ததைப் போலவே டிவில்லியர்ஸ் எதிர்ப்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருப்பார்.

சிக்ஸர் பறக்கம்……      

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/jul/13/ab-de-villiers-style-2958629.html

Link to comment
Share on other sites

10. தனது காதலை வெளிப்படுத்த மிகச் சிறந்த இடமென இந்தியாவை டிவில்லியர்ஸ் தேர்வு செய்தது ஏன் தெரியுமா?

 

last

 

‘நான் அடிப்படையில் ஒரு நம்பிக்கைவாதி. அது எனக்கு இயல்பாக வந்ததா? அல்லது போராட்டத்தின் பயனாக வாய்க்கப் பெற்றதா? என தெரியவில்லை. ஆனால், நான் எனது பாதங்களை முன்னால் நகர்த்திக் கொண்டே இருப்பேன். சூரியனை நோக்கி எனது மனம் தன்னியல்பாக நகர்ந்துக் கொண்டே இருக்கும். மனிதத்துவத்தின் மீதான எனது நம்பிக்கையை குலைக்கும் வண்ணம் பலமுறை எனது பாதையில் இருள் சூழ்ந்திருக்கிறது. என்னை தடுமாறச் செய்திருக்கிறது. ஆனால், எந்தவொரு சக்தியாலும் எனது பாதையை குலைக்க முடியாது. ஏனெனில் நான் அடிப்படையில் ஒரு நம்பிக்கைவாதி’

  • நெல்சன் மண்டேலா (தனது சுயசரிதையில்)

நெல்சன் மண்டேலாவின் இந்த கூற்றினை டிவில்லியர்ஸ் தனது மனத்தில் வைத்துக் கொண்டார். அவ்வப்போது அவர் தன்னை பலவீனமானவராக கருதும் போதெல்லாம், இந்தச் சொற்களை மனதில் அசைபோடுவது அவரது வழக்கம். பல நெருக்கடி மிகுந்த தருணங்களில் இந்தச் சொற்கள் டிவில்லியர்ஸுக்கு தன்னம்பிக்கை அளித்திருக்கிறது.  2007-ல் நெல்சன் மண்டேலாவை அவரது வீட்டில் வைத்து சக கிரிக்கெட் அணியினருடன் சந்தித்தது அவரது வாழ்க்கையில் மகத்தான தருணங்களில் ஒன்று.

டிவில்லியர்ஸ் அதே போல ஜெஃபரி ஆர்ச்சரின் புதினங்களுக்கும் மிகப் பெரிய ரசிகர். ஒவ்வொருமுறை அவரது புதிய புத்தகம் வெளியாகும் போது, டிவில்லியர்ஸுக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்து விடுவார்கள். போட்டிகளின் இடையிலோ அல்லது பயணங்களின் போதே ஜெஃபரி ஆர்ச்சர் அவரது கைகளில் தவழ்ந்து கொண்டிருப்பார்.

டிவில்லியர்ஸ் நம்ப முடியாத வகையில் அதீதமான கடவுள் நம்பிக்கைக் கொண்டவர். கிருஸ்துவ மதத்தை சேர்ந்த அவர், தனது வாழ்க்கையில் தான் நிகழ்த்திய சாதனைகள் அனைத்துமே கடவுள் உண்டாக்கிய அற்புதங்களே என குறிப்பிடுகிறார். அதோடு, இரண்டு முறை தனது வாழ்க்கையில் அவர் கடவுளின் அண்மையை துல்லியமாக உணர்ந்ததாகவும் நெகிழ்வுடன் சொல்கிறார்.

முதல் தருணம், மிகச் சிறிய வயதில் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு உண்டானது. பின் சீட்டில் அமர்ந்திருந்த அவரின் பார்வையில் சூரிய வெளிச்சம் படுகிறது. ஆவுயுருக்களை போல ஆங்காரத்துடன் வானத்தில் இருந்து தரை நோக்கி வீழும் அந்த ஒளிச் சிதறல் அவருக்கு சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் பாதையாகவே தெரிகிறது. உடல் சில்லிட அப்படியே முகத்தை மறைத்துக் கொண்டு தனக்குள்ளாக அழுகிறார்.

இரண்டாவது தருணம் பல வருடங்களுக்கு பிறகு, அவரது 24-வது வயதில் நிகழ்ந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, சில தென் ஆப்பிரிக்க வீரர்கள் படகு சவாரி போனார்கள்.

டிவில்லியர்ஸுக்கு இந்த பயணத்தில் அதிக விருப்பமில்லை என்றாலும், அணியினரை ஏமாற்றமடைய செய்ய வேண்டாம் என அவர்களுடன் செல்கிறார். எல்லோரும் கப்பலின் கீழ்த் தளத்தில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், டிவில்லியர்ஸ் மட்டும் மேல்தளத்தில் சூரிய கதிர்களை நேரடியாக எதிர் கொள்ளும் வகையில் படுத்திருந்தார். அந்த ஆழ்ந்த அமைதியும், கடல் அலைகளின் இரைச்சலும் அவருக்கு ஏராளமான எண்ணங்களை கிளர்த்தி விடுகிறது.

தன்னை அவர் முற்றிலும் மனிதர்கள் அற்ற வெளியில் சஞ்சாரம் செய்துக் கொண்டிருப்பதாக உணர்கிறார். அவரது உதடுகள் சுயமாக உச்சரிப்பு செய்கிறது.

‘இந்த பூமியில் நீ என்ன செய்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறாய்? இந்த பூமியில் உன்னை யாரென்று நீ கருதுகிறாய்? சில விளையாட்டு போட்டிகளில் ரன்களை குவித்து விட்டதாலும், பல சாதனைகளை நிகழ்த்தி விட்டதாலும் உன்னை அதி முக்கியத்துவம் வாய்ந்த உயிரென்று கருதுகிறாயா? நீ அமைதியாக இருக்க வேண்டும். உனக்கு மிக மிக நெருக்கமான மனிதர்களுடன் நீ உனது நேரத்தை அதிகளவில் செலவிட வேண்டும். அதோடு, உனக்கு என்ன அருளப்பட்டிருக்கிறதோ அதற்காக நீ நன்றியுடன் இருக்க வேண்டும்’

அன்றைய தினத்தில் கரை திரும்பியதும், டிவில்லியர்ஸ் உடனடியாக தனது பெற்றோருக்கு போன் செய்து, மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி செலுத்தியபடியே இருந்தார்.

உலகத்தின் எந்தவொரு எல்லைக்கு சென்றிருந்தாலும், டிவில்லியர்ஸுக்கு அவரது வசிப்பிடமே அதிக முக்கியமானதாக இருந்தது. பெற்றோரிடம் நேரத்தை செலவிட முடியாத தனது நிலையை குறித்து பலமுறை டிவில்லியர்ஸ் மனம் வருந்தியிருக்கிறார். அதே போல, எப்போதும் சில நண்பர்களால் சூழ்ந்திருக்க வேண்டுமென்பதும் டிவில்லியர்ஸின் விருப்பம். அவரது வீடு இசையும், கேளிக்கையாலும் நிரம்பியிருக்கும். அவரது பெற்றோர் பழைய பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருப்பார்கள். டிவில்லியர்ஸ் அவர்களை மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டுமென்று இரண்டு வருடங்கள் கிடார் பயிற்சிக்கு சென்று, அந்த இசையை வீட்டில் அவ்வப்போது வாசித்துக் கொண்டிருப்பார்.

2010ல் தனது நீண்ட கால நண்பரும், அதிகத் திறமை வாய்ந்த இசை அமைப்பாளருமான அம்பீ டூ ப்ரீஸுடன் இணைந்து இசை ஆல்பம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.  

தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்ததால், பெற்றோரை சந்திக்க முடியாமல் இருப்பது குறித்த வருத்தத்தில் ஆழ்ந்திருந்த டிவில்லியர்ஸுக்கு சமீப காலங்களில் அதிகம் வலி தரக் கூடியதாக இருந்தது  அவரது காதல் மனைவியான டேனிலியை சந்திக்க முடியாமல் இருந்ததுதான். அவரது மனைவியை பிரிந்திருப்பது அவருக்கு மிகுந்த வலி தரக் கூடியதாக இருந்தது.

கேரி கிரிஸ்டன் இந்த சிக்கலுக்கு ஒருமுறை டிவில்லியர்ஸிடம் ஆலோசனை ஒன்றை வழங்கினார். அவரும் அவரது மனைவியும் 21 தினங்களுக்கு ஒருமுறை உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், சந்தித்து விடுவதென தீர்மானித்திருந்ததாகவும், அதையே நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

டிவில்லியர்ஸுக்கு இந்த யோசனை பிடித்துவிட்டது. என்றாலும், டிவில்லியர்ஸும் டேனிலியும் 10 தினங்களுக்கு ஒருமுறை சந்தித்துக் கொள்வதென முடிவு எடுத்திருந்தார்கள். 2007-ல் தற்செயலான ஒரு நிகழ்வில் டேனிலியை பார்த்த டிவில்லியர்ஸுக்கு முதல் சந்திப்பிலேயே அவரைப் பிடித்துப் போனது. டேனிலியின் பெற்றோரிடம் முறைப்படி டிவில்லியர்ஸ் பேசினார். அவர்களுக்கும் இந்த திருமணத்தில் மிகப் பெரிய விருப்பமிருந்தது. ஆனால், டேனிலியிடம் டிவில்லியர்ஸ் தனது காதலை அவரது பெற்றோரிடம் பேசும் வரையிலும் கூட வெளிப்படுத்தியிருக்கவில்லை. டிவில்லியர்ஸிடம் விஷேசமான திட்டம் ஒன்றிருந்தது.

இந்தியாவின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றான தாஜ் மஹால் டிவில்லியர்ஸை வெகுவாக கவர்ந்திருந்தது. ஷாஜஹான் – மும்தாஜ் வரலாற்றையும் அறிந்து கொண்டதன் பின்பு, தாஜ் மஹாலின் மீது டிவில்லியர்ஸுக்கு வியப்பு அதிகரித்தது. தீராக் காதலின் நினைவுச் சின்னமாக போற்றப்படும் தாஜ் மஹாலில் வைத்து டேனிலியிடம் தனது காதலை வெளிப்படுத்த வேண்டுமென டிவில்லியர்ஸ் தீர்மானித்தார்.

ஐ.பி.எல் போட்டித் தொடரின்போது டேனிலியை இந்தியாவுக்கு அழைத்திருந்த டிவில்லியர்ஸ், ஒரு நாள் அவரை கூட்டிக் கொண்டு தாஜ் மஹாலுக்கு செல்கிறார். உடன் வந்த இரண்டு புகைப்படக்காரர்களை தனது பாதுகாவலர்கள் என அறிமுகம் செய்து வைத்தார். பிரமாண்டமான அந்த கட்டிடத்தை இருவரும் வியப்பு மேலிட நிதானமாக சுற்றிப் பார்க்கிறார்கள். வெண்ணிறத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தாஜ் மஹால் மகத்தான காதலின் அடையாளங்களில் ஒன்று என டிவில்லியர்ஸ் டேனிலியிடம் தான் அறிந்து வைத்திருக்கும் கதையை பகிர்ந்து கொள்கிறார்.

பின் சட்டென்று டேனிலி எதிர்பாராத தருணத்தில், தரையில் முழங்காலிட்டு, ‘டேனிலி உன்னுடன்தான் நான் என்றென்றும் வாழ வேண்டுமென்று விரும்புகின்றேன். என்னை திருமணம் செய்து  கொள்வாயா?’ எனக் கேட்கிறார். டேனிலி உணர்ச்சிவசப்பட்டு டிவில்லியர்ஸை நெருங்கி அவரை அணைத்துக் கொள்கிறார். டேனிலியின் கண்களில் கண்ணீர் திரண்டு ஒழுகுகிறது. நீண்ட அமைதிக்கு பின்னர், ‘நிச்சயமாக’ என டிவில்லியர்ஸின் காதலை ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு, இருவரும் ஒருவரை ஒருவர் மேலும் ஆழமாக நேசிக்கத் துவங்கினர். நீண்ட காலம் டேனிலியை பார்க்காமல் டிவில்லியர்ஸால் இருக்க முடியாது என்கின்ற நிலை உண்டாகிறது. மகன் பிறந்ததும் இவர்களது காதல் மேலும் தீவிரமடைகிறது.

abd-namde-header-1524955575_1100x513.jpg

தனது காதலை வெளிப்படுத்த மிகச் சிறந்த இடமென இந்தியாவை டிவில்லியர்ஸ் தேர்வு செய்தது தற்செயலாக நிகழ்ந்ததல்ல. பல வருடங்களாகவே டிவில்லியர்ஸுக்கு இந்தியாவின் மீது ஆழமான நேசிப்பு இருந்தது. முதல் முறையாக இந்தியாவுக்கு வந்த போதே, மோர்னே மோர்குல் உடன் இணைந்து கொண்டு பல பகுதிகளில் சுற்றித் திரிந்திருக்கிறார். இந்தியாவில் நிலைப் பெற்றிருக்கும் வண்ணமயமான கலாச்சார அடையாளங்களை அவர் வியப்புடன் பார்த்து ரசித்தார். இந்தியா என்பது அவர் வாழ விரும்புகின்ற கனவுப் பிரதேசம் போலவே ஆகிவிட்டிருந்தது. இந்திய மக்களும் அவருக்கு மிகுதியான அன்பையும், அரவணைப்பையும் கொடுத்திருக்கிறார்கள்.

ஒருமுறை இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் ஒருநாள் போட்டி ஒன்று நடந்துக் கொண்டிருந்தது. தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்த அந்தப் போட்டியில் டிவில்லியர்ஸ் மிக விரைவாக 98 ரன்களை அடித்திருந்தார். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்து  கொண்டிருந்த தருணம் அது. அரங்கில் கூடியிருந்த 33,000 ரசிகர்களும் எதிர்பாராத விதமாக, ஒருங்கே, ‘ஏ – பி - டி ஏ – பி – டி’ என உரக்க குரலெழுப்புகிறார்கள். ஐபிஎல் தொடருக்கு கிடைத்த ஆரவாரத்தை ஏற்றுக் கொண்டிருந்த டிவில்லியர்ஸ் இந்தத் தருணத்தில் மிகவும் எமொஷனலாக தன்னை உணர்ந்தார். இந்தியாவுக்கு எதிராக, இந்தியாவில் நிகழும் அந்த போட்டியில், டிவில்லியர்ஸின் ஆட்டத்திற்கு பெருத்த ஆராவாரம் எழுந்தருளியிருந்தது. சதத்தை எட்டியதும், மேலும் மேலும் இந்திய ரசிகர்களின் குரல்கள் அதிகரித்தபடியே இருந்தது.

2nd-t20-international-south-africa-v-eng

ஏ – பி – டி! ஏ – பி – டி! ஏ – பி – டி! ஏ – பி – டி! ஏ – பி – டி! ஏ – பி – டி!  ஏ – பி – டி!

டிவில்லியஸால் அந்தத் தருணத்தை நம்பவே முடியவில்லை. ஒட்டுமொத்த அரங்கமும் அவரது பெயரைஆக்ரோஷத்துடன் மீண்டும் மீண்டும் ஜெபம்போல உச்சரித்துக் கொண்டிருக்கிறது. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அந்த மக்களின் நடுவில் டிவில்லியர்ஸ் நின்றிருந்தார்.

அதனாலேயே, தனது ஒட்டுமொத்தமான சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை இந்தியாவில் விளையாடிய போட்டியோடு அவர் நிறைவு செய்துக் கொண்டார். ஐ.பி.எல்லுக்கு முன்னதாகவும் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிராகத்தான் விளையாடி இருந்தது.

டிவில்லியர்ஸின் ஓய்வு முடிவு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தன்னால் இயன்ற அளவுக்கு அனைத்துவிதமான சிறப்பான பங்களிப்பையும் தென் ஆப்பிரிக்கா அணிக்காக அவர் அளித்துவிட்டார். துடிப்புமிக்க இளைஞராக, ரன்களை விரைவாக சேர்க்கக் கூடியவராக, விக்கெட் கீப்பராக, கேப்டனாக எனப் பல தளங்களில் டிவில்லியர்ஸின் ஆற்றல் சர்வதேச அரங்கில் வெளிப்பட்டிருக்கிறது.

கிரிக்கெட் போன்ற கூட்டு விளையாட்டில் தங்களது இருப்பை சாத்தியப்படுத்தும் ஊக்கத்துடன் நாளும் பல இளைஞர்கள் தங்களது தினத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அதனால், கிரிக்கெட்டில் வெற்றிடம் என்று ஒன்று கிடையவே கிடையாது. கிரிக்கெட்டில் அவரது இடத்தை நிரப்பக் கூடிய ஆட்டக்காரர் உருவாவது விரைவில் நிகழத்தான் போகிறது. ஆனால், டிவில்லியர்ஸ் தனது அசாத்தியமான ஆட்டத்திறன் காரணமாக, உலக கிரிக்கெட் ரசிகர்களின் நினைவுகளில் என்றென்றும் நிலைப்பெற்றிருப்பார் என்பது உறுதி. தொடர்ச்சியாக பல வருடங்களாக கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வரும் டிவில்லியர்ஸ் அவரது குடும்பத்துக்காக நேரம் செலவிட வேண்டியது அனைத்தை விடவும்  முக்கியமானது. டிவில்லியர்ஸும், டேனிலியும், ஜூனியர் டிவில்லியர்ஸும் எவ்வித புற உலக இடையூறும் இல்லாமல், தங்களது பிரத்யேக உலகத்தில் நிம்மதியாக வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள்.

