Jump to content

இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் செய்திகள்.


Recommended Posts

ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்தார் அலஸ்டைர் குக்

 

 

தொடர்ச்சியாக 153 டெஸ்டில் பங்கேற்று இங்கிலாந்து தொடக்க வீரர் அலஸ்டைர் குக் ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்துள்ளார். #ENGvPAK

 
ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்தார் அலஸ்டைர் குக்
 
இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இன்று இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இடம் பிடித்ததன் மூலம் அலஸ்டைர் குக், தொடர்ச்சியாக 153 டெஸ்ட் விளையாடிய வீரர் என்ற ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக 2006-ல் அலஸ்டைர் குக் அறிமுகமானார். இந்த டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். அதற்கு அடுத்த டெஸ்டில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விளையாடவில்லை.

201805241847132289_1_allanborder-s._L_styvpf.jpg

தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் அவரின் 155-வது டெஸ்ட். அதற்குப்பிறகு தொடர்ச்சியாக 153 டெஸ்டில் விளையாடியுள்ளார். 155 டெஸ்டில் 12078 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 294 ரன்னாகும்.

இடது கை பேட்ஸ்மேன் ஆன ஆலன் பார்டர் 156 டெஸ்டில் 27 சதத்துடன் 11174 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/24184713/1165414/Alastair-Cook-Matches-Allan-Border-Record-of-Playing.vpf

 

1.png&h=42&w=42

184/9 * (58.1 ov)
 

184/10 * (58.2 ov)
Link to comment
Share on other sites

லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்தை 184 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்

அ+

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இங்கிலாந்தை 184 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான். #ENGvPAK

 
 
 
 
லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்தை 184 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்
 
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அலஸ்டைர் குக் ஸ்டோன்மேன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்டோன்மேன் 4 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அப்பாஸ் பந்தில் க்ளீன் போல்டானார்.

201805242150585290_1_engvpak003-s._L_styvpf.jpg

அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் (4), தாவித் மலன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 43 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் 27 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னும், ஜோஸ் பட்லர் 14 ரன்களும் எடுத்தனர்.

201805242150585290_2_engvpak002-s._L_styvpf.jpg

தொடக்க வீரர் அலஸ்டைர் குக் 70 ரன்கள் அடிக்க 58.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்களும், முகமது அமிர், பஹீம் அஷ்ரப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

201805242150585290_3_engvpak004-s._L_styvpf.jpg
பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/24215058/1165427/Lords-Test-England-184-all-out-against-pakistan.vpf

 

7.png&h=42&w=42

50/1 * (23 ov)
 
Link to comment
Share on other sites

ஸ்மார்ட் வாட்ச் அணிய வேண்டாம்: பாக்.வீர்ர்களுக்கு ஐசிசி எச்சரிக்கை

 

 
hasan%20ali

படம். | கெட்டி இமேஜஸ்

பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் விளையாடும்போது ஸ்மார்ட் வாட்ச்களை அணிய வேண்டாம் என்று ஐசிசி பாக்.வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு பாகிஸ்தான் வீரர்கள் ஸ்மார்ட் வாட்ச்கள் அணிய வேண்டாம் என்று எச்சரித்துள்ளது, காரணம் அது சூதாட்டம் மற்றும் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளது.

 
 

ஸ்மார்ட் வாட்ச்கள் ஸ்மார்ட் போன்கள் போலவே செயல்படுவதால் அதிலிருந்து டெக்ஸ்ட் மெசேஜ் உள்ளிட்டவைகளை அனுப்ப முடியும் எனவே பாகிஸ்தான் வீரர்கள் ஸ்மார்ட் வாட்ச்களை அணிவதை தவிர்ப்பது நல்லது என்று எச்சரித்துள்ளது.

தற்போது இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் ஆடிவருகிறது, லார்ட்ஸ் டெஸ்ட் முதல்நாள் ஆட்டத்தில் பாக். பந்து வீச்சில் 184 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து. மொகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகளையும் ஹசன் அலி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அலிஸ்டர் குக் 70 ரன்களை அதிகபட்சமாக எடுக்க பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களை எடுத்தார். தொடர்ந்து ஆடிவரும் பாகிஸ்தான் 2ம் நாள் ஆட்டத்தில் 69/1 என்று ஆடிவருகிறது.

முதல் நாள் ஆட்டத்தில் பாபர் ஆஸம், ஆசாத் ஷபிக் ஆகியோர் ஸ்மார்ட் வாட்ச்களை அணிந்திருந்தனர். தவறுகள் நடக்கவில்லை என்றாலும் ஸ்மார்ட் வாட்ச்கள் அவர்கள் ஸ்மார்ட் போன்களுடன் இணைக்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை.

