Jump to content

கண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை

சுயாந்தன்

தமிழில் நவீன கவிதையின் தற்கால முகத்தை எழுத்து என்ற சிற்றிதழ் மூலம் அழுத்தமாக உருவாக்கியவர்கள் கா.நா.சு மற்றும் சி.சு.செல்லப்பா ஆகிய இருவரும்தான். பிரமிள், நகுலன், பசுவையா (சுரா), கா.நா.சு முதலியவர்கள் எழுதிய கவிதைகளே இன்றைய நவீன கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் முன்னோடியாகவும் இருந்துள்ளது. இருந்து வருகிறது. 'புத்தியால் எழுதப்படுபவைதான் புதுக்கவிதை' என்று ஜெயகாந்தனும் 'புத்தியாலும் எழுதப்படுபவையே புதுக்கவிதை' என ஜெயமோகனும் ஒரு இடத்தில் கூறியிருந்தனர். ஜெயகாந்தன் அறிவார்ந்த தன்மையே நவீன கவிதைக்குப் போதும் என முன்வைக்க ஜெயமோகன் அதுவும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். கவிதை பற்றிய ஜெயமோகனின் இந்தக் கருத்து முக்கியமான ஒன்று. ஏனெனில் வெறுமனே புத்தியின் துணைகொண்டு எழுதப்படும் கவிதைகள் இயந்திரவாத அணுகுமுறை கொண்டவை. ஆனால் புத்தியாலும் எழுதப்படும் கவிதைகளை அதாவது மனத்தையும் அதற்குள் ஊன்றிக்கொண்டு பேசுவது என்பதுதான் முக்கியமானது. நவீன கவிதையின் தேவைப்பாடும் அதுதான்.

kand-1-1024x683.jpg
 

இன்றைய காலகட்டத்தில் கவிதையைத் தேர்ந்தெடுத்துத் தான் நான் வாசிப்பதுண்டு. கவிதையை வாசிப்பவர்களைக் காட்டிலும் எழுதுபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து விட்டது. கவிதை பற்றி எழுதத் தொடங்கியதும் ஒருசிலர் தமது கவிதைகளையும் அனுப்பி இது எப்படியுள்ளது என்று திருத்தம் கோருவர். உண்மையில் இந்தத் திருத்தம் கோரல் என்பது தேவையற்ற ஒன்று. நல்ல கவிதை இயல்பான மனத்திலிருந்து அசாதாரணமாகப் புடைத்தெழும். அதற்குப் பயிற்சி என்பது புறக்காரணிகளால் ஆன ஒன்றல்ல. கவிதைகளை வாசித்து அனுபவங்களை ஒழுங்குபடுத்தி அகவயப்படுத்தலின் மூலம் மிகத்தரமான கவிதைகளை எழுதமுடியும். அவ்வாறு எழுதப்படும் ஒரு கவிதைதான் பல காலமும் தரமான ஒரு கவிதையியக்க சக்தியாகத் தொடர்ந்திருக்கும். ஆரம்பத்தில் கூறியதுபோல புத்தியாலும் எழுதப்படும் கவிதையாகவும் இருக்க வேண்டும். அந்த கவிதைச் சிருஷ்டிக்கு உதாரணமாகக் கண்டராதித்தனைக் கூறலாம். கண்டராதித்தனின் திருச்சாழல் தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகளையும் அவருடைய தனிக் கவிதைகளையும் வாசித்ததுண்டு. ஆரம்பத்தில் வாசித்த 'ஞானப் பூங்கோதைக்கு நாற்பது வயது' என்ற கவிதை எனது வாசிப்பில் சற்று வித்யாசமான கிளர்ச்சியை உண்டாக்கியிருந்தது. அது எப்படி இருவர் சந்திக்கும்போது பரஸ்பரம் ஒரேமாதிரியாகச் சிந்தித்து தம்மைப் பரிமாற்றிக்கொள்ள முடியும் என்று ஒரு தத்தளிப்பையும் உண்டாக்கியது. இங்கிருந்துதான் கண்டராதித்தன் கவிதைகள் பற்றிய அறிமுகம் எனக்கு ஏற்பட்டதுண்டு. பொதுவாக ஒரு பேரூந்திலோ புகைவண்டியிலோ பயணிக்கும்போது நமக்குத் தெரிந்தவர்களை முகஸ்துதி மூலமும் தெரியாதவர்களை அதே நேரம் நம் சாயலிலுள்ளவர்களை என்னைப்போல உள்ள ஒருவர் என்று உரையாடிக் கொள்வோம். இங்கு ஒரு ஆணுக்கு தான் பெண்ணாகவும் தன் போன்ற ஒருத்தியையும் காண நேர்ந்தால் எந்த விதமான சிந்தனையை உண்டாக்கும்.  கண்டராதித்தனின் இந்தக் கவிதையில் சொற்களை அதிகமாகக் கையாளாத தன்மையை நாம் அவதானிக்கலாம். புத்தியால் எழுதப்படும் கவிதைக்கு வரிகளின் தேவை அதிகமாகிவிடுகிறது. ஆனால் அதுவே புத்தியாலும் இன்னபிற மன நிலைகளின் ஆழத்தோடும் கவிஞன் இயங்கும்போது சொற்கள் மட்டுப்படுத்தப்படுகிறது. அதனைக் கண்டராதித்தனின் கவிதைகளின் நாம் அதிகம் அவதானிக்கலாம்.