BN-HM473_africa_G_20150319002930.jpg

‘இந்த பூமியில் நீ என்ன செய்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறாய்? இந்த பூமியில் உன்னை யாரென்று நீ கருதுகிறாய்? சில விளையாட்டு போட்டிகளில் ரன்களை குவித்துவிட்டதாலும், பல சாதனைகளை நிகழ்த்தி விட்டதாலும் உன்னை அதி முக்கியத்துவம் வாய்ந்த உயிரென்று கருதுகிறாயா? நீ அமைதியாக இருக்க வேண்டும். உனக்கு மிக மிக நெருக்கமான மனிதர்களுடன் நீ உனது நேரத்தை அதிகளவில் செலவிட வேண்டும். அதோடு, உனக்கு என்ன அருளப்பட்டிருக்கிறதோ அதற்காக நீ நன்றியுடன் இருக்க வேண்டும்’

டிவில்லியர்ஸ் இப்போது கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்!

சிக்ஸர் பறக்கும்……

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/jul/20/the-last-cricket-match-of-ab-de-villiers-2963472.html

Link to comment
Share on other sites

11. எப்போதும் வெடிக்கத் தயாராக இருக்கும் பொறியை ரோஹித் சர்மாவின் ஆட்டத்தில் உணரலாம்!

 

 
rohit_sharma

மூன்றாம் நாயகன்: ரோஹித் சர்மா – 1

எவரிடமும் என்னை நிரூபிக்க வேண்டுமென்கின்ற அவசியம் எனக்கில்லை. என்னை நான் முழுதாக நம்பினால் போதுமானது. நான் இது வரையில் செய்திருக்கின்ற சாதனைகளை விடவும் என்னால் இன்னமும் நிறைய நிலைகளை அடைய முடியுமென்பதை நான் தனிப்பட்ட முறையில் எனக்குள்ளாக நம்ப வேண்டும். நான் நிலைக்கண்ணாடிக்கு எதிரில் நிற்கும்போதும், எனது கண்களை நேருக்கு நேராக எதிர் கொண்டு, எனது சாதனைகளை குறித்து தைரியமாக பேசும் நிலை உருவாக வேண்டும்’ – ரோஹித் சர்மா

dc-Cover-6p20q4rvea88oe6n2ri0h53gq3-2017

13 நவம்பர் 2014, புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணியை எதிர் கொள்ளத் தயாராக இருந்தது. இரு அணிகளுக்கும் இடையில் நடந்துக் கொண்டிருந்த போட்டித் தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டி அது. முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றிப் பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. துவக்க ஆட்டக்காரராக இந்தப் போட்டித் தொடரில் விளையாடிய ரஹானே, ஒரு சதம் உட்பட நல்ல ஃபார்மில் இருந்தார். முன்னதாக இந்திய அணி தொடரை வென்று விட்டதால் நான்காவது ஒருநாள் போட்டியில் ரஹானேவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அவருக்கு பதிலாக, சிறிய இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பியிருந்த ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டிருந்தார்.

தனது விரல்களில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக, ரோஹித் சர்மா சிறிது காலம் ஓய்வில் இருக்க வேண்டியிருந்தது. தனது முழு கிரிக்கெட் வாழ்க்கையிலும், இவ்வகையிலான காயங்களினால் தொடர்ந்து அவதியுற்று வரும் கிரிக்கெட் ஆட்டக்காரராகவே ரோஹித் சர்மா இருந்து கொண்டிருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 2007-ம் வருடத்தில் அறிமுகமான ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டியில் ஆறு வருடங்கள் கழித்து 2013-ல் தான் அறிமுகமாக முடிந்தது. தொடர் காயங்களினால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பெரிதளவில் பாதிப்புக்குள்ளாகி இருந்திருக்கிறது.

116.jpg

இலங்கைக்கு எதிரான போட்டியில் மீண்டும் இந்திய அணியில் விளையாடும் சந்தர்ப்பம் உண்டாகிய போது, ரோஹித் சர்மா தனது விரலில் ஏற்பட்டிருந்த காயம் குறித்தே அதிக கவலையுற்றிருந்தார். போட்டித் துவங்குவதற்கு முந்தைய இரவு முழுக்க முழுக்க, இந்த நினைப்பே அவரை குழப்பிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காயம் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்பதில் அதிக பதற்றத்துடன் இருந்தார். ஏனெனில், இந்திய அணியில் அவர் தனது இடத்தை அழுத்தமாக தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து அதிக ஸ்கோர்களை குவிக்க வேண்டியது மிக மிக அவசியம். அதனால், விரல் குறித்தான சிந்தனை அவரை நிம்மதியுடன் இருக்க விடவில்லை.

rohitsharma-759.jpg

வரலாறு நெடுகிலும் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் அதிகப் புகழடைந்தவர்களாகவும், மிக திறன் மிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். இந்திய அணியின் சிறப்பே அதன் பலமான பேட்டிங் வரிசைதான் என்று பல சர்வதேச கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால், அதன் துவக்க ஆட்டக்காரர்களுக்கு இயல்பாக கூடுதல் பொறுப்புணர்வு எப்போதும் உண்டு. ஒரு காலத்தில் சச்சின் – கங்குலியின் இணை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அவர்களது தலைமையில்தான் இந்திய அணி மிகச் சிறந்த ஆட்ட வரிசை கொண்ட அணியாக உருவெடுத்தது.

அதற்கு அடுத்ததாக, சேவாக் சச்சினுடன் இணைந்து துவக்க ஆட்டக்காரராக விளையாடத் துவங்கினார். ஒருபுறம் சச்சின் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, மறுபுறம் சேவாக் அதிரடியில் கலக்கிக் கொண்டிருப்பார். பந்தை ஆஃப் சைடில் விரட்டியடிக்கும் சேவாக்கின் ஸ்ட்ரோக்குகள் மிக அதிக அளவிலான ரசிகர்களை அவருக்கு உருவாக்கிக் கொடுத்தது. சேவாக் களத்தில் இறங்கினாலே பவுண்டரிகள் நாலாபுறமும் சிதறி ஓடப் போவது உறுதி எனும் நிலை இருந்தது. டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி என்றெல்லாம் பாகுபாடில்லாமல் விளாசித் தள்ளக் கூடிய கிரிக்கெட் ஆட்டக்காரராக சேவாக் இருந்திருக்கிறார். சில காலம் அவருக்கு இணையாக விளையாடிய கவுதம் கம்பீரும் முக்கியத்துவம் வாய்ந்த பல போட்டிகளில் இந்திய அணி வெற்றிப் பெறக் காரணமாக இருந்தவர்.

three.jpg

ஆனால் அடுத்தடுத்து, சச்சின், சேவாக், காம்பீர் போன்ற நீண்ட காலம் கிரிக்கெட் விளையாட்டில் நிலைத்திருந்த வீரர்கள் ஓய்வு பெற்றதும், இந்திய அணிக்கு அவர்களுக்கு மாற்றாக, திறன்மிக்க ஆட்டக்காரர்களை கண்டடைய வேண்டிய அவசியம் இருந்து வந்தது. உள்ளூர் போட்டிகளில் இருந்தும், ஐ.பி.எல் போட்டித் தொடரில் இருந்தும் பல இளைய கிரிக்கெட் வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாமல், சிறிது காலத்திற்குள்ளாகவே அணியில் இருந்து ஓரம் கட்டப்பட, ரோஹித் சர்மா தனது ஆட்டத்தில் ஒரு நிலைவரை கடைப்பிடிக்கும் நிதானத்தாலும், அதன்பிறகு, வெளிப்படுத்தும் அதீதமான அதிரடியாலும் அணியில் தனக்கென தனித்த இடத்தை மிக நெடிய போராட்டத்திற்கு பின்னர் தக்க வைத்துக் கொண்டுள்ளார். எனினும், அவரை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் காயம் காரணமாக, தொடர்ச்சியாக அவரால் விளையாட முடியாமலானது.

ap7-22-2017-000072b_bd6d4b40-706d-11e7-a

துவக்கத்தில் மிடில் ஆர்டரில் விளையாடிக் கொண்டிருந்த ரோஹித் சர்மா, மிடில் ஆர்டரில் தோனி, ரெய்னா போன்றவர்கள் இருந்ததாலும், ஒரு அதிரடி ஆட்டக்காரர் துவக்கத்தில் இருக்க வேண்டிய காரணத்தாலும் துவக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். இதனை சேவாக் விளைவு என்றே குறிப்படலாம். அத்தகையதொரு அதிர்வை இந்திய ரசிகர்களின் மனங்களில் உண்டாக்கிப் போனவர் சேவாக். போட்டி தொடங்கும் நொடியில் இருந்தே, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிரடியை சேவாக் காலத்திலிருந்து எதிர்பார்க்க துவங்கிவிட்டார்கள். ஒரே நேரத்தில், சேவாக் உருவாக்கியிருந்த அதிரடி மரபைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், இந்திய அணிக்கும் சிக்கலற்ற நல்ல துவக்கத்தையும் அமைத்துக் கொடுக்க வேண்டுமென்கின்ற இரட்டை சுமை ரோஹித் சர்மாவுக்கு அளிக்கப்பட்டிருந்தது.   

roh-1513953193.jpg

‘எனது மனவலிமைதான் எனது பலம். நான் மிக அதிக நேரத்தை என் நண்பர்களுடனும், குடும்பத்துடனும், தனியனாகவும் செலவிட்டிருக்கிறேன். அது என்னை அமைதியுடனிருக்கவும், கிரிக்கெட் விளையாட்டில் நிதானத்தை கடைப்பிடிக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறது. இப்படி நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள எதுவும் இல்லையென்றால், தேவையற்ற குழப்பங்கள் நம்மை சூழ்ந்து சிதறடித்துவிடும். வாழ்க்கையே சூன்யமாகிவிடும்’ எனும் ரோஹித் சர்மா, தனது ஆட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நிலை வரை மிக அதிக நிதானத்தை கடைப்பிடிக்கக் கூடியவர். மிடில் ஓவர்களில் இருந்தே தனது அதிரடியை துவங்குவார்.

தனது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, சிறிது காலம் ஓய்வில் இருந்து விட்டு, மீண்டும் அணிக்கு திரும்பிய ரோஹித் சர்மா இலங்கை எதிரான போட்டியில் முதல் பத்து ஓவர்களில் அடித்த ஸ்கோர் மொத்தமே 12 தான். காயம் குறித்த எண்ணம் இன்னமும் அவரை விட்டு விலகியிருக்கவில்லை. மெல்ல ஒவ்வொரு ரன்னாக சேர்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும், அவரது ஆட்டத்தில் ஒரு உறுதி காணப்பட்டது. நிதானமாக தேர்ந்தெடுத்து ஷாட்டுகளை அடித்துக் கொண்டிருந்தார். ஓவர்கள் மெல்ல உயர உயர அவரது ஆட்டத்தில் கூடுதல் விரைவுத்தன்மை உண்டாகியது. இருபது ஓவர்களில் அரை சதத்தை கடந்தார். இதன் பிறகு, மேலும் வேகம் கூடியது. மைதானத்தில் அனைத்து திசைகளுக்கு பந்து விரைந்து ஓடியது. களத்தில் திடமாக நின்று கொண்டு, பவுலர்களை தனது வீரியமிக்க ஷாட்டுகளால் கலங்கடித்துக் கொண்டிருந்தார்.

rohit-sharma_double_century.jpg

ஒருபுறம் இந்திய அணி வீரர்கள், சொற்ப சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துக் கொண்டிருக்க, ரோஹித் சர்மாவோ ஒட்டுமொத்தமான தனது முழு ஆட்டத் திறனையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். தனது விளையாட கிடைக்காமல் போன சந்தர்ப்பங்களை எல்லாம் பழி தீர்த்து விடுவதைப் போல அவரது ஆட்டம் மிக அதிக உக்கிரத்தன்மையுடன் அன்றைய போட்டியில் வெளிப்பட்டது. மெல்ல 100, 150, 200 என கடந்து, போட்டியின் முடிவில் 264 ரன்களை ஒற்றை நபராக சேர்ப்பித்திருந்தார்.

winner.jpg

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இதற்கு முன்பு ஒருவரும் நெருங்கியிருக்காத ஸ்கோர் அது. 33 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் அதில் அடக்கம். ஒரு தனி நபரின் உச்சப்பட்ச ஸ்கோராக இன்றளவும் அந்த ஸ்கோரே நீடித்திருக்கிறது. ரோஹித் சர்மா இந்த போட்டிக்கு முன்பொரு முறையும், இந்த போட்டிக்கு பின்பொருமுறையும் என மொத்தமாக 3 முறை ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்த வீரர் எனும் சாதனையை கொண்டுள்ளார்.

நான் வளர்ந்த காலத்தில் பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரரான அன்வரின் 194 ரன்கள் தான் தனி நபரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 1997-ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அன்வர் குவித்த இந்த ரன்களை கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு எவராலும் நெருங்க முடியாமல் இருந்தது. இரட்டை சதமென்பது டெஸ்ட் போட்டிக்கு உரிய இலக்காக கருதப்பட்டது. ஆனால், 2010-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் 200 ரன்களை அடித்து இந்த சாதனையை முறியடித்தார். பிறகு, சேவாக், கிரிஸ் கேயல், மார்டின் குப்டில் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த வீரர்களாக இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் எவரும் ரோஹித் சர்மாவை போல ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் இரட்டை சதம் அடித்தவர்கள் இல்லை.

rohit-sharma-4.jpg

ரோஹித் சர்மாவின் ஆட்டத்தில் எப்போதும் வெடிக்கத் தயாராக இருக்கும் பொறியை நம்மால் உணர முடியும். அவர் மெல்ல பந்துகளை ரன் எதுவுமின்றி கடக்கும் போதும், இத்தகையதொரு உணர்வை நம்மில் உண்டாக்கி விடக் கூடியவர். ஒவ்வொரு போட்டியில் அவர் களமிறங்கும் போதும், அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகளவில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. சேவாக் போன்றோ அல்லது தோனி போன்றோ பந்தை விளாசுவதில் இறுக்கத்தையும், முழு ஆற்றலையும் வெளிப்படுத்தாது,  நிதானமாக ரன்களை சுருட்டக் கூடிய அதிரடி ஆட்டக்காரராக அவர் இருந்துக் கொண்டிருக்கிறார். முழுமையான கிரிக்கெட் ஆட்டக்காரர் என்றே அவரை வகைப்படுத்தலாம். ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறாக பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாட்டை முதல் முதலாக விளையாடத் துவங்கிய காலத்தில் அவருக்கு இருந்த மிகப் பெரிய கனவு, ‘ஒரு நல்ல ஸ்பின் பவுலராக’ உருவாக வேண்டுமென்பதுதான்.  

சிக்ஸர் பறக்கும்……

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/jul/27/rohit-sharma-the-finest-cricket-player-of-india-2968270.html

Link to comment
Share on other sites

12. ஒருபோதும் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை இருந்ததில்லை, எவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் இல்லை! ரோஹித் சர்மா!

 

 
Rohit-Sharma_1

ரோஹித் சர்மா - 2

அன்றைய தினம் முழுப் பள்ளியும் பரபரப்புடன் காணப்பட்டது. எல்லோரும் துவங்கவிருக்கின்ற பள்ளிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். மஹாராஷ்டிர மாநிலத்தின் போரிவ்லி பகுதியில் அமைந்திருந்த சுவாமி விவேகானந்தா சர்வதேச பள்ளியில் அன்றைய தினம் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக இருந்தது. டான் பாஸ்கோ பள்ளி மாணவர்களுக்கு எதிராக சுவாமி விவேகானந்தா பள்ளி மாணவர்கள் விளையாட இருந்தார்கள். மாணவர்களுக்கு இணையாக பயிற்சியாளர் தினேஷ் லட் அந்த போட்டியை மிகவும் எதிர்பார்த்திருந்தார். சிறுவனான ரோஹித் குருநாத் ஷர்மா அப்போதுதான் மெல்ல மெல்ல ஸ்பின் பவுலரிலிருந்து, பேட்ஸ்மேனாக உருவெடுத்துக் கொண்டிருந்தான். பயிற்சியாளர் தினேஷ் லட் தான் அவனால் சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுக்க முடியும் என்பதை கண்டறிந்து ரோஹித் சர்மாவுக்கு நம்பிக்கையூட்டியவர்.

Rohit_Sharma_477b7ec9dd031.jpg

போட்டி தொடங்கியது. ரோஹித் ஷர்மா பேட்டிங் செய்ய களத்திற்கு வருகிறான். சிறிது சிறிதாக ரன்களை சேர்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு தன் மீதான நம்பிக்கை பெருகியபடியே இருக்கிறது. அணி ஸ்கோரை சீராக உயர்த்திக் கொண்டிருக்கிறான். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக டான் பாஸ்கோ பள்ளியை சேர்ந்த வேகப் பந்து வீச்சாளன் ஒருவன் வீசிய பந்து ரோஹித் சர்மாவின் முகத்தில் பலமாக அடித்துவிடுகிறது. ரோஹித்தின் கண்களுக்கு கீழே சதை லேசாக கிழிந்து இரத்தம் வடிகிறது. எல்லோருக்கும் பெருத்த அதிர்ச்சி. விரைந்துச் சென்று அவனுக்கு முதலுதவி செய்கிறார்கள். எனினும், இரத்தம் நின்றபாடில்லை. ரோஹித் சர்மாவை களத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார்கள். ஆனால், ரோஹித் சர்மா விடாப்பிடியாக அதனை மறுத்து தொடர்ந்து களத்தில் தனது ஆட்டத்தை தொடருகிறான். முகத்தில் வழிந்து உருளும் இரத்தம் ரோஹித்தை மேலும் மேலும் அதிக உறுதியுடன் களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உந்துகிறது. ரோஹித் அன்றைய போட்டியில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடினான்.

