Jump to content

சாதிப்பதை சாத்தியப்படுத்தும் 6 விஷயங்கள்


Recommended Posts

சாதிப்பதை சாத்தியப்படுத்தும் 6 விஷயங்கள்

 
பெண்ணின் கண்

நமக்கு நாலு பேரு சலாம் அடிக்கிற மாதிரி எப்போது வளரப்போகிறோம்னு கனவு காண்பவர்களா நீங்கள்...அப்படியானால் உங்களுக்கானதுதான் இந்தக் கட்டுரை

எதிலும் ஓர் ஆர்வம், மனசாட்சியுடன் கூடிய நேர்மை, போட்டியில் ஜெயித்தாக வேண்டும் என்ற துடிப்பு, எந்த சூழலுக்கும் ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் தன்மை, குழப்பமான சூழலிலும் தெளிவான கண்ணோட்டம், ரிஸ்க் எடுப்பதை ரெஸ்க் சாப்பிடுவது போன்று பார்க்கும் மனப்பாங்கு..இந்த 6 குணாதிசயங்களும் உங்களிடம் இருக்கிறதா...ஆம் என்றால் குஷியாக ஒரு விசில் அடியுங்கள். இவை உங்களை எங்கோ ஒரு புது உயரத்துக்கு கொண்டு செல்வது நிச்சயம். போகிறபோக்கில் சொல்லிவிட்டுப்போகும் அட்வைஸ் அல்ல இது. நீண்ட உளவியல் ஆய்வுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட்ட அரிய முத்துகள்தான் இவை.

பணியிட சூழல்கள்...குணாதிசயங்கள் இடையிலான தொடர்புகளை ஆராய பிரபலமான பல வழிமுறைகள் உள்ளன. இதில் மையர்ஸ் பிரிக்ஸ் முறை குறிப்பிடத்தக்கது.

அமுக்குணித்தனமான மனப்பாங்கு...எல்லாரிடமும் வெளிப்படையாக பழகும் குணம் உள்ளிட்டவற்றின் அடிப்படையிலும் சிந்தனைகள்... உணர்வுகள்... அடிப்படையிலும் மனிதர்களை இது வகைப்படுத்துகிறது.

அமெரிக்காவில் உள்ள 90% நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை மதிப்பிட மையர்ஸ் அண்ட் பிரிக்ஸ் முறையைத்தான் பயன்படுத்துகிறன.

ஆனால் உளவியலாளர்கள் பலர் இம்முறை சிறந்தது என்பதை ஏற்கவில்லை. இதன் பல கருதுகோள்கள் தற்காலத்துக்கு ஒவ்வாதது என்றும் உண்மையான செயல்திறனை மதிப்பிட இந்த முறை தவறிவிட்டதாகவும் உளவிலாளர்கள் கூறுகின்றனர்.

இது போலி அறிவியல் என்கின்றனர் இன்னும் சிலர். பணியிட குணாதிசயங்களை கணிக்க இது ஓரளவு உதவும என்றாலும் விரிவான முழுமையான புரிதலுக்கு மையர்ஸ் அண்ட் பிரிக்ஸ் முறை ஏற்றதல்ல என்கிறார் ஹை பொட்டன்ஷியல் என்ற புத்தகத்தை உடன் எழுதியவரும் உளவியலாளருமான இயான் மெக்ரே.

மாணவர்

பணியிட குணாதிசய மதிப்பீட்டில் நவீன கால ஆய்வுகள் பெரிதும் உதவுகின்றன என்கின்றனர் மெக் ரேவும் லண்டன் பல்கலை கல்லூரி பேராசிரியர் ஆட்ரியன் ஃபர்ன்ஹாமும் ...

பணித்திறன் வெற்றிக்கு 6 முக்கிய குணாதிசயங்கள் காரணம் என்கின்றனர் அவர்கள்.

தற்போது அந்த 6 குணாதிசயங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்

1) மனசாட்சி மிக்கவர்கள்

இத்தரப்பினர் எதையும் ஒரு திட்டத்துடன் செய்து முடிக்கவேண்டுமென்பதில் உறுதியாக இருப்பர்.

உள்மனத்தடைகளை புறந்தள்ளி, நீண்டகால நோக்கில் பலன் தரும் முடிவுகளை எடுப்பர். பணியிடங்களில் சிறப்பான திட்டமிடலுக்கு இக்குணாதிசயம் வெகுவாக உதவுகிறது.

அதே சமயம் இதுபோன்றவர்களிடம் வளைந்து கொடுத்து போகாத, பிடிவாத குணங்கள் இருக்கும் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

2) ஒத்துப்போகும் தன்மை

இது போன்றவர்கள் உணர்ச்சிகரமான, நெருக்கடியான சூழல்களில் சிறப்பாக ஒத்துழைப்பர். இவர்களின் இப்பண்பு பணியில் எதிர்மறையாக பிரதிபலிக்காது.

நெருக்கடியான சூழல்களில் ஒத்துழைக்கும் பண்பு ஒருவரது நலனுக்கு எதிரானது என்பதை விட அவர்களின் வளர்ச்சிக்கு ஓர் ஆதாரமாக அமையும்.

சிக்சாக்படத்தின் காப்புரிமைOATAWA/GETTY IMAGES

3) குழப்ப சூழலில் பணிபுரியும் ஆற்றல்

தெளிவற்ற சூழலில் பணிபுரியும் வல்லமை பெற்றவர்கள் ஒரு முடிவுக்கு வருமுன் பல்வேறு கோணங்களில் ஒரு பிரச்னையை அலசி ஆராய்வார்கள்.

