Jump to content

தமி­ழர்­கள் மீது அக்­கறை கொள்­ளா­விட்­டால் 6 லட்­சம் பேரும் வெளி­நாடு ஓடி­வி­டு­வார்­கள் -அமைச்­சர் சுவா­மி­நா­தன்!!


Recommended Posts

தமி­ழர்­கள் மீது அக்­கறை கொள்­ளா­விட்­டால் 6 லட்­சம் பேரும் வெளி­நாடு ஓடி­வி­டு­வார்­கள் -அமைச்­சர் சுவா­மி­நா­தன்!!

 

 

Capture-276.jpg

 
 
 
 

தமிழ் மக்­கள் மீது கொழும்பு அரசு அதிக அக்­கறை கொண்டு செயற்­ப­ட­வில்லை என்­றால் 6  லட்­சத்து 20 ஆயி­ரம் தமிழ் மக்­க­ளும் வெளி­நாடு சென்­று­வி­டும் நிலை ஏற்­ப­டும் என்று  தெரி­வித்­தார் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம். சுவா­மி­நா­தன்.

நல்­லூர் கிட்­டுப் பூங்­கா­வில் நேற்று நடை­பெற்ற உற்­பத்­திப் பொருள்­க­ளின் கண்­காட்­சி­யும்  விற்­ப­னை­யும் நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே  அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;  வடக்கு கிழக்­கில் அமைச்­சின் ஊடா­கப் பல்­வேறு வேலைத் திட்­டங்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதி­லும் குறிப்­பாக கல் வீடு­கள் அமைக்­கும் பணி­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.  அது இரண்டு வரு­டத்­தில் நிறை­வ­டை­யும் என்று எதிர் பார்க்­கின்­றோம்.

 

40 ஆயி­ரம் வீடு­களை அமைப்­ப­தற்­கும் அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. இதற்­குத்  தூண்­டு­த­லாக இருந்­த­வர் சம்­பந்­தன் ஐயா என்­பதை நான் குறிப்­பி­ட­வேண்­டும். அவர்­தான்  அதற்­கான தயார்ப் படுத்­தலை என்­னி­டம் தந்து வீடு­கள் வேண்­டும் என்று தெரி­வித்­தார். அதற்கு
அமை­வா­கத் தற்­போது வீடு­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

பனம் சாரா­யத்­துக்கு நல்ல வர­வேற்பு நாடெங்­கி­லும் உள்­ளது. அத­னால் திக்­கம் வடி­சாலை  சீர­மைக்­கப்­ப­ட­வுள்­ளது. அத்­து­டன் வெகு விரை­வில் பனம் குளிர் பானம் ஒன்­றும்  யாழ்ப்­பா­ணத்­தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இது­வ­ரை­யில் 500 மில்­லி­யன் ரூபா பெறு­ம­தி­யான இழப்­பீட்டு உத­வி­களை வழங்­கி­யுள்­ளோம்.  இன்­ன­மும் அபி­வி­ருத்தி வேலை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. ஆனால் இந்த முறை நிதி  ஒதுக்­கீடு எமது அமைச்­சுக்­குக் குறை­வா­கவே வழங்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ் மக்­க­ளின் நலன் முன்­னேற்­றம் தொடர்­பில் தலைமை அமைச்­சர் அதிக அக்­கறை  கொண்­டுள்­ளார். தமிழ் மக்­கள் மீது நாம் அதிக அக்­கறை கொண்டு செயற்­பட வேண்­டும். எமது  கலா­சா­ரத்தை அழிக்­கப் பலர் நினைப்­பார்­கள். போரால் அல்ல. வேறு வகை­யில் முயற்சி
செய்­வார்­கள் என்­றார்.

‘‘மீள் குடி­ய­யேற்ற அமைச்­சா­ராக சுவா­மி­நா­தன் வந்த பின்­னரே இந்த அபி­வி­ருத்­தி­கள்  வேக­மா­கச் சிறப்­பாக நடை­பெ­று­கின்­றன. அவர் பல திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளார். இன்­னும்  பலர் மீளக்­கு­டி­ய­மர்ல்த்­தப்­ப­டா­மல் உள்­ள­னர். அவர்­க­ளும் மீளக்­கு­டி­ய­மர்த்­தப்­ப­ட­வே­வண்­டும்.
யாழ்ப்­பா­ணத்­தில் சிறப்­பான உற்­பத்­தி­கள் இடம்­பெ­று­கின்­றன. அவர்­க­ளுக்­கான சந்தை வாய்ப்பு  வேண்­டும்’’ என்­றார் யாழ். மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன்.

இதே­வேளை, நிகழ்வு முடிந்த பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அமைச்­சர் சுவா­மி­நா­தன், மீள்  குடி­யேற்ற அமைச்­சின் ஊடாக பாது­காப்பு பிரி­வுக்கு வழங்­கப்­பட்ட நிதி வடக்­கில் விடு­விக்­கப்­ப­டும்
பகு­தி­க­ளில் உள்ள கட்­டங்­களை அகற்­று­தல் உள்­ளிட்ட வேலை­களை மேற்­கொள்­ளு­வ­தற்கே
என்று தெரி­வித்­தார்.