இதனை ஹசன் அலி உறுதி செய்தார், “யார் அணிந்திருந்தார்கள் என்று தெரியவில்லை, ஆனால் ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு எங்களிடம் பேசி ஸ்மார்ட் வாட்ச்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவுறுத்தியது.

சல்மான் பட், மொகமது ஆமிர், மொகமது ஆசிப் ஆகியோர் ஸ்பாட் பிக்சிங், மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் சிக்கி சிறை சென்று மீண்ட பிறகே பாகிஸ்தான் வீரர்கள் மீது கடும் கண்காணிப்புகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

http://tamil.thehindu.com/sports/article23989191.ece

Link to comment
Share on other sites

பந்தை கொஞ்சம் முன்னால் பிட்ச் செய்யுங்கள் எட்ஜ் செய்வோம்: இங்கிலாந்து சரிவு குறித்து டேவிட் லாய்ட் விமர்சனம்

 

 
Root

ஜோ ரூட் அவுட் ஆன காட்சி.   -  படம். | கெட்டி இமேஜஸ்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் ஸ்விங் சாதக பிட்சில் இங்கிலாந்து 184 ரன்களுக்குச் சுருண்டது.

பாகிஸ்தானின் மொகமத் அப்பாஸ், ஹசன் அலி ஆகிய ஸ்விங் பவுலர்கள் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அலிஸ்டர் குக் மட்டுமே அதிகபட்சமாக 70 ரன்களை கடினமான பந்து வீச்சுக்கு எதிராக எடுத்தார், இவருக்கு அடுத்த படியாக பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களை எடுத்தார், ஜானி பேர்ஸ்டோ 27 ரன்களுக்கு சிறப்பாக ஆடினார், ஆனால் ஃபாஹிம் அஷ்ரபின் அருமையான பந்தில் பவுல்டு ஆனார்.

 

இந்நிலையில் இங்கிலாந்தின் டேவிட் லாய்ட் தனது பத்தி ஒன்றில் கூறியதாவது:

இன்னொரு இங்கிலாந்து சரிவு. மூவ் ஆகும் பந்துகளுக்கு தங்களை திறம்பட தயார் செய்து கொள்ளவில்லை இங்கிலாந்து வீரர்கள். மூவிங் பந்துக்கு எதிராக இவர்களது உத்தியில் தவறு இருக்கிறது.

ஆக்லாந்தில் 58 ஆல் அவுட் ஆன நினைவுதான் எனக்கு வருகிறது. அதேதான் லார்ட்சிலும் தற்போது நடைபெற்றுள்ளது, பந்தை கொஞ்சம் முன்னால் பிட்ச் செய்து ஆடும்படி செய்தால் நாங்கள் எட்ஜ் செய்து விடப்போகிறோம். ஆட்டமிழந்தவர்களின் பிட்ச் வரைபடத்தைப் பார்த்தால் இது நன்கு விளங்கும்.

ஜோ ரூட் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்திருக்க வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். ஆனால் கேப்டன் தான் எடுக்கும் முடிவில் திறம்பட செயல்படுவதுதான் அவசியம், பேட்டிங் தேர்வா பேட்டிங்கை திறம்படக் கையாள வேண்டும்.

இங்கிலாந்து தளர்வாக ஆடியது, கேப்டன் ஜோ ரூட் அவுட் ஆனதையே பார்த்தால் பந்தை தொட அவர் நீட்டி முழக்கி முயற்சித்தார், ஆனால் எட்ஜ் செய்தார். இப்படி ஆடிவிட்டு “நாங்கள் இப்படித்தான் ஆடுவோம்” என்று கூறுவது பயன் தராது. அலிஸ்டர் குக் வழக்கம் போல் அதிகவனத்துடன் ஆடினார். ஆனால் அவர் யாரிடம் பயிற்சி ஆலோசனை பெற்றார் என்று தெரியவில்லை கட் ஷாட்டை ஆடவில்லை. நான் தவறாகக் கூட இருக்கலாம் ஆனால் கட் ஷாட் இல்லாத குக் இன்னிங்ஸைப் பார்க்க முடியுமா? எல்லாப் பந்துகளுக்கும் முன்னால் வந்து ஆடினார், அதாவது தன்னை பவுலர்கள் ஒர்க் அவுட் செய்வதைப் புரிந்து வைத்திருக்கிறார் குக்.

