Jump to content

உலக அரசியல் அரங்கு: ஒரு கணக்கெடுப்பு


Recommended Posts

உலக அரசியல் அரங்கு: ஒரு கணக்கெடுப்பு
 
 

அரசியல் அரங்கின் சுவையே அதன் நிச்சயமின்மையே. அச்சுவையின் அபத்தம் யாதெனில், பல சமயங்களில் அச்சுவாரசியம் அவலச் சுவையுடையது. உலக அரசியல் அரங்கு, நிச்சயமின்மைகளாலும் அவலங்களாலும் நிறைகின்ற காலப்பகுதியில், எதிர்காலத்தை வெறித்துப் பார்த்தபடி எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.  

 ஒருபுறம், இதுவரை கட்டமைக்கப்பட்ட சமூக அரசியல் விழுமியங்கள், புதிய வாசிப்புகளையும் விளக்கங்களையும் பெறுகின்றன. 

மறுபுறம், உலகம் எதேச்சாதிகாரத்தின் நவீன வடிவங்களை நோக்கி நகர்கிறது. இவை புதிய கேள்விகளையும் விளக்கங்களையும் வேண்டி நிற்கின்றன.  

உலகமயமாக்கலின் முடிவு  

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, உலக அரங்கின் மந்திரச் சொல் ‘உலகமயமாக்கல்’ ஆகும். ஆனால், கடந்த ஒரு தசாப்தமாக உருவாகி, நிலைத்துள்ள பொருளாதார நெருக்கடி, உலகமயமாக்கல் என்ற எண்ணக்கருவை நிறைவுக்குக் கொண்டு வந்துள்ளது.  

முதலாளித்துவத்தை உந்தும் பிரதான கருவியாக, உலகமயமாக்கல் மேலும் இருக்கவியலாது என நிதி மூலதனம் உணர்ந்த நிலையில், ஏகாதிபத்தியத்தின் செயல்நிரலில், உலகமயமாக்கலுக்கு மாற்றீடு எதுவும் தோன்றவில்லை.   

இது, எதிர்காலத்தில் நிதிமூலதனத்தை வரன் முறையின்றிப் பரப்பும் கருவியை இல்லாமல் செய்துள்ளது. நிதி மூலதனம் வினைத்திறனுடன் செயற்பட இயலாமைக்கு, உலகமயமாக்கலே காரணம் என்பதோடு, அதனோடு சேர்ந்த திறந்த பொருளாதாரக் கட்டமைப்புகள் பற்றிய மாற்றுக் கருத்துகள் வலுப்பெற்று, உலகப் பொருளாதார ஒழுங்கை, மீள் கட்டமைக்கும் திசையில் உரையாடல்களும் கொள்கை மாற்றங்களும் அவை சார்ந்த அரசியலும் நகர்ந்துள்ளன.   

இவை உலகமயமாக்கலின் முடிவைக் கோருகின்றன. இன்னொரு வகையில் சொன்னால், கடந்த அரை நூற்றாண்டாக ஏகாதிபத்தியத்தைக் காவிச் சென்றதோடு அதைத் தக்கவைக்கும் கருவியுமாக இருந்த, அதன் பயன் முடிவுக்கு வந்துள்ளது. 

இதேவேளை, இம்முடிவு நெருங்குகின்ற சமயம், இந்நெருக்கடியைக் கையாளத் திசைதிருப்பல் உத்திகள், வேகமாக அரங்கேறுகின்றன.   

பொருளாதார விளைவுகளுக்கு முகங்கொடுக்க இயலாத முதலாளித்துவம்,  மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முகமாக, நாட்டின் பிற தேசிய இனங்களுக்கோ, மதச் சிறு பான்மையினருக்கோ, அயல் நாடெதற்குமோ எதிரான கடும்போக்கை மேற்கொள்ள முனைகிறது.  

 அதன் விளைவான முரண்பாடுகளை, ஏகாதிபத்தியம் தனக்குச் சாதகமாக்குகிறது. அத்துடன், அதுவரை சினேக முரண்பாடுகளாக இருந்த தேசிய இன, மொழி, மத, பிரதேச, சாதிய முரண்பாடுகளை, பகை முரண்பாடுகளாக்கி, அதில் ஒரு தரப்பையோ இன்னொன்றையோ ஆதரிப்பதுபோல் தோற்றம் காட்டி, தனது இருப்பை ஏகாதிபத்தியம் தக்க வைக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் செயல்களை, இதன்மூலம் விளங்க இயலும்.   

இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், ஒடுக்குவோரின் தேசியவாதமும் ஒடுக்கப்பட்டோரின் தேசியவாதமும் ஏகாதிபத்திய ஆதரவுடன், தத்தம் நோக்கங்களை நிறைவேற்ற முயல்வதால், அமைதியாகத் தீர்க்கக்கூடிய முரண்பாடுகள் பகையாக மாறி, பொருளாதாரம் சார்ந்த முரண்பாடுகளுக்கு, வேறொரு முகத்தை வழங்குகின்றன.   

இன்று விமர்சனத்துக்கு உள்ளாகும் திறந்தசந்தையும் கட்டற்ற வர்த்தகமும் முதலாளித்துவத்தின் அடிப்படைகளாக விமர்சனத்துக்கு உட்படவில்லை. மாறாக, உலகமயமாக்கலின் தோல்வியின் அடிப்படையில் அவை விமர்சிக்கப்படுகின்றன.  

 குறிப்பாக, கடந்த ஆண்டு அந்நிய நிறுவனங்களுக்கு எதிராக, அரசுகளின் நடவடிக்கை நான்கு மடங்கு கூடியுள்ளது. தனது கட்டுப்பாட்டை மீளப் பெறுவதை நோக்கி அரசு நகர்கிறது. உலகின் முதனிலைப் பொருளாதாரங்களே, கட்டற்ற வர்த்தகத்துக்குத் தடைகளை அதிகம் முன்வைக்கின்றன.  

இன்று அரசுகள், தம் காக்கும் கரங்களை அகல விரித்துள்ளதால், பொருளாதாரத் தடைகள், இறக்குமதி வரையறைகள், சுங்க வரிவிதிப்பு, அனுமதி வழங்கல் கட்டுப்பாடுகள், தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள், அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடுகள், வந்தேறுகுடிகளுக்கு வேலைவாய்ப்பில் பாரபட்சம் போன்றன நடக்கின்றன.   

அரசு மீண்டும் ‘ஆயா அரசு’ எனும் நிலைப்பாட்டிலிருந்து, அதிகாரத்தைப் பாவிக்க முடிகிறது. இதை வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் காணலாம்.   

மதவாதத்தின் மாறும் வடிவங்கள்   

மதங்கள் யாவும் ஒன்றையே போதிக்கின்றன என்று சொல்லப்படுகிறது. ஆனால், அது மெய்யாயின், மனிதர் ஏன் மதங்களின் பெயரால் மட்டுமன்றி, மதப் பிரிவுகளின் பெயராலும் தம்மிடை போராடி மடிய வேண்டும்?    
மதச் சிந்தனை வேறுபாடுகளின் பெயரில் நடந்த, சமூக மோதல்களின் யுகம் போய்விட்டது. ஒவ்வொரு மதத்துக்கும் மதப் பிரிவுக்கும் அது தோன்றிய சில காலத்துக்குள்ளேயே, தன் கருத்தை மக்களிடையே பரப்ப, அரச அதிகாரத்தைப் பிடிப்பதோ, மதத் தலைமையின் செல்வாக்குக்குள் அரசைக் கொண்டுவருவதோ முக்கிய தேவையாகின. 

மதம் சார்ந்த மோதல்கள், மனிதர் மறுவுலகம் போகும் மார்க்கம் பற்றிய தத்துவ விவாதங்களின் விளைவுகளல்ல. அவற்றுக்கு வலிய பொருள்முதல்வாதக் காரணங்கள் இருந்தன.   

இந்தியாவின் தெற்கில் பல்லவர் ஆட்சியில் சமணரின் ‘கழுவேற்றம்’ முதல், மதங்களின் பெயரால் நடந்த அதிநீண்ட போரான ‘சிலுவை யுத்தம்’ வரை, அறம் சார்ந்த காரணங்களிலும் வலியதாக அரசியல் காரணங்கள் இருந்துள்ளன.   

பல மதங்களையும் பிறப்பித்த சமூகச் சூழல்கள் இன்று இல்லை. மத நடைமுறைகள், முதலாளித்துவச் சூழுலுடன் பெருமளவும் இணங்கியுள்ளன. முதலாளித்துவ விழுமியங்களுடன், வலிதாக முரண்பட்ட மதங்களை, முதலாளித்துவம் தனக்கு வாய்ப்பாக்குகிறது.   

 முதலாளித்துவத்தின் பயனாக, முதலாளித்துவ ஜனநாயகமும் தேசங்களும் தேச அரசுகளும் தோன்றின. ஆயினும், தனது இருப்பை மிரட்டும் எதையும் ஏற்காத முதலாளித்துவம் தேசியத்தின் பெயரால், தேசங்களை ஒடுக்குகிறது.  