 

"நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்
யாரைப்போல் இருப்பேனோ
நேற்று அவளை நான் பார்த்தேன்
பேருந்தின் கடைசியில் நின்றிருந்த
அந்தப் பெண்ணிற்கு என் வயதிருக்கும்
அந்த நாசி,
அந்தக்கண்கள்,
கருங்கூந்தல்,
மாநிறம்,
சற்றே திமிரான பார்வை
வடிவான தோற்றமென
நான் பெண்ணாய்ப் பிறந்தால்
வடிவெடுக்கும் தோற்றம் தான் அது.
இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்
பார்த்துக்கொண்டோம்
இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்
பார்ப்பதைத் தவிர்த்தோம்
இப்போது பேசும் தொலைவில் நிற்கும் அவளிடம்
நீங்கள் இளங்கோவா என்றேன்
ஆமாம் என்ற அவள்
நீங்கள்
ஞானப்பூங்கோதைதானே என்றாள்"

 

நவீன கவிதைக்கு கருத்தியல் உள்ளடக்கங்கள் மூன்று தேவைப்படுவதாகப் பொதுவான கவிதை விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
1. சமூக விமர்சனத் தன்மை
2. சுயவிமர்சனத் தன்மை
3. தத்துவ விமர்சனத் தன்மை

 

இம்மூன்று கூறுகளையும் நாம் கண்டராதித்தனிடம் காணலாம். இதில் தத்துவ விமர்சனத்தன்மை சற்றே குறைவாக இருந்தாலும் ஏனைய இரண்டு கருத்தியலும் கண்டராதித்தனிடம் நெருங்கியுள்ளது.  அவருடைய திருச்சாழல் தொகுப்பிலுள்ள கவிதைகள் பல அவ்வகையினவே. சமூக விமர்சனத்தன்மை நவீன கவிஞனுக்கு இன்றியமையாத பண்புச்சுட்டெண். ஞானக்கூத்தன் தொடங்கி கண்டராதித்தன் வரையானவர்களிடம் இதனைச் சன்னமாக அவதானிக்கலாம்.   மக்களின் சமூக அரசியல் அறியாமைகளை எள்ளலுடனும் வெளிப்படையாகவும் கூறும் மரபு பல தசாப்தங்களாக நவீன கவிதையில் இருந்துவரும் ஒரு செயற்பாடாகும். இதனை மீறி எந்த ஒரு நவீன கவிஞனும் தனது காதல் கவிதைகளையோ சுயவிமர்சனக் கவிதைகளையோ எழுதியதில்லை என்றே கூறவேண்டும்.

 

"நீண்ட காலத்திற்குப் பிறகு ஊர் முச்சந்திக்கு வந்தான்
வித்தைகள் வாங்கி விற்கும் யாத்ரீகன்
தற்செயலாக நாங்கள் கேட்டோம்
ஐயா உம் பயணத்தில் பிழையான மன்னனைக்
கொண்ட
மக்களைக் கண்டதுண்டோ வென்று
பதிலுக்கு யாம் வெட்கும்படி
காற்றைப் பிளந்து கூறிட்டான்
நீரை அளவிட்டு முடிந்தான்
கற்பாறைகளை விலை காட்டினான்
நாங்கள் சினந்து வளரும் மிருகத்தைப்போல
உறுமினோம்.
பிறகு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்
அதன்பின் சாந்தமாகி அது நாங்கள்தானா என்றோம்.
அது சமயம் அவன் கேட்டான்
இவ்வாறு அண்டிக்குழைத்தீர்
மதிகெட்டீர் மானமிழந்தீர்
எப்படி இதுவெல்லாம்
இன்ன விலை
இன்ன பொருள்
பார் முழுதும்
விற்க
இது வேண்டும்
கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து"