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்  ஆற்­றிய உரை­யில், மீள் குடி­யேற்ற அமைச்­சின் ஊடா­கப் பாது­காப்­புப் பிரி­வுக்கு அதி­க­ளவு நிதி  வழங்­கப்­ப­பட்­டது என்று குற்­றஞ்­சாட்­டி­யது குறித்து அமைச்­ச­ரி­டம் செய்­தி­யா­ளர்­கள் கேள்வி
எழுப்­பி­னர்.

‘‘மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஊடா­கப் பாது­காப்­புப் பிரி­வுக்கு நிதி வழங்­கி­யமை உண்மை.  மீள்­கு­டி­ய­மர்­வுக்­குக் காணி விடு­விப்பு அவ­சி­ய­மா­கும். இவ்­வாறு விடு­விக்­கப்­ப­டும் காணி­க­ளில்  உள்ள கட்­ட­டங்­களை அகற்­று­தல் போன்ற வேலை­கள் இருந்­தன. அதற்­கா­கவே அந்­தப் பணம்
பாது­காப்­புப் பிரி­வுக்கு வழங்­கப்­பட்­டது’’– என்­றார்.

இதேவேளை நிகழ்வில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற  உறுப்பினருமான மாவை சேனாதிராசா ; ”வடக்­கில் தெரி­விக்­கப்­ப­டும் கருத்­துக்­க­ளுக்­கும்,  செயற்­பா­டு­க­ளுக்­கும் முன்­ன­ரை­யும் விட எதிர்ப்­புக்­கள் மற்­றும் எதிர்க் கருத்­துக்­கள் தெற்­கில்
அதி­க­மா­கவே தற்­போது வரு­கின்­றது. வடக்கு மாகாண சபை­யில் இன ஒழிப்­புப் பற்­றிய தீர்­மா­னம்  நிறை­வேற்­றப்­பட்­டது. அதற்­கும் அவர்­கள் எதிர்ப்­பு­க­ளைக் காட்­டி­யி­ருந்­தார்­கள். எனி­னும் நாம்  நிதா­ன­மா­கவே பய­ணிக்­கி­றோம் என்று ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்திருந்தார்.

http://newuthayan.com/story/10/தமி­ழர்­கள்-மீது-அக்­கறை-கொள்­ளா­விட்­டால்-6-லட்­சம்-பேரும்-வெளி­நாடு-ஓடி­வி­டு­வார்­கள்-அமைச்­சர்-சுவா­மி­நா­தன்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

தமிழ் மக்­கள் மீது கொழும்பு அரசு அதிக அக்­கறை கொண்டு செயற்­ப­ட­வில்லை என்­றால் 6  லட்­சத்து 20 ஆயி­ரம் தமிழ் மக்­க­ளும் வெளி­நாடு சென்­று­வி­டும் நிலை ஏற்­ப­டும் என்று  தெரி­வித்­தார் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம். சுவா­மி­நா­தன்.

சிங்கள பொதுமக்களும் முஸ்லீம் பொதுமக்களும் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.....அரசு அதற்கு ஏற்ற உதவிகளை செய்யும்...சர்வதேசம் தேவையான வ‌சதிகளை செய்யும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்  எச்சரிக்கிறாரா?

தகவல்  கொடுக்கிறாரா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நவீனன் said:

தமி­ழர்­கள் மீது அக்­கறை கொள்­ளா­விட்­டால் 6 லட்­சம் பேரும் வெளி­நாடு ஓடி­வி­டு­வார்­கள் -அமைச்­சர் சுவா­மி­நா­தன்!!

அப்ப அந்த மக்களும் புலம் பெயர்ந்நத எம்மைப் போன்று வீரர்களாக மாறி விடுவார்கள்.என்ன எமக்குத்தான் போராட ஒரு களமும் இல்லாமல் போய் விடும்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

இவர்  எச்சரிக்கிறாரா?

தகவல்  கொடுக்கிறாரா????

இவர்களும் கொழும்புக்கு புலம்பெயர்ந்த மனிதர்கள் தான்.....

Link to comment
Share on other sites

திண்ணை காலியாகும் வரை காத்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

On 5/26/2018 at 11:12 AM, நவீனன் said:

தமிழ் மக்­கள் மீது கொழும்பு அரசு அதிக அக்­கறை கொண்டு செயற்­ப­ட­வில்லை என்­றால் 6  லட்­சத்து 20 ஆயி­ரம் தமிழ் மக்­க­ளும் வெளி­நாடு சென்­று­வி­டும் நிலை ஏற்­ப­டும் என்று  தெரி­வித்­தார் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம். சுவா­மி­நா­தன்.

இப்படியெல்லாம் உளரவல்ல அரைவேக்காடுகளை தான்  ஐ.தே. கட்சி அமைச்சராகியுள்ளது. இவரின் வெங்காய அரசியல் ஒருபக்கம். மறுபக்கத்தில் சட்டவிரோத கடத்தல் கும்பல்களின் துணையுடன் விஜயகலா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக சொறீலங்காவில் 6 இலட்சம் தமிழ் மக்கள் தான் உள்ளனரோ.

இதென்னவோ.. முள்ளிவாய்க்களில் 70யிரம் மக்கள் மட்டுமே இருந்தனர் என்று கோத்தா சொன்ன கணக்காய் இருக்குது. 

மிச்ச தமிழர்களை என்ன ஓட முதல் இனப்படுகொலை செய்யும் திட்டமா..???!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.