Jump to content

சுமந்திரனுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

இராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கும் திரு சுமந்திரன் அவர்களுக்கு
.
திரு சுமந்திரனுக்கு, நீங்கள் அயராத உழைப்பாளர் என்றும் ஆற்றல் மிக்கவர் என்றும் தமிழரசுக் கட்சி தோழர்கள் மத்தியில் கருத்துள்ளது. உங்களைப்போல டாக்டர் நாகநாதன் திருசெல்வம் பிற்காலத்தில் குமார் பொன்னம்பலம் போன்ற கொழும்புத் தமிழர்கள் பலர் கடந்த காலத்தில் தமிழர் விடுதலைக்கு பெரும் பணி ஆற்றியுள்ளனர். அவர்களுள் எப்போதும் த்மிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவுக்கும் கட்ச்சிக்கும் பணிந்து செயல்ப்பட்ட டாக்டர் நாகநாதன் மட்டும் மறந்தும் தலைமைக்கோ அமைச்சுப் பதவிகளுக்கோ ஒருபோதும் குறிவைக்காத உட்கட்சி ஜனநாயகத்தை பேணும் போராளியாக இருந்தார். குமார் பொன்னம்பலம் அவர்கள் விடுதலைப்புலிகளின் காலக்கட்டத்தில் தனது கடந்தகால அரசியல் போக்குகளில் இருந்து விலகி மிக அர்பணிப்போடு செயல்பட்டார். இந்த வகையில் டாக்டர் நாகநாதனும் பிற்கால குமார் பொன்னம்பலமும் கொழும்புத் தமிழருக்கும் கொழும்புக்கு அப்பால் பிற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்ககளுக்கும் மக்கள் ஆதரவுடன் கழத்தில் செயல்படும் முன்னணி தலமைக்கு கட்டுபட்டு இயங்க வேண்டும் என்கிற படிப்பினையை விட்டுச் சென்றுள்ளனர்.

.

திரு சுமந்திரன் அவர்களே, இன்றைய காலகட்டத்தில் தமிழரின் நாடாளுமன்ற அரசியலில் உங்கள் பணியை ஆற்றலை விபரம் தெரிந்த யாரும் நிராகரிக்கவில்லை. ஆனால் கட்சித் தலைமையைக் கட்டுப்படுத்தி பாராழுமன்ற உறுப்பினர்களைக்கூட அன்னியப்படுத்தி சுயநலன்களுக்காக கொழும்பு அதிகார பீடங்களோடு சமரம் செய்துகொண்ட ஜி.ஜி.பொன்னம்பலம் திருச்செல்வம் பாதையில் நீங்களும் சென்றுவிடக்கூடுமோ என்கிற அச்சமும் விமர்சனமும் பலருக்கு உள்ளது. அதுதான் உங்கள் மீதும் வைக்கபடுகிற ஒரே குற்றச்சாட்டாக உள்ளது.

.

நீங்கள் உட்பட விக்னேஸ்வரன் கஜேந்திரன் பொன்னம்பலம் போன்ற கொழும்புத் தமிழ் தலைவர்களின் ஆக்கமுள்ல விடுதலைப் பணிகளை யாரும் எதிர்க்கவில்லை. ஆயினும் கொழும்பு தமிழ் தலைவர்களுக்கு ஈழத் தமிழர் விடுதலை கொழும்பில் உள்ள தங்கள் நலன்களைக் காப்பாற்றுவது என்கிற இரட்டை நலன்கள் உள்ளது. மேலதிகமாக ம்முதல் அமைச்சர் விக்னேஸ்வரனைப்பொறுத்து தமிழர்களின் முதல் எதிரிகளாக கருதப்படுகிற அணியினருடன் திமண பந்தம் உள்ளது. மேலும் நமது முதல் அமைச்சர் கொலை பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆழாகிச் சிறையில் இருக்கும் பரமானந்தா என்கிற அசுத்த ஜீவனின் விடுதலைக்காக தனது பதவியை துஸ்பிரயோகம் செய்கிறது உலக அரங்கில் ஈழத் தமிழரை அவமானப் படுத்துவதாக உள்ளது. அதேபோல கஜேந்திரன் பொன்னம்பலம் கிழக்குப் பற்றிய எந்த அறிவும் செல்வாக்கும் இல்லாமல் தோல்வி நிச்சயம் என தெரிந்தும் தமிழ் வாக்குகளை சிதறடித்து சம்பந்தரை அழிக்கவேண்டுமென்கிற வன்மத்துடன் திருமலையில் போட்டியிட்டார். அதனால் சம்பந்தருக்கு எதிராக ஒரு தமிழரை நிறுத்தி தமிழர்களைத் தோற்கடிக்கும் மகிந்தவின் திட்டத்துக்கு அவசியமில்லாமல் போனது. அதனால் இரண்டு தமிழர் வெற்றிபெறவேண்டிய மயிரிழையில் சம்பந்தர் மட்டும் வென்றபோதும் தமிழர்கள் தோற்கடிக்கபட்டனர். உடுவில் மகளிர் கல்லூரிதொடர்பாக மத்தியஸ்துவம் வகிக்க வேண்டிய நீங்கள் பாரபட்சமாக நடந்துகொண்டமையும் கவலை தருவாதாக இருந்தது. வரலாற்றின் படிப்பனைகள் கொழும்பு தமிழ் தலைவர்கள் டாக்டர் நாகநாதன்போல தலைமைக்கு ஆசைப்படாமல் கட்ச்சிக்குக் கட்டுப்பட்டும் கட்சித் தலைவர்களை அனுசரித்தும் செயல்படவேண்டுமென உணர்த்துகிறது.