 

பிழையான அரசியல்வாதியைத் தேர்வுசெய்பவர்களும் பிழையான மக்கள்தான். இதனை அறியாமல்  பிழையான மன்னனைக் கண்டதுண்டா என்று யாத்திரீகனிடம் மக்கள் சிலர் கேட்கின்றனர். அதற்கு அவனது பதில் எதிரிலுள்ள மக்களை எள்ளல் செய்வதாக மாறுகிறது. அதற்கான காரணங்களையும் கூறுகிறான். இது கவிஞனின் சமூக விமர்சனப் பிரக்ஞையிலிருந்து கிளர்ந்தெழுந்த ஒன்று. வெறுமனே காதல் கவிதைகளாலும் சுய விமர்சனக் கவிதைகளாலும் தமது படைப்புலகத்தை நிறைக்காது சமூகவுணர்வின் விகாசமும் கலையில் வெளிப்பட்டு நிற்கவேண்டும். அதைத்தான் நவீன கவிதையின் கருத்தியல் கூறுகளில் முக்கியமான ஒன்றாகக் கருதமுடியும். பக்திமரபு நம் பண்பாட்டின் பெரும்பகுதியை நிரப்பியுள்ளது. உதாரணமாகக் கோயில் வழிபாடு என்றாலும், அங்கு பாடப்படும் தேவாரப்பாடல்கள் ஆனாலும், இன்னபிற மொழியியல் பண்பாட்டுத் தொடர்ச்சிகள்  என்றாலும் சரி அனைத்துமே பக்தி மரபினைப் பின்பற்றியவையேயாகும். இது நமது வரலாற்றில் நிகழ்ந்த ஆகப்பெரிய மரபார்ந்த நிலைகொள்ளல் தன்மை என்றும் கூறலாம். அந்த நிலைகொண்ட தன்மை இன்றும் நம்மிடையே பிரதிபலிக்கிறது என்பது ஆச்சரியமான விடயமாகும். அதுபோலத்தான் நவீன கவிதைகளும். அவை இன்றைய வாழ்வையும் அரசியலையும் இக்கட்டுக்களையும் காதலையும் பிரதிபலிப்பவை. அவற்றில் நேரடித்தன்மையும் குறியீட்டுத் தன்மையும் அழுத்தமாக உள்ளது. அந்த அழுத்தம் எங்கிருந்து வருகிறதென்றால் மேற்கூறிய பிரதிபலிப்புக்களை வெளிப்படையாகக் கூறுவதால் உண்டாகிறது. 

 

தூய்மையான அன்புக்குக் குறியீடாக வெள்ளை நிறத்தைத்தான் சொல்வார்கள். பாரதியார்கூட 'வெள்ளைநிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்' என்று நவீன காலத்துக்குச் சற்று முந்தைய சமூகப்பாடலுக்கும் வெண்மையைத்தான் அடையாளப்படுத்தியிருப்பார். அதுபோல பல நூற்றாண்டுக்கு முன்பாகக் கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதி என்ற பக்திப்பாடலில்  'வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி வெள்ளிதழ்ப்பூஞ்
சீதாம் புயத்தில் இருப்பாள்' என்றும்
'கருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள்
அருந்தா மரைமலர் செந்தாமரை மலராலயமாத்
தருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற்
பெருந்தாமரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே'

என்றும் வெண்மையைப் பிரதிபலித்துத் தூய்மையின் பக்திரூபத்தைத் தொடர்ந்து பாடியிருப்பார். பிற்காலத்தில்  பட்டரால் எழுதப்பட்ட அபிராமி அந்தாதியிலும் நாம் இதனைக் காணமுடியும். தும்பைப் பூ என்பதை வெண்மைக்கு அடையாளமாகக் கூறுவர். அதே நேரம் சங்க இலக்கியத்தில் அதனை ஒரு திணையாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதுவே பிற்காலத்தில் கம்பரின் ராமாயணத்தில் ராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பைப்பூவை ராவணன் சூடியதைக் கம்பர் இப்படி வர்ணித்துள்ளார்.