பாகிஸ்தான் இங்கிலாந்து வீரர்கள் குறித்து ஹோம் வொர்க் செய்துள்ளனர். நல்ல வேகத்தில் வீசினர். மொகமது அப்பாஸ், ஹசன் அலி விக்கெட் டு விக்கெட் வீசினர். வேகம், ஸ்விங். யார் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது? அசார் மஹ்மூதுதான். ஏனெனில் அவர் இங்கிலாந்தில் ஏகப்பட்ட போட்டிகளில் ஆடியுள்ளார். லார்ட்ஸ் பிட்சில் ஒரு முனை சரிவாக இருக்கும் அதில் எப்படி வீச வேண்டும் என்பதையெல்லாம் அசார் மஹ்மூத் பாடம் கற்பித்துள்ளார். மாணவர்கள் கற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு கூறியுள்ளார் டேவிட் லாய்ட்.

http://tamil.thehindu.com/sports/article23991154.ece

Link to comment
Share on other sites

லார்ட்ஸ் டெஸ்ட் - பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் 2ம் நாள் முடிவில் பாகிஸ்தான் 350/8

 

 
 

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாம் நாளில் பாகிஸ்தான் எட்டு விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvPAK

 
 
 
 
லார்ட்ஸ் டெஸ்ட் - பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் 2ம் நாள் முடிவில் பாகிஸ்தான் 350/8
 
லார்ட்ஸ்:
 
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
 
தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் களம் இறங்கினர். ஸ்டோன்மேன், கேப்டன் ஜோ ரூட், தாவித் மலன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த பேர்ஸ்டோவ் 27 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னும், ஜோஸ் பட்லர் 14 ரன்களும் எடுத்தனர்.
 
தொடக்க வீரர் அலஸ்டைர் குக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 70 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து அணி 58.2 ஓவர்களுக்கு ஆல் அவுட்டாகி 184 ரன்னில் சுருண்டது.
 
பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்களும், முகமது அமிர், பஹீம் அஷ்ரப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
 
201805260312084637_1_pakis-2._L_styvpf.jpg
 
அதன் பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அசார் அலியும், இமாம் அல் ஹக் ஆகியோர் களமிறங்கினர்.
 
அணியின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும் போது, இமாம் அல் ஹக் அவுட்டானார். அவரை தொடர்ந்து ஆடிய ஹரிஸ் சொகைல் 39 ரன்னில் வெளியேறினார்.
 
அடுத்து இறங்கிய ஆசாத் சபிக்கும், பாபர் ஆசம் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி எண்ணிக்கை 
உயர்ந்தது.
 
ஆசாத் சபிக் 59 ரன்னில் அவுட்டாகினார். நிதானமாக ஆடிய பாபர் ஆசம் 68 ரன்கள் எடுத்தபோது காயத்தால் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஷதப் கான் அரை சதமடித்து அசத்தினார்.
 
இதனால், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 110 ஓவரில் எட்டு விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்துள்ளது. மொகமது அமிர் 19 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதையடுத்து, இங்கிலாந்தை விட பாகிஸ்தான் 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
 
இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். #ENGvPAK

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/26031208/1165706/lords-test-second-day--pakistan-3508.vpf

Link to comment
Share on other sites

லார்ட்ஸ் டெஸ்ட்- நான்கு நாட்களிலேயே இங்கிலாந்தை ஊதித்தள்ளியது பாகிஸ்தான்

 
அ-அ+

லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது பாகிஸ்தான். #ENGvPAK

 
 
 
 
லார்ட்ஸ் டெஸ்ட்- நான்கு நாட்களிலேயே இங்கிலாந்தை ஊதித்தள்ளியது பாகிஸ்தான்
 
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

அலஸ்டைர் குக் (70) மட்டும் நிலைத்து நின்று விளையாட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. அசார் அலி (50), ஆசாத் ஷபிக் (59), பாபர் அசாம் (68), ஷதாப் கான் (52) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 114.3 ஒவர்கள் விளையாடி 363 ரன்கள் குவித்தது.

முதல் இன்னிங்சில் 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜோ ரூட்டை (68) தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால் இங்கிலாந்து விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்ததது.

201805271813464403_1_engvpakistan1-s._L_styvpf.jpg
அமிர் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்த இங்கிலாந்து வீரர்

6 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் என்று தத்தளித்த நிலையில் 7-வது விக்கெட்டுக்கு ஜோஸ் பட்லர் உடன் பெஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்திருந்தது. ஜோஸ் பட்லர் 66 ரன்னுடனும், பெஸ் 55 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர்.

நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 56 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றிருந்தது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி மேலும் 100 ரன்கள் அடித்தார். பாகிஸ்தானுக்கு 150 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கலாம் என்று நினைப்புடன் இங்கிலாந்து இன்றைய 4-வது நாள் ஆட்டத்தை தொடங்கியது.

பட்லர் 66 ரன்னுடனும், பெஸ் 55 ரன்னுடனும் தொடர்ந்து விளையாடினார்கள். ஆட்டம் தொடங்கிய 8-வது பந்தில் பட்லர் மேலும் ஒரு ரன் எடுத்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார். 80-வது ஓவரை முகமது அப்பாஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பட்லர் எல்பிடபிள்யூ ஆனார்

அடுத்த ஓவரில் மார்க்வுட் 4 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அமிர் பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரில் ஸ்டூவர்ட் பிராட் டக்அவுட்டில் வெளியேற, அதற்கு அடுத்த ஓவரில் முகமது அமிர் பெஸ்-ஐ க்ளீன் போல்டாக்கினார். இதனால் இங்கிலாந்து 82.1 ஓவரில் 242 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

201805271813464403_2_engvpakistan-s._L_styvpf.jpg
சேஸிங் செய்த சந்தோசத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்

இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்து 4.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 7 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 63 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தானுக்கு 64 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

64 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 12.4 ஓவர் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 66 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த முறை பாகிஸ்தான் இங்கிலாந்து செல்லும்போது தொடரை 2-2 என சமன் செய்தது குறிப்பிடத்தக்கது. 2-வது இன்னிங்சில் முகமது அமிர், முகமது அப்பாஸ் தலா நான்கு விக்கெட்டுக்களும், சதாப் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இரண்டு இன்னிங்சிலும் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய முகமது அப்பாஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஜூன் 1-ந்தேதி லீட்ஸில் தொடங்குகிறது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/27181346/1166037/Lords-Test-pakistan-beats-england-by-9-wickets.vpf

Link to comment
Share on other sites

950 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளோம்.. எங்களுக்குத் தெரியாதா?- மைக்கேல் வானுக்கு ஆண்டர்சன் பதிலடி

 

 

IN12ANDERSON

படம். | ராய்ட்டர்ஸ்.

லார்ட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்ததையடுத்து இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆண்டர்சன் அந்த டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகளையே கைப்பற்றினார், பிராட் 1 விக்கெட்டைத்தான் கைப்பற்றினார்.

 
 

இதனையடுத்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், ஒன்று பிராட், இல்லையேல் ஆண்டர்சனை அணியிலிருந்து நீக்கி ஒரு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு முந்தைய இங்கிலாந்து தொடரிலும் கூட இருவருக்கும் வயதாகி விட்டது, வேகம் குறைந்து விட்டது, ஸ்விங் போய்விட்டது என்று இருவர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன, ஆனால் அந்தத் தொடரில் இவர்கள்தான் விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக 9 விக்கெட் தோல்வி இங்கிலாந்து ஓய்வறையை ஆட்டிப்படைத்துள்ளது.

இதனையடுத்து விமர்சனங்கள் இருவர் மீதும் விழுந்தன.

இந்நிலையில் டெலிகிராப் பத்திரிகையில் ஆண்டர்சன் கூறியதாவது:

“பாகிஸ்தான் எந்த லெந்தில் வீசினார்கள் என்பதைப் பார்த்தோம், பிறகு இந்தப் பிட்சில் எந்த லெந்த் சரிப்பட்டு வரும் என்று யோசித்துதான் முடிவெடுத்து வீசினோம். விமர்சனங்களை நான் தடுத்தாட்கொள்வேன்.

சிலர் என்னைவிட தங்களுக்குத்தான் அதிகம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், 15 ஆண்டுகள் கிரிக்கெட் அனுபவத்தில் எனக்கு எந்த பிட்சில் எந்த இடத்தில் பிட்ச் செய்ய வேண்டு என்று நன்றாகவே தெரியும்.

நானும் பிராடும் சேர்ந்து 950 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளோம். ஆனால் நாங்கள் இருவரும் கொஞ்சம் பார்மில் பின்னடைவு கண்டுள்ளோம் என்பது உண்மைதான். இத்தகைய சூழல்களில் மேட்ச் வின்னிங் ஆட்டத்திறன் கொண்ட வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும்.

