Jump to content

கீரை ப்ரியர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்! 40 வகை கீரைகளும், பலன்களும் (படங்களுடன்)


Recommended Posts

கீரை ப்ரியர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்! 40 வகை கீரைகளும், பலன்களும் (படங்களுடன்)

 

 

 
keerai_shop

 

கீரையில் பலவகைக் கீரைகள் உள்ளன. அவற்றில் சுமார் 20 வகைகளைத் தவிர பிற கீரை வகைகளை நாம் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. முதலில் உங்களுக்கு நன்கு அறிமுகமான கீரைகள், இதுவரை நீங்கள் சமைத்து சாப்பிட்ட கீரை வகைகளை எல்லாம் பட்டியலிடுங்களேன்... பிறகு தெரியும் நமக்குத் தெரியாமலும், இன்னும் சமைத்து உண்ணப்படாமலும் எத்தனை, எத்தனை கீரை வகைகளை நாம் விட்டு வைத்திருக்கிறோம் என; பொதுவாக...

அரைக்கீரை...

arai_keerai.jpg

  • இக்கீரையை உணவில் சேர்த்து வர வாயுக் கோளாறுகள், வாத வலி நீங்கும்.
  • இக்கீரை விதைகளை எண்ணெயிலிட்டு காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வர தலைமுடி நன்கு வளரும். தலைச்சூடு குறையும்.
  • இக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். காய்ச்சல், உடல் குளிர்ச்சியை இக்கீரை குணப்படுத்தும்.
  • இக்கீரையை அரைத்துச் சாறு எடுத்து, தேனில் கலந்து அருந்த உடல் பலத்தைக் கூட்டும். தாது பலத்தை அதிகரிக்கும்.
  • இக்கீரையை பிரசவமான பெண்களுக்கு உணவோடு கொடுக்க, உடல் பலவீனம் மாறும். அரைக்கீரை கூட்டு மலச்சிக்கலை நீக்கும். ஜலதோசம் மாறும்.
  • இக்கீரையோடு நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து சமைத்து உண்டிட குளிர் காய்ச்சல் சளி தீரும்.
  • இக்கீரை நரம்பு நோய்களைக் குணப்படுத்தும்.
  • இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பசியற்ற நிலையை மாற்றி பசியையூட்டும்.
  • இக்கீரை பித்தக் கோளாறுகளால் ஏற்படும் தலைச்சுற்று வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும்.
  • இக்கீரையை எவ்விதத்திலாவது உணவில் சேர்த்து வந்தால் இருதயம், மூளை வலுப்பெறும்.
  • இருமல், தொண்டைப் புண் இவற்றை அரைக்கீரை குணப்படுத்தும்.
  • உடலில் வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களை இது தடுக்கும்.

முளைக்கீரை...

mulaik_keerai.jpg

  • முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் உடலுக்கு போதிய அளவில் கிடைக்கும்.  குழந்தைகளுக்குத் தொடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வந்தால் நன்கு உயரமாக வளருவார்கள். 
  • முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை சரியாகும்.
  • சிறுவர், சிறுமியருக்கு முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது. முளைக்கீரையுடன் சிறு பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.
  • முளைக்கீரை சாற்றில் முந்திரி பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப்பொலிவு உண்டாகும்.
  • சொறி, சிரங்கு முதலிய நோய்கள், இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்த கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது. முளைக்கீரை சாற்றில் உளுந்து ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் நீர் கடுப்பு மறையும்.

அகத்திக்கீரை...

agaththi_keerai.jpg

  • முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் உடலுக்கு போதிய அளவில் கிடைக்கும். 40 நாட்களுக்கு குழந்தைகளுக்கு; கொடுத்தால் நல்ல உயரமாக வளருவார்கள். 
  • முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை சரியாகும்.
  • சிறுவர், சிறுமியருக்கு முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது. முளைக்கீரையுடன் சிறு பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.
  • முளைக்கீரை சாற்றில் முந்திரி பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப்பொலிவு உண்டாகும்.
  • சொறி, சிரங்கு முதலிய நோய்கள், இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்த கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது. முளைக்கீரை சாற்றில் உளுந்து ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் நீர் கடுப்பு மறையும்.

முருங்கைக்கீரை...

murungai_keerai.jpg

  • முருங்கைக் கீரையை 40 நாட்கள் நெய்விட்டு, வெங்காயம் போட்டு, பொறியல் செய்து நண்பகலில் உணவில் சாப்பிட ஆண்மை பெருகும். விந்து கெட்டிப் படும். உடலுறவில் மிக்க இன்பம் பெறுவார்கள். புளியைக் குறைக்க வேண்டும். தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு வரும் சூதகவலிக்கு இதன் இலைச்சாறு பிழிந்து 30 மில்லி இரு வேளை குடிக்க குணமாகும். அடிவயிற்றில் வலியும், விலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.
  • இலையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் தீரும். கீரையில் சுவையான கீரையும் சத்தான கீரையும் இதுதான். இலையை ஆமணக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வாத மூட்டுவலி, இடுப்பு வலி, உஷ்ணத்தால் வரு வயிற்று வலி நீங்கும்

புளிச்ச கீரை (கோங்குரா)...

puLichcha_keerai.jpg

  • பெயருக்கு ஏற்றார்போல புளிப்பு சுவையுள்ள இந்த கீரை, உடல் வலிமையை பெருக்குவதில் முதன்மை வகிக்கிறது. நோஞ்சானாக தெரியும்
  • குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த_கீரையை சிறிதளவெனும் சமைத்து சாப்பிட கொடுத்து வந்தால் உடம்பு தேறுவார்கள். 
  • இதன் மகத்துவம் தெரிந்துதான் ஆந்திர மக்கள் இந்த கீரையை "கோங்குரா சட்னியாக" செய்து தினமும் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
  • இந்த கீரையில் தாதுபொருட்களும், இரும்பு சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர வைட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கலந்துள்ளன.
  • எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு என்பார்கள்.
  • சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம் என்பார்கள்.

சிறுகீரை...

siru_keerai.jpg

  • இதில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து மிக அதிக அளவில் உள்ளன. 90 சதவிகிதம் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவுச் சத்து ஆகியவையும் இதில் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் இதில் சம விகிதத்தில் கலந்துள்ளன.
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை தினமும் சாப்பிட்டால் இன்சுலின் இயல்பாக சுரக்கும்.
  • சிறுகீரையுடன் துவரம்பருப்பும், வெங்காயம் சேர்த்து இந்தக் கீரையை நெய்யில் வதக்கிக் கடைந்து, தொடர்ச்சியாக 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறும்.
  • குடல், இருதயம், மூளை, இரத்தம் இவைகளுக்கு நல்ல வலிமையை தரும். சிறுகீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் இருதய வியாதிகள் நீங்கும்.
  • சிறுகீரை உடலுக்கு அழகையும், முகத்துக்குப் பொலிவையும் தரவல்லது.

வல்லாரைக் கீரை...

vallarai_keerai.jpg

  • வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், மூளை நரம்புகள் வலுப்பெறும். இக்கீரை, இருமல், தொண்டைக்கட்டை நீக்குவதுடன், பல் ஈறுகளை வலுப்படுத்தும். காச நோய்க்கு சிறந்த மருந்து.
  • வல்லாரை கீரை, சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் மிளகு சேர்த்து சட்னியாக்கி, தொடர்ந்து, 48 நாட்கள் சாப்பிட்டால், மூளை சோர்வு நீங்கி, ஞாபக சக்தி அதிகரிக்கும்.

மணத்தக்காளிக் கீரை...

manathakkaali_keerai.jpg

  • சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது.
  • இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளன. நார்ச்சத்து மிகுந்தது. இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்தும்.
  • மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது இந்தக் கீரை. சிறுநீர், வியர்வையைப் பெருக்கி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும். மணத்தக்காளி இலைச்சாற்றை 35 மி.லி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டுவந்தால், சிறுநீரைப் பெருக்கும்; உடலில் நீர் கோத்து ஏற்படும் வீக்கம், உடல் வெப்பம் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

பசலைக்கீரை...

pasalaik_keerai.jpg

  • பசலைக் கீரையில் வளமான அளவில் இரும்புச் சத்து இருப்பதால், இதனை உட்கொண்டால் ரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும் இது ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவுப்பொருள்.
  • முக்கியமாக உடல் பருமனால் அவஸ்தைப் படுபவர்கள், இதனை தினமும் டயட்டில் சேர்த் தால் நல்ல பலன் கிடைக்கும். இது மாதிரி பசலைக் கீரையை உட்கொண்டால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.

