Jump to content

வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: டிரம்ப்


Recommended Posts

வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: டிரம்ப்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இது பேச்சுவார்த்தைக்கான தகுந்த சமயம் அல்ல எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த அந்த பேச்சுவார்த்தை நடைபெறாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

''பெருங்கோபம் மற்றும் திறந்த விரோதத்தின்'' அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வடகொரியா குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் ஜூன் 12 அன்று உச்சிமாநாட்டை நடத்துவது பொருத்தமற்றது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் கிம்முக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கிம்மை 'மற்றொருநாள்' சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-44240756

Link to comment
Share on other sites

எங்களது சக்திவாய்ந்த அணு ஆயுதங்களை நாங்கள் பயன்படுத்தாதிருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்: கிம் உடன் சந்திப்பை ரத்து செய்த டோனால்ட் ட்ரம்ப்

 

 
northkore3157003f

வடகொரியா தனது அணு ஆயுதச் சோதனை இடங்களை தொடர் வெடிப்புகள் மூலம் அழித்த பிறகு சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-ஐ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிங்கப்பூரில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார், இந்நிலையில் அந்தச் சந்திப்பை அதிபர் ட்ரம்ப் ரத்து செய்வதாக கடிதம் ஒன்றில் அறிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், “நீங்கள் அணு ஆயுதத் திறன்கள் பற்றி பேசினீர்கள், ஆனால் எங்களுடைய அணு ஆயுதங்கள் மிகப்பெரியது, சக்தி வாய்ந்தது அதனை நாங்கள் ஒரு போதும் பயன்படுத்தாதிருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

வடகொரிய அதிபருக்கு ட்ரம்ப் எழுதிய கடிதத்தில் “உங்களுடைய சமீபத்திய அறிக்கை ஒன்று பெரிய அளவு பகைமையும் கோபாவேசமும் நிறைந்ததாக இருந்ததால், நீண்ட நாளைய திட்டமான நம் சந்திப்பை இப்போது நடத்துவது சரியாகாது என்று நான் கருதுகிறேன், இதற்காக நான் வருந்துகிறேன்” என்று எழுதியுள்ளார், இது இழந்த வாய்ப்புதான் ஆனால் இன்னொரு சந்தர்ப்பத்தில் கிம்-ஐ தான் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.

இன்று, வடகொரியா ட்ரம்புடனான அடுத்த மாதச் சந்திப்பிலிருந்து விலகுவதாக திரும்பத் திரும்ப கூறிவந்தது. மேலும் தேவைப்பட்டால் அமெரிக்காவுடன் அணுஆயுதப் போருக்கும் தயார் என்று கூறியிருந்தது.

north%20korea%20nuclear%20sitejpg

வடகொரியாவின் அணு ஆயுத சோதனை இடமான புங்யே-ரி சைட். சாட்டிலைட் படம். | ஏ.பி.

 

வடகொரிய துணை அயலுறவு அமைச்சர் சோ சன் ஹூய், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சை “அரசியல் வெத்துவெட்டு” என்றும் தங்களை லிபியாவுடன் ஒப்பிட்டு அணு ஆயுத நாடு என்று மைக் பென்ஸ் கூறியதைச் சுட்டிக்காட்டி கடாஃபி தன் அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிட்ட பிறகும் நேட்டோ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அணு ஆயுத சோதனைத் தளத்தை தகர்த்தது வடகொரியா. ஆனால் ட்ரம்ப் தன் அடுத்த மாதச் சந்திப்பை ரத்து செய்தார்.

அவர் எழுதிய கடிதம் வருமாறு:

நமது சமீபத்திய பேச்சு வார்த்தைகளுக்கு தாங்கள் காட்டிய நேரம், பொறுமை முயற்சி ஆகியவற்றை பாராட்டுகிறோம். ஜூன் 12ம் தேதி நமது சிங்கப்பூர் சந்திப்பை விரும்பியது அதிபர் கிம் தான் என்பதை அறிகிறோம். ஆனால் அது எங்களுக்கு பிரச்சினையில்லை. நானும் உங்களைச் சந்திக்க ஆவலாகவே இருந்தேன்.

ஆனால் வருத்தத்திற்குரிய விதமாக நீங்கள் சமீபத்தில் வெளிப்படையான பகைமையையும் கோபாவேசத்தையும் காட்டி பேசியிருக்கிறீர்கள். ஆகவே இந்தத் தருணத்தில் நம் நீண்ட நாள் திட்டமிட்ட சந்திப்பு நடைபெறுவது சரியாக இருக்காது. எனவே நம் இருவரின் நன்மை கருதி, அடுத்த மாத சந்திப்பை ரத்து செய்வதை இந்தக் கடிதம் பிரதிநிதித்துவம் செய்கிறது. ஆனால் இது உலகிற்கு நஷ்டம்தான்.