'வான்படை வானவர் மார்பிடை
இற்று இலாதன எண்ணும் இலாதன பற்றினான்
கவசம் படர் மார்பிடைச் சுற்றினான்
நெடுந் தும்பையும் சூடினான்'

இதனை நாம் தூய்மையின் அடையாளமாகவும் பக்தியின் மரபாகவும் எடுத்துப் பார்க்கவேண்டும். சங்ககாலத்தில் இருந்து பின்பற்றப்படும் மரபு பிற்காலத்தில் மாற்றமடைகிறது என்பதற்கு தொல்காப்பியத்திலும் கம்பராமாயணத்திலும் வித்யாசப்படும் தும்பையின் அர்த்தங்களை நாம் கண்டுகொள்ள வேண்டும். சிவ பக்தனான ராவணனுக்குத் தும்பையை வெறுமனே ஒரு வெற்றியின் அடையாளப் பூவாகச் சொல்லியிருக்க மாட்டார் கம்பர். அது காலம் கொண்டு வந்த மாறுதலாகவே நாம் காணவேண்டும். அந்த மாறுதல்தான் பக்திமரபின் உச்சம்.

இந்த வெண்மையின் மரபு நவீன கவிதையிலும் தொடர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. பலர் செவ்வியலை அப்படியே உள்வாங்கி எழுதித் தள்ளுவர். ஒருசிலரே வெள்ளையின் நவீன சித்திரத்தைச் செவ்வியலுடன் சேர்த்தால் போன்ற படைப்பை வழங்குவர். கண்டராதித்தனின் கவிதையொன்று,

 

'வெள்ளை நிறத்தில்
நெஞ்சோடு
நான் சேமித்த
இந்த
அன்பையெல்லாம்
யாரோ யாருக்காகவோ
பறித்துக் கொண்டே
இருக்கிறார்கள்

தும்பையை
மாலையாகத் தொடுப்பது
நன்றல்ல எனவே
அதன் வெண்மையை
பரிசளிப்பதாகச் சொன்னான்
அந்த அன்பைத்தான்
பழகிய தோள்கள் அனைத்திற்கும்
சூட்டிக் கொண்டிருக்கிறேன்

வருவோர் போவோரெல்லாம்
வைத்துவிட்டுச் சென்றதுதான்
தாராளமாக
எடுத்துக் கொள்ளுங்கள்
நிறைய இருக்கிறது'

 

இது முற்றிலும் செவ்வியலில் கூறப்பட்ட பாடல் வடிவங்களிலிருந்து மாறுபட்டு இருந்தாலும் கம்பனும் பாரதியும் அபிராமிப் பட்டரும் கூறிய வெண்மையின் அர்த்தங்களைப் பிரதிபலிக்கும் ஒன்றாகவே நாம் பார்க்கலாம். இங்கு கண்டராதித்தன் எழுதிய இக்கவிதையைப் புத்தியாலும்  எழுதப்பட்ட ஒன்றாகவே காணவேண்டும். "தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் நிறைய இருக்கிறது" என்பது நவீன கவிஞனுக்குள் இருக்கின்ற கனிவான குரல். இந்தக் குரல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை நாம் செவ்வியலின் புலத்திலிருந்து தொகுத்துப் பார்த்தல் வேண்டும். அந்தச் செவ்வியலின் கூறு எந்த மரபு என்பதையும் அவரவர் வாசிப்பைக் கொண்டு வரையறுக்கலாம். அத்துடன் கண்டராதித்தனின் அநேகமான கவிதைகள் குறிப்பிட்ட ஒரு பாணிக்குள் அடைபட்டு இருக்கவில்லை என்பதை அவரை வாசிப்பவர்களால் உணரமுடியும். ஒவ்வொரு கவிதைக்கும் வெவ்வேறு தொனியுண்டு. ஒரே மாதிரியான வேகத்தில் அனைத்துக் கவிதைகளும் கூறப்படவில்லை என்பதே எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. வெறும் வடிவத்தை நம்பியிருக்காமல் கவிதையை நம்பியுள்ள தருணமாகவே அதைனை நாம் அவதானிக்கவும் முடியும்.

