Jump to content

புலிகளின் வான்படையின் எழுச்சியும் வீழ்ச்சியும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் விமானங்களை பொறி வைத்து பிடித்த விமானப்படை! – புலிகளின் வான்படையின் எழுச்சியும் வீழ்ச்சியும் 1

April 19, 2018
01-2.jpg

2007-ம் ஆண்டு மார்ச் 25-ம் திகதி அதிகாலை.

கட்டுநாயக்கா விமானப்படை தளத்தின்மீது விடுதலைப்புலிகளின் முதலாவது விமானத்தாக்குதல் நடந்தது. புலிகளின் இரண்டு சிறிய விமானங்கள் கட்டுநாயக்க விமானப்படை முகாம்  வான்பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தன.

அப்பொழுது இலங்கை வான்படையின் பயன்பாட்டில் இருந்தது இந்திய ராடர்கள். புலிகளின் விமானங்கள் வந்த விவகாரம் இந்திய ராடர்களிற்கு தெரிந்திருக்கவேயில்லை.

 

புலிகளின் விமானங்கள் குண்டுவீசியதையடுத்து, இருண்ட வானத்தை நோக்கி விமானப்படையினர் துப்பாக்கிகளால் சுட்டார்கள். சாதாரண துப்பாக்கிகள், கலிபர்கள் கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். இரவு நேரமாகையால் விமானத்தை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்த முடியவில்லை.

வான்புலிகளிற்கும் குண்டுவீசுவதல் சிக்கல்கள் இருந்தன. அவர்களிற்கு இது முதலாவது தாக்குதல். வன்னியிலிருந்து நீண்டதூரம் பயணித்து வந்து தாக்கும் பதட்டம், இலக்கை துல்லியமாக அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாமை போன்ற காரணங்களால் அவர்களிற்கும் விமானங்கள் தரித்து நிற்கும் பகுதியை (ஹங்கர்கள்) அடையாளம் காண்பதில் சிக்கலிருந்தது.

வான்புலிகளின் அந்த இரண்டு விமானங்களையும் ஓட்டியவர்கள் கரன், சிரித்திரன். இவர்கள் இருவரும் கடைசியாக கொழும்பில் தாக்குதல் நடத்த முயன்றபோது, 2009 இல் உயிரிழந்திருந்தனர். அதுதான் புலிகளின் கடைசி வான் தாக்குதல்.

41456-300x227.jpg விடுதலைப்புலிகளின் கேப்பாபிலவு ஓடுதளத்தில் பிரபாகரனும் தளபதிகளும்

விடுதலைப்புலிகள் ஒரு விமானம் வீசிய இரண்டு குண்டுகள் விமானப்படை பொறியியல்பீடத்தின் கட்டிடத்தின் மீது விழுந்தது. மற்றைய விமானம் வீசிய இரண்டு குண்டுகளும் ஹெலிகொப்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹங்கரின் மீது விழுந்தது. இதில் 3 விமானப்படையினர் கொல்லப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். விமானத்தளத்தின் கட்டிடங்களிற்கு சேதம் ஏற்பட்டதே தவிர, விமானங்களிற்கோ, ஹெலிகொப்டர்களிற்கோ சேதம் ஏற்படவில்லை.

இந்த தாக்குதலின் பின் புலிகளின் இரண்டு விமானங்களும் பத்திரமாக வன்னியில் வந்து தரையிறங்கி விட்டன. புலிகளின் விமானம் பாதி தூரம் வந்ததன் பின்னர்தான் இலங்கை விமானப்படை மிகையொலி விமானங்களான கிபிர் விமானங்கள் விரட்ட தொடங்கின. ஆனால் புலிகளின் விமானங்கள் பத்திரமாக புதுக்குடியிருப்பில் தரையிறங்கி விட்டன.

 

புலிகளின் விமானங்கள் எந்த ரகம் என்று இலங்கை விமானப்படையினரால் அடையாளம் காண முடியவில்லை. மறுநாள் புலிகள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். அப்பொழுதுதான் புலிகளிடம் என்ன விமானம் இருக்கிறதென்பது உலகத்திற்கு தெரிய வந்தது. தாக்குதலிற்கு உபயோகித்த விமானத்தின் படத்தையே வெளியிட்டு கெத்து காட்டியிருந்தனர் புலிகள்.

taf_10_60662_435-300x159.jpg புலிகள் உருவாக்கிய Electrical Bomb Release சிஸ்டம்

புலிகள் காண்பித்த விமான ரகங்கள் குண்டுவீச்சிற்குரியவை அல்ல. அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களால் EBR (Electrical Bomb Release) வசதி அமைக்கப்படுவதில்லை. புலிகள் பின்னர் விமானங்களில் EBR சிஸ்டத்தை அமைத்து, குண்டு வீச்சு விமானங்களாக மாற்றியிருந்தனர்.

புலிகளின் வான்படை பற்றிய ஆராய்ச்சியில் மொத்த உலகமும் இறங்கியிருக்க, வான்படையினர் வேறு ஒரு ஆய்வில் இறங்கினர். புலிகளின் விமானங்கள் எந்த வழியால் கொழும்புக்கு வந்தன என்பதை கண்டறிய வேண்டும். அந்த பாதையை அறிந்தால் போதும். மீண்டும் வரும்போது இலகுவாக குறிவைக்கலாம். எதிர்பாராத விதமாக திடீரென வந்துவிட்டாலும், திரும்பி போகும்போது தாக்கலலாம்.

 

LTTE-plane-300x266.jpg

புலிகளின் சிறிய, வேகம் குறைந்த விமானங்கள் இலங்கையின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுக்க முடியாதவை. இது புலிகளிற்கும் தெரியும். நன்றாக கவனித்தவர்களிற்கு புரியும், ஒருமுறை தாக்குதல் நடத்திய இடத்தில் புலிகள் இரண்டாவது முறை தாக்குதல் நடத்தியதில்லை. புதிய புதிய இலக்குகளைதான் தாக்கினார்கள். ஒருமுறை கொழும்பை தாக்கினால் அடுத்தமுறை அதற்கு நேர் எதிர்திசையில் பலாலியில் தாக்குதல் நடத்தினார்கள். அடுத்தமுறை திருகோணமலையில் தாக்குதல் நடத்தினார்கள். இப்படியே போக்குகாட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், யுத்தத்தின் இறுதி சமயத்தில் மீண்டும் கொழும்பிற்கு வந்தார்கள். அதாவது முதல் தாக்குதல் நடத்திய இடத்திற்கு. தம்மிடமிருந்த விமானங்களை வைத்து ஏதாவது அழிவை ஏற்படுத்த வேண்டுமென திட்டமிட்டதால் இந்த தாக்குதல் முயற்சியை மேற்கொண்டார்கள். இந்த சமயத்தில்தான் இரண்டு விமானங்களும் வீழ்த்தப்பட்டன.

அதாவது புலிகளிற்காக காத்திருந்த அரசின் பொறிக்குள் இரண்டு விமானங்களும் விழுந்தன. அது எப்படி?

 

விமான பயணங்கள் திட்டமிடப்படுவது முழுக்க முழுக்க பிளைட் பிளான் (Flight Plan) அடிப்படையில். இதை இரண்டு வழியில் உருவாக்குகிறார்கள். ஒன்று manual flight plan. அதாவது மனிதர்களின் மூளையை வைத்து உருவாக்கப்படுவது. அடுத்தது கணினி மூலம் உருவாக்குகிறார்கள். இப்பொழுது வர்த்தக விமானங்கள் அனைத்தும் கணினி மென்பொருள் மூலம் உருவாக்கப்படும் பிளானைதான் பயன்படுத்துகின்றன. (வான்புலிகள் பற்றிய தமிழ் பக்கத்தின் மினி தொடர் இது)

புலிகள் உபயோகித்தது manual flight plan.

manual flight plan பாவிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இதில் அனுபவமுள்ள ஒருவரால் பயணப்பாதையை ஓரளவு ஊகிக்க முடியும். நல்ல தேர்ச்சியுள்ளவர்கள் என்றால் 98 சதவீதம் துல்லியமாக ஊகிப்பார்கள். இலங்கை விமானப்படையினரும் புலிகளின் பிளைட் பிளானை ஊகித்தார்கள்!

இந்த தாக்குதல்களிற்காக புலிகள் எப்படியான ரன்வேயை பயன்படுத்தியிருப்பார்கள் என பலவித ஆய்வுகள் நடந்தன. கிழக்கு – மேற்கு திசையை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட ரன்வேயாக இருக்காது. வடக்கு – தெற்கை பேஸ் ஆக வைத்தோ, வடகிழக்கு – தென்மேற்கு அல்லது வடமேற்கு – தென்கிழக்கை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட ரன்வேயாக இருக்கும் என பலவித ஆய்வுகள் வந்தன.

ஆனால் முதல் தாக்குதலிற்காக புலிகள் அமைத்த ரன்வே ஒன்றையும் பாவிக்கவில்லையென்பதே உண்மை. இறுதியாக 2009 இல் புறப்பட்ட விமானங்கள் இரண்டும் மாத்தளன் உப்பேரி கரையிலிருந்துதான் ரேக் ஓவ் ஆகின. முதல் தாக்குதலில் விடத்தல்தீவிற்கு அண்மையாக கிறவல் பாதையொன்றில் ரேக் ஓவ் ஆகின. அங்கிருந்து சிறிய பயணப்பாதையில்  மேற்கு கரையால் கடலை கடந்து கட்டுநாயக்காவை கடந்து சென்று, கட்டுநாயக்கா விமானப்படை தளத்தை கடந்து சென்று, இடதுபுறமாக வட்டமடித்து, இன்னொரு இடது வட்டமடித்து மேலும் மூன்று நிமிட பயணதூரத்தில் விமானத்தளத்தின் தலையுச்சிக்கு வந்தன.( இது தமிழ் பக்கத்தின் காப்புரிமை பெற்ற தொடர்)  கட்டுநாயக்காவில் தாக்குதல் நடத்திவிட்டு, நேராக பறந்தால், கடலோரமாக பாதுகாப்பாக மன்னாரிற்கு வந்து விடலாம். இடையில் உள்ள அநுராதபுரம், ஹிங்குராங்கொட, சிகிரியா விமானப்படை தளங்களை கடக்க வேண்டிய அபாயமில்லை.

ராடரின் கண்ணில் மண்ணைதூவ புலிகளின் விமானங்கள் உயரம்குறைவான பறத்தலை செய்திருந்தன. தரையில் விமானத்தின் சத்தம் தெளிவாக கேட்டதாக மக்கள் சொல்ல தொடங்க, அதை வைத்து பிளைட் பிளானை கணிக்க புலனாய்வு அமைப்புக்கள் முயன்றன.

-ஹிருத்திக் போஸ் நிஹாலே-

(தொடரும்)

http://www.pagetamil.com/1942/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வான்படை ஜெட் விமானங்களிற்கு டிமிக்கிவிட புலிகள் பாவித்த உத்திகள்!-புலிகளின் வான்படையின் எழுச்சியும் வீழ்ச்சியும் 2

April 23, 2018
th2.jpg

கொழும்பில் முதலாவது தாக்குதலை முடித்து விட்டு வான்புலிகளின் விமானங்கள் திரும்பிய பின்னர், விமானங்கள் எந்த வழியால் வந்தன, எந்த வழியால் திரும்பின, எங்கிருந்து புறப்பட்டன, எங்கு தரையிறங்கின என்ற விபரங்களை அறிய புலனாய்வுத்துறை களமிறங்கியது.

ஆனால் இது அவ்வளவு சாதாரண விடயமல்ல.

வான்புலிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்பதை விமானப்படையினர் எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் இரண்டு இடங்களில் கோட்டை விட்டிருந்தனர். முதலாவது, தாக்குதல் நடத்திய புலிகளின் விமானங்களை விமானப்படையின் விமானம் விரட்டி சென்றது. எவ்வளவு நேரத்தின் பின் விரட்டி சென்றது தெரியுமா?

தாக்குதல் நடந்து 20 நிமிடங்களின் பின்னர். இதை விரட்டி செல்வதென சொல்ல முடியாதுதான். நள்ளிரவில் வன்னிக்கு சென்று வந்தார்கள் என சொல்லலாம்!

 

20 நிமிடமென்பது புலிகளின் வேகம் குறைந்த புலிகளின் விமானமே தரையிறங்க போதுமான நேரம். நள்ளிரவில் வன்னி வானில் சுற்றிய விமானப்படை விமானம், புலிகளின் விமானங்கள் தரையிறங்கிய தடயங்கள் தெரிகிறதா என தேடியது. இரவில் விமானங்கள் தரையிறங்கும்போது லான்டிங் லைற் எரியவிடப்படும். இரணைமடு, கேப்பாபிலவு ரன்வேயில் லான்டிங் லைற் எரிகிறதா என அந்த விமானம் தேடியது. அந்த பகுதியில் ஒரு நுளம்புத்திரி எரிந்த தடயம் கூட தெரியவில்லை!

புலிகளின் விமானங்களை 20 நிமிடத்தின் பின்னர் விரட்டி சென்றாலும், விமானப்படை அதிகாரிகள் என்ன நினைத்திருந்தார்கள் தெரியுமா? ஏதோ காற்றில் பலூனில் மிதப்பதை போல போய்க்கொண்டிருப்பார்கள், பின்னால் போய் பிடறியில் போடலாம் என்றுதான் நினைத்திருந்தார்கள்.

புலிகளின் விமானங்களை ஆகாயத்தில் பின்தொடர்ந்திருந்தால் மாத்திரமே தரையிறங்கிய இடத்தை கண்டறிந்திருக்க முடியும். விமானப்படை இதில் கோட்டை விட்டு விட்டது.

விமானப்படை கோட்டை விட்ட அடுத்த சந்தர்ப்பம், புலிகள் தாக்குதலிற்கு சென்ற சமயத்தில் நடந்தது.

கட்டுநாயக்காவில் தாக்குதல் நடத்த புலிகளின் விமானங்கள், வன்னியிலிருந்து ரேக் ஓவ் ஆகி, வவுனியா-மன்னார் வீதியை கடந்தன. (கடந்த பாகத்தில் விடத்தல் தீவிலிருந்து ரேக் ஓவ் ஆகியதாக எழுதியிருந்ததே என குழம்புகிறீர்களா? நீண்டகாலமாக இராணுவத்தை குழப்பிய விவகாரத்தில் இரண்டு வாரம் நீங்கள் குழம்பகூடாதா?) அங்குள்ள படைமுகாமில் சென்ரியில் இருந்த சில சிப்பாய்கள் வானில் வித்தியாசமான சத்தத்தை அவதானித்தனர். அது ஒரு விமானமாக இருக்கலாமென்றும் அவர்கள் ஊகித்தார்கள்.

ஆனால் யாருடைய விமானம் என்பதில் குழப்பமிருந்தது.

விமானப்படையிடம் இருந்ததெல்லாம் ஜெட் விமானங்கள்.அவைதான் வன்னிக்கு தாக்குதலுக்கு சென்று வந்தன. மிகச்சில சந்தர்ப்பங்களை தவிர, இரவில் அவை பறப்பதில்லை. ஜெட் விமானங்களின் சத்தமும், புலிகளின் இலகுரக விமானங்களின் சத்தமும் வேறுவேறு. அதனால் சிப்பாய்களிற்கு சந்தேகம் வந்தது. ஆனால் புலிகளின் விமானமாக அவர்கள் யோசிக்கவில்லை. ஏனெனில், அதுதான் புலிகளின் முதலாவது தாக்குதல் பறப்பு.

இதனால், ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்கிறதென்ற மாதிரி மேலிடத்திற்கு விடயத்தை சொன்னார்கள். அதுவும் மிக தாழ்வாக பறந்து சென்றதையும் குறிப்பிட்டார்கள். அண்ணளவாக எத்தனை அடி உயரத்தில் பறந்தது என்று பதில் கேள்வி வர, சிப்பாய்களால் அதைசொல்ல முடியவில்லை. இரவில் எத்தனை அடி உயரத்தில் விமானங்கள் பறக்கின்றன என்பதை விமானங்கள் சம்பந்தமான துறையில் இருப்பவர்களால் மாத்திரம்தான் கணிக்க முடியும்.

 

தகவல் விமானப்படைக்கு சென்றது. அந்த வான்பாதையில் தமது விமானங்கள் பறக்கவில்லையென்றார்கள். இதன்பின் குழப்பம் அதிகரிக்க, கட்டுநாயக்காவில் இயங்கிய central air traffic control tower ஐ தொடர்பு கொண்டு, அந்த பகுதியில், அந்த நேரத்தில் ஏதாவது விமானங்கள் பறக்கின்றனவா என கேட்டனர். ஏதாவது வர்த்தக விமானங்கள் பறக்கலாமென்ற சந்தேகம் விமானப்படையிடம் இருந்தது.

central air traffic control tower இலிருந்து வந்த பதில்- இல்லையென்பது!

இராணுவத்திற் வந்த சந்தேகமும், central air traffic control tower இன் பதிலும் பொருந்தாமல் இருந்தது. அப்படியானால் அந்த இரைச்சல்?

இதற்கு இன்றுவரை பதிலில்லை. இரண்டு விசயங்கள் நடந்திருக்கலாமென விமானப்படை கருதுகிறது. முதலாவது, வேறு ஏதோ சத்தத்தை கேட்டு, அதை விமான சத்தமாக படையினர் நினைத்திருக்கலாம். இரண்டாவது, இராணுவத்தின் கவனத்தை திசைதிருப்ப புலிகள் ஏதாவது உத்தியை பாவித்திருக்கலாம். அதாவது கொழும்பு நோக்கி புலிகளின் விமானமொன்று சென்று கொண்டிருந்தபோது, வேறொரு பிளைட் பாத்தில் புலிகளின் இன்னொரு விமானம் வன்னியை நோக்கி வந்திருக்கலாம். அதாவது, கொழும்பிற்கு தாக்குதலிற்கு புறப்பட்ட விமானத்திற்கு முதல் இன்னொரு விமானம் கிளம்பி, புத்தளத்திற்கு அண்மையாக மீண்டும் தரைக்குள் திரும்பி, வன்னிக்கு வந்திருக்கலாம்.

 

முக்கியமாக கவனிக்கவும்- இது இரண்டும் ஊகம்தான். இன்றுவரை உறுதிசெய்ய முடியாமல் போன விசயங்கள்.

இராணுவமும், விமானப்படையும் உசாரடைவதற்கு முன்னர் வான்புலிகள் பத்திரமாக விமானத்தை தரையிறக்கி விட்டனர். இதன் பின்னர்தான் விமானப்படை விமானமொன்று விரட்டலில் ஈடுபட்டது.

இப்பொழுது உங்களிற்கு ஒரு சந்தேகம் வரலாம். கட்டுநாயக்காவில் இயங்கிய central air traffic control tower ராடரில் வான்புலிகளின் விமானம் ஏன் பதிவாகவில்லை?

மிக சுலபமான பதில். ராடரின் கண்ணில் படாமல் புலிகள் பறந்திருக்கிறார்கள்!

தரையிலிருந்து சற்று உயரத்தில், மரங்களிற்கு சற்று உயரமாக பறந்தார்கள். கட்டுநாயக்காவில் இருந்த central air traffic control tower ராடர் சிவில் பாவனைக்கானது. அதை புலிகள் ஏமாற்றினார்கள்.

இதில் இன்னொரு நுணுக்கமான விடயமும் உள்ளது. அதை தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே விமானப்படையினர் கண்டுபிடித்து விட்டனர். வடக்கிலிருந்து மேற்காக கொழும்பு நோக்கி வர்த்தக விமானங்கள் செல்லும் பாதையை வான்புலிகள் தவிர்த்திருந்தனர். ஏனெனில், இந்த பாதையை central air traffic control tower ராடரில் 24 மணிநேரமும் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இந்த Airway க்குள் நுழைந்தால், கொன்ரோல் ரூமில் இருப்பவர்கள் எச்சரிக்கையடைந்து விடுவார்கள் என்பது புலிகளிற்கும் தெரியும்.

 

அதென்ன Airway? எங்கு அமைக்கப்பட்டுள்ளதென யாராவது கேட்டாலுமென்பதற்காக அது பற்றியும் சொல்லிவிடுகிறேன். இலங்கைக்குள் வர்த்தக விமானங்கள், பயணிகள் விமானங்கள் பறப்பில் ஈடுபடும் பாதைதான் இது. இலங்கையில் தரிக்காமல் செல்லும் விமானங்களின் பாதை வேறு. அது 30,000 அடிக்கு மேலேயுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் பல ஒரே திசையில் இயங்கிக்கொண்டிருக்கும். விபத்தை தவிர்ப்பதற்காக 30,000 அடி உயரத்திற்கு மேல் ஒரு பாதை. அதற்கு கீழே ஒரு பாதை. அதையும் மேல் கீழாக இரண்டாக, மூன்றாக பிரிப்பார்கள்.

இந்த Airway 18 கிலோமீற்றர் அகலமானது. இதில் இரண்டு விமானங்கள் பயணிக்க வேண்டுமெனில், 9 கிலோமீற்றர் அகலத்தில் பாதையை இரண்டாக்குவதல்ல. உயரத்தின் அளவின் மூலமே பாதையை தீர்மானிப்பார்கள். ஒரு விமானத்திற்கு 20,000 அடி உயர பாதை வழங்கினால், அடுத்த விமானத்திற்கு 21,000 அடிக்கு மேலே வழங்கப்படும்.

இந்த 18 கிலோமீற்றர் பாதையில் விமானம் பறக்கும்போது, இரண்டு பக்கமும் 8 கிலோமீற்றர் அகலத்தை பேண வேண்டும்.

இலங்கை Airway கள் அவ்வளவு பிசியாக இருப்பதில்லை. ஒரே பாதையில் இரண்டு விமானங்கள் பறப்பதே ஆச்சரியம்தான்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/2338/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்பதற்கு ஆள்.. இல்லை என்றால்... எல்லாரும் சண்டியர் என்று சொல்வார்கள்.

அந்த வகையில்... இந்தக் கட்டுரைகளையும் பார்க்கும் அளவுக்கு, 
எமது நிலைமையை....  கொண்டு வந்து விட்ட,  கிழட்டு அரசியல் வாதிகளை நினைக்க வேதனையாக உள்ளது.

உண்மையான செய்தியை... மறைத்து,  தங்கள் கற்பனைக்கு எழுதும்... கபோதிகள் இவர்கள்.

புலிகளின்... ஆரம்ப  விமானத் தாக்குதலை.... கண்டு, பயந்தது  அகில உலகம். முக்கியமாக...  குள்ள நரி  இந்தியா.
அடுத்து, தொடர்ச்சியாக... நடந்த  தாக்குதல், எல்லாம்...  விமான புலிக்கு, வெற்றியே.

இவ்வளவு... நடக்கும் போது... இலங்கை பாராளுமன்றத்தில், 
இந்தியா கொடுத்த  "சற்ற லைற்றை" வைத்து... புலிகளின் விமானத்தை கண்டு பிடிக்க முடியவில்லை, என்றால்... அந்த "சற்றலைற்றை.. வைத்து... மண்வெட்டி செய்து கொடுங்கள்"...  என்று சிங்கள பாராளுமன்ற  உறுப்பினர்கள்  பேசிய பேச்சு இன்றும், என்னால் மறக்க முடியாது. அந்தப் பதிவுகள்... இன்னும்... யாழ். களத்தில்  இருக்கும் என நினைக்கின்றேன்.  

ஈழம் எமக்கு இல்லை என்ற பின்.....  அவற்றை,  நினைவு மீட்டி, பார்க்க விருப்பம் இல்லை.
ஆனால்... சம்பந்தனும், சுமந்திரனும்... என் கையில்.. கிடைத்ததால்..... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏவுகணையை திசைதிருப்ப புலிகள் செய்த தந்திரம்!- புலிகளின் வான்படையின் எழுச்சியும் வீழ்ச்சியும் 03

April 30, 2018
pirabahran_air_tigers.jpg

புலிகளின் விமானங்கள் எந்த வழியால் வந்து தாக்கின என்பது படையினருக்கு புரியாத புதிராக இருந்தது. மேற்கு கடற்கரையால் மன்னாரிற்கு அண்மையாக கடலை கடந்து, கடலின் மேலாக பறந்து கட்டுநாயக்காவிற்கு வந்திருக்கலாம், அல்லது முல்லைத்தீவிலிருந்து புறப்பட்டு வவுனியாவிற்கு கிழக்காக பறந்து சிகிரியாவிற்கு அண்மையாக வலது பக்கம் ரேர்ன் பண்ணி கட்டுநாயக்காவிற்கு வந்து, தாக்கி விட்டு, மீண்டும் வலது பக்கம் ரேர்ன் பண்ணி மன்னாருக்கு போயிருக்கலாமென பல ஊகங்களுடன் தலையை பிய்த்து கொண்டிருந்த பாதுகாப்பு தரப்பினர், இறுதியில் புலனாய்வு பிரிவினரை களத்தில் இறக்கினர்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியேயுள்ள எல்லைப்புற கிராமங்களிற்கு சென்று விமானத்தின் சத்தம் கேட்டதா என ஆராய தொடங்கினார்கள். வவுனியாவில் சத்தம் கேட்டதென சொன்னார்கள், வில்பத்து காட்டோர கிராம மக்களும் சத்தம் கேட்டதென்றார்கள், புத்தளத்தில் சிலர் சத்தம் கேட்டதென்றார்கள். இதெல்லாம் விமானம் செல்லும்போது கேட்ட சத்தங்கள். தாக்குதலின் பின்னர் திரும்பி வரும்போது யாரும் சத்தத்தை கேட்கவில்லை. இதன்மூலம் புலிகள் பிளைட் பாத்தை வேறுவேறாக வைத்து குழப்பியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

ltte-plane-attack-313-300x225.jpg கொலன்னாவவில் தாக்குதல் நடத்திய புலிகளின் விமானம்

விமானங்களுடன் தொடர்புடைய ஆட்களிற்கு தெரியும், இன்னொரு வழியிலும் முயன்று பார்க்கலாமென்பது. அது விமானத்தின் த்ரஸ்ட் ரிவர்சர் (airplane thrust reverser) மூலமாக ஏற்படும் ஓசையை வைத்து தரையிறங்கும் இடத்தை ஓரளவு கண்டுபிடிக்கலாம்.

த்ரஸ்ட் ரிவர்சர் பற்றி கொஞ்சம் சொல்லிவிடுகிறோம். விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும்போது வேகம் அதிகமாகவே இருக்கும். வேகத்தை முடிந்தவரை குறைத்து விமானத்தை தரையிறக்குவதே இது. விமானத்தின் இயந்திரத்தை எதிர்ப்புறமாக ஓட விடுவதன்மூலம் வேகத்தை குறைப்பார்கள். இதன்போது வித்தியாசமான ஓசையொன்று ஏற்படும். சாதாரணமாக விமானம் பறக்கும்போது எழும் சத்தம் போல இல்லாமல், கொஞ்சம் விசித்திரமாக இருக்கும்.

 

சாதாரண மக்களிற்கு இந்த ஓசை வித்தியாசங்கள் புரியாது. அதை புரிய வைப்பதற்காக விமானம் பறக்கும் போது வரும் சத்தத்தையும், த்ரஸ்ட் ரிவர்சர் இயக்கப்படும் சமயத்தில் வரும் சத்தத்தையும் ஒலிப்பதிவு செய்து எல்லைக்கிராமத்தில் உள்ளவர்களிற்கு போட்டு காட்டினார்கள். ஆனால் இதற்கும் பலன் கிடைக்கவில்லை.

பாதுகாப்பு தரப்பு சத்தத்தையும் வைத்து தேடுதல் நடத்தும் என்பதை புலிகள் முன்னரே ஊகித்து, த்ரஸ்ட் ரிவர்சர் முறையை தவிர்த்து, கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பிறேக் மூலம் விமானத்தை நிறுத்தியிருக்கலாம் என்ற அபிப்பிராயமும் விமானப்படை அதிகாரிகள் சிலரிடம் இருந்தது. இது கிளைடிங் லாண்டிங் (airplane gliding landing) எனப்படும்.

புலனாய்வுப்பரிவு, விமானப்படையினர் இப்படி பல வழிகளில் முயற்சித்து பார்த்து புலிகளின் பிளைட் பிளானை கண்டுபிடிக்க முடியாமல் தலையை பிய்த்து கொண்டிருந்தனர்.

வான்புலிகளின் தாக்குதல் முடிந்து ஒரு வாரமாகியும் பாதுகாப்பு தரப்பிடம் எந்த தகவலும் இல்லை. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் என்ன செய்வதென தெரியாமல் தளபதிகள் கையை பிசைந்து கொண்டிருந்தனர். புலிகளின் விமானம் வானத்தில் இருக்கும்போது மட்டும்தான் ஏதாவது வாய்ப்பிருக்கும் என்பதால், அடுத்த முறை வான்புலிகள் வரும்வரை காத்திருப்பதென முடிவு செய்தனர். கட்டுநாயக்கா விமானப்படை தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், வவுனியா, சிகிரியா போன்ற விமானப்படை தளங்களையும் உசார்படுத்தியிருந்தனர்.

 

கட்டுநாயக்காவில் வான்புலிகள் தாக்கதல் நடத்தியது 2007 மார்ச் 25ம் திகதி. ஒரு மாத இடைவெளியின் பின் வான்புலிகள் மீண்டும் புறப்பட்டார்கள். இம்முறை அவர்கள் கட்டுநாயக்காவிற்கு செல்லவில்லை. பலாலி விமானப்படை தளத்தை குறிவைத்தனர்!

ஆனால் புலிகளின் குறி ஜஸ்ற் மிஸ். பலாலி விமானப்படை தளத்தை குறிவைத்தன். அது தவறிவிட்டது. வேறு இராணுவ நிலைகளில்தான் விழுந்தன. சில படையினர் உயிரிழந்தனர். அவ்வளவுதான் பெரிய சேதமில்லை.

இந்த தாக்குதல் சமயத்தில் பூநகரியின் கௌதாரிமுனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கிட்டு பீரங்கிப்படையணியின் ஆட்லறிகளில் இருந்து முதலில் செல் தாக்குதல் நடத்தப்பட்டது. செல் தாக்குதல் நடந்து கொண்டிருந்தபோதே, விசுவமடுவிற்கு அண்மையில் இருந்த சுண்டிக்குளம் பகுதியில் இருந்து ரேக் ஓவ் ஆன வான்புலிகளின் விமானம் ஒன்றுதான் பலாலியில் தாக்குதல் நடத்தியது.

 

சுண்டிக்குளத்தில் இருந்து புலிகளின் விமானம் ரேக் ஓவ் ஆனதா என நீங்கள் குழம்புகிறீர்களா? ஆம். இதுவரை யாரும் அறியாத தகவல் அது. தமிழ் பக்கம் வாசகர்களிற்கு மட்டுமே இப்போது அந்த தகவல் தெரிந்திருக்கிறது!

இந்த தாக்குதலிற்கு ஒரு மாதத்தின் பின், ஏப்ரல் 29ம் திகதி. இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளிற்கிடையில் உலககிண்ண இறுதியாட்ட பரபரப்பு சமயத்தில் புலிகளின் விமானங்கள் ரேக் ஓவ் ஆகின. இலக்கு- கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கெரவலபிட்டிய எரிவாயு நிலைய வளாகம்.

இந்த தாக்குதலில் ஒரு சிக்கல் இருந்தது. கொழும்பின் புறநகர் பகுதி கொலன்னாவ. வான்புலிகளின் முதலாவது தாக்குதல் நடந்த கட்டுநாயக்க விமானத்தளத்திற்கு சென்ற அதே பிளைட் பாத்திலேயே (flight path)  கொலன்னாவவிற்கும் செல்ல வேண்டும்.

கடந்த இரண்டு அத்தியாயங்களிலும், வான்புலிகளின் பிளைட் பிளானை எப்படி ஊகித்து வைத்திருந்தார்கள் என்பதையும், பிளைட் பாத்துகளில் உள்ள சிக்கல்களையும் குறிப்பிட்டிருந்தேன்.

eng-srilanka04-BM-Vermischtes-Colombo-jp புலிகளின் விமானங்களை எதிர்கொள்ள இராணுவம் பாவித்த புது உத்தி. மின்சாரத்தை துண்டித்து விட்டு, தரையிலிருந்து ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்துவது

இம்முறை நிச்சயம் ரிஸ்கான சூழலை சந்திக்க வேண்டுமென்பது வான்புலிகளிற்கு தெரிந்திருந்தது. புலிகளின் பிளைட் பாத்தை ஓரளவு ஊகித்திருந்ததால், நிச்சயம் தரையிலிருந்து தாக்குதல் வரும், விமானங்களை ட்ராக் டவுன் பண்ணிவிடுவார்கள் என்பதால் விமானம் சுட்டுவிழுத்தப்படும் அபாயத்தையும் புரிந்துதான் வான்புலிகள் பறந்தார்கள். அப்படி நடந்திருக்கமானால் 2009 பெப்ரவரி 22ம் திகதி நடந்த புலிகளின் இறுதி வான்தாக்குதலில் உயிரிழந்த இரண்டு வான்புலிகளின் படங்களும், ஒன்றரை வருடங்களின் முன்னரே வெளியாகியிருக்கும். வான்புலிகளான சிரித்திரன், ரூபன் ஆகியோரை பிரபாகரன் நெருக்கமாக அணைத்து வைத்திருந்த அந்த படம் எப்பொழுது எடுக்கப்பட்டது தெரியுமா?

பலர் நினைக்கிறார்கள், இறுதி விமானத்தாக்குதலிற்கு புறப்படுவதற்கு முன்னர் அந்த படம் எடுக்கப்பட்டதாக. உண்மை அதுவல்ல. உயிரிழந்த கரும்புலிகள் பிரபாகரனுடன் நிற்பதை போன்ற புகைப்படங்கள் முன்னர் அடிக்கடி வெளிவரும். அனேகமான புகைப்படங்கள் அந்த தாக்குதலுக்கு புறப்பட முன்னர் எடுக்கப்படுவதில்லை. அனேகமாக கரும்புலி பயிற்சி முடியும் போது, அல்லது ஒரு தாக்குதலுக்கு திட்டமிடும் சமயத்தில் அந்த படங்கள் எடுக்கப்பட்டு விடும்.

 

வான்புலிகள் பற்றிய இந்த தொடரில் இடையீடாக ஒரு சம்பவத்தை சொல்லிவிட்டு செல்கிறேன். வான்புலிகளின் இறுதி விமானத்தாக்குதலின் பின்னர், அதில் உயிரிழந்த சிரித்திரன், ரூபன் ஆகியோரை பிரபாகரன் இறுக்கமாக அணைத்து வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகியிருந்தது. வழக்கமாக கரும்புலிகளுடன் புகைப்படம் எடுக்கும்போது பிரபாகரனின் முகத்தில் இறுக்கம் இருக்கும். ஆனால் வான்புலிகளுடன் எடுத்த புகைப்படத்தில் கலக்கமும், நெகிழ்ச்சியும் தெரியும். ஏனிந்த வித்தியாசம்?

இதற்கு இரண்டு காரணம் உள்ளது.

முதலாவது, வழக்கமாக தாக்குதலிற்கு நீண்டநாள் முன்பே பிரபாகரன் கரும்புலிகளுடன் புகைப்படங்கள் எடுத்துவிடுவார். மிகச்சில சந்தர்ப்பங்களின் போதே, தாக்குதலிற்கு புறப்படும்போது புகைப்படம் எடுப்பார்கள். இந்த புகைப்படமும் அதிலொன்று. அதனால் அவர் கலங்கியிருக்கலாம்.

இரண்டு, அதில் உயிரிழந்த சிரித்திரன் மீது பிரபாகரனிற்கு நிறைய பிரியம் இருந்தது. அச்சுவேலியை சேர்ந்தவர் சிரித்திரன். புலிகளின் மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த கரிகாலனின் மனைவி எழுமதி. இப்படி சொல்வதை விட, பலருக்கு தெரிந்த வேறுமுறையிலும் சொல்லலாம். டொக்ரர் அன்ரி. விடுதலைப்புலிகளின் முக்கிய மருத்துவர். அவரது நெருங்கிய உறவுக்காரர் சிரித்திரன். இந்த உறவுமுறை தெரிவதற்கு முன்னரே, அவர் பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணிக்கு வந்து பிரபாகரனுடன் நெருக்கமாகி விட்டார்.

சிலருக்கு சிலரை மிக பிடிக்கும். அது மனித இயல்பு. தனது மெய்பாதுகாவலர் அணியில் இருந்த சிலரில் பிரபாகரனிற்கு அளவுகடந்த பிரியமிருந்தது. அதில் சிரித்திரனும் ஒருவர். அவர் வான் கரும்புலியாக ஆக வேண்டும் என படையணியில் சண்டைபிடித்தே வான்புலிகளிற்கு சென்றார். அது பெரிய கதை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் அதனை கூறுகிறோம். பயிற்சியின் முடிவில் அவரை கண்டபோது பிரபாகரன் நெருக்கமாக அணைத்திருக்கலாம்.

சரி, இப்பொழுது விடயத்திற்கு வருகிறோம். புலிகள் எதிர்பார்த்ததை போலவே நடந்தது. வான்புலிகளிற்கு இருந்த ஒரேயொரு பிளைட் பாத், இராணுவத்தின் அவதானத்திற்கு உட்பட்ட பகுதிதான். மன்னாரில் கணிசமான பகுதியை இராணுவம் கைப்பற்றிவிட்டதால், முன்னர் பாவித்த பிளைட் பாத்தை பாவிக்க முடியாது. அது யுத்த வலயமாக இருந்ததால், இராணுவம் விழிப்பாக இருந்தது. விமான சத்தத்தை கேட்டதும் அலெர்ட் ஆகிவிடுவார்கள். இதனால் வவுனியா, அனுராதபுரம் என இராணுவம் எதிர்பார்த்த பிளைட் பாத்திலேயே சென்றார்கள்.

rgyu-300x245.jpg வைத்திய கலாநிதி எழுமதி (டொக்ரர் அன்ரி)- கரிகாலன்

விமானம் கட்டநாயக்காவிற்கு வருவதற்கு முன்னரே, கண்காணிப்பு சிஸ்டம் அதை கண்டறிந்து அலெர்ட் பண்ணிவிட்டது. வான்புலிகள் கொழும்புற்கு சமீபமாக செல்ல, கீழிருந்து விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் சுட்டார்கள். வான்புலிகளின் இலக்கு பகுதிகளில் மின்சாரத்தை கட் பண்ணும் புதிய ஐடியாவையும் அப்பொழுதுதான் நடைமுறைப்படுத்த தொடங்கினார்கள்.

மின்சாரம் இல்லாமல் இருளில் இலக்கை கண்டறியும் வசதி புலிகளின் விமானத்தில் இல்லை. அது வெகு சாதாரண பயணிகள் விமானம்.

 

இருளில் கொலன்னாவவை சரியாக அடையாளம் காண முடியாமல் குண்டுகளை வெளியில் வீசினர்.

கெரவலபிட்டிய எரிவாயு நிலைய வளாகத்திலும் இலக்கு தவறியது. இந்த இரண்டிலும் துல்லியமாக தாக்குதல் நடத்தியிருந்தால் பேரழிவு நிகழ்ந்திருக்கும்.

வான்புலிகளின் அடுத்த இலக்கு 2008 ஓகஸ்ட் 26ம் திகதி திருகோணமலை கடற்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கேப்பாபிலவில் இருந்து புறப்பட்ட விமானங்கள் முல்லைத்தீவில் கரையை கடந்து கடல் வழியாக திருகோணமலை செல்லும் பிளைட் பிளான் இதற்கு பாவிக்கப்பட்டது. இந்த தாக்குதலும் பெரியளவில் கடற்படைக்கு சேதத்தை ஏற்படுத்தவில்லை.

வான்புலிகளிற்கு பெரிய தலையிடியாக இருந்த விடயமொன்றையும் குறிப்பிட வேண்டும். புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்த தொடங்கியதும் இந்திரா மார்க் ii என்ற முப்பரிமாண ராடரை இலங்கைக்கு வழங்கியது இந்தியா. அந்த ராடர் வவுனியாவில் பொருத்தப்பட்டிருந்தது. வான்புலிகளின் விமானங்கள் புறப்பட்டால் உடனே கண்டறிந்து, இலங்கை முழுவதுமான பாதுகாப்பு சிஸ்டம் அலெர்ட் செய்யப்பட்டு கொண்டிருந்தது. இந்திரா ராடர் வவுனியாவில் இருக்கும்வரை தொல்லையென்பதால், அதை குறிவைத்தனர் புலிகள்.

2008 செப்ரெம்பர் 9ம் திகதி.

வவுனியா பாதுகாப்புபடை தலைமையகத்தின் மீது தரை, வான் தாக்குதலை புலிகள் நடத்தினர். (வடக்கு நடவடிக்கைக்கான தரை, விமான படைகளின் கட்டளை மையம் இதுதான்) தரைவழியாக ஊடுருவிய கரும்புலி அணியொன்று தாக்குதல் நடத்தி, அங்கிருந்த விமான எதிர்ப்பு ஆயுதங்களை அழித்த பின், வான்புலிகள் குண்டுவீசுவார்கள். கொலன்னாவவில் இரவில் குண்டுபோட முடியாமல் தடுமாறிய புலிகள், வவுனியாவில் எப்படி துல்லியமாக குண்டுவீசுவார்கள் என நீங்கள் யோசிக்கலாம்.

முதலில் இராணுவ முகாமிற்குள் கரும்புலிகள் நுழைந்து தாக்குதல் நடத்துவார்கள். கரும்புலிகளின் தாக்குதலில் முகாம் தீப்பற்றி எரியும். வான்புலிகளிற்கு இலக்கை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்காதே!

வழக்கமாக புலிகளின் தாக்குதல்களில் எல்லாம் பக்காவாக திட்டமிடப்படும். ஆனால் வவுனியாவில் ஒரு சறுக்கல் நடந்தது. தரையால் சென்ற கரும்புலிகள் இராணுவத்தின் முன்னரணை இரகசியமாக கடந்து இராணுவ வளாகத்திற்குள் நுழைந்தாலும், விமானப்படையின் பிரதான முகாம் வளாகத்திற்குள் நுழைய முடியவில்லை.

LTTE_TAF_BT-300x200.jpg கரும்புலிகள் ரூபன், சிரித்திரனுடன் பிரபாகரன்

இந்திரா ராடர், உலங்கு வானூர்திகள், UAV விமானம் என்பன நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானப்படையின் வளாகத்தை சுற்றி ஆளுயர மண்அணை அமைக்கப்பட்டு, இடையிடையே காவலரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் இரண்டு காவலரணை தகர்த்தாலே போதும். கரும்புலிகள் உள்ளே நுழைந்து விடுவார்கள். முகாமின் மையத்தில் உள்ள காவலரணில் இருப்பவர்கள் பொதுவாகவே கொஞ்சம் அலட்சியமாகத்தான் இருப்பார்கள். முகாமிற்கு வெளிப்புறத்தில் ஒரு பாதுகாப்பு வேலி உள்ளதென்ற துணிச்சல்தான் காரணம்!

முகாம் மீது தாக்குதல் நடத்துபவர்கள் முதலில் வெளிப்பாதுகாப்பு வேலியைதான் தாக்குவார்கள். அங்குதான் சண்டை ஆரம்பிக்குமென்பதால் உள்ளேயிருப்பவர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள். இதொரு உளவியல் விவகாரம்.

 

ஆனால் அன்று புலிகளிற்கு துரதிஷ்ட நாள். வெளிபாதுகாப்பு வேலிகளை இரகசியமாக கடந்து சென்ற புலிகளின் அணியை, ரோந்து வந்த இராணுவ அணியொன்று கண்டுவிட்டது. புலிகளும் இராணுவ சீருடைதான் அணிந்திருந்தார்கள். என்றாலும், வெளிப்புறத்தில் இருந்து ஒரு அணியொன்று வந்துகொண்டிருந்தது இராணுவத்திற்கு சந்தேகத்தை கிளப்பிவிட்டது.

இராணுவத்தினர் உடனே பாதுகாப்பாக நிலையெடுத்து சங்கேத பாஷையை (code word) கேட்டனர். இந்த இடத்தில் சங்கேத பாஷை பற்றிய சிறிய அறிமுகமொன்றை தர வேண்டும்.

இராணுவதுறை சார்ந்தவர்களிற்கு சங்கேத பாஷையின் முக்கியத்துவம் தெரியும். இராணுவ தொடர்பாடல்கள் எவ்வளவுதான் வளர்ந்தாலும், இரவில் ஆட்களை அடையாளம் காணும் நைட் விஷன்கள் பாவனையில் இருந்தாலும் இன்றுவரை சங்கேத பாஷை இராணுவத்திற்குள் அதிமுக்கியத்துவம் மிக்கதாக இருக்கிறது.

இராணுவ நடவடிக்கைகள், யுத்த சமயத்தில் முகாம்கள், முன்னரங்ககளில் சங்கேத பாஷைகள்தான் உயிர்களை காப்பாற்றுபவை. இரவுநேரத்தில் நமது ஆட்களா, எதிரிகளா என அடையாளம் காண்பதற்காக உருவாக்கப்பட்டது.

முகாமிற்கோ, இராணுவ நடவடிக்கைக்கோ பொறுப்பான அதிகாரி அல்லது கட்டளை மையம் ஒவ்வொருநாளும் மாலையில் அல்லது குறிப்பிட்ட ஒரு கால ஒழுங்கில் சங்கேத பாஷையை உருவாக்கி, அதிகாரிகள் மூலமாக ஒவ்வொருவரிற்கும் தெரியப்படுத்துவார்கள். சங்கேதபாஷை அதிமுக்கியத்துவம் என்பதால் வெளிப்படையாக தொலைத்தொடர்பு கருவிகளில் கூட அறிவிக்கமாட்டார்கள். எதிரிகள் ஒட்டுகேட்டால், சங்கேதபாஷையை அறிந்து உள்நுழைந்து விடுவார்கள்.

சங்கேதபாஷையென்பது, இரண்டு தொடர்பில்லாத சொற்கள். உதாரணமாக முகில், நயன்தாரா என இரண்டு சம்பந்தமில்லாத சொற்கள் இன்று சங்கேத வார்த்தைகளாக அறிவிக்கப்படும். ஒருவர் காவலரணில் இரவு நிற்கிறார் என வைப்போம். இருளில் அடையாளம் தெரியாத யாரோ வருகிறார்கள். முதலில் எச்சரிக்கையாக நிலையெடுத்துவிட்டு, stop என உரத்து கட்டளையிடுவார். பின்னர் முகில் என பெரிதாக சொல்வார். வருபவர் நமது ஆள் எனில் அவருக்கு தெரியும்- தனக்குரிய வார்த்தை நயன்தாரா என்பது. அவர் கொஞ்சம் தடுமாறி லட்சுமிராய் என்றால்கூட சென்ரியில் நிற்பவர் சுடலாம்.

ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு. முகாமிற்குள் வருபவர்கள், சென்ரியில் நிற்பவர் தம்மை அடையாளம் கண்டு சங்கேத பாஷை கேட்கம்வரையெல்லாம் அவகாசம் கொடுக்கமாட்டார்கள். Stop என்ற வார்த்தை வந்ததும், non stop இல் சுட ஆரம்பித்து விடுவார்கள்!

அன்றும் அதுதான் நடந்தது. ராடர் பொருத்தப்பட்டிருந்த வளாகத்தை நெருங்க முன்னரே சண்டை ஆரம்பித்து விட்டது. அதன்பின் கரும்புலிகளால் இலக்கை நெருங்க முடியவில்லை. சண்டை ஆரம்பித்த சிறிதுநேரத்திலேயே வன்னியிலிருந்த கொன்ரோல் ரூமுடன் தொடர்பில் இருந்த கரும்புலி மரணமடைந்து விட்டார். கரும்புலி அணி தொடர்பில்லாமல் போக, களத்தில் நடந்து கொண்டிருப்பது கொன்ரோல் ரூமில் இருப்பவர்களிற்கு தெரியாமல் போனது.

Sri_Lanka_Military_0041-300x225.jpg F-7G உம் அதன் குண்டுகள், ஏவுகணைகளும்

அதற்கு பிறகு கொன்ரோல் ரூமில் இருப்பவர்கள் முன்னர் திட்டமிட்டதன் அடிப்படையில் செயற்படுவதொன்றுதான் வழி. அவர்கள் வான்புலிகளின் விமானத்தை ரேக் ஓவ் ஆக உத்தரவிட்டனர். இரணைமடுவுக்கு அண்மையில் உள்ள பனிச்சங்கேணியில் இருந்து புலிகளின் விமானங்கள் கிளம்பி, வவுனியாவிற்கு வந்தன. அங்கு திட்டமிட்டபடி முகாம் தீப்பற்றி எரியவில்லை. அதனால் வான்புலிகளால் திட்டமிட்டபடி தாக்குதல் நடத்த முடியவில்லை.

இதற்கு அடுத்த தாக்குதல் 2008 ஒக்ரோபர் 28ம் திகதி நடந்தது.

 

மன்னாரிலுள்ள தள்ளாடி முகாம் மீது இரண்டு குண்டுகளை வீசிவிட்டு, கொழும்பு நோக்கி பறந்து களனிதிஸ்ஸ பவர் ஸ்ரேசன் மீது தாக்குதல் நடத்தின. வான்புலிகளின் தாக்குதலில் அதிகமான சேதத்தை ஏற்படுத்திய தாக்குதல் இது.

கொழும்பிற்கு வான்புலிகள் மீண்டும் வருவதில் உள்ள சிக்கலை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா. அந்த சிக்கல் நடந்தது. தாக்குதலை நடத்திவிட்டு வான்புலி விமானங்கள் திரும்பி வந்தபோது, விமானப்படையின் விமானமொன்று அடையாளம் கண்டுவிட்டது. கொழும்பிற்கு செல்லும்போது விமானப்படையை குழப்புவதற்காகத்தான் தள்ளாடியில் முதலில் தாக்குதல் நடத்தினார்கள். ஒரேநாளில் இரண்டு இடத்தில் புலிகள் தாக்குவார்கள் என பாதுகாப்பு தரப்பினர் எதிர்பார்த்திருக்கவில்லை.

தள்ளாடியில் புலிகள் தாக்குதல் நடத்தியதும், அங்கு chengdu F-7G இன்ரசெப்ரர் விமானமொன்று அனுப்பப்பட்டது. மன்னார், கடலோரம், இரணைமடு பகுதிகளை உள்ளடக்கியதாக ஒரு ரவுண்ட் வந்தபோதும், புலிகளின் விமானம் அதன் கண்ணில் படவில்லை. சலித்துப்போன விமானி மன்னாருக்கு மேலாக விமானத்தை கட்டுநாயக்கா பக்கமாக திருப்பி பறந்து கொண்டிருந்தபோது, கொன்ரோல் ரூமில் இருந்தவர்கள் அவசரமாக மீண்டும் வவுனியாவிற்கு அண்மையான பிளைட் பாத்திற்கு அதனை திருப்பினார்கள். அப்பொழுதுதான் முதன்முறையாக வான்புலிகளின் விமானங்களை F-7G முதன்முறையாக அடையாளம் கண்டது.

F-7G விமானத்தில் வானில் இருந்து வானுக்கு ஏவும் (air to air missile) ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த விமானத்தின் வேகத்தின் முன்னால் வான்புலிகளின் விமானத்தின் வேகம் தூசு. F-7G துரத்த தொடங்கியது.

ஒரு கட்டத்தில் வான்புலிகளின் விமானத்திற்கு மேலாக கூட வந்தது. கிட்டத்தட்ட வானத்தில் ஒரு கிளிக்குஞ்சும், வல்லூறும் மாதிரி கற்பனை பண்ணி பாருங்கள்.

பின்னர் தனது வேகத்தை குறைத்து, வான்புலிகளின் விமானத்தை முன்னால் செல்லவிட்டு, அதை தனது பயரிங் ஸ்பொட்டிற்குள் கொண்டு வந்தது. அடுத்து எயார்- ரூ- எயார் மிஷைல்ஸ் சிஸ்டத்தை லொக் செய்தார். சிஸ்டம் லொக் ஆகவில்லை.

F-7G விமானத்தின் ஏவுகணை சிஸ்டம் எப்படி இயங்குகிறதென தெரிந்தால்தான் அடுத்ததாக நான் சொல்லப்போவது உங்களிற்கு புரியும்.

இலக்கிலிருந்து வெளியாகும் வெப்பத்தை (heat source) வைத்து, ஏவுகணை லொக் செய்யப்படும். ஏவுகணை சிஸ்டம் ஓன் செய்யப்பட்டதும், தானாகவே வெப்பத்தை வெளிவிடும் இலக்கை லொக் செய்யும். அந்த இலக்கில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் மாத்திரமே விமானி ஏதாவது செய்ய வேண்டும். இலக்கு சரியென்றால் தாக்குவதற்குரிய பட்டனை அழுத்தினால் போதும்.

புலிகளின் விமானத்தை லொக் செய்ய பலமுறை முயன்றும் F-7G விமானியால் முடியவில்லை. இந்த இடைவேளைக்குள் புலிகளின் விமானம் தரையிறங்கி விட்டது. ஏன் சிஸ்டம் லொக் ஆகவில்லையென விமானப்படை தலையை பிய்த்துக் கொண்டிருந்தனர். 2009 பெப்ரவரியில் வான்புலிகளின் விமானங்கள் சுட்டுவிழுத்தப்பட்ட பின்னர் இதற்கு பதில் கிடைத்தது.

slide_27-300x225.jpg Bell 206 ஹெலிகொப்டரின் exhaust out ஐ கவனியுங்கள்

வான்படையின் விமானங்களில் உள்ள எயார்- ரூ- எயார் மிஷைல்ஸ்கள் அனைத்தும் heat source மிஷைல்ஸ் என்பது புலிகளிற்கு தெரியும். அதை சமாளிக்க ஒரு ஐடியா செய்திருந்தார்கள். தமது விமானங்களில் பின்புறமாக வெப்பம் வெளியேறுவதை மாற்றி, முன்புறமாக வெளியேறும் விதமாக மாற்றம் செய்திருந்தனர்.

விமானத்திலிருந்து வெப்பம் வெளியேறும் exhaust out அடைக்கப்பட்டு, அந்த குழாயில் இருந்து இன்னொரு மேலதிக குழால் ஒட்டப்பட்டு, முன்புறமாக திருப்பி விடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு அடி நீளத்துக்கு முன்பக்கமாக வெப்பம் வெளியேறும் விதமாக வெளிப்பக்கமாக குழாய் நீட்டிக்கொண்டிருந்தது. இதனால் வெப்பம் முன்புறமாக வெளியேற, வான்படை விமானங்களால் எயார்- ரூ- எயார் மிஷைல்கள் பாவிக்க முடியாது.

 

2009 இல் சுட்டு விழுத்தப்பட்ட புலிகளின் விமானங்களை பரிசோதித்த பின்னர்தான் இந்த விசயம் வெளியில் வந்தது.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/3155/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிபிருக்கு புலிகள் வைத்த பொறி… வான்புலிகளிற்கும் அதே பொறியை வைத்த இந்தியா!- வான்புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் 04

May 4, 2018
hyu-696x464.jpg

வான் புலிகளின் சிலின் விமானத்தை விமானப்படையின் F-7G  விமானி அடையாளம் கண்டார் என்பதையும், வான்புலி விமானத்தை பயரிங் ஸ்பொட்டிற்குள் கொண்டு வந்து, எயார்- ரூ- எயார் மிஷைல்ஸ் சிஸ்டத்தை ஓன் செய்து தாக்க முயன்ற போதும், சிஸ்டம் இயங்கவில்லையென்பதையும் கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

ஏன் இயங்கவில்லை?

வெப்பத்தை நாடிச்செல்லும் இந்த வகையான ஏவுகணைகளை ஏமாற்ற, தமது விமானத்திலிருந்து வெப்பம் வெளியேறும் திசையை புலிகள் மாற்றியமைத்திருந்தார்கள் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். 2009 பெப்ரவரியில் புலிகளின் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்ட பின்னர்தான் பாதுகாப்பு தரப்பினர் இதை கண்டுபிடித்தனர்.

நடுவானில் வைத்து புலிகளின் விமானத்தை அடையாளம் கண்டபின்னரும் தாக்க முடியாமல் போனது பாதுகாப்பு தரப்பினருக்கு பெரிய தலையிடியாக அமைந்து விட்டது. புலிகள் ஏவுகணையை செயலிழக்க வைக்கும் நவீன சிஸ்டம் எதையாவது வைத்திருக்கிறார்களோ என்றும் பாதுகாப்பு தரப்பினர் யோசித்தனர்.

 

வான்புலிகளை சமாளிக்க இலங்கையால் மட்டும் முடியாது, வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனை அவசியம் என்பது இலங்கைக்கு புரிந்தது. வான்புலிகள் பெரும் தாக்குதல்களை நடத்தாவிட்டாலும், புலிகளின் விமானத்தாக்குதல் என்ற செய்தி ஏற்படுத்திய அர்த்த பரிமாணங்கள் கனதியானவை. எப்படியாவது வான்புலிகளை முடக்க வேண்டும்.

வான்புலிகளின் அச்சுறுத்தல் ஏற்படலாமென புலனாய்வு பிரிவு எச்சரித்ததையடுத்தே சீன தயாரிப்பான F-7G  ஜெட்கள் வாங்கப்பட்டன. எயார்-ரூ-எயார் மிஷைல்ஸ் சிஸ்டம் சிறப்பாக இயங்குவதும், இலங்கைக்கு கட்டுபடியான- கிடைக்க கூடிய ஜெட் விமானம் F-7G  தான். இதில் ஆறு விமானங்களை பாகிஸ்தானிடமிருந்து இலங்கை வாங்கியது.

Image result for F-7G jet F-7G ஜெட் விமானம்

F-7G  வாங்கும்போது இலங்கை யோசிக்காத கோணத்தில் புதியதொரு பிரச்சனை உருவாகியிருந்தது. வான்புலிகளை பயரிங் ஸ்பொட்டிற்குள் கொண்டு வந்தும் தாக்குதல் நடத்த முடியாமல் போனது. ஆனால், வான் புலிகளை தொடர்ந்து பயரிங் ஸ்பொட்டிற்குள் வைத்திருக்க முடியவில்லை. காரணம், வான்புலிகள் மிகக்குறைந்த உயரத்தில் பறந்தார்கள். தாக்குதலை முடித்துக்கொண்டு திரும்பும் சமயங்களில் வான்புலிகள் மிகத்தாழ்வாக- மர உயரத்தைவிட கொஞ்சம் மேலே- பறந்தார்கள். இந்தவகை பறப்பை tree top level flying என்பார்கள்.

தாக்குதலிற்கு செல்லும்போது, இராணுவ தளங்களிற்கு மேலான வான்பறப்பை தவிர்த்து, கடலிற்கு மேலாக செல்வதால் சாதாரண உயரத்திலேயே வான்புலிகள் சென்றனர். தாக்குதலை நடத்திவிட்டு திரும்பும்போது, இரண்டு காரணங்களினால் உயரத்தை குறைத்து tree top level flying மேற்கொண்டார்கள்.  ஒன்று, வான்படை ஜெட்களிடமிருந்து தப்பிப்பது. கட்டுநாயக்காவில் இருந்து பதினைந்து நிமிடத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு வான்பகுதிக்கு வான்புலிகளின் விமானங்கள் வந்துவிடும். இந்த தூரத்தை ஏழு நிமிடத்தில் வான்படை ஜெட் விமானங்கள் கடந்து விடும். ஆகவே, எட்டு நிமிடங்கள் வான்புலிகளிற்கு ஆபத்தான நிமிடங்கள்.

 

அனேகமாக வன்னி வான்பரப்பிற்குள் நுழைந்து தரையிறங்கும் சமயங்களே ஆபத்தான தருணங்கள். வந்த வேகத்தில் தரையிறங்குவதென்றால் உயரம் குறைவாக பறந்து வர வேண்டும். tree top level flying முறையில் வந்தால், தாமதமின்றி தரையிறங்கிவிட முடியும். விமானப்படை ஜெட் விமானங்களாலும் தாக்க முடியாது.

இதில் புலிகள் இன்னொரு தந்திரத்தை கையாண்டார்கள். வான்புலி விமானங்களை விரட்டிவரும் விமானப்படை ஜெட் விமானங்கள் புதுக்குடியிருப்பின் கேப்பாபிலவு, இரணைமடுவிற்கு அப்பாலுள்ள பனிச்சங்குளம் ஓடுபாதைகளை இலக்கு வைத்துதான் பறந்தன. இந்த ஓடுபாதைகளில்தான் வான்புலிகளின் விமானங்கள் தரையிறங்கின என்றுதான் பாதுகாப்பு தரப்பினர் நினைத்தார்கள். பொதுவாகவே விமானங்கள் தரையிறங்கும்போது ரன்வேயை விமானி கண்டறிய லான்டிங் லைற் எரியவிடப்படும்.  அதுவும், வேகம் அதிகமான தாக்குதல் ஜெட் விமானங்களின் தரையிறக்கத்திற்கு இது அவசியம். வான்புலிகளின் தரையிறக்கத்தையும் அப்படித்தான் பாதுகாப்பு தரப்பினர் நினைத்தனர்.

புலிகள் அமைத்த இரண்டு ரன்வேயும் தமது விமானங்களின் பாவனைக்கல்ல. புலிகளின் விமானங்களிற்கு இவ்வளவு பெரிய ரன்வே தேவையில்லை. ஏன் அவ்வளவு பெரிய ரன்வே அமைத்தார்கள் என்ற விடயத்தை பற்றி பின்னர் தமிழ் பக்கத்தில் வேறொரு தொடரில் குறிப்பிடுவோம்.

 

லான்டிங் லைற் எரியும் புலிகளின் ரன்வே எதுவென விமானப்படை தேடிக்கொண்டிருக்க, புலிகள் எங்கு தரையிறங்கினார்கள் தெரியுமா?

Related image

மிக ஆச்சரியமான செய்திதான். ஒன்றில் புதுக்குடியிருப்பை அடுத்த பச்சைபுல்மோட்டை பகுதி (புலிகளின் இறுதி விமானத்தாக்குதலிற்கு 2009 பெப்ரவரியில் கிளம்பியபோது பச்சைப்புல்மோட்டைக்கு பக்கத்திலுள்ள மாத்தளன் நீரேரிக்கு அண்மையான வெட்டைவெளியிலிருந்தே புறப்பட்டனர்) அல்லது மன்னார் பகுதிகள். இதற்காக லாண்டிங் லைற் சிஸ்டமாக கீழிருந்து ஆட்களே டோர்ச் மூலம் வெளிச்சம் பாய்ச்சினார்கள். இப்படி வெளிச்சம் பாய்ச்சும் ஆட்களிற்காக பதுங்குகுழிகள் வெட்டப்பட்டிருந்தன. விமானப்படை வேவு விமானங்கள், அல்லது ஜெட் விமானங்களை கவனித்து கீழிருந்து சிக்னல் கொடுக்க இந்த ஏற்பாடு. ஒருவேளை வேவு விமானம் வானில் சுற்றிக்கொண்டிருந்தால், லாண்டிங் லைற் இல்லாமலே இரவில் தரையிறங்கும் பயிற்சியையும் புலிகள் பெற்றிருந்தனர். பரந்த வெளியில், சிறிய விமானத்தை தரையிறக்குவதால் அதிக ஆபத்திலிருந்து தப்ப முடிந்தது.

தாழ்வாக பறந்து வந்த திசையிலேயே லான்ட் ஆகி விடுவார்கள் வான்புலிகள். விமானப்படை ஜெட் விமானங்களால் இவ்வளவு தாழ்வாக பறந்து வர முடியாது. முடியாதென்பதல்ல, எந்த விமானியும் அதை செய்ய மாட்டார்கள். ஹை ரிஸ்கியான விசயம். விமானம் தரையில் மோதும் அபாயம் அதிகமாகவுள்ளது.

வான்புலிகளை சமாளிக்க முடியாமல் தனது அதிகாரிகள் திண்டாடிக் கொண்டிருப்பதை பார்த்த கோத்தபாய ராஜபக்ச வெளிநாட்டு உதவியை நாடி முடிவுசெய்தார். அப்பொழுது அனேகமான நாடுகளின் பாதுகாப்பு துறையினர் அவருடன் நல்ல தொடர்பில் இருந்தனர். ஆனால் கோத்தபாய மூன்று நாடுகளைதான் தேர்வு செய்தார்.

ஒன்று இந்தியா. புலிகளை அழிக்க இந்தியா முழுமையான ஆசீர்வாதம் வழங்கி இராணுவ உதவிகள் செய்து வந்தது. வான்புலிகளின் தாக்குதல்களை உடனே தடுக்க வேண்டுமென இந்தியா விரும்பியது. 2007 இல் இது பற்றிய மெசேஜ் ஒன்றை இந்தியா தனது தொடர்பாளர்கள் மூலம் புலிகளிற்கு அனுப்பியிருந்தது. ஆனால் புலிகள் அதை கணக்கில் எடுக்கவில்லை.

இரண்டாவது அமெரிக்கா. புலிகளின் சர்வதேச வலைப்பின்னல்களை உடைத்து, புலிகளின் முதுகெலும்பை உடைப்பதில் இந்தியாவிற்கு நிகரான உதவியை அமெரிக்காவும் செய்து வந்தது. புலிகளின் மிதக்கும் ஆயுதக்களஞ்சியசாலைகள் பற்றிய விபரத்தை இந்தியாவுடன் இணைந்து அமெரிக்காவும் இலங்கைக்கு வழங்கிவந்தது.

 

மூன்று பாகிஸ்தான். F-7G  தாக்குதல் ஜெட்களை இலங்கைக்கு பாகிஸ்தான்தான் வழங்கியது. சீன தயாரிப்பான இந்த ஜெட்டை இலங்கை வாங்குவதை இந்தியா விரும்பவில்லை. மிக் அல்லது தனது சுகோய் (Sukhoi) விமானங்களை வழங்க இந்தியா தயாராக இருந்தது. ஆனால் சீனா நேரடியாக அல்லாமல் பாகிஸ்தான் மூலம் F-7G  தாக்குதல் ஜெட்களை வழங்க சம்மதித்திருந்தது. சீனாவின் பங்களிப்பை இலங்கை விரும்பியிருந்தது. ஆனால் நேரடியாக சீனா சம்பந்தப்படுவதை இந்தியா விரும்பாது என்பதால், பாகிஸ்தான் வழியாக பாதையேற்படுத்திக் கொடுத்தார் கோத்தபாய ராஜபக்ச.

மூன்று நாடுகளின் பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பில் இலங்கை முப்படைகளின் அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் மூலோபாய ஆலோசகர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த கூட்டம்தான் புலிகளிற்கு மிக அச்சுறுத்தலாக அமைந்த திட்டமொன்றிற்கு வித்திட்டது.

மெதுவாக, குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களை அழிக்க எயார்- ரூ- எயார் மிஷைல்ஸ் பொருத்தமில்லையென மூன்று நாடுகளின் நிபுணர்களும் கூறினர். நீண்ட தூர பறப்பு செய்தால் தாக்கலாமே தவிர, கொழும்பிலிருந்து வன்னி வரையான சிறிய தூர பறப்பு செய்யும் வான்புலிகள் ரக விமானங்களை தாக்குவதற்கு தரையில் இருந்து வானுக்கு (ground to air) தாக்கும் கலிபர், கனோன் ரக துப்பாக்கிகளே பொருத்தம் என சிபாரிசு செய்தனர்.

இதையடுத்து விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் 50, 30 கலிபர் ரக துப்பாக்கிகள் கொழும்பில் பல இடங்களில் பொருத்தப்பட்டன. வான்புலிகளின் தாக்குதல் நடக்கலாமென கருதப்பட்ட இடங்களிற்கு அண்மையாக இந்த துப்பாக்கிகள் பொருத்தப்பட்டன. புலிகளின் விமானங்கள் வந்தால் வானத்தை நோக்கி எல்லா திசைகளிலும் சுடுவதுதான் திட்டம்.

மூன்று நாடுகளின் நிபுணர்கள் பரிந்துரைத்த இந்த திட்டத்தை, அதற்கு ஏழு வருடங்கள் முன்னரே புலிகள் திட்டமிட்டார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா?. ஆனால் உண்மை அதுதான்.

2000ஆம் ஆண்டுகளில் விமானப்படையின் கிபிர், மிக் விமானங்கள் புலிகளிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தன. அப்பொழுது ஓயாத அலைகள் நான்கு படைநடவடிக்கை நடந்து கொண்டிருந்த சமயம்.

தளபதி கடாபிதான் விமான எதிர்ப்பு பிரிவின் தளபதியாகவும் இருந்தார். அதுதவிர, கனரக ஆயுதங்களின் பயிற்சி பொறுப்பும் கடாபியிடமே இருந்தது. கடாபியின் கீழ் அனந்தன் என்ற போராளி இருந்தார். கடாபிக்கு அவரில் நல்ல நம்பிக்கை. குறிபார்த்து சுடுவதில் வல்லவரான இவர், கலிபர் மற்றும் கனோன் பயிற்சி ஆசிரியராகவும் இருந்தார். இவர் ஒரு திட்டம் தீட்டினார்.

 

வான்படைக்கு பொறியாக இலக்கொன்றை வைத்து விட்டு, அந்த இலக்கை சூழ முக்கோண வடிவத்தில் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை நிறுத்தி வைத்திருந்து, விமானம் முக்கோண வடிவ தாக்குதல் இலக்கிற்குள் நுழையும்போது தாக்கி வீழ்த்தலாம் என திட்டமிட்டார். 2001 இல் கடலில் ஒரு படகை நிறுத்தி வைத்து, விமானப்படைக்கு தூண்டில் போட்டனர் புலிகள். ஆனால் அன்று விமானத்தை விழுத்த முடியவில்லை.

2006 இன் பின்னர் மீண்டும் முயற்சி செய்தனர். இரணைமடுவிற்கு அண்மையிலுள்ள பனிச்சங்கேணி ரன்வேயில் விமானத்தை போன்ற டம்பி உருவமொன்றை செய்து நிறுத்தியிருந்தார்கள். அதை சூழ 2 கிலோமீற்றர் சுற்றளவில் நான்கு, ஐந்து கனோன் Anti Aricraft துப்பாக்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வான்புலிகளின் விமானம் நிறுத்தப்பட்டுள்ளதாக நினைத்து வான்படை விமானங்கள் தாக்குதல் நடத்த வரும்போது- குண்டு வீச பதிவாக பறக்கும்போது- தாக்குதல் நடத்துவதே திட்டம்.

இரணைமடுவில் குண்டுவீச கிபர் விமானங்கள் வந்தபோது, புலிகள் நடத்திய தாக்குதலில் ஒரு விமானம் சேதத்துடன் சென்றுவிட்டது. இந்த தாக்குதலை புலிகள் சரியாக ஒருங்கிணைக்கவில்லை. சில துப்பாக்கிகள் முன்னரே சுட தொடங்கி, விமானங்களை எச்சரிக்கையடைய வைத்து விட்டன. அதன்பின் புலிகள் பல டம்மிகள் வைத்தபோதும், வான்படை தாக்குதல் நடத்த வரவில்லை.

தரையிலிருந்து தாக்கும் திட்டம்தான் பொருத்தமானதென இந்தியாவும் தன் பங்கிற்கு ஒரு உதவியை செய்தது. அதுதான் வான்புலிகளிற்கு பெரிய சிக்கலை கொடுத்தது.

Anti Aricraft Artillery வகை விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. இவை தரையிலிருந்து வானிற்கு நீண்டதூரம் சுடக்கூடிய சுடுகலன்கள். பொதுவாக Anti Aricraft Artillery வகைகளை இராணுவ பாஷையில் ack ack துப்பாக்கிகள் என்றும்  அழைப்பார்கள். இந்த சுடுகலன்களின் ஆரம்ப வடிவங்கள்தான் இரண்டாம் உலகப்போரில் விமான எதிர்ப்பு ஆயுதங்களாக இருந்தன.

Anti Aricraft Artillery களை இந்தியா கொடுத்தது அல்லவா. இலங்கைக்கு இவை கிடைப்பதற்கு ஆறு வருடங்களின் முன்னரே புலிகளின் பாவனையில் அவை இருந்தன!

Image result for 14.5 mm 14.5 mm கனோன்

இவற்றின் மேம்படுத்தப்பட்ட 12.7, 14.5 mm கனோன்களை புலிகள் உக்ரேனிலிருந்து கடல் மார்க்கமாக 2000ஆம் ஆண்டே வன்னிக்கு கொண்டு வந்துவிட்டனர். 12.7 mm கனோன்கள் சிலவற்றை கடற்படையிடம் இருந்து அதற்கு முன்னரே கைப்பற்றியிருந்தனர். 12.7, 14.5 mm கனோன்கள் இலங்கையிடம் ஏற்கனவே குறைந்த எண்ணிக்கையில் இருந்தன. ஆனால் அதை வான்புலிகளிற்கு எதிராக பாவிக்கலாமென்ற ஐடியா அவர்களிற்கு வரவில்லை. 2000ஆம் ஆண்டு வெற்றிலைக்கேணி கடற்படை தளத்தை புலிகள் கைப்பற்றியபோது 14.5 mm கனோன் ஒன்றை கைப்பற்றியிருந்தனர். கடலை நோக்கி மவுண்ட் பண்ணப்பட்டிருந்தது. கடல்வழியாக வரும் புலிகளை தாக்க அங்கு மவுண்ட் பண்ணியிருந்தார்கள்.

பின்னர் புலிகள் 14.5 mm கனோன்களில் ஒற்றை பரல் (single barrel) உடைய சுடுகலனை அப்பாச்சி என அழைத்தார்கள். இரட்டை பரல் (dowel barrel) உடையவற்றை பூமா என்ற பெயரில் பாவித்தார்கள்.

கடைசியில், இந்தியா வழங்கிய இந்த சுடுகலன்கள்தான் வான் புலிகளின் விமானத்தை சுட்டு விழுத்தியது!

இதேவேளை, விமானப்படையினரிடம் வேறொரு திட்டம் இருந்தது. புலிகளின் சிறியரக விமானங்களை எதிர்கொள்ள தம்மிடமிருந்த சிறியரக விமானங்களை களமிறங்கலாமென ஒரு திட்டம் தீட்டினார்கள். வான்புலிகளின் விமானங்களை தம்மால் வீழ்த்த முடியாமலிருக்கிறது என்பது அவர்களிற்கு ஒரு கௌரவ பிரச்சனையாக இருந்தது. விமானப்படையினால் சமாளிக்க வேண்டிய பிரச்சனையை பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களில் இராணுவம், கடற்படையுடனும் ஆலோசிக்க வேண்டிய நிலைமை வந்ததை அவர்கள் விரும்பவில்லை. எப்படியாவது புலிகளின் விமானத்தை வீழ்த்த வேண்டுமென விரும்பினார்கள்.

 

இலங்கை விமானப்படையின் பாவனையில் பதினைந்து வருடங்களிற்கு முன்னர் பாவனையில் இருந்த சிறிய ரக விமானங்களை தூசு தட்டி பறக்கவிடுவதே அந்த ஐடியா.

முதலாம் உலகப்போர் பற்றி இராணுவரீதியாக தெரிந்து வைத்திருப்பவர்களிற்கு dogfight என்ற சொல் தெரிந்திருக்கும். கிட்டத்தட்ட வானத்தில் நடக்கும் கைகலப்புதான் அது. ஒன்றையொன்று நேரடியாக எதிர்கொள்வது. விமானப்படையில் அப்பொழுது நடவடிக்கை கொமாண்டராக இருந்த ஒருவருக்குத்தான் (இப்பொழுது ஓய்வுபெற்றுவிட்டார்) இந்த ஐடியா தோன்றியது.

வான்புலிகள் விமானம் ரேக்ஓவ் ஆகி கொழும்பிற்கு வருகிறதென வைப்போம். விமானப்படையின் ராடர் சிஸ்டத்தில் அது விழுந்ததும், விமானப்படையிடமிருக்கும் சிறியரக விமானங்கள் ரேக்ஓவ் ஆகும். வான்புலிகளின் விமானம் வரும் உயரத்தில் சென்றால், இரண்டும் நேருக்கு நேர் சந்திக்கும். இப்பொழுது வானில் துப்பாக்கி சண்டை நடக்கும். இந்த சமயத்தில் விமானப்படை விமானங்களின் கைதான் ஓங்கியிருக்கும். அது ஏனென பார்ப்போம்.

வான்புலிகளின் விமானம் ZLIN-143. இதன் அதிகபட்ச வேகம் 260km/h. தமது  விமானங்களில் EBR (Electrical Bomb Release) சிஸ்டத்தை அமைத்து இரண்டு குண்டுகள் காவிச்செல்லும் வசதியை ஏற்படுத்தியிருந்தனர். ஒவ்வொரு குண்டும் கிட்டத்தட்ட 50 கிலோ எடையானவை. இதன்படி பார்த்தால், ஒரு விமானத்தில் 100 கிலோ எடை காவிச்செல்லப்படுகிறது. இந்த எடை விமானத்தின் பறப்பு வேகத்தை கணிசமாக குறைக்கும்.

வான்புலிகள் தாக்குதலிற்கு வரும்போதே dogfight முறையில் விமானப்படை விமானங்கள் எதிர்கொள்ள வேண்டும். அதிக வேகத்தில் பறக்க முடியாத வான்புலிகளின் விமானத்தை சுலபமாக தாக்கலாம் என்பதே திட்டம். தாக்குதவற்கு வசதியாக விமானப்படையின் சிறிய விமானங்களில் 50 கலிபர் துப்பாக்கிகள் பொருத்தலாம் என்பது திட்டம்.

இந்த திட்டம் விமானப்படை தளபதிக்கு போனதும், விமானப்படையின் உயர்மட்ட கூட்டமொன்று நடந்தது. பிராந்திய தளபதிகள், தாக்குதல் ஸ்குவாட்ரன் லீடர்கள் என கிட்டத்தட்ட விமானப்படையின்எல்லா மட்டத்தினரும் கலந்துகொண்ட கூட்டம் அது. அதில் ஸ்குவாட்ரன் லீடர்கள்தான் இந்த திட்டத்தின் முக்கிய பலவீனமொன்றை குறிப்பிட்டார்கள்.

புலிகளின் விமானத்தின் வேகம், குண்டின் எடை என எல்லா விபரங்களையும் துல்லியமாக கணிப்பிட்டு, இந்த ஐடியாவை போட்ட தளபதி ஒரு முக்கிய விசயத்தில் கோட்டை விட்டுவிட்டார். அது- வான்புலிகளின் தாக்குதல் நேரம். வான்புலிகள் பகலில் தாக்குதல் நடத்துவதில்லை. அனைத்து தாக்குதல்களையும் இரவில்தான் செய்தார்கள். Dogfight முறை இரவு தாக்குதலிற்கு சரிவராது!

Dogfight முறை முழுக்கமுழுக்க பகல்வேளைக்கே உகந்தது. எதிரி விமானத்தை கண்ணால் பார்க்க வேண்டும். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இப்போதிருப்பதை போல உயர்தர நைட்விஷன்கள் கிடையாது. பிறைமரி நைட்விஷன்கள்தான் இருந்தன. ஒரு மில்லிவிநாடி தடுமாறினாலும் விமானம் மோதி விபத்திற்குள்ளாகும் ஹை ரிஸ்க்கான வானத்தில் நடக்கும் Dogfight, இரண்டாம் உலகபோரில் பகலில் மட்டுமே நடந்தது.

Anti-aircraft-gun-300x200.jpg புலிகளின் பூமா Anti Aricraft துப்பாக்கி மவுண்ட்

இன்றும்கூட இலங்கை போன்ற நாடுகளினால் இரவில் Dogfight செய்ய முடியாது. அதற்கு விமானத்தில் உள்ள ராடர் சிஸ்டம் மாற்றப்பட வேண்டும். Dogfight  செய்ய உகந்த விமானங்களில் உள்ளது 2D ராடர்கள். இன்றைய நவீன தாக்குதல் விமானங்களில்  3D ராடர்கள் உள்ளன. இவைதான் எதிரி விமானத்தின் வேகம், உயரம், திசை என அனைத்தையும் துல்லியமாக கணிக்கும். ஆனால் 2D ராடர்களால் அது முடியாது. எதிரி விமானங்களின் திசை, வேகம் என்பவற்றை கணிக்குமே தவிர, விமானத்தின் உயரத்தை துல்லியமாக கணிக்காது. இரவில் Dogfight செய்வதெனில், விமானத்தின் திசை, வேகம் எவ்வளவு முக்கியமோ- அதேயளவு முக்கியம் விமானத்தின் உயரமும்.

விமானப்படையிடம் உள்ள பழைய விமானங்களில் உள்ள 2D ராடர்களை வைத்து வான்புலிகளுடன் Dogfight செய்ய முடியாதென்ற முடிவிற்கு விமானப்படை வந்தது. ஆனால் வான்புலிகளை கட்டுப்படுத்தும் பொறுப்பு தம்மிடமிருந்து நழுவிச்செல்வதையும் விரும்பவில்லை. அதனால் வேறொரு ஐடியா போட்டார்கள்.

 

தம்மிடமுள்ள பழைய விமானங்களிற்கு 3D ராடர்கள் பொருத்துவதே அந்த திட்டம்!

இது பெரும் செலவான, தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளிற்கு மட்டுமே சாத்தியமான திட்டம். என்றாலும், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்காவிடம் கேட்டுப்பார்க்கலாமென்பதால், இந்த திட்ட வரைபை பாதுகாப்பு செயலாளரிடம் கையளித்தனர். ஆனால் அதனை நிராகரித்து விட்டார். ஆனால், மூன்று நாடுகளின் நிபுணர்கள் முன்மொழிந்தது இதைவிட நல்ல திட்டமென்பது கோத்தபாயவின் எண்ணம். இறுதியில் அதுதான் வெற்றியளித்தது!

இந்தியா வழங்கிய Aricraft Artillery  ரகத்தை சேர்ந்த 12.7, 14.5 mm கனோன்கள் எல்லாம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டது. கொழும்பை மையப்படுத்தி  Anti Aricraft Artillery துப்பாக்கிகளுடன் இராணுவத்தினர் அதிகளவில் நிறுத்தப்பட்டனர். விமானப்படை, கடற்படைக்கும் Anti Aricraft Artilleryகள் வழங்கப்பட்டிருந்தன.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/3562/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டம்மான்  இந்த விமானத்தில் தப்பிப் போன மாதிரி தலைவரும் போயிருக்கலாம் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

பொட்டம்மான்  இந்த விமானத்தில் தப்பிப் போன மாதிரி தலைவரும் போயிருக்கலாம் 

 

நீங்களும் ஏதும் புத்தகம எழுதலாம் தெரிந்த உண்மைகளை வைத்து :35_thinking:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்களும் ஏதும் புத்தகம எழுதலாம் தெரிந்த உண்மைகளை வைத்து :35_thinking:

எல்லோரும் “கதை” எழுதுகின்ற மாதிரி எழுதாமல் ருசிகரமாக எழுதினால் போதும். உண்மைகள் எல்லாம் என்னத்துக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

எல்லோரும் “கதை” எழுதுகின்ற மாதிரி எழுதாமல் ருசிகரமாக எழுதினால் போதும். உண்மைகள் எல்லாம் என்னத்துக்கு!

ஹாஹாஹா என்ன விலை என்றாலும் நான் வாங்க ரெடி :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ ஊடுருவும் படையணி இலக்கு வைத்தது பிரபாகரனையா? விமானங்களையா?- வான்புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் 5

May 8, 2018
gh-2-696x463.jpg

விடுதலைப்புலிகளிடம் இருந்த இரண்டு விமான ஓடுபாதைகள் பற்றி, இராணுவத்தில் சேர்வதற்கு அட்மிஷன் போர்ம் நிரப்பி அனுப்புவருக்கு கூட தெரிந்திருந்தது. இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் புலிகள் ஏதாவது தாக்குதல் நடத்தினால், விமானப்படை விமானங்கள் கிளம்பி வந்து வன்னியில் பதில் தாக்குதல் நடத்திவிட்டு செல்லும். வன்னியில் தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இடங்கள் என விமானப்படை தயாரித்து வைத்திருந்த லிஸ்டில்  முதலிரண்டு இடங்களில் இருந்த இடங்கள் வான்புலிகளின் ஓடுபாதைகள்.

புதுக்குடியிருப்பு கேப்பாபிலவில் இருந்த ஓடுபாதை, இரணைமடுவிற்கு தெற்கே பனிச்சங்குளத்தில் இருந்த ஓடுபாதை ஆகிய இரண்டுமே அவை. உண்மையில் இந்த இரண்டு ஓடுபாதைகளையும் புலிகள் ஏன் அமைத்தார்கள் தெரியுமா?

 

அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, வான்படையை திசை திருப்ப. பிரமாண்ட ஓடுபாதை அமைத்து வைத்திருந்தால்தான் தம்மிடம் என்ன ரக விமானம் உள்ளதென்ற குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்பது முதல் காரணம். வான்புலிகளிடம் எந்த ரக விமானம் உள்ளதென்பது 2007 இன் தொடக்கம் வரை இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியவில்லை. நவீன ரக ஜெட் விமானங்கள் இல்லையென்பது அவர்களிற்கு தெரியும். ஆனால் இலகுரக விமானத்தில் எந்த ரகம் என்பதுதான் குழப்பமாக இருந்தது. அதுதவிர, ஹெலிகொப்டர்கள் ஏதாவது இருக்கலாம் என்றும் சந்தேகப்பட்டார்கள். புலிகள் அமைத்த நீளமான ஓடுபாதை உண்மையில் இலங்கை பாதுகாப்பு தரப்பினரை நன்றாக குழப்பி விட்டது.

புலிகளின் ஓடுதளமென ஒரு பகுதியை அடையாளம் காட்டினால், அதுதான் வான்புலிகளின் மையமென பாதுகாப்புதரப்பினர் நினைப்பார்கள். அந்த பகுதியையே குறிவைப்பார்கள். வான்புலிகளின் முகாமை வேறு ஒரு இடத்தில் அமைத்தால் பாதுகாப்பு தரப்பின் அவதானத்தில் இருந்து தப்பிக்கலாம்! இதுவும் ஒரு துணைக்காரணம்.

நீளமான ஓடுபாதைகளை புலிகள் அமைத்ததற்கு இரண்டாவது காரணம்- பொட்டம்மானின் ஐடியா. உக்ரேன் ஆயுதவியாபாரியொருவரிடம் புலிகளின் வெளிநாட்டு ஆட்கள் ஏமாந்த கதையொன்று உள்ளது. அதை பின்னர் தமிழ் பக்கத்தில் தருவோம். அதனுடன் தொடர்புடைய விசயம் அது.

 

கடல்வழி விநியோகங்கள் சிக்கலாகிக்கொண்டு செல்ல, ஆகாய மார்க்கமாக ஆயுதங்களை கொண்டு வருவதே ஒரே வழியென்பதும், இந்த ஓடுபாதைகள் அமைக்க காரணம்.

அல்லது, இவ்வளவு பெரிய ஓடுபாதைகள் புலிகளிற்கு தேவையே இல்லை. புலிகளிடமிருந்த ZLIN ரக விமானங்கள் ரேக்ஓவ் ஆக 600 மீற்றர் ஓடுதளங்களே போதும்.

இதற்காக, கேப்பாபிலவு, பனிச்சங்கேணி ஓடுபாதைகளை வான்புலிகள் பயன்படுத்தவே இல்லையென்று அர்த்தமல்ல. 2006இல் வான்புலிகளின் ஓடுபாதைகள் மீது வான்படை விமானங்கள் குண்டுவீச்சை ஆரம்பிக்கும்வரை பயிற்சி நடவடிக்கைகளிற்காக இந்த ஓடுபாதைகளைதான் பாவித்தார்கள்.

இந்த சமயத்தில் நடந்த ஒரு சடுகுடு ஆட்டத்தை பற்றியும் சொல்ல வேண்டும்.

விடுதலைப்புலிகளின் உள்ள விமானம் என்ன, புலிகளின் விமான ஓடுபாதைகள் எங்குள்ளதென்பதை அறிய இலங்கை பாதுகாப்புதுறை கடுமையான முயற்சிகளை செய்துவந்தது. 1998 இல் புலிகளின் விமானங்கள் முதன்முதலில் பகிரங்கமாக உலகிற்கு அறிவிக்கப்பட்டது. முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்தினத்தின்போது பூ தூவியது. இதையடுத்து புலிகளின் விமானங்கள் பற்றிய தகவலை திரட்ட பாதுகாப்புதுறை அப்போதே களமிறங்கி விட்டது.

 

1998 இல் வான்புலிகளிடம் இரண்டேயிரண்டு முகாம்கள்தான் இருந்தன. பின்னாளில் வான்படையை ஏமாற்ற அமைக்கப்பட்ட ஓடுபாதைகள் இருந்த பகுதிகள்தான் முகாம்களாக இருந்தன. விமானத்தை பாகங்களாக பிரித்து அடர்காட்டிற்குள் அமைந்த ஹங்கருக்குள் பாதுகாத்து வைத்துவிட்டு, பயிற்சியின்போது மாத்திரம் கென்டெயினர்களில் ஓடுபாதைக்கு அருகில் கொண்டு வந்து, விமானத்தை பொருத்திக்கொள்வார்கள். அப்போது வான்படையிடம் இருந்தது IAI Scout ரக UAV விமானங்கள். அவ்வளவு துல்லியமாக இலக்கை அடையாளம் காண முடியாததுடன், நீண்டநேரம் கண்காணிப்பில் ஈடுபட முடியாதவை. இதை வைத்து புலிகளின் விமானங்களையும், வான்புலிகள் முகாமையும் அடையாளம் காண முடியாதென்பது பாதுகாப்பு தரப்பிற்கு தெரியும்.

இதற்காக அவர்கள் கையிலெடுத்தது அமெரிக்க வெர்ஷன் ஒன்று!

1996 இன் பிற்பகுதியில் இலங்கைக்கு அமெரிக்கா பயிற்சியளிக்க ஆரம்பித்தது. Operation Balanced Style என்ற நடவடிக்கையில் நேரடியாக யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் வழங்கப்போவதில்லையென வாஷிங்டன் அதிகாரிகள் தொடர்பாளர்கள் மூலம் புலிகளிற்கு அறிவித்திருந்தார்கள். ஆனால் அங்கு அமெரிக்காவின் விசேட படையினர் (இவர்களைதான் Green Berets என அழைக்கிறார்கள்) இரகசிய பயிற்சி வழங்கினார்கள். அந்த பயிற்சியின் முடிவில் வெளியேறியவர்கள்தான் நான்காம் ஈழப்போரில் புலிகளிற்கு சிம்மசொப்பனமாக இருந்த ஆழஊடுருவும் படையினர்.

Related image ஆழ ஊடுருவும் படைப்பிரிவு சிப்பாய்

ஆழ ஊடுருவும் படையணியின் முதலாவது அணி 1996 இன் பின்பகுதியில் வன்னிக்குள் இறங்கியது. அவர்களின் இலக்கு பிரபாகரன்!

பிரபாகரனை ஆழஊடுருவும் படையணியினர் இரகசியமாக பின்தொடர்ந்து இலக்கு வைத்தது சுவாரஸ்யமான பெரிய பகுதி. அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகிறோம்.

புரெபஷனலான ஆழஊடுருவும் அணி வன்னி களத்தில் இறங்கியது 1998 மத்தியில். இதே ஆண்டின் இறுதியில் ஒட்டுசுட்டானை இராணுவம் கைப்பற்றியது. ஒட்டுசுட்டான்- மாங்குளம் வீதியில் இராணுவத்தின் நிலைகள் இருந்தன. கேப்பாபிலவில் வான்புலிகளின் முகாம் அமைந்திருந்த இடத்திற்கும் இராணுவத்திற்குமிடையில் இருந்த இடைவெளி ஏழு கிலோமீற்றர்கள்.

வான்புலிகளின் முகாம், ஓடுபாதையை நோக்கி ஆழஊடுருவும் படையணியினர் உளவுத்தகவலிற்காக ஊடுருவ தொடங்கினார்கள். புதுக்குடியிருப்பு, மன்னாகண்டல், கேப்பாபிலவு காட்டுபகுதிகளில் அடிக்கடி இராணுவத்தின் தடயப்பொருட்களை புலிகள் கண்டுபிடித்தனர். இதில் புலிகளை குழப்பிய விடயம்- இராணுவத்தின் இலக்கு விமானப்படையா, பிரபாகரனா என்பதை ஊகிக்க முடியாமல் இருந்தது. புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் சாலையின் கிழக்கு பக்கம் வான்புலிகள் முகாம் இருந்தது. மேற்கு பக்கமாக பிரபாகரனின் முகாம் இருந்தது. யுத்தத்தின் பின்னர் படையினர், மக்கள் பாவனைக்காக புதுக்குடியிருப்பு- ஒட்டுசுட்டான் சாலையில் திறந்துவிட்ட முகாமைத்தான் குறிப்பிடுகிறோம்.

 

பிரபாகரன் நான்கு அடுக்கு பாதுகாப்பு அகழிக்குள் இருந்தார் என அரசு பிரச்சாரம் செய்தது. அந்த பாதுகாப்பு வீட்டை பார்வையிட சென்றவர்களிற்கு தெரியும்- அங்கிருந்த சிப்பாய்கள் எப்படி கதைவிட்டார்கள் என. இராணுவம் முன்னேறி வர பிரபாகரன் எந்தப்பக்கத்தில் இருந்தார், எப்படி சண்டையிட்டார் என ‘சும்மா அடித்து விட்டார்கள்’. ஆனால் உண்மையில், ஆழ ஊடுருவும் அணிகள் இங்கு நுழைய தொடங்கியதும் பிரபாகரன் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

பிரபாகரனை குறிவைக்கிறார்களா? அவரது இருப்பிடத்தை அடையாளம் கண்டுவிட்டனரா? வான்புலிகளின் விமானங்களை குறிவைக்கிறார்களா? அல்லது பிரபாகரன், விமானம் இரண்டையும் குறிவைக்கிறார்களா என்ற குழப்பம் புலிகளிற்கு ஏற்பட்டது. வான்புலிகளை தேடி வந்த ஆழஊடுருவும் படையினர்தான், இலக்கