Jump to content

நீட் தேர்வில் தோல்வி- விழுப்புரம் மாணவி தற்கொலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நீட் தேர்வில் தோல்வி- விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை.

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா எலி மருந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழக மாணவர்கள் 60 பேர் தேர்ச்சி பெற முடியவில்லை.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து எலி மருந்தை குடித்தார்.

10-ம் வகுப்பில் 495 மதிப்பெண்களும் 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்களும் பெற்றவர் பிரதீபா. விஷம் குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரதீபா மரணமடைந்தார்.

நீட் தேர்வு தோல்வியால் மாணவி அனிதா கடந்த தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு நீட் தேர்வு தொலைதூர இடங்களில் போடப்பட்டதால் 3 மாணவர்களின் பெற்றோர்கள் உயிரிழந்தனர். தற்போது பிரதீபா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வு தமிழகத்தில் உயிர்களை காவு கொள்வது தொடரும் நிகழ்வாகிவிட்டது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/neet-exam-17-year-old-tn-student-commits-suicide-321606.html

 

####################################################################################################################

 

NEET Fail: Villupuram student attempts to commit suicide

நீட் தோல்வி: விழுப்புரம் அருகே மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி.

நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த 40% மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்றனர். அதனால் சுமார் 1 லட்சம் மாணவர்களின் மருத்துவ படிப்பு பாழானது.

தங்களது மருத்து படிப்பு கனவு பாழான நிலையில் மாணவ, மாணவிகள் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. விழுப்புரத்தில் பிரதீபா, டெல்லியில் பிரணவ் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலையில் இன்று விழுப்புரம் செஞ்சி அருகே மேல்சேவூரைச் சேர்ந்த கீர்த்திகா என்ற மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/neet-fail-villupuram-student-attempts-commit-suicide-321608.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வுகள் எது சம்மந்தமானவை?... மருத்துவம்,பொது அறிவு  அல்லது ஆங்கிலம் 

 

Link to comment
Share on other sites

5 hours ago, ரதி said:

நீட் தேர்வுகள் எது சம்மந்தமானவை?... மருத்துவம்,பொது அறிவு  அல்லது ஆங்கிலம் 

 

இந்தியாவில் இரண்டு வகை பள்ளிக்கூட பாடத் திட்டங்கள் உண்டு.

1) மாநில பாட திட்டங்கள்
2) மத்திய (அரசு) பாடத்திட்டங்கள்

தமிழ்நாட்டில் பலர் மாநிலப் பாடத்திட்டங்களில் படிக்கின்றார்கள். நானும் அதில்தான் படித்தேன். இரண்டு பாடத்திட்டங்களில் கற்பிக்கப்படும் சிலபஸ் வேறானவை.

இப்போது மத்திய அரசு நீட் தேர்வுகளை புகுத்தியுள்ளது. அதாவது பிளஸ் 2 பாஸ் செய்தவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும். இந்த நீட் பெறுபேறுகளின் அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்கள் கொடுக்கப்படும். இதில் சிக்கல் என்னவென்றால் இந்த நீட் தேர்வின் கேள்விகள் மத்திய அரசு பாடத்திட்டங்கள் அடிப்படையில் கேட் கப்படும். ஒரு உதாரணத்துக்கு, இலங்கையில் தாவரவியல் படித்த ஒருவரை இந்தியாவில் பரீட்சை எழுத வைப்பது போன்றது இது.

பாடத்திட்டங்கள் இவ்வாறு வெவ்வேறாக இருப்பதால் தனியார் கல்விகூடங்களில் சிறப்பு பயிற்சி பெற்றால் மட்டுமே இதில் ஓரளவு தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த தனியார் பயிற்சிகளுக்கு இலட்சக்கணக்கில் பணம் அறவிடப்படுகிறது. இது பிரதீபா போன்ற ஏழை மாணவிகளுக்கு எட்டாக்கனி. ஆனால் அகில இந்திய அளவில் 12 ஆம் இடத்தைப் பெற்ற கீர்த்தனா எனும் மாணவி (இவர்தான் தமிழகத்தில் முதலிடம் பெற்றவர்) இது முடிந்த காரியம். இவரது தாயும், தந்தையும் மருத்துவர்கள். இரண்டு வருடங்கள் தனியார் பயிற்சிக் கூடத்தில் பயிற்சி பெற்றுள்ளார். பேச்சை பார்க்கும்போது ஒரு பிராமண வகுப்பை சேர்ந்தவர் என்பது தெரிகிறது.