IMG_0002_-_Copy__15191_zoom.jpg

குற்றவுணர்வுகளால் உருவான எண்ணப்பாடுகளைத் துடைத்துக்கொள்ளக் கவிதையை ஒரு ஊடகமாக உருவாக்கிக் கொண்ட கவிஞர்கள் நம்மத்தியில் உள்ளனர். சிலர் தமது தோல்விகளை மறைத்துக்கொள்ள எழுதுவதுண்டு. பலர் தமது இயலாமைகளை வெளிப்படுத்தவும் அடக்கவும் எழுதுவதுண்டு. ஆத்மாநாம் அவர்களை இதற்குள் எந்த வகைக்குள்ளும் அட்கிக் கொள்ளலாம். இதனை எழுதும்போது ஆத்மாநாமின் கவிதையொன்று ஞாபகம் வருகிறது.

 

"எதிர்த்துவரும் அலைகளுடன்
நான் பேசுவதில்லை.
எனக்குத்தெரியும் அதன் குணம்,
பேசாமல்
வழிவிட்டு ஒதுங்கிவிடுவேன்.
மற்றொருநாள்
அமைதியாய் இருக்கையில்
பலங்கொண்ட மட்டும்
வீசியெறிவேன் கற்பாறைகளை,
அவை மிதந்து செல்லும்
எனக்குப் படகாக"

 

இப்படியொரு அதீத நம்பிக்கைக் கவிதையை எழுதிய ஆத்மாநாம் மூன்றுதடவைகள் தற்கொலை செய்ய முயன்று இறுதியாக மரணத்தைத் தழுவினார் என்பது எவ்வளவு பெரியதொரு முரணாக உள்ளது. இங்கே ஆழ்மன வெளிப்பாடுதான் கவிதை என்று அனைவராலும் கூறப்படுகிறது. அதுதான் உண்மையும்கூட. ஆனால் தற்கொலை மற்றும் குற்றவுணர்வுகளும் அப்படியான ஆழ்மனச் செயற்பாடுதானே. இரண்டும் பரஸ்பரம் மோதலடையும்போது கவிதையின் ஆழ்மனம் செத்துப் போகிறது. வலிந்து பெற்ற மரணம் வெற்றிகொள்கிறது. இதைத்தான் ஆத்மாநாம் விடயத்தில் நான் புரிந்து கொண்டது. வெறுமனே ஆத்மாநாம் மட்டுமல்ல பல படைப்பாளிகள் இங்கே உதாரணமாகவுள்ளனர். கண்டராதித்தனின் பல குரல்கள் எனக்கு ஆத்மாநாமை ஞாபகப்படுத்துகிறது. இருவரின் கவிதை அடையாளங்கள் பரஸ்பரம் வேறான போதும் அவர்களின் குரல் ஞாபகத்தின் மூலம் ஒன்றாக வாசகனை வந்தடைகிறது.

 

"நல்லவனாயிருப்பதைக்
காப்பாற்றத் தன் வாழ்நாளைச் 

செலவழிக்கிறான் ஒருவன்.
அதையொரு பன்னீர்க்கரும்பைப்போல்
கடித்துத் துப்பிச்செல்கிறான் மற்றொருவன்.

 

காட்டாற்று வெள்ளத்தில்
ஓரம் நின்று
கைகால் முகம் கழுவிக்கொள்கிறான் 

அயோக்கியன்
அவ்வளவு அயோக்கியத்தனமும் 

அடித்துக்கொண்டு போனது வெள்ளத்தில்"

 

