Jump to content

அபார சுவை கொண்டது ‘வெடி தேங்காய்’ அதை வீட்டில் தயார் செய்வது எப்படி?


Recommended Posts

அபார சுவை கொண்டது ‘வெடி தேங்காய்’ அதை வீட்டில் தயார் செய்வது எப்படி?

 

 
flaming_coconut

 

வாழ்வில் ஒருமுறையாவது வெடி தேங்காய் சாப்பிட்டிருக்கிறீர்களா? இதுவரை  இல்லாவிட்டாலும்  இனி அப்படியொரு ஆசையிருந்தால் மெனக்கெட்டு நமது சொந்த கிராமங்களுக்குச் சென்று அங்கே தோப்புகளில் நெருப்பு மூட்டம் போட்டு அதில் தேங்காயைச் சுட்டுத் தான் வெடி தேங்காய் சாப்பிட்டாக வேண்டுமென்பதில்லை. நகரங்களில் கேஸ் அடுப்புகளிலும் கூட வெடி தேங்காய் தயாரித்து சுவையாக சாப்பிடலாம். இன்று நகரங்களில் கேக் ஷாப்புகள், பேக்கரிகள், இனிப்பகங்கள், எல்லாம் பெருகி இங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனும் எதை உண்பதென அவை தீர்மானிக்கும் நிலை வரினும் அன்றொரு காலத்தில் நாமெல்லோரும் உளுந்துக் களி, புட்டு, பணியாரம், பால் கொலுக்கட்டை, இடியாப்பம், என பாரம்பரியமான கிராமத்து ஸ்னாக்ஸ் வகைகளை உண்டு களித்தவர்களே என்பதை எப்போதும் மறந்திடக் கூடாதில்லையா? 

தேவையான பொருட்கள்

  • தேங்காய் - 1 (முற்றலாகவோ, இளநீர்க்காயாகவோ இருக்கக் கூடாது)
  • வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
  • பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
  • பயத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் - அரை அச்சு (நைஸாக பொடி செய்து கொள்ளவும்)

செய்முறை: 

தேங்காயில் நார் உறித்து மேலிருக்கும் சொரசொரப்பான பாகத்தை துருவியால் அகற்றி அதன் மேல்புறத்தில் இருக்கும் முக்கண் போன்ற பகுதியில் துளையிட்டு தேங்காயிலிருக்கும் நீரை முற்றிலுமாக வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு நீண்ட மரக்குச்சியை எடுத்து நுனிப்பகுதியை நன்கு செதுக்கி தேங்காயிலிட்ட துளையை அடைக்கும் விதத்தில் கூர்மையாகச் சீவிக் கொள்ளவும்.  இப்போது மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களில் வெல்லம் நீங்கலாக மீதமுள்ளவற்றை மிதமான சூட்டில் வாணலியில் வறுத்து ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு வெல்லத்தை நசுக்கிக் கொள்ளவும். பிறகு வெல்லம் கலந்த அந்தக் கலவையை தேங்காயின் மேற்புறத்தில் இட்ட துளையின் வழியாக தேங்காயினுள் சேர்க்கவும். தேங்காயின் உட்புறம் முழுவதுமாக நிறைந்தவுடன் அதைக் கெட்டித்து முன்னதாக சீவி வைத்த குச்சியினுள் நுழைத்து இறுக்கமாகத் தள்ளவும்.

இப்போதும் தேங்காயின் கண் பகுதிக்கும், குச்சிக்கும் இடையே சிறு இடைவெளி தெரிந்தால் அதன் மீது கோதுமை மாவு உருண்டை கொண்டு சீல் செய்யவும். இப்போது தேங்காய் சுடுவதற்கு தயார். அடுப்பை ஏற்றி மிதமான நெருப்பில் குச்சியில் மாட்டிய தேங்காயை உருட்டி, உருட்டி சூடாக்கவும். தேங்காயும் சேர்ந்து எரியக் கூடும். அதற்காகத் தான் குச்சியை உருட்டி, உருட்டி காண்பிப்பது. தீயில் தேங்காயின் மேலோடு கருகிக் கொண்டே வரும். அதனால் பரவாயில்லை. அதை உடைத்துக் கீழே தான் வீசப்போகிறோம். எனவே மீண்டும் தேங்காயை நெருப்பில் சுட்டுக் கொண்டே இருக்கவும். எதுவரை என்றால், உள்ளே அடைத்துள்ள பொருட்களில் எள் இருக்கிறதே... அந்த எள் வெடிக்கும் சத்தம் மிதமாக வெளியில் நமக்குக் கேட்கத் தொடங்கும் வரை தேங்காயை சுடவும். பிறகு எடுத்து 30 நிமிடங்கள் சுட்ட தேங்காயை ஆற வைக்கவும். இப்போது தேங்காயின் மேலோட்டை உடைத்து நீக்கி விட்டு உள்ளிருக்கும் தேங்காய்ப்பூவை கத்தியால் துண்டுகளாக்கி சாப்பிடலாம். 

இந்தச் சுவைக்கு எந்த இனிப்பையும் ஈடு இணையாக்கவே முடியாது. அது ஓர் அபார ருசியுடனிருக்கும்.

பொதுவாக வெடிதேங்காய் வீட்டில் செய்தால் இப்படித்தான் செய்ய முடியும். இதையே தோப்புகளிலோ அல்லது வீட்டுக்கு வெளியே காலி இடங்களிலோ செய்தால் நெருப்பை இன்னும் அதிகப்படுத்தி தேங்காயை நன்கு சுடலாம். நெருப்பு அதிகரிக்கும் போது உள்ளிருக்கும் கலவையில் வெல்லம் கரைந்து வழித்து பருப்பு வெந்து அது சாப்பிட மேலும் சுவையாக இருக்கும்.

வெடி தேங்காயின் நியூரிஷனல் பெனிஃபிட்ஸ்:

தேங்காய் மிகச்சிறந்த நார்ச்சத்து மிக்க உணவு. அதோடு இதில் எள், வெல்லம், பொட்டுக்கடலை, பயத்தம் பருப்பெல்லாம் வேறு சேர்க்கிறோமில்லையா? அவையெல்லாமும் மிகச்சிறந்த புரதச் சத்து கொண்ட உணவுப் பொருட்கள். நாட்டு வெல்லத்தில் இருக்கும் இரும்புச் சத்தும் இன்ன பிற மினரல்களும் உடலும், உள்ளமும் உற்சாகமாக இயங்கத் தேவையான சக்தியை வழங்கக் கூடியவை.
 

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பிளாக கரி இட்டு கிரில் போடும் அடுப்பில் செய்யலாம் என்று சொல்லுறிங்கள். சும்மாவே எனக்கு தேங்காய் சொட்டு சீவிச் சாப்பிட மிகவும் பிடிக்கும்.அதில் இவ்விதம் எல்லாம் சேர்த்து எண்டால் , சொல்லி வேல இல்லை....!  ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
    • Published By: RAJEEBAN    18 APR, 2024 | 03:14 PM   2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல்  பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில்  நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.