பாலக் கீரை அலைஸ் பருப்புக் கீரை...

palak_keerai1.jpg

  • பாலக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் கீரை வேறெதுவும் இல்லை. இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன.
  • இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலை போக்கிறது.
  • இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.
  • ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது.

குப்பைக்கீரை...

000kupppai_keerai.jpg

  • குப்பைக்கீரையுடன் பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
  • குப்பைக்கீரை, முடக்கறுத்தான், சீரகம் மூன்றையும் சூப்வைத்து சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.
  • ஒரு கைப்பிடி குப்பைக்கீரையுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், அரை டீ ஸ்பூன் ஓமம் சேர்த்து நன்றாக காய்த்து அந்த சாற்றை பருகினால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
  • உடலின் மேல் ஏற்படும் கட்டிகளின்மீது இந்தக் கீரையை அரைத்து பூசிவந்தால் கட்டிகள் கறந்து குணம் கிடைக்கும்.
  • அடிப்பட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் குப்பைக்கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் வீக்கம் வடியும்.

பச்சைப் பொன்னாங்கன்னி...

ponnankanni_keerai.jpg

  • குப்பைக்கீரையுடன் பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
  • குப்பைக்கீரை, முடக்கறுத்தான், சீரகம் மூன்றையும் சூப்வைத்து சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.
  • ஒரு கைப்பிடி குப்பைக்கீரையுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், அரை டீ ஸ்பூன் ஓமம் சேர்த்து நன்றாக காய்த்து அந்த சாற்றை பருகினால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
  • உடலின் மேல் ஏற்படும் கட்டிகளின்மீது இந்தக் கீரையை அரைத்து பூசிவந்தால் கட்டிகள் கறந்து குணம் கிடைக்கும்.
  • அடிப்பட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் குப்பைக்கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் வீக்கம் வடியும்.

சிவப்புப் பொன்னாங்கன்னி...

 

sivappu_ponnaankanni_keerai.jpg

பச்சைப் பொன்னாங்கண்ணியில் இருக்கும் அத்தனை சத்துக்களும், பயன்களும் சிவப்புப் பொன்னாங்கண்ணிக்கும் உண்டு. ஆனால் பச்சை தான் நாட்டுப் பொன்னாங்கண்ணி என கொண்டாடப்படுகிறது. சிவப்பை சீமைப் பொன்னாங்கண்ணி என்றும் அதில் நாட்டுப் பொன்னாங்கண்ணியைக் காட்டிலும் சத்துக்களும், பயன்களும் குறைவு என்றும் மக்கள் கருதுகிறார்கள்.

வெந்தயக்கீரை...

venthaya_keerai.jpg

  • வெந்தயக் கீரையோடு, நாட்டுக் கோழி முட்டையில் வெள்ளை கரு, தேங்காய் பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு போன்றவற்றை சேர்த்து சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.
  • கபம் சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம்.
  • மந்தமாக உணர்பவர்கள், அல்லது உடல் சோர்வாக உணர்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இது உடலின் செயலாற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக உதவும்.
  • நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும், இது நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர சீரிய முறையில் உதவும்.

புதினாக்கீரை...

pudhina_keerai.jpg

  • இக்கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் பசியைத்தூண்டி உணவிற்கு  ருசியையும் கொடுக்கிறது .
  • வாந்தியையும் கட்டுப்படுத்துகிறது .
  • தொடர்ந்து எடுக்கும் விக்கல் நீங்கும் .
  • மயக்கத்தை நீக்க இக்கீரையை கசக்கி நுகரலாம் .
  • தலைவலிக்கு இதன் சாற்றை   நெற்றியில் பூசலாம் .
  • வாத நோய்க்கும் காய்ச்சலுக்கும் ,வறட்டு இருமலுக்கும்  இது சிறந்த மருந்தாகும் .
  • மாதவிடாய் தாமதமாகும் பெண்கள் இக்கீரையை உலர்த்தி தூள் செய்து  தேனில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதவாது  நீங்கும் .
  • புதினா இலையை ஒரு தம்புளர் நீரில் கொதிக்க வைத்து எடுத்து ஆறிய பிறகு இளசூட்டில் குடித்தால் நன்றாக பசி எடுக்கும் .
  • புதினாவுடன்  இஞ்சியையும் உப்பும் சேர்த்து  அரைத்து தினமும் உணவில் மூன்று வேளை சேர்த்து வந்தால் வாய்நாற்றம்,அஜீரணம் ,பித்தமும் அகலும் .
  • புதினாவை துவையல் செய்து நல்லெண்ணெய் விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட பித்தம் மூட்டு வலி ,ஆஸ்துமா ,ஈரல் சம்பந்த பட்ட நோய்கள், சிறுநீர்  உபத்திரம் நீங்கும் .  

கொத்தமல்லிக்கீரை...

koththamalli_keerai.jpg

 

கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள்.

கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது.

  • கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது.
  • இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது.
  • இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.
  • இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும்.
  • கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.
  • பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும்.
  • முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.

- மேலே பட்டியலிடப்பட்டுள்ள போன்ற கீரைகள், நாம் அடிக்கடி சமைத்து சாப்பிட்டுப் பழகிய கீரை வகைகள்.

 

சுக்காங்கீரை...

sukkang_keerai.jpg

 

  • சுக்காங்கீரை உடலிலுள்ள அதிக வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியைத் தரவல்லது.இது ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு, புதிய இரத்தம் உற்பத்தியாகவும் துணைபுரியும்.
  • பசியின்மையால் சாப்பிட விரும்பாதவர்களுக்கு இந்தக் கீரை பசியைத் தூண்டுவதோடு,சாப்பிடும் ஆர்வத்தை உண்டாக்கும்.
  • பித்த சம்பந்தமான நோய்களை நீக்கவல்லது.பித்த வாந்தி மயக்கம்,நெஞ்சரிப்பு, பித்தத்தலைவலி போன்ற தொல்லைகளை நீக்கும்.
  • வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் இது நிவாரணமளிக்கிறது.வயிற்றுவலியைப் போக்கும்.குடல் பலவீனத்தினால் ஏற்படும் கேடுகளைக் களையும் குடலுக்கு வலுவையும் சீராக இயங்கும் சக்தியையும் அளிக்கிறது.
  • இக் கீரை அதிக குளிர்ச்சியைத் தரவல்லது.அதனால் தொடர்ந்து சாப்பிடாமல் சில சமயங்களில் மட்டும் சாப்பிடலாம்.

முடக்கத்தான் கீரை...

mudakaththan_keerai.jpg

வாரம் ஒருமுறை முடக்கத்தான் ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடலில் தங்கும் தேவையற்ற நச்சு வாயுக்கள் வெளியேறி விடும். வாயு, வாதம், மலச்சிக்கல் உள்ளிட்ட அத்தனை பிரச்னைகளும் அகன்று விடும்.

முள்ளங்கி இலைக்கீரை...

mullangi_keerai.jpg

 

முள்ளங்கி கீரையில் இருக்கு வைட்டமின் எ , வைட்டமின் பி, வைட்டமின் சி இவை அனைத்தும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதுதான், ஆனால் இந்த கீரையை அதிகம் உணவில் உட்கொள்ள கூடாது சிலருக்கு இதனால் பிரச்சனைகள் எழ வாய்ப்புண்டு. வயிற்று கோளாறுகள் அல்லது இதய கோளாறுகள் ஏற்படலாம். அதனால் குறைந்த அளவிலே எடுத்து கொள்ளுங்கள்.

நீர் அடைப்பு தொல்லையா முள்ளங்கி கீரையை சுத்தம் செய்து ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிட சில நாட்களில் பிரச்சனை இருக்காது.

அனைத்து கீரை வகைகளும் கண்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பது போலவே இந்த முள்ளங்கி கீரை கண்களுக்கு நல்ல பார்வை திறனை கொடுக்கும்.

இதில் இருக்கும் புரத சத்துக்கள், கால்சியம் எலும்புகளுக்கு உறுதியை கொடுக்கும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட செய்யும்.

