Jump to content

யாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா


Recommended Posts

யாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா

 
 
20180221_174806.jpg

"செய் அல்லது செத்து மடி." யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில்

 பகுதியிலுள்ள வி.எஸ்.பி பண்ணை அலுவலக கதவில் தொங்கும் வாசகம் இது.  இவ்வலுவலகம் வெற்றிகரமான தொழில் முனைவோராக இப்பண்ணையினை(VSP Farm) நடாத்தி வரும் பரமசிவம் பாலமுருகனுக்கு சொந்தமானது. விவசாயம், பண்ணை விலங்கு வளர்ப்பு, சந்தைப்படுத்தல் என்பவற்றை கடந்த எட்டு வருடங்களாக சிறந்த முறையில் இவர் செய்து வருகிறார். முக்கியமாக கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு ஆகியவற்றோடு முருங்கை, வாழை மற்றும் விவசாய பயிர்களையும் வெற்றிகரமாக இயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார்.

பாலமுருகன் பலருக்கு தொழில் வாய்ப்பையும் வழங்கியுள்ளார். இந்த சமூகத்துக்கு தான் கற்றுக் கொண்ட விடயங்களை கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். தன்னைப் போல பல முயற்சியாளர்களையும் உருவாக்கி விடுவதிலும் அக்கறையுடன் இருக்கிறார். பாடசாலையில் உயர்தரப் படிப்பை முடித்துவிட்டு எலக்ரோனிக் எஞ்சினியரிங் படித்துள்ள இவர் இயந்திரங்களை வடிவமைக்கும் திறனையும் பெற்றிருக்கிறார்.
 
IMG-16be161203e1bbb58e04b6c9e59db523-V.jpg

இவரது பண்ணை அலுவலக கதவில் தொங்குகின்ற அந்த வாசகத்துக்கு ஏற்ப செயலிலும், சொல்லிலும் வேகமும் விவேகமும் தெரிகிறது. எந்த விடயத்தை எடுத்தாலும் அதனை திறம்பட அர்ப்பணிப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவர் பாலமுருகன் என இவரது பணியாளர்களே புகழாரம் சூட்டுகின்றனர். நஞ்சில்லா உணவை நோக்கிய பயணத்தை தான் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் மூலம் தொடங்கியிருப்பதாக கூறுகிறார் பாலா. அந்த இலக்கை அடைவதற்காக உறுதியூடன் பயணித்தும் வருகின்றார்.
 

முழுக்க முழுக்க அவரது சொந்தப் பணத்தில் முறையான அனுமதிகளை எல்லாம் பெற்று தொடங்கப்பட்ட பண்ணைக்கு இன்று நெருக்கடியாக வடக்கு மாகாண சுகாதாரப் பிரிவினர் உள்ளனர் என்பது தான் வேதனையான செய்தி.    இயற்கை வழி விவசாயத்துக்கு சில பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) தடைக்கல்லாக இருப்பதாக பாலா முறையிடுகிறார். சில பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் “உற்பத்திகளை முடக்க வந்த அரசின் கூலிப்படைகள்" என கடுமையான விமர்சனத்தினையும் முன்வைக்கிறார்.
 
IMG-0a9e0a93f0dbd8cc2118d6324faf4856-V%2B%25281%2529.jpg

பறவை, மிருகக் கழிவுகளை தோட்டத்தில் கொட்டி செய்யப்படும் இயற்கை முறையிலான விவாசாயத்தை சில பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குப்பை விவசாயம் என கேலி செய்வதாகவும், குறித்த விவசாய செய்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுவதாகவும் இவர்களின் இத்தகைய செயலால் பல விவசாயிகள் விவசாயத்தை விட்டே செல்லும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார். தான் இவர்களின் அநீதியை எதிர்த்து போராடி வருவதாகவும் குறிப்பிடுகிறார்.