ரோஹித் சர்மா சுவாமி விவேகானந்தா பள்ளியில் சேரக் காரணமாக இருந்தவர் பயிற்சியாளர் தினேஷ் லட் தான். போரிவ்லி பகுதியில் தினேஷ் லட் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த கிரிக்கெட் முகாமில் ரோஹிஷ் ஷர்மா இணைந்து பயிற்சிப் பெற்றுக் கொண்டிருந்தான். தினேஷ் லட்டின் மீது ரோஹித் ஷர்மாவுக்கு அளப்பறிய மரியாதை இருந்தது. எப்போதும் அவரது பார்வையிலேயே இருக்க வேண்டுமென ரோஹித் விரும்புவான். ரோஹித் பயிற்சிகளின்போது காட்டுகின்ற தீவிர உழைப்பும், எதிலும் உறுதியுடன் இருக்கும் ஆற்றலும் தினேஷ் லட்டையும் வெகுவாக கவர்ந்திருந்தது. அவர் எப்போதும் ரோஹித் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக உருவாகிவிடுவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டிருந்தார். அதனாலேயே, ரோஹித் விருப்பம் கொண்டிருந்த ஆப்- ஸ்பின் பயிற்சிகளை விட, அவன் தனது பேட்டிங்கை வளர்த்தெடுப்பதில் அதிக உதவிகளை தினேஷ் லட் செய்துக் கொண்டிருந்தார்.

ரோஹித் சர்மாவின் முன்னால் ஆசிரியர் ஒருவர் அந்த தினங்களை நினைவுக் கூர்கிறார். 'தினேஷ் லட் தான் ரோஹித்தை அடையாளம் கண்டவர். அவருக்கு ரோஹித் மீது அதீதமான நம்பிக்கை உருவாகியிருந்தது. ரோஹித்தின் பொருளாதார பின்னடைவுகளை கருத்தில் கொள்ளும்போது, எங்கள் பள்ளியின் கட்டணம் மிக அதிகமானது. ஆனால், தினேஷ் லட் அவன் எங்கள் பள்ளியில் சேர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டுமென்பதில் அதிக உறுதியுடன் இருந்தார். தினேஷ் லட்டின் மீதான ரோஹித்தின் ஈடுபாடும் அன்பிலானது. அவன் எப்போதும் அவருடன் இருக்க வேண்டுமென்றே விரும்பினான். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரை காணச் சென்று விடுவான். அவருடன் பயிற்சிகளில் பல மணி நேரங்கள் செலவிடுவான். அதற்காக வகுப்புகளை புறக்கணிக்கக்கூட அவன் தயங்கியதில்லை’

hqdefault_(1).jpg

ரோஹித் சர்மாவின் குடும்பம் நாக்பூர் பகுதியில் வசித்து வந்தது. மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியில் மிகவும் நலிவுற்றிருந்தது. ஒற்றை அறை மட்டுமே கொண்ட வீட்டில்தான் அவர்களது குடும்பம் வசித்து வந்தது. ரோஹித் பிறந்த தேதி ஏப்ரல் 30, 1987. ரோஹித் சர்மாவின் தந்தை குருநாத் சர்மா போக்குவரத்து துறையில் பணி செய்து வந்தார். ரோஹித்தின் தாயார் பூர்ணிமா சர்மா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். ரோஹித் குடும்பத்துடன் இருக்க நேரிடும் சந்தர்ப்பங்களில் தெலுங்கில் பேசிக் கொள்வது வழக்கம்.

Rohit-Sharma-Parents-father-Gurunath-Sha

குருநாத் சர்மாவின் மிகச் சொற்ப வருமானத்தால் அவர்களால் தங்களது மகனை தங்களுடன் வைத்துக் கொண்டு வளர்க்க இயலாத சூழல் நிலவியிருந்தது. அதனால், ரோஹித் போரிவ்லி பகுதியில் இருந்த தனது மாமா மற்றும் தாத்தா பாட்டியின் வீட்டில்தான் வளர்ந்து வந்தார். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதும், குறிப்பாக வார இறுதிகளிலும் தனது பெற்றோரை சந்திக்க வருகை புரிவார். பெரும்பாலும், ரயில்களிலும், பேருந்துகளிலும்தான் அவரது பயணம் அமைந்திருக்கும். நாக்பூரின் நெருக்கடி மிகுந்த  போக்குவரத்தை கடந்து வருவதற்குள் சோர்வாகி விடும். அதனால் இத்தகைய வருகையும் உற்சாகமூட்டக் கூடிய அனுபவமாக அமைந்ததில்லை. தன்னில் இருந்து வெகு தொலைவில் வசித்து வந்த தாய் தந்தையரின் பிரிவு ரோஹித்தை சற்றே வாட்டி வதைக்கத்தான் செய்தது.

Rohit-Sharma-Childhood-pictures-5.jpg

போரிவ்லியில் அவரது மாமா ரோஹித்தை நன்றாக கவனித்துக் கொண்டார். அவரது பணத்தில்தான், தினேஷ் லட்டின் கிரிக்கெட் பயிற்சி முகாமில் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ள முடிந்தது. பயிற்சியின் போது ரோஹித்தின் மீது தினேஷ் லட்டுக்கு நம்பிக்கை உருவெடுத்ததால், ரோஹித்தை சுவாமி விவேகானந்தா பள்ளிக்கு மாறிவிடும்படி அவர் கோரிக்கை விடுத்தார். விளையாட்டு பயிற்சிக்கு ஏற்ற உபகரணங்கள் அங்கிருந்ததுதான் முக்கிய காரணம். ஆனால், ரோஹித் தனது பொருளாதார நிலையை அவரிடத்தில் விளங்கக் கூறினான். அவர் ரோஹித்துக்கு பள்ளியின் ஸ்காலர்ஷிப் கிடைக்க வழிவகைச் செய்தார். 'நான் அவரிடத்தில் பள்ளி கட்டணத்தை கட்டும் நிலையில் எனது குடும்பம் இல்லை என திட்டவட்டமாக எடுத்துக் கூறினேன். உடனே அவர் எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்க ஏற்பாடு செய்தார். அதனால், நான் அடுத்த நான்கு வருடங்களுக்கு பள்ளிக்கு எந்த பணமும் கட்ட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அதனால், நான் கிரிக்கெட்டில் எனது முழு கவனத்தை செலுத்தினேன்’

Rohit-Sharma-with-family-parents.jpg

அன்றைய தினங்களில் இந்தியாவெங்கும் சச்சின் அலை ஓங்கியிருந்தது. ஒவ்வொரு இந்திய சிறுவனும், இளைஞனும் சச்சின் குறித்தான் பிரேமையில் திளைத்திருந்தார்கள். விராட் கோலி குறிப்பிடுவதைப் போல 'ஒரு காலக்கட்டத்தின் நினைவலைகளை உருவாக்கியவர் சச்சின்’. சச்சினை போன்றே கிரிக்கெட் விளையாட்டில் உச்சத்திற்கு செல்ல வேண்டுமென்கின்ற கனவு பல வளரும் கிரிக்கெட் விளையாட்டாளர்களுக்கு இருந்து வந்தது. ஆனால், இவர்களில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டு ரோஹித் சர்மாவுக்கு மேற்கு இந்தியத் தீவுகள் அணியை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவானான பிரயன் லாராவின் மீது மிகப் பெரிய பிரமிப்பு உருவாகியிருந்தது. அவரது ஆட்ட சாதுர்யத்தால் ஈர்க்கப்பட்டிருந்தார் ரோஹித் சர்மா.

இந்த காலக்கட்டங்களில், ரோஹித் சர்மா மிகக் கடினமாக பயிற்சிகளில் ஈடுபடத் துவங்கினார். அவருக்கு ஒருபோதும் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை இருந்ததில்லை. நமக்கொரு அங்கீகாரம் கிடைக்கிறதென்றால், அதற்காக மிக அதிக மெனக்கெடலையும், உழைப்பையும் நாம் செலுத்தியிருக்க வேண்டும் என்பதில் அவர் எப்போதும் உறுதியுடன் இருந்தார்.

rohit.jpg

'எவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நான் நிச்சயம் ஆசீர்வதிக்கப்பட்டவன் இல்லை. ஒருவேளை நான் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், நேரடியாகவே நான் ஒரு பேட்ஸ்மேனாக உருவெடுத்திருப்பேன். அவசியமில்லாமல் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் துவக்க காலத்தில் என்னை பெளலர் என கற்பனை செய்து கொண்டு உலவியிருக்க மாட்டேன். எனது பேட்டிங் திறனுக்காக மிக அதிகமாக உழைத்திருக்கிறேன். எனது பயிற்சியாளர்கள் அதற்கு உதவி இருக்கிறார்கள். தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கும்போது பிரமிப்பாகவும், நாங்கள் நட்சத்திரங்களை போலவும் தோன்றலாம், ஆனால், இவையெல்லாம் கடின உழைப்பு மற்றும் பயிற்சியின் பலனாகக் கிடைப்பவை. எனது வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையையும் நான் அதீத உழைப்பின் மூலமாகவே அடைந்திருக்கிறேன்' என்கிறார் ரோஹித் சர்மா.      

Rohit-Sharma.jpg

தினேஷ் லட்டுக்கு ரோஹித்தின் பேட்டிங் திறன் மீது எப்போதும் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வந்தது. அதனால், அவர் பள்ளியில் நடைபெற்ற ஹாரீஸ் அண்ட் கைல்ஸ் ஹீல்ட் கோப்பையில் ரோஹித்தை துவக்க ஆட்டக்காரராக களமிறக்கினார். அதற்கு முன்பு ரோஹித்தின் கிரிக்கெட் செயல்பாடு என்பது வெறும் ஆஃப் ஸ்பின்னர் என்பதாகவே இருந்தது. எப்போதும் அவர் எட்டாவது அல்லது அதற்கும் கீழான ஆட்டக்காரராகத்தான் களத்தில் இறங்குவது வழக்கம். ஆனால், தினேஷ் ரோஹித்தை துவக்க ஆட்டக்காரராக இறக்கிவிட்டார்.

28Rohit-Sharma.jpg

ரோஹித்தின் அதற்கு அடுத்ததான கிரிக்கெட் வளர்ச்சியின் துவக்கப் புள்ளி இந்தப் போட்டிதான். முதல் முறையாக, துவக்க நிலை ஆட்டக்காரனாக களத்தில் இறங்கிய ரோஹித் அந்த போட்டியில் எளிதாக 100 ரன்களை கடந்திருந்தார். தினேஷ் தனது சீடனை நினைத்து பெருமை கொண்ட தருணம் அது. அவரது நம்பிக்கை பொய்க்கவில்லை. ரோஹித்தின் பேட்டிங் திறன் பற்றிய கணிப்பு இந்த போட்டிக்கு பின்னர் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தினேஷ் லட் அன்றைய தினத்தை பற்றி குறிப்பிடுகையில், 'அதன் பிறகு, அவனுக்கு பின்னடைவே இல்லை. மேலும் மேலும் துவக்க ஆட்டக்காரனாக களமிறங்கி ரன்களை அதிகளவில் குவித்துக் கொண்டிருந்தான் ரோஹித்' என்கிறார்.

சிக்ஸர் பறக்கும்…...   

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/aug/03/best-of-rohit-sharma-2968278.html

Link to comment
Share on other sites

13. ரோஹித் சர்மாவின் சோதனை மிகுந்த துவக்க காலங்கள்!

13rohit-double4

 

இந்திய கிரிக்கெட் அணியின் சமீப கால விளையாட்டாளர்களில் ரோஹித் சர்மா அளவுக்கு காயங்களினால் அவதிப்பட்ட வீரர்கள் எவரும் இல்லை. 2007ல் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடத் துவங்கியதிலிருந்து இன்றைய தினம் வரையிலும் அவர் காயத்தினால் அணியில் இடம் பெற இயலாமல் போன சூழல்கள் பல உண்டு. கிட்டதட்ட சரிவர தொடர்ச்சியாக நிலையான ஃபார்ம் இன்றியும், காயங்களினாலும் போட்டிகளை தவற விடுவதிலும் ரோஹித் சர்மாவே தற்கால இந்திய வீரர்களில் முக்கியமானவராக இருக்கிறார். இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு கிடைத்ததிலிருந்து ஏழு வருடங்கள் கடந்த நிலையிலேயே அவரால் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடிந்தது.

prv_1513074888.jpeg

ரோஹித் சர்மா இந்திய அணிக்காக முதல் முதலாக தேர்வு செய்யப்பட்ட ஆண்டு 2007. ரோஹித்துக்கு அப்போது வயது 20. அயர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற அப்போட்டித் தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கினார். முதல் போட்டியில் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் மனதளவில் ரோஹித் சர்மாவுக்கு மிகுந்த வருத்தம் உண்டானது. தொடர்ச்சியாக அணியில் இடம் கிடைக்கும் தருணங்களிலும் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் அவருக்கு வாய்த்திருக்கவில்லை.

கிட்டதட்ட மூத்த விளையாட்டு வீரர்கள் அணியில் பங்கு பெற முடியாத சூழல்களில் மட்டுமே ரோஹித் சர்மாவுக்கு அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதுவும், அவருடன் சம நிலையில் அப்போது ரஹானேவும் இருந்துக் கொண்டிருந்தார். ரஹானேவும், ரோஹித் சர்மாவும் மாறி மாறி மூத்த வீரர்களின் மாற்றாக களத்தில் இறங்கினார்கள் என்பதால், அவர்களுக்கான அடையாளத்தை  அப்போது உருவாக்கிக்கொள்ள இயலாமல் இருந்தது. இளைஞரான ரோஹித் சர்மாவுக்கு தனக்கான இடம் அணியில் உருவாகாமல் இருந்தது குறித்து ஏமாற்றமாக இருந்தது.

rohit_sharma_cricket_05_02_2017.jpg

முன்னதாக, பள்ளி காலங்களில் சிறப்பான ஆட்டத்தை ரோஹித் சர்மா வெளிப்படுத்தி வந்ததன் தொடர்ச்சியாக, அவருக்கு இந்தியாவின் அண்டர் 17 அணியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அப்போது அணித் தேர்வாளரான பிரவீண் ஆம்ரேதான் ரோஹித்தின் ஆட்டத் திறனின் மீதான நம்பிக்கையால் அவருக்கு அந்த வாய்ப்பினை வழங்கியிருந்தார். துடிப்புமிக்க இளைஞராகவும், கடினமான பயிற்சிகளில் அதீத ஈடுபாட்டுடன் தன்னை உட்படுத்திக் கொண்டிருந்தவருமான ரோஹித் சர்மா இந்த சந்தர்ப்பத்தை தனக்கு உகந்த வகையில் பயன்படுத்திக் கொண்டார். மெல்ல மெல்ல அவரது பேட்டிங் திறன் வளர்ந்தபடியே இருந்தது.