ஆகவே, ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இனிமேலும் மருத்துவக் கனவில் இருப்பது இயலாத காரியம் ஆகிவிட்டது.

அதைவிடவும், தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் (அரசு நடத்துபவை) உள்ளன. இவை தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டவை. பீகார், உபி போன்ற பெரிய மாநிலங்களில்கூட விரல் விட்டு எண்ணும் அளவில்தான் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இப்போது அந்த வெளி மாநில மாணவர்கள் நீட் தேர்வின் மூலம் தமிழக கல்லூரி இடங்களை எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படுத்தப்பட்டு விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் ராஜஸ்தான் பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள மாணவ மாணவியர் எவ்வாறு அதிக எண்ணிக்கையில் தேர்ச்சிபெற முடிகிறது?

எனக்கு  தெரிந்த  ஒரு பணக்கார பெண் இலங்கையில் B 2C  S எடுத்தவ  பிறகு இந்தியா சென்று MBBS முடிச்சு வந்து வேலை செய்யிறா.இப்படி பணக்கார தகுதியற்ற மாணவர்கள் டாக்டர் ஆவதை தடுக்கத்தான் NEET  தேர்வு என்பது என் கணிப்பு??

Link to comment
Share on other sites

2 hours ago, Eppothum Thamizhan said:

அப்படியென்றால் ராஜஸ்தான் பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள மாணவ மாணவியர் எவ்வாறு அதிக எண்ணிக்கையில் தேர்ச்சிபெற முடிகிறது?

எனக்கு  தெரிந்த  ஒரு பணக்கார பெண் இலங்கையில் B 2C  S எடுத்தவ  பிறகு இந்தியா சென்று MBBS முடிச்சு வந்து வேலை செய்யிறா.இப்படி பணக்கார தகுதியற்ற மாணவர்கள் டாக்டர் ஆவதை தடுக்கத்தான் NEET  தேர்வு என்பது என் கணிப்பு??

எனது புரிதல் சரியாக இருக்குமானால் பெரும்பாலான வட மாநிலங்களில் மத்திய அரசு பாடத் திட்டங்களில்தான் படிக்கிறார்கள். தமிழ்நாடு விலக்கு கேட்டது. ஆனால் இந்திய ஒன்றிய அரசும், உச்ச நீதி மன்றமும் மறுத்துவிட்டன. ஆனால் ஆந்திர மாநிலம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுவிட்டன.

தரம் என்று பார்த்தால் கேரளத்துக்கு அடுத்தபடியாக மருத்துவத்துறையில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு. வெளிநாடுகளில் இருந்துகூட சிகிச்சைக்கு வருகிறார்கள். இது இப்படி இருக்கையில், இன்னும் ஆண் மயிலின் கண்ணீரில் பெண்மயில் கர்ப்பம் தரிக்கிறது எனும் எண்ணத்தில் உள்ள வட இந்திய மந்திரிகள் வந்த மாநிலங்கள் தேர்வு பெறுகின்றன என்றால் முறைக்கேடு செய்கிறார்கள் என்பதே எனது கணிப்பு.

சென்ற ஆண்டு தபால்துறைக்கு ஆள் எடுத்தார்கள். இதற்கு தேர்வு எழுத வேண்டும். தமிழ்நாட்டில் வேலை செய்ய தேர்வாகி வந்தவர்கள் யார் என்று பார்த்தால் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். :35_thinking: இவர்கள் "தமிழில்" தேர்வு எழுதி வெற்றி பெற்றார்களாம். ? தமிழகத்தில் தமிழில் எழுதியவர்கள் தோல்வி அடைந்தார்களாம். 

அரியானா தேர்வில் வெற்றி பெறவர்களின் தொலைபேசி எண்ணில் அழைத்துப் பார்த்தபோது, அந்த எண்கள் வேலை செய்யவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, இசைக்கலைஞன் said:

எனது புரிதல் சரியாக இருக்குமானால் பெரும்பாலான வட மாநிலங்களில் மத்திய அரசு பாடத் திட்டங்களில்தான் படிக்கிறார்கள். தமிழ்நாடு விலக்கு கேட்டது. ஆனால் இந்திய ஒன்றிய அரசும், உச்ச நீதி மன்றமும் மறுத்துவிட்டன. ஆனால் ஆந்திர மாநிலம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுவிட்டன.