பப்பாசி செய்கையை வெற்றிகரமாக இயற்கை விவசாயம் மூலம் செய்து சாதித்திருக்கிறார் பாலா. பன்றிக்கழிவுகளை மட்டும் இட்டு ஒரு மரத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பப்பாசிக் காய்களைப் பறித்திருக்கிறார்.அதே போல் பன்றிக்கழிவுகளை மாத்திரம் இட்டு நட்ட நாட்டு மிளகாய் நல்ல விளைச்சலை கொடுத்திருக்கின்றது. அதனை விவசாய திணைக்கள அதிகாரிகளே பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.

IMG-3d3d447acfee5137be5fce0604a0284b-V.jpg

கோழிப்பண்ணையையும் சிறந்த முறையில் நிர்வகித்து வருகிறார். வடமாகாணத்தின் சிறந்த கோழிப்பண்ணையாளர் விருதும் வடமாகாண சபை ஊடாக இவருக்கு கிடைத்துள்ளது.

விவசாய ஆராய்ச்சிகளுக்கு என்றே வருடா வருடம் குறிப்பிட்ட தொகையை செலவழித்து வருகிறார். அதில் பல நல்ல முடிவுகளையும் பெற்றிருக்கிறார். அடுத்து வரும் வருடங்களில் பல பரீட்சார்த்த திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக கூறுகிறார்.
 
இதையெல்லாம் தாண்டி மாடு, ஆட்டுக்கு தேவையான தானியக் கலவை தீவனத்தை இயற்கை முறையில் பரீட்ச்சார்த்த முறையில் உற்பத்தி செய்து வருகிறார். அதற்கான இயந்திரங்களையும் இவரே வடிவமைத்துள்ளார். கால்நடை வளர்ப்பாளர்கள் இவரது மாட்டுத்தீவனத்தினை விரும்பி வாங்கி கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து வருகின்றனர். சோளம், கடலைக் கோதுகள், எள்ளுப் பிண்ணாக்கு உள்ளிட்ட பல தானியங்களை குறித்த தீவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.   ஒரு மணித்தியாலத்துக்கு 500 இலிருந்து 700 கிலோ தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும்.

 8 பரப்பு நிலத்தில் தூறல் நீர்ப்பாசன கட்டமைப்பை ஏற்படுத்தி co-3 வகை புல்லை வளர்த்து அதில் பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டேன். மாடு வளர்ப்பதற்கு முதல் புல்லு வளர்க்க வேண்டும். என்னால் ஒரு கிலோ புல்லை 2 ரூபாவுக்கு உற்பத்தி பண்ண முடியும். அதனை 10 ஏக்கரில் மேற்கொண்டால் குறைந்தது 100 மாடுகளை வளர்க்க முடியும் .

மண்ணெண்ணையில் நீர் இறைக்கும் இயந்திரம் இயங்குவதற்கு அண்ணளவாக மணித்தியாலத்துக்கு 100 ரூபாய்கள் செலவாகிறது. இதையே மின்சாரத்தில் இயங்கும் மோட்டார்  மூலம் செய்தால் 20 ரூபாவிற்குள் தான் செலவாகும். இங்கு பெரிதாக எந்த விவசாயியும் மின்சார மோட்டரைப் பாவிப்பதில்லை. விவசாயிகள் ஆராய்ச்சியில் இறங்கவேண்டிய நேரம் இது.

சுகாதாரப் பரிசோதகர்களுக்கு எது நல்லது? எது கூடாது? எது மக்களுக்கு அவசியமானது என்கிற விடயங்கள் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இயற்கை விவசாயம் என்றால் மாட்டெரு இருக்கும், கோழி எரு இருக்கும், இலைதழைகள் இருக்கும். இவை எல்லாம் இருக்கும் எருவை மண்ணில் பரவி விட்டால் சூரிய ஒளிபட்டு மண்புழுக்கள் உருவாகி மண்ணை மிருதுவாக்கும். ஆனால் இந்த அதிகாரிகளோ குப்பைகளை வெளியில் போடாமல் மூடி விடச் சொல்கிறார்கள். அவர்களுக்கு முதலில் இயற்கை விவசாய முறைமையை சரியாக விளங்கப்படுத்த வேண்டிய தேவை சம்பந்தப்பட்ட துறைக்கு இருக்கிறது.
 