திரு சுமந்திரன் அவர்களே,

கட்சிக்குவெளியே அதிகாரங்களை கையகப்படுத்தி இயங்குகிறீர்கள் என்கிற சந்தேகம் மட்டுமே உள்ளது. அத்தகைய சந்தேகத்துக்கு இடமழிக்காமல் நீங்கள் தொடர்ந்தும் பணியாற்றவேண்டும் என்பதே தமிழரசுக்கட்சிக்கு உள்ளும் வெளியிலும் உள்ள பெரும்பாலான தமிழர்களது எதிர்பார்ப்பாக உள்ளது. விடுதலைக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகளில் உங்கள் அறிவும் செயல் திறனும்பற்றி யாருக்கும் சந்தேகமில்லை.
கட்சிக்கட்டுபட்ட வகையில் உங்கள் உழைப்பு தமிழர்களது பாராளுமன்ற அரசியலுக்கு அவசியமான ஒரு தருணத்தில் நீங்கள் ராஜினாமா பற்றிப் பேசுவதை ஏற்றுகொள்ளமுடியாது. - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் அவர்கள் சுமந்திரனுக்காகச் சங்கு ஊதுகிறார். தமழர் பிரதிநிதிகளில் அதிரடிப்படையின் பாதுகாப்புடன் வடக்குக் கிழக்கில் உலாவும் ஒருவர் இவர் மட்டும்தான் அந்த அளவுக்கு இவரது கேவலம். பரமானந்தாவின் சீடன் என விக்கியரை அழைக்கும் ஜெயபாலன் சுமந்திரன் தனது மனைவி இல்லாத ஒரு பெண்ணைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் படம் சமூகவலைத்தளங்களில் உலாவருவதை மறந்திட்டார்,  

சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொரர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எனும் வகையில் ஆவனசெய்யுமாறு மன்றாடிய முன்னைநாள் போராளிகளது கருத்தினைச் செவிமடுக்காது காலுக்குமேல் கால் போட்டுக்கொண்டு செய்திப்பத்திரிகை வாசிச்ச சம்பந்தர் தமிழர் தலைவராம். வடமராட்சியில் தான் வெல்லுவதற்காக புறியாணிப்பொட்டலமும் குவாட்டரும் கொடுத்த சுமந்திரன் தவிர அதிகூடிய வாக்குகள் பெறுவதற்காக சுரேஸ் பிரேமச்சந்திரனது வெற்றியை இரணிலுடன் சேர்ந்து பறிச்ச சுமந்திரன் அவரை ஜெயபாலம் ஒரு அரசியல்வாதியாகவும்  தமிழர்க்கு வராது வந்த மாமணியாகவும் வர்ணிப்பது சிரிப்பாக இருக்கிறது. 

 

Link to comment
Share on other sites

சுமந்திரனதும் சம்பந்தரதும் கட்சியின் தான் தோன்றித்தனமான போக்கால் பலரும் கூட்டமைப்பில் சேர முடியாமலும் விலக்கப்பட்டும் இருக்க முக்கிய கார\னமானவர்கள். கடைசி தமிழரின் நிலை கண்டாவது ஏதோ ஒரு அடிப்படையில் இணைந்து செயற்பட முடியாமல் முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் இந்த இருவரும் தான்.


கிழக்கின் பிறந்து வளர்ந்த சம்பந்தர்  தனது தொகுதியில்  உள்ள சம்பூருக்கு எததனை தடவை சென்றவர் என கூறுங்கள் பார்க்கலாம் திரு ஜெயபாலன் அவர்களே!!!!

தமிழர்களுக்கு சேவை செய்ய என வந்தால் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு  மேற்கு மலையகம் என பார்ப்பதில்லை. நீங்கள் அடிக்கடி கிழக்கு, கொழும்பு என விழிப்பது ஏனோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

ஆயிரம் மலர்கள் மலரட்டும். என் கடிதம் தொடர்பாக கருத்தெழுதிய எழுஞாயிறுக்கும் நுணாவிலானுகும் நன்றி. இன்னும் பலர்து கருத்துக்களை அறிய விரும்புகிறேன். சரிகளுக்காக உரத்து வாதிடுவதுபோல என் தரப்புப் பிழைகளை திருத்துவதிலும் எனக்குத் தயக்கமில்லை பொதுக்கருத்துக்கு எப்பவும் தலை வணங்கிறவன நான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயசு போயிட்டா எல்லாரும் ஒரே மாதிரியே ஆகிடுறாங்க.

கடிதம் எழுதிகள்... கட்டுமரம்.. சங்கரி.. வரிசையில்... இவரும் சேர்ந்திட்டார்.

எல்லாரும் தங்கள் இருப்பினை வெளிக்காட்ட இப்படி அடிக்கடி கடிதம் எழுத வேண்டி இருக்குது போல.