தூதுவளைக் கீரை...

thuthuvalao_keerai.jpg

 

  • தூதுவளை இலையை சிறிய வெங்காயத்துடன் சேர்த்து நல்லெண்ணெயில் வதக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு பின்பு மூன்று நாட்கள் விட்டு மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக 21 நாட்கள் சாப்பிட சுவாசகாசம் நீங்கும்.
  • இலையை அரைத்து அத்துடன் சம அளவு பசு வெண்ணெய், பின்பு 10 கிராம் பொடித்த அரிசித் திப்பிலி, ஓமம், கடுக்காய்த் தோல் சேர்த்துக் கலக்கி சூடு செய்து பிழிந்து கிடைக்கும் நெய்யைத் தேக்கரண்டியளவு தொடர்ந்து 40 நாட்கள் உள்ளுக்குச் சாப்பிட ஷயரோகம் குணமாகும்.
  • தூதுவளைப் பூவை நெய்யில வதக்கி தயிருடன் சாப்பிட விந்து கட்டும், அறிவு விருத்தியாகும். தூதுவளை இலையைத் துவையல் செய்து சாப்பிட மாந்தம், தாது நஷ்டம், இளைப்பு இவைகள் போகும். பருப்புடன் சேர்த்து இதைக் குழம்பு வைத்துச் சாப்பிட மகோதரம் (பெருவயிற்றுநோய்), கர்ண சூலை இவை குணமாகும். தூதுவளை இலைச் சாற்றை காதில் பிழிய காதடைப்பு, காதெழுச்சி முதலிய நோய்கள் குணமாகும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் கீரைகள் எல்லாம் இப்போதும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன. இவற்றையும் கூட நாம் முழங்கால் வலியென்றோ, மூட்டு வலியென்றோ, உடலில் இரும்புச் சத்து குறைவு, நார்ச்சத்து குறைவு போன்ற காரணங்களுக்காகவோ நாம் வாழ்க்கையில் ஒருமுறையேனும் சமைத்துச் சாப்பிட்டிருப்போம்.

இவை தவிரவும் இன்னும் பலவகைக் கீரைகள் உள்ளன. அவற்றை மூலிகைக்கீரைகள் எனப் பெயர் சூட்டி நாம் பெரும்பாலும் சமைத்து உண்பதைத் தவிர்த்து வருகிறோம். சிலவற்றை சமைத்தும் உண்ணக்கூடாது. அவற்றை பாரம்பர்ய சித்த மருத்துவர்களின் உதவியுடன் கஷாயமாகவோ அல்லது குளிகைகளாகவோ உருமாற்றித்தான் உண்ணவோ, அருந்தவோ முடியும். அவற்றுள் சிலவற்றின் பெயர்கள்...

மஞ்சள் கரிசலை...

manjal_karisalaanganni.jpg


பிண்ணாக்குக் கீரை...

pinnakku_keerai.jpg


பரட்டைக்கீரை...

parattai_keerai.jpg


வெள்ளைக்கரிசலைக் கீரை

vellai_karisalanganni_keerai.jpg


கல்யாண முருங்கைக் கீரை...

kalyaana_murungai_keerai.jpg


கீழாநெல்லிக் கீரை...

keeza_nelli_keerai.jpg


நஞ்சுமுண்டான் கீரை அல்லது நச்சுகொட்டைகீரை...

nachchu_kottai_keerai.jpg


தும்பைக்கீரை...

thumbai_keerai.jpg


மணலிக்கீரை...

manali_keerai.jpg


சக்ரவர்த்திக் கீரை...

 

sakravarthi_keerai.jpg


தவசுக்கீரை

thavasu_keerai.jpg


சாணக்கீரை...

இந்தக் கீரையின் புகைப்படம் கிடைக்கவில்லை...

விழுதிக்கீரை...

vizuthi_keerai.jpg


கொடி காசினி...

kodi_kasini.jpg


துயிளிக்கீரை...

இந்தக் கீரைக்கும் படம் கிடைக்கவில்லை. 

ஓமவல்லி அலைஸ் கற்பூரவல்லி கீரை...

karpura_valli_keerai.jpg


துத்திக் கீரை...

thuththi_keerai.jpg

 

வாதநாராயணன் கீரை...

000Vadanarayanan_keerai.JPG

காரகொட்டிக் கீரை, மூக்குதட்டை கீரை, நறுதாளி கீரை...

இந்த மூன்று வகையான கீரைகளுக்கும் படம் கிடைக்கவில்லை.

பொடுதலை இலைக்கீரை...

 

பண்ணைக்கீரை...

pannai_keerai.jpg

 

இப்படி கிட்டத்தட்ட 42 வகைக் கீரைகளைப் பற்றி நாம் இங்கே தெரிந்து கொண்டிருக்கிறோம். இவற்றுள் 20 வகைக் கீரைகளை மட்டுமே வாரத்தில் இருமுறையோ, மூன்று முறையோ உணவாகப் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில வீடுகளில் குழந்தைகள் யாரும் கீரையே உண்பதில்லை. அப்படிச் சொல்வதைக் காட்டிலும் குழந்தைகளை பெரியவர்கள் உண்ணப் பழக்கவில்லை என்று சொல்லலாம். அப்படியான வீடுகளில் வாரம் ஒருமுறையோ 15 நாட்களுக்கு ஒரு முறையோ மட்டுமே கீரை சமைக்கப்படுகிறது. சமைத்த கீரையிலும் பெரும்பாலான பகுதி வீணடிக்கப் படுகிறது. ஏனெனில் சமைத்த கீரையை பிற காய்கறிகளைப் போல ஃப்ரிஜ்ஜில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. அதில் நச்சுத்தன்மை மிகுந்து விடும் என்பதால் சமைத்து உடனே உண்ணத்தக்க உணவாகவே கீரை கருதப்படுகிறது.

குழந்தைகளுக்கு 6 ஆம் மாதம் முதலே கீரையை மசித்து சாப்பிடத் தந்து  பழக்க வேண்டும்.

கீரை வகைகளைப் வதக்கி உண்பதைக் காட்டிலும் மசித்து உண்டால் நிறைந்த பலன் கிடைக்கும், அதன் சத்துக்கள் வீணாவதைத் தடுக்கலாம்.

சிறுவர், சிறுமிகளுக்கு சிறு வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சீரகம், பச்சை மிளகாய், ஒன்றிரண்டு பூண்டுப்பல் இட்டு எண்ணெய் விட்டு வதக்கியும் தரலாம். ஆனால் எந்தக் கீரையாக இருந்தாலும் அதன் குக்கிங் டைம் அதாவது சமைக்கும் நேரம் 3 முதல் 5 நிமிடமாக மட்டுமே இருக்க வேண்டும். அதைக் காட்டிலும் அதிக நேரம் சமைத்தால் அதன் சத்துக்கள் கெடும் பின்னர் அந்தக் கீரையை உண்பதால் எந்தப் பலனும் கிட்டாது.

எனவே இன்று முதல் தினம் ஒரு கீரை என்ற மந்திரத்தை மனதில் ஒலிக்க விட்டு தினம், தினம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கீரை வகைகளில் முதல் 20 ல் ஏதோ ஒரு கீரையை மசித்தோ, வதக்கியோ, சாம்பாரில் அல்லது காரக் குழம்பில் கலந்தோ சமைத்துக் கொடுத்து உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு உண்ணப் பழக்குங்கள்.

குழந்தைகளே கீரை சாப்பிட விரும்புவார்கள் எனில் நிச்சயம் பெரியவர்களுக்கும் அந்தப் பழக்கம் தானாக கைவந்து விடும். பிறகு சாப்பாட்டில் உப்பில்லாமல் கூட உண்டு விடுவார்களாயிருக்கும் ஆனால் கீரை இல்லாமல் மட்டும் உண்ணவே மாட்டோம் என்று பெருமிதமாகச் சொல்லிக் கொள்ளலாம்.

 

 

 

http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/jun/08/inadian-spinach-verieties-how-many-of-spinaches-ypu-know-in-ypur-whole-life-2935686--8.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

p69.jpg

உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியம். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். ரத்தசோகை பிரச்னைக்கும் சிறந்த தீர்வு இந்தக் கீரைதான்.

கீரைகளின் இயல்புத்தன்மை, அதில் அடங்கியுள்ள சத்துக்கள் என்னென்ன, யார் சாப்பிடலாம், யாரெல்லாம் தவிர்க்கலாம் என்பன உட்பட பல்வேறு பலன்களை விளக்குகின்றனர்      ஹெர்ப்ஸ் அலைவ் மையத்தின் ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால் மற்றும் நல்ல கீரை ஜெகன்னாதன்.

கீரை உணவு வகைகளை ரசனையோடு ருசியாக செய்துகாட்டி அசத்தியிருக்கிறார்கள் பாரம்பரிய சமையல்கலை நிபுணர் சுந்தரவல்லி திருநாராயணன் மற்றும் செஃப் ராஜா. தினம் நம் உணவில் கீரை இடம்பெற இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும்.

