Jump to content

வாழ்வாதாரத்துக்காகப் போராடிக் கொலையுண்ட தமிழர்களின் சாவைக் கொண்டாடும் வெறிகொண்ட ஆரியர்கள்!


Recommended Posts

வாழ்வாதாரத்துக்காகப் போராடிக் கொலையுண்ட தமிழர்களின் சாவைக் கொண்டாடும் வெறிகொண்ட ஆரியர்கள்!

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி

கஞ்சி குடிப்பதற்கிலார்! அதன் காரணம் இவை எனும் அறிவுமிலார்! - மகாகவி பாரதியார்.

பாரதியின் குமுறல் இன்றும் விடுதலை இந்தியாவில் தணிந்தபாடில்லை! தமிழன் தன் வரலாறைப் பாதுகாக்கவும் இல்லை! புரிந்துகொள்ளவும் இல்லை!! வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவும் இல்லை!!!

"History Repeats Itself!"  

என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. "நிகழ்ந்த வரலாறே மீண்டும் மீண்டும் நிகழும்" என்பதன் பொருள் மனிதன் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான்.

"ஒருத்தனாவது சாகணும்" என்று வெறிகொண்டு அலைந்த காவலன் ஒருவனின் காணொளித் துண்டை தொலைக்காட்சியில் கண்டபோது

"என் துப்பாக்கியில் ரவைகள் தீர்ந்துவிட்டன! இல்லையேல் இன்னும் பலரைச் சுட்டுக் கொன்றிருப்பேன்!" என்று கொக்கரித்த மேலைஆரிய வெள்ளையன் ஜெனெரல் ஓ டயர் இன்று உயிருடன் மீண்டு வந்திருக்கிறான் தூத்துக்குடிக்கு என்பது புரிந்து போனது. ஒரே வேறுபாடு, இன்று அவன் நேரடியாக வந்து சுடவில்லை; கீழை ஆரியனாக தன்னை மீட்டுருவாக்கம் செய்துகொண்டுவிட்டானோ என்று நம்மை எண்ண வைக்கின்றது வடஇந்தியத் தொலைக்காட்சிகளில் "செத்தவர்கள் மாவோயிஸ்டுகள்!" என்று கொக்கரிக்கும் தமிழகத்தில் வசிக்கும் ஆரியர்களின் கூச்சல்..

ஏனைய மாநிலங்கள் அனைத்தும் துரத்திவிட்ட ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் தூத்துக்குடியில் நிறுவினர். அன்றாடம் அவ்வாலை வெளியேற்றும் நச்சுக்கழிவுகளால் குடிக்கும் நிலத்தடி நீர், சுவாசிக்கும் காற்று அனைத்தும் நஞ்சாகிப் போனதால் ஏற்பட்ட பல்வேறு நோய்களால் கொத்துக்கொத்தாக சகமனிதர்கள் சாவதைப் பொறுக்க இயலாமல், இனி அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை என்று அப்பகுதி மக்களே ஒன்றுதிரண்டு முன்னெடுத்த நெடுநாள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தன் மக்களையே கொன்று, அச்சத்தை உருவாக்கும் கொலைபாதகத்தை, நிறைவேற்றியுள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

சுவாசிக்கக் காற்றுக்கும், குடிக்க நீருக்கும் நீதி கேட்டுப் போராடிய அப்பாவித் தமிழர்களை 'மாவோயிஸ்டுகள்' என்று முத்திரை குத்தி, காவல்துறையை ஏவிவிட்டுத் துப்பாக்கிக் குண்டுகளால் கொன்று தீர்த்ததைக் கொண்டாடிக் கொக்கரிக்கின்றன மக்கள் விரோத ஆரிய சக்திகள்!

"எங்களுக்கு வேலையும் வேண்டாம்! வளர்ச்சியும் வேண்டாம்! நாங்கள் சுவாசிக்கும் காற்றையும், குடிக்கும் நீரையும் நஞ்சாக்காமல் இருந்தாலே போதும்!" என்று கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் கொத்துக் கொத்தாகச் சாகும் தூத்துக்குடி மக்களின் கதறலைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிதத்தோடு நிற்காமல், இப்போதுள்ளவற்றைக் காட்டிலும் இருமடங்கு பெரிதான புதிய ஸ்டெர்லைட் விரிவாக்க ஆலைக்கும் அனுமதி அளித்தனர் மத்திய, மாநில அரசினர். 25 ஆண்டுகளாக ஆண்ட மத்திய, மாநில ஆட்சியாளர்களின்  துரோகச்செயலைப் பொறுக்க இயலாமல் நேரடியாகப் போராட்டத்தில் இறங்கிவிட்டனர் தூத்துக்குடி மக்கள்.    

ஸ்டெர்லைட்டிடம் விலைபோன அரசியல் கட்சிகளை நம்பமாட்டோம் என்கின்ற கருத்தை முன்வைக்கின்றனர் போராடும்  தூத்துக்குடி மக்கள்.  அசராமல் தாங்களே அமைதியான வழியில் தொடர்போராட்டங்களைத் தொடர்ந்தனர்; இப்போராட்டங்களை நிறுத்தவே ஜல்லிக்கட்டு பார்முலாவைக் கையிலெடுத்தனர் ஆட்சியாளர்கள் என்று வலுவாகக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.  

