Jump to content

"நாய்க்காப்பகம்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வருடமும் நடக்கும் இராபோசண விருந்துக்கு நான் போவது வழமை இந்த இராபோசண விருந்தை ஒழுங்கு செய்வதில் எனது நண்பர் ஒருவரும் முக்கிய பங்கு வகிக்கின்றார்.இந்த தடவையும் சென்றிருந்தேன்  இருபதைந்து டொலருக்கு ஒரு டிக்கட்டை எடுத்து போட்டு நானும் ஷரிட்டிற்க்கு காசு கொடுக்கிறனான் என்று சொல்லுவதில் எனக்கு  ஒரு பெருமை. என்னை மாதிரி கொஞ்ச சனம் புலத்தில இருக்கினம்.இன்னும் சிலர் இருக்கிறார்கள் அமைப்புக்களின் பணத்தை பொருளாதரத்தில் பின்தங்கியவர்களுக்கு கொடுத்து  அதை தாங்கள் வழங்குவது போன்று ஒரு புகைப்படுத்தை எடுத்து முகப்புத்தகத்திலும் வட்சப்பிலும் போட்டுவிடுவார்கள். அதை பார்ப்பவர்கள் நினைப்பார்கள் இவருடைய‌ பணத்தில் தான் உதவிகளை செய்கிறார்கள் என்று.

எது எப்படியோ  தேவையானோருக்கு பணம் போகின்றது. சந்தோசமடைவோம்

 

கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு  ஆரம்பமானது .ஒவ்வொரு வருடமும்   பேச்சாளர் தனது உரையில் தாயகத்தில் தனது அமைப்புக்கு என்ன தேவை என்பதனை சொல்லுவார். மக்களும் தங்களால் முடிந்தவற்றை கொடுத்து உதவுவார்கள். ஒவ்வொரு தடவையும் தனது உரையில் ஒன்றைமட்டும் சொல்ல தவ‌றுவதில்லை,இந்திய இராணுவம் கைது செய்து துன்புறுத்தியபடியால் கடுமையாக நோய்வாய்பப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொழுது ,தான் சுகமாகி தப்பி வந்தால் ஏழைகள்,ஆதரவற்றோர்,ஆதரவற்ற முதியோர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேணும்  என நினைத்ததாகவும் அதை தான் தொடர்ந்து செய்வதாகவும் கூறினார்.

யோகர் சுவாமிகள் நாய்குட்டிகளுக்கு எம்மவர்களால் இளைக்கப்படும் துன்பங்களை எண்ணி கவலைப்பட்டவர் என்றார்.

அதே போன்று புத்தரும் ச‌கல உயிரினங்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற கொள்கையை உடையவர்.

இதை எங்கோ வாசித்த மகிந்தா கட்டாகாலி நாய்களை பிடிப்பதை தடை செய்து விட்டார்.இதனால் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது அவைகள் பல்கி பெருகி இப்பொழுது பொதுமக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகின்றது என குறைப்பட்டு கொண்டார் அந்த பெரியவர்.

Image result for à®à®à¯à®à®¾à®à®¾à®²à®¿ நாயà¯à®à®³à¯

இந்த நாய்களுக்கு ஓர் காப்பகம் அமைத்து அதை பாரமரிக்க வேண்டு என்று சொன்னவுடன் ,நான் திகைத்து விட் டேன்.இதை அறிந்த ஐயா நகைச்சுவையாக இப்படி கூறினார்" நீங்கள் இப்ப எனக்கு அடிக்க வந்தாலும் வருவியள் எல்லாம் முடிஞ்சு இப்ப உவர் நாய் பாராமரிக்க வந்திட்டார்.எல்லோரும் கை தட்டினோம்

நாங்கள் வளர்ந்த நாட்டில் நாய்களுக்கு எப்படியான மரியாதை கொடுக்கப்பட்டது என்பதை  அறிந்தவன்.

சின்ன வயதில் ஞாபகம் இருக்கின்றது சிறு பிள்ளைகளை பயப்படுத்துவதற்கு  நாய் பிடிக்கிறவன் வானில வந்து பிடிச்சு கொண்டு போய்விடுவான் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.அந்த கால கட்டத்தில் நகரசபைகள் நாய்களை பிடித்து கொண்டு சென்று அழித்துவிடுவார்கள்.