2009 மே க்குப் பின் தலைமையின்றி.. வழிகாட்டல் இன்றி தவிக்கு தமிழ் மக்களாகிய  முயல்கள் மத்தியில் சிலர் நல்லாவே தவிச்ச முயல் அடிக்கினம்.. என்பது மட்டும் வெளிப்படை. ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயா அண்ணர் தங்களை எப்போதும் நான் திட்டமிட்டு மறுத்துப்பேச விருப்பம் இல்லாதவன், ஆனால் முள்ளிவாய்கலுடன் விடுதலைப்புலிகளது இராணுவப்பிரசன்னம் முடிந்தபோது தலைவர் நிறையப் பிழைவிட்டுவிட்டார் பேசாமல் இப்போது கிடைக்கக்கூடியதைப்பெற்றுக்கொண்டு மேலதிகமாகக் கிடைப்பதற்காகப் போராட அவர் பலமான நிலையை எதிர்காலத்தில் கட்டமைத்திருக்கலாம் ஆனால் அவரது தற்துணிச்சல் சொல் தவறாமை நேர்மை இவைகளே எமதும் விடுதலைப்புலிகளதும் தற்போதைய நிலைக்குக் காரணம் என் நான் பலருடன் உரையாடியதுண்டு காலம் எனது கருத்தினைத் தவறென உணத்தியது, இன்று எமது அரசியல் சக்திகள் இன்னுமொன்றுடன் பொருத்திப்பார்ப்பதற்கான உரைகல்லாக அவர்கள் தம்மை ஆக்கிவிட்டு அகன்றுவிட்டனர் அதுவரை அவர்களது கொண்ட கொள்கை தவறாமை என்பதே முன்னிற்கிறது அவர்களுடன் ஒப்பிட்டே அவர்களைப் பார்த்து வளர்ந்த நான் எதையும் மதிப்பிடவேண்டியுள்ளது. மிகப்பெரிய தியாகங்களைச் செய்த எங்கள் இனத்தின் மூதாதையராக அவர்கள் இருக்கும்பட்சத்தில் எமக்கான எதிர்கால அரசியலைச் செய்வோர் அவர்களைவிட கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக இருந்திடல்வேண்டும் என நான் நினைப்பதில் தவறேதும் இல்லையே. 

சிறீமாவோ பண்டார நாயக்கா பாராளுமன்றப் பதவிக்காலத்தை இருவருடங்களுக்கு நீடித்தபோது தமிழ் மக்கள் எனக்கு ஐந்துவருடங்களே பாராளுமன்ற உருப்பினராக இருப்பதற்கு அனுமதி தந்தார்கள் அதனால் நான் பதவி விலகுகிறேன் இன்னுமொரு தேர்தலைச் சந்திக்கிறேன் எனக்கூறி அதன்படிநடந்த தந்தை செல்வாவின் ஜனநாயகத்தைக் கண்டு வளர்ந்தவர்கள் நாம் நீங்கள் உட்படவே.

பிரபாகர நேர்மை இல்லையேல் எஸ் ஜே வி செல்வநாயக நேர்மை இதில் எதையாவது கடைப்பிடிக்க எதிர்பார்ப்பது தவறில்லையே

தண்ணீரோ கண்ணிரோ விட்டு வளக்கவில்லை இச்சுதத்திரத்திற்கான வேள்வித்தீயை செந்நீர் விட்டெல்லொ வளர்த்தோம். 

Link to comment
Share on other sites

Elugnajiru நலமா? இங்கு இருவர் கருத்துக்கூறியுள்ளீர்கள். இருவருக்கும் நன்றி. உங்களைப்போலவே நுணாவிலானும் பொதுவாக நிலவும் சந்தேகங்களை முன்வைத்திருக்கிறார். குறைந்தது மூவராவது கருத்துச் சொன்னபிறகு பதில் எழுதலாம் என காத்திருக்கிறேன். தொடர்ந்து விவாதிக்கவும்

 

Link to comment
Share on other sites

அய்யா,

உங்கள் கடிதத்தினை வாசித்தேன் சில விளக்கங்களை கேட்க முனைகிறேன். நீங்கள் ஆக குறைந்தது மூவராவது விமர்சனம் வைத்தால் மட்டுமே பதிலளிப்பேன் என்றமையால் வேறு வழியில்லாது நான் இந்த கருத்தை பதிவிடுகிறேன்.

அடியேன் அரசியலில் மற்றைய சாதாரண தமிழர்கள் போலவே ஒரு பேதை என்பதை மனதில் நிறுத்தி பதிலளியுங்கள்.

நீங்கள் மேலே எழுதிய கடிதம் ஒரு பொதுவெளி திறந்த மடலா அல்லது திரு. சுமந்த்திரனுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலா.?

திரு. சுமந்திரன் இதுவரை தமிழரின் அரசியல் தீர்வுக்காக ஆற்றிய பங்களிப்பின் முக்கிய பகுதிகளை விவரிப்பீர்களா .?? (முக்கியமாக அரசியல் கைதிகள் விடுவிப்பு உட்பட)

திரு. சுமந்திரனின் இராஜினாமா பற்றி இதுவரை அவர்சார்ந்த கட்சியே எந்தவித அறிக்கையும் விடாதவிடுத்து உங்கள் மடலின் உள்நோக்கம் என்ன .?

தமிழரின் விடுதலை திரு. சுமந்திரனின் கைகளில் தான் தங்கியுள்ளது என்ற உங்கள் கருத்தின் அடிப்படையை விளங்கப்படுத்த முடியுமா.?

மேலே நான் குறிப்பிட்ட கருத்துகள் அல்லது கேள்விகளால் உங்கள் மனம் ஏதேனும் காயப்பட்டிருந்தால் மன்னிக்க.

நன்றி.

 

ஆவலுடன்

Link to comment
Share on other sites

சுமந்திரனை வைத்து தமிழர்களின் உரிமைகளுக்காக, நீதி கிடைக்க அயராது உரத்து குரல் கொடுக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனை அடக்கிவிடலாம் என்று கனவு கண்ட தமிழினப் படுகொலைகாரர்களுக்கு சுமந்திரனின் விலகல் நாடகம் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது என்பது தெளிவாகிறது.   

 

On 6/11/2018 at 12:51 PM, poet said:

முதல் அமைச்சர் விக்னேஸ்வரனைப்பொறுத்து தமிழர்களின் முதல் எதிரிகளாக கருதப்படுகிற அணியினருடன் திமண பந்தம் உள்ளது. மேலும் நமது முதல் அமைச்சர் கொலை பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆழாகிச் சிறையில் இருக்கும் பரமானந்தா என்கிற அசுத்த ஜீவனின் விடுதலைக்காக தனது பதவியை துஸ்பிரயோகம் செய்கிறது

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் ஏற்பாடு செய்த திருமணங்கள் அல்ல என்றும், வயதுக்கு வந்த இளசுகள் செய்யும் காதல் திருமணங்கள் அவரவர் உரிமை  என்று தெரிந்தும், அவர் மீது வசைபாட வேறு வழியில்லை என்ற கடும் வறட்சி இந்த வரிகளில் பிரகாசமாக தெரிகிறது! 

