Jump to content

புலிகளை ஆதரிக்கும் பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரிய கனடாவின் தமிழ் வேட்பாளர்


Recommended Posts

புலிகளை ஆதரிக்கும் பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரிய கனடாவின் தமிழ் வேட்பாளர்

 

Vijay-Thanigasalam-300x200.jpgகனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம் இட்டிருந்த பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒன்ராரியோ மாகாணசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஒன்ராரியோ கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில், ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதியில், விஜய் தணிகாசலம் போட்டியிடுகிறார்.

இவர் கடந்த செவ்வாயன்று கீச்சகத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில்,“ கடந்த காலத்தில் தமிழ்ப் புலிகளுடன் தொடர்புடைய விடயங்களைப் பகிர்ந்திருந்தேன். நான் மன்னிப்புக் கோருவதுடன், அத்தகைய பார்வையைக் கொண்டிருக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார் என கனேடிய ஊடகமான Global News தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான, முகநூல் பதிவுகள் குறித்து கொன்சர்வேட்டிவ் கட்சியிடம் Global News எழுப்பிய கேள்வியை அடுத்தே, விஜய் தணிகாசம் இந்த மன்னிப்பைக் கோரியுள்ளார்.

vijay-post.jpg

vijay-post1.jpg2011ஆம் ஆண்டு, விஜய் தணிகாசம், “எமது தேசியத் தலைவருக்கு 57 ஆவது இனிய பிறந்த நாள் ” என்று குறிப்பிட்டு, சீருடையணிந்த பிரபாகரனின் படத்தை வெளியிட்டிருந்தார்.

கரும்புலிகள் தொடர்பான இன்னொரு பதிவையும் அவர் இட்டிருந்தார்.

“கரும்புலிகள் எமது இனத்தின் பாதுகாப்புக் கவசங்கள்” என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார் என்றும் Global News குறிப்பிட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/06/07/news/31282

Link to comment
Share on other sites

அரசியலுக்காக குத்துக்கரணம் அடிக்கதெரிந்த அடிப்படை அறிவே போதும் சகோதரா.

விரைவில் முன்னேறி கனேடிய பிரதமராக வர வாழ்த்துக்கள். அப்போ நீங்கள் தமிழனே இல்லை என்று சொன்னாலும் வியப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  மன்னிப்புக்கோரல்  தான்  தன்னை  வெல்ல  வைத்தது  என்ற  நினைப்பு வராமல்  இருக்கக்கடவது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எந்த தவறும் செய்யவில்லை...தனிமனிதனாக இருந்தபோது இனத்தை நேசித்தார், இனத்துக்கு வாழ்வு தந்த கனடாவின் ஒரு பிரதிநிதி ஆனபோது கனேடிய சட்டத்தை மதிக்கிறார்...எதுவும் பண்ணாமலே எவருக்கும் கூஜா தூக்கவும் இல்லை...இனத்தையும் இழிவு படுத்தவில்லை...தன்னால் முடிந்த பங்களிப்பை காலத்தால் செய்த எவருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்...

என்ன செய்வது தூர நின்றே எச்சி துப்பி பழக்கப்பட்ட சமூகத்தில் வாழ்வதால்,

 அடுத்தவர் எந்த இடத்திலிருந்து எமக்கு ஆதரவு தந்தார் என்ற நினைப்பையே அடியோடு மறந்துவிடுகிறோம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது முன்னைய பார்வையைக் கொண்டிருக்கவில்லை என்று சொல்லும்போது அது புலிகளை மீதான பார்வை மட்டுமா அல்லது தமிழ் தேசிய உணர்வும் இப்போது இல்லையா என்பதில் தெளிவு இல்லை.

அரசியலில் ஈடுபடும்போது முன்னர் அலுமாரிக்குள் பூட்டி வைத்த எலும்புக்கூடுகள் வெளியே எட்டிப்பார்க்காமல் இருப்பதில் கவனம் வேண்டும்.

கனடியத் தமிழர்களுக்கு ஒரு முகமும் தமிழரல்லாதவர்களுக்கு இன்னோர் முகமும் காட்டுவது தேர்தலில் வெல்ல உதவாது!