கண்டராதித்தனின் இந்தக் கவிதையில் மிக இயல்பாகவே மனிதனுக்குள்ள மேலோட்டமான உணர்வுகள் ஆழ்மனம் வரை கொண்டு செல்லப்படுகிறது. அதனால் ஏற்பட்டதுதான் இந்த அவநம்பிக்கை. நல்லவன் × அயோக்கியன் என்பதன் படிமம் அதைத்தான் குறிக்கின்றது. நல்லவனாயிருப்பதை நீர்த்துப் போகச்செய்யும் வரையறைகளைக் காட்டிலும் அடித்துச் செல்லப்படும் அயோக்கியத்தனத்துக்கு நம் மரபில் அதிக முக்கியத்துவம் உள்ளது.  பெண்களின் தீட்டு என்றாலும், இன்னபிற சமயக் கிரியைகள் என்றாலும் அதற்கு நீராடுதல் என்பது தூய்மைப்படுத்தலின் அடையாளமேயாகும். ஆனால் யாருமே வெள்ளத்தில் சென்று தம்மைத் தூய்மைப்படுத்துவதில்லை. அதற்கென்று ஒதுக்கப்பட்ட பிரத்தியேகமான ஓரிடத்தில் சென்று அமைதியாக அதனை நிகழ்த்துவர். இங்கே காட்டாறு மற்றும் வெள்ளம் இந்த இரண்டும் ஒருவனின் அயோக்கியத்தனத்தை அடித்துச் செல்கின்றது என்றே கூறப்படுகிறது. இதனை நம் மரபிலிருந்து வந்த ஒரு மனச் செயற்பாடாகவே பார்க்கவேண்டும். "சனி நீராடு" என்றும் மணிமேகலையில் ஓரிடத்தில் "சுந்தரச் சுண்ணமும் தூ நீர் ஆடலும்
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும் காயக் கரணமும் கண்ணியது உணர்தலும்"
என்றும் குறிப்பிடப்படுகிறது. இங்கே வகைப்படுத்தப்படுவது செவ்வியல் பண்பாலான தூய்மையேயாகும். இதில் மாறிலியான பண்பு தொடர்ந்து ஈடுபட்டிருக்கும். இதனை நவீன காலத்துக்குப் பிரயோகிப்பதில் மாற்றங்கள் வேண்டும்.  இங்கே கண்டராதித்தன் கவிதையில் வருவது அடித்துச் செல்லப்படும் ஆக்ரோஷம். அதனை அவரது குற்றவுணர்வின் தளத்தில் இருந்தே பார்க்கவேண்டும். ஒரு தவறைச் செய்துவிட்டு மனம்வருந்துபவனுக்கு அந்த மனம் வருந்திய பக்குவம்தான் காட்டாற்று வெள்ளம். அந்தக் குற்றச்செயல்தான் அயோக்கியத்தனம். இந்த இரண்டின் மோதலில் மனிதத் தன்மையுள்ள ஒருவனுக்கு அயோக்கியத்தனம் அடித்துச் செல்லப்பட்டுவிடும். காட்டாற்று வெள்ளம் என்பது தொடர்ந்து வருவதில்லை என்று குறிக்கவே "ஓரம் நின்று" என்ற வரி கவிஞரால் எழுதப்பட்டுள்ளது. இங்கே நாம் கவிதையை வாசிக்கும்போது செவ்வியல் இலக்கியப் பரீட்சயமும் நவீன கால வாழ்க்கையின் பிரக்ஞையும் ஏற்பட்டு இருக்க வேண்டும். அப்படியான வாசிப்புத்தான் இலக்கியத்தின் வடிவமாகவுள்ள கவிதையை மொத்தமாக ரசித்து உணர்வதற்கு நல்வழியாக இருக்கும். இது கவிதையை மட்டுமல்ல இலக்கியத்தையும் வாழவைக்கும். கண்டராதித்தனையும் மேலும் பல எழுத்தாளர்களையும் எனது வாசிப்புக்கு உட்படுத்துவது அவ்வகையில்தான்.

 

 

கண்டராதித்தன் கவிதைகள்

 

திருச்சாழல்

 

1

 

தவிர நீ  யாரிடமும்  சொல்லாதே

பணியிடத்தில்  உள்ளவன்தான்

என்  வெளிர்நீல முன்றாமையால்  நெற்றியைத்

துடைப்பதுபோல்  அவனைக் காண்பேன்

அதுவல்ல என்துயரம்  நாளை  ஞாயிறென்றால்

இன்றேயென்  முன்றானை  நூறுமுறை

நெற்றிக்குப்  போவதுதான்  என்னேடி

 

தென்னவன்  திரும்பியிருப்போனோ  பிள்ளைகள்

வந்ததோ  உண்டதோவென  ஆயிரம்  கவலைகள்

உள்ளதுதான்

வாரத்தில்  ஞாயிறென்றால் ஒன்றே  தான  காண்

சாழலோ

 

2

 

விண்முட்டும்  கோபுரத்தில்  இடை நிறுத்தி

தொடைகட்டும்  சிற்பம்  உண்டென்பான்

களிப்பூட்டும்  கதைகள் பல காண்போர்

அறியாமல்  சொல்லி  முடிப்பான்

நாளது முடிய  நேரம் நெருங்கும்

நாளை ஞாயிறல்ல  நானும் விடுப்பல்ல

என்பதோர் எண்ணம்  வந்து

மகிழ்வது  ஏனடியோ

அண்ணன்வர  எட்டாகும்  பிள்ளையொன்றுமில்லை

வீடுபோய்ச் சேர்ந்தாலும்  ஊணும் உறக்கமும்தான்

சொற்பமாய்ச்  சொன்னாலும் வீடு போல்

அற்பமாயில்லாமல் போனது  நம் புண்ணியம்தான்

நாள்தோறும்  ஞாயிறென்றால்  நம்பாடும்

நாய்பாடும்  போலாகும் காண் சாழலோ.