மேலும் பரமானந்தா என்ற இலங்கை சுவாமி சிறையில் அடைக்கப்பட்டது பற்றி மறுபக்க கதைகள் பலவுண்டு. உலகின் மிகமிகமோசமான நீதித்துறை உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பரமானந்தா மேல் நம்பிக்கை வைப்பது / வைக்காமல் இருப்பது அவரவர் உரிமை. அதில் அதிகார துஸ்பிரயோகம் என்ற பொய் வாந்தி எழுதியவரின் கீழான மனநிலையை பிரகாசமாக காட்டுகிறது.

இவ்வளவு வில்லங்கப்பட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்படும் முதலமைச்சர் மீது குறைகாணும் மனநிலை உள்ள நீங்கள்,

  •  ஈழமண்ணில் அமைதிப்படை என்ற பெயரில் பாலியல் பலாத்காரங்களை ஆயுத முனையில் அரங்கேற்றிய இந்திய இராணுவ பயங்கரவாதிகளை இயக்கும் இந்திய கொலைகார அரசுக்கு துதி பாடும் பேர்வழிகளை என்னவென்று சொல்லப்போகிறீர்கள்?  
  •  ஈழமண்ணில் அமைதிப்படை என்ற பெயரில் பலபடுகொலைகளை அரங்கேற்றிய இந்திய இராணுவ பயங்கரவாதிகளை இயக்கும் இந்திய போர்க்குற்றவாளி அரசுக்கு காவடி எடுக்கும் பேர்வழிகளை என்னவென்று சொல்லப்போகிறீர்கள்?  
  •  ஈழமண்ணில் அமைதிப்படை என்ற பெயரில் பல கொள்ளைகளை அரங்கேற்றிய, பத்திரிகைகளை அழித்த, வைத்தியர்களையும் நோயாளிகளையும் வைத்தியசாலையினுள் படுகொலை செய்த  இந்திய இராணுவ கயவர்களை இயக்கும் இந்திய காட்டுமிராண்டி அரசுக்கு ஜால்றா போடும் பேர்வழிகளை என்னவென்று சொல்லப்போகிறீர்கள்?  
  •  ஈழமண்ணில் திட்டமிட்ட தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றி வரும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு பக்கத்துணையாக இருந்து கொண்டிருக்கும் இந்திய அரச பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவாக இயங்கும் ஒட்டுண்ணி கும்பலை பற்றி என்ன சொல்லப்போகிறீர்கள்?

 

Link to comment
Share on other sites

போர்க்காலம் 1996ல் என ஞாபகம் விடுதலைப்புலிகள் அமைப்பின் உழவுப்பிரிவு  ”நீங்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் என தலைவர் கூறுகிறார். நீங்கள் எங்களை குறிப்பாக முஸ்லிம் விவகாரங்களில் விமர்சிக்கின்றீர்கள். நீங்கள்  தாராளமாக விமர்சிக்கலாம்.  உங்களிடமிருந்து அரசியல் இராணுவ விடயங்களில்  விமர்சன அறிக்கைகளை பெறும்படி தலைவர் சொல்லியிருக்கிறார்.” எனக்கேட்டுக்கொண்டார்கள். அத்தோடு வெளிவிவகாரம் தொடர்பான குறித்த சில பணிகளை தமது வெளிநாட்டுக் கிழைகளோடு சம்பந்தப்படாமல் செய்யும்படி கேட்டார்கள். இதுதனால் திரு கஸ்றோ அவர்களோடு நேரடி முரண்பாடு ஏற்பட்டது.   வன்னியில் நிலந்தன் தலைமையில் நடந்த கூட்டத்தில்  திரு கஸ்றோ அவர்களை மிக கடுமையாக விமர்சித்தேன். மேற்படி கூட்டத்துக்கு பாலகுமாரன் உட்பட விடுதலைபுலிகளின் முக்கியஸ்தர் சிலர் வந்திருந்தனர். திரு கஸ்றோ அவர்கள் என்னை சிறைபடுத்த முனைந்தபோதும் என் பாதுகாப்பையும் விமர்சன உரிமையையும் வாக்களித்தபடி இயக்கம் பாதுகாத்தது.    இயக்கம் அளிக்க முன்வந்த வள உதவிகளை நான் ஏற்றுக்கொள்ள மறுத்தபோதும் இலங்கையிலும் வெளியிலும் மிகுந்த கரிசனையுடன்  என் பாதுகாப்பை இயக்கம் உறுதிப்படுத்தியது.  .  இவைபற்றி  வாழும் தலைவர்கள் அறிவார்கள். விரிவாக இராணுவ வரலாறு எழுதும்போது விரிவாக எழுதுவேன். என் விமர்சன உரிமையை நான் எப்போதும் எங்கும் விட்டுகொடுத்ததில்லை.   சுமந்திரனுக்கு எழுதிய கடிதமும் ஆழமாக வாசித்தால் எனது விமர்சனங்களின் தொடற்சிதான் என்பதை அறிவீர்கள். எனது கருத்துக்கள் எப்பவும் தீர்பாக இருந்ததில்லை. அவை ஒரு தேடலின் ஆரம்பம்தான். பதில் எழுதிய அனைவரும் என் தேடலுக்கு உதவி இருக்கிறீர்கள். என் அன்பும் நன்றிகளும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அரசியலை வென்றெடுபதற்கான காலநதியில் கலந்த "சாக்கடை நீர்"  சுமந்திரனாவார் அந்த நீரைச் சுத்திகரிக்கமுடியாது வேண்டுஎன்றால் பன்றிப்பண்ணைக்கு மடைமாற்றம் செய்யலாம். 