Link to comment
Share on other sites

இவரது வெற்றியை வெறுக்கின்றேன். இவர் புலிகளை எதிர்த்ததால் அல்ல. இவர் இது நாள் வரைக்கும் புலிகளை ஆதரித்தது மட்டுமன்றி புலிகளின் அனுசரனையில் உருவாகிய அமைப்புகளில் எல்லாம் பங்கெடுத்து விட்டு தேர்தல் நாளுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாக வெறும் பதவி ஆசையில் குத்துக்கரணம் அடித்தமைக்காக

22.jpg.

இவர் தன்னை தமிழ் தேசிய வாதியாக / புலிகளின் ஆதரவாளராக காட்டிக் கொண்டு இருந்த காலத்தில் இதை பகிர்ந்து இருந்தார்

இப்படியானவர்களின் வெற்றி தமிழ் மக்களின் தோல்வி
 

Link to comment
Share on other sites

1 hour ago, valavan said:

அவர் எந்த தவறும் செய்யவில்லை...தனிமனிதனாக இருந்தபோது இனத்தை நேசித்தார், இனத்துக்கு வாழ்வு தந்த கனடாவின் ஒரு பிரதிநிதி ஆனபோது கனேடிய சட்டத்தை மதிக்கிறார்...எதுவும் பண்ணாமலே எவருக்கும் கூஜா தூக்கவும் இல்லை...இனத்தையும் இழிவு படுத்தவில்லை...தன்னால் முடிந்த பங்களிப்பை காலத்தால் செய்த எவருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்...

என்ன செய்வது தூர நின்றே எச்சி துப்பி பழக்கப்பட்ட சமூகத்தில் வாழ்வதால்,

 அடுத்தவர் எந்த இடத்திலிருந்து எமக்கு ஆதரவு தந்தார் என்ற நினைப்பையே அடியோடு மறந்துவிடுகிறோம்...

புலிகளுக்கு ஆதரவு இல்லை என்றும் ஆதரவு தெரிவித்தமைக்கு மன்னிப்பு கேட்கின்றேன் என்பதெல்லாம் இனத்துக்கு எதிராக செய்த விடயங்கள் இல்லையா? அப்ப புலிகள் தமிழ் இனத்துக்காக போராடாமல் ஆடு மாடுகளுக்காகவா போராடினார்கள்? ஒருவர் ஒரு காலத்தில் பங்களிப்பை கொடுத்து விட்டு அதற்கு பிறகு அவற்றுக்கு மன்னிப்பு கேட்டால் அவர் ஒரு காலத்தில் செய்த பங்களிப்பிற்காக விமர்சனம் செய்ய கூடாதா?
நீங்கள் இது நாள் வரைக்கும் எழுதிய தமிழ் தேசிய கருத்துகள் மீது கூட இப்ப சந்தேகம் வருகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, நிழலி said:

புலிகளுக்கு ஆதரவு இல்லை என்றும் ஆதரவு தெரிவித்தமைக்கு மன்னிப்பு கேட்கின்றேன் என்பதெல்லாம் இனத்துக்கு எதிராக செய்த விடயங்கள் இல்லையா? அப்ப புலிகள் தமிழ் இனத்துக்காக போராடாமல் ஆடு மாடுகளுக்காகவா போராடினார்கள்? ஒருவர் ஒரு காலத்தில் பங்களிப்பை கொடுத்து விட்டு அதற்கு பிறகு அவற்றுக்கு மன்னிப்பு கேட்டால் அவர் ஒரு காலத்தில் செய்த பங்களிப்பிற்காக விமர்சனம் செய்ய கூடாதா?
நீங்கள் இது நாள் வரைக்கும் எழுதிய தமிழ் தேசிய கருத்துகள் மீது கூட இப்ப சந்தேகம் வருகின்றது

இதே தளத்தில் பாடகர் சாந்தன் , ஏதோ தெரியாமல் ஒரு காலம் தவறு செய்துவிட்டோம் இனி திருந்தி வாழபோகிறோம் என்ற ரீதியில் தெரிவித்த ஒரு கருத்தை பார்தவர்கள் நாம்...

தளங்கள் வேறாயிருந்தாலும்  சந்தர்ப்பங்களும் சூழ் நிலையும் ஒன்றுதான்...