 

3

 

பின்னலை முன்போட்டால் அழகென்பான்

மறுத்தும் இடையில்  சேலையைச்

சொருகினால்

கடுமையான வேலையொன்றைத்

தந்திடுவான்

பொந்தனைப்போல்  கள்ளமனம்கொண்ட

அவன்

கணவனல்ல

காலைமுதல்  மாலைவரை  களைத்தே

போவேன்

நாளையொரு நாள் விடுப்பெனக்

கேட்டாலும்

மனம் இங்கேயும்  உள்ளதுபோல் அங்கேயும்

உள்ளதுபோல் இருப்பது ஏனடியோ

 

விந்தைமனம் உனக்கும் எனக்கும்

பிணியென்று  கிடந்தாலும்  பணியிடம்

போவதை மறவோம்தான்  ஆனால்

நாளை ஞாயிறென்றும்  அறியாமல்

விடுப்புக்கோரி  விண்ணப்பித்தால் 

நகைப்பிற்கும்  நாம் ஆளாவோம்  காண்

சாழலோ

 

 

4

 

திங்களொரு  நாள்  செவ்வாயொரு நாளும் போயிற்று

புதன் வந்ததும்  பொறுமையில்லை  எனக்கு

அவன் நலமோ அவன் மனை நலமோவென

நெஞ்சம்  பதைத்துப் போவதுதான் என்னேடி

 

பொல்லாத புதுநோய்  வந்ததைப் போல் வருந்தாதே

அலுவலிலும் அவனேதான் வீட்டினிலும்

அவனேதானென  பெண்ணொருத்திப் படும்

பெருந்துயர்ப்  போலல்ல  உன் துயரம்

என்றெண்ணிச்  சந்தோஷம்  காண் சாழலோ.

 

 

யோக்கியதை – சில குறிப்புகள்

 

1.

சதா யோக்கியதையை

கேள்வி கேட்கிறது

யோக்கியத்தனம்

அயோக்கியதைக்கு

இந்தச் சிக்கல் இல்லை

இல்லவே  இல்லை.

 

2.

நல்லவனாயிருப்பதைக்

காப்பாற்றத் தன் வாழ்நாளைச்

செலவழிக்கிறான்  ஒருவன்.

அதையொரு  பன்னீர்க்கரும்பைப்போல்

கடித்துத் துப்பிச்செல்கினாறன்  மற்றொருவன்.

 

3.

காட்டாற்று வெள்ளத்தில்

ஓரம் நின்று

கை  கால்  முகம்

கழுவிக்கொள்கிறான்

அயோக்கியன்

அவ்வளவு  அயோக்கியத்தனமும்

அடித்துக்கொண்டு  போனது

வெள்ளத்தில்.

 

4.

வெதுவெதுப்பாக

நீரை விளாவி

கைகளை  நனைக்கிறாய்

உன் யோக்கியதை

இரத்தச் சிவப்பாய்  மாற்றுகிறது

தண்ணீரை.

 

5.

யோக்கியனாகவே கழித்துவிடும்

வாழ்க்கையை போலொரு

துயருண்டா  இல்லையா.

 

6.

ஆசாபாசங்களை

மலத்தைப்போல்

அடக்கிக்கொண்டிருக்கிறது

யோக்கியதை

அயோக்கியத்தனத்திற்கு

அந்த மலச்சிக்கல்  இல்லை.

 

7.

சந்தர்ப்பவாதமும்

அயோக்கித்தனமும்

நல்ல நண்பர்கள்

வேண்டுமானால்

இரண்டு நல்ல 

நண்பர்களை உற்றுக்

கவனியுங்கள்.

 

 

https://suyaanthan.blogspot.com/2018/06/blog-post_10.html?m=1

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.