Image result for à®à®à¯à®à®¾à®à®¾à®²à®¿ நாயà¯à®à®³à¯

2006 ஆம் ஆண்டு மகிந்தா நாய்களுக்கும் வாழ உரிமை உண்டு  தெரு நாய்களை பிடித்து கொல்ல கூடாது என சட்டத்தை கொண்டுவந்த பின்பு நகரசபைகள் நாய் பிடிப்பதை நிறுத்தி விட்டனர் .இதனால் தெரு நாய்கள் பெருகி கொண்டு போகின்றது.

சில நாய்கள் மனிதர்களுக்கு கடித்தும் விடுகின்றனவாம்.

யாழ் நகரில் கட்டாகாலி நாய்களை ஜேர்மன் நாட்டு பெண்மணிஒருவர் பார்த்து கவலை அடைந்து  அவரை சந்தித்து இவை பாராமரிப்பற்று இருப்பதன் காராணத்தை கேட்டதாகவும் சொன்னார்.

அந்தபெண்மணியின் பின்னால் அங்கு நின்ற கட்டாகாலி நாய்கள் எல்லாம் வாலை ஆட்டிகொண்டு சென்றதை பார்த்து ஆச்சரியமடைந்த‌தையும் கூறினார்.

ஜேர்மன் பெண்மணி சொன்னாராம் இந்த நாய்கள் எனக்கு பின்னால் வருவதற்கு காரணம் தனது ரத்தத்தில் நாய்பாசம் கலந்துள்ளது அதுதான் இவைகள் எனக்கு பின்னால் வருகின்றன என்றாராம்.

கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுவதால் அங்கு அதிக நாய்கள் தஞ்சமடைந்துள்ளன இதனால் பக்தகோடிகளுக்கும் பிரச்சனைகள் உருவாகின்றன எனவே ஐயா இந்த நாய்களுக்கு ஒரு காப்பகம் அமைக்க முயற்சி செய்துள்ளார் . எமது முன்னாள் பாடசாலை அதிபரின் இரண்டு ஏக்கர் காணி இயக்கச்சி காட்டினுள் உள்ளதாம் அதை அவர் இவரது தொண்டு நிறுவனத்திற்கு அளித்துள்ளார் . இந்த காணியில் காப்பகத்தை அமைக்க ஐயா உத்தேசித்துள்ளார்.

அது வெற்றியடையும் என எதிர்பார்க்கலாம்.ஐயா நகைச்சுவையாக இந்த நாய்களுக்கு சாம்பாரும் சோறும்தான் உணவாக வழங்கப்படும் என்று சொன்னார்

. சுவாமிகளும் ,எனையோரும் ,நாங்களும் ஐயோ நாய்கள் பாவம் என்று சொல்லுகிறோம் ஆனால் ஒருத்தரும் அவற்றை பாதுகாக்க எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை ஆனால் ஐயா செயலில் ஈடுபட்டமை பாராட்ட படவேண்டிய ஒர் விடயமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/29/2018 at 8:54 AM, putthan said:

------யாழ் நகரில் கட்டாகாலி நாய்களை ஜேர்மன் நாட்டு பெண்மணிஒருவர் பார்த்து கவலை அடைந்து  அவரை சந்தித்து இவை பாராமரிப்பற்று இருப்பதன் காராணத்தை கேட்டதாகவும் சொன்னார்.

அந்தபெண்மணியின் பின்னால் அங்கு நின்ற கட்டாகாலி நாய்கள் எல்லாம் வாலை ஆட்டிகொண்டு சென்றதை பார்த்து ஆச்சரியமடைந்த‌தையும் கூறினார்.

ஜேர்மன் பெண்மணி சொன்னாராம் இந்த நாய்கள் எனக்கு பின்னால் வருவதற்கு காரணம் தனது ரத்தத்தில் நாய்பாசம் கலந்துள்ளது அதுதான் இவைகள் எனக்கு பின்னால் வருகின்றன என்றாராம்.

கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுவதால் அங்கு அதிக நாய்கள் தஞ்சமடைந்துள்ளன இதனால் பக்தகோடிகளுக்கும் பிரச்சனைகள் உருவாகின்றன எனவே ஐயா இந்த நாய்களுக்கு ஒரு காப்பகம் அமைக்க முயற்சி செய்துள்ளார் . எமது முன்னாள் பாடசாலை அதிபரின் இரண்டு ஏக்கர் காணி இயக்கச்சி காட்டினுள் உள்ளதாம் அதை அவர் இவரது தொண்டு நிறுவனத்திற்கு அளித்துள்ளார் . இந்த காணியில் காப்பகத்தை அமைக்க ஐயா உத்தேசித்துள்ளார்.

அது வெற்றியடையும் என எதிர்பார்க்கலாம்.ஐயா நகைச்சுவையாக இந்த நாய்களுக்கு சாம்பாரும் சோறும்தான் உணவாக வழங்கப்படும் என்று சொன்னார்.

. சுவாமிகளும் ,எனையோரும் ,நாங்களும் ஐயோ நாய்கள் பாவம் என்று சொல்லுகிறோம் ஆனால் ஒருத்தரும் அவற்றை பாதுகாக்க எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை ஆனால் ஐயா செயலில் ஈடுபட்டமை பாராட்ட படவேண்டிய ஒர் விடயமாகும்.

Bildergebnis für hundefutter in dosen

சிரிப்பான  நல்ல கதை புத்தன்.  ?  

ஜேர்மன்  பெண்களுக்கு, தாய்ப் பாசத்தை விட,  நாய்ப் பாசம்  ? அதிகம் என்பது 100% உண்மை.

எங்களது  ஜேர்மனியில்....  ?️‍?️ தமிழ் பெயரில்... நாயின் உணவு  ?️‍?️ உள்ளதை கவனிக்கவும்.  ⛑️   
ஜேர்மன் உதவியுடன்,  நாய்க் காப்பகம் ? அமைத்தால், நிச்சயம்  நல்ல வருமானம்,  ஐயாவுக்கு வரும். ?

ஏனென்றால்... எங்கள் ஊர் நாய்கள், "ரின் சாப்பாடுகளை" விரும்பி சாப்பிடாமல்,
மிஞ்சின ?  சோறும்,  சாம்பாறும்,  பருப்பு கறியும்   கொடுத்தாலே... நன்றியுடன் வாலை  ஆட்டிக் கொண்டு,  சப்பி  சாப்பிடுவார்கள். ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்லை எனக்கு வழமையான மாதிரி கதை துண்டற விளங்கேல்லை....
இயக்கச்சி எண்டவுடனை  அப்பிடியே விசயத்தை கவ்வி பிடிச்சிட்டன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

முதல்லை எனக்கு வழமையான மாதிரி கதை துண்டற விளங்கேல்லை....
இயக்கச்சி எண்டவுடனை  அப்பிடியே விசயத்தை கவ்வி பிடிச்சிட்டன் 

எனக்கு இயக்கச்சி பக்கம் போய் அனுபவமில்லை எண்டதால கதை விளங்கவில்லை!

என்ன சூக்குமம் இதுக்குள்ள இருக்கும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்காப்பகம் அசத்தல்......கதையாக இருந்தாலும் நிஜமாகவே தெரு நாய்களின் நிலமை பரிதாபம்தான்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

முதல்லை எனக்கு வழமையான மாதிரி கதை துண்டற விளங்கேல்லை....
இயக்கச்சி எண்டவுடனை  அப்பிடியே விசயத்தை கவ்வி பிடிச்சிட்டன் 

இப்ப... முழிப்பது....  புத்தன், கிருபன், சுவி, தமிழ் சிறி  ? 
குமாரசாமி அண்ணை...   "இயக்கச்சி"  கதையை, நீங்கள் சொல்லியே..  ஆக  வேண்டும்.  ஆமா.....   ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிரிக்கிறார் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/29/2018 at 2:54 AM, putthan said:

இதை எங்கோ வாசித்த மகிந்தா கட்டாகாலி நாய்களை பிடிப்பதை தடை செய்து விட்டார்.இதனால் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது அவைகள் பல்கி பெருகி இப்பொழுது பொதுமக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகின்றது என குறைப்பட்டு கொண்டார் அந்த பெரியவர்.