இதில் அவர்கள் தரும் முடிவு மறுக்க முடியாத வகையில் இருக்கும். இதுபோன்றவர்கள் சிக்கலான விஷயங்களை அற்புதமான வியாபார வித்தையாக மாற்ற முயல்வார்கள் என்கிறார் உளவியலாளர் மெக் ரே.

தெளிவற்ற சூழலை எதிர்கொள்ளும் நபர்கள் வெளிப்புற மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தகவமைத்து கொள்வார்கள் என்றும் கூறுகிறார் மெக் ரே.

4) புதியதை தெரிந்துகொள்ளும் ஆர்வம்

பெண்படத்தின் காப்புரிமைKIEFERPIX/GETTY IMAGES

மற்ற குணாதிசயங்களுக்கு தரும் முக்கியத்துவத்தை புதியதை தெரிந்து கொள்ளும் பண்பிற்கு உளவியலாளர்கள் தருவதில்லை. ஆனால் இந்த பண்பு பணியிடங்களில் புதிய யுக்திகளை கையாள உதவுகிறது என்பது அண்மைய ஆய்வுகளில் தெரியவந்த உண்மை.

படைப்பாற்றல், நடைமுறைகளை எளிதாக கையாளல் என பல நல்ல விஷயங்களுக்கும் இப்பண்பு உதவுகிறது. பணி திருப்தி அளிப்பதுடன் களைப்படையும் உணர்வையும் தவிர்க்க இப்பண்பு உதவுகிறது

அதே நேரம் எதிலும் ஓர் ஆழமான புரிதலின்றி அடுத்து...அடுத்து... என அடுத்தடுத்த திட்டங்களுக்கு மாறும் பட்டாம்பூச்சி மனப்பாங்கு இப்படிப்பட்டவர்களுக்கு இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

5) ரிஸ்க் எடுக்கும் திறன்

பிரச்னை என்றால் விலகி ஓடாமல் தைரியமாக எதிர்கொண்டு தீர்வு காணும மனப்பாங்கு நிர்வாக பணிகளுக்கு மிக அவசியமான ஒன்றாகும். எதிர்ப்புகள் வந்தாலும் அச்சமின்றி சமாளிக்கும் திறனும் நிர்வாக பணியிடத்திற்கு அவசியமான ஒன்றாகும்.

6) போட்டி மனப்பாங்கு

போட்டியில் வெல்லும் மனப்பாங்கு இருப்பது ஒருவருக்கு கூடுதல் சாதகத்தை தரும். அதே நேரம் ஓர் அணியில் பிளவை உண்டாக்கவும் இந்த குணம் காரணமாக அமையலாம்.

பிறரது பொறாமைக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் தனிப்பட்ட பணி வெற்றிக்கும் இடையே ஒரு மெல்லிய இழைதான் இருக்கிறது என்பதையும் இங்கு அறிய வேண்டும்.

பல்ஃப்படத்தின் காப்புரிமைNATALI_MIS/GETTY IMAGES

பணியில் சிறப்பாக செயல்பட இந்த 6 குணாதிசயங்களும் அவசியமானதாக இருக்கிறது. குறிப்பாக தலைமை இடத்தை அடைய விரும்புவோருக்கு இப்பண்புகள் தவிர்க்க முடியாதவை.

உளவியலாளர் மெக் ரே இந்த 6 அம்சங்களை பன்னாட்டு நிறுவனங்களில் உள்ள தொழிலதிபர்களுடன் சில வருடங்களாக ஒப்பிட்டு ஆராய்ந்து வந்துள்ளார்.

இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் உள்ளன. இந்த குணாதிசயங்களை கொண்டு வெற்றி வாய்ப்புகளை கணிப்பது குறித்த ஆய்வறிக்கையும் கடந்தாண்டு வெளியாகியுள்ளது.

போட்டியிடும் தன்மை, தெளிவற்ற சூழலில் சமாளிக்கும் திறன் ஆகிய அம்சங்களை வைத்து ஒருவரது ஊதியத்தை உறுதியாக கணிக்க முடிந்தது.

மனசாட்சி என்ற அம்சம் பணித்திருப்தியை கணிக்க உதவியது. இந்த 6 அம்சங்களுடன் ஐக்யூ எனப்படும் நுண்ணறிவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

HPTI எனப்படும் இம்முறை திறமை மிக்க பணியாளர்களை தேர்வு செய்ய கடைபிடிக்கப்படுகிறது. தனிப்பட்ட வளர்ச்சிக்கும் இப்பண்புகள் உதவுவதாக கூறுகின்றார் மெக் ரே.

இந்த 6 பண்புகளும் கொண்ட ஒருவரை கனடாவில் கண்டதாக கூறுகிறார் மெக் ரே. வங்கி ஒன்றின் தலைமை செயல் அதிகாரியான அவரிடம் எல்லா பண்புகளும் கணிசமாக இருந்ததாக கூறுகிறார் மெக் ரே.

இதுபோன்றவர்களிடம் வேலை செய்ய கொஞ்சம் பயமாக இருந்தாலும் அவர்களை தைரியமாக நம்பலாம்...மரியாதை தரலாம் என்கிறார் மெக் ரே.

https://www.bbc.com/tamil/global-44390351

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.