Rohit-Sharma-2641.jpg

2005-ல் குவாலியரில் நடைபெற்ற தியோதர் கோப்பையில், செண்ட்ரல் ஸோன் அணிக்கு எதிராக 123 பந்துகளில் 142 ரன்களை குவித்து ரோஹித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி தேர்வாளர்களை ரோஹித் சர்மாவின் நிதானமான அதே சமயத்தில் அவசியப்படும் தருணத்தில் வெளிப்படும் அதிரடி ஆட்டம் வெகுவாக கவர்ந்திருந்தது. இந்தியாவெங்கும் திறன்மிக்க இளைஞர்களை ஊக்குவித்து அவர்களை முன்னிலைப்படுத்தும் வேலையில் ஈடுப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் வாரியம் அப்போது ரோஹித் சர்மாவுக்கும் வாய்ப்பளிக்க முடிவு செய்திருந்தது. இரண்டு வருடங்களுக்கு பிறகு, அயர்லாந்துக்கு எதிராக அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெற்ற சில மாதங்களிலேயே 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடங்கியது. ரோஹித் சர்மாவின் ஆட்டத்தின் மீது அணியினரிடத்தில் முதல் முதலாக நம்பிக்கையை உண்டாக்கிய போட்டித் தொடர் இருபது ஓவர் உலக கோப்பை தான். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ரோஹித் சர்மா விளாசிய 50 ரன்கள்தான், இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேற மிகப்பெரிய காரணமாக இருந்தது. அரை இறுதியில் மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து பொறுப்புடன் ரோஹித் சர்மா விளையாடினார். ரோஹித் தோனியுடன் இணையும்போது இந்திய அணி 61 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்தது. மெல்ல நிதானமாக ஆடிய தோனி – ரோஹித் இணை 85 ரன்களை சேர்ப்பித்திருந்தது. தோனிக்கும் ரோஹித் சர்மாவின் மீது பெரியளவில் மதிப்பு உருவாகிறது.

rohit-sharma-ap-ton-1531067346.jpg

இதன் பிறகும், ரோஹித் சர்மாவால் தொடர்ச்சியாக இந்திய அணியில் பங்கேற்க முடியவில்லை. ஆட்டவரிசையில் ஒவ்வொரு நிலையிலும் தகுதி வாய்ந்த கிரிக்கெட் வீரர்களால் இந்திய அணி நிரம்பியிருந்தது. ஒருபுறம் சச்சின், சேவாக், காம்பீர் என அனுபவமிக்க ஆட்டக்காரர்கள், மறுபுறம் கோலி, சுரேஷ் ரெய்னா போன்ற வளர்ந்து வரும் திறன்மிக்க இளைய ஆட்டக்காரர்கள் என்ற கட்டமைப்பை கொண்டிருந்த இந்திய அணியில் தனக்கான இடத்தை உருவாக்கிக்கொள்ள ரோஹித் சர்மா கடினமாக போராட வேண்டியிருந்தது. முக்கியமாக, அணியில் இடம்பெறும் சர்ந்தப்பம் கிடைக்கும்போதும் ரோஹித் சர்மா ஏழாவது அல்லது எட்டாவது வீரராகவே களம் இறங்க வேண்டியிருந்தது. அதனால், மன நெருக்கடிகளுக்கும் தனது ஆட்டத்திறனை முழுமையாக வெளிப்படுத்த இயலாத சூழலை அவரை அழுத்திக் கொண்டே இருந்தது. அணியில் இடம் பெறுவதும், விளையாட முடியாமல் போவதும் தொடர்ச்சியாக நிகழ்ந்துக்கொண்டே இருந்தன.

rohitsharmaliekd.jpg

இந்த நாட்களில் மிக கடுமையாக ரோஹித் சர்மா பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். அதோடு, அணியில் பங்கேற்கும் சூழல்களில் மூத்த வீரர்களின் ஆட்ட நுணுக்கங்களை கூர்ந்து அவதானிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். சச்சின், டிராவிட், கும்ப்ளே, விவிஎஸ் லஷ்மணன் ஆகியோர் ஒரே சமயத்தில் மிகப்பெரிய புகழ் அடைந்தவர்களாகவும், தனிப்பட்ட வாழ்க்கையில் கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும், தன்னடகத்தையும் கடை பிடிப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் தங்களது வாழ்க்கையை கட்டுக்கோப்பாக நகர்த்திச் சென்றதால்தான் அவர்களால் உச்ச நட்சத்திரங்களாக உயர முடிந்தது. அதனால் அவர்களிடம் நாம் பயில வேண்டும். மிக இளைய வயதில் இந்திய அணியில் இடம் கிடைத்தபோது, நான் இவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்துப் பார்த்து வளர்ந்தேன்.  அவர்களுடன் விளையாட கிடைத்த வாய்ப்பை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாக கருதுகிறேன். அவர்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன்” என்கிறார். துவக்க காலங்களில் விவிஎஸ் லஷ்மணனுக்கு மாற்றாகவே இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் விளையாடுவது வழக்கம்.  

5th_rank.jpg

கிட்டதட்ட ஒருநாள் போட்டித் தொடரில் தனது முதல் சதத்தை நிறைவு செய்ய ரோஹித் சர்மாவுக்கு மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டது. ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 114 ரன்களை குவித்து தனது முதல் சதத்தை பூர்த்திச் செய்தார். ஆனால், ரோஹித் சர்மாவிடம் முதல் சதத்திற்குரிய பரவசம் இல்லை. வழக்கம்போல மிக அமைதியுடன் பேட்டை உயர்த்தி காண்பித்துவிட்டு, அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாராகிவிட்டார். அந்த போட்டியின் முடிவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, 'நான் எனது சதத்தை கொண்டாடும் மன நிலையில் இல்லை. இந்திய அணியை ஒரு சரியான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற நினைப்பே அத்தருணத்தில் எனக்குள் மேலோங்கி இருந்தது' என்றார். அதே ஆண்டில், இலங்கைக்கு எதிரான போட்டியில் 101 ரன்களை குவித்து தனது இரண்டாவது சதத்தையும் நிறைவு செய்தார். ஒருபுறம் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக  விளையாட துவங்கியிருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவால் பங்கேற்க முடியாமல் போனது.

2010-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டிருந்தார். போட்டி இந்தியாவில் நிகழ்ந்தது. அன்றைய தினத்தின் காலையில் பயிற்சியின்போது ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால், அவர் உடனடியாக விளையாடும் பதினோரு நபர்களில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பிறகு, மீண்டும் ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் பங்கேற்க நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

45.jpg

அதே போல், இக்காலங்களில் அவ்வப்போது ரோஹித் சர்மாவின் ஃபார்ம் குறித்து பல விமரிசனங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. ஓரிரு போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதும், மற்றைய போட்டிகளில் விரைவாகவே ஆட்டமிழந்து விடுவதும் இந்திய அணியில் அவரது இடத்தை தொடர்ந்து கேள்விக்குட்படுத்தியபடியே இருந்தது. முன்னதாக, பேட்டிங் வரிசையில் கீழ்நிலையில் களமிறங்கும் ரோஹித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறினார். எனினும், அவரது ஆட்டத்திறன் மீதான விடாப்பிடியான நம்பிக்கையை அவர் ஒருபோதும் தளரவிட்டதேயில்லை.

images1.jpg

'இதுதான் எனது இயல்பான ஆட்டம். என் வாழ்நாள் முழுக்க தொடர்ந்து நான் இவ்வகையில் தான் விளையாடுவேன். இதனால் சாதக பாதக விளைவுகள் உண்டாகலாம். ஆனால், இதுதான் எனது இயல்பான ஆட்டம். இதனை நான் தொடர்ந்து விளையாடுவேன்' எனும் ரோஹித் சர்மா எப்போதும் அதிக உறுதியுடன் நம்பிக்கையாக அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்கிறார். தற்சமயம் வரையிலும் அவரால் தொடர்ச்சியாக சிறப்பான ஃபார்மில் விளையாட இயலாமல் இருக்கிறது என்றாலும், ரோஹித் சர்மா ஒரு நம்பிக்கையை உருவாக்கி வைத்திருக்கிறார். கடந்த சில வருடங்களாக அணியில் துவக்க நிலை ஆட்டக்காரராகவும் விளங்கும் ரோஹித் சர்மா, இந்திய அணி பல்வேறு சாதனை புரியவும் காரணமாக இருக்கிறார். அவர் நிலைத்து நின்றுவிட்டாலே அணியின் ஸ்கோர் 400ஐ தாண்டுவது உறுதி என்கின்ற நிலை தற்போது உருவாகியிருக்கிறது.

ஆனால், இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்று தருணமான 2011 உலக கோப்பை அணியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை என்பது அவருக்கு கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப் பெரிய இழப்புகளில் ஒன்றாகவே இன்னமும் கருதி வருகிறார். மோசமான ஃபார்ம் மற்றும் விரலில் உண்டான காயம் காரணமாக அவர் இந்திய அணியில் இடம்பெற முடியாமல் போனது. எனினும், ரோஹித் சர்மா மிக விரைவாக மீண்டு வந்தார். ரோஹித் சர்மா தனக்கான நாட்களுக்காக காத்திருக்க துவங்கினார். அவனது மனதில் வலி பெருகியது. உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்த ரோஹித் சர்மா அந்த கணத்தில் இருந்து விஸ்வரூபம் எடுக்கத் துவங்கினார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்க்ஸ் இந்த புள்ளியில் இருந்து துவங்கியது.

சிக்ஸர் பறக்கும்……   

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/aug/10/13-ரோஹித்-சர்மாவின்-சோதனை-மிகுந்த-துவக்க-காலங்கள்-2977231.html

Link to comment
Share on other sites

14. அசுரத்தனமான சிக்ஸர்களை குவிப்பதில் ரோஹித் சர்மாவுக்கு நிகர் ரோஹித் சர்மாதான்!

 

 
Rohit-Sharma-was-adjudged-man-of-the-match-to-score-118-runs-in-43-balls-652x365

ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய மாறுதல்களை உண்டாக்கிய வருடம் 2013. இந்த வருடத்தில் இருந்துதான் ரோஹித் சர்மா இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். இந்திய அணியின் துவக்க இணை எப்போதும் வலது கை ஆட்டக்காரர் ஒருவரையும், இடது கை ஆட்டக்காரர் ஒருவரையும் கொண்டிருக்கும். ஷீகர் தவான் ஒருபுறம் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலமாக இந்திய அணியில் சிறப்பானதொரு இடத்தை பிடித்துவிட, மறுமுனையில் ரோஹித் சர்மாவை களமிறக்கலாம் என்ற முடிவை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்திருந்தது.

2003க்கு முன்பாக இந்திய அணிக்காக 86 போட்டிகளில் விளையாடியிருந்த ரோஹித் சர்மா மூன்று முறை மட்டுமே துவக்க நிலை ஆட்டக்காரராக இறங்கியிருந்தார். அதிலும் சொல்லிக் கொள்ளும்படியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. அதிகபட்சமாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 29 ரன்களை அடித்திருந்தார். மைய ஆட்டாக்காரராக மட்டுமே பெரும்பாலான அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிக் கொண்டிருந்த ரோஹித் சர்மாவை துவக்கத்திலேயே களமிறக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவு வெகு சிறப்பானது.

76127-klofqvyxat-1512905793.JPG

‘துவக்க ஆட்டக்காரனாக களமிறங்கியது எனது பேட்டிங் திறனை வெகுவாக மேம்படுத்திக் கொள்ள வழிவகுத்தது. களத்தில் விளையாட நிறைய நேரத்தையும், பொறுப்புணர்வையும் ஒருங்கே வழங்கியது. இந்தியாவுக்காக துவக்க ஆட்டக்காரனாக இறங்குவேன் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. பள்ளி கல்லூரியில் இறங்கியிருக்கிறேன் என்றாலும், இந்தியாவுக்காக ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்பதை கற்பனைக் கூட செய்ததில்லை. ஆனால், அணி நிர்வாகமும், சக விளையாட்டாளர்களும், புதிய பந்தைய கையாளுவதற்கான சாதூர்யம் என்னிடம் இருப்பதாக நம்பினார்கள். என் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்திருந்தார்கள். அவ்வாறு உங்கள் மீது ஒருவர் நம்பிக்கை வைக்கும்போது அது உங்களுக்கு கூடுதல் மனவுறுதியையும் அளிக்கிறது’. என்று கூறினார் ரோஹித்.

ரோஹித் சர்மா துவக்க ஆட்டக்காரராக களமிறங்கியதில் இருந்து இந்தியா பல வெற்றிகளை குவித்தது. நிலைத்த உறுதியான துவக்கத்தை பல போட்டிகளில் ரோஹித் சர்மா உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல அவரது சிறப்பான ஆட்டம் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கி இருந்தது. இந்திய அணிக்கு ஏற்ற ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா மெல்ல உருவெடுத்திருந்தார். முதல் 86 போட்டிகளில், பல்வேறு நெருக்கடிகளை கடந்து வெறும் 1,978 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்த ரோஹித், துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிறகான 92 போட்டிகளில் 4583 ரன்களை குவித்திருக்கிறார். அதில் மூன்று இரட்டை சதங்களும் அடக்கம்.

291795-rohit-sharma-viratodi700.jpg

ரோஹித் சர்மா தனது முதலாவது இரட்டை சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்தார். 2013-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற போட்டித் தொடரின் 7-வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா தனது முதல் இரட்டை சதத்தை கடந்தார். 16 சிக்ஸர்களை அப்போட்டியில் கடந்ததன் மூலமாக, ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன் என்கின்ற சாதனையும் ரோஹித் சர்மாவின் வசம் வந்து சேர்ந்தது. முன்னதாக, இந்த போட்டித் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 141 ரன்களை குவித்து அணியை வெற்றிப் பெற செய்தார்.

பொதுவாக தனது கிரிக்கெட் வாழ்க்கை பற்றி பேசும்போது ரோஹித் சர்மா, ‘2013 முன்பு நான் விளையாடிய ஆட்டத்தை மறந்து விடுங்கள். நான் எனது ஆட்டத் திறனுக்காக கடுமையாக உழைத்து வருகிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கை 2013-ல் இருந்துதான் துவங்குகிறது. அதனால், அதன் பிறகான எனது வாழ்க்கை குறித்து மட்டும் பேசுங்கள்’ என்றே சொல்வது வழக்கம். 2013க்கும் பிறகு, ரோஹித் சர்மா பல சாதனைகளை செய்துள்ளார்.

2015 உலக கோப்பை கால் இறுதியில் வங்கதேச அணிக்கு எதிராக, 137 ரன்கள், அதே வருடத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 150 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2016 ஜனவரியில் நிகழ்ந்த போட்டித் தொடரில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தொடர்ந்து சதம் அடித்தது, அதேத் தொடரின் இறுதிப் போட்டியில் 99 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தது, அனைத்தையும் விட இலங்கைக்கு எதிரான போட்டியில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை விளாசியது என அவரது ஒவ்வொரு சிறந்த ஆட்டம் வெளிப்பட்ட போட்டிகளும் இந்திய அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களாகவே இருந்திருக்கின்றன.

டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஏழு வருடங்கள் காத்திருந்த ரோஹித் சர்மா, தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் சகாப்தத்தை நிறைவு செய்யும் பொருட்டு நிகழ்த்தப்பட்ட அந்த டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக, களமிறங்கிய ரோஹித் சர்மா 177 ரன்களை குவித்தார். நீண்ட வருடங்களாக தன்னால் பங்கேற்க முடியாமலிருந்த டெஸ்ட் போட்டியை வெற்றி கொள்ளும் முனைப்பில் அவரது ஆட்டம் நிதானமாகவும், பொறுப்புடனும் இருந்தது.

அடுத்த டெஸ்ட் போட்டியிலும் உடனடியாக சதம் அடித்து, இந்திய அணியில் மொஹமத் அசாரூதின் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோருக்கு அடுத்ததாக இரண்டு சதங்களை தொடர்ச்சியாக இரண்டு போட்டியில் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மாவும் இணைந்துக் கொண்டார். அசாரூதினும், கங்குலியும் தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் சதங்களை அறிமுக தொடரில் அடித்தவர்கள். ரோஹித் சர்மாவின் சாதனை அவர்களுக்கு நிகரானதாக வைத்துப் போற்றப்பட்டது. தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த வாய்ப்பொன்றை மிக இறுக்கமாக பற்றிக்கொள்ளும் வெறி ரோஹித் சர்மாவினிடத்தில் இருந்ததை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ரோஹித் சர்மா 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று முறை சதமடித்திருக்கிறார். அதில் ஒரு சதம் வெறும் 35 பந்துகளில் அடிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டேவிட் மில்லரும் 35 பந்துகளில் சதமடித்திருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி என மூன்று கிரிக்கெட் வடிவங்களிலும் மூன்று சதங்களை உலகளவில் கடந்த ஒரே கிரிக்கெட் விளையாட்டாளர் என்கின்ற சாதனையும் ரோஹித் சர்மாவிடம் இருக்கிறது. அதே போல, இருபது ஓவர் போட்டியில் அதிக முறை ரன் எதுவும் இல்லாமல் அவுட் ஆன இந்திய விளையாட்டு வீரர் என்கின்ற எதிர்மறையான சாதனைக்கும் ரோஹித் சர்மா சொந்தக்காரர்.

பொதுவாக, இந்திய கிரிக்கெட் அணிக்கு ரோஹித் சர்மா போன்ற உறுதியான ஷாட்டுகளை விளாசக் கூடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் கிடைப்பது அபூர்வம்தான். அவரது ஷாட்டுகளில் சிறு பிசகும் இருக்காது. ஒவ்வொரு ஷாட்டும் கச்சிதமாக முழுமையாக இருக்கும். மிட் ஆனில் அவர் அடிக்கின்ற சிக்ஸர்கள் அசுரத்தனமானவை. முதல் சில ஓவர்களை மட்டும் ரோஹித் சர்மா நிலைத்து நின்று கடந்துவிட்டாலே, இந்திய அணியின் ஸ்கோர் உயரப்போவது உறுதி. அதேப்போல, துவக்க ஓவர்களில் அவர் கடைப்பிடிக்கின்ற நிதானமும் விசித்திரமானது. மிக மெதுவாகவே, அவர் ஒவ்வொரு ரன்னாக சேர்த்துக் கொண்டிருப்பார். ஆனால், ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் பந்து நாலாபுறமும் சிதறி ஓடிக் கொண்டிருக்கும்.

ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் என்றாலும், முக்கியமான போட்டிகளில் இன்னமும் ஏமாற்றத்தை அளித்துவிடுகிறார் என்றே கருதப்படுகிறது. குறிப்பாக, 2015 உலக கோப்பை அரை இறுதியின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெறும் 34 ரன்களை மட்டுமே எடுத்து நல்ல துவக்கத்தை இந்திய அணிக்கு கொடுக்கத் தவறிவிட்டார். அதே போல 2016 இருபது ஓவர் உலக கோப்பையிலும், 2017 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியிலும் எதிர்பார்த்த அளவுக்கு ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடவில்லை.   