ஊரில இன்னும் கொஞ்சகாலம் போனால் இந்த நாய்ப் பிரச்சனையே இருக்காது.

முன்னர் நாய்க்கு குறி சுடும் பழக்கம் இருந்தது.இப்போது நம்ம நாய் அடுத்தவன் நாயோடு கூடி பழகுவதை விரும்பாமல் நாய் கெளரவமாக இருக்க வேண்டுமென்பதற்காக 2000 ரூபா கொடுத்து ஊசி போட்டு வீட்டோடே வைத்துக் கொள்கிறார்கள்.

தமிழன் தாய் பெயரோ மம்மி

அவன் நாய் பெயரோ ஜிம்மி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் ஏறக்குறைய 6 மில்லியன் நாய்கள் இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் .....நாய்களை வாங்கும் போதும்....அல்லது நாய்களை மாற்றும்போதும்.....yagoona வில் உள்ள...நாய்க்காப்பகத்தில் தான் வாங்குவது வழக்கம்!

வெளியில்....நாய் விற்பவர்களிடம் வாங்குவதில்லை! ஏனெனில் அவர்கள்....தாய் நாய்களைப் பிள்ளை பெறும் இயந்திரங்களாக மட்டும் உபயோகித்து விட்டுப்...பின்னர் அவற்றில் பிள்ளை பெறும் காலம் முடிந்ததும் தெருவில் விட்டு விடுவார்கள்!

அவ்வளவு தான் அவர்களது....நாயாபிமானம்!

அநேகமாகச் சிட்னியில் நடக்கும்.... Million paws walks..... நிகழ்வில்....புங்கையும்....ஒரு ஓரத்தில் தனது நாயுடன்...ஓரமாகக நடந்து போவதைக் காணலாம், புத்தன்!

ஒருக்கால்...ஊருக்குப் போன நேரம்.....வெறும் தீச்ச மீன் முள்ளுடனும், புழிஞ்ச தேங்காய்ப் பூவுடனும், கொஞ்சம் சோற்றுடனும் காலத்தை ஓட்டும்...ஊர் நாய் பாவம் எண்டு நினைச்சு...அதுக்கு..அவுஸ்திரேலியன் பேணிச் சாப்பாடு வாங்கிக் கொண்டு போய்க் குடுக்க...அதைப் பார்த்துக் கொண்டிருந்த கொஞ்சம் வயசு போன கிழவி ஒண்டு.....அட...தம்பி...வாசத்தைப் பார்த்தால்...நானே சாப்பிடலாம் போல கிடக்கு எண்டு சொல்ல.... கிழவியின்ர கண் பட்டதோ என்னவோ தெரியாது.....நாய் அவ்வளவு சாப்பாட்டையும்...சத்தி எடுத்து விட்டது!

பிறகு....வெறும் பேணியைக் காட்டினாலே....ஒழுங்கை முடிவுக்கு....ஓடிப்போய் விடும்!

தீச்ச மீனுக்கும்....புழிஞ்ச தேங்காய்ப் பூவுக்கும்..உள்ள மவுசு....நாய்க்குத் தெரியுது....நமக்குத் தான்....புரியுதில்லைப் போல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/31/2018 at 4:20 AM, தமிழ் சிறி said:

மை.

 

ஏனென்றால்... எங்கள் ஊர் நாய்கள், "ரின் சாப்பாடுகளை" விரும்பி சாப்பிடாமல்,
மிஞ்சின ?  சோறும்,  சாம்பாறும்,  பருப்பு கறியும்   கொடுத்தாலே... நன்றியுடன் வாலை  ஆட்டிக் கொண்டு,  சப்பி  சாப்பிடுவார்கள். ?

 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்  ....உண்மையிலயே ஊர் நாய்கள் என்னத்தையும் சாப்பிடும்...ஐயா வருமானத்தை எதிர்பார்த்து இதை செய்யவில்லை....நாய்கள்மீதும் மனிதர்கள் மீதும் உள்ள அக்கறையால் செய்கின்றார் என நான் நினைக்கிறேன்.