கீரைகளை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்?p70.jpg

dot.jpg   கீரைகள் குறுகிய காலப் பயிர்வகைகள் என்பதால், ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் கீரைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

dot.jpg   கீரைகள் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும். வாடி வதங்கி இருக்கக் கூடாது.

dot.jpg   பூச்சிகள் அரித்த கீரையைத் தவிர்த்திடுங்கள்.

கீரை குறிப்புகள்..

dot.jpg  கீரைகளை 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்டு அலசினால், அதில் உள்ள மண் போகும், பூச்சிக்கொல்லியின் வீரியம் குறையும்.

dot.jpg   பூச்சிகள், கிருமிகள், பூச்சிக்கொல்லிகள், மாசு போன்றவற்றால் கீரைகள் பாதிக்கப்பட்டு வளர்வதால், கீரைகளை சமைப்பதற்கு முன், நீரில் நன்றாகக் கழுவுவது அவசியம்.

dot.jpg   கீரைகளைப் பொரிக்கவோ, நீண்ட நேரம் வேகவைக்கவோ கூடாது. அதே நேரம், போதுமான அளவு வெந்திருக்க வேண்டும்.

dot.jpg   கீரைகளை வேகவைக்க, சிறிது அளவு நீர் ஊற்றினாலே போதும்.

dot.jpg   மழை, வெயில் என அனைத்துக் காலங்களிலும் கீரைகளை சாப்பிடலாம். ஆனால், அதன் இயல்பைப் பொறுத்து கீரைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

dot.jpg   இரவில் கீரை சாப்பிடவே கூடாது. கீரைகளில், நார்ச்சத்துக்கள் மிகுதியாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகாது.

dot.jpg   கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. கீரை சாத்வீக உணவு என்பதால் இவை ஒன்றாக சேர்ந்தால் மலச்சிக்கலையும், வயிற்றுப் பிரச்னைகளையும் உருவாக்கும்.

dot.jpg   கீரையைவிட பருப்பின் அளவு குறைந்திருப்பதே நல்லது. சமமாகவோ, அதிகமாகவோ இருக்கக்கூடாது.

ரத்த சோகையை விரட்டும் முருங்கை

முருங்கை மரத்தில் கிடைக்கும் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமே.  அதிகச் சத்துக்கள் நிறைந்தது முருங்கைக் கீரை. அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்தக் கீரை, மிகவும் குளிர்ச்சித்தன்மை கொண்டது.

72.jpg

சத்துக்கள்: கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் சி, இரும்புச் சத்துகள், நார்சத்துக்கள் உள்ளன. அதிக அளவில் இருப்பவை இரும்புச் சத்தும், வைட்டமின் சியும்தான்.

பலன்கள்: இரும்புச் சத்தும் வைட்டமின் சியும் சேர்ந்த கலவை, ரத்தத்தை உற்பத்தி செய்யும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்து. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வாரம் இருமுறை சாப்பிட்டுவந்தால், முடி உதிர்தல் நிற்கும். இளநரையைப் போக்கும். கண் பார்வைத் திறன் அதிகரிக்கும். உடல்சூடு தணியும். உடல்நலத்தை அதிகரிக்கும்.

டிப்ஸ்: ரத்தசோகை பிரச்னை உள்ளவர்கள் வாரம் இருமுறை,  முருங்கைக் கீரை சூப் வைத்து, அதில் எலுமிச்சைச் சாறை சிறிதளவு சேர்த்து சாப்பிடலாம்.

கவனிக்க: கல்லீரலில் பிரச்னையிருப்பவர்களுக்கு செரிமானக் குறைபாடு இருக்கும். முருங்கையில் அதிகளவு நார்ச்்சத்துக்கள் இருப்பதால், அவர்களால் இந்த உணவை ஜீரணிக்க முடியாது. மற்ற அனைவரும் சாப்பிடலாம்.

ஊட்டமளிக்கும் முளைக்கீரை

எளிதில் கிடைக்கக்கூடிய கீரை இது. பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கின்றன. இரண்டு வகைக் கீரைகளும் உடலுக்கு நல்லதுதான். இது குளிர்ச்சித்தன்மையுடையது. ஊட்டமளிக்கும் சத்துகள் இதில் மிகுதியாக உள்ளன.

73.jpg

சத்துக்கள்: கால்சியம், புரதம், வைட்டமின் ஏ, பி, மற்றும் இரும்பு, சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புக்கள், ஆக்சாலிக் அமிலம் இதில் நிறைவாக உள்ளன.

பலன்கள்: கண்களுக்கு குளிர்ச்சியூட்டி பார்வையைத் தெளிவாக்கும். மாலைக்கண் நோய்க்கு சிறந்த மருந்து. மூளை வளர்ச்சிக்கு உதவும். சருமத்துக்குக் கவசமாகும். பசியைத் தூண்டும். உடல் எடை அதிகரிக்கும். பலவீனமாக இருப்பவர்கள், அதிக உடல் சூடு கொண்டவர்கள் மற்றும் பித்த உடல் உள்ளவர்கள் இந்தக் கீரையை தாராளமாகச் சாப்பிடலாம்.

டிப்ஸ்: சிலர் வாய்ப்புண்ணால் அவதிப்படுவார்கள். முளைக்கீரையின் ஐந்து இலைகளை 100 மி.லி நீரில் கொதிக்கவைத்து,  நீர் பாதியாக சுண்டவிட வேண்டும். அந்த நீரில் வாய் கொப்பளித்தால், வாய்ப்புண் குணமாகிவிடும்.

கவனிக்க: இது குளிர்ச்சித்தன்மைகொண்டது என்பதால் ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள் தவிர்க்கவும்.

உடல் வலிமைக்கு அரைக்கீரை

மிகவும் குளிர்ச்சித்தன்மை வாய்ந்தது. எந்த வகை நோயாளிகளுக்கும் ஏற்றது. இலைகளுடன் தண்டுகளையும் சேர்த்து சாப்பிடலாம்.

74.jpg

சத்துக்கள்: புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் நிறைவாக உள்ளது.

பலன்கள்: உடல் வலுப்பெறும். ரத்தத்தை அதிகரிக்கும். பிரசவித்த பெண்களுக்கு உடனடி ஊட்டத்தை அளிக்கும். பால் அதிகம் சுரக்கச் செய்யும்.  நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். சோர்வு, உடல் வலியைப் போக்கி புத்துணர்வு தரும். ரத்த நாளங்கள் நன்கு செயல்படும். வாயுப்  பிரச்னையைப் போக்கும்.

  டிப்ஸ்: சின்ன வெங்காயம், தக்காளியை வதக்கி கீரை சேர்த்து வெந்ததும், உப்பு, புளி சேர்த்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, துவையலாக அரைத்தும் சாப்பிடலாம்.

கவனிக்க: குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைவருமே  சாப்பிடலாம்.

கண்களுக்கு பொன்னாங்கண்ணி

அனைத்து சூழல்களிலும் வளரும் தன்மைகொண்டதால், எந்தக் காலத்திலும் மிக எளிதாகக் கிடைக்கும். இதில் நிறைய வகைகள் இருந்தாலும் நாட்டுப் பொன்னாங்கண்ணியே சமையலுக்குப் பயன்படுகிறது. இந்தக் கீரை குளிர்ச்சித்தன்மை கொண்டது.

75.jpg

சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து, பீட்டாகரோட்டீன் உள்ளன. கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாது உப்புக்கள் உள்ளன.

பலன்கள்: சிறு குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்னை இருந்தால், இதைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிடுவதுடன், கண்களுக்குப் பயிற்சியும் செய்துவந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும். கண்களில் நீர்வழிதல், கட்டி, தொற்று, மங்கலான பார்வை போன்ற கண் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் தீரும். மாலைக்கண் நோய்கூட குணமாகும். மூளை, நரம்புகள் சீராக இயங்கும். எலும்புகளும் வலிமை பெறும். சருமம் பொலிவுறும். கூந்தல் நன்றாக வளர உதவும்.

டிப்ஸ்: பொன்னாங்கண்ணி இலைகளின் சாறோடு, பசு வெண்ணெய் கலந்து, பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்தால், கண்கள் குளிர்ச்சி அடையும்.  

கவனிக்க: பொன்னாங்கண்ணி யாருக்கும் எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. அனைவரும் சாப்பிடலாம்.

மூலத்தை சரியாக்கும் பசலைக் கீரை

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது. நீர்ச்சத்து நிறைந்த கீரை. சிறுநீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும் வல்லமை பெற்றது.