என்னோட தேசியம் சார்ந்த கருத்துக்களில் நீங்கள் சந்தேகம் கொள்வதற்கு உங்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு,

ஏனெனில் நான் ஒன்றும் அவர்களைபோல, நாலு பக்கமும் அரச நிர்வாகங்கள் கண்காணிப்பில்  உள்ள பொதுவெளியில் செயலாற்றி எது வந்தாலும் வரட்டும் என்று ஓர்காலத்தில் இனத்துக்காக செயலாற்றி நெருக்கடியில் சிக்கி கொண்டவன் இல்லையே..

 வெறும் கருத்து மட்டுமே எழுதுபவன்...இந்த களத்தில் வரும் ஒரு சிலர் போல..

ஆனாலும் காலங்கள் கடந்தாலும் எமக்கான கால கட்டத்தில் அனைத்தையும் மீறி அவர்கள் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்கிறேன்,,,இதில் தவறு என் பக்கமாக இருந்தாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்.

Link to comment
Share on other sites

கனடா தேர்தலில்- ஈழத் தமிழர் தெரிவு!!

 

ghugj-500x303.jpg

 
 
 

கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான, விஜய் தணிகாசலம் சுமார் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடந்து வருகிறது.

இதில், ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் என்ற ஈழத் தமிழ் இளைஞன் வெற்றி பெற்றுள்ளார்.

 

இவருக்கு, 16 ஆயிரத்து 224 வாக்குகள் கிடைத்துள்ளன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட, தேசிய ஜனநாயக கட்சியின் பெலிசியா சாமுவெல், 15 ஆயிரத்து 261 வாக்குகளைப் பெற்றார்.

2,015 வாக்காளர்கள் வாக்களித்த ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் விஜய் தணிகாசலத்துக்கு 38.61 வீத வாக்குகளும், பெலிசியா சாமுவெலுக்கு 36.32 வீத வாக்குகளும் கிடைத்தன.

இவர்களை அடுத்து, லிபரல் கட்சி வேட்பாளர் சுமி சான் 8785 வாக்குகளையும், பசுமைக் கட்சியின் வேட்பாளர் பிரியன் டி சில்வா 1014 வாக்குகளையும், பெற்றனர்.

ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு ஈழத் தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும் என்பது பெருமைக்குரியது.

http://newuthayan.com/story/15/கனடா-தேர்தலில்-ஈழத்-தமிழர்-தெரிவு.html

Link to comment
Share on other sites

ஒன்ராரியோ நாடாளுமன்றத்துக்கு இரு ஈழத் தமிழர்கள் தெரிவு

 

LOGAN-KANAPATHI-vijay-thanigasalam-300x2கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில், இரண்டு ஈழத் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மற்றொருவர் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.

ஒன்ராரியோ நாடாளுமன்றத் தேர்தலில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சி 76 ஆசனங்களுடன் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

அதேவேளை, புதிய ஜனநாயக கட்சி 40 ஆசனங்களுடன் எதிர்க்கட்சியாக வந்துள்ளது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இரந்த லிபரல் கட்சி 7 ஆசனங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

முதல் முறையாக இரண்டு ஈழத் தமிழர்கள் ஒன்ராரியோ நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் விஜய் தணிகாசலம், ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

LOGAN-KANAPATHI-vijay-thanigasalam.jpg

மார்க்கம் தோன்ஹில் தொகுதியில் முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட லோகன் கணபதி வெற்றி பெற்றார். அவருக்கு, 18,943 வாக்குகள் கிடைத்தன. இது மொத்த வாக்குகளில் 50.5 வீதமாகும்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜூனிதா நாதன் 24 வீதமான வாக்குகளை மாத்திரமே பெற்றார்.

அதேவேளை, ஸ்காபரோ கில்வூட் தொகுதியில் முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரொசான் நல்லரட்ணம், 81 வாக்குகளால் லிபரல் கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

லிபரல் கட்சி வேட்பாளர், மிட்சி கன்டர் 11,965 வாக்குகளையும், ரொசான் நல்லரட்ணம் 11,884 வாக்குகளையும் பெற்றனர்.

