Jump to content

`போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது!’ - கமல் பளீச்


Recommended Posts

`போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது!’ - கமல் பளீச்

 

கர்நாடக முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளைச் சந்திக்கவுள்ளார்.

கமல்ஹாசன்

 

நீண்ட அரசியல் குழப்பங்களுக்கு பிறகு கடந்த 23ம் தேதி கர்நாடக முதல்வராகக் குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதும் கர்நாடக சட்டப்பேரவையில் 117 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தார். பின்னர் முதல் சர்ச்சையாக மக்களின் ஆசீர்வாதத்தால் நான் முதலமைச்சராகவில்லை. ராகுல்காந்தியின் ஆசீர்வாதத்தால்தான் முதல்வரானேன் என்று பேசி அதிரவைத்தார். இருப்பினும், விவசாயிகளுக்கான கடன் 15 நாட்களில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து அரசுப் பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார். 

இதற்கிடையே, ``காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதை நினைத்து கர்நாடக விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் பேசியிருப்பது தமிழகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட உத்தரவு அரசிதழில் வெளியானது. இதனால் தமிழக மக்கள் சற்று நிம்மதியடைந்திருந்த நிலையில், சித்தராமையாவை போலக் குமாரசாமியும் பேசியுள்ளது தமிழக மக்கள் மத்தியில் காவிரி விவகாரத்தில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை நாளை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது இருமாநில உறவு, காவிரி குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக குமாரசாமி பதவியேற்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்று வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

சந்திப்புக்காகப் பெங்களூரு செல்லும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``மக்கள் பிரநிதியாக நமக்கு என்ன தேவை என்பதை கேட்கவே பெங்களூரு செல்கிறேன். மக்களின் கருத்துகளையே பிரதிபலிக்கிறேன், நானாக எந்தக் கருத்தையும் கூறுவதில்லை. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தி.மு.க மீண்டும் பங்கேற்கத் தீர்மானித்துள்ளது வரவேற்கத்தக்க முடிவு. தி.மு.கத் தலைவர் கருணாநிதிக்கு பலமுறை பிறந்தநாள் முடிந்தும் வாழ்த்து கூறியுள்ளேன். இம்முறையும் அப்படியே கூறுவேன்.

 

காவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்பதுதான் எனது கருத்து. அதை நோக்கித்தான் எனது பயணம் இருக்கும். காலா படம் கர்நாடகாவில் திரையிடுவது குறித்து இரு மாநில திரைப்பட சங்கங்கள் பார்த்துக்கொள்ளும். என்னைப் பொறுத்தவரை தூத்துக்குடியில் பலியானவர்கள் யாரும் சமூக விரோதிகள் கிடையாது. அவர்களை சமூக விரோதிகள் என்று கூறினால், நானும் சமூக விரோதிதான். ரஜினிகாந்த் கூறியது அவர் கருத்து. போராடுவதில் ஒரு தன்மை இருக்க வேண்டும். போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது. ஸ்டெர்லைட் ஆலை எல்லையைக் கடந்து, தனது பேராசையினால் பல தவறுகள் செய்துள்ளது" என்றார். 

https://www.vikatan.com/news/tamilnadu/126695-kamalhassan-will-meet-kumarasamy-on-tomorrow.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.