76.jpg

சத்துக்கள்: வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளெக்ஸ், புரதம், இரும்பு, கால்சியம் போன்றவை உள்ளன.

பலன்கள்: பைல்ஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு பசலை மிகவும் நல்லது. ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்களை, எந்தவித சிகிச்சைகளும் இல்லாமல், இந்தக் கீரையின் மூலமே குணப்படுத்திவிட முடியும்.  நீர்க்கடுப்பு, நீரடைப்பு குணமாகும். சருமப் பிரச்னைகள் தீரும். நோய்த் தொற்றைப் போக்கும்.  வாய்ப்புண்களை ஆற்றும்.

டிப்ஸ்: கருணைக் கிழங்கு, வெங்காயம் மற்றும் பசலை சேர்த்து சமைத்து, சாப்பிட்டுவர ஆரம்பக்கட்ட மூல நோயைக் குணப்படுத்தும்.  

கவனிக்க:சைனஸ், வீசிங் பிரச்னை இருப்பவர்கள் மழைக்காலத்தில் இந்தக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.  

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் சிறு கீரை

பெயர்தான் சிறு கீரை. இதன் பலன்களோ ஏராளம். தண்டுகள் பெரிதாக இருக்கும். ஆனால் இலைகள் சிறியதாக இருக்கும். சிறு கீரை சூடு என்பதால், குளிர்ச்சித்தன்மை உள்ள காய்களுடன் சேர்க்கக் கூடாது. இது மலமிளக்கியாகவும் செயல்படும்.

77.jpg

சத்துக்கள்: கலோரி, புரதம், பாஸ்பரஸ், நார்ச்சத்து போன்றவை உள்ளன. இரும்பு, கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

பலன்கள்: குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தினமும் இந்தக் கீரையைக் கொடுத்துவரலாம். கூடவே ஸ்கிப்பிங் போன்ற உடற்பயிற்சியும் செய்துவந்தால் அவர்களின் உயரம் அதிகரிக்க உதவும். நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். மெனோபாஸ் நிலையை அடைய இருக்கும் பெண்களுக்கு, சிறுகீரை மிகவும் நல்லது. கல்லீரலுக்கு நன்மையை செய்யும்.

டிப்ஸ்: 4 இலையுடன் 4 மிளகைச் சேர்த்து சாப்பிட்டு வர, சரும அலர்ஜி குணமாகும்.

கவனிக்க: பித்த உடல்காரர்கள், அதிக உடல் வெப்பம் கொண்டவர்கள், இந்தக் கீரையை அதிகமாக சாப்பிட வேண்டாம்.

மூட்டுவலிக்கு முடக்கத்தான்

கை, கால்கள் முடங்கிப்போய்விடாமல் தடுக்கிறது என்பதால் இதற்கு முடக்கத்தான் என்று பெயர். மருத்துவ குணங்கள் நிறைந்தது.  

சத்துக்கள்: புரதம், மாவுச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்தது. மிகக் குறைந்த அளவில் கொழுப்புச் சத்தும் உள்ளது.

பலன்கள்: 40 வயதைக் கடந்தவர்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படும். முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், எலும்புகளுக்கு உறுதியைத் தரும். வாதத்தைக் கட்டுப்படுத்தும். மூட்டு வலி உள்ளவர்கள் இவற்றை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர, வலி இடம் தெரியாமல் நீங்கும். மூட்டுகளில் வீக்கம் இருப்பவர்களும் சாப்பிடலாம். கருவுற்றிருக்கும் பெண்கள் சாப்பிட்டுவர, கால் மூட்டு வலி வராது.

டிப்ஸ்: இதை அப்படியே சாப்பிடாமல், நறுக்கி அல்லது அரைத்து, தோசை மாவுடன் கலந்து சாப்பிடலாம். ஆனால் மாவைப் புளிக்கவைக்கக் கூடாது.

கவனிக்க: அனைவரும் சாப்பிட ஏற்றது.

78(1).jpg

வயிற்றுப் பிரச்னைக்கு வெந்தயக்கீரை

குட்டிக் குட்டி இலைகளாக, சிறிய தண்டுகளுடன் இருக்கும் வெந்தயக்கீரை, லேசான கசப்புச் சுவை கொண்டது.

சத்துக்கள்: புரதம், கால்சியம், இரும்பு உள்ளிட்ட தாதுஉப்புக்கள், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ் இதில் நிறைய உள்ளன.

பலன்கள்: உடலின் பலத்தை அதிகரிக்கும். நோய் எதிர்பாற்றலை உருவாக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னையை குணமாக்கும். மாதவிடாய் கோளாறுகளை நீக்கும். வாயுப் பிரச்னை குணமாகும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி சீராகவைக்கும். வயிற்றுக் கோளாறுகளைப் போக்கும். உடல்சூடு தணியும். முகப்பரு தொல்லை, சருமப் பிரச்னைகள் குணமாகும். குடல்புண்களை ஆற்றும்.

டிப்ஸ்: வெந்தயக்கீரையை கோதுமை மாவில் சேர்த்து  சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். பாசிப்பருப்பு சேர்த்து செய்தால் இதன் கசப்புச் சுவை நீங்கும்.

கவனிக்க: சளி, இருமல் போன்ற பிரச்னை உள்ளவர்கள் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

வாய்ப்புண் குணமாக்கும் மணத்தக்காளி கீரை

சுக்குட்டிக் கீரை என்றும் அழைக்கப்படும் இந்தக் கீரை, அதிக மருத்துவக்குணம் வாய்ந்தது. குரல் வளத்துக்கு ஏற்றது. அடிக்கடி தொண்டை கட்டிக்கொள்ளும் பிரச்னை இருப்பவர்கள் இதை அதிகமாகச் சாப்பிடலாம்.

80.jpg

சத்துக்கள்: வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், மாவுச்சத்து, புரதம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் உள்ளன. கொழுப்புச் சத்து மிகுந்த அளவில் உள்ளது.

பலன்கள்: வாய்ப்புண், வயிற்றுப்புண்ணைக் குணமாக்கும். அல்சருக்கு அற்புத மருந்தாகச் செயல்படுகிறது. களைப்பு, சோர்வு நீங்கும். தூக்கம் இன்றி தவிப்பவர்களுக்கு அருமருந்து. கல்லீரலுக்கு மிகவும் நல்லது. மலச்சிக்கல் நீங்கும். தொண்டைக் கரகரப்பு சரியாகும். உடல் வெப்பம் தணியும். இதில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகமாக உள்ளது. கருப்பை குறைபாட்டை நீக்கும்.

டிப்ஸ்: கீரைச் சாறுடன் 10 மி.லி முட்டைகோஸ் சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட வாய்ப்புண் இடம் தெரியாமல் மறையும். வாரம் ஒருமுறை மணத்தக்காளி வத்தல் குழம்பு செய்து சாப்பிடலாம். வயிற்றிலிருக்கும் பூச்சிகளை அகற்றும்.

கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.

புத்துணர்வு தரும் புளிச்ச கீரை

புளிப்புச் சுவை கொண்டுள்ள இந்தக் கீரையை அனைத்து வகையிலும் செய்து சாப்பிடலாம். ஆனால், புளியின் அளவைக் குறைப்பதே நல்லது. இரண்டு புளிப்பும் சேர்ந்து சுவையை மாற்றிவிடும். மேலும் இதனுடன் எள் சேர்த்தும் சாப்பிடலாம்.

81.jpg

சத்துக்கள்: வைட்டமின் பி, இ, சி, பொட்டாசியம் ஆகியவை உள்ளன.

பலன்கள்: சரும வறட்சியைப் போக்கும். சருமம் அழகு பெறும். பசியின்மையைப் போக்கும். மந்தத்தை நீக்கும். சருமத்தில் உருவாகும் சிறு ரத்தக் கட்டிகளைப் போக்கும். ரத்த நாளங்களை சீர்செய்யும்.

டிப்ஸ்: சிறிது எண்ணெயில் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, கீரையை சேர்த்து பிரட்டி, உப்பு சேர்த்து அரைத்து, துவையலாக செய்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.  வயிறு மந்தம் நீங்கும். புளிச்ச கீரையை நீரில் கொதிக்கவிட்டு அந்த நீரைக் குடித்துவந்தால், உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும்.

கவனிக்க: மூட்டுவலிப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்கலாம்.

நினைவாற்றலைப் பெருக்கும் வல்லாரை

சூடும் அல்லாத குளிர்ச்சியும் இல்லாத சமநிலை இயல்பு கொண்ட கீரை இது.

