Jump to content

உதவி: 3 கிழமைகளுக்குள் தன் பெற்றோரை ஒவ்வொருவராக இழந்த என் நண்பனின் 6 வயது மகன்


Recommended Posts

3 கிழமைகளுக்குள் தன் பெற்றோரை ஒவ்வொருவராக  இழந்த என் நண்பனின் 6 வயது மகன்
----

என் நண்பனின் ஒரு ஆறுவயது சின்னஞ் சிறு மகன் மூன்று கிழமைகளுக்குள் முதலில் தன் அம்மாவையும் பின் தன் அப்பாவையும் இழந்து விட்டான்.

மூன்று வாரங்களுக்கு முன், நான் கற்ற யாழ் பரியோவான் கல்லூரி வாட்ஸ் அப் குழுமத்தில் இருந்து எம்முடன் படித்த உற்ற நண்பன் தர்மா என்று அழைக்கபடும் தர்மேந்திராவின் மனைவி சுவாச பிரச்சனை காரணமாக இறந்து விட்டார் எனும் செய்தி எம்மை வந்தடைந்தது. அந்த செய்தியை அறிந்ததில் இருந்து என் நண்பனுக்காக நாம் கவலைப்படுவதை விட அதிகமாக அவனது மகனுக்காக கவலைப்பட்டோம். சிறு வயதில் தாயை இழப்பது என்பது கொடுமை. என் நண்பனும் தன் மகன் தாயில்லாமல் கஷ்டப்பட போகின்றான் என்பதை இட்டு மிகவும் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தான்.


செத்த வீடு எல்லாம் முடிய, அவனுடன் உரையாடும் போது  அவன் சொன்ன விடயம், தன் வாழ்வில் மிகவும் வலி தந்த 40 நிமிடங்கள் என்பது தன் மகனுக்கு தாயின் இறப்பை பற்றி விளங்கப்படுத்தியது தான் என்று சொல்லியிருந்தான்.

மூன்று வாரங்கள் கழிந்தன.

நேற்று நண்பன் சபேஷ் (யாழ் கள உறுப்பினர்) இடம் இருந்து வட்ஸ் அப்பில் அந்த கொடிய செய்தி அலறிக் கொண்டு வந்தது. தர்மா இறந்து விடான் எனும் செய்தி அது. என் நண்பன் தர்மா யாழ் கள  கனடிய உறவு சபேஷ் இனதும் நெருங்கிய நண்பன்.

ஆம், என் நண்பன் தர்மா நேற்று மாரடைப்பு காரணமாக திடீர் என்று இறந்து விட்டான். அம்புலன்சில் பரா மெடிக்ஸ் வரும் முன்னரே அவன் உயிர் அவனை விட்டு பிரிந்து விட்டது.

DM.jpg

அவனது 6 வயது மகன் மூன்றே மூன்று வாரங்களுக்குள் தன் தாயையும் தந்தையையும் இழந்து தவித்து நிற்கின்றான்.

சின்னஞ் சிறு வயதில் இருவரையும் மூன்று கிழமை இடவெளியில் இழப்பது என்பது ஒரு ஆறு வயது குழந்தைக்கு எத்தனை பெரிய இழப்பு.

கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்த அம்மாவும் இல்லை. அரவணைத்து தோள் தந்த அப்பாவும் இனி இல்லை.

காலம் அவன் மீது கவிழ்ந்து  கிடக்கின்றது.

நேற்றில் இருந்து இந்த கணம் வரை நெஞ்சை கூராக பிளந்த வேதனையுடன் நாம் நேரத்தை கடத்திக் கொண்டு இருக்கின்றோம். இந்த வேளையில் எம்மால் செய்ய கூடிய ஒரு பிரயோசனமான விடயம், அச் சிறுவனுக்காக ஒரு சிறு தொகையை திரட்டுவது மட்டுமே. அவ்வாறு திரட்டி அவனது உட்னடி எதிர்காலத்துக்கு உதவும் வண்ணம் அதை பயன்படுத்த கூடியவாறு செய்வதே.

அம்மா அப்பாவை அவனிடத்தில் இருந்து பிரித்து அவனை காலம் எம்மிடம் ஒப்படைத்து இருக்கு. வாரி அணைத்து ஆதரவு கொடுக்க நாம் தயராகின்றோம்.

 

உதவி செய்ய விரும்புகின்றவர்களுக்கு...:

https://www.gofundme.com/fundraisng-for-sheashan-dharmaendr

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி நிழலி. என் நண்பனின் முகம் கண் முன் வந்து வந்து போகிறது.  மனசை மாற்றி எதாவது செய்தலும் அவனது நினைவுகளும், அவனது சிறு பாலகனின் ஏக்கம், ஏமாற்றம், எப்பிடி தாங்குவானோ என்ற என் ஏக்கமும் மனசை பிளிகிறது.  தாயை இழந்த போதே அந்த பிள்ளை எ‌வ்வளவு அங்கலாய்ப்புடன் இருந்தான் என்பதை நேரில் பார்த்தேன். ???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமையான செய்தி. 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயதில் அதுவும் இத்தனை சிறிய இடைவெளியில் இச் சிறுவனுக்கு இப்படியோர் இழப்பு நிகழ்ந்திருக்கக் கூடாது. மிகவும் துயரமான நிகழ்வு. இப் பாலகனுக்கு அன்பையும் அரவணைப்பையும் கொடுக்கக் கூடிய உறவுகள் யாரும் இங்கில்லையா?  அணைத்து ஆதரவு கொடுத்து அச் சிறுவனை இத் துயரிலிருந்து வெளியே கொண்டு வருவது அவசியம்..உங்கள் நண்பனின் ஆன்மசாந்திக்காகவும் இப் பாலகனின் மன அமைதிக்காகவும் இறைவனைப் பிராத்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கவே மனதுக்கு மிகவும் கடினமாக உள்ளது!