 ஜனநாயகத்தின் மூலம் தனது ஆட்சியைப் பேணவிலாதபோது, சர்வாதிகாரமாகிறது. அதற்குப் பாசிசம் துணையாகிறது. 

பாசிசம் என்பது, முதலாளித்துவ ஜனநாயகம் வலுவற்றுப் போகையில், அதனிடத்தில் வரும் பகிரங்க சர்வாதிகாரப் பிரதியீடாகும்.  

மக்களுக்கு வெறியூட்ட, தேசிய உணர்வைவிட மத உணர்வு வலுவானது என்பதால், சோவியத் ஒன்றியத்தை வலு விழக்கச்செய்ய, இஸ்லாமிய மதவாதத்தைப் பாவித்த ஏகாதிபத்தியம், அதைச் சீனாவிலும் பின்னர் பிற நாடுகளிலும் பாவித்தது. இதன் இன்னொரு கட்டம் இப்போது அரங்கேறுகிறது.   

அதேவேளை, நவீன தென்னாசிய இந்து, பௌத்த மதவாதங்கள், நேரடி ஏகாதிபத்திய ஊக்குவிப்பின்றி 20 ஆண்டுகளுக்கும் மேல் செழித்தன. இந்தியாவில் இப்போது ஆட்சிலுள்ள இந்துத்துவ பாசிசக் கட்சி, மத அடையாளத்தை முதன்மைப்படுத்துகிறது.   

இலங்கையில் சிங்கள பௌத்தத்தின் பெயரில் அரசியலை முன்னெடுத்த பாசிசக் கட்சி, ஆட்சியில் இல்லாவிடினும் ஆட்சிகளில் அதற்குச் செல்வாக்குண்டு. முஸ்லிம்களைக் இலக்கு வைக்கும் சிங்கள-பௌத்த பாசிச வெறியர்களுடன், நேரடி உறவில்லாதபோதும், பாசிச வெறியர்களைக் காக்க அது முன்னிற்கிறது.   

அரசாங்கத்தையும் அதிலும் வலுவான அரச இயந்திரத்தையும் சிங்கள பௌத்த பாசிசச் சிந்தனை ஆழ ஊடுருவி வருகிறது. மியான்மாரின் ‘ஜனநாயக மீட்சி’யையொட்டி, பர்மிய - பௌத்த பாசிசம் வலுவுடன் எழுந்தது. அதன் பயனாக முஸ்லிம்களான றோகிஞ்சாக்கள் படும் இன்னல்களை நாமறிவோம்.   

இன்று மேற்குலகுக்கோ அல்லது மனித உரிமைக் காவலர்களுக்கோ, இந்தியாவில் வலுக்கும் இந்துத்துவ பாசிச வெறியாட்டம் பற்றியோ, இலங்கையிலும் மியான்மாரிலும் பரவும் பௌத்த பாசிச வெறியாட்டம் பற்றியோ கவலையில்லை.  

 ஏனெனில், இந்துத்துவமும் தேசியவாத பௌத்தமும் மேற்குலகின் கட்டுப்பாட்டை ஏற்பதோடு, ஆசிய நாடுகளின் மக்களைப் பகைமூட்டிப் பிரிக்கும் பணியையும் செய்கின்றன. இதனால், மதத்தின் பெயரால் வலுப்பெறும் பாசிச அபாயம் பற்றிய விழிப்பை ஏற்படுத்தல் அவசியமானது.  

பாசிசம் புதிய போக்குகள்  

முதலாம், இரண்டாம் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட, ஐரோப்பிய பாசிசக் குணவியல்புகளின் அடிப்படையில், பாசிச நிறுவனங்களாகக் கருதப் போதாத பாசிசப் போக்குகளையுடைய அரச, அரசியல் நிறுவனங்கள் பலவுள்ளன.   

அதைவிட, அதிகாரத்தைப் பிடிக்க நவீன பாசிசம் பாவிக்கும் வழிமுறைகளும் ‘செவ்வியல் ஐரோப்பிய பாசிசம்’ பாவித்த ஜனரஞ்சக வழிமுறைகளும் வேறு. ஐரோப்பிய நவபாசிசம், முதலாளித்துவ ஜனநாயகக் கட்சிகளுள் தனது நகலிகளை நட்டுள்ளது.   