On 5/31/2018 at 6:05 AM, குமாரசாமி said:

முதல்லை எனக்கு வழமையான மாதிரி கதை துண்டற விளங்கேல்லை....
இயக்கச்சி எண்டவுடனை  அப்பிடியே விசயத்தை கவ்வி பிடிச்சிட்டன் 

அண்ணே அதென்ன இயக்கச்சி கதை நான் இப்ப உண்மையிலயே முழுசிறன்.....:oO:

On 5/31/2018 at 6:49 AM, கிருபன் said:

எனக்கு இயக்கச்சி பக்கம் போய் அனுபவமில்லை எண்டதால கதை விளங்கவில்லை!

என்ன சூக்குமம் இதுக்குள்ள இருக்கும்??

சும்மா ஒருகிறுக்கல் தான் இதில் ஒரு சூக்குமமும் இல்லை....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/31/2018 at 6:50 AM, suvy said:

நாய்க்காப்பகம் அசத்தல்......கதையாக இருந்தாலும் நிஜமாகவே தெரு நாய்களின் நிலமை பரிதாபம்தான்.....!  tw_blush:

நாங்கள் இருந்த காலத்தை விட தற்பொழுது அதிகமாக உள்ளது....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

On 5/31/2018 at 7:00 AM, குமாரசாமி said:

புத்தர் சிரிக்கிறார் :cool:

:)

On 5/31/2018 at 7:19 AM, ஈழப்பிரியன் said:

ஊரில இன்னும் கொஞ்சகாலம் போனால் இந்த நாய்ப் பிரச்சனையே இருக்காது.

முன்னர் நாய்க்கு குறி சுடும் பழக்கம் இருந்தது.இப்போது நம்ம நாய் அடுத்தவன் நாயோடு கூடி பழகுவதை விரும்பாமல் நாய் கெளரவமாக இருக்க வேண்டுமென்பதற்காக 2000 ரூபா கொடுத்து ஊசி போட்டு வீட்டோடே வைத்துக் கொள்கிறார்கள்.

தமிழன் தாய் பெயரோ மம்மி

அவன் நாய் பெயரோ ஜிம்மி

ஆனால் தெரு நாய்களுக்கு 2000 ரூபா கொடுத்து ஒருத்தரும் குடும்பகட்டுப்பாடு செய்யமாட்டினம்tw_blush:.....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/31/2018 at 2:13 PM, Kavi arunasalam said:

யேர்மனியில் ஏறக்குறைய 6 மில்லியன் நாய்கள் இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள்

நன்றிகள் கவி ....வருகைக்கும் தகவ‌லுக்கும்....அங்கு தெருவில் எத்தனை நிற்கின்றன ஒரு ஆயிரம்?எங்கள் நாட்டில் மில்லியன் நாய்கள் தெருவிலும் ஆயிரம் நாய்கள் வீட்டிலும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/31/2018 at 3:20 PM, புங்கையூரன் said:

 

அநேகமாகச் சிட்னியில் நடக்கும்.... Million paws walks..... நிகழ்வில்....புங்கையும்....ஒரு ஓரத்தில் தனது நாயுடன்...ஓரமாகக நடந்து போவதைக் காணலாம், புத்தன்!

 

என‌க்கும் நீண்ட நாட்களாக நாய் வளர்க்க வேணும் என்று ஆசை ஆனால் ம‌னிசி அனுமதி கொடுக்கின்றார் இல்லை.
ஒரு நாள் சண்டையில சொல்லி போட்டார், நாய் வீட்டுக்குள்ள வந்தால் தான் வெளியால போய்விடுவன் ,நாயா? நானா? நீங்களே முடிவெடுங்கள் என்று ...அதற்கு பிறகு நான் நாய் கதையே கதைக்கிறதில்லை எல்லாம் எழுத்துதான்....

அடுத்த‌ முறை Million paws walks பார்கத்தான் வேணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

என‌க்கும் நீண்ட நாட்களாக நாய் வளர்க்க வேணும் என்று ஆசை ஆனால் ம‌னிசி அனுமதி கொடுக்கின்றார் இல்லை.
ஒரு நாள் சண்டையில சொல்லி போட்டார், நாய் வீட்டுக்குள்ள வந்தால் தான் வெளியால போய்விடுவன் ,நாயா? நானா? நீங்களே முடிவெடுங்கள் என்று ...அதற்கு பிறகு நான் நாய் கதையே கதைக்கிறதில்லை எல்லாம் எழுத்துதான்....