இரண்டு காரணங்கள் அவர் மிக விரைவாக ஆட்டமிழப்பதற்கு கூறப்படுவதுண்டு. முதலாவது மனோநிலை. யாராவது ஒரு பந்து வீச்சாளர் அவரது சாத்விகமான குணத்தை சீறும்போது, அவர் நிதானமிழந்து விடுகிறார். அவரது உறுதி கலையும் போது, பதற்றத்தில் பந்தின் மீதான கவனத்தை இழந்து விடுகிறார். அதனால் எளிதாக தனது விக்கெட்டை பறி கொடுத்து விடுகிறார் சர்மா. பல உதாரணங்கள் இதற்கு இருக்கின்றன. இரண்டாவது காரணம், ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடாவிட்டால், அந்த தொடர் முழுவதும் ஒருவிதமான குற்ற உணர்வில் பீடிக்கப்பட்டிருப்பது ரோஹித்தின் வழக்கமாக இருக்கிறது. ரோஹித் தனது விக்கெட்டை மிக விரைவாக பறி கொடுத்து விடும் தருணங்களை குறித்து அதிக கவலையுறுகிறார். அவரது கவலை அடுத்தடுத்த போட்டிகளில் பிரபலித்து விடுகிறது. இதனால், மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் சாத்தியத்தை கொண்டிருக்கும் ரோஹித் சர்மா பலமுறை, தன் மீதுள்ள எதிர்பார்ப்புகளை பொய்த்துப் போகும்படி சொற்ப எண்ணிக்கையிலான ரன்களில் ஆட்டமிழந்து இருக்கிறார்.

‘யாரும் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. சில தருணங்களில் தவறு நிகழ்வது சாத்தியமானதுதான். தொடர்ந்து தோல்விகளை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காமல், அடுத்தடுத்த போட்டிகளில் மேலும் சரியான ஷாட்டுகளை எப்படி அடிப்பது, பந்தை எப்படி அணுகுவது என்பதில் மட்டும் நமது கவனத்தை குவிக்க வேண்டும்’ என்று சொல்லும் ரோஹித் சர்மா, அபரிதமான ஆற்றல் உடையவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும், தனது ஆட்டத்திறனை மேலும் உறுதியுடன் வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதிலும் அவ்வப்போது காயங்களினாலும், ஃபார்ம் இன்றியும் தவித்துக் கொண்டிருந்தாலும், இந்திய கிரிக்கெட் வாரியம் அவர் அணியில் இருப்பதை வெகுவாக விரும்புகிறது. அவருக்கு மேலும் மேலும் சாத்தியங்களை உருவாக்கிக் கொடுக்கிறது. ஏனெனில் அவரது திறன் மீது மிகுதியான நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. இந்திய தேர்வு குழு உறுப்பினர்களில் ஒருவரான சபா கரீம், ‘நாங்கள் அவருக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருகிறோம். பிரத்யேகமான தனித்துவமிக்க பேட்ஸ்மேன் அவர். இத்தகைய கிரிக்கெட் விளையாட்டாளர்கள் நமக்கு கிடைப்பது அபூர்வமானது. அதனால், எங்களது முழு ஆதரவு எப்போதும் அவருக்கும் இருந்து கொண்டிருக்கும். ஏனெனில், அவரது இடத்தை வேறு யாராலும் அத்தனை எளிதாக நிரப்பிவிட முடியாது’ என்கிறார்.

சிக்ஸர் பறக்கும்……     

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/aug/17/14-அசுரத்தனமான-சிக்ஸர்களை-குவிப்பதில்-ரோஹித்-சர்மாவுக்கு-நிகர்-ரோஹித்-சர்மாதான்-2981744.html

Link to comment
Share on other sites

15. டிசம்பர் 13, 2015 ரோஹித் சர்மாவின் வாழ்க்கையில் மிக முக்கியமான தினம்! ஏன்?

 

 
rs

 

‘ஒவ்வொரு முறை இந்திய அணிக்காக விளையாடும்போதும் பொறுப்புணர்வு அதிகமாக இருக்கிறது. அதிலும், கேப்டனாக பதவி வகிக்கும்போது இந்த பொறுப்புணர்வு கூடுதலாகவே இருக்கும். நீங்கள் எல்லாவற்றையும் முன்னால் நின்று தலைமையேற்று வழிநடத்திச் செல்ல வேண்டும். அணி வீரர்களும் உங்களது தலைமையேற்பை எவ்வித குறுக்கீடுகளுமின்றி ஏற்று பின்பற்றச் செய்தல் வேண்டும்’ – ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாக பொறுப்பு வகிக்கிறார். சில தொடர்களில் கோலி ஓய்வில் இருக்கும்போது, இந்திய அணியின் கேப்டன் பதவியையும் ரோஹித் சர்மா வகித்திருக்கிறார். அவர் கேப்டனாக தலைமையேற்ற போட்டித் தொடர்களில் இந்திய அணி வெற்றியடைந்திருக்கிறது. கோலியை போன்று அதீத ஆக்ரோஷத்துடன் செயல்படாது, மிக அமைதியுடன் தனது ஒவ்வொரு அணி வீரர்களின் மீதான நம்பிக்கையில், அவர்கள் தங்களது முழுத் திறனையும் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விளையாடும் சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அடிப்படையில், மிகவும் கூச்ச சுபாவம் மிகுந்த ரோஹித் சர்மா, பெரும்பாலும் அமைதியாகவே களத்தில் காணப்படுவார். சில எதிர்பாராத தருணங்களும், அணி வீரர்கள் முக்கியமான தவறுகளை செய்திடும்போதும் தனக்குள்ளாக தலையசைத்துக் கொண்டு அந்த சூழலை கடக்க முயல்வாரே தவிர, அணியினரை திட்டுவதோ கோபப்படுவதோ மிக அரிதாகவே நிகழும்.

269189.jpg

முதல் முதலாக, இந்திய அணியின் கேப்டன் பதவி ரோஹித் சர்மாவின் கைவசம் அளிக்கப்பட்டது 2017-ம் ஆண்டில். இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளை கொண்ட அந்த தொடரில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அதனால், ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றார். இரு தொடர்களையும் இந்திய அணியே கைப்பற்றியது. ரோஹித் சர்மா கேப்டனாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் அதே தருணத்தில், தனது பேட்டிங் திறனையும் சரிவர கையாண்டார். மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட அந்த தொடரில் 217 ரன்கள் குவித்து, அந்த தொடரின் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் என்கின்ற பெருமையையும், மூன்று இருபது ஓவர் போட்டிகளை கொண்ட தொடரில் 162 ரன்கள் குவித்து, அந்த தொடரிலும் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் என்கின்ற பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றார். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே இந்திய அணியை வெற்றியை நோக்கி இழுத்துச் சென்றது அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் பெருமைமிகு தருணங்களாக  இருக்கின்றன.

அதே போல இவ்வாண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற நிதாகஸ் தொடரிலும் இந்திய அணியின் கேட்பனாக தலைமை தாங்கிய ரோஹித் சர்மா, அந்த தொடரை இந்தியா கைப்பற்றவும் முக்கியமான காரணமாக இருந்தார். ரோஹித் சர்மா கேப்டனாக சிறப்பாக செயல்படுவதற்கு அவருக்கு, ஐ.பி.எல் போட்டித் தொடரில் மும்பை அணியை தலைமை தாங்கி வழி நடத்திய அனுபவங்களே  பெரிதும் உதவியிருக்கின்றன.

2013-ம் ஆண்டிலிருந்து மும்பை அணியை தலைமையேற்றும் வழிநடத்தும் ரோஹித் சர்மா இரண்டு முறை ஐ.பி.எல் போட்டித் தொடரை மும்பை வெல்ல காரணமாக இருந்தவர். ஐ.பி.எல் போட்டித் தொடரில் மூன்று முறை இறுதிப் போட்டி வரையிலும் அணியை அழைத்துச் சென்ற இரண்டு கேப்டன்களில் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தில் இருப்பவர். முதல் இடத்தை தோனி தக்க வைத்துள்ளார். ஐ.பி.எல் தொரில் கேப்டனாக விளங்கியதுதான் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை மிகுந்த அர்த்தபூர்வமானதாகவும், பொறுப்புமிக்கதாகவும் ஆக்கியிருக்கிறது.

rohit_rithi.jpg

டிசம்பர் 13, 2015 அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான தினம். ரோஹித் சர்மாவை கிரிக்கெட் களத்தில் மட்டுமல்லாது சொந்த வாழ்க்கையிலும் பொறுப்புமிக்கவராக மாற்றிய தினம். தனது நீண்ட நாள் காதலியான ரித்திகா சாஜ்தேஹ்ஹை அன்றைய தினத்தில்தான் ரோஹித் சர்மா மணமுடித்தார். ரித்திகாவும், ரோஹித்தும் சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்தவர்கள். ரோஹித் சர்மாவின் மனதுக்கு உகந்த நெருக்கமான தோழியாகவே ரித்திகா இருந்துக் கொண்டிருந்தார். அதீதமான நேசிப்பு எப்படி காதலாக உருவெடுத்தது என்பதை இருவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. திருமணத்துக்கு முன்னதான ஆறு வருடங்களில் இருவரும் நெருக்கமாக பழகி வந்தார். ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் சோர்வும், நம்பிக்கையின்மையும் சூழும்போதெல்லாம் ரித்திகாதான் அவரை தேற்றி விடுவார். தன்னம்பிக்கை பெருகும் வார்த்தைகளை நிறைய சொல்லுவார். ரோஹித்துக்கு அந்த நாட்களில் அவையெல்லாம் மிகவும் முக்கியமானதாக இருந்தது.

ஒவ்வொரு போட்டியின் போதும் ரித்திகா அப்போதே விளையாட்டு மைதானத்துக்கு வந்துவிடுவார். ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை வெகுவாக ரசித்து உற்சாகமூட்டியபடியே இருப்பார். ரோஹித் சர்மாவுக்கு தனது வாழ்க்கையில் தவிர்க்க விடக் கூடாத உயிராக ரித்திகா மாறிப் போயிருந்தார். ஏப்ரல் 28, 2015-ல் ரித்திகாவை தான் முதல் முதலாக கிரிக்கெட் விளையாடிய ரோரிவ்லி மைதானத்துக்கு அழைத்துச் சென்ற ரோஹித் சர்மா, அங்கு மோதிரம் ஒன்றை அவர் முன்னால் நீட்டி தனது காதலை வெளிப்படுத்தினார். ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் விளையாட்டின் மீதான காதல் அந்தளவிற்கு மிகத் தீவிரமானது. ரித்திகாவுக்கும் பெரும் மகிழ்ச்சி உண்டானது. உடனடியாக, இந்த தகவல் ஊடகங்களில் பேசப்பட்டன. அப்போதுதான் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனைகளை படைத்துக் கொண்டிருந்த ரோஹித் சர்மாவின் காதல் விவகாரம் பூதாகரமாக மீடியாக்களில் பகிரப்பட்டு பரபரப்புடன் பேசப்பட்டது. இதனால், மிக விரைவாகவே இருவருக்குமிடையில் நிச்சயதார்தம் செய்யப்பட்டது.

rohit.jpg

ரோஹித் சர்மா – ரித்திகாவின் திருமணம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் பல முக்கிய பிரபலங்களில் திருமண விழாவில் கலந்து கொண்டார்கள். சச்சின், அம்பானி குடும்பத்தினர் என பலரும் நேரடியாக வருகைப் புரிந்து மணமக்களை வாழ்த்தினார்கள். ரோஹித் சர்மாவின் காதல் மனைவியுடனான திருமண வாழ்க்கை அந்த தருணத்தில் இருந்து துவங்கியது.

மூன்று முறை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இரட்டை சதம் அடித்துள்ள ரோஹித் சர்மா, தனது மூன்றாவது இரட்டை சதத்தையே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறார். ஏனெனில், அந்த இரட்டை சதத்தை அவர் பூர்த்தி செய்த தினம் 2017ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி. அன்றைய தினம் ரோஹித் சர்மாவின் திருமண நாள்.  தனது காதல் மனைவியை சிறப்பிக்கும் வகையில், அந்த இரட்டை சதத்தை அவர் ரித்திகாவுக்கு சமர்ப்பணம் செய்தார். கூடுதலாக, அன்றைய தினத்தில் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனும்கூட.   

rrr.JPG

ரோஹித் சர்மாவுக்கு பொதுவாக கேப்டன் பதவி என்பதையெல்லாம் விட தனது ஆட்டத்திறன் தொடர்ந்து எவ்வித சோர்வுக்குள்ளாக்கும் விளைவுகளையும் உண்டாக்காமல், சீராக செயல்பட வேண்டுமென்பதே மிகப்பெரிய சவாலாக இருந்து கொண்டிருக்கிறது. தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் அவர் தொடர்ச்சியாக ஃபார்ம் இன்றி தவித்து வருகிறார். எனினும், தனது பேட்டிங் திறன் மீது அவருக்கு அதிகளவில் நம்பிக்கை எப்போதும் இருக்கிறது. ‘நான் ஏபி டீவில்லியர்ஸ், தோனி மற்றும் கிரிஸ் கேயல் போன்றவன் அல்ல. என்னால் அவர்களைப்போல பந்தை அதிக வலுவுடன் விளாச முடியாது. நான் எனது ஆத்ம பலத்தையே பெரிதும் நம்புகின்றேன். களத்தில் எனது மூளையை சுறுசுறுப்புடன் வைத்திருப்பதன் மூலமாக, எந்த பந்தை எப்படி எதிர்கொள்வது என்கின்ற திட்டமிடல் என்னுள் உருவாகிறது. அதனை பின் தொடர்ந்தே என் ஷாட்டுகளை நான் வடிவமைத்துக் கொள்கிறேன்’ என்று தனது பேட்டிங் பாணி குறித்து ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார். 

291795-rohit-sharma-viratodi700.jpg

அடுத்தடுத்த போட்டிகளில் சதமும், அரை சதமும் தொடர்ந்து விளாசித் தள்ளும் பாணியையும், பிறிதொரு தருணத்தில் சொற்பான எண்ணிக்கையிலான ரன்களில் ஆட்டமிழப்பதும் அவரது வழக்கமாக இருக்கிறது. அதனால், ஒரு சமயத்தில் மிகப் பெரிய சாதனைகளை படைத்திருந்தாலும், இன்னமும் உறுதியான நம்பிக்கையை அவரால் ரசிகர்களிடத்தில் ஏற்படுத்த இயலாமல் இருக்கிறது. எனினும், இந்திய அணியில் ரோஹித் சர்மாவின் இருப்பு என்பது மிகுந்த அவசியமானது என்பதை மறுப்பதற்கில்லை. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ரோஹித் சர்மா கூடுதல் நிதானத்துடன் பொருமையுடன் பந்துகளை எதிர் கொள்ள வேண்டுமென்பதே அவரது ரசிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விருப்பமாக இருக்கிறது.  

எதிர் வரும் உலக கோப்பை போட்டித் தொடரில் அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ரோஹித் சர்மாவும் தனது பொறுப்புகளை உணர்ந்தே  இருக்கிறார். அவரது அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு மிகப் பெரிய பலமாகும். மிக எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்து பெரும் சாதனைகளின் சொந்தக்காரராக இருக்கும் ரோஹித் சர்மா, உலகக் கோப்பை தொடரில் தன் மீதுள்ள எதிர்ப்பார்ப்புகளையெல்லாம் பூர்த்தி செய்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

சிக்ஸர் பறக்கும்……

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/aug/24/15-டிசம்பர்-13-2015-ரோஹித்-சர்மாவின்-வாழ்க்கையில்-மிக-முக்கியமான-தினம்-ஏன்-2986101.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

16. பாகிஸ்தான் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் இவர்தான்!

 

 
ba

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருப்பவர் பாபர் அஸாம் (Babar Azam). 23 வயதே நிரம்பியிருக்கும் இந்த இளைஞரைதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. 2015-ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டியொன்றில் அறிமுக வீரராக களமிறங்கிய பாபர் அஸாம், மூன்றே ஆண்டுகளில் பலதரப்பட்ட சாதனைகளுக்கு உரியவராக உயர்ந்திருக்கிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் பாபர் தற்போது வகித்து வரும் இடம் - இரண்டு. முதல் இடத்தை பிடித்திருக்கும்  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அடுத்ததாக, தரவரிசை பட்டியலில் பாபர் அஸாம் நிலைகொண்டிருக்கிறார்.

முன்னதாக, பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஒருவர் தரவரிசை பட்டியில் முதல் சில இடங்களில் ஒருவராக இடம்பெற்றிருப்பது மிக நீண்ட காலத்துக்கு பிறகே நிகழ்ந்திருக்கிறது. அந்த அணியின் மிகச் சிறந்த ஆட்டக்காரர்களான இம்ஸமாம் அல் ஹக், ஷாகித் அப்ரிதி, அன்வர் முதலியானவர்களுக்கு பிறகு அந்த அணி ஒரு நிலையான உறுதியான ஆட்டக்காரரை அடையாளம் காணும் சாத்தியங்கள் இன்னமும் உருவாகமல் இருக்கிறது. மிஸ்பா வுல் ஹக் போன்றோர் சில பல காலம் அணியில் நீடித்திருக்கிறார்கள் என்றாலும், அவர்களிடமிருந்து ஒரு நினைவுக்கூரத்தக்க சிறப்பானதொரு ஆட்டம் வெளிப்படாமல் இருந்தது.