அதனால், குறிப்பாக ஐரோப்பாவில், குடியேறிகளும் தொழிலாளி வர்க்கமும் இடதுசாரி இயக்கமும் பற்றிய பாசிச நிகழ்ச்சி நிரலின் முக்கிய கூறுகளை, ‘நடு-வலது’ கட்சிகள் மட்டுமன்றி ‘நடு-இடது’ கட்சிகளும் எளிதாக ஏற்கின்றன.  

ஒரு காலத்தில் கொலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முற்போக்குச் சக்தியான தேசியவாதம், இரண்டாம் உலகப் போருக்குச் சிலகாலம் பின், சிலசமயம் மதத்தைத் தேசிய அடையாளமாக உள்வாங்கிப் பேரினவாதமாயும் குறுந் தேசியவாதமாயும் சீரழிந்த மூன்றாமுலக நாடுகளில், பாசிசம் வளமான விளைநிலத்தைக் கண்டது.   

இத்தகைய அடையாள-அடிப்படை அரசியல், பழைய ஏகாதிபத்திய எதிர்ப்பை இழந்ததுடனன்றி, ஏகாதிபத்திய அனுசரணையை விருப்புடன் நாடி பாசிசக் குணவியல்புகளைப் பெறுகிறது. இருப்புக்கு ஒடுக்குமுறை தேவையாகும் போது, அது பாசிசமாகிறது. இத்தகைய பாசிச விருத்திகளை, யாரும் பொருட்படுத்துவதில்லை.   

தென்னமெரிக்காவில், ஜனரஞ்சக முறைகளால் பாசிசம் அதிகாரத்துக்கு வருமளவுக்கு நிலைமைகள் முதிராதபோது, பாசிச ஆட்சிகள், அமெரிக்க ஏகாதிபத்திய உதவியுடன் இராணுவச் சதிப் புரட்சிகள் மூலம் அமைந்தன.   

சட்டப்படி அதிகாரத்தைக் கைப்பற்றிய வலதுசாரித் தேசியவாதிகள், துருக்கியிலும் சிங்கப்பூரிலும் போன்று, அரசாங்கத்தை பாசிச ஆட்சியாக்கினும் மேற்குலக ஏகாதிபத்தியமும் ஊடகங்களும் அதைச் ஜனநாயகமாகவே, கருதும் போக்கு அதிகரித்து வந்துள்ளது.   

போர்க்குணமுள்ள அதிதேசியவாத, அடிப்படைவாதக் கட்சிகளை நவ-பாசஸிஸக் கட்சிகளாகக் கருதும் அதேவேளை, அவற்றின் எதிரிணைகளுக்கு விலக்களிக்கும் ஆபத்தான போக்கும் உள்ளது.   

மியான்மாரின் அரக்கன் தேசியக் கட்சி, சித்தாந்தத் தளத்தில், ம.ப.த.வினும் 969 இயக்கத்தினும் குறைந்த பாசிசக் கட்சியல்ல; இலங்கையின் ஜாதிக ஹெல உருமய, பொது பல சேனவிலும் சிங்ஹல ராவயவிலும் குறைந்த பாசிசக் கட்சியல்ல; இந்தியாவின் பா.ஜ.க, பஜ்ரங் தல்லிலும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலும் குறைந்த பாசிசக் கட்சியல்ல.  

ஜனரஞ்சகப் பாசிசம் ஆபத்தானதாக மாறியுள்ளமையால் அதை கவனமாகவும் உறுதியாகவும் கையாள வேண்டியது அவசியம். அதற்கான வலு அரசுகளிடம் இல்லை என்பது ஒருபுறமிருக்க, அதற்கான வலுவை ஏற்படுத்தும் தேவையை அரசுகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கின்றன.   

அவை, இந்த ஜனரஞ்சகப் பாசிசத்தைத் தமது தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றன. இரண்டாம் உலகப் போருக்கு முந்திய பாசிசம் போலன்றி, நவீன பாசிசம் தனது வேலைத்திட்டத்தை அதிகாரத்திலுள்ள கட்சியாகவும் கூட்டரசாங்கத்தின் பங்காளியாகவும் நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் இயங்கும் வலுவான அழுத்தக் குழுவாகவும் செயற்படுகிறது.  

இப்பின்னணியிலேயே, வலது திசை நோக்கிய அரசியல் விலகலைப் பேணுவதில் ஆட்சியாளர்கள் குறியாயுள்ளார்கள். உலக முதலாளித்துவமும் முதலாளித்துவ  ஜனநாயக அரசியலும் அதிதேசியவாதத்தையும் குடிவரவு எதிர்ப்பையும் முஸ்லிம் விரோத இனவாதத்தையும் பற்றிப் பொறுமை காக்கின்றன.  