அடுத்த‌ முறை Million paws walks பார்கத்தான் வேணும்

எனக்குத் தெரிந்த வரையில்....வெளி நாடுகளில்...வாழ்பவர்கள்...உடம்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு..ஒரு அருமையானதும்..மலிவானதுமான ஒரு வழி...நாய் வளர்ப்பது தான்!

உங்களுக்காக இல்லாவிட்டாலும்....நாய்க்காகவாவது கட்டாயம் நடக்க வேண்டிய தேவை உள்ளது!

அத்துடன்....நீங்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள்...புதிதாக வரும் அயலவர்கள் போன்ற அறிவையும் பெற...நாயுடன் நடப்பது..உதவும்!

அத்துடன்....ஒரு வேளை மனுசி விட்டிட்டுப் போனாலும்....நாய் ஒரு நாளும்...உங்களை விட்டுப் போகாது!?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புங்கையூரன் said:

எனக்குத் தெரிந்த வரையில்....வெளி நாடுகளில்...வாழ்பவர்கள்...உடம்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு..ஒரு அருமையானதும்..மலிவானதுமான ஒரு வழி...நாய் வளர்ப்பது தான்!

உங்களுக்காக இல்லாவிட்டாலும்....நாய்க்காகவாவது கட்டாயம் நடக்க வேண்டிய தேவை உள்ளது!

அத்துடன்....நீங்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள்...புதிதாக வரும் அயலவர்கள் போன்ற அறிவையும் பெற...நாயுடன் நடப்பது..உதவும்!

அத்துடன்....ஒரு வேளை மனுசி விட்டிட்டுப் போனாலும்....நாய் ஒரு நாளும்...உங்களை விட்டுப் போகாது!?

 

குந்திக்கொண்டு உதில தட்டிக்கொண்டிருக்காமல் நடந்திட்டு வாங்கோ என்று  சொல்லுறவ இதை சாட்டா வைத்து அனுமதி எடுக்கத்தான் வேணும்....tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

என‌க்கும் நீண்ட நாட்களாக நாய் வளர்க்க வேணும் என்று ஆசை ஆனால் ம‌னிசி அனுமதி கொடுக்கின்றார் இல்லை.
ஒரு நாள் சண்டையில சொல்லி போட்டார், நாய் வீட்டுக்குள்ள வந்தால் தான் வெளியால போய்விடுவன் ,நாயா? நானா? நீங்களே முடிவெடுங்கள் என்று ...அதற்கு பிறகு நான் நாய் கதையே கதைக்கிறதில்லை எல்லாம் எழுத்துதான்....

அடுத்த‌ முறை Million paws walks பார்கத்தான் வேணும்

ஆண்டவன் மிகவும் கருணையுள்ளவர். எப்போதாவதுதான் அருமையாக ஒரு சந்தர்ப்பத்தை போட்டுட்டு போகிறார்......ஆனாலும் விதி வலியது.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

எனக்குத் தெரிந்த வரையில்....வெளி நாடுகளில்...வாழ்பவர்கள்...உடம்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு..ஒரு அருமையானதும்..மலிவானதுமான ஒரு வழி...நாய் வளர்ப்பது தான்!

உங்களுக்காக இல்லாவிட்டாலும்....நாய்க்காகவாவது கட்டாயம் நடக்க வேண்டிய தேவை உள்ளது!

அத்துடன்....நீங்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள்...புதிதாக வரும் அயலவர்கள் போன்ற அறிவையும் பெற...நாயுடன் நடப்பது..உதவும்!

அத்துடன்....ஒரு வேளை மனுசி விட்டிட்டுப் போனாலும்....நாய் ஒரு நாளும்...உங்களை விட்டுப் போகாது!?