சில நிகழ்வுகள் ஏன் தான் நிகழ்கின்றனவோ....என்ற கேள்வி தான் மனதில் மிச்சமாக மிஞ்சியிருக்கின்றது!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் புரியாத  சிறு வயதிலேயே.... பெற்றோரை இழந்து இருப்பது மிகவும் பரிதாபகரமானது.
ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையான செய்தி. பெற்றோரை குறுகிய இடைவெளியில் மிகவும் சிறிய வயதில் இழப்பது கொடுமையானது. இப் பிஞ்சுப் பாலகனை துயரத்தில் இருந்து மீட்க உறவினர்களும் நண்பர்களும்தான் தம்மால் இயன்றதைச் செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

1 மாதத்திற்குள் பெற்றோர் இருவரையும் இழப்பது என்னது ....நினைத்து பார்க்க முடியவில்லை :(
 உறவினர்கள் அந்த பிஞ்சு குழந்தைக்கு முடிந்தளவு அன்பையும் அரவணைப்பை கொடுத்து வளர்ப்பார்க்கள் என்று  நம்புகின்றோம்.

இவ்வுலகை விட்டு இளம் வயதிலேயே பிரிந்து போன இருவரது உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்! :(

Link to comment
Share on other sites

எத்தனையோ சாவுகளை கண்டும், கடந்தும் வந்துள்ளேன். அப்பாவில் இருந்து, அப்பு, மாமா,மாமி, நண்பர்கள், தோழிகள் என்று. ஆனால் இவ் நண்பனின் மரணம் மட்டும் மிகவும் வலிக்கின்றது. இந்த வலி அவனது மகனை ஒட்டி வருகின்றது என நினைக்கின்றேன்.


24 மணித்தியாலங்களுக்குள் எமக்கு கிடைக்கும் பேராதரவை காண வியப்பாகவும் மகிழ்வாகவும் இருக்கின்றது. எம் சமூக மக்கள் மட்டுமல்ல பெயர் ஊர் இனம் மொழி என்று எந்த பாகுபாடும் இல்லாமல் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் உதவிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இதுவரைக்கும் 48,000 டொலர்ஸ் வரை சேர்த்துள்ளோம். ஒரு இலட்சம் சேர்க்க வேண்டும் என்பது தான் எம் இலக்கு. சேர்த்த பின் ஒரு trusty அமைத்து அவன் மகனிற்கு படிப்படியாக உதவ திட்டமிட்டுள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.....!

என்ன சொல்வதென்று தெரியவில்லை....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமையான செய்தி. 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடிதிலும் கொடிது

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.யாருக்கும் இப்படி நிகழக்கூடாது என இறைவனை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஆறுவயது சிறுவனை எண்ணிக் கவலையாக உள்ளது . உறவினர் அன்பும் ஆதரவும் கொடுத்து  வளர்ப்பார்களென எண்ணுகிறேன். ஆழ்ந்த இரங்கல்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாதுகாவலர்கள் அந்த சிறுவனுக்கு கிடைக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களது ஆத்மா சாந்தியடையட்டும்...கணவர்,மனைவி மேல் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார் ...அச் சிறுவன் இத் துயரில் இருந்து சீக்கிரம் மீண்டு வர வேண்டும்....ஒரு சின்ன ஆறுதல் இந்த சிறுவன் புலத்தில் இருக்கிறான்...எத்தனையோ குழந்தைகள் போரில் கண் முன்னே பெற்றோரை இழந்து அனாதரவாய் நிற்கிறார்கள் 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வேதனையாகவுள்ளது. வாழ்க்கையில் ஏன் சில விடயங்கள் இப்படி ந‌டக்கின்றது?  நல்லதொரு வாழக்கையை சிறுவனுக்கு இறைவன் அமைத்துக்கொடுப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்
இவரைப்பற்றி  ஒரு செய்தி வாசித்தபோது மிகவும் கவலையாக இருந்தது
மிகவும் சிறந்த ஒரு பன்முக விளையாட்டுவீரன்.
கனடாவில் பல தமிழ் விளையாட்டுக்கழங்களின் வளர்ச்சியில் இவரது பங்கு மிகவும் அளப்பரியதாக இருந்திருக்கின்றது.
இவரது குழந்தைக்கான எதிர்காலம் கடவுளின் கிருபையால் சிறப்பாக அமைய வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமையான செய்தி. 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.