2வது டெஸ்ட் போட்டிக்கு அணி தன்னம்பிக்கைக் குறைவாகவே செல்கிறது. ஆனால் நாட்டில் உள்ள வீரர்களில் சிறந்த 12 வீர்ர்கள்தான் அணியில் உள்ளனர்.

என்று மைக்கேல் வான் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

http://tamil.thehindu.com/sports/article24046134.ece

Link to comment
Share on other sites

லீட்ஸ் டெஸ்ட்- இங்கிலாந்து வேகத்தில் 174 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான்

 

லீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் பாகிஸ்தானை 174 ரன்னில் சுருட்டியது இங்கிலாந்து. சதாப் கான் 56 ரன்கள் சேர்த்தார். #ENGvPAK

 
லீட்ஸ் டெஸ்ட்- இங்கிலாந்து வேகத்தில் 174 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான்
 
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அசார் அலி, இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரிலேயே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இமாம் உல் ஹக் ரன்ஏதும் எடுக்காமல் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மந்தமாக விளையாடினார்கள். 10-வது ஓவரின் முதல் பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. அசார் அலி 29 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு சோஹைல் உடன் ஆசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். சோஹைல் 28 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆசாத் ஷபிக் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.

201806012050342133_1_ENGvPAK002-12s._L_styvpf.jpg

5-வது விக்கெட்டுக்கு உஸ்மான் சலாகுதின் உடன் கேப்டன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். பாகிஸ்தான் அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 26 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் சேர்த்திருந்தது. 68 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்த பாகிஸ்தான் மதிய உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டத்தைத் தொடங்கியது.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்கப்பிடிக்க முடியாமல் உஸ்மான் 4 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது 14 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 79 ரன்னுக்குள் 7-விக்கெட்டை இழந்தது. அதன்பின் வந்த வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர் (13), ஹசன் அலி (24) ரன்கள் அடிக்க பாகிஸ்தானின் ஸ்கோர் 100 ரன்னைத் தாண்டியது.

201806012050342133_2_ENGvPAK001-s._L_styvpf.jpg

சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 52 பந்தில் 56 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க 48.1 ஓவரிலேயே பாகிஸ்தான் 174 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/01205034/1167225/ENGvPAK-Leeds-Test-pakistan-174-runs-1st-innings.vpf

Link to comment
Share on other sites

லீட்ஸ் டெஸ்ட்- முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 106/2

 

 
 

லீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvPAK

 
 
 
 
லீட்ஸ் டெஸ்ட்- முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 106/2
 
 
லண்டன்:
 
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று தொடங்கியது.
 
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அசார் அலி, இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரிலேயே இமாம் உல் ஹக் ரன் ஏதும் எடுக்காமல் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். 10-வது ஓவரின் முதல் பந்தில் அசார் அலி 29 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 
3-வது விக்கெட்டுக்கு சோஹைல் உடன் ஆசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். சோஹைல் 28 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆசாத் ஷபிக் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு உஸ்மான் சலாகுதின் உடன் கேப்டன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்கப்பிடிக்க முடியாமல் உஸ்மான் 4 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது 14 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 
 
201806020014185316_1_DenI35TXkAEhZ5i._L_styvpf.jpg
 
இதனால் பாகிஸ்தான் அணி 79 ரன்னுக்குள் 7-விக்கெட்டை இழந்தது. அதன்பின் வந்த வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர் (13), ஹசன் அலி (24) ரன்கள் அடிக்க பாகிஸ்தானின் ஸ்கோர் 100 ரன்னைத் தாண்டியது. சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 52 பந்தில் 56 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க 48.1 ஓவரிலேயே பாகிஸ்தான் 174 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
 
அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். கீடன் ஜென்னிங்ஸ் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பஹீம் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் குட் உடன், கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 51 ரன்கள் சேர்த்தது.
 
201806020014185316_2_DeoEjbXX0AU4uD8._L_styvpf.jpg
 
நிதானமாக விளையாடி வந்த குக் 46 ரன்கள் எடுத்து ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து டோமினிக் பெஸ் களமிறங்கினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 29 ரன்களுடனும், பெஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியைவிட 68 ரன்கள் பின்தங்கியுள்ளது. #ENGvPAK
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/02001418/1167242/England-scored-106-for-2-against-Pakistan-at-end-of.vpf

Link to comment
Share on other sites

லீட்ஸ் டெஸ்ட்- இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 302/7

 
அ-அ+

லீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvPAK

 
 
 
 
லீட்ஸ் டெஸ்ட்- இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 302/7
 
 
லண்டன்:
 
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
 
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 48.1 ஓவரிலேயே 174 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
 
201806030035459498_1_DesKGMnXcAA009Y._L_styvpf.jpg
 
அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். கீடன் ஜென்னிங்ஸ் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பஹீம் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் குட் உடன், கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 51 ரன்கள் சேர்த்தது.
 