 

அதோட முஞ்சையை நீட்டாது எப்பவும் வாலை ஆட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2018 at 8:48 PM, suvy said:

ஆண்டவன் மிகவும் கருணையுள்ளவர். எப்போதாவதுதான் அருமையாக ஒரு சந்தர்ப்பத்தை போட்டுட்டு போகிறார்......ஆனாலும் விதி வலியது.....! tw_blush:

 just miss it :)

On 6/2/2018 at 1:41 AM, சுவைப்பிரியன் said:

அதோட முஞ்சையை நீட்டாது எப்பவும் வாலை ஆட்டும்.

அதென்றால் 100% உண்மை

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 5/31/2018 at 3:20 PM, புங்கையூரன் said:

 

ஒருக்கால்...ஊருக்குப் போன நேரம்.....வெறும் தீச்ச மீன் முள்ளுடனும், புழிஞ்ச தேங்காய்ப் பூவுடனும், கொஞ்சம் சோற்றுடனும் காலத்தை ஓட்டும்...ஊர் நாய் பாவம் எண்டு நினைச்சு...அதுக்கு..அவுஸ்திரேலியன் பேணிச் சாப்பாடு வாங்கிக் கொண்டு போய்க் குடுக்க...அதைப் பார்த்துக் கொண்டிருந்த கொஞ்சம் வயசு போன கிழவி ஒண்டு.....அட...தம்பி...வாசத்தைப் பார்த்தால்...நானே சாப்பிடலாம் போல கிடக்கு எண்டு சொல்ல.... கிழவியின்ர கண் பட்டதோ என்னவோ தெரியாது.....நாய் அவ்வளவு சாப்பாட்டையும்...சத்தி எடுத்து விட்டது!

 

முல்லைக்கொடிக்கு தான் ஏறிவந்த  தேரினைக் கொடுத்தவன் பாரி. இதனால்  வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர்.  

 தாயகத்துக்கு செல்லும் போது நாய்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொண்ட முதலாவது தமிழர் புங்கையூரான் அவர்களை இன்று முதல் "  பாரியை விஞ்சிய பூங்கையர்'   என்று அழைக்கப்படுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கந்தப்பு said:

முல்லைக்கொடிக்கு தான் ஏறிவந்த  தேரினைக் கொடுத்தவன் பாரி. இதனால்  வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர்.  

 தாயகத்துக்கு செல்லும் போது நாய்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொண்ட முதலாவது தமிழர் புங்கையூரான் அவர்களை இன்று முதல் "  பாரியை விஞ்சிய பூங்கையர்'   என்று அழைக்கப்படுவார்.

ஆஹா ....அருமையான விருது, போற்றத் தக்கது.....!  விருதை சுருக்கி பாவி புங்கையர் என்றும் அழைக்கலாம்......!  ?

Link to comment
Share on other sites

நேரப்பற்றாக்குறை, மற்றும் பொறுமை இல்லாதபடியால் உங்கள் கதைகளை வாசிக்கமுடியாமல் போய்விட்டது புத்தன். ஆனால் இன்று வாசித்தேன். நல்ல கருப்பொருள். எங்கள் கொக்குவில் வீட்டு நாயின் நினைவும் வந்துவிட்டது கதையை வாசித்தபின்னர். நாய் பிடிப்பதற்கு எதிராக இப்போது இலங்கையில் சட்டம் உள்ளது என்று இன்றுதான் அறிந்துகொண்டேன். நாய் காப்பகம் உண்மையில் நல்ல வரவேற்கத்தக்க முயற்சி. நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தினாலே போதும். அவற்றை பிடித்து கொன்று கட்டாக்காலி நாய்களை அழிக்கவேண்டிய தேவை ஏற்படாது.

On 5/31/2018 at 1:20 AM, புங்கையூரன் said:

நானும் .....நாய்களை வாங்கும் போதும்....அல்லது நாய்களை மாற்றும்போதும்.....yagoona வில் உள்ள...நாய்க்காப்பகத்தில் தான் வாங்குவது வழக்கம்!

வெளியில்....நாய் விற்பவர்களிடம் வாங்குவதில்லை! ஏனெனில் அவர்கள்....தாய் நாய்களைப் பிள்ளை பெறும் இயந்திரங்களாக மட்டும் உபயோகித்து விட்டுப்...பின்னர் அவற்றில் பிள்ளை பெறும் காலம் முடிந்ததும் தெருவில் விட்டு விடுவார்கள்!