தரம் என்று பார்த்தால் கேரளத்துக்கு அடுத்தபடியாக மருத்துவத்துறையில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு. வெளிநாடுகளில் இருந்துகூட சிகிச்சைக்கு வருகிறார்கள். இது இப்படி இருக்கையில், இன்னும் ஆண் மயிலின் கண்ணீரில் பெண்மயில் கர்ப்பம் தரிக்கிறது எனும் எண்ணத்தில் உள்ள வட இந்திய மந்திரிகள் வந்த மாநிலங்கள் தேர்வு பெறுகின்றன என்றால் முறைக்கேடு செய்கிறார்கள் என்பதே எனது கணிப்பு.

சென்ற ஆண்டு தபால்துறைக்கு ஆள் எடுத்தார்கள். இதற்கு தேர்வு எழுத வேண்டும். தமிழ்நாட்டில் வேலை செய்ய தேர்வாகி வந்தவர்கள் யார் என்று பார்த்தால் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். :35_thinking: இவர்கள் "தமிழில்" தேர்வு எழுதி வெற்றி பெற்றார்களாம். ? தமிழகத்தில் தமிழில் எழுதியவர்கள் தோல்வி அடைந்தார்களாம். 

அரியானா தேர்வில் வெற்றி பெறவர்களின் தொலைபேசி எண்ணில் அழைத்துப் பார்த்தபோது, அந்த எண்கள் வேலை செய்யவில்லை.

அனியாயம் தெரிந்தே நடக்குது .?மா புளிக்கிறது அப்பத்துக்கு நல்லத என்று சொல்வார்கள்.அப்பம் ஒட்டுப்டாமல் பிரிந்தால் நல்லது.எல்லா ஆண்மாவும் சாந்தி அடையும்.?

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வாறு ஆந்திரா நீட்டினை வெட்டியது? தமிழகம் அதை ஏன் செய்ய முடியவில்லை? 

Link to comment
Share on other sites

22 minutes ago, Nathamuni said:

எவ்வாறு ஆந்திரா நீட்டினை வெட்டியது? தமிழகம் அதை ஏன் செய்ய முடியவில்லை? 

சந்திரபாபு நாயுடுவை ஊழல் வழக்குகளை வைத்து மிரட்ட முடியவில்லை. அவர்கள் இந்திய ஒன்றிய அரசை வளைக்க முடிகிறது. தமிழகத்தின் ஊழல் பேர்வழிகளால் முடியவில்லை.

ஒரு உதாரணத்திற்கு, வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது என்பதை கையில் எடுத்தது ஆந்திரா. சிறப்பு மாநில அந்தஸ்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது. நாங்கள் உங்களுக்கு வரி செலுத்தவில்லை. நீங்களும் மத்திய தொகுப்பில் இருந்து பணம் தர வேண்டாம் என்று வலிமையான வாதங்களை முன்வைக்கிறது. தமிழக எடுபுடிகளால் இது முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை கடைசி 3-வது இடத்துக்கு தள்ளிய நீட் கொடுங்கரம்!

நினைக்க நினைக்க நெஞ்சு பதறுகிறது... உலகம் முழுவதும் தமிழ்நாட்டு கல்வி கூடங்களில் அதுவும் அரசு பள்ளிகளில் படித்து இன்று லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளில் கோலோச்சி வருகின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் படிப்பறிவற்றவர்கள்; அவர்களுக்கு கல்வித் தகுதியே கிடையாது என கூனிக் குறுக வைத்திருக்கிறது நீட் தேர்வு முடிவுகள். தமிழகத்துக்கு 35-வது இடமாம்... அதாவது கடைசியில் இருந்து 3-வது இடமாம்,

Only 40% TN Students clear in NEET Exam

37-ல் நாகாலாந்து; 36-ல் டையூ டாமன்... தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை 1,14,302. ஆனால் தேர்ச்சி பெற்றோர் வெறும் 45336. அதாவது 40% மட்டுமே.