Link to comment
Share on other sites

அன்புக்குரிய இணையவன். பெண்போராளிகள் ஒருமுறை சொன்ன ஒரு சேதியை மட்டுமே உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். நீரில்லாமல் பலநாட்க்கள் அலைந்தபிறகு ஒருவீட்டு மலகூடத்து குந்துசட்டிக் குழி இருந்த தண்ணீரை பப்பாத் தண்டுக் குழல் மூலம் உறுஞ்சிக் குடித்து அவர்கள் உயிர்பிழைத்தார்களாம். இதன் படிபினைகளைப் புரிந்துகொள்ளாமல் எமக்கு எதிர்காலம் இல்லை. இருக்கிற தண்ணீரை சுத்திகரித்து அருந்தி உயிர்வாழும் நிலையில்தான் எங்கள் அரசியல் உள்ளது.

.

நாட்டில் எங்கள் சனத்தொகை (2012) வட மாகாணம்  987692 + கிழக்கு மாகாணம்609,564 =  1597256.  இது மதுரை () மாவட்ட குடித்தொகையில் பாதிமட்டுமே. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் ஒற்றுமை இல்லாவிட்டால் திருமலை நகரம் மட்டக்களப்பு மாவட்டம் ஆலையடி வேம்பு திருக்கோயில் பிரதேசங்கள் என  மூன்று தீவுகள்போல சிதறி உள்ளது தமிழர் இருப்பு.  

.

வடகிழக்கில் வாழும் 16 லட்சம் தமிழர்களில் வயோதிபர்களும் குழந்தைகளும் அதிக சதவீதத்தில் உள்ளனர். புலம்பெயர்ந்த தமிழர்  இனி தாயகம் வந்து போராடப்போவதில்லை. தங்கள் பிள்ளைகளையும் போராட அனுப்பப்போவதில்லை. அதேசமயம் அவர்கள் கழ சமூக பொருளாதார அரசியல் பாதுகாப்பு கழநிலமைகள் அறியாமல் நிதானமான அரசியலை ஆய்வுகளோ விமர்சனமோ இன்றி நிராகரிப்பவர்களாக உள்ளனர். மேலும் புலம்பெயர் தமிழர்கள் பாராழுமன்ற அரசியலில்  அதிதீவிரவாதத்தை தூண்டுகிறவர்களாக உள்ளார்கள். 

.

பெரும்தோல்வியின்பின்னர் அரச பயங்கரவாத அச்சுறுத்தல் மத்தியிலேயே  இன்றைய ஈழத் தமிழர் அரசியல் தொடர்கிறது. ஈழத்தில் மேற்க்கு நாடுகளினதும் அயல் நாடுகளதும் அரசியல் அழுத்தத்தாலும் அதன் அடிப்படையிலான  பாராளுமன்ற நடவடிக்கைகளாலுமே ஈழத் தமிழரது அன்றாட இருப்பை உறுதிப்படுத்தும் அரசியல் செய்யவேண்டியுள்ளது.  

பேரழிவான தோல்விக்குப்பின்னர் நாம் கையறு நிலையில் இருக்கிறோம்.    சிங்கள அரசுகள் சர்வதேச அழுத்தத்துக்கு மட்டுமே சற்று அசைந்து கொடுக்கின்றன. அதுவும்  சர்வதேசம் எங்களை ஒரு தரப்பாக அங்கீகரிக்கும் வரைக்கும்தான்.  எங்களுக்கான அங்கீகாரம் தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சிகள் பிரதிநிதித்துவம் பெறாத வரைக்குமே நீடிக்கும். முஸ்லிம் கட்சிகள் தேசிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடும் அவலநிலையாலேயே  அவர்களுக்கு தனித் தரப்பு அங்கீகாரம் கிடைக்கவில்லை.  கஜேந்திரன் பொன்னம்பலத்தின் வரவு SLFP UNP பேரின வாத அரசுகளுக்கு எதிராக அறவழி போராட்ட அரசியலை முன்னெடுத்து வளர்த்துச் செல்லவில்லை. SLFP UNP  ஆட்ச்சியாளர்களின் பேரின வாத செயல்பாடுகளுக்கு எதிராக  அவர்கள் போராடவோ சிறைகளை நிரப்பவோ இல்லை. பதிலாக புலம்பெயர் தமிழரதும் சர்வதேச தமிழ் ஆதரவாளர்களதும் காதுகளை நிரப்புகிறதில் மட்டுமே  குறியாகச் செயல்படுகிறார்கள். 

 ரணிலும் மகிந்தவும்  வடகிழக்கில்  தமிழர்களையும்  SLFP UNP கட்ட்சியின் சின்னங்களில் போட்டியிடவைத்து தமிழர்களின் தேசிய இனத் தன்மையையும் அதனால் கிட்டிய  தனித்தரப்பு அந்தஸ்தையும் அழிக்கிற முயற்சியில் தீவிரமாக உள்ளனர். அறவழியில்கூட போராடாமல் போலித் தீவிரவாதம்பேசி  கூட்டமைப்பை மட்டுமே குறிவைத்து   செயல்படுகிறவர்கள் நோக்கம் அச்சம் தருகிறது.  SLFP, UNPக்கு எதிராக தெருவில் இறங்கி தொடர்ந்து போராடாமல்  பதவிகளை தாருங்கள் என தேர்தலில் குதித்து கூச்சமைப்பின் வாக்குகளை பிரிபது SLFP, UNP போனற தேசிய கட்சிகளுக்கு வாசல் திறக்கிற அரசியல் செய்கிறார்களோ என  என அச்சத்தை ஏற்படுத்துகிறது.   