அவ்வளவு தான் அவர்களது....நாயாபிமானம்!

அநேகமாகச் சிட்னியில் நடக்கும்.... Million paws walks..... நிகழ்வில்....புங்கையும்....ஒரு ஓரத்தில் தனது நாயுடன்...ஓரமாகக நடந்து போவதைக் காணலாம், புத்தன்!

ஒருக்கால்...ஊருக்குப் போன நேரம்.....வெறும் தீச்ச மீன் முள்ளுடனும், புழிஞ்ச தேங்காய்ப் பூவுடனும், கொஞ்சம் சோற்றுடனும் காலத்தை ஓட்டும்...ஊர் நாய் பாவம் எண்டு நினைச்சு...அதுக்கு..அவுஸ்திரேலியன் பேணிச் சாப்பாடு வாங்கிக் கொண்டு போய்க் குடுக்க...அதைப் பார்த்துக் கொண்டிருந்த கொஞ்சம் வயசு போன கிழவி ஒண்டு.....அட...தம்பி...வாசத்தைப் பார்த்தால்...நானே சாப்பிடலாம் போல கிடக்கு எண்டு சொல்ல.... கிழவியின்ர கண் பட்டதோ என்னவோ தெரியாது.....நாய் அவ்வளவு சாப்பாட்டையும்...சத்தி எடுத்து விட்டது!

பிறகு....வெறும் பேணியைக் காட்டினாலே....ஒழுங்கை முடிவுக்கு....ஓடிப்போய் விடும்!

தீச்ச மீனுக்கும்....புழிஞ்ச தேங்காய்ப் பூவுக்கும்..உள்ள மவுசு....நாய்க்குத் தெரியுது....நமக்குத் தான்....புரியுதில்லைப் போல!

நல்ல விடயம் புங்கையூரன். நானும் கனடாவில் இருந்து சென்றபோது எனது மனைவியின் வீட்டில் உள்ள நாய்க்கு உண்பதற்கு நல்ல பாத்திரம் ஒன்றும், அது உண்பதற்கு நாய்களுக்கு கொடுக்கப்படும் உணவு பெட்டி ஒன்றும் கொண்டு சென்றேன். நான் மனைவியுடன் தொலைபேசியில் கதைக்கும்போது அதனுடனும் கதைத்து குரலை காட்டிக்கொள்வேன். நல்ல புத்திசாலித்தனமான நாய் அது. கனடாவில் நாய் வளர்ப்பதற்கு சூழ்நிலைகள் இடம்கொடுக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்காப்பகம் பற்றி எனக்கு எந்த அனுபவமும் இல்லை. ஆனால் எனது மகள் பல வருடங்களாக கேட்டும் நான் நாய் வளர்ப்பதற்கு  அனுமதிக்கவில்லை. சென்ற வருடம் எனது மருமகள் தாயகம் புறப்பட்டபோது மகள் அவவின் நாய்க்குட்டியை பராமரிக்கும் பொறுப்பை சந்தோசமாக ஏற்றுக்கொண்டார். மறுநாளே மகள் திராட்சைப்பழம் உண்ண நாய்க்குட்டி வாய்பார்க்க மகளும் அதற்கும் ஒரு திராட்சைப்பழத்தை உண்ணக் கொடுத்து விட்டார். பின் என்ன நினைத்தாரோ கணனியை தட்டி வலைத்தளத்தை தேடிய பொழுது அந்த வகை நாய்க்கு திராட்சைப்பழம் விசம்என்று தெரிந்தது. உடனடியாக நாய்க்குட்டியுடன் நாய்வைத்தியரிடம் சென்று ஊசி போட்டு வாந்தி எடுக்க வைத்து திரும்பினார். கொடுத்தது ஒரு திராட்சைப்பழம் செலவழித்ததோ 100 டொலர். கதைக்கு பாராட்டுக்கள் புத்தன்

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

குசும்புக் கிறுக்கல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்து உங்கள் நாய்க் காப்பகத்திலிருந்து தான் தமிழநாட்டுக்கு நாய்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.