Jump to content

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு; மின்சாரம் துண்டிப்பு


Recommended Posts

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு; மின்சாரம் துண்டிப்பு

 

தூத்துக்குடியில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் காப்பர் தாமிர உருக்காலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலையில் அந்த ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு; மின்சாரம் துண்டிப்புபடத்தின் காப்புரிமைVEDANTA

புதன்கிழமையன்று இந்த உத்தரவை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியிருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ஐந்தரை மணியளவில் மின்வாரியம் மின்சாரத்தைத் துண்டித்தது.

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியுள்ள இந்த ஆணையில், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த பல நிபந்தனைகளை இந்த ஆலை நிறைவேற்றாததால், 2018-2023க்கான இசைவாணை வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலைப் பெறாமல் அந்த ஆலை இயங்கக்கூடாது எனக் கூறப்பட்டிருந்த நிலையில், மே 18-19ஆம் தேதிகளில் அந்த ஆலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய சோதனையில், ஆலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் நடப்பது தெரியவந்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு; மின்சாரம் துண்டிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதையடுத்து, அந்த ஆலைக்கான மின் இணைப்பைத் துண்டிக்கும்படியும் ஆலையை மூடும்படியும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமெனக் கோரி நடந்த போராட்டத்தில் இதுவரை குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணைய வசதியை அரசு நிறுத்தியுள்ளது.

https://www.bbc.com/tamil/india-44235215

Link to comment
Share on other sites

வைகோ வான வைகோவே அந்த விடயத்தில்  புல்லு சாப்பிடும்போது தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் எந்த மூலைக்கு அகர்வாலின் பணபெட்டியில் சில கோடிகள் குறையும் அவ்வளவுதான் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, spyder12uk said:

வைகோ வான வைகோவே அந்த விடயத்தில்  புல்லு சாப்பிடும்போது தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் எந்த மூலைக்கு அகர்வாலின் பணபெட்டியில் சில கோடிகள் குறையும் அவ்வளவுதான் .

Dd98DXfV4AE90S7.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/24/2018 at 8:39 PM, spyder12uk said:

வைகோ வான வைகோவே அந்த விடயத்தில்  புல்லு சாப்பிடும்போது தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் எந்த மூலைக்கு அகர்வாலின் பணபெட்டியில் சில கோடிகள் குறையும் அவ்வளவுதான் .

 

 

 

On 5/25/2018 at 8:56 AM, குமாரசாமி said:

Dd98DXfV4AE90S7.jpg

 

ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்றவர்கள் என்று மேலே இணைக்கப்பட்ட புகைப்படத்தில் வை.கோவின் பெயரும் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் வெளிவரும் ஊடகங்களில் வை.கோவின் பெயர் இல்லை.  'புதிய தலைமுறை' செய்திகளிலும் வை.கோவின் பெயர் இல்லை..   ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஆரம்பகாலத்தில் குரல் கொடுத்துவருபவர் வை.கோ.   ஆனால் பாரதிய ஜனதாவின் ஆதரவாளர்களின் முகநூலில்  வை.கோவின் பெயர் இருக்கிறது.  அத்துடன் ஸ்டாலின், சிதம்பரம் பெயர்களும் இருக்கிறது. இதேபோல திமுக ஆதரவு முகநூல்களில் மோடி, ஏடப்பாடி, பன்னீர் பெயர்கள் இருக்கின்றன.  முகநூல்களில் வரும் செய்திகள் பல உண்மைத்தன்மையற்றவை.

 

Link to comment
Share on other sites

On 5/28/2018 at 1:57 AM, கந்தப்பு said:

 

 

ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்றவர்கள் என்று மேலே இணைக்கப்பட்ட புகைப்படத்தில் வை.கோவின் பெயரும் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் வெளிவரும் ஊடகங்களில் வை.கோவின் பெயர் இல்லை.  'புதிய தலைமுறை' செய்திகளிலும் வை.கோவின் பெயர் இல்லை..   ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஆரம்பகாலத்தில் குரல் கொடுத்துவருபவர் வை.கோ.   ஆனால் பாரதிய ஜனதாவின் ஆதரவாளர்களின் முகநூலில்  வை.கோவின் பெயர் இருக்கிறது.  அத்துடன் ஸ்டாலின், சிதம்பரம் பெயர்களும் இருக்கிறது. இதேபோல திமுக ஆதரவு முகநூல்களில் மோடி, ஏடப்பாடி, பன்னீர் பெயர்கள் இருக்கின்றன.  முகநூல்களில் வரும் செய்திகள் பல உண்மைத்தன்மையற்றவை.

 

நீங்கள் சொல்வது போல் பொய்யாக வைகோவின் செய்தி இருக்கலாம் . ஆனால் ஆரம்ப காலங்களில் இந்த ஆலை தொடர்பாக மூர்க்கமாக போராடியவர் இந்த வைகோ  இப்ப தமிழ்நாடே இந்த ஆலையை எதிர்த்து கொண்டு இருக்கையில் இவரின் பம்மல் சந்தேகத்தை உண்டுபண்ணுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, spyder12uk said:

நீங்கள் சொல்வது போல் பொய்யாக வைகோவின் செய்தி இருக்கலாம் . ஆனால் ஆரம்ப காலங்களில் இந்த ஆலை தொடர்பாக மூர்க்கமாக போராடியவர் இந்த வைகோ  இப்ப தமிழ்நாடே இந்த ஆலையை எதிர்த்து கொண்டு இருக்கையில் இவரின் பம்மல் சந்தேகத்தை உண்டுபண்ணுது. 

 

அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஆனால் ஊடகங்கள் அவரின் குரலுக்கு முக்கியத்துவம் குடுக்கவில்லை.  அண்மையில் வந்த காணொலி

வை.கோவைப் பற்றி பொய்யான செய்திகளைப் பரப்பியவர் எச்.ராஜா

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.