.

அரசுக்கு எதிராக தீவிரமாகப் போராடாமல் தேர்தலை மட்டும் குறிவைத்து தமிழர் கட்சிகளை உடைத்து அழித்தல் எனும் செயல்பாடு  கடந்த உள்ளூர் ஆட்சி தேர்தல்களிலேயே SLFP UNP கட்சிகளுக்கு வழ்விட்டு தமிழர் பலத்தை சிதறடித்துள்ளது.  வடகிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பு உடைந்தால் அதன் பலனாக SLFP மற்றும்  UNP கட்சிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். அதனால் தனி இன தமிழர் தனித்தரப்பு அந்தஸ்தை இழக்க நேரும். அதன்பிறகு எமக்கு SLFP UNP சொல்வதைத் தவிர வேறு குரலே இருக்காது. க்ஜேந்திரன் பொன்னம்பலம் விக்னேஸ்வரன் அணி அரசியல் த்ந்தை செல்வா முன்னெடுத்த அர்ப்பனிப்புள்ள அறப் போரட்ட அரசியலாக இருந்து ஆதரிப்பது வேறு. அவர்கள் செயல்படும் கட்சியாக இல்லை.  அவர்கள் தேர்தலில் தமிழர் கூட்டமைப்பை உடைத்து பதவியை எங்களுக்கு தாருங்கள் செயல்படுகிறோம் என்கிற அரசியலாக இருக்கிற ஆபத்தை நீங்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. 

.

கஜேந்திரன் பொன்னம்பலம் அணியை தேர்தல் நோக்கத்தை விட்டுவிட்டு அறவழியில் விடுதலை அரசியல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக கிழக்கு மாகானத்தில் தேர்தலில் குதித்தமை தமிழ அடையாளமான பிரதிநிதித்துவத்தைச் சிதைப்பதாகவே அமைதுள்ளது. பாராளுமன்ற பதவிக்காக மக்களைப் பிரிக்காமல் போராட்டங்களில் மக்களை இணைக்கிற பணியை செய்யுங்கள்.
கூட்டமைப்பு வெளியில் உள்ள அமைப்புகளை இன்னும் இன்னும் உள்வாங்கி வலுவடையும் அமைப்பாக ஜனநாயகத் தன்மைபெற்று விரிவடைய வேண்டும்.

தோழ தோழியரே, நமக்கு அதிக மக்களும் அதிக வாய்ப்புகளும் அதிக அதிக வளங்களும் அதிக காலமும் இல்லை

.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

அரசுக்கு எதிராக தீவிரமாகப் போராடாமல் தேர்தலை மட்டும் குறிவைத்து தமிழர் கட்சிகளை உடைத்து அழித்தல் எனும் செயல்பாடு  கடந்த உள்ளூர் ஆட்சி தேர்தல்களிலேயே SLFP UNP கட்சிகளுக்கு வழ்விட்டு தமிழர் பலத்தை சிதறடித்துள்ளது.  வடகிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பு உடைந்தால் அதன் பலனாக SLFP மற்றும்  UNP கட்சிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். அதனால் தனி இன தமிழர் தனித்தரப்பு அந்தஸ்தை இழக்க நேரும். அதன்பிறகு எமக்கு SLFP UNP சொல்வதைத் தவிர வேறு குரலே இருக்காது. க்ஜேந்திரன் பொன்னம்பலம் விக்னேஸ்வரன் அணி அரசியல் த்ந்தை செல்வா முன்னெடுத்த அர்ப்பனிப்புள்ள அறப் போரட்ட அரசியலாக இருந்து ஆதரிப்பது வேறு. அவர்கள் செயல்படும் கட்சியாக இல்லை.  அவர்கள் தேர்தலில் தமிழர் கூட்டமைப்பை உடைத்து பதவியை எங்களுக்கு தாருங்கள் செயல்படுகிறோம் என்கிற அரசியலாக இருக்கிற ஆபத்தை நீங்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை

குறைந்தது கூட்டமைப்பு சமீப காலத்தில் செய்த ஒரு அறவழிப்போராட்டத்தை  ஞாபகப்படுத்துங்கள்.பார்க்கலாம் .

காலிமுகத் திடலில் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் பின்னர்
தமிழ் அரசியல்வாதிகள் எல்லோருமே பேச்சளவில் மட்டுமே இயங்கினார்கள்.
சிங்கள அரசுகளுடன் ஒப்பந்தங்களை  செய்த தந்தை செல்வா கூட அந்த ஒப்பந்தங்கள் கிழிக்கப்பட்டபோது எந்த விதமான மிகப்பெரிய அளவிலான அறவழிப்போராட்டத்திலும்
ஈடுபடவில்லை .சில கடையடைப்புக்கள் , திருகோணமலைக்கான   பாத யாத்திரை என்பதோடு  சரி.
 

குறைந்தது ஒரு வாரமாவது உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டாரா?
ஆனாலும் அவர் மக்களைத் தனது பேச்சாற்றலால் ஒன்றுதிரட்டினார்.
தமிழ் மக்களுக்கு இதுதான் தீர்வாக முடியும் என்று பாதையைக் காட்டினார்.மக்களும் அவர் வழி செல்லத்தயாராகினர்.

அவரின் பின்னரான காலம் தமிழரசுக்கட்சியின் பதவி மோகக் காலமானது.

அமிர் அண்ணா எதிர்க்கட்சித் தலைவராகி ஒரு போராட்டத்தையும் செய்யவில்லை.

இப்போ சம்பந்தர், சுமந்திரன் போன்றவர்கள்  எத்தனை போராட்டங்களை நடாத்தினார்கள்.