IMG-d5e39fdfc5c543464d838144ab3d8909-V.jpg

நுளம்பை உண்ணும் பூச்சியினங்கள் அழிக்கப்பட்டமையும் தான் நுளம்புப்பெருக்கம் அதிகரித்தமைக்கு ஒரு காரணம். அதீத இரசாயனப் பாவனைகளால் தும்பி போன்ற பூச்சியினங்கள் அழிந்து போயுள்ளன.     குளமும், குட்டையும் இருந்தால் அதற்குள் கப்பீஸ் ரக மீனை விட்டாலே போதும் அங்கு நுளம்புக் குடம்பிகளே உருவாகாது.   நான் அதனை நடைமுறை அனுபவத்தில் கண்டுள்ளேன். இங்கு பண்ணையில் ஒரு சிறிய குட்டையை உருவாக்கி அதில் பெரிய மீன்கள் வளர்த்தேன். அப்போது நுளம்புப் பெருக்கம் குறைவாக இருந்தது. எப்போது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கட்டளையிட்ட படி அதனை மூடினேனோ அன்றிலிருந்து நுளம்புப் பெருக்கம் அதிகரித்து விட்டது.

நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு விவாசாயிகளின் கைகளில் தான் உள்ளது.   விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதனை அதிகாரிகளும் ஊக்குவிக்க வேண்டும். விவசாயி ஒருவர் பொருளை தான் நினைத்த மாதிரி சந்தைப்படுத்த  முடியாது. அதற்கு பிரதேச சபைகள்> நகர சபைகள் தடையாக உள்ளன. விவசாயிகள் சில அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக குரலை உயர்த்தாவிட்டால் விவசாயம் எங்கள் பிரதேசத்தில் நிலைத்து நிற்காது.  இவ்வாறாக கூறி முடித்தார் பாலா.
 
IMG-e794ac48fb9c8dc9b4f43a98f223c678-V.jpg

இவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குள் குறித்து தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமார் அவர்களிடம் வினாவினோம். ஒரு சில சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுக்கு  இயற்கை விவசாயம், அசோலா வளர்ப்பு முறைகள் தொடர்பில் சரியான விளக்கங்களும் இல்லாமல் இருக்கலாம். இப்படியானவர்களுக்கு சரியான தெளிவூட்டல்களை செய்யும் கருத்தமர்வுகளை எதிர்காலத்தில் நிச்சயமாக சுகாதாரத் திணைக்களம் செய்யும். தோட்டங்களில் இயற்கை கழிவுகளை கொட்டிச் செய்யும் விவசாயத்துக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. சீமெந்து தொட்டி கட்டி அதற்குள் இயற்கை (கோழி, பன்றி) கழிவுகளை விட வேண்டும்  என்கிற நிபந்தனையும் கிடையாது.

இதையும் தவிர சுகாதாரப் பிரிவினர் குடிசைக் கைத்தொழில்களையும் நசுக்குகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இதனை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம். குடிசைக் கைத்தொழில்கள் இடம்பெறும் வீடுகளில் நிலத்தில் மாபிள் பதிக்க வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் இல்லை. உணவுகளை சுகாதாரமான முறையில் தயாரித்தால் போதுமானது. எங்களுடைய உள்ளூர் உற்பத்திகளை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

எமது சுயபொருளாதாரத்தை வளப்படுத்தும் முதுகெலும்புகளான இப்படியான இளைஞர்களை தட்டிக் கொடுத்து முன்னேற்ற வேண்டியது எம் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். இல்லாவிடின் நாளை அனைத்துக்கும் இன்னொருவரிடம் கையேந்தும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படுவதனை தவிர்க்க முடியாது.

                                    தொடர்புக்கு: பாலமுருகன் - 0777 048 972

http://www.nimirvu.org/2018/04/blog-post_30.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலாவுக்கு வாழ்த்துக்கள்.