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் போலீசே வாகனங்களுக்குத் தீவைத்ததைப் படம்பிடித்துச் சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கியதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட ஆட்சியாளர்கள், இம்முறை போராட்டங்களை ஒடுக்க மாற்றுவழியைக் கையாண்டனர் என்ற குற்றச்சாட்டை ஊடகங்கள் முன்வைக்கின்றனர் போராடிய தூத்துக்குடி மக்கள். (இத்தனை முன்னேற்பாடுகளையும் தாண்டி, பொதுமக்களில் எவராவது சமூக வலைத்தளங்களில் கையும் களவுமாகப் பிடிபட்டவற்றைப் பதிவேற்றிவிட்டால் என்னசெய்வது என்று யோசித்தார்களோ என்னவோ, மாநில உள்துறை, தென்மாவட்டங்களில் இணையதளத்தையே ஐந்து நாட்கள் முடக்கிவைக்கும் முடிவை  அவசரநிலைப் பிரகடனம் செய்து கொண்டுவந்தது ஒரு தனிக்கதை.) சீருடை அணியாத போலீசைக் கொண்டும், சமூக விரோதிகளை ஏவியும் வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டதாகப் போராடிய மக்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அமைதியாகப் போராடிய மக்களை நோக்கிக் கண்மூடித்தனமாகச் சுடுவதற்குக் காரணம் இப்போது கிடைத்துவிட்டது. பலரைச் சுட்டுக் கொன்றபிறகு, ஆட்சியாளர்களும் ஆரியக் கைக்கூலிகளும் செத்தவர்களை மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்துவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் கொடுஞ்செயல்.
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி! கிளியே!

என்று பாடிய பாரதி, தூத்துக்குடிப் படுகொலைகளைக் கண்டிருந்தால்,

சொந்தச் சகோதரர்களைத் துடிதுடிக்கக் கொல்லல் கண்டும் சிந்தை இரங்காரடி! கிளியே!
மாவோயிஸ்ட் என்றாறடி! செத்தவர் மாவோயிஸ்ட் என்றாறடி! கிளியே!
அவர் கொல்லப்படல் இறையாண்மை தர்மமென்றாரடி!

என்று பாடியிருப்பார்.

"விஷமற்ற சுவாசக்காற்றும், விஷமற்ற குடிநீரும்" கேட்டுப் போராடிய குற்றத்துக்காகக் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் சாவை, தமிழ்நாட்டில் வாழும் ஆரியர்களும், ஆரியக்கைக்கூலிகளும் "போராட்டத்தில் ஊடுருவிய மாவோயிஸ்டுகள்தான் கொல்லப்பட்டார்கள்! அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே! அவர்கள் செத்து ஒழியட்டும்!" என்று வடஇந்திய ஆரியக்கைக்கூலிகள் நடத்தும் தொலைக்காட்சிச் சேனல்களில் கொக்கரித்துக் கொண்டாடினார்கள். இவர்களின் கொக்கரிப்பை அப்படியே பரப்புரை செய்கின்றனர் ஆரியக்கொள்கையேற்ற அடிவருடித் தமிழினக் கோடரிக் காம்புகள். தம் உடன்பிறப்புக்களை ரத்தம் சொட்டச்சொட்டத் துடிதுடிக்கக் கொன்ற  படுகொலைச் சாவைக் கொண்டாடும் கொடூரர்களாக ஆரிய வெறிநாய்க்கடிபட்ட தமிழர்கள் வெறிகொண்டு கொக்கரிப்பதைக் கண்டு மனம் பதைக்கிறது. நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!

மேலை ஆரியன் ஆங்கிலேயன் ஆண்ட காலத்தில் "கஞ்சி குடிப்பதற்கு இலார்!" என்றிருந்த ஏழை மக்களின் நிலை, இந்தியாவை எழுபது ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட கீழை ஆரிய அரசுகள்,  அவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட பல்வேறு தமிழக அரசுகளின் ஆட்சியால்  "விஷமற்ற சுவாசக்காற்றும், விஷமற்ற குடிநீரும் இலார்" என்ற அளவுக்கு மோசமடைந்துள்ளது.

இந்தியா என்னும் அமைப்பு

இந்தியா என்பது பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், தொன்மங்கள் கொண்ட மக்கள் வாழும் பன்மைத்துவம் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு. ஒன்றன்பின் ஒன்றாக ஐம்பத்தியாறுக்கும் மேலான எண்ணிக்கை கொண்ட நாடுகளைப் பிடித்து ஆண்ட மேலை ஆரிய ஆங்கிலேயர்கள், இந்தியத் துணைக் கண்டத்தைவிட்டு வெளியேறிய பின்னர், உருவான கூட்டமைப்பு நாடுதான் இந்தியா என்பதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் "India shall be a Union of States " என்று பிரகடனம் செய்கிறது.

ஆரியர்களின் நலனுக்காகவே உருவான RSS-ம் அதன் அரசியல் கட்சியான பிஜேபி-யும்  பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், தொன்மங்கள் கொண்ட மக்கள் வாழும் பன்மைத்துவம் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பான இந்தியாவை "ஒரே (ஆரிய)நாடு! ஒரே (ஆரிய)மொழி! ஒரே மதம்(ஆரியம்-இந்து) ஒரே மக்கள்(ஆரியர்கள்)!" என்று மாற்றும் ஒற்றைக் கலாச்சார முழக்கத்தை முன்வைக்கின்றது. இங்கு, 'ஒரே' என்பது 'வடஆரியர்களை'க் குறிக்கும் சொல்.

"பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், தொன்மங்கள்" என்ற பன்மைத்துவத்தை ஏற்றுக்கொண்டால் ஒற்றுமையாக வாழ்வது சாத்தியம். "வேற்றுமையில் ஒற்றுமை" என்பது பன்மைத்துவத்தின் இருப்பில்தான் அடங்கியுள்ளது. 'ஒரே' என்னும் 'uniformity'யைத் தூக்கிப்பிடிப்பது இந்திய யூனியன் அமைப்பைத் துண்டாடும் முயற்சி என்பதை வட ஆரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Unity is noble. Uniformity is fascist. Kudos to your posting, Sir.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.