குறைந்தது முள்ளி வாய்க்கால் தமிழ் இனவழிப்பின்போதாவது ஏதாவது செய்தாரா? சரி

சம்பந்தர் இந்தியாவில், தமிழ் நாட்டில்  ஒளித்திருக்காமல்  அரசியற்போராட்டங்களிலாவது கலந்து கொண்டாரா?

ஆனால் கஜேந்திரன் கட்சி ஆரம்பித்ததும் வீதி  மறியல், உண்ணாவிரதம், பாத யாத்திரை என்று போராட்டத்திலேயே வாழ வேண்டும்.
தமிழரசுக்கட்சி நோகாமல் நொங்கு சாப்பிட வேண்டும் அப்படித்தான் கவிஞர் ஐயா சொல்ல வருகின்றாரா?     

 

 

Link to comment
Share on other sites

விவாதங்கள் எப்படி அமைந்தாலும் சம்பந்தர் தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டமைப்பும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் தமிழர் விடுதலைக்கான பொது போராட்டங்களிலும் தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழர் சிங்கள முற்போக்காலர்

 உறவு போன்ற பொதுப் பிரச்சினைகளிலும் கைகோர்ப்பது அல்லது புரிந்துணர்வுடன் செயல்படுவது பற்றி உடனடியாக சந்தித்துப்பேசி முடிவுக்கு வரவேண்டும் என கோருகிறேன். தமிழர் விடுதலைக் கூட்டமைப்புக்கும் தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் கூட்டமைப்பாக இணைந்தாலும் தனித்தனியே செயல்ப்பட்டாலும் தமிழர் விடுதலையின் இரண்டு சக்கரங்களாகச் செயல்ப்படவேண்டும் என்பதே காலத்தின் கோரிக்கையாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

பொதுப் பிரச்சினைகளிலும் கைகோர்ப்பது அல்லது புரிந்துணர்வுடன் செயல்படுவது பற்றி உடனடியாக சந்தித்துப்பேசி முடிவுக்கு வரவேண்டும் என கோருகிறேன். தமிழர் விடுதலைக் கூட்டமைப்புக்கும் தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் கூட்டமைப்பாக இணைந்தாலும் தனித்தனியே செயல்ப்பட்டாலும் தமிழர் விடுதலையின் இரண்டு சக்கரங்களாகச் செயல்ப்படவேண்டும் என்பதே காலத்தின் கோரிக்கையாகும்.

ஐயா இந்த ஒற்றுமையைப் பற்றி ஆராய்ந்த்துதான் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அதிலிருந்து கஜேந்திரன் வெளியேறக் காரணம் நீங்கள் உங்கள் முதல்ப் பந்தியிலே விழித்துக் கடிதம் வரைந்தவரது செயல்களே.
கஜேந்திரனையும் வேறு சிலரையும் ஓரங்கட்டிவிட்டால் தானே அடுத்த தளபதி என நினைத்த சுமந்திரன் அவர்களே இன்றைய குழறுபடிகளுக்கான முக்கிய காரணி.
இந்த ஒற்றுமையைப் பற்றி நீங்களே சுமந்திரன் அவர்களுக்கு ஒரு கடிதம் வரைந்து பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து விவகாரங்களுக்கான இண அமைச்சராக ஒரு இஸ்லாமியரை சிங்களம் நியமித்தபோது அந்த நியமனத்தைப் பெரும்தன்மையுடன் இல்லை நான் ஒரு இஸ்லாமியன் என்னால் இந்து விவகாரங்களுக்கான இணை அமைச்சராக பதவியிலிருக்கமுடியாது ஆகவே சரியானவர்களை நியமியுங்கள் என சம்பந்தப்பட்டவர் தெரிவித்தால் முஸ்லீம்களது பெருந்தனமையும் சக தமிழர்களோடு அவர்கள் சேர்ந்து அரசியல் செய்வதற்கு ஆவலுள்ளவர்கள் என எம்மால் கணித்திருக்கலாம் ஆனால் நிலைமை அப்படி இல்லையே எகிக்கொடுத்தாலும் எனது பாத்திரத்தில் போடு அது பன்றிக்கறியாகவிருந்தாலும் பறுவாயில்லை எனக்கூறி அமைச்சர் பதவியை அது என்ன அமைச்சுக்குச் சார்ந்தது யார் சார்ந்தது என சிறிதுகூட யோசிக்காது ஏற்றுக்கொள்ளும் பக்குவமுள்ள முஸ்லீம்களுடன் எம்மால் இணைந்து செயல்படலாம் என நீங்கள் எண்ணுகிறீகள  ஜெயா அண்ணர் அவர்களே 

Link to comment
Share on other sites

 குடும்பம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய அக்கறை இல்லாதிருந்தால் பல கணவன் மனைவிகளுக்கு  சேர்ந்துவாழ விட்டுக்கொடுத்து சமரசம் செய்கிற அவசியம் இருந்திருக்காது. தாய்மண்னின் சந்ததிகளின் எதிர்காலம் பற்றிய அக்கறையே தமிழர் முஸ்லிம்களிடையே எப்படியும் சமரசமாகி இணைந்து செயல்படுகிற வழிவகைகலை கண்டடை நிர்பந்திக்கிறது தோழா

Link to comment
Share on other sites

On 6/11/2018 at 3:21 AM, poet said:

 