இப்போதுள்ள அதிகாரிகள் காப்பரேட் நிறுவனங்களின் மூளைச்சலவையிலேயே செயற்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழத்துக்கள் பால முருகன்.அதிகாரிகள் முன்னேற அதி துரம் இருக்கிறுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலாவுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

On 6/1/2018 at 9:16 PM, நவீனன் said:

யாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா

 
 
20180221_174806.jpg

"செய் அல்லது செத்து மடி." யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில்

 

 பகுதியிலுள்ள வி.எஸ்.பி பண்ணை அலுவலக கதவில் தொங்கும் வாசகம் இது.  இவ்வலுவலகம் வெற்றிகரமான தொழில் முனைவோராக இப்பண்ணையினை(VSP Farm) நடாத்தி வரும் பரமசிவம் பாலமுருகனுக்கு சொந்தமானது. விவசாயம், பண்ணை விலங்கு வளர்ப்பு, சந்தைப்படுத்தல் என்பவற்றை கடந்த எட்டு வருடங்களாக சிறந்த முறையில் இவர் செய்து வருகிறார். முக்கியமாக கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு ஆகியவற்றோடு முருங்கை, வாழை மற்றும் விவசாய பயிர்களையும் வெற்றிகரமாக இயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார்.

பாலமுருகன் பலருக்கு தொழில் வாய்ப்பையும் வழங்கியுள்ளார். இந்த சமூகத்துக்கு தான் கற்றுக் கொண்ட விடயங்களை கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். தன்னைப் போல பல முயற்சியாளர்களையும் உருவாக்கி விடுவதிலும் அக்கறையுடன் இருக்கிறார். பாடசாலையில் உயர்தரப் படிப்பை முடித்துவிட்டு எலக்ரோனிக் எஞ்சினியரிங் படித்துள்ள இவர் இயந்திரங்களை வடிவமைக்கும் திறனையும் பெற்றிருக்கிறார்.
 
IMG-16be161203e1bbb58e04b6c9e59db523-V.jpg

இவரது பண்ணை அலுவலக கதவில் தொங்குகின்ற அந்த வாசகத்துக்கு ஏற்ப செயலிலும், சொல்லிலும் வேகமும் விவேகமும் தெரிகிறது. எந்த விடயத்தை எடுத்தாலும் அதனை திறம்பட அர்ப்பணிப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவர் பாலமுருகன் என இவரது பணியாளர்களே புகழாரம் சூட்டுகின்றனர். நஞ்சில்லா உணவை நோக்கிய பயணத்தை தான் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் மூலம் தொடங்கியிருப்பதாக கூறுகிறார் பாலா. அந்த இலக்கை அடைவதற்காக உறுதியூடன் பயணித்தும் வருகின்றார்.
 

முழுக்க முழுக்க அவரது சொந்தப் பணத்தில் முறையான அனுமதிகளை எல்லாம் பெற்று தொடங்கப்பட்ட பண்ணைக்கு இன்று நெருக்கடியாக வடக்கு மாகாண சுகாதாரப் பிரிவினர் உள்ளனர் என்பது தான் வேதனையான செய்தி.    இயற்கை வழி விவசாயத்துக்கு சில பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) தடைக்கல்லாக இருப்பதாக பாலா முறையிடுகிறார். சில பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் “உற்பத்திகளை முடக்க வந்த அரசின் கூலிப்படைகள்" என கடுமையான விமர்சனத்தினையும் முன்வைக்கிறார்.
 
IMG-0a9e0a93f0dbd8cc2118d6324faf4856-V%2B%25281%2529.jpg

பறவை, மிருகக் கழிவுகளை தோட்டத்தில் கொட்டி செய்யப்படும் இயற்கை முறையிலான விவாசாயத்தை சில பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குப்பை விவசாயம் என கேலி செய்வதாகவும், குறித்த விவசாய செய்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுவதாகவும் இவர்களின் இத்தகைய செயலால் பல விவசாயிகள் விவசாயத்தை விட்டே செல்லும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார். தான் இவர்களின் அநீதியை எதிர்த்து போராடி வருவதாகவும் குறிப்பிடுகிறார்.

