Jump to content

கஞ்சா விற்பனைக்கு அனுமதி: கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன?


Recommended Posts

கஞ்சா விற்பனைக்கு அனுமதி: கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன?

 

கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கிப் பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் மசோதா, கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த கனடாவில் அனுமதி உள்ளது. இந்நிலையில், தற்போது கஞ்சா விற்பனைக்குக் கனடாவின் நாடாளுமன்றத்திலிருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டது. அதேபோல் ஹவுஸ் ஆஃப் காமென்ஸ் உறுப்பினர்களின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டால்,கஞ்சாவை சட்ட ரீதியாக பெறலாம். புகையிலை பொருட்கள் மற்றும் மது போன்று கனடாவில் இனி சர்வ சாதாரணமாகக் கஞ்சா கிடைக்கும்.

கஞ்சாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்நிலையில், கஞ்சாவை சட்டரீதியாக அனுமதிப்பதை பற்றி கனடா வாழ் தமிழ் மக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

80 வயதான பொன்னம்மாள், "அரசே இப்படி செய்கிறார்கள், என்ன சொல்வது? முக்கியமாகச் சிறுவர்களும், இளைஞர்களும் கெட்டு போய்விடுவார்கள். கஞ்சா உடலுக்கும், மனதிற்கும் நல்லதல்ல. மேலும், அந்த நாற்றத்தைத் தாங்க முடியாது." என்கிறார்

இவரது மகள் ப்ரீத்தி கூறும்போது. "என் கவலை என்னவென்றால் இளைஞர்களால் இதை எந்த அளவில் நிறுத்த வேண்டும் என்று அனுமானிப்பது கடினம். குறுகிய மற்றும் நீண்ட நாள் விளைவுகளைப் பற்றி படிக்கும் போது மார்பு நோய்கள் மற்றும் புற்றுநோய் வருவதற்கும் மிக அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன, " என்றார்.

கஞ்சாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"சட்டரீதியாக இதனை அனுமதித்தால் கலப்படம் இல்லாத தரமான பொருள் கிடைக்கும். கஞ்சா பிடிப்பவர்கள் எப்படி இருந்தாலும் அதை தேடி பிடிப்பார்கள். குறைந்தபட்சம் தரமில்லாத பொருளை உபயோகப்படுத்த மாட்டார்கள்," என்றும் அவர் கூறினார்.

வாசன் மற்றும் கீதா தம்பதியினர் கூறும்போது, "சட்டரீதியாக மருத்துவ உபயோகத்திற்காக ஏற்கனவே கஞ்சாவை கொண்டுவந்தாயிற்று. அதிக வலியில் துடிப்பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இது போதாதா? உற்சாகத்திற்காக சட்டபூர்வமாக இதை கொண்டு வருவதை முற்றிலும் எதிர்க்கிறோம். இளைஞர்களைப் போதைக்கு அடிமை ஆக்கிவிடும்'' என்றனர்.

https://www.bbc.com/tamil/global-44429651

Link to comment
Share on other sites

அரசு இதன் மூலம் மிகக்கூடிய வருமானத்தை ஈட்டப்போகிறது. சட்டரீதியற்ற வியாபாரிகளை இதன் மூலம் அப்புறப்படுத்த முடியும் என அரசு நம்புகிறது.
சாராயக்கடைகள்  போல இக்கடைகளும் காலப்போக்கில்  வருவதால் கூடுதலானவர்கள் இலகுவாக புகைக்க முடியும் . pain killer என்று அரசு சொல்வது அரசின்  நொட்டிச்சாட்டு என நினைக்கிறேன். அதற்காக கஞ்சாவை சட்டரீதியாக்குவதை ஒரு காரணமாக சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகைத்தல் உடல் நலத்திற்கு கேடு என்கிறாரகள் ஏன் புகைத்தலுக்கு அடிமையானோரின் அனேகமானவர்களின் வாழ்வும் அந்த புகை புகைபோலவே போயும் இருக்கிறது;அப்படியிருக்கையில் கஞ்சாவை எவ்வாறு வலி நிவாரணி என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

புகைத்தல் உடல் நலத்திற்கு கேடு என்கிறாரகள் ஏன் புகைத்தலுக்கு அடிமையானோரின் அனேகமானவர்களின் வாழ்வும் அந்த புகை புகைபோலவே போயும் இருக்கிறது;அப்படியிருக்கையில் கஞ்சாவை எவ்வாறு வலி நிவாரணி என்கிறார்கள்.