எஞ்சிய 60% மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். கடந்த காலங்களைப் போல பிளஸ் டூ தேர்வில் 1100க்கும் மேல் நல்ல மதிப்பெண் எடுத்து இயல்பாக மருத்துவ படிப்பு கிடைக்க வேண்டிய விழுப்புரம் பிரதீபா போன்றவர்கள் தோல்வியைத் தழுவி இன்று மரணித்துப் போய்விட்டனர்.

Only 40% TN Students clear in NEET Exam

தமிழ்நாட்டு மாநில கல்வி முறையில் பயின்ற கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கும் என தலையால் அடித்து சொல்லியும் அனிதா தன் உயிரையே மாய்த்த போதும் கேளா அரசாக மத்திய அரசு இருந்து வருகிறது. இப்போது விழுப்புரம் பிரதீபா மாண்டு போய் விட்டார்.

விழுப்புரத்து கீர்த்திகா மாண்டு போக முயற்சித்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய அநீதி?

கல்வியில் சிறந்த தமிழகத்தை கட்ட கடைசிக்கு தள்ளி டெல்லி கொடூரமாக சிரிக்கிறது.. இது நம்மை திட்டமிட்டு அவமானப்படுத்துகிற கல்வித் தரப்படுத்துதல் என்பது அல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் நீட் எனும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு!

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/only-40-tn-students-clear-neet-exam-321613.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

எவ்வாறு ஆந்திரா நீட்டினை வெட்டியது? தமிழகம் அதை ஏன் செய்ய முடியவில்லை? 

இம்முறை ஆந்திர தெலுங்கானா இரண்டுமே நீட் தேர்வு நடந்த மாநிலங்களே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎5‎/‎2018 at 3:33 AM, இசைக்கலைஞன் said:

இந்தியாவில் இரண்டு வகை பள்ளிக்கூட பாடத் திட்டங்கள் உண்டு.

1) மாநில பாட திட்டங்கள்
2) மத்திய (அரசு) பாடத்திட்டங்கள்

தமிழ்நாட்டில் பலர் மாநிலப் பாடத்திட்டங்களில் படிக்கின்றார்கள். நானும் அதில்தான் படித்தேன். இரண்டு பாடத்திட்டங்களில் கற்பிக்கப்படும் சிலபஸ் வேறானவை.

இப்போது மத்திய அரசு நீட் தேர்வுகளை புகுத்தியுள்ளது. அதாவது பிளஸ் 2 பாஸ் செய்தவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும். இந்த நீட் பெறுபேறுகளின் அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்கள் கொடுக்கப்படும். இதில் சிக்கல் என்னவென்றால் இந்த நீட் தேர்வின் கேள்விகள் மத்திய அரசு பாடத்திட்டங்கள் அடிப்படையில் கேட் கப்படும். ஒரு உதாரணத்துக்கு, இலங்கையில் தாவரவியல் படித்த ஒருவரை இந்தியாவில் பரீட்சை எழுத வைப்பது போன்றது இது.

பாடத்திட்டங்கள் இவ்வாறு வெவ்வேறாக இருப்பதால் தனியார் கல்விகூடங்களில் சிறப்பு பயிற்சி பெற்றால் மட்டுமே இதில் ஓரளவு தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த தனியார் பயிற்சிகளுக்கு இலட்சக்கணக்கில் பணம் அறவிடப்படுகிறது. இது பிரதீபா போன்ற ஏழை மாணவிகளுக்கு எட்டாக்கனி. ஆனால் அகில இந்திய அளவில் 12 ஆம் இடத்தைப் பெற்ற கீர்த்தனா எனும் மாணவி (இவர்தான் தமிழகத்தில் முதலிடம் பெற்றவர்) இது முடிந்த காரியம். இவரது தாயும், தந்தையும் மருத்துவர்கள். இரண்டு வருடங்கள் தனியார் பயிற்சிக் கூடத்தில் பயிற்சி பெற்றுள்ளார். பேச்சை பார்க்கும்போது ஒரு பிராமண வகுப்பை சேர்ந்தவர் என்பது தெரிகிறது.

ஆகவே, ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இனிமேலும் மருத்துவக் கனவில் இருப்பது இயலாத காரியம் ஆகிவிட்டது.