பப்பாசி செய்கையை வெற்றிகரமாக இயற்கை விவசாயம் மூலம் செய்து சாதித்திருக்கிறார் பாலா. பன்றிக்கழிவுகளை மட்டும் இட்டு ஒரு மரத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பப்பாசிக் காய்களைப் பறித்திருக்கிறார்.அதே போல் பன்றிக்கழிவுகளை மாத்திரம் இட்டு நட்ட நாட்டு மிளகாய் நல்ல விளைச்சலை கொடுத்திருக்கின்றது. அதனை விவசாய திணைக்கள அதிகாரிகளே பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.

 

IMG-3d3d447acfee5137be5fce0604a0284b-V.jpg

கோழிப்பண்ணையையும் சிறந்த முறையில் நிர்வகித்து வருகிறார். வடமாகாணத்தின் சிறந்த கோழிப்பண்ணையாளர் விருதும் வடமாகாண சபை ஊடாக இவருக்கு கிடைத்துள்ளது.

விவசாய ஆராய்ச்சிகளுக்கு என்றே வருடா வருடம் குறிப்பிட்ட தொகையை செலவழித்து வருகிறார். அதில் பல நல்ல முடிவுகளையும் பெற்றிருக்கிறார். அடுத்து வரும் வருடங்களில் பல பரீட்சார்த்த திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக கூறுகிறார்.
 
இதையெல்லாம் தாண்டி மாடு, ஆட்டுக்கு தேவையான தானியக் கலவை தீவனத்தை இயற்கை முறையில் பரீட்ச்சார்த்த முறையில் உற்பத்தி செய்து வருகிறார். அதற்கான இயந்திரங்களையும் இவரே வடிவமைத்துள்ளார். கால்நடை வளர்ப்பாளர்கள் இவரது மாட்டுத்தீவனத்தினை விரும்பி வாங்கி கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து வருகின்றனர். சோளம், கடலைக் கோதுகள், எள்ளுப் பிண்ணாக்கு உள்ளிட்ட பல தானியங்களை குறித்த தீவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.   ஒரு மணித்தியாலத்துக்கு 500 இலிருந்து 700 கிலோ தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும்.

 8 பரப்பு நிலத்தில் தூறல் நீர்ப்பாசன கட்டமைப்பை ஏற்படுத்தி co-3 வகை புல்லை வளர்த்து அதில் பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டேன். மாடு வளர்ப்பதற்கு முதல் புல்லு வளர்க்க வேண்டும். என்னால் ஒரு கிலோ புல்லை 2 ரூபாவுக்கு உற்பத்தி பண்ண முடியும். அதனை 10 ஏக்கரில் மேற்கொண்டால் குறைந்தது 100 மாடுகளை வளர்க்க முடியும் .

மண்ணெண்ணையில் நீர் இறைக்கும் இயந்திரம் இயங்குவதற்கு அண்ணளவாக மணித்தியாலத்துக்கு 100 ரூபாய்கள் செலவாகிறது. இதையே மின்சாரத்தில் இயங்கும் மோட்டார்  மூலம் செய்தால் 20 ரூபாவிற்குள் தான் செலவாகும். இங்கு பெரிதாக எந்த விவசாயியும் மின்சார மோட்டரைப் பாவிப்பதில்லை. விவசாயிகள் ஆராய்ச்சியில் இறங்கவேண்டிய நேரம் இது.

சுகாதாரப் பரிசோதகர்களுக்கு எது நல்லது? எது கூடாது? எது மக்களுக்கு அவசியமானது என்கிற விடயங்கள் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இயற்கை விவசாயம் என்றால் மாட்டெரு இருக்கும், கோழி எரு இருக்கும், இலைதழைகள் இருக்கும். இவை எல்லாம் இருக்கும் எருவை மண்ணில் பரவி விட்டால் சூரிய ஒளிபட்டு மண்புழுக்கள் உருவாகி மண்ணை மிருதுவாக்கும். ஆனால் இந்த அதிகாரிகளோ குப்பைகளை வெளியில் போடாமல் மூடி விடச் சொல்கிறார்கள். அவர்களுக்கு முதலில் இயற்கை விவசாய முறைமையை சரியாக விளங்கப்படுத்த வேண்டிய தேவை சம்பந்தப்பட்ட துறைக்கு இருக்கிறது.
 