வலி நிவாரணிகளை நீங்கள் புகைக்க தேவை இல்லை 
அவை கஞ்சாவில் இருந்து தயாரித்த குளிசை திரவ வடிவில் பெற்று கொள்ளலாம்.
ஒரு நாட்டில் கஞ்சாவை தடை செய்யும்போது ..
அதன் மூலம் பெற  கூடிய பல நன்மைகளுக்கான கதவுகளும் 
அடைபடுகின்றன. 
இப்போதும் பல வலி நிவாரணிகள் கோக்கையின் ... ஒபின் ... கஞ்சாவில் இருந்துதான் தாயாரிக்கிறார்கள் 
ஆனால் சில கொம்பனிகள் மட்டும் அரசியல் வாதிகளை லஞ்சம் மூலம் 
வாங்கி சட்டத்தை ஏய்த்து பிழைத்து பெருத்த லாபம் பெறுவதோடு 
தொடர்ந்தும் தடை விதிக்க பல மில்லியன் டொலர்களை அரசியல் வாதிகளுக்கு 
கையூடாக கொடுத்து வருகிறார்கள்.

சிகரெடை விட கஞ்சா மேலானது எனும்போது 
எப்படி சிகரெட் எல்லா இடமும் கிடைக்கிறது ... கஞ்சா வுக்கு மட்டும் தடை?
சிகரெட்  கொம்பனிகளின் லஞ்சம்தான் முக்கிய காரணம். 

கஞ்சா காலம் காலமாக தமிழரோடு இருந்து இருக்கிறது 
பல முனிவர்மார் பாவித்து பயன் அடைந்து இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒல்லாந்தில் கஞ்சா சர்வசாதாரணமாக வாங்கலாமாம். அந்த நாட்டில் உள்ள கஞ்சா பிரச்சனைகளையும் ஆராய்ந்து பார்க்கலாமே?

கஞ்சா அடிக்கிறதுக்கெண்டே ஒல்லாந்துக்கு  ரூர் போறசனம் எக்கச்சக்கம். கஞ்சா அடிச்சால் ஒரு வித்தியாசனமான கிக்தான்....?

வலிக்கு நிவாரணியாய் மட்டும்  இருந்தால் சந்தோசம்.:cool:

Link to comment
Share on other sites

சாராய விற்பனை, லொட்டோ கசினோ எல்லாம் அரசுதான் செய்கின்றது. இப்போது கஞ்சாவும் கனேடிய அரசின்கீழ் வருகின்றது. இவ்வாறான விசயங்கள் தனியாரிடம் இருப்பதை விட அரசின் கீழ் இருப்பதுதான் சிறந்தது. தனியார் முதலாளிகள் லாபத்துக்காக இவ்வாறான விசயங்களில் செய்யும் முறைகேடுகள் மேலும் பாதகத்தை விழைவிக்கும். கஞ்சா பாலியல் தொழில் போன்றன முற்றாக எங்கும் தடுக்க முடியாதவை. அதை அதன் போக்கில் கையாழ்வதே சிறந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா விற்பதை பற்றி ஏன் ஏனையா சமூகங்கள் அலட்டிக் கொள்வதில்லை? இங்கு வாழும் சைனீஸ் அல்லது சீக்கியர் /பிலிப்பினோ இதை பற்றி கவலைப்படுகின்றார்களா?   தமிழரும் இவற்றை பற்றி கவலைப்பட தேவையில்லை.