நீங்கள் அணு ஆயுத திறன்கள் பற்றி பேசினீர்கள், ஆனால் எங்களுடையது சக்தி வாய்ந்தது, மிகப்பெரியது, அதனை நாங்கள் ஒருபோதும் பயன்படுத்தாதிருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்...

நமது சந்திப்பு அவசியம் என்று கருதி உங்கள் மனநிலை மாறினால் என்னை அழைக்கவோ, எனக்கு எழுதவோ தயங்க வேண்டாம்... இழந்த இந்த வாய்ப்பு உண்மையில் வரலாற்றின் ஒரு துயரமான கணம்.

என்று கடிதம் எழுதியுள்ளார் ட்ரம்ப்.

http://tamil.thehindu.com/world/article23980146.ece?homepage=true

Link to comment
Share on other sites

President Trump has just cancelled his June 12 summit with North Korea’s Kim Jong-un. Sec. of State Mike Pompeo, who has been meeting with Kim, testifies before the Senate now

Link to comment
Share on other sites

பேச்சுவார்த்தை இல்லை - டிரம்ப்; எப்போதும் பேசத் தயார் - வடகொரியா

வட கொரியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசத் தயாராக உள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

ஜூன் 12-ல் நடப்பதாக இருந்த அமெரிக்கா - வடகொரியா உச்சி மாநாட்டை, அதிபர் டிரம்ப் ரத்து செய்ததையடுத்து, அவரின் முடிவு மிகுந்த வருத்தமளிப்பதாக வட கொரிய துணை வெளியுறவு அமைச்சர் கிம் க்யே-க்வான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

இது பேச்சுவார்த்தைக்கு உகந்த சமயம் அல்ல எனவும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த அந்த பேச்சுவார்த்தை நடைபெறாது என தெரிவித்த டிரம்ப்,''பெருங்கோபம் மற்றும் வெளிப்படையான விரோதத்தை'' வடகொரியா வெளிப்படுத்தியிருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சமீபத்தில் அவர் கூறியிருந்தார்.

சிங்கப்பூரில் ஜூன் 12 அன்று உச்சிமாநாட்டை நடத்துவது பொருத்தமற்றது என்றும் அதிபர் கிம்முக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கிம்மை 'மற்றொரு நாள்' சந்திக்க மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

 
 

A letter from the President to Chairman Kim Jong Un: "It is inappropriate, at this time, to have this long-planned meeting."

 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @WhiteHouse

''உங்களுடன் அங்கு உச்சிமாநாட்டில் பங்குபெற நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் சோகம் என்னவெனில் உங்களது சமீபத்திய அறிக்கையில் பெருங்கோபமும், வெளிப்படையான விரோதமும் வெளிப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் நான் நீண்டகாலமாக திட்டமிடப்பட்டிருந்த தற்போதைய சந்திப்பில் பங்கேற்பது பொருத்தமானதாக இருக்காது என உணர்கிறேன்'' என டிரம்ப் கூறினார்.

'' உங்களது அணுசக்தி திறன்கள் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள், ஆனால் எங்களுடையது மிகவும் வலிமையானது மேலும் நான் அவற்றை ஒரு போதும் பயன்படுத்துவதற்கான தேவை வரக்கூடாது என கடவுளிடம் வேண்டுகிறேன்'' என டிரம்ப் குறிப்பிட்டார்.

வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

முன்னதாக, வட கொரியா லிபியாவை போல முடிந்துவிடக்கூடும் என அமெரிக்க துணைப் பிரதமர் மைக் ஃபென்ஸ் விமர்சித்ததையடுத்து வட கொரிய அதிகாரி சோ சன் ஹுய் அவரது கருத்தை முட்டாள்தனமானது என தெரிவித்துள்ளார்.

வட கொரியா பேச்சுவார்த்தையை நடத்த பிச்சையெடுக்காது என்றும் பேரப்பேச்சு நடத்துவதற்கான ராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால் அணுசக்தி மோதல் நடக்கலாம் எனவும் எச்சரித்திருந்தார் சோ சன் ஹுய்.

Presentational grey line

யார் இந்தசோ சன்-ஹுய்?

கடந்த தசாப்தத்தில் அமெரிக்காவுடனான பல்வேறு பரஸ்பர ராஜீய பேச்சுவார்த்தைகளில் சோ சன் ஹுய் ஈடுபட்டுள்ளார். கிம் ஜாங் உன்னின் உயர்மட்ட உதவியாளர்களில் அவரும் ஒருவர். மேலும், அவரது கருத்து கிம் ஜாங் உன்னின் இசைவுடனேயே வெளிவரும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வட கொரியாவுக்கு லிபியா போல முடிவு இருக்கக்கூடும் என பென்ஸ் வட கொரியாவை எச்சரித்த சில நாட்களுக்கு பிறகு சோ சன் ஹுய் கருத்து வெளியாகியுள்ளது.லிபியாவில் 2011-ல் கிளர்ச்சியாளர்களால் அந்நாட்டின் தலைவர் கடாஃபி கொல்லப்பட்டார்.

Presentational grey line

என்ன நடந்தது ?

மே10 - டிரம்ப் சிங்கப்பூரில் ஜூன் 12-ல் கிம்மை சந்திப்பதாக தெரிவித்தார்.

மே 12 - சோதனை தளத்தை தகர்க்கவுள்ளதாக வடகொரியா அறிவித்தது.

மே 16 - அமெரிக்க தேசிய பாதுகாப்புத்துறையின் ஜான் போல்டன் '' லிபிய மாதிரி'' என வடகொரியா குறித்து கருத்து தெரிவித்ததையடுத்து உச்சிமாநாட்டை ரத்து செய்யவுள்ளதாக வட கொரியா அச்சுறுத்தியது.

மே 18 - போல்டனிடம் இருந்து விலகி நின்ற டிரம்ப், ’லிபியா மாதிரி’ அணுசக்தி ஒழிப்புக்கு அமெரிக்கா தள்ளவில்லை எனத் தெரிவித்தார்

மே 22 - ''சில உறுதியான நிபந்தனைகள் வட கொரியா நிறைவேற்றாவிட்டால்'' அமெரிக்கா சந்திப்பில் பங்கேற்காது என டிரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

Presentational grey line

இந்நிலையில், அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை ரத்தானதையடுத்து, ஜ.நா சபை செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதே போல, தன் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன், உயர் பாதுகாப்பு அதிகாரிகளை அவசரப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-44240756

Link to comment
Share on other sites

டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ரத்தானது ஏன்? காரணம் யார்?

டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ரத்தானது ஏன்?படத்தின் காப்புரிமைAFP

காரசாரமான வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து, வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடனான உச்சிமாநாட்டை ரத்து செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் அதிபர் டிரம்ப். இது குறித்து விவரிக்கிறார் ஆய்வாளர் அன்கித் பான்டா.

ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை நடைபெறாது என்று வியாழனன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ''பெருங்கோபம் மற்றும் வெளிப்படையான விரோதத்தை'' வடகொரியா வெளிப்படுத்தியிருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை "அரசியல் போலி" என வட கொரிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சோ சன் ஹுய் கூறியிருந்தார்.

எனினும், இந்த பேச்சுவார்த்தை சீர்குலைவதன் தொடக்கமாக இருந்தது அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன். வட கொரியா என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற அமெரிக்க எதிர்பார்ப்பை விண்ணளவுக்கு உயர்த்தியவர் அவரே.

டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ரத்தானது ஏன்?படத்தின் காப்புரிமைAFP

சிங்கப்பூரில் நடைபெறவிருந்த மாநாட்டில், வட கொரியா அணுசக்தி ஆயுதங்கள் மட்டுமல்லாது ரசாயன ஆயுதங்களையும் மற்றும் பிற ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற ஒப்பந்தத்தை எட்டுவதையே பிரதான நோக்கமாக வைத்திருந்தார் போல்டன்.

ஆனால், வட கொரியாவுடனான ராஜதந்திர நடவடிக்கைகள் வெற்றி பெற வேண்டும் என்று உண்மையிலே போல்டனுக்கு ஆர்வம் இல்லாமல் இருந்திருக்கலாம்.

டிரம்பின் தேசிய பாதுகப்பு ஆலோசகராக நியமிக்கப்படும் முன் பேசிய ஜான் போல்டன், பேச்சுவாத்தைக்கான கிம்மின் அழைப்பை ஏற்ற டிரம்ப், இந்த பேச்சுவார்த்தையால் நேரத்தை வீணடிக்கப் போவதாகவும், நமக்கு தேவையான எந்த முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், வட கொரியாவில் "லிபியா மாதிரியை" பின்பற்ற வேண்டும் என்று ஜான் போல்டன் பரிந்துரை செய்திருந்தார்.

டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ரத்தானது ஏன்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கடந்த 2003ஆம் ஆண்டு லிபியா தலைவர் கடாஃபி, தொடக்க நிலையில் இருந்த அணு ஆயுதத் திட்டத்தை கைவிடுவதாக ஒப்புக் கொண்டார். அதனையடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. ஆனால், 2011ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களால் கடாஃபி கொல்லப்பட்டார்.