IMG-d5e39fdfc5c543464d838144ab3d8909-V.jpg

நுளம்பை உண்ணும் பூச்சியினங்கள் அழிக்கப்பட்டமையும் தான் நுளம்புப்பெருக்கம் அதிகரித்தமைக்கு ஒரு காரணம். அதீத இரசாயனப் பாவனைகளால் தும்பி போன்ற பூச்சியினங்கள் அழிந்து போயுள்ளன.     குளமும், குட்டையும் இருந்தால் அதற்குள் கப்பீஸ் ரக மீனை விட்டாலே போதும் அங்கு நுளம்புக் குடம்பிகளே உருவாகாது.   நான் அதனை நடைமுறை அனுபவத்தில் கண்டுள்ளேன். இங்கு பண்ணையில் ஒரு சிறிய குட்டையை உருவாக்கி அதில் பெரிய மீன்கள் வளர்த்தேன். அப்போது நுளம்புப் பெருக்கம் குறைவாக இருந்தது. எப்போது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கட்டளையிட்ட படி அதனை மூடினேனோ அன்றிலிருந்து நுளம்புப் பெருக்கம் அதிகரித்து விட்டது.

நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு விவாசாயிகளின் கைகளில் தான் உள்ளது.   விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதனை அதிகாரிகளும் ஊக்குவிக்க வேண்டும். விவசாயி ஒருவர் பொருளை தான் நினைத்த மாதிரி சந்தைப்படுத்த  முடியாது. அதற்கு பிரதேச சபைகள்> நகர சபைகள் தடையாக உள்ளன. விவசாயிகள் சில அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக குரலை உயர்த்தாவிட்டால் விவசாயம் எங்கள் பிரதேசத்தில் நிலைத்து நிற்காது.  இவ்வாறாக கூறி முடித்தார் பாலா.
 
IMG-e794ac48fb9c8dc9b4f43a98f223c678-V.jpg

இவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குள் குறித்து தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமார் அவர்களிடம் வினாவினோம். ஒரு சில சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுக்கு  இயற்கை விவசாயம், அசோலா வளர்ப்பு முறைகள் தொடர்பில் சரியான விளக்கங்களும் இல்லாமல் இருக்கலாம். இப்படியானவர்களுக்கு சரியான தெளிவூட்டல்களை செய்யும் கருத்தமர்வுகளை எதிர்காலத்தில் நிச்சயமாக சுகாதாரத் திணைக்களம் செய்யும். தோட்டங்களில் இயற்கை கழிவுகளை கொட்டிச் செய்யும் விவசாயத்துக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. சீமெந்து தொட்டி கட்டி அதற்குள் இயற்கை (கோழி, பன்றி) கழிவுகளை விட வேண்டும்  என்கிற நிபந்தனையும் கிடையாது.

இதையும் தவிர சுகாதாரப் பிரிவினர் குடிசைக் கைத்தொழில்களையும் நசுக்குகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இதனை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம். குடிசைக் கைத்தொழில்கள் இடம்பெறும் வீடுகளில் நிலத்தில் மாபிள் பதிக்க வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் இல்லை. உணவுகளை சுகாதாரமான முறையில் தயாரித்தால் போதுமானது. எங்களுடைய உள்ளூர் உற்பத்திகளை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

எமது சுயபொருளாதாரத்தை வளப்படுத்தும் முதுகெலும்புகளான இப்படியான இளைஞர்களை தட்டிக் கொடுத்து முன்னேற்ற வேண்டியது எம் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். இல்லாவிடின் நாளை அனைத்துக்கும் இன்னொருவரிடம் கையேந்தும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படுவதனை தவிர்க்க முடியாது.

                                    தொடர்புக்கு: பாலமுருகன் - 0777 048 972

http://www.nimirvu.org/2018/04/blog-post_30.html

இந்த இளைஞனை பாராட்டுவதோடு இவரின் இந்தத செயற்பாடுகளை எல்லா இளையோருக்கும் தெரியப்படுத்த வேண்டும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.