இதற்கிடையே, இம்முறை ஒன்றாரியோ நாடாளுமன்றத்துக்கு இரு ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட 10 தெற்காசிய நாட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/06/09/news/31303

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இருந்தே புலி எதிர்ப்பு கதைப்பவர்களை நம்பலாம். ஆனால் இப்படியானவர்களை நம்ப கூடாது... இவர்கள் கனடா நாடாளுமன்றத்திற்கு போவது இவர்களுக்கு பிரயோசனமே தவிர ,தமிழ் மக்களுக்கு இல்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

இவரது வெற்றியை வெறுக்கின்றேன். இவர் புலிகளை எதிர்த்ததால் அல்ல. இவர் இது நாள் வரைக்கும் புலிகளை ஆதரித்தது மட்டுமன்றி புலிகளின் அனுசரனையில் உருவாகிய அமைப்புகளில் எல்லாம் பங்கெடுத்து விட்டு தேர்தல் நாளுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாக வெறும் பதவி ஆசையில் குத்துக்கரணம் அடித்தமைக்காக

22.jpg.

இவர் தன்னை தமிழ் தேசிய வாதியாக / புலிகளின் ஆதரவாளராக காட்டிக் கொண்டு இருந்த காலத்தில் இதை பகிர்ந்து இருந்தார்

இப்படியானவர்களின் வெற்றி தமிழ் மக்களின் தோல்வி
 

அரசியலில்  இதெல்லாம்  சகசம்  என்பார்கள்

உங்களது கோபம் புரிந்து கொள்ளக்கூடியதே

அதேநேரம்  வளைந்து சுழித்து செல்லாத போராட்டம் தோற்கும் என்பதற்கும் 

நாமே தானே உதாரணம்  என்கின்றோம்

தந்திர ரீதியில்

மனரீதியில்  மாற்றங்கள்  இல்லாது இருந்தால்

வெறுக்கப்படத்தேவையில்லை  அல்லவா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் புலம்பெயர் தமிழர்கள் எவருக்குமே அரசியல் ஆதரவளிப்பதில்லை. வாக்கும் போடுவதில்லை. அத்தனை பேரும் பச்சோந்திகள் என்பதை இவர்களில் பலர் அவரவர் அசைலம் அடிக்க எழுதின கட்டுக்கதைகள் பலவற்றினை கண்டவன் என்ற வகையில்... இவர்களை ஆதரிப்பது என்பது எந்த விமோசனமும் அற்றது... என்ற உண்மை நன்கு உணரப்பட்டிருக்கிறது.

வெறும் தமிழர்.. தமிழர் விடுதலை.. தமிழீழம்.. தேசிய தலைவர் எல்லாம்.. இவர்களுக்கு தமிழர்கள் மத்தியில் விளம்பரத்துக்கும்.. தப்பிப் பிழைப்புக்கும்.. இன உணர்வூட்டி வாக்கு வாங்கவும் மட்டுமே என்பதை பல தடவைகளில் பார்த்தாயிற்று.

இவர்களின் இந்த இழிவான தந்திரத்திடம் சிக்க நாங்கள் அந்தளவுக்கு முட்டாள்கள் இல்லை. 

Link to comment
Share on other sites

முன்பு ராகவன் பரஞ்சோதி ஸ்காபரோவில் கொன்சேவர்ட்டிவ் சார்பில் பெடரல் எலெக்சனில் போட்டியிட்டபோது இதேமாதிரியான ஒரு பிரச்சனையை குளோப் அன் மெயில் ஊடகம் கிளப்பி, கடைசியில் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்து கனேடிய நாடாளுமன்றம் செல்லமுடியால் போனது. 

Link to comment
Share on other sites

தமிழ்த்தேசீயம் தமிழ் உணர்வு என்பதை முன்வைத்து எம்மவர்களிடம் வாக்கு பெற முனைபவர்களை இனி ஒதுக்கித் தள்ளுவதே சிறந்தது. அவரவர் தொகுதியில் எந்த இனத்தவராக இருந்தாலும் சேவை மனப்பான்மை உள்ளவர் எவரோ அவருக்கு வக்களிப்பதே சிறந்தது. தாம் முன்பு ஆதரித்ததுக்கு இப்போது மன்னிப்பு கோருவது என்பது பச்சோந்தித்தனம். இவரைப்பொறுத்தவரை இனி வரும் தேர்தல்களில் தோற்றாலும் அவருக்கு கவலை இருக்கப்போவதில்லை. முன்னாள் ஒன்ராறியோ நாடாள மன்ற உறுப்பினர் என்ற அடயாளமே அவருக்கு போதுமானது. இப்படியானவர்கள் தேடுவது அடயாளம் அந்தஸ்த்து தவிர மக்களுக்கான சேவையாக இல்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.