சத்துக்கள்: கால்சியம், வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, தாது உப்புக்கள் ஆகியவை உள்ளன.

82.jpg

பலன்கள்: நினைவுத்திறன் அதிகரிக்கும். இழந்த நினைவாற்றலைக்கூட திரும்பப் பெறலாம். ஆட்டிசம் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது. அவர்களின் அதீத இயல்பு குணத்தைக் கட்டுப்படுத்தி, செய்யும் செயலில் நினைவாற்றலைப் பெருக்கச் செய்யும். கவனச் சிதறல்களைக் குறைக்கும். உடல்சோர்வு, நரம்புத் தளர்ச்சி, பார்வை மங்கல் குணமாகும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

டிப்ஸ்: வல்லாரை சாறுடன் ஒரு ஸ்பூன் பசு நெய் கலந்து குடிக்க, பிஞிலி என்ற நல்ல கொழுப்பு அதிகமாகும்.  

கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.

சளி தொல்லைக்கு தூதுவளை

தூதுவளை சூடு என்பதால், இதை மூலிகையாகவே பயன்படுத்துவர். இதைக் கஷாயமாக செய்து குடிக்கலாம். கசப்பான சுவையைத் தரும் கீரை என்பதால், மற்ற கீரைகளைப் போல சாப்பிட முடியாது.

83.jpg

சத்துக்கள்: வைட்டமின் சி, இரும்பு உள்ளிட்ட தாது உப்புக்கள் உள்ளன.

பலன்கள்: ஜலதோஷம் நீங்கும். நுரையீரலை சுத்தப்படுத்தும் தன்மை இந்தக் கீரைக்கு உண்டு. தொண்டையில் அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்று குணமாகும். நரம்புகளை வலுப்படுத்தும்.

டிப்ஸ்: தூதுவளைப் பொடியை 48 நாட்கள் தேன் கலந்து சாப்பிட்டுவர, தொண்டை வலி நீங்கும்.

கவனிக்க: பைல்ஸ் நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

பசியைத் தூண்டும் முள்ளங்கி கீரை

முள்ளங்கியைப் பயன்படுத்துவோர் அதன் இலைகளை தூக்கி எறிந்துவிடுகின்றனர். முள்ளங்கியைப் போல அதன் கீரையும் சத்துக்கள் மிகுந்தது.

சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து, நீர்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் உள்ளன.

84.jpg

பலன்கள்: சிறுநீரைப் பெருக்கும். நீரடைப்பை நீக்கும். சிறுநீரகக் கற்களைக் கரைக்கும். உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும். பசி எடுக்காமல் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிட, நன்றாகப் பசிக்கும். கண் பார்வை அதிகரிக்கும்.

டிப்ஸ்: முள்ளங்கி இலையை சாறாக்கி 5 மி.லி அளவு சாப்பிட்டுவர மலச்சிக்கல் நீங்கும்.

கவனிக்க: சளி, ஆஸ்துமா, சைனஸ் போன்ற நோய் உள்ளவர்கள் இந்தக் கீரை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். ஒவ்வாமை உள்ளவர்கள் சாப்பிட வேண்டாம்.

புற்றுநோயைத் தடுக்கும் பாலக்கீரை

குளிர்ச்சித்தன்மை கொண்டது. பெரிய பெரிய இலைகள் கொண்டதால், கழுவுவதற்கு மிகவும் சுலபம்.

சத்துக்கள்: வைட்டமின் கே, ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், காப்பர், இரும்பு, அயோடின், ஃபோலிக் அமிலம், பீட்டாகரோட்டின், ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் நிறைவாகக் கொண்டது.  

85.jpg

பலன்கள்: உடல் சூட்டைத் தணிக்கும். மூளை வளர்ச்சிக்கு உதவும். சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். ரத்த உற்பத்திக்கு உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. ஃபோலிக் அமிலம் இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு நல்லது.

டிப்ஸ்: பருப்புடன் சேர்க்காமல் தனியாக சமைத்துச் சாப்பிடுவது நல்லது. 10 கிராம் பாலக்கீரையுடன், அரை டீஸ்பூன் சீரகம், 2 பூண்டு பல் சேர்த்து தண்ணீர்விட்டு, கொதித்ததும் வடிகட்டிக் குடித்தால், வெள்ளைப்படுதல் குணமாகும்.

கவனிக்க: சைனஸ், ஆஸ்துமா நோயாளிகள் மழைக் காலங்களில் சாப்பிடக் கூடாது.

 

ரத்த அணுக்களை அதிகரிக்கும் கறிவேப்பிலை

தாளிக்கப் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலையின் சத்துகளை மனதில் பதித்துக்கொண்டால், ஓரத்தில் ஒதுக்க மனம் வராது. அனைத்து சமையலுக்கும் வாசனையைக் கூட்ட மட்டுமல்லாது, தனியாக சமைத்தும் சாப்பிடலாம்.

சத்துக்கள்: இரும்பு சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, சி, கால்சியம் ஆகியவை உள்ளன.

பலன்கள்: ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்கும். கண் பார்வையைத் தெளிவாக்கும். கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட, கை, கால் நடுக்கம் நிற்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். நகங்கள் எளிதில் உடையாது, வலிமை பெறும். நினைவுத்திறன் அதிகரிக்கும். சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து. வீக்கம், கட்டிகள் இருந்தால் குறையும். உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை சமன் செய்யும். கூந்தல் கருப்பாகும். முடி உதிர்தலைத் தடுக்கும். உடல் சூடு தணியும். இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்கும்.

டிப்ஸ்: கறிவேப்பிலை, இஞ்சி, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், கொத்தமல்லி சேர்த்து வதக்கி அரைத்துத் துவையலாகவும் செய்யலாம்.  கறிவேப்பிலையை சிறிது எண்ணெயில் வதக்கி, மிளகு, உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடியாகவும் செய்துகொள்ளலாம். கூந்தல் செழிப்பாக வளரும்.

கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.

86.jpg

உடல் தூய்மைக்கு கொத்தமல்லி

உணவை அலங்கரிப்பதற்காக மட்டுமே கொத்தமல்லியைப் பயன்படுத்துகிறோம். ஏதோ கடைசியில் சேர்க்கும் வாசனைப் பொருள் என்ற எண்ணமும் பலருக்கு உண்டு. ஆனால் இதிலிருக்கும் சத்துக்கள் மிகுந்த நன்மை தரக்கூடியவை.

சத்துக்கள்: வைட்டமின் பி1, பி2, சி, புரதம், கால்சியம், நார்ச்சத்து, ஆக்சாலிக் அமிலம் இதில் உள்ளன.

பலன்கள்: அதிக மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பக்கவிளைவைக் குறைத்து, மருந்துக் கழிவை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் வல்லமை பெற்றது. நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை (மெட்டல்ஸ்) வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக்கும். ரத்த சோகையைக் குணப்படுத்தும். ரத்தத்தை சுத்திகரிக்கும். பித்தத்தால் ஏற்படும் வாந்தியைப் போக்க, கொத்தமல்லித் துவையலை சாப்பிடலாம். சருமத்தை சீராக்கி பொலிவடையச் செய்யும்.

டிப்ஸ்: ஒரு டம்ளர் கொத்தமல்லி சாறை வாரம் ஒருமுறை குடித்துவர, நச்சுக்கள், உணவோடு சேர்ந்துள்ள பூச்சி மருந்துகள், ரசாயனங்களை வெளியேற்றும்.

கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.

மலச்சிக்கல் தீர்க்கும் அகத்திக் கீரை

அகத்தை சுத்தப்படுத்துவதால் அகத்திக் கீரை என பெயர் வந்தது.  சிறு கசப்புச் சுவை கொண்டது.

சத்துக்கள்: இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, சி, கால்சியம், தாது உப்புக்கள், தயாமின், ரிபோஃப்ளேவின், மாவுச்சத்து, புரதம் ஆகியவை இதில் உள்ளன.

பலன்கள்: பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். இதை சாப்பிடுவதால் உடல் சுத்தமாகும். டீவார்மிங்' செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதில் உள்ள கசப்புச் சுவை குடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றும். மலச்சிக்கலைப் போக்கவல்லது. குடல்புண், அரிப்பு, சொரி, சிறங்கு போன்ற சரும நோய்கள் விலகும். உடல் சூட்டைத் தணிக்கும்.

டிப்ஸ்:  இந்தக் கீரையை நன்றாக வேகவைக்க வேண்டும். பருப்பை வேகவைத்து, பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து பொரியலாக செய்து சாப்பிடலாம்.

கவனிக்க: மருந்து சாப்பிடுபவர்கள் இந்தக் கீரையைத் தவிர்க்கலாம். அனைவருமே இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம்.  தினமும் சாப்பிடக் கூடாது.

87.jpg

சோர்வைப் போக்கும் தவசி கீரை

இதை ஹார்லிக்ஸ் கீரை, மல்டி வைட்டமின் கீரை என்றும் சொல்வார்கள்.

சத்துக்கள்: இரும்புச் சத்து, மல்ட்டி வைட்டமின்கள் இதில் அதிக அளவு இருக்கிறது.

பலன்கள்: ரத்த சோகையைப் போக்கும். சோர்வாக இருக்கும் உடல், புத்துணர்வு பெறும். ஆண்மை குறைபாடு நீங்கும்.

டிப்ஸ்: சாம்பாரில் சேர்த்து இந்தக் கீரையை சாப்பிட்டால், சுவை அலாதியாக இருக்கும்.

கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.செரிமானத்துக்கு புதினாசட்னி, ஜூஸ் என எந்த வகையில் சமைத்தாலும் இதன் சத்துக்கள் நீங்காமல் அப்படியே இருப்பது இதன் சிறப்பு.

செரிமானத்துக்கு புதினா

சட்னி, ஜூஸ் என எந்த வகையில் சமைத்தாலும் இதன் சத்துக்கள் நீங்காமல் அப்படியே இருப்பது தான் சிறப்பு.

90.jpg

சத்துக்கள்: நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, தயாமின் உள்ளன.

பலன்கள்: உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். சரும வறட்சியைப் போக்கும். அசைவ உணவுடன் சேர்க்கும்போது செரிமானம் எளிதாகும். மாதவிலக்கு பிரச்னைகள்கூட விலகும். ரத்தத்தை சுத்திகரிக்கும் வல்லமை பெற்றது.  மழைக்காலத்தில் டீயில் போட்டு குடிக்கலாம்.

டிப்ஸ்: புதினா சாதம், புதினா துவையல், புலாவ் போன்றவை செய்து சாப்பிடலாம்.

கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.

 

புண்களை ஆற்றும் பருப்பு கீரை

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில்கூட இந்தக் கீரை மிகவும் பிரபலம்.

சத்துக்கள்: இரும்புச் சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, தாது உப்புக்கள் உள்ளன

91.jpg

பலன்கள்: வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். இதன் சாறை புண்களின் மீது தடவினால், புண் குணமாகும். வியர்க்குரு, சருமப் பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு அருமருந்தாக இருக்கிறது. உடல் உஷ்ணம் குறையும். எரிச்சல், நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாகும்.

டிப்ஸ்: கீரையுடன், பாசிப்பருப்பை வேக வைத்து கடைந்து, தக்காளி, பூண்டு, வெங்காயம் சேர்த்து, கூட்டு போல செய்து சாப்பிடலாம்.

கவனிக்க: அனைவரும் சாப்பிட ஏற்றது.

கீரை ரெசிப்பிகள்

வல்லாரைகோதுமை தோசை

தேவையானவை: வல்லாரைக் கீரை, கோதுமை மாவு, பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு.  

p80.jpg

செய்முறை: கீரையைப்  பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.   கோதுமை மாவை தோசை மாவுப்பதத்தில் கரைத்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.  தோசைக் கல்லில் தோசையாகச் சுட்டு எடுக்கலாம்.

பலன்கள்: ஞாபகசக்தி அதிகரிக்கும்.  ஊட்டச்சத்து மிக்கது என்பதால், பெண்களுக்கும்  குழந்தைகளுக்கும் ஏற்றது.

வெந்தயக்கீரை  பருப்புக் குழம்பு

தேவையானவை: பாசிப்பருப்பு, வெந்தயக்கீரை  தலா 50 கிராம்,  சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு, எண்ணெய்  தேவையான அளவு.

p81.jpg

செய்முறை: பருப்பையும் கீரையையும் வேகவைத்து, இரண்டையும் நன்றாகக் கடைய வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கி, கடைசலில் கொட்ட வேண்டும். இதைக் கொதிக்கவைத்து இறக்கினால், குழம்பு தயார். சாதத்துடன் சாப்பிட ஏற்றது.

பலன்கள்: வெந்தயக்கீரை புரதம், தாது நிறைந்தது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

பசலைக்கீரைக் கடைசல்

தேவையானவை: பசலைக்கீரை, வெந்தயம், இஞ்சி, பூண்டு, உப்பு,  சின்ன வெங்காயம்  தேவையான அளவு.

p82.jpg

செய்முறை: கீரையை நன்றாக வேகவைத்து கடைந்துகொள்ள வேண்டும். எண்ணெயில் இஞ்சித் துண்டு, உப்பு, சின்ன வெங்காயம், வெந்தயம் தாளித்து, கடைசலில் சேர்க்க வேண்டும்.  

பலன்கள்: பசலைக்கீரை மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு.ஆஸ்துமா உள்ளவர்கள் கோடைக்காலங்களில் மட்டுமே இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரைக்கீரை சின்ன வெங்காயக் குழம்பு

தேவையானவை: அரைக்கீரை, சின்ன வெங்காயம்,  கடுகு, மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், தனியா தூள், எண்ணெய்  தேவையான அளவு.

p83.jpg

செய்முறை: கீரையில் சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்க வேண்டும். சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள், தனியா தூள், காய்ந்த மிளகாய் இவற்றை எண்ணெயில் தாளித்து, கீரைக் கடைசலில் கொட்ட வேண்டும். நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

பலன்கள்: கண் பார்வையைத் தெளிவாக்கும். ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ரத்தக் குழாய்களைப் பாதுகாக்கும்.

கொத்தமல்லிப் பொடி

தேவையானவை: கொத்தமல்லி  ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு  2 டீஸ்பூன், பெருங்காயம்  3 சிட்டிகை, காய்ந்த மிளகாய்  2, புளி  சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு  தேவையான அளவு.  

p84.jpg

செய்முறை: கொத்தமல்லியை மண் போக நன்றாக அலசி, செடியின் வேர்ப் பகுதியை நீக்கி, பொடியாக நறுக்கி, துணியில் போட்டு 4, 5 மணி நேரம் நிழலில் உலர்த்தி எடுக்கவும். ஒரு இரும்பு கடாயில் உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து, சிவக்க வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, அந்தச் சூட்டிலேயே புளியைச் சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு வறுத்துக்கொள்ளவும்.

பருப்புக் கலவை, புளி, கொத்தமல்லி, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்ததை ஒரு தட்டில் பரப்பி, 3  4 நாட்கள் நிழலில் உலர்த்தி, காற்றுப் புகாத ஒரு டப்பாவில் போட்டுப் பத்திரப்படுத்தவும். சூடான சாதத்தில் இந்தப் பொடியைப் போட்டு, நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். தோசை, இட்லி மற்றும்  தயிர்சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

பலன்கள்: சிறுநீரகத்தை சுத்தம் செய்யும். உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றும்.  

நச்சுக்கெட்ட கீரை கூட்டு

இந்தக் கீரையைப் பேச்சுவழக்கில், லஜ்ஜை கெட்ட கீரை' என்றும் அழைப்பார்கள். ஆனால், உண்மையில் இதன் பெயர், நச்சகற்றி கீரை' என்பதே.  வீடுகளின் முன்பக்கம் அழகுக்காக, குரோட்டன்ஸ் போல வளர்க்கப்படும் இந்தக் கீரை, சத்துக்களின் பெட்டகம்.

p85.jpg

தேவையானவை: கீரை  2 கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு  அரை கப், உப்பு  தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம்  தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  2, எண்ணெய்  ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைக்கவும். கீரையை நன்றாக அலசிக் கழுவி, பொடியாக நறுக்கவும். கீரை, பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு வேகவைத்து தேவையான உப்பு சேர்க்கவும்.  எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, சீரகம், பெருங்காயம் சேர்த்து, மிளகாயைக் கிள்ளிப்போட்டு, கீரைக் கலவையில் சேர்க்கவும். நன்றாகக் கலந்து பரிமாறவும்.

பலன்கள்: உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, ஆரோக்கியம் காக்கும்.  