அதைவிடவும், தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் (அரசு நடத்துபவை) உள்ளன. இவை தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டவை. பீகார், உபி போன்ற பெரிய மாநிலங்களில்கூட விரல் விட்டு எண்ணும் அளவில்தான் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இப்போது அந்த வெளி மாநில மாணவர்கள் நீட் தேர்வின் மூலம் தமிழக கல்லூரி இடங்களை எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படுத்தப்பட்டு விட்டது.

 

இசை பதிலுக்கு நன்றி ... மத்திய அரசின் பாடத் திடடத்திற்கும்,மாநில அரசின் பாட திடட சிலபஸ் வேறானாலும் அது மருத்துவம் சம்மந்தமானவை தானே.....சில நேரம் மாநில அரசின் பாடத் திடடமானது சர்வதேச தரத்துக்கு இல்லாமையால் தான் இந்த திடடத்தை கொண்டு வந்தார்களோ தெரியாது.


எது எப்படி இருந்தாலும் இதற்காக தற்கொலை செய்வது என்பது கோழைத்தனமானது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2018 at 11:17 AM, ரதி said:

நீட் தேர்வுகள் எது சம்மந்தமானவை?... மருத்துவம்,பொது அறிவு  அல்லது ஆங்கிலம் 

 

Physics, Chemistry and Biology, ஆகிய பாடங்களே NEET  தேர்வில் பரீட்சிக்க  படுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

Physics, Chemistry and Biology, ஆகிய பாடங்களே NEET  தேர்வில் பரீட்சிக்க  படுகின்றன.

 

நன்றி...தமிழ்நாடு மருத்துவ துறையில் சிறந்து விளங்குறது....ஆனால் அங்கு வேலை செய்பவர்கள் தமிழ்நாட்டுக்குள் மட்டும் படித்தவர்களா என்பது எனது கேள்வி ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

NEET: Trichy Student commits suicide

நீட் தேர்வில் தோல்வி - திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் எனும் நாசகார தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த செஞ்சி பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் திருச்சி மாணவி சுபஸ்ரீ நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ் டூ தேர்வில் 907 மதிப்பெண்கள் எடுத்திருந்த சுபஸ்ரீ நீட் தேர்வில் தோல்வி அடைந்தார். இது குறித்து திருச்சி நெ.1 டோல்கேட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/neet-trichy-student-commits-suicide-321800.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் சீமானைக் கடாசிவிட்டு இந்தத் திரியில் எழுதியதுமாதிரி உருப்படியாக தொடர்ந்தும் எழுதவேண்டும்?

Link to comment
Share on other sites

8 hours ago, கிருபன் said:

இசைக்கலைஞன் சீமானைக் கடாசிவிட்டு இந்தத் திரியில் எழுதியதுமாதிரி உருப்படியாக தொடர்ந்தும் எழுதவேண்டும்?

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

இசைக்கலைஞன் சீமானைக் கடாசிவிட்டு இந்தத் திரியில் எழுதியதுமாதிரி உருப்படியாக தொடர்ந்தும் எழுதவேண்டும்?

மணியான... கருத்து,  கிருபன்.  ?
இசை.... வருவார்... என்று, நான் நினைக்கவில்லை. ?
ஆனால்.... கட்டாயம்  வரவேண்டும்.  சீமானை பற்ரி, என்னிடம்   நாலு கேள்வி,  பாக்கி இருக்கு...... ?️‍?️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இசைக்கலைஞன் சீமானைக் கடாசிவிட்டு இந்தத் திரியில் எழுதியதுமாதிரி உருப்படியாக தொடர்ந்தும் எழுதவேண்டும்?

 

என்ட மச்சான் குறைந்த பட்சம் நான் எழுதினத்திற்காவது பதில் சொல்லி இருக்கலாம் 
 

Link to comment
Share on other sites

On 6/6/2018 at 11:29 AM, ரதி said:

 

இசை பதிலுக்கு நன்றி ... மத்திய அரசின் பாடத் திடடத்திற்கும்,மாநில அரசின் பாட திடட சிலபஸ் வேறானாலும் அது மருத்துவம் சம்மந்தமானவை தானே.....சில நேரம் மாநில அரசின் பாடத் திடடமானது சர்வதேச தரத்துக்கு இல்லாமையால் தான் இந்த திடடத்தை கொண்டு வந்தார்களோ தெரியாது.


