Jump to content

`எனக்கு ஒன்றுமே புரியவில்லை’ - எஸ்.வி.சேகர் விவகாரத்தில் கலகலத்த தமிழிசை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.வி.சேகருக்காக 89 எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்கிறார்கள் என்றால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அரசாங்கத்தின் கடமை" என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

தமிழிசை

சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட்டினால் தமிழகத்தில் ஏற்படும் தற்கொலைகளை அரசியலாக்கி அரசியல்கட்சிகள் அதன்மூலம் லாபம் காண்கின்றன. இந்தத் தற்கொலைகள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். தற்கொலைகள் நடக்காமல் அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும். ஆனால், தற்கொலை நடந்தால், தங்கள் அரசியல் லாபத்துக்காக அரசியலாக்கிக் கொண்டிருப்பதை உயர் நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. இதைத்தான் எங்களின் கருத்தாகவும் பதிவு செய்கிறேன். சென்னை - சேலம் பசுமைத் திட்டம், பின் தங்கிய ஐந்து மாவட்டங்களுக்குப் பொருளாதார ரீதியில் மிகப் பெரிய பலனை அளிக்கக்கூடியது. ஆனால், இதற்கு மிகத்தவறான பிரசாரங்களைச் சில குறிப்பிட்ட நபர்கள், சில குறிப்பிட்ட கட்சிகள் மறுபடியும் அதை ஒரு தூத்துக்குடியாக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்து, சூழ்ச்சியோடு பணியாற்றுகிறார்கள். இந்தச் சூழ்ச்சிக்கு அந்தப் பகுதி மக்களும் விவசாயிகளும் பலியாகிவிடக் கூடாது. 

எதிர்க்கட்சித் தலைவர், அங்கே ஒரு பிரச்னை ஏற்பட்டுவிடாதா, அதன்மூலம் அரசியல் குளிர்காயலாமா என்கிற சூழ்நிலையைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கு எவ்வளவு கடமை இருக்கிறதோ, அதே கடமை எதிர்க்கட்சிக்கும் இருக்கிறது. ஆனால், ஸ்டாலின் வெளிநடப்பு செய்வதற்கான காரணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அதுவும், எஸ்.வி.சேகருக்காக 89 எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்கிறார்கள் என்றால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அரசாங்கத்தின் கடமை. காவலாளிகளின் கடமை. அது எல்லாம் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த திராவிட முன்னேற்றக் கழக எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்கிற அளவில் எடுத்துச் சென்றது அவர்கள் வெளிநடப்பு செய்வதற்கு காரண காரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த ஆக்கபூர்வமான  திட்டங்களுக்கும் உறுதுணையாக இருப்பதில்லை என்பதைத்தான் இது காண்பிக்கிறது.

தமிழகத்தில் மக்கள் நலம் சார்ந்த பிரச்னைகள் எவ்வளவோ இருக்கும்போது எஸ்.வி.சேகர் பிரச்னையை முன்னிறுத்தி அதைப் பற்றிப் பேச வேண்டும் என்று சொன்னால் தமிழக அரசியலில் ஸ்டாலின் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். காவிரிக்காக அவ்வளவு போராடினார்கள். நேற்றோடு கர்நாடகாவின் டைம்லைன் முடிந்துவிட்டது. உறுப்பினரை இன்னும் கொடுக்கவில்லை. இதைப்பற்றி யாராவது பேசுகிறோமா. ஒருவேளை எடியூரப்பா அங்கு வந்து, ஓர் உறுப்பினரைக் கொடுக்கவில்லை என்றால் இன்றைக்கு தமிழ்நாடு எப்படி இருந்திருக்கும் என்று என்னால் சிந்தித்துக்கூட பார்க்க முடியவில்லை. ஸ்டாலின் ஒருவேளை பெங்களூருக்கே பாதிதூரம் போயிருப்பார். ஆனால், இன்றைக்கு அப்படியே அமுக்கமாக இருக்காங்க. அவங்களுக்கு பிரச்னை காவிரி கிடையாது. மோடி எதிர்ப்புதான். அவர்கள் எதிர்மறை அரசியலிலேயே சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் நேர்மறை அரசியலுக்குத் திரும்பட்டும்.

ஒரு எஸ்.வி.சேகரைப் பார்த்து 89 எம்.எல்.ஏவும் வெளியே போனீர்கள் என்றால் நீங்கள் யாரைப் பார்த்து பயப்படுகிறீர்கள். இது ஒன்றுதான் தமிழகத்தின் மக்கள் பிரச்னையா, எனது கருத்துப்படி எதிர்க்கட்சித் தலைவர் ஏதாவது காரணத்தைக் காண்பித்து வெளிநடப்புச் செய்வதில் குறியாக இருக்கிறாரே தவிர, மக்கள் பிரச்னையில் அக்கறை இல்லை. எவ்வளவோ மக்கள் பிரச்னைகள் இருக்கும்போது  ஒன்றுமே இல்லாததை எடுத்து மக்கள் உணர்வுகளைத் தூண்டும் வகையில்தான் இவர்கள் அரசியல் இருக்கிறது என்பது எனது குற்றச்சாட்டு" என்று தெரிவித்தார்.

 

https://www.vikatan.com/news/tamilnadu/127568-i-do-not-understand-why-89-mlas-walk-out-from-assembly-for-sv-shekher-says-tamilisai.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.