அகத்திக் கீரை சுண்டல்

தேவையானவை: அகத்திக் கீரை  2 கைப்பிடி, பாசிப்பருப்பு  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம்  தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  1, எண்ணெய்  ஒரு டீஸ்பூன்.

p86.jpg

செய்முறை: பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். மிளகாயைக் கிள்ளிக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய்விட்டு, தாளித்த பொருட்களைச் சேர்த்து வதக்கி, ஊறவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, மூடி போட்டு வேகவைக்கவும். மிகவும் குழைய வேகவிடக் கூடாது. பருப்பு வெந்ததும், கீரையை உப்பு சேர்த்து வதக்கி, மூடி போட்டு இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.  

குறிப்பு: அகத்திக் கீரை ஃப்ரெஷ்ஷாகக் கிடைக்கவில்லையெனில், கீரையைப் பக்குவப்படுத்தி உபயோகிக்கலாம்.  

பக்குவப்படுத்தும் முறை: அகத்திக் கீரை அதிகமாகக் கிடைக்கும் சமயத்தில் வாங்கி, ஆய்ந்து, அலசி, ஒரு துணியில் போட்டு, வீட்டுக்குள்ளேயே நிழலான இடத்தில் 2  3 நாட்கள் உலரவைத்தால், ஈரம் இல்லாமல் காய்ந்துவிடும். அந்தக் கீரையை, காற்றுப் புகாத டப்பாவில் போட்டுப் பத்திரப்படுத்தலாம்.  தேவையான சமயங்களில் ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீரில் போட்டு, 2 மணி நேரம் ஊறவைத்தால், அப்போது பறித்த கீரை போல மாறிவிடும்.

பலன்கள்: எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.  குடல் புண்ணைப் போக்கும். மலச்சிக்கலுக்கு நல்ல மருந்து.  

தவசி கீரை பொரியல்

தேவையானவை: துளிரான தவசி கீரை  தேவையான அளவு, பெரிய வெங்காயம், தக்காளி  தலா 1, பச்சை மிளகாய்  2, உப்பு  தேவையான அளவு.  எண்ணெய்  ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம்  தலா அரை டீஸ்பூன்.

p87.jpg

செய்முறை: கீரையைக் கழுவி நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம் தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய துளிர் கீரையைப் போட்டு, உப்பு சேர்த்து இரண்டு முறை கிளறி, மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும். வெந்ததும் இறக்கி பரிமாறலாம்.

பலன்கள்: உடலைப் பலப்படுத்தும். சோர்வை நீக்கி, சுறுசுறுப்பைத் தரக்கூடியது.

முருங்கைக்கீரை ராகி கட்லெட்

தேவையானவை: இளசான முருங்கைக்கீரை  ஒரு கைப்பிடி, கேழ்வரகு மாவு  2 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, பெரிய வெங்காயம், தக்காளி, வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய்   தலா 1, மிளகுத்தூள், சுக்குத்தூள்  தலா கால் டீஸ்பூன், பிரெட் தூள்  ஒரு கைப்பிடி, நல்லெண்ணெய்  தேவையான அளவு.

p88.jpg

செய்முறை: உருளைக்கிழங்கை மசித்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், முருங்கைக்கீரையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பிரெட் தூள் தவிர்த்து, மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் தெளித்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும்.  பிறகு, கட்லெட்களாகத் தட்டி, பிரெட் தூளில் புரட்டி எடுத்து, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபக்கமும் நன்றாக சிவக்கவைத்து எடுக்கவும்.

பலன்கள்:  ஆண்மை பலம் பெருகும்.  ரத்த உற்பத்திக்கு நல்லது.

Link to comment
Share on other sites

  • 2 months later...

வகை வகையாய், ருசி ருசியாய் தினமும் கீரை சாப்பிடுங்க!

 

 
mn6


அரைக்கீரையை இளசான இலையாக பூச்சியில்லாமல் ஆய்ந்து கொள்ள வேண்டும்.

முளைக்கீரையினை தண்டு இளசாக இருந்தால் தண்டுடன் கிள்ள வேண்டும். தண்டு முற்றலாக இருந்தால் இலையாகக் கிள்ளிக் கொள்ள வேண்டும். முற்றிய தண்டினைப் பொடியாக நறுக்கிக் கூட்டு வைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிறுகீரை இளசாக இருந்தால் தண்டுடன்   பொடியாக நறுக்கிப் பயன்படுத்தலாம்.

அகத்திக் கீரையில் இலையை மட்டும் உருவி சுத்தம் செய்து சமைக்க வேண்டும்.

முருங்கைக் கீரையினைத் தனித்தனியாக காம்பு  நரம்பு இல்லாமல் ஆய்ந்து கொள்ள வேண்டும்.

வெந்தயக் கீரையை வேர் பகுதியினை சிறிது நறுக்கிவிட்டு  அப்படியே பொடியாக நறுக்கி உபயோகிக்கவும்.

முள்ளங்கிக் கீரையில் நடுவில் உள்ள  தண்டினை நீக்கி விட்டு இலையை மட்டும் பொடியாக நறுக்கி பொரியல்,  கூட்டிற்குப் பயன்படுத்தலாம்.

கீரைத்தண்டு இளசான கீரைத்தண்டாக வாங்கி ஆய்ந்து பொடியாக நறுக்கி பொரியல் கூட்டிற்குப் பயன்படுத்தலாம். தண்டினை நாரெடுத்துவிட்டுப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புதினாவில் இலையை மட்டும்  ஆய்ந்து  பயன்படுத்த வேண்டும்.

00000_keerai_sadham.JPG

பீட்ரூட் கீரையைப் பொடியாக நறுக்கி கூட்டு அல்லது பொரியல் செய்தால் சுவையாக இருக்கும்.

புளிச்சக் கீரையில் இலைகளை மட்டும் கிள்ளிப் பொடியாக நறுக்கிப் பயன்
படுத்தவும்.

மணத்தக்காளிக் கீரையின் தண்டு தடிமனாக இருக்கும். எனவே  கீரை, காய், பூ முதலிய எல்லாவற்றையும் ஆய்ந்து பொடியாக நறுக்கி சமைக்க வேண்டும்.

எந்த கீரையாக இருந்தாலும் நறுக்கியவுடன்  பெரிய பாத்திரத்தில்  தண்ணீர் வைத்து  இரண்டு முறைக்கு மேலாக நன்றாக அலசி வடிகட்டும் கூடையில் போட்டு வடிகட்ட வேண்டும். அதுபோன்று கீரையை ஆய்ந்த உடனே அலசி நறுக்க வேண்டும். அப்போதுதான் சத்துகள் வீணாகாது.

கீரை வகைகளை குக்கரில் வேக வைத்தால் பசுமை நிறம்மாறி பழுப்பு நிறமாக மாறிவிடும்.

கீரை வகைகளை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி தண்ணீர்விட்டு வேக வைத்தால் பசுமை மாறாமல் இருப்பதுடன்  ருசியும் கூடுதலாக இருக்கும்.

கீரைகளைச் சமைத்து இறுதியில்தான்  தாளிக்க வேண்டும்.  அது போன்று கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகாய் வற்றல், பெருங்காயப் பொடி சேர்த்து தாளித்தால் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

Murungai_Keerai.jpg

கீரை வேகும்போது  தண்ணீர் அதிகமாக இருந்தால் வடித்து சூப் செய்யலாம்.

கீரை மசியலை பருப்புச் சட்டியில் மரமத்தினால் கடைந்தால் இயற்கையான ருசியுடன் இருக்கும். மிக்ஸியில் கடையும் போது ருசி மாறிவிடும். 

கீரை மசியலை தாளிப்பதற்கு வடகம் சிறந்தது. ருசியும் கூடுதலாக இருக்கும்.

பொதுவாக எல்லாக் கீரை சமையலுக்கும் தேங்காய்த் துருவல் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.  தேங்காய்க்குப் பதிலாக உடைத்த கடலை மற்றும் வேர்க்கடலை பொடி செய்து சேர்த்தால் ருசி  கூடுதலாக இருக்கும். அரிசியை வறுத்து பொடி செய்தும் கீரை பொரியலில் சேர்க்கலாம்.

கீரையை தினமும் நாம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அகத்திக் கீரையை வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் சாப்பிட்டால் வயிற்றிலுள்ள  பூச்சிகளை அழித்துவிடும்.

'தினம் ஒரு கீரை'  என்ற நூலிலிருந்து

http://www.dinamani.com/health/healthy-food/2018/aug/22/வகை-வகையாய்-ருசி-ருசியாய்-தினமும்-கீரை-சாப்பிடுங்க-2985407.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணும் உணவு மருந்தாக இருக்க வேண்டும். இல்லையேல் மருந்தே உணவாகி விடும் காலத்தில் வாழ்கின்றோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.