இதனால் அஞ்சிய வட கொரியா, தன் சமீபத்திய அறிக்கைகளில் இதனை வெளிப்படுத்தியது.

வட கொரியா லிபியாவை போல முடிந்துவிடக்கூடும் என்று கூறப்பட்டதையடுத்து, வட கொரிய முழுமையான அணு ஆயுத சக்தி கொண்டிருப்பதாகவும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, மற்றும் தெர்மோ நியூக்ளியர் ஆயுதங்களை தன்னிடம் வைத்துள்ளதாகவும் வட கொரியாவின் சோ சன் ஹுய் கூறியிருந்தார்.

அமெரிக்காவின் உத்தரவுப்படி அணு ஆயுதங்களை கைவிட்டால் தன் முடிவை சந்திக்க நேரிடும் என்று கிம் நினைத்திருக்கலாம்.

டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ரத்தானது ஏன்?படத்தின் காப்புரிமைREUTERS

இதுகுறித்து டிரம்ப் கூறிய கருத்துகளை அச்சுறுத்தலாக பார்த்தது வட கொரியா.

இது மட்டுமில்லாமல், வட கொரியா தனது பேச்சுவார்த்தை நிலைகள் பற்றி தீவிரமாக பேசியதை, கணக்கில் எடுத்துக் கொள்ள அமெரிக்கா தவறிவிட்டது.

டிரம்பின் கடிதத்தின்படி, வட கொரிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சோவின் கருத்துகள்தான், இந்த உச்சிமாநாடு ரத்தானதிற்கு காரணம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

அந்த நிலையில், ஜான் போல்டனின் கருத்துகளுக்கு வட கொரியா அதிருப்தி தெரிவித்திருந்தது.

மேலும், வட கொரியா தனது அணு ஆயுத தளங்களை அகற்ற முடிவெடுத்த சில மணி நேரங்களில் டிரம்பின் இந்த ரத்து அறிவிப்பு வெளியானது சாதகமற்ற சர்வதேச சூழலை உருவாக்குகிறது.

 
 
 

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் தென் கொரிய அதிபர் ஆகிய இருவர் சந்திப்புகளுக்கு பிறகும், வட கொரியாவின் பேச்சுவார்த்தை நிலை மாறவில்லை.

அதிபர் டிரம்ப் எழுதிய கடிதம், கிம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை எடுக்கலாம் என்ற திறந்த நிலையில்தான் உள்ளதாக தெரிகிறது. அவர் தன் கடிதத்தில், "என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவோ அல்லது கடிதம் எழுதவோ தயங்க வேண்டாம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், இந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ள கிம் ஆவலுடன் இருக்க மாட்டார். இந்த உச்சிமாநாட்டில் வட கொரியா பெறுவதற்கு அதிகம் இருந்தாலும், டிரம்பை சந்திக்க வேண்டுமா என்ற யோசனை இருக்கும்.

https://www.bbc.com/tamil/global-44249466

Link to comment
Share on other sites

''வடகொரியாவிடமிருந்து ஆக்கப்பூர்வமான பதில் வந்திருப்பது நல்ல செய்தி'' - டிரம்ப்

டிரம்ப்படத்தின் காப்புரிமைWIN MCNAMEE

வட கொரியா மற்றும் அமெிக்காவுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடர்பாக வடகொரியாவிடமிருந்து ஆக்கப்பூர்வமான பதில் வந்திருப்பது நல்ல செய்தி என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப் ஜூன் 12ஆம் தேதி நடைபெறவிருந்த கொரிய - அமெரிக்க தலைவர்கள் உச்சி மாநாட்டை ரத்துச் செய்ததையடுத்து எந்த நேரத்திலும் டிரம்புடன் பேசத் தயாராக இருப்பதாக முன்னதாக வடகொரியா அறிவித்தது.

''வடகொரியாவிடமிருந்து ஆக்கப்பூர்வமான அறிக்கை வந்திருப்பது நல்ல செய்தி. இது எங்கே முன்னெடுத்துச் செல்லும் என விரைவில் நாம் பார்ப்போம். நீடித்த வளம் மற்றும் அமைதியை அடைய இவை உதவும் என நம்பிக்கையுடன் உள்ளேன்.ஆனால் நேரமும் செயல்திறனும்தான் இதற்கு பதில் சொல்லும்'' என டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @realDonaldTrump
 

Very good news to receive the warm and productive statement from North Korea. We will soon see where it will lead, hopefully to long and enduring prosperity and peace. Only time (and talent) will tell!

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @realDonaldTrump

எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசத் தயாராக உள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-44240756

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.