பாகிஸ்தான் அணியில் சொல்லும்படியான காலம் வரையிலும் கேப்டனாக பதவி வகித்தவர்தான் மிஸ்பா வுல் ஹக் என்றாலும், அவர் சர்வதேச அளவில் ஒரு சதத்தை கூட பூர்த்தி செய்திருக்கவில்லை. இந்த நிலையில்தான் பாகிஸ்தான் அணி பல காலமாகவே பயணித்துக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் அணி ஒருபோதும் கிரிக்கெட் விளையாட்டில் தனது முழுமையான ஆதிக்கத்தை செலுத்தியதில்லை. சர்வதேச போட்டிகள் முதல்முதலாக துவங்கியபோது மேற்கிந்திய தீவுகள் அடுத்தடுத்த இரண்டு உலக கோப்பைகளை கைப்பற்றியதன் வழியாக, ஆரம்ப கால கிரிக்கெட்டில் தனது முழுமையான ஆதிக்கத்தை செலுத்தியதைப் போலவோ, அல்லது ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகள் கிரிக்கெட்டின் மீது குறிப்பிடத்தக்க கால அளவில் நிகரற்ற சாதனைகளை செய்திருப்பது போலவோ பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரலாறு நெடுகிலும் தொடர்ச்சியான சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஒரு போட்டியில் அதீதமான வெற்றியையும், மற்றொரு போட்டியில் தரைமட்டத்துக்கு சரிந்து வீழ்ச்சியுறுவதும்தான் இதுவரையிலும் பாகிஸ்தானின் ஆட்டப் போக்காக இருந்திருக்கிறது.

பாகிஸ்தான் என்பது எப்போதுமே அதனது பவுலர்களை சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கும் அணி. இந்தியா அபாரமான பேட்டிங் வரிசை கொண்ட கிரிக்கெட் அணியென்றால், பாகிஸ்தான் அபாரமான பவுலிங் வரிசை கொண்ட கிரிக்கெட் அணியென்று உறுதியாக சொல்லலாம். இம்ரான் கான், வாஸின் அக்ரம், சுழல்பந்து வீச்சாளரான சக்லைன் முஷ்டாக், ஷோயப் அக்தர், வக்கார் யூனிஸ், ஆமீர் என உலக கிரிக்கெட் வரலாற்றின் முக்கியத்தும் வாய்ந்த சிறந்த பவுலர்கள் அனைவரும் பாகிஸ்தானை சார்ந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதோடு, பந்து வீச்சாளர் ஒருவர் அணியின் தலைமை பொறுப்பை வகிக்கும் போக்கையும் பாகிஸ்தான்தான் உருவாக்கியது.

imran_khan.jpg

1975-ல் இருந்து இன்றைய காலகட்டம் வரையிலும் நிகழ்ந்துள்ள உலகக் கோப்பை போட்டி தொடர்களில் வென்ற அணியின் கேப்டன் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஒரேயொரு பவுலர் இம்ரான் கான் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேன்களை விட பவுலர்களின் கரம்தாம் ஓங்கியிருக்கிறது. அதனால்தானோ என்னவோ நெடுங்காலம் நிலைத்திருக்கும் முழுமையான பேட்ஸ்மேன்கள் அதிகளவில் அவ்வணியில் உருவாகவில்லை.

அவ்வப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் சிலர் சூதாட்ட புகார்களில் சிக்கிக் கொள்வதும், பயிற்சியாளர்களிடத்தில் உண்டாகின்ற மோதல்கள் மற்றும் அணியின் தலைமைக்கு கட்டுப்படாதது போன்ற குற்றச்சாட்டுகளால் பல முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த விளையாட்டாளர்களை இழந்திருக்கிறது.

வெகு சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பலராலும் அவரது ஆட்டத் திறனின் காரணமாக புழகப்பட்டவர் உமர் அக்மல். பாபர் அஸாமை போலவே மிகச் சிறிய வயதிலேயே அணியில் இடம்பெற்றிருந்த உமர் அக்மல் எந்தவொரு அதீத வேகம் கொண்ட பந்து வீச்சாளர்களையும் வெகு அசால்ட்டாக எதிர்கொள்ளும் திறன் கொண்டவராக இருந்தார். மிகக் குறைந்த உயரம் கொண்டவர்தான் என்றாலும், தொடர்ச்சியாக இமாலைய சிக்ஸர்கள் அடிப்பத்தில் அவர் கில்லாடியாக இருந்தார்.

akmal.jpg

எனக்கு தனிப்பட்ட வகையில் மிகவும் விருப்பமான பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் என்றால் உமர் அக்மல்தான். அவர் அணியில் இடம்பெற்றிருந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு அணியிலும் பலமான அதிரடி ஆட்டக்காரர் ஒருவர் இயல்பாகவே உருவாகியிருந்தார். இந்திய அணியில் தோனியின் சம்ராஜ்யம் விரிந்திருந்த காலக்கட்டம் அது. அதே போல ஆஸ்திரேலியாவில் வாட்சன் மற்றும் வார்னர், இங்கிலாந்தில் கெவின் பீட்டர்சன், தென் ஆப்பிரிக்காவில் ஏபி டிவில்லியர்ஸ், நியூசிலாந்தில் ரோஸ் டெய்லர் என உலகம் முழுக்க அதிரடி ஆட்டக்காரர்கள் உதயமாகிக் கொண்டிருந்த காலக்கட்டமது. அந்த சூழலில் பாகிஸ்தான் அணிக்கு அதன் மைய நிலையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய விளையாட்டாளர் ஒருவரின் தேவை அதிகரித்திருந்தது.

umar.jpg

அந்த பொறுப்பை உமர் அக்மல் இயல்பாக கையகப்படுத்திக் கொண்டு, நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். கால்களை மடக்கி ஸ்கொயர் லெக் பகுதியில் அவர் அடிக்கின்ற சிக்ஸர்களை வெகுவாக என்னை கவர்ந்திருந்தது. அவரை விரைவில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிற்கு முன்னுயரக் கூடிய விளையாட்டாளர் என்றே நான் கருதியிருந்தேன். முன்னாள் அதிரடி மன்னனான அப்ரிதியுடன் இவர் இணைந்து ஆடிய பல இன்னிங்ஸ்கள் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஆனால், அவர் அணியில் தொடர்ந்து இடம்பெற முடியாமல் போனது மிகவும் துன்பகரமானதே.

இவரது மற்றைய இரண்டு சகோதரர்களும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியவர்கள்தான். மூத்த சகோதரர் கம்ரான் அக்மல் பல காலம் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர். அபாயகரமான சமயங்களில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலமாக, பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளிந்து வந்ததன் காரணமாக, மொயின் கானுக்கு பிறகு, நீண்ட காலம் பாகிஸ்தான் அணியில் நிலைத்திருந்த விக்கெட் கீப்பர்/ பேட்ஸ்மேனாக கம்ரான் அக்மல் இருந்துக்கொண்டிருந்தார்.

ஆனால், மோசமான பார்ம் காரணமாக தற்போது கம்ரான் அக்மல் அணியில் இருந்து விலகியிருக்க வேண்டிய சூழல். உமர் அக்மலோ அணி வீரர்களிடத்தில் கட்டுக்கோப்புடன் பழகவில்லை எனும் காரணத்தால் ஓரம் கட்டப்பட்டார்.  இவர்களது மற்றொரு சகோதரர் ஆத்னன் அக்மல் சொல்லிக் கொள்ளும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்ததால், ஒரு நிலையான இடத்தை பாகிஸ்தான் அணியில் பிடிக்கவேயில்லை. தற்போது வளர்ந்து வரும் இளைய நம்பிக்கை நட்சத்திரமான பாபர் அஸாம், இந்த மூன்று சகோதரர்களின் குடும்பத்தை சேர்ந்தவரே. பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய இந்த மூன்று சகோதரர்களின் தூரத்து உறவினரே பாபர் அஸாம்.

baber.jpg

அடிப்படையில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டிருந்த குடும்ப உறுப்பினர்களின் காரணமாக, பாபர் அஸாமின் நுழைவு எளிதாகவே இருந்தது. நல்லதொரு ஆட்டத்தை மைய ஓவர்களில் வெளிப்படுத்த வேண்டுமென்கின்ற நோக்கில் பாபருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. எனினும், பாபர் துவக்க காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. துவக்க நிலை தடுமாற்றங்கள் பலவும் இவருக்கும் இருந்திருக்கிறது. கிட்டதட்ட துவக்க காலத்தில் பெரிதான எந்தவொரு சலனத்தையும் பாபர் ஏற்படுத்தியிருக்கவில்லை என்றே சொல்லலாம்.

babar-azam-pakistan_3797730.jpg

ஆனால், 2016-ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று சதங்களை அடித்ததற்கு பிறகுதான், அவரின் முக்கியத்துவம் அணியினருக்கும், சர்வதேச அளவிலும் கவனிக்கப்பட்டது.

அதிலிருந்து, பாபர் ஒன்றின் பின் ஒன்றாக பல சாதனைகளை குவித்து வருகிறார். தனது 6வது, 7-வது மற்றும் 8-வது சதத்தை விரைவாக அடைந்த பாகிஸ்தானிய வீரர், உலகளவில் ஆயிரம் ரன்களை மிக விரைவாக குவித்த இரண்டாவது வீரர், 33 போட்டிகளுக்குள் 7 சதங்களை பூர்த்திச் செய்த ஒரே விளையாட்டாளர் என பல சாதனைகளை பாபர் அஸாம் அதற்குள்ளாகவே படைத்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் விமர்சகர்களை அவரை கோலிக்கு நிகராக வைத்து கொண்டாடுகிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களை அணியை உறுதியுடன் முன்னகர்த்திச் செல்வதற்கு ஏற்ற வீரராக அவரை கருதுகிறார்கள். அதனால்தான் மிகக் குறுகிய காலத்திற்குள் அவரை அணியின் துணைக் கேப்டனாகவும் உயர்த்தியிருக்கிறது.

virat-1.jpg

தன் மீது குவிந்துள்ள பொறுப்புகளையும், எதிர்பார்ப்புகளை முழுமையாக உணர்ந்தே இருக்கும் இந்த 23 வயது இளைஞர் தனது முன் மாதிரியாக கொண்டிருப்பது விராட் கோலியைதான். கோலியைப் போல ஆட்டத்திறனிலும், வளர்ச்சியிலும் பாபர் அஸாம் நல்லதொரு நிலையை அடைவார் என்று பலரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

கடைசியாக அவர் விளையாடி ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்ததன் மூலமாக, அந்த போட்டியில் அவர்தான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். எதிர்வருகின்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி உலக கோப்பையில் பங்கேற்பதற்கான ஒரு தன்னம்பிக்கையையும், அடித்தளத்தையும் பாபருக்கு வழங்கும் என கருதப்படுகிறது. கோடிக்கணக்கான கண்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்பிக்க செய்வாரா பாபார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிக்ஸர் பறக்கும்…...     

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/aug/31/babar-azam-best-pakisthani-player-2990782.html

Link to comment
Share on other sites

17. பாபர் அஸாமுக்கு ஆதர்ச கிரிக்கெட் விளையாட்டாளராக இருந்தவர் யார்?

 

 
babar-azam-pakistan_3797730

 

‘உங்களது கிரிக்கெட் விளையாட்டை எப்போதும் தளர்வடைய அனுமதிக்காதீர்கள். எவ்வளவு நேரம் நீங்கள் களத்தில் நின்றிருக்கிறீர்களோ அதே அளவுக்கு, அணிக்கும் உங்களுக்கும் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உங்களது உடல் தகுதியிலும் எப்போதும் கவனத்துடன் இருங்கள். உங்களை 100% நீங்கள் செய்யும் பணிக்கு ஒப்புக் கொடுப்பீர்கள் என்றால், அந்த பணியும் உங்களை பல நிலைகளுக்கு உயர்த்திச் செல்லும். எப்போதும் விழிப்புடன் கவனத்துடன் இருங்கள்’ – பாபர் அஸாம்

பாபர் அஸாம் மிகச் சிறிய வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட துவங்கி விட்டார். அவரது குடும்பத்தில் பலரும் கிரிக்கெட் விளையாட்டின் தீவிர ரசிகர்கள். எப்போதும் அவர்களது உரையாடலில் கிரிக்கெட் ஏதேனும் ஒரு வடிவில் வந்து விழுந்துவிடும். சிறுவனான பாபர் அவர்கள் பேசுவதை நுணுக்கத்துடன் அருகில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருப்பான். அவரது தந்தை அவனை கிரிக்கெட் விளையாட வெகுவாக ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார். தெரு கிரிக்கெட்டில் இருந்து கிளப்களில் விளையாடும் சூழல் வரை அவரை மெல்ல மெல்ல தந்தை வளர்த்தெடுத்தார். பாபரை போலவே அவரது தந்தையும் கிரிக்கெட் விளைடாட்டின் மீது வைத்திருந்த ஆழமிக்க நேசிப்பு அவரை சிறுவயதிலிருந்து மிகச் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த செய்திருக்கிறது. 

பள்ளியில் பயிலும் போதும் அவரது நினைப்பில் எப்போதும் கிரிக்கெட்டே வலம் வந்துக் கொண்டிருக்கும். வெகு துவக்க நிலை கல்வி மட்டுமே பயின்றிருக்கும் பாபர் பள்ளி காலத்தில் கூட காலையிலும், மாலையிலும் தீவிரமாக கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். அவரது முழு கவனமும் கிரிக்கெட் விளையாட்டிலேயே நிலை கொண்டிருந்தது. படிப்பில் அவருக்கு பெரிதளவில் ஆர்வம் வளர்ந்திருக்கவில்லை. தந்தையை தவிர்த்து, அவரது மாமாவும் அவரை கிரிக்கெட் விளையாட அதிகளவில் உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார். எப்போதும் அவரது மாமாவும், பாபரும்தான் சிறு வயதுகளில் ஒன்றாக சுற்றி அலைந்துக் கொண்டிருப்பார்கள். பிற்காலங்களில் நேர்ந்த அவரது உயிரிழப்பு பாபரை வெகுவாக பாதித்திருக்கிறது.

அதே போல, கிளப்களில் பயிற்சி மேற்கொண்டிருந்த நாட்களில், உறவினர்களான அக்மல் சகோதரர்களுடன் (கம்ரான் அக்மல், உமர் அக்மல், ஆத்னன் அக்மல்) சேர்ந்து பேட்டிங் பயிற்சியை பாபர் மேற்கொண்டிருக்கிறார். பாகிஸ்தானில் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கியிருந்த இந்த சகோதரர்கள் உடனான கிரிக்கெட் சார்ந்த தொடர் விவாதங்களும், உரையாடல்களும் பாபருக்கு பெரிதளவில் உத்வேகமூட்டியிருக்கிறது. அதிலும், கம்ரான் அக்மல் பாபருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்க உதவியிருக்கிறார்.

images_(1).jpg

துவக்க காலத்தில் பாபர் அஸாமுக்கு ஆதர்ச கிரிக்கெட் விளையாட்டாளராக இருந்தவர் ஏபி டிவில்லியர்ஸ். அவரது ஒவ்வொரு ஆட்ட சாதுர்யங்களும் பாபரை மிகப் பெரிய அளவில் கவர்ந்திருந்தன. ஏபி டிவிவ்லியர்ஸ் போலவே தனது ஆட்டத்தை வடிவமைத்துக் கொண்டார். வலை பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, ஏபி டிவில்லியர்ஸின் புதிது புதிதான ஷாட்டுகளை பயிற்சி செய்துப் பார்ப்பது பாபரின் வழக்கம். ஆனால், பொதுவாக அவரது ஆட்டத்திறன் கோலியுடன்தான் வைத்து பேசப்படுகிறது. பயிற்சியாளர் மிக்கி ஆர்ச்சர் பாபரை கோலியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். எனினும், தன்னடக்கத்துடன் பாபர் அதனை மறுத்தே வருகிறார்.

'அவர் என்னை உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரருடன் ஒப்பிட்டு பேசுகிறார். ஆனால், அதற்கு நான் தகுதியானவன் அல்ல. பயிற்சியாளர் அவ்வகையில் கருதுகிறார். ஏனெனில், எங்கள் இருவரின் ஆரம்ப கால ஆட்டங்களும், வளர்ச்சியும் பெரும்பாலும் ஒன்றுப்போலவே ஒத்துப்போயிருக்கின்றன. ஆனால், கோலி உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன். நானும் பாகிஸ்தான் அணியில் ஒரு நிரந்தமான உறுதியான இடத்தை அடைய தீவிரமாக முயற்சித்து வருகிறேன்’ என்கிறார் பாபர்.

பாபர் அஸாம் பாகிஸ்தான் அணியில் இடம்பெறும் முன்பாக, அண்டர் 19 அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார். அண்டர் 19 அணியில் அவரது சராசரி ரன் விகிதம் மலைக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. அவ்வணியில் இடம் கிடைத்ததுதான் அவரது சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுக்கான நல்லதொரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. அந்த அணியில் இடம் பிடித்திருந்தபோதுதான் மெல்ல மெல்ல தனது பேட்டிங் நுணுக்கங்களை பாபர் மேம்படுத்திக் கொண்டார்.

அண்டர் 19 அணியில் பாபர் விளையாடிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அவ்வணி நியூஸிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் நிறைய போட்டிகள் விளையாடியிருக்கிறது. அந்நிய நிலவெளியில் நிறைய போட்டிகளை விளையாடும் வாய்ப்புகள் கிடைத்தது தனக்கு துவக்க காலத்திலேயே கிடைத்த மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்கிறார் பாபர். பல்வேறு வகையிலான ஷாட்டுகளை அடிப்பதில் வல்லவரான பாபர் அஸாம், ஆஃப் சைடில் பந்துகளை அசால்ட்டாக பேட்டால் தட்டி பவுண்டரிக்கு பந்துகளை விரட்டிவிடும் கலையில் மிகுந்த தேர்ச்சிப் பெற்றவர். அவரது ஷாட்டுகளிலேயே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருப்பது ஆஃப் சைட் ஷாட்டுகள்தான்.