திரு சுமந்திரன் அவர்களே,

கட்சிக்குவெளியே அதிகாரங்களை கையகப்படுத்தி இயங்குகிறீர்கள் என்கிற சந்தேகம் மட்டுமே உள்ளது. அத்தகைய சந்தேகத்துக்கு இடமழிக்காமல் நீங்கள் தொடர்ந்தும் பணியாற்றவேண்டும் என்பதே தமிழரசுக்கட்சிக்கு உள்ளும் வெளியிலும் உள்ள பெரும்பாலான தமிழர்களது எதிர்பார்ப்பாக உள்ளது. விடுதலைக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகளில் உங்கள் அறிவும் செயல் திறனும்பற்றி யாருக்கும் சந்தேகமில்லை.
கட்சிக்கட்டுபட்ட வகையில் உங்கள் உழைப்பு தமிழர்களது பாராளுமன்ற அரசியலுக்கு அவசியமான ஒரு தருணத்தில் நீங்கள் ராஜினாமா பற்றிப் பேசுவதை ஏற்றுகொள்ளமுடியாது. - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

வணக்கம் ஜெயபாலன் ,

உங்களுடைய ஆதங்கம் புரிகின்றது ,தற்போதைய சூழ்நிலையில் சுமந்திரன் ராஜினாமா செய்வதென்ற பேச்சுக்கு இடமில்லை .

Link to comment
Share on other sites

On 6/11/2018 at 7:05 AM, Elugnajiru said:

 

சுமந்திரன் தனது மனைவி இல்லாத ஒரு பெண்ணைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் படம் சமூகவலைத்தளங்களில் உலாவருவதை மறந்திட்டார்,  

 

 

 

கருத்துக்களை எழுதுகின்றவர்களுக்கு  எது உண்மை /பொய் என்று பகுத்தறியும் தகுதி இருக்கவேண்டும் .அல்லது ஆராய்ந்து உறுதிப்படுத்தி கருத்துக்களை முன்வைக்க வேண்டும் .முகப்புத்தகத்தில் உலவிய படங்கள் சுமந்திரனின் மனைவி,மகள் ஆகியோரது படங்கள் .கருத்துக்களை கருத்துக்களால் எழுத துணிவில்லாத வர்கள்தான் இப்படியான கேவலமான விடயங்களை அரங்கேற்றுவார்கள் .நாளைக்கு உங்களுடைய மனைவி பிள்ளைகளுக்கு இப்படி ???

On 6/15/2018 at 10:56 AM, வாத்தியார் said:

ஐயா இந்த ஒற்றுமையைப் பற்றி ஆராய்ந்த்துதான் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அதிலிருந்து கஜேந்திரன் வெளியேறக் காரணம் நீங்கள் உங்கள் முதல்ப் பந்தியிலே விழித்துக் கடிதம் வரைந்தவரது செயல்களே.
கஜேந்திரனையும் வேறு சிலரையும் ஓரங்கட்டிவிட்டால் தானே அடுத்த தளபதி என நினைத்த சுமந்திரன் அவர்களே இன்றைய குழறுபடிகளுக்கான முக்கிய காரணி.
இந்த ஒற்றுமையைப் பற்றி நீங்களே சுமந்திரன் அவர்களுக்கு ஒரு கடிதம் வரைந்து பாருங்கள்

2010இல் தேர்தலில் TNA வென்றதன் பின்புதான் சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார் .தேர்தலுக்கு முன்னமே தங்களுக்கு சந்தர்ப்பம் தரவில்லை என்று TNA யில் இருந்து வெளியேறி விட்டார்களே .வரலாறு முக்கியம் வாத்தியாரே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரி,
நான் ஒன்றும் வெள்ளை வேட்டிக்கள்வன் இல்லை 

அதேவேளை சுமந்திரனைப்பற்றி சமூக வலைத்தளங்களில் உலவிய இந்த விடையத்தை யாரும் இதுவரை மறுக்கவில்லை தவிர இச்செய்தி தகவல் ஊடகங்களுக்கான சட்டதிட்டங்கள் மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் நாடுகளிலேயே அதிகமாக வெளிவ்ந்தது. அதேவேளை சுமந்திரன் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் உலகம் முளுமைக்கும் அவருக்கான இராங்க ரீதியான பாதுகாப்பு இருக்கும் சும்ம காமா சோமா என அவரைப்பற்றி தவறாகச் சித்தரித்துவிட முடியாது தவிர அவரொரு திறமை வாய்ந்த வழக்குரைஞர் இலங்கை அரசியிலமைப்புச்சட்டம் பிரித்தானிய அரசியல் அமைப்பின் அத்திவாரத்திலிருந்தே வரையப்பட்டது. ஆகவே இவரைப்பற்றிய தகவல்கள் பிரித்தானியாவிலும் சமூக வலைத்தளங்களில் உலாவியது நீங்கள் வாழ்வது கனடாவில் கனடாவின் சட்டதிட்டங்களும் போலியான தகவல்களுக்கு அதிகூடிய தண்டனையளிக்கும்.

விருப்பமென்றால் சுமந்திரன் சட்ட நடவடிக்கையை தனது பாராளுமன்ற இராயாங்கத் தகுதி மூலமும் அப்புக்காத்துப் புலமைமூலமும் அவதூறாளர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கலாம். 

மீண்டும் மீண்டும் கூறுகிறேன்

தமிழர் அரசியலை வென்றெடுபதற்கான காலநதியில் கலந்த "சாக்கடை நீர்"  சுமந்திரனாவார் அந்த நீரைச் சுத்திகரிக்கமுடியாது வேண்டுஎன்றால் பன்றிப்பண்ணைக்கு மடைமாற்றம் செய்யலாம். 

Link to comment
Share on other sites

On 6/18/2018 at 12:42 AM, Elugnajiru said:

தமிழர் அரசியலை வென்றெடுபதற்கான காலநதியில் கலந்த "சாக்கடை நீர்"  சுமந்திரனாவார் அந்த நீரைச் சுத்திகரிக்கமுடியாது வேண்டுஎன்றால் பன்றிப்பண்ணைக்கு மடைமாற்றம் செய்யலாம்.

உண்மை தான்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.