என்னுடைய தெரிவுகளே என் உடலையும் மனதையும் பாதிக்கின்றது. எது நல்லது எது தீயது என எனக்கு தெரிவு செய்யும் மன‌ப்பக்குவம் எனக்கு இருந்தால் இவையெல்லாம் தூசு.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வ சாதாரணமாக ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் கஞ்சாவிற்கு இப்போது அரச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். இந்த நாட்டில் எல்லாமே அதி உச்சமானதாகவே உள்ளன. நாகரீகத்தில் இருந்து நாய் படாத பாடு வரைக்கும் எல்லாமே எல்லையற்றவை. இவற்றுக்குள் அகப்படாமல் சீரிய சமூகவாழ்வுக்குள் நம்மைக் கட்டிமைக்கமுடிந்தால் அது பெரும் சாதனையே. இப்போதே நம்முடைய இளையவர்கள் வாழ்வு மிகப்பெரும் கேள்விக்குறியோடு நகர்கிறது அதற்கு இன்னும் வலுக் கொடுப்பதாகவே இந்த அரச அனுமதி,  இதுவரைகாலமும் பயந்து ஒளித்து கஞ்சா பாவித்தவர்கள் வெள்ளைச் சுருட்டைப்போல் எல்லா இடத்திலும் பாவிப்பார்கள். இது கிட்டத்தட்ட கனடாவின் பல பாகங்களை போதை நகரங்களாக இன்னும் சில வருடங்களில் மாற்றிவிடும். இந்த ஓட்டத்தில் நாமும் எதிர்காலத்தில்... பத்து வருடங்களுக்குப் பின்னர் இங்கு பதிவிடும்போது யார் கண்டா நானும் கூட கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இங்கு பதிவிடலாம்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, வல்வை சகாறா said:

... பத்து வருடங்களுக்குப் பின்னர் இங்கு பதிவிடும்போது யார் கண்டா நானும் கூட கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இங்கு பதிவிடலாம்.?

தற்பொழுது மதுபான‌ம் சர்வசாதரணமாக் கிடைக்கின்றது ...ஆனால் இது வரை உங்கள் கருத்துக்கள் அப்படி பாவித்திட்டு எழுதிய மாதிரி தெரியவில்லை  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

தற்பொழுது மதுபான‌ம் சர்வசாதரணமாக் கிடைக்கின்றது ...ஆனால் இது வரை உங்கள் கருத்துக்கள் அப்படி பாவித்திட்டு எழுதிய மாதிரி தெரியவில்லை  ?

புத்தன் நீங்கள் சகராவின் எல்லா பதிவுகளையும் வாசிப்பதில்லை என்று தெரிகிறது.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிகரட்டோ  சுருட்டோ பாவிப்பதால் பாவிப்பவர் சுய உணர்வுடன் இருப்பார். ஆனால் கஞ்சா,அபின் போன்றவை அப்படியல்ல அவர்களை ஒரு மயக்கமான நிலையில் வைத்திருக்கும். நடப்பவை தெரியும்.ஆனால் தடுக்க சக்தி இருக்காது. போதை இறங்கியதும் மீண்டும் அதை நாடித்தான் மனம் ஓடும். இளைஞர்களுக்கு அது கெடுதல்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வல்வை சகாறா said:

சர்வ சாதாரணமாக ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் கஞ்சாவிற்கு இப்போது அரச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். இந்த நாட்டில் எல்லாமே அதி உச்சமானதாகவே உள்ளன. நாகரீகத்தில் இருந்து நாய் படாத பாடு வரைக்கும் எல்லாமே எல்லையற்றவை. இவற்றுக்குள் அகப்படாமல் சீரிய சமூகவாழ்வுக்குள் நம்மைக் கட்டிமைக்கமுடிந்தால் அது பெரும் சாதனையே. இப்போதே நம்முடைய இளையவர்கள் வாழ்வு மிகப்பெரும் கேள்விக்குறியோடு நகர்கிறது அதற்கு இன்னும் வலுக் கொடுப்பதாகவே இந்த அரச அனுமதி,  இதுவரைகாலமும் பயந்து ஒளித்து கஞ்சா பாவித்தவர்கள் வெள்ளைச் சுருட்டைப்போல் எல்லா இடத்திலும் பாவிப்பார்கள். இது கிட்டத்தட்ட கனடாவின் பல பாகங்களை போதை நகரங்களாக இன்னும் சில வருடங்களில் மாற்றிவிடும். இந்த ஓட்டத்தில் நாமும் எதிர்காலத்தில்... பத்து வருடங்களுக்குப் பின்னர் இங்கு பதிவிடும்போது யார் கண்டா நானும் கூட கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இங்கு பதிவிடலாம்.?

