Jump to content

வீட்டில் சிங்கம் வளர்ப்பது உண்மையா?-அப்ரிடி பதில்


Recommended Posts

வீட்டில் சிங்கம் வளர்ப்பது உண்மையா?-அப்ரிடி பதில்

 

 

 
ar

அப்ரிடி வீட்டில் வளர்க்கும் சிங்கத்துடன் அவரின் மகள், தனதுவீட்டில் வளர்க்கும் மானுக்கு பாலூட்டும் அப்ரிடி   -  படம் உதவி: ட்விட்டர்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தனது வீட்டில் சிங்கம் வளர்ப்பது உண்மையா என்பது குறித்து பதில் அளித்துள்ளார்.

பாகிஸ்தானின் அதிரடி ஆட்டக்காரரும், ‘லெக் ஸ்பின்னருமான’ ஷாகித் அப்ரிடியை அந்நாட்டு ரசிகர்கள் செல்லமாக ‘பாகிஸ்தான் லயன்’(பாகிஸ்தான் சிங்கம்) என்று அழைப்பார்கள். ஆனால், அதற்கான காரணம் அவரின் வீட்டில் உண்மையான சிங்கம் வளர்த்ததால்தான் அப்படி அழைத்தார்களா என்பது இப்போதுதான் தெரிந்துள்ளது.

 

கடந்த 1996-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குள் வந்த அப்ரிடி கடந்த 2017-ம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார். சமீபத்தில் லண்டனில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் எதிரான ஐசிசி வேர்ல்டு லெவன் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதில் இருந்தும் விடை பெற்றார்.

8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களும், 359 விக்கெட்டுகளையும் அப்ரிடி வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், அப்பிரிடி தனது 4 மகள்களுடன் சேர்ந்திருப்பது போன்று புகைப்படத்தைஇன்று ட்விட்டரில் பதிவிட்டார் அந்த பதிவுக்குப்பின்தான் நெட்டிசன்கள் பதற்றமடைந்தனர்.

அப்ரிடிக்கு அன்ஷா, ஆக்ஸா, அஜ்வா, அஸ்மாரா ஆகிய 4 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகளோடுஉடற்பயிற்சிக்கூடத்தில் இருப்பதுபோன்று புகைப்படத்தை பதிவிட்டார். அடுத்த படத்தில் வீட்டில் அப்ரிடி வளர்க்கும் மானுக்கு பாலூட்டுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டார். மற்றொரு படத்தில் அப்ரிடியின் மகள்அஜ்வா நிற்பது போலவும், அவருக்குப் பின்னால் ஒரு பெரிய சிங்கம் படுத்திருப்பதுபோலவும் புகைப்படம் இருந்தது.

அந்தப் புகைப்படத்தின் கீழ், அப்ரிடி பதிவிடுகையில், என் நேசிக்கும் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவது மிகச்சிறப்பானது. நான் விக்கெட் வீழ்த்தும் போது, கையை உயர்த்தி, வி போன்று விரல்களை வைத்து மகிழ்ச்சியைத் தெரிவிப்பேன். அதேபோன்று எனது மகள் செய்வது எனக்கு உலகிலேயே மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. வீட்டில் நான் வளர்க்கும் விலங்குகளையும் நான் பராமரிக்கத் தவறுவதில்லை. அந்த விலங்குகள் மீது தனி அன்பும், அரவணைப்பும் எடுத்துப் பராமரிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

அப்ரிடியின் மகளுக்குப் பின்னால் சிங்கம் படுத்திருக்கும் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள் ஏராளமான கமென்ட்டுகளை பதிவிட்டனர்.

afridilionjpg
 

‘ உண்மையிலேயே சிங்கம் வளர்க்கிறீர்களா அப்ரிடி’, ‘வீட்டில் ஆபத்தான விலங்கு சிங்கத்தை வளர்ப்பது தவறு’, ‘குழந்தையுடன் சிங்கத்தை பழகவிடாதீர்கள்’, ‘மானையும், சிங்கத்தையும் ஒன்றாக வளர்க்காதீர்கள்’, ‘நீங்கள் செய்வது சட்டப்படி தவறு’ என்றெல்லாம் கமென்ட்டுகளை அள்ளிவீசினார்கள்.

இறுதியாக தனதுவீட்டில் வளர்க்கும் சிங்கத்தின் புகைப்படத்தை அப்ரிடி பதிவிட்டு தான் சிங்கம் வளர்ப்பதை உறுதி செய்தார்.

http://tamil.thehindu.com/sports/article24129668.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.