எது எப்படி இருந்தாலும் இதற்காக தற்கொலை செய்வது என்பது கோழைத்தனமானது

 

மத்திய பாடத்திட்டம் என்பதை முதலில் பார்ப்போம். இந்த மத்திய பாடத் திட்டத்தை முதலில் கொண்டு வந்த நோக்கம் என்பது மத்திய அரசு பணிகளில் உள்ளவர்கள் நாடு முழுமைக்கும் எங்காவது இடமாற்றலில் போக நேரிடும். அப்போது அவர்களது குழந்தைகள் ஒரே பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும் அல்லவா.. அதற்காக CBSE எனப்படும் இந்த பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. மற்றும்படி, அரசியலமைப்பு சட்டத்தின்படி கல்வி என்பது மத்திய / மாநில பட்டியலில் உள்ளது. அதாவது மாநில அரசுக்கும் அதனை நிர்ணயிக்கும் உரிமை உள்ளது. அதனை பறிக்கும் ஒரு சட்ட வடிவமே இந்த நீட் என்பது.

எந்த பாடப் பரப்பாக இருந்தாலும் ஒரு மனிதனால் அதனை முழுமையாக படித்துவிடவே முடியாது, சாகும் வரையில்கூட.

ஒரு உதாரணத்துக்கு, தாவரவியல் என்றால் அதில் மாநில பாடத்திட்டத்தில் சில பாடங்கள் இருக்கும். மத்திய பாடத்திட்டத்தில் சில பாடங்கள் இருக்கும். மாநில பாடத்திட்டத்தில் கத்தரிக்காயை படிப்பதாக வைத்துக்கொள்வோம். மத்திய பாடத்திட்டத்தில் அவரைக்காய் பற்றிய படிப்பாக இருந்தால் எப்படி அதை எழுதுவது? இந்த மாணவர்களின் வயது 17, 18 என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

இங்கே மாநில பாடத்திட்டத்தில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். எல்லோருக்கும் +2 தேர்வு முடிவுகளே பிரதானமாக போய்விட்டதால் +1 பாடங்களை சில உயர்ந்த பாடசாலைகளில் கற்பிப்பது இல்லை என்று சொல்கிறார்கள். இது அறிவுச் செழுமையை குறைக்கும் செயல். அதனால்தான், இப்போது +1 கூட பொது தேர்வு என கொண்டுவந்துவிட்டார்கள்.

இந்த "நீட்" என்பது அதிக தரம் வாய்ந்த மாணவர்களை தேர்ந்தெடுக்கும் என்று சொன்னார்கள். ஆனால் பீகாரில் தேர்வு பெற்ற முன்னணி மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வுகளில் அரைகுறையாக பாஸ் செய்தவர்கள் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

அந்த மாணவி... 9,ம் மாடிக்கு ஏறிப்  போய், கீழே குதிக்கும் மட்டும் படம் எடுத்தவர்களை.. என்னவென்று சொல்வது. ?

Link to comment
Share on other sites

48 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

அந்த மாணவி... 9,ம் மாடிக்கு ஏறிப்  போய், கீழே குதிக்கும் மட்டும் படம் எடுத்தவர்களை.. என்னவென்று சொல்வது. ?

 

இறந்த மாணவியும் அவர் இறக்கும் வரை படம் எடுத்த கூட்டமும் இந்தியாவின் இரட்டை முகத்தை காட்டுகின்றது. இதே போல் தான் எல்லா விசயங்களும். வாழ்வுக்காக போராடிய தமிழர்களை தமிழக காவல் துறையே சுட்டுக்கொல்கின்றது. உலக அழகிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரதமர் கொல்லப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கமாட்டார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவனை நியாப்படுத்தி ஊர்வலம் போகுது ஒரு கூட்டம். அரசியல் புலனாய்வு ஒட்டுமொத்த அறிவு வளம் ஊடகத் துறை சட்டம் எல்லாம் கேலிக்குரியதாகி வெள்ளையரின் ஆட்சியில் இருந்ததை விட மோசமாக காப்பரேட்டுகளுக்கு அடிமையாகின்றது இந்தியா. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.