Jump to content

எழுத்தாளர் செளபா,  திடீர் மரணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Writer Sowba dies in Madurai GH

எழுத்தாளர் செளபா,  திடீர் மரணம்!

மகனைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் செளபா என்கிற செளந்தரபாண்டியன் மதுரை அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது மரணச் செய்தி வந்துள்ளது. செளபாவின் கைது அதிர்ச்சியிலிருந்தே அவரது நண்பர்களும், வாசகர்களும் மீளாத நிலையில் அவரது மறைவு மேலும் அதிர்ச்சியைக் கூட்டியுள்ளது.

எழுத்தாளர் செளபாவின் மகன் விபின். 27 வயதான இவர் குடி அடிமை ஆவார். தாய்க்கும், தந்தைக்கும் பல்வேறு வழிகளில் சித்திரவதையாக இருந்து வந்தார் விபின். இந்த நிலையில், ஏப்ரல் 30-ந் தேதி முதல் விபினை காணவில்லை என தாய் லதா பூரணம் போலீசில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் செளபா மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து செளபாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், தாம் சுத்தியால் அடித்ததில் மகன் இறந்ததாகவும் அவனது உடலை கொடைரோடு அருகே உள்ள தோட்டத்தில் புதைத்ததாகவும் செளபா ஒப்புக் கொண்டார். இதனையடுத்து போலீசார் செளபாவை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட செளபா மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார் செளபா. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் சிறையில் ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் மரணமடைந்தார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/writer-sowba-dies-madurai-gh-322086.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.