எல்லாம் வருவத்துக்கு முன் வரும் பர பரப்பு மட்டுமே 
கஞ்சாவின் மீது இருந்த தடைதான் இப்படி எங்களை சிந்திக்க வைக்கிறது 
தடை இல்லாது இருப்பின் அது இன்னொரு சாதாரணமாக இருந்து இருக்கும்.

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு"

தெரிந்தும் எவ்வளவு கொழுப்பு சீனி சத்து கொலஸ்டரோல் உணவுகளை 
உட்க்கொள்கிறோம்? பின்பு நோயால் அவதி படுகிறோம்.
எல்லாம் சந்தை யுத்திக்குள் சிக்குண்டு சிதறி போகிறோமே தவிர 
சொந்த புத்தி இருந்திருந்தால் ..... சைவமதத்தை கைவிட்டு 
இந்து மதம் என்ற சாக்கடைக்குள் தமிழன் விழுந்திருப்பானா ? 

மனிதர்களில் எப்போதும் இரு சிந்தனை உடையவர்கள் இருக்கிறார்கள் 
தானும் முன்னேறி அடுத்தவரையும் முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் 
மற்றது தானும் முன்னேறாது அடுத்தவனையும் இழுத்து பிடித்து வைத்திருப்பவன்.

ஒவ்வொரு நாளும் குடிப்பவனும் இருக்கிறான் 
வாரத்தில் ஒருநாள் எங்காவது ஏதும் பார்ட்டி வந்தால் குடிப்பவனும் இருக்கிறான் 
குடிக்காதவனும் இருக்கிறான்.

சவூதி அரேபியாவில் மது விக்க சட்டம் கொண்டுவந்தால் 
நீங்கள் எழுதியதுபோல் பல பேர் எழுதுவார்கள். அதுக்காக அதில் உண்மை இல்லை 
என்றும் இல்லை. அதுக்காக இப்போ சவுதியில் மட்டுமே ஆண்கள் கண்ணியமாக இருக்கிறார்கள் 
என்றும் இல்லையே? 

வந்த புதுசுல ஒருக்கா புகைத்து பார்ப்பார்கள் அவளவுதான் 
பின்பு புகைக்க பிறந்தவர்கள் மட்டும்தான் புகைப்பார்கள்.

எனக்கு தனிப்பட 
அதன் மணம்தான் பிடிப்பதில்லை 
அதை ரோட்டில் நின்று பத்தி நாம் போய் வரும் பாதைகளில் 
மணங்களை உண்டுபண்ணினால்தான் கொஞ்சம் தலையிடி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா புகைத்தவர் ஒருவர் பஸ்சுக்குள் ஏறினால் அந்த பஸ்சே நாறும்.

சட்டபூர்வமாக ஆக்கப்பட்ட நிலையில் கஞ்சா பாவிப்பவர்கள் அதிகரித்து பாவனையாளர்கள்  பத்துபேர் ஒரு பஸ்சுக்குள் பயணம் செய்தால் அதில் பயணிக்கும் பெண்கள்,வயதானவர்கள் குழந்தைகள், போதை வாடையை ஒவ்வாமையாக கொண்டவர்களிற்கு அரசு என்ன பதில் வைத்திருக்கிறது?

உடன் பயணிப்பவர்களின் உடைகள் கஞ்சா மணத்தை உறிஞ்சி வைச்சிருக்கும்,அதனை பாவிக்காதவர்கள்கூட அந்த மணத்தோடையே வீட்டுக்குள் நுழைந்தால் வீடு என்னாகிறது?

வேலை செய்யும் இடங்களில் பிறேக்குக்கு வெளியில்போய் நாலு வலிப்பு வலிச்சிட்டு உள்ளே வந்தால் கூட வேலை செய்பவர்கள் எப்படி பக்கத்தில் நின்று வேலை செய்யுறது?