பொதுவாக, கிளாஸிக் கிரிக்கெட் விளையாட்டாளர்கள் அனைவரும், விரைவாக ரன்களை குவிக்க வேண்டுமென்கின்ற நோக்கில், பந்துகளை வலுவுடன் பவுண்டரிக்கு விரட்டும் ஷாட்டுகளை தேர்வு செய்யாது, நிதானமாக பந்துகளை தட்டி ரன்களை குவிப்பதில்தான் அதிக கவனத்தை குவித்திருக்கிறார்கள். சச்சின், ரிக்கி பாண்டிங், சங்ககாரா உள்ளிட்டவர்களின் பெரும் பட்டியலோடு, பாகிஸ்தானின் ஜாம்பவான் பிளேயரான சகித் அன்வர் வரை பலரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். பாபரும் அவ்வரிசையில் இடம்பெறும் தகுதியுடையவர்தான் என்றாலும், காலமும், வாய்ப்புகளும், சூழலும்தான் அதனை தெளிவுற முடிவு செய்ய வேண்டும்.

எப்போதும் களத்தில் நின்றிருக்கும்போது பாபருக்கு, இஜாஸ் அகமத்தின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வரும்.

‘களத்தில் உறுதியுடன் நிலைத்திருக்க வேண்டும். மற்றவையெல்லாம் தாமாக நிகழும்’

images_(29).jpg

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடித்தது இது நாள் வரையிலான அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இந்த சாதனையை நினைவுக்கூரும் பாபர் அஸாம், ‘முதல் இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் அடித்ததே எனக்கு பெரிய நம்பிக்கையை உண்டாக்கியது. சமூக வலைதளங்களில், தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடிப்பது சாதனையென குறிப்பிடப்பட்டிருந்ததை நான் அறிந்து வைத்திருந்தேன் என்றாலும், எனக்கு மூன்றாவது போட்டியிலும் சதம் அடிப்பேன் என்கின்ற வலுவான எண்ணம் உருவாகமல் இருந்தது. எனினும், நான் இறைவனின் மீது எனது முழு பாரத்தையும் சுமத்திவிட்டு, முதல் இரண்டு போட்டிகளில் எப்படி விலையாடினேனோ அதே யுத்திகளை அந்த போட்டியிலும் வெளிப்படுத்தினேன். சிறிது சிறிதாக ரன்களை சேர்த்து அந்த சாதனையை அடையும்போது, எனக்கே பெரும் ஆச்சர்யமும், மிகுந்த உத்வேகமும் மனதில் உண்டாகியது. இறைவனின் செயல் இது’ என்கிறார்.

குறைந்த வயதுக்குள் மிகுந்த எதிர்பார்ப்புகளை உண்டாக்கியிருக்கும் பாபர் அஸாம், எப்போதும் கிரிக்கெட் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க கூடியவர். அணி வீரர்கள் உடனான பயிற்சியை கடந்தும், சுயமாக மற்ற நேரங்களில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வதும் அவரது வழக்கம். எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டுமென்பதே அவரது தாரக மந்திரமாக இருக்கிறது. கிரிக்கெட் தவிர்த்து எப்போதாவது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகையில், திரைப்படங்கள் பார்ப்பது இவரது வழக்கம். 2007-ல் வெளியான அமெரிக்க அறிவியல் புனைவு திரைப்படமான 300 தான் இவரது எப்போதைக்குமான விருப்ப திரைப்படமாம். 

images_(2).jpg

ஒரு நீண்ட காலத்தை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் செலவிடப் போகும் கிரிக்கெட் விளையாட்டாளராக பாபர் அஸாமை உலக கிரிக்கெட் ஆர்வலர்கள் கணித்திருக்கிறார்கள். பல மூத்த வீரர்களின் ஓய்வுக்கு பின்னர் புதிதாக உருவெடுத்து வருகின்ற பாகிஸ்தான் அணியை பொறுப்புடன் வழி நடத்த வேண்டிய பொறுப்புகள் வளர்ந்து வரும் இளைய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடமே இருக்கிறது. இன்னமும், அணியில் நிலைத்திருக்கும் மொகமத் ஹாசீப், மற்றும் மாலிக் போன்றவர்கள் எந்த நிலையிலும் ஓய்வை அடைந்து விடலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வலுவாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து போன்ற அணிகளுக்கு நிகராக பாகிஸ்தான் அணி உருவாக வேண்டுமென்றால், பல திறன்மிக்க ஆட்டக்காரர்கள் அவ்வணிக்கு அவசியமாகிறார்கள். அவ்வகையில், பாபரின் இருப்பும், பொறுப்பு வாய்ந்த ஆட்டங்களும் பாகிஸ்தான் அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.  பாகிஸ்தானின் புதிய நம்பிக்கை நட்சத்திரமான பாபர் அஸாம் தன் மீதுள்ள எதிர்ப்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.    

(சிக்ஸர் பறக்கும்…)

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/sep/07/17-பாபர்-அஸாமுக்கு-ஆதர்ச-கிரிக்கெட்-விளையாட்டாளராக-இருந்தவர்-யார்-2995440.html

Link to comment
Share on other sites

18. இருபது ஓவர் கிரிக்கெட் விளையாட்டின் கடவுள்: கிரிஸ் கேயல்

 

 
Chris-Gayle

ஐந்தாம் நாயகன்: கிரிஸ் கேயல்

‘நீங்கள் நினைக்கும்படியெல்லாம் நான் இல்லையென்பதால் என்னை வெறுக்காதீர்கள். நான் எவ்வகையில் வாழ்ந்துகொண்டிருக்கிறேனோ அப்படியெல்லாம் உங்களால் வாழ இயலவில்லை என்பதாலும் என்னை வெறுக்காதீர்கள்’ - கிரிஸ் கேயல்

நவம்பர் 13, 2012 ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தினம். அன்றைய தினத்தில் டெஸ்ட் போட்டியின் இயல்புக்கு முரணான சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டது. 1877-ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முன்பு எப்போதும் நிகழ்ந்திராத சாதனை அது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், வங்காள தேச அணிக்கும் இடையிலான போட்டித் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அன்றைய தினத்தில் நிகழ்வதாக இருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் களத்தில் இறங்கியிருக்க, தனது அறிமுக போட்டியில் களமிறங்கியிருந்த சுழற்பந்து வீச்சாளர் சோகாஹ் காஸி பந்து வீச தயாராய் இருந்தார்.

அரங்கத்தில் ஆரவாரம் ஒருபக்கம் எழுந்தபடி இருந்தது. தனது முதல் பந்தை எதிர் கொள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிரிஸ் கேயல் தயாராய் நின்றிருக்கிறார். அவரது தோள்களின் மீது எப்போதும் படர்ந்து அசைவுகொண்டிருக்கும் சிவப்பு நிற கைக்குட்டை மெல்ல காற்றில் சலசலத்துக் கொண்டிருக்கிறது. மைதானத்தில் ஆறடிக்கும் மேலான உயரம் கொண்ட கிரிஸ் கேயல், கம்பீரமாக சுற்றி நின்றிருக்கும் வங்கதேச விளையாட்டாளர்களை பார்வையிடுகிறார். அவரது பார்வை உறுதி மிக்கதாக இருக்கிறது. நிலத்தில் குனிந்த நிலையில் தனது முதல் பந்தை எதிர்கொள்ள ஆயத்தமாகியிருக்கிறார். இதற்கு முன்பு சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் விளையாடியிராத சோகாஹ் காஸிக்கு தனது முதல் பந்தை உலகின் மிக அபாயகரமான கிரிக்கெட் விளையாட்டாளர்களில் ஒருவரென கருதப்படும் கிரிஸ் கேயலுக்கு வீசும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது.

71986-hklytdzalc-1508925115.jpg

மெல்ல நிதானமாக, பந்தை தனது விரல் இடுக்கில் வைத்து சுழற்றியபடியே மைதானத்தில் அதனை வீசுகிறார். பந்து தன்னை நோக்கி வருகின்ற வரையில் நிதானித்திருந்த கேயல், தனது வழக்கமான ஆட்ட முறைகளில் ஒன்றான வலது காலை முன்னால் எட்டி வைத்து, லெக் சைடில் பந்தை திருப்புகிறார். மைதானத்தில் வீரர்கள் அனைவரும் தங்களது பார்வையை வான் நோக்கி மேயவிடுகிறார்கள். பவுண்டரி கோட்டினை தாண்டிச் சென்று பந்து பார்வையாளர்கள் பகுதிக்குள் புகுந்தோடுகிறது. பன்னெடுங்கால வரலாறு கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் விதிகளில் பிரதானமானதாக நிதான ஆட்டம் அன்றைய தினத்தில் தகர்க்கப்படுகிறது. கிரிஸ் கேயல் எனும் ராட்சசன் தனது சாதனை மகுடத்தில் மற்றுமொரு வைரத்தை மிளரவிட்ட தினம் அது.

‘நான் விசித்திரமானவன். விசித்திரங்கள் நிரம்பியவன். என்னைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருப்பதாக நம்புகிறீர்களா? ஹா ஹா ஹா உங்களுக்கு என்னைப் பற்றி தெரியாது. உங்களால் என்னை ஒருபோதும் அறிந்து கொள்ளவே முடியாது’

கிரிஸ் கேயல் பொதுவாக, டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் கிரிக்கெட் அல்லது இருபது ஓவர் போட்டி என்றெல்லாம் வகைப் பிரித்துப் பார்ப்பதில்லை. அனைத்து விதமான போட்டிகளையும் வெகு அசால்ட்டாக கையாளக் கூடிய சொற்ப எண்ணிக்கையிலான சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் அவரும் ஒருவர். இந்தப் போட்டிக்கு முன்னதாகவே இரண்டு முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னூறு ரன்களை கடந்திருக்கிறார்.

117910.jpg

2005-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 317 ரன்களை குவித்திருந்தார். அக்காலங்களில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனியொரு மனிதரால் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இதுவே இருந்தது. பின்னர் சில காலத்திற்கு பின்னர், ஜெயவர்தனே அந்த சாதனை முறியடித்தார். டிராவில் முடிவடைந்த அப்போட்டியில் வழக்கத்துக்கு மாறாக பல விளையாட்டு வீரர்கள் சதமடித்திருந்தனர். ஏபி டிவில்லியர்ஸ், ஸ்மித், காலிஸ், பிரின்ஸ், சர்வன், சந்தர்பால், பிராவோ என பலருடைய சதங்களை உள்ளடக்கியிருந்த அப்போட்டியில் தனியொருவராக கிரிஸ் கேயல் மட்டுமே ஒரே இன்னிங்ஸில் 317 ரன்களை குவித்திருந்தார்.

அதே போல, இலங்கைக்கு எதிராக 2010-ம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டில் 333 ரன்களை குவித்து அணியின் இலக்கை 580 வரையில் உயர்த்தி விட்டிருந்தார். அது சர்வதேச அளவில் கிரிஸ் கேயல் குவித்த இரண்டாவது முன்னூற்று சொச்ச ரன்களாகும். இந்த ஒரு இன்னிங்ஸில் மட்டும் 34 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் அடக்கம். டெஸ்ட் கிரிக்கெட் வரையறைக்கு பொருந்தாத பெரும் சாதனைகளில் இவை குறிப்பிடத்தகுந்தவை.

டெஸ்ட் வரலாற்றில் 300 ரன்களை இது வரையிலும் இரண்டு முறை கடந்தவர்கள் வெறும் நான்கே விளையாட்டாளர்கள்தான். வெகு துவக்க காலங்களில் (அதாவது 1930-களில்) டொனால்ட் பிராட்மேன், அதன் பிறகு, மேற்கிந்திய தீவுகள் அணியின் மற்றொரு வரலாற்று நாயகனான பிரயன் லாரா, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விரேந்திர சேவாக் மற்றும் அந்தப் பட்டியில் இறுதியாக கிரிஸ் கேயல் தனது 333 ரன்கள் மூலமாக சேர்ந்துக் கொண்டார். அவரது சட்டையின் பொறிக்கப்பட்டுள்ள அடையாள இலக்க எண் அன்றிலிருந்து 333 ஆகதான் இருந்துக் கொண்டிருக்கிறது.

Chris-Gayle-of-the-West-Indies-celebrate

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்று வரையிலும் லாரா விளாசிய 400 ரன்கள்தான் தனியொருவரின் அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது. லாராவின் ஆட்டம் நிதானமும், அவசியமான பொழுதுகளில் மட்டுமே அதிரடியை கையாளுகின்றது என்றால், கிரிஸ் கேயலின் ஆட்டம் டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசும் வகையில் எப்போதும் ஆக்ரோஷம் மிகுந்ததாகவே இருக்கிறது.

முன் தலைமுறையினரின் வாழ்க்கையில் அதுவும் கிரிக்கெட்டை தீவிரமாக பின் தொடரக் கூடியவர்களின் நினைவுகளில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கிய கிரிக்கெட் விளையாட்டாளர் பிரயன் லாரா. இந்தியாவிலும் சச்சினுக்கு நிகராக லாராவை நேசித்தவர்கள் உண்டு. ரோஹித் சர்மா கூட தனது நேர்காணல் ஒன்றில் சிறுவயதுகளில் மிகப்பெரிய அதிர்வை தன்னிடத்தில் தோற்றுவித்தவர் பிரயன் லாரா என்றே குறிப்பிட்டிருக்கிறார். எக்காலத்திலும் நினைவுக் கூறத் தக்க பெரும் ஜாம்பவான் பிரயன் லாரா.

அதிரடி ஆட்டம் என்கின்ற வகை மாதிரிக்கு முன்காலங்களில் முன்மொழியப்பட்ட பெயர்களில் ஒன்று லாராவினுடையது. அன்றைய தினங்களில் இன்றைக்கு இருப்பதைப் போல, பவர் ப்ளே உள்ளிட்ட சலுகைகள் இருக்கவில்லை. எனினும், தங்களது பந்தை விளாசித் தள்ளும் திறன்களின் மூலமாக பெரும் புகழைத் தக்க வைத்திருந்தவர்களில் லாரா மிக முக்கியமானவர். விவ் ரிச்சர்ட்ஸுக்கு பிறகு, வெகுவாக உலகளவில் கொண்டாப்படுகின்ற மேற்கிந்திய தீவுகளின் ஆட்டக்காரராக லாராவே திகழ்ந்திருக்கிறார்.

இன்றைக்கு ஐ.பி.எல்களின் வருகையால், பல மேற்கிந்திய தீவுகளின் விளையாட்டாளர்களுக்கு நம்மூரில் ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். ஆட்டத்திறன் மட்டுமல்லாது களத்தில் அவ்வப்போது செய்கின்ற சேட்டைகள் மற்றும் கரீபியன் தீவுகளுக்கே உரிய கொண்டாட்ட மனோநிலையின் காரணமாகவும், பொலார்ட், சாமி, பிராவோ, ஹோல்டர், சாமூவேல்ஸ், சுனில் நரேன் என பலருக்கும் நம்மூரில் ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். அதிலும் பிராவோ தமிழ் பாடல்களில் தோன்றியதன் மூலமாக கிட்டதட்ட நம்மூர்காரர் போலவே ஆகிவிட்டார். சென்னை சூப்பர் கிங்க்ஸில் நட்சத்திர ஆட்டக்காரராக அவ்வப்போது குட்டி குட்டியான நடனமிடும் பிராவோவை மேற்கிந்திய தீவுகளின் ஆட்டக்காரராகவே நம்மால் பார்க்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது.

ஆனால், இவர்கள் எல்லோரையும்விட மிகுதியான திறன் கொண்ட வரும், நீண்ட காலமாக சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடி வருபவரும் கிரிஸ் கேயல்தான். கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலகாக சர்வதேச கிரிக்கெட்டில் அவர் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். முந்தைய தலைமுறை விளையாட்டாளர்களில் இருந்து இன்றைய இளைய தலைமுறையினருக்கு சவால்விடுக்கும் அளவுக்கு தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

891308_1.jpg

அனைத்து விதமான கிரிக்கெட் வடிவங்களிலும் சதமடித்திருப்பது, இருபது ஓவர் போட்டியில் இது நாள் வரையிலும் அதிக சிக்ஸர்கள் குவித்திருப்பது, உலக கோப்பை வரலாற்றில் முதல் இரட்டை சதத்தை விளாசியது என இவரது சாதனைப் பட்டியல் மிக நீளமானது. நம் காலத்தின் அதிக வீரியமிக்க ஷாட்டுகளை விளாசக் கூடியவர் என கிரிஸ் கேயலை தைரியமாக முன்னிறுத்தலாம். இருபது ஓவர்களின் கடவுள் என்றே சிலர் கிரிஸ் கேயலை வகைப்படுத்துகிறார்கள். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் (4, 6) புதிய பைனரி இலக்கங்களாக கிரிஸ் கேயலுக்கு மாறிவிட்டது என பொதுவாக சொல்லப்படுகிறது.

‘நான் களத்தில் ஒவ்வொருமுறை பந்துகளை எதிர் கொள்ளும்போது பறவைகள் நிலத்தை நோக்கி வருவதில்லை. அவை வான்வெளியில் இருந்தே கீழிருக்கும் நிலத்தைப் பார்வையிடுகின்றன. ஆனால், நான் எனது விக்கெட்டை பறிகொடுத்துவிட்டேன் என்றால், அவை மீண்டும் நிலமிறங்கி தானியங்களை கொத்தத் துவங்கிவிடுகின்றன. உண்மையில், என்னால் மிகப்பெரியதென நீங்கள் கற்பனை செய்திருக்கும் எதைவிடவும் மிகுதியான நிலையை அடைய முடியும். பசிபிக் பெருங்கடலில் காணப்படும் வெண்மை நிற ஆல்பட்ரோஸ் பறவையை விடவும், ஒரு நீர்யானையை விடவும் என்னால் எனது சாதனைகளை கொண்டு மிகப் பெரிய நிலையை அடைய முடியும். என்னால் அவைகள் குறித்து கருதப்படுகின்ற வியப்புணர்வை முழு முற்றாக எனது சாதனைகளை கொண்டு அழித்தெறிந்துவிட முடியும்” என்பது அவரது கூற்றுகளில் ஒன்று. 

