Jump to content

“கடல் மரணித்தால் மனித குலமும் மரணிக்கும்” - எச்சரிக்கும் செயற்பாட்டளர்கள்


Recommended Posts

“கடல் மரணித்தால் மனித குலமும் மரணிக்கும்” - எச்சரிக்கும் செயற்பாட்டளர்கள்

பெருங்கடல் வாழ்வில்தான் நம் வாழ்வும் இருக்கிறது. மனித குலம் பிழைத்திருக்க வேண்டும் என்றால், பெருங்கடலின் சூழலியல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் மார்கரெட் அட்வுட்.

"கடல் மரணித்தால் மனித குலமும் மரணிக்கும் "படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY

மார்கரெட் அட்வுட் கனடா நாட்டை சேர்ந்தவர்.

கவிஞர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர் மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர் என பன்முக திறமை கொண்டவர் மார்கரெட் அட்வுட்.

'மனிதன் ஒன்றும் இல்லை'

'தி மொமண்ட்' எனும் அவருடைய கவிதை மனித குலத்திற்கும், சூழலியலுக்கும் உள்ள தொடர்பை அழுத்தமாக மூன்று பத்திகளில் விவரிக்கும் . 'எல்லாவற்றையும் வென்றுவிட்டதாக, எல்லாவற்றையும் சொந்தமாக்கி கொண்டதாக மனிதன் கருதுகிறான். ஆனால், இயற்கைக்கு முன்னால் மனிதன் ஒன்றும் இல்லை' என்ற பொருளில் அந்த கவிதை செல்லும்.

தண்ணீர் எடுப்பதற்காக 200 மில்லியம் மணி நேரத்தை செலவிடும் பெண்கள்படத்தின் காப்புரிமைANGELA DENNIS, COURTESY OF INVISIBLE DUST Image captionதண்ணீர் எடுப்பதற்காக 200 மில்லியம் மணி நேரத்தை செலவிடும் பெண்கள் என்கிறார் மார்கரெட் அட்வுட்

அவர் சமீபத்தில் லண்டன், பிரிட்டிஷ் நூலகத்தில் நடந்த 'Under Her Eye 'மாநாட்டில் கலந்து கொண்டு சூழலியலுக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து உரையாற்றினார்.

அந்த மாநாட்டில் கடலில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து, "இதை தடுக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும். பெருங்கடலின் இறப்பும், நம் இறப்பும் வெவ்வேறானது அல்ல" என்றார்.

பருவநிலை மாற்றமும், பெண்களும்

உலகளவில் பருவநிலை மாற்றமானது பெண்களை மிக மோசமான அளவில் பாதிக்கிறது. ஆனால், பருவநிலை மாற்றம் குறித்தான உயர்மட்ட உரையாடல்களில், பெண்களின் குரல் மிக அரிதாகவே கேட்கிறது என்ற குற்றச்சாட்டு நெடு நாட்களாக உள்ளது.

இதற்காக, பெண்களின் பார்வையில் சூழலியல் பிரச்சனைகளை அணுகவே இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பருவநிலையின் தாக்கம் தனது பல நாவல்களில் எழுதி இருக்கிறார், தொடர்ந்து எழுதியும் வருகிறார் மார்கரெட் அட்வுட்.

இந்த மாநாட்டில் பேசிய அவர், "இப்போது நிலவும் சூழ்நிலை பெண்கள் அனுகூலமற்றதாகவே உள்ளது" என்கிறார்.

"பெண்கள் உணவு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள், குடும்பத்தை கவனித்து கொள்பவராகவும் அவர்கள் இருக்கிறார்கள். பருவநிலை வெப்பமாகும்போது, அறுவடை குறையும். பெருமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டால், அது நம்மை அழிதொழிக்கும்" என்று தெரிவிக்கிறார்.

ஏன் பெண்கள்?

இந்த மாநாட்டில் பேசிய மொரோக்கோவின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஹகிமா எல் ஹைதி, உலகம் முழுவதும் பெண்கள் தண்ணீர் எடுப்பதற்காக செல்லும் நேரத்தை மேற்கோள் காட்டி பேசினார். அதாவது உலகம் முழுவதும் பெண்கள், ஒரு நாளுக்கு தோராயமாக ஏறத்தாழ 200 மில்லியன் மணி நேரம் தண்ணீர் எடுப்பதற்காகவே செயல்படுகிறார்கள்.

தண்ணீர் எடுப்பதற்காக 200 மில்லியம் மணி நேரத்தை செலவிடும் பெண்கள்படத்தின் காப்புரிமைEPA

இதற்கும் பருவநிலை மாற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்கிறார் அவர்.

பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரோலின் லுகாஸ் சுழலியல் தொடர்பான செயற்பாட்டில் பெண்களின் பங்கு மகத்தானது என்கிறார்.

மேலும், "பருவநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் பெண்கள்தான் முதல் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் தான் கூட்டங்களை ஒருங்கிணைக்கிறார்கள் மற்றும் போராடுகிறார்கள். ஒரு தீர்வு வேண்டுமானால் அதற்கு பெண்களின் பங்களிப்பு மிக அவசியம்" என்றார் கரோலின்.

பாரிஸ் ஒப்பந்தம் 2015- ல் முக்கிய பங்கு வகித்த முன்னாள் ஐ.நா ராஜதந்திரி கிறிஸ்டியானா, "பருவநிலை மாற்றம் தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில், போதுமான அளவிற்கு பெண்கள் இல்லை" என்றார்.

SCIENCE PHOTO LIBRARYபடத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY

பருவநிலை தொடர்பான கொள்கை வடிவமைப்புகளில் பெண்களின் பங்கு மிக முக்கியமான ஒன்று என்று தான் கருதுவதாக கூறுகிறார்.

மேலும் அவர், "பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளில் மரணிப்பவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் என்பது தற்செயலானது இல்லை" என்று தெரிவிக்கிறார்.

பிஸாஸ்டிக் கழிவுகள்

மாதவிடாயின் போது பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் மாதவிடாய் கோப்பைகளுக்கு மாற்றான மறு சுழற்சி செய்ய கூடிய பொருட்களை பிரபலப்படுத்த வேண்டும் என்கிறார் இவ்விதமான பொருட்களை தயாரிக்கும் மூன்கப் நிறுவனத்தை சேர்ந்த காத் கிளிமென்ட்ஸ்.

பெருங்கடல்களை மனித குலம் குப்பை தொட்டியாக பயன்படுத்துகிறது. இதனை தவிர்க்க ஏதாவது ஒன்றை உடனடியாக செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது மார்கரெட் அட்வுட்டின் வாதம்.

https://www.bbc.com/tamil/science-44358924

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.