 மூன்றாமுலகின் பாசிச எதிர்ப்பாளர்கள், குறிப்பாகச் சமூக நீதிக்கான வெகுசனப் போராட்டங்கள் தொடர்பாக, பாசிசப் போக்குகளுக்கு ஏகாதிபத்தியம் வழங்கும் செயலூக்க ஆதரவையும் செயலின்மை ஆதரவையும் பற்றி விழிப்போடிருக்க வேண்டும்.  

நவகொலனியத்தின் புதிய கட்டம்  

கொலனி யுகத்தில் அதிகம் கவனமீர்க்காத முரண்பாடுகள் பற்றிக் கவனமெடுக்குமாறு நவகொலனியச் சூழல் வேண்டுகிறது. அம் முரண்பாடுகளுள் பல்லின நாடுகளின் தேசிய இன முரண்பாடுகளும் பழங்குடிகளின் தேசிய இன உரிமைகளும், சாதிப் பாகுபாடும் ஒடுக்குமுறையும் அனைத்திலும் மேலாகப் பால்நிலைப் பிரச்சினைகளும் அடங்கும்.   

பல்வேறு சமூக முரண்பாடுகளுக்கும் அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாட்டுக்குமுள்ள உறவை, மனத்தில் இருத்துவதும் வர்க்கப் போராட்டத்தை முக்கிய இணைப்பாகக் கொள்வதும் முக்கியம்.  

மனிதச் சுற்றாடலின் சேதம், நெருக்கடி மட்டத்தை எட்டியுள்ளதுடன் இக்கோளத்தில் மனித இருப்பை மிரட்டுகிறது. இந்நெருக்கடிக்கு முதலாளித்துவத்திடம் விடையில்லை. நெருக்கடியின் பிரதான காரணம், முதலாளித்துவமே எனக் கூறப் பசுமை அரசியல் தவறுகிறது.  

 இது ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் தேசங்கள் மீதும் பிரச்சினையின் சுமையை ஏற்றுகிறது. முதலாளித்துவத்தின் இலாபப் பேரவாவின் விளைவுகளான நுகர்வுப் பழக்கத்தையும் கழிவின் பெருக்கத்தையும் பல்தேசியக் கம்பெனிகள் ஏகாதிபத்திய ஆதரவுடன் மூன்றாமுலகின் மீது திணிக்கின்றன.   
மூன்றாமுலகில் போரையும் உள்நாட்டுப் போரையும் ஏகாதிபத்தியமே பேணுகிறது. மோதல்கள், முன்கண்டிராத சதவீதத்தில் மக்களிடத்தில் இடப் பெயர்வை ஏற்படுத்தியுள்ளன.  

 மூன்றாமுலகிலிருந்து வறுமையாலும் மோதல்களாலும் நிகழும் இடப்பெயர்வு, விருத்திபெற்ற முதலாளித்துவ நாடுகளுக்கு மலிவான, பணிவான உழைப்பாளர்களை வழங்குகின்றது. அத னோடு சேர்ந்து, பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ், நிறவாதமும் நவீன பாசிசமும் மீள எழுந்துள்ளன.   

அண்மைய தசாப்தங்களில், தெரிந்தெடுத்த நாடுகளில் இறைமைக்குக் குழிபறிக்கவும் உள்நாட்டுப் போரை ஊக்குவிக்கவும் ஆட்சியைக் கவிழ்க்கவும் மக்கள் பிரிவினரின் நியாயமான மனக்குறைகளை, ஏகாதிபத்தியம் தனக்கு வந்தவாறு பயன்படுத்தியுள்ளதால், ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பற்றி, ஏகாதிபத்தியத்தின் புதிய கரிசனையைக் கவனமாகச் சோதிக்கவேண்டும்.   

இன்றைய உலக அரசியல் அரங்கின் குறுக்குவெட்டு முகத்தோற்றம் மிகவும் குழப்பமான, நெருக்கடியான சித்திரத்தையே தருகிறது. அதேவேளை, ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் இடையிலான தௌ்ளத் தெளிவான பிரிகோடு, தோற்றம் பெறுவதையும் மறுப்பதற்கில்லை.  

 இது உழைக்கும் மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் போராடுவதைத் தவிர வழிவேறில்லை என்பதை உணர்த்துகிறது.  
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உலக-அரசியல்-அரங்கு-ஒரு-கணக்கெடுப்பு/91-216453

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.