நிதானமாக விளையாடி வந்த குக் 46 ரன்கள் எடுத்து ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து டோமினிக் பெஸ் களமிறங்கினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. ரூட் 29 ரன்களுடனும், பெஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 
 
201806030035459498_2_DetPJfJWsAAFaJF._L_styvpf.jpg
 
முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியைவிட 68 ரன்கள் பின்தங்கி நிலையில் இங்கிலாந்து அணி நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்தது. ரூட் மேற்கொண்டு 16 ரன்கள் எடுத்து 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் டேவிட் மலன் களமிறங்கினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி எடுத்த ஸ்கோரை கடந்தது. மலன் 28 ரன்கள் எடுத்து அமிர் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் டோமினிக் பெஸ் ஆட்டமிழந்தார். அவர் 49 ரன்கள் எடுத்தார். 
 
அதைத்தொடர்ந்து, ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். பேர்ஸ்டோவ் 21 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ் களமிறங்கினார். வோக்ஸ் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். 
 
201806030035459498_3_DesopabW4AA0dVI._L_styvpf.jpg
 
அதன்பின் பல்டருடன், சாம் குர்ரன் ஜோடி சேர்ந்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 34 ரன்களுடனும், சாம் குர்ரன் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இது பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 128 ரன்கள் அதிகமாகும். பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் மொகமது அமிர், பஹீம் அஷ்ரப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். #ENGvPAK

https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/03003546/1167496/England-scored-302-for-7-against-Pakistan-at-end-of.vpf

Link to comment
Share on other sites

லீட்ஸ் டெஸ்ட் - இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 363 ரன்னுக்கு ஆல் அவுட்

 
அ-அ+

பாகிஸ்தானுக்கு எதிராக லீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களை எடுத்துள்ளது. #ENGvPAK

 
 
 
 
லீட்ஸ் டெஸ்ட் - இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 363 ரன்னுக்கு ஆல் அவுட்
 
லண்டன்:
 
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
 
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 174 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். கீடன் ஜென்னிங்ஸ் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய குக் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரூட் 45 ரன்னிலும், டேவிட் மலன் 28 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து டோமினிக் பெஸ் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் 21 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
 
201806031820459993_1_eng-3._L_styvpf.jpg
 
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 34 ரன்களுடனும், சாம் குர்ரன் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஜோஸ் பட்லர் அரை சதமடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாம் குர்ரன் 20 ரன்னிலும், ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்னிலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 ரன்னில் அவுட்டாகினர். ஜோஸ் பட்லர் 80 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
 
பாகிஸ்தான் அணி சார்பில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமிர், மொகமது அப்பாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. #ENGvPAK

https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/03182046/1167601/england-all-out-for-363-in-first-innings-for-second.vpf

Link to comment
Share on other sites

லீட்ஸ் டெஸ்ட் - பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து

 
அ-அ+

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. #ENGvPAK

 
 
லீட்ஸ் டெஸ்ட் - பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து
 
லண்டன்:
 
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது.
 
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 174 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, இங்கிலாந்து அணி களமிறங்கியது. குக் 46 ரன்கள், ரூட் 45 ரன்கள், டோமினிக் பெஸ் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோஸ் பட்லர் 80 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
 
பாகிஸ்தான் அணி சார்பில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமிர், மொகமது அப்பாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
201806032141022437_1_butler-2._L_styvpf.jpg
 
இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியினரின் சிறப்பான பந்து  வீச்சினால் அந்த அணி விரைவில் தனது விக்கெட்டுகளை இழந்தது.
 
பாகிஸ்தான் அணியில் இமாம் அல் ஹக் 34 ரன்களும், உஸ்மான் சலாவுதின் 33 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றைப்படை இலக்கத்தில் அவுட்டாகினர்.
 
இறுதியில், பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 46 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட், டொமினிக் பெஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
 
இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஜோஸ் பட்லருக்கும், தொடர் நாயகன் விருது மொகமது அப்பாசுக்கும் வழங்கப்பட்டது. இந்த டெஸ்டில் வென்றது மூலம் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. #ENGvPAK

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/03214102/1167630/england-beat-pakistan-an-innings-and-55-runs-in-second.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.