இன்றைக்கு கிரிஸ் கேயலின் பெயரில், அவரின் தலைமையின் கீழ் ஒரு கிரிக்கெட் அகாதெமியே இயங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பல சிறுவர்களுக்கு அந்த அகாதெமியில் பயிற்சியளிக்கப்படுகிறது. நவீன தொழிற் கருவிகளுடன் கூடிய அபாரமான பயிற்சிகூடமாக அது செயல்பட்டு வருகிறது. மிகுந்த நெருக்கடியான குடும்ப சூழலில் இருந்து வளர்ந்த கிரிஸ் கேயல், சிறுவயதுகளில் இதுப்போலொரு அகாதெமியில் இணைந்துதான் தனது ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொண்டார். அந்த பயிற்சிக் கூடத்தின் பெயர் லூகாஸ் கிரிக்கெட் அகாதெமி. அவரது வார்த்தைகளிலேயே அந்த பயிற்சிக் கூடத்தைப் பற்றி சொல்லுவதென்றால், ‘லூகாஸ் மட்டும் இல்லையெனில், இன்றைக்கு நான் என்னவாக ஆகியிருப்பேன் என்றே தெரியவில்லை. ஒருவேளை தெருவில் கைவிடப்பட்ட நிலையில் மனத் தெளிவற்று சுற்றிக்கொண்டு இருந்திருக்கலாம்’.

(சிக்ஸர் பறக்கும்…)

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/sep/14/18-இருபது-ஓவர்-கிரிக்கெட்-விளையாட்டின்-கடவுள்-கிரிஸ்-கேயல்-2999559.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

19.மிதமிஞ்சிய கொண்டாட்டங்கள் எனக்குப் பிடிக்கும்! கிரிஸ் கேயலின் ஆசை என்ன?

 

 
486320-chris-gayle-smile-700

 

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான கிரிஸ் கேயலுக்கு இன்று 39-வது பிறந்தநாள். ஜமைக்காவில் உள்ள சான்சேரி ஹாலில் இன்றிரவு வெகு விமர்சையாக அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நிகழவிருக்கின்றன. வழக்கமாக, தனது பிறந்த தினத்தை உற்சாகத்துடன், அதிக பொருட்செலவில் அமர்க்களமாக கொண்டாடுவது அவரது வழக்கம். 2016-ல் தொடர்ச்சியாக ஆறு தினங்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை கேயல் ஏற்பாடு செய்திருந்தர். இன்றைய பார்ட்டிக்கு கறுப்பு வெள்ளை உடைகளைதான் அனைவரும் அணிந்து வர வேண்டுமென அன்பு கட்டளையிட்டிருக்கிறார் கிரிஸ் கேயல்.

கிரிஸ் கேயலின் துவக்க கால வாழ்க்கை மிகுந்த நெருக்கடியும், பெரும் போராட்டங்களும் நிரம்பியது. அவரது தந்தை உள்ளூர் காவல்துறை பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது தாயார் தெருவில் சிற்றுண்டிகள் விற்கும் வேலையை செய்து கொண்டிருந்தார். பள்ளி கல்வி தொகையை கட்டுவதில் கூட அவரது குடும்பத்துக்கு வெகுவான சிரமம் இருந்திருக்கிறது. கைச் செலவுக்காக அவ்வப்போது தெருவில் கிடக்கும் பொருளை எடுத்துச் சென்று கடைகளில் விற்பதும், சில அரிதான தருணங்களில் உணவகங்களில் இருந்து சிற்றுண்டிகளை திருடவும் கூட கிரிஸ் கேயல் செய்திருக்கிறார். இன்றைய வெகு பிரபலமான கிரிக்கெட்டராக இருக்கும் கிரிஸ் கேயல் நினைத்துப் பார்க்கவியலாத சிரமங்களை எல்லாம் தனது சிறு வயதில் அனுபவம் கொண்டிருக்கிறார். ஜமைக்காவில் செய்தியாளர் ஒருவரிடம் இது குறித்து கண் கலங்கிய நிலையில் கிரிஸ் கேயல் தெரிவித்திருக்கிறார்.

images_(3).jpg

உணவும், வசிப்பிடத்தையும் தவிர மற்றவை அனைத்தும் கிரிஸ் கேயலுக்கு பெரும் கனவுகளாகவே இருந்திருக்கின்றன. வழக்கமான கரீபியன் நிலத்தை சேர்ந்த எந்தவொரு சிறுவனையும் போல, பெரும் பணம், சொகுசான வாழ்க்கை சூழல், மிதமிஞ்சிய கொண்டாட்டங்கள் என கிரிஸ் கேயலின் மனமும் அலைபாய்ந்தயபடியே இருந்திருக்கிறது. விரைவாக, தங்களது குடும்பத்தை சூழ்ந்திருக்கும் நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுத்து, தனக்கிருக்கும் வண்ணமயமான கனவுகளை நிஜமாக்கும் தினங்களை பேருவகையோடு எதிர்பார்த்து காத்திருந்தார்.

அக்காலங்களில் இருந்தே மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டு தெருவில் கிரிக்கெட் விளையாட துவங்கிவிட்டார். அவரது குடும்பத்தில் எல்லோருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் மீது பெரும் ஆர்வம் இருந்திருக்கிறது. குறிப்பாக, கேயலின் தாத்தா சில உள்ளூர் போட்டிகளில் எல்லாம் விளையாடியிருக்கிறார். அவருடன் நேரத்தை செலவிடுகையில், கிரிக்கெட் சார்ந்து பேசுவதும், விளையாடுவதும் கேயலின் வழக்கமாக இருந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் கிங்க்ஸ்டனில் அமைந்திருக்கும் பிரபல பயிற்சிக் கூடமான லூகாஸில் இணைந்து தனது கிரிக்கெட் திறனை மேம்படுத்திக் கொண்டார். ஆனால், இன்றைக்கு அடைந்திருக்கும் நிலையையெல்லாம் அப்போது கற்பனையில் கூட கிரிஸ் கேயல் உருவாக்கிப் பார்த்தவரில்லை. 

கிரிஸ் கேயல் சிறுவயதில் ரோலிங்டன் நகரத்தின் இருதய பகுதியென்று அழைக்கப்படும் செயிண்ட் ஜேம்ஸ் தெருவில் வளர்ந்து வந்தார். அவருடன் சேர்த்து கேயலின் பெற்றொருக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள். வெகு சிறிய அளவிலான வசிப்பிடமொன்றில்தான் அவர்கள் அனைவரும் வாழ்ந்து வந்தார்கள். எதையும் வெகு அசால்ட்டாகவும், எத்தகைதொரு நெருக்கடியிலும் தனது உற்சாகத்தை இழந்துவிடாத பண்பும் கேயலுக்கு கிரிக்கெட் வழியிலான புகழ் உருவாகியதற்கு பின்னர் வந்தவை அல்ல. அவர் மிகச் சிறிய வயதிலிருந்து அவ்விதமாகத்தான் வளர்ந்திருக்கிறார். சிறுவயதில் அவரை மற்ற சக நண்பர்கள், ‘கிராம்பி’ என்றே அழைப்பது வழக்கம். கிராம்பி என்றால் மிகுதியான கிறுக்குத்தனங்கள் நிரம்பியவன் என்று பொருள். ஒருவகையில் அவரது இத்தைய இயல்புக்கு அவர் வளர்ந்த சூழல் பெரும் காரணமாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

gayle219.jpg

தான் வளர்ந்த பகுதியைப் பற்றி கிரிஸ் கேயல், ‘அங்கிருக்கும் பெரும்பாலான சிறுவர்கள் அபாயகரமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். நான் ஒரு வெற்றி அடைந்திருக்கும் விளையாட்டு வீரனாக உருவாகியிருக்கிறேன். ஆனால், எனது பின்னணியும், வளர் பருவமும் நிலையானதொரு வாழ்க்கையை கொண்டிருக்கவில்லை. சேரியில்தான் எனது மிகுதியான நேரத்தை செலவிட்டிருக்கிறேன். ஆனால், வயது ஏற ஏறத்தான் வாழ்க்கை புரிகிறது. நாங்கள் எத்தனை ஆபத்து சூழ்ந்த நிலையில் வளர்ந்து வந்திருக்கிறோம் என்பது புரிகிறது. என் போன்ற சிலர் இப்போது அவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறோம். பரந்த அளவிலான வாழ்க்கை இருக்கும் போதும், சிறிய வெளியினுள்ளாக சோர்ந்தும், களைத்தும், நம்பிக்கையற்றும் வாழ வேண்டாமென நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தெருவில் இறங்கி துப்பாக்கி சண்டையிட்டு, ஒரு உயிரை கொலை செய்தவன் என்கின்ற அவப் பெயருடன் சிறையில் அடைப்பட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டாமென்று நாங்கள் அவர்களை தொடர்ந்து எச்சரித்து வருகின்றோம்’ என்று குறிப்பிடுகிறார்.

gayle-21.jpg

பன்னெடுங்கால கிரிக்கெட் விளையாட்டு கிரிஸ் கேயலுக்கு அவர் நினைத்திராத அளவுக்கு, புகழையும் பெரும் செல்வத்தையும் வாரி வழங்கியிருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்காக மட்டுமல்லாமல், ஐ.பி.எல், பிக் பேஷ் போன்ற பல கிரிக்கெட் போட்டிகளிலும் கேயல் உற்சாகத்துடன் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இன்னும் சொல்ல வேண்டுமன்றால், மேற்கிந்திய தீவுகள் அணியில் கிடைக்கப் பெறும் வருமானத்தை விட உலகளாவிய போட்டிகளில் பங்கேற்பதில்தான் அவருக்கு மிகுதியான பணம் கிடைக்கிறது. இத்தனைக்கும் சமீப காலங்களில், மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக, 913 தினங்கள் அவ்வணியில் விளையாடாமல் இருந்தார். ஆனால், இந்த இடைவெளிகள்தான் அவரது புகழை மேலும் கூடுதலாக வளர்த்தெடுத்தது. குறிப்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் அவர் அடித்த சிக்ஸர்கள் பெரும் வியப்பையும், அதிர்வையும் உருவாக்கியிருந்தன.

கிரிஸ் கேயல் பொதுவாக, தன்னை மிக அதிக ஸ்பெஷலாக நினைத்துக் கொள்பவர். உலகத்தின் எந்த அரங்கத்தில் கிரிக்கெட் போட்டி நடப்பதாக இருந்தாலும், அவ்விடத்தில் தனக்கென தனித்ததொரு உடை மாற்றும் அறையை அணி நிர்வாகம் அளித்திருக்க வேண்டுமென்பது அவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான அவரது சுயசரிதையான, ‘Six Machine’-ல் முழுக்க முழுக்க தன் பற்றிய புகழுரைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளித்திருக்கிறார். எங்கும் எதிலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதையே கேயல் அதிகம் விரும்புகிறார். தானொரு ஸ்பெஷல் உயிரி என்கின்ற நினைப்பு அவருக்குள் ஆழமாக ஊடுருவியிருக்கிறது. செய்தியாளர் ஒருவர், அவரிடம் ஒரு சிறிய குறிப்புப் புத்தகத்தை நீட்டி, ‘மேற்கிந்திய தீவுகள் அணியில் மிக சாந்தமான விளையாட்டாளர் யார்?’ என்று கேட்க, கொஞ்சமும் தாமதிக்காமல் உடனடியாக, ‘நான்தான்’ என்று எழுதிவிட்டு அங்கிருந்து நகர்ந்துச் சென்றிருக்கிறார்.

images_(2).jpg

அவரது இத்தகைய இயல்பு, மேற்கிந்திய தீவுகள் அரசையே வெகுவாக கேள்வியெழுப்பும் நிலைவரை உயர்ந்திருக்கிறது. ‘நான் அரசு குறித்து அதிக அதிருப்தியில் இருக்கின்றேன். நான் அவர்களிடம் சிறிதளவு மரியாதையும், நன்னடத்தையையும்தான் கேட்கின்றேன். நான் இரண்டு முச்சதங்களை விலாசியிருக்கிறேன். எனினும், நாடு திரும்பும் போது என்னை வரவேற்க ஒரேயொரு கேமிரா கூட விமான நிலையத்துக்கு வரவில்லை. அது என்னை பெரிதும் வேதனையடையச் செய்கிறது. ஜமைக்காவில் உள்ள பள்ளிகளுக்காகவும், மருத்துவமனைக்காகவும் நான் பல உதவிகளை செய்திருக்கின்றேன். எனினும், என்னை சரியாக அவர்கள் நடத்துவதில்லை’ என்று விசனப்படுகிறார்கள்.

ஒரு சராசரி கரீபியன் சிறுவனாக தெருவில் வெறும் கனவுகளை மட்டும் சுமந்து கொண்டு அலைந்து கொண்டிருந்த கிரிஸ் கேயல் இன்று அந்நாட்டின் அரசை கேள்வி கேட்கும் நிலை வரை கிரிக்கெட் விளையாட்டு உயர்த்திவிட்டிருக்கிறது. ‘கிரிஸ் கேயல் அகாதெமி’ எனும் பெயரில் மிக உயர்ந்த தரத்திலான பயிற்சிக் கூடத்தையும் கேயல் நடத்தி வருகிறார். இந்த அகாதெமி ஜமைக்காவிலும், லண்டனிலும் செயல்பட்டு வருகிறது. பின்தங்கிய நிலையில் உள்ள சிறுவர்களின் கல்விக்காகவும், பல்வேறு விளையாட்டு திறனை மேம்படுத்திக் கொள்ளவும் உதவும் வகையில் கிரிஸ் கேயல் அகாதெமி செயல்பட்டு வருகிறது.

சிறு வயதிலிருந்தே கேளிக்கைகளில் மிகுதியான பொழுதுகளை கழித்திருக்கும் கிரிஸ் கேயல் ஜமைக்காவில் ‘டிரிப்பிள் செஞ்சுரி ஸ்போர்ட்ஸ் பார்’ என்கின்ற பெயரில் மது விடுதி ஒன்றையும் நடத்தி வருகிறார். அதோடு, தனது மாளிகை போன்றிருக்கும் வீட்டிலும் கூட கேளிக்கைகாக தனி அறைகளை கேயல் ஒதுக்கியிருக்கிறார். அவ்வீட்டில் உறங்கும் அறைகள் மட்டுமே 9. அதோடு ஒன்றிற்கும் மேற்பட்ட நீச்சல் குளமும் அவரது பங்களாவில் இருக்கிறது. அவரது இத்தகைய அதீத கேளிக்கைகளின் மீதான நாட்டம் ஒரே சமயத்தில் கடும் விமர்சனத்தையும், பெரும் வியப்பையும் உண்டாக்கியிருக்கிறது.

ஆனால், கேயல் எது குறித்தும் கவலைப்படுகிறவர் இல்லை. தனது வாழ்க்கையை கூடுமானவரையில் உற்சாகம் மிகுந்ததாக உருவாக்கிக் கொள்வதில் அவருக்கும் எப்போதுமே பெரும் ஆர்வம் இருந்து கொண்டுதானிருக்கிறது. சிறுவயதில் பசிக்கு உணவு திருடிய சிறுவன், இன்று அதற்கு முற்றிலும் நேரெதிரான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கனவுகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்த கேயல், தனது கனவுகளுக்கு சிறுக சிறுக உயிரூட்டிக் கொண்டிருக்கிறார். ‘நான் எதுவுமே இல்லாமல் வளர்ந்தேன். இப்போது என்னிடத்தில் மிகுதியான பணம் இருக்கிறது. நான் இப்போது, ‘அந்த கார் வேண்டும், அந்த வீடு வேண்டும்’ என எதன் மீதும் ஆசை கொள்ள முடியும். ஆனால், எனது கனவு இல்லத்தை உருவாக்கிவிட்டேன் என்கின்ற நிறைவு உள்ளுக்குள் உருவாகியிருக்கிறது. இத்தகைய கனவை சுமந்து கொண்டுதான் வாழவாரம்பித்தேன். இப்போது அது எனக்கு கிடைத்துவிட்டது. என்னால் என் நண்பர்களுக்கு உதவ முடிகிறது என்கின்ற தன்னிறைவு எனக்கு உருவாகியிருக்கிறது. எவரொருவரும் இந்த இடத்தை அடைய வேண்டுமென்று விரும்புவது இயல்பானதுதானே’ என்கின்ற கிரிஸ் கேயலிடம், உங்களது தினசரியை நிறைத்திருக்கும் விஷயங்கள் என்னென்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில்,

‘ஷவர் குளியல், நல்ல உணவு, உயர் ரகத்தை சேர்ந்த ரம், மிதமிஞ்சிய பார்ட்டி, மீண்டுமொரு மிதமிஞ்சிய குடி, இறுதியாக நல்லுறக்கம், ஏனெனில் மறுநாள் கொண்டாட்டங்களுக்கு தயாராக வேண்டுமல்லவா!’

(சிக்ஸர் பறக்கம்…)     

http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/sep/21/chris-gayle-lifestyle-3004293.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.