அடுத்த பிரச்சனை சுதந்திரமான அனுமதி கிடைத்தால் குரூப் குரூப்பா சேர்ந்து எங்கு வேணும் எண்டாலும் புகைச்சிட்டு குழுமோதல் அதிகரிக்கும், வாகனங்களுக்குள்ள அவர்கள் பொருள்கள் என்றழைக்கப்படும் வாள்,கத்தி,கோல்ப் ஸ்டிக் தாராளமாக புழங்கும். ஒரு தலைக்காதல் அதிகமா ஏற்படும், பெண் ஓகே சொல்லாவிட்டால் கடத்த சொல்லும்.

அனுமதி கிடைத்தாலும்,கிடைக்காவிட்டாலும் கஞ்சா அடித்தவர்கள் அடித்துகொண்டுதான் இருந்தார்கள்,இருப்பார்கள்  எவன் சொல்லியும் அவர்கள் கேட்கவோ திருந்தவோ போவதில்லை,இப்போ அதுவல்ல பிரச்சனை..

  சட்டபூர்வமாக்கப்பட்டபிறகு பொதுவெளியில் கஞ்சா பாவனையாளர்கள் தொகை சடுதியாக அதிகரித்து எங்கு வேண்டுமானாலும் புகைக்க,நடமாட அரசாங்கமே அனுமதிக்கும்போது 

கஞ்சா பாவிப்பவர்களைவிட அதனை பாவிக்காதவர்களுக்குத்தான் பிரச்சனை அதிகமாகபோகிறது என்பதே கவலையான விஷயம். ஆககுறைந்தது பொதுவெளியில் புகைப்பதையாவது தடை செய்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வல்வை சகாறா said:

சர்வ சாதாரணமாக ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் கஞ்சாவிற்கு இப்போது அரச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். இந்த நாட்டில் எல்லாமே அதி உச்சமானதாகவே உள்ளன. நாகரீகத்தில் இருந்து நாய் படாத பாடு வரைக்கும் எல்லாமே எல்லையற்றவை. இவற்றுக்குள் அகப்படாமல் சீரிய சமூகவாழ்வுக்குள் நம்மைக் கட்டிமைக்கமுடிந்தால் அது பெரும் சாதனையே. இப்போதே நம்முடைய இளையவர்கள் வாழ்வு மிகப்பெரும் கேள்விக்குறியோடு நகர்கிறது அதற்கு இன்னும் வலுக் கொடுப்பதாகவே இந்த அரச அனுமதி,  இதுவரைகாலமும் பயந்து ஒளித்து கஞ்சா பாவித்தவர்கள் வெள்ளைச் சுருட்டைப்போல் எல்லா இடத்திலும் பாவிப்பார்கள். இது கிட்டத்தட்ட கனடாவின் பல பாகங்களை போதை நகரங்களாக இன்னும் சில வருடங்களில் மாற்றிவிடும். இந்த ஓட்டத்தில் நாமும் எதிர்காலத்தில்... பத்து வருடங்களுக்குப் பின்னர் இங்கு பதிவிடும்போது யார் கண்டா நானும் கூட கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இங்கு பதிவிடலாம்.?

அந்தக்காலத்திலை  சாராயம் விஸ்கி எல்லாம் புதிசாய் வரேக்கை அப்ப இருந்தவையளும் உப்பிடிச்சொல்லித்தான் முன்னுரை வாசிச்சிருப்பினம்.....பிறகு எல்லாம் வழக்கமான ஒண்டாய் வந்திட்டுது. விரும்பினவன் குடிக்கிறான்  அனுபவிக்கிறான்.....அதை துர்ப்பிரயோகம் செய்தவன் அரைகுறையிலை போறான்.உலகத்தில இருக்கிற சனமெல்லாம் குடிக்கிறதுமில்லை. அதே போலத்தான் கஞ்சாவும்......தீமையெண்டு தெரிஞ்சவன் கிட்டவும் போகான் போகவும் மாட்டான்.

உப்பிடித்தான் அந்தக்காலத்திலை உந்த சினிமா தியேட்டரிலை படம் போகிறவையை எல்லாம் எங்கடை பழசுகள் கண் பழுதாய்ப்போகும் கண்பழுதாய்ப்போகும் எண்டு பேசினவையள். இப்ப சின்னப்பால்குடியும் கைத்தொலைபேசியை கண்ணுக்கு கிட்ட வைச்சு நோண்டுதுகள். அதுகளை பாத்து கண் பழுதாப்போகும் எண்டு பேசு பேசெண்டு பேசுறம். பறிச்சு வைக்கிறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அந்தக்காலத்திலை  சாராயம் விஸ்கி எல்லாம் புதிசாய் வரேக்கை அப்ப இருந்தவையளும் உப்பிடிச்சொல்லித்தான் முன்னுரை வாசிச்சிருப்பினம்.....பிறகு எல்லாம் வழக்கமான ஒண்டாய் வந்திட்டுது. விரும்பினவன் குடிக்கிறான்  அனுபவிக்கிறான்.....அதை துர்ப்பிரயோகம் செய்தவன் அரைகுறையிலை போறான்.உலகத்தில இருக்கிற சனமெல்லாம் குடிக்கிறதுமில்லை. அதே போலத்தான் கஞ்சாவும்......தீமையெண்டு தெரிஞ்சவன் கிட்டவும் போகான் போகவும் மாட்டான்.

உப்பிடித்தான் அந்தக்காலத்திலை உந்த சினிமா தியேட்டரிலை படம் போகிறவையை எல்லாம் எங்கடை பழசுகள் கண் பழுதாய்ப்போகும் கண்பழுதாய்ப்போகும் எண்டு பேசினவையள். இப்ப சின்னப்பால்குடியும் கைத்தொலைபேசியை கண்ணுக்கு கிட்ட வைச்சு நோண்டுதுகள். அதுகளை பாத்து கண் பழுதாப்போகும் எண்டு பேசு பேசெண்டு பேசுறம். பறிச்சு வைக்கிறம்.

ஏன் கனக்க வேண்டாம் அந்தக்காலத்தில் தேனீரே வலுக்கட்டையாமாகத்தானாம்  வெள்ளைகள் எம் முத்தோர்களுக்கு பழக்கினவர்களாம்.இப்ப நிலமை என்ன என்று நான் சொல்த்தேவையில்லை.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, சுவைப்பிரியன் said:

ஏன் கனக்க வேண்டாம் அந்தக்காலத்தில் தேனீரே வலுக்கட்டையாமாகத்தானாம்  வெள்ளைகள் எம் முத்தோர்களுக்கு பழக்கினவர்களாம்.இப்ப நிலமை என்ன என்று நான் சொல்த்தேவையில்லை.?

 என்ரை சிவனே!  நீங்கள் எங்கடை பழங்கஞ்சி, ஊறுகாய்த்தண்ணி,மோர்த்தண்ணி,தேசிக்காய்த்தண்ணி,கருப்பநீர்,பனங்கள்ளு,தென்னங்கள்ளு,இளநீர் எண்டு எல்லாத்தையும் நினைக்க வைச்சிட்டியளே..:grin:

Link to comment
Share on other sites

கஞ்சா நல்லதா,  கெட்டதா  என்றும் அது தொடர்பான வாதப் பிரதி வாதங்களிலும்  யாழ் உறவுகள் ஈடுபட்டுக் கொண்டிருக்க, கஞ்சா விற்பனை / வளர்ப்பு என்றோ ஒரு நாள் சட்டபூர்வமாக்கப் படும் என்று "தீர்க்கதரிசனமாய்"  சில ஆண்டுகளுக்கு முன்னர் உணர்ந்து கொண்ட ( மணந்து பிடித்த) எம்மவர்களில் சிலர் கஞ்சா,  வளர்ப்புக்கென்றே மலிவு விலையில் கனடாவின் புறநகர்ப்பகுதிகளில் காணி வாங்கி  விட்டிருக்கினமாம்.  அவர்கள் காட்டில் மழையோ மழை.....வாழ்க தமிழ்..வளர்(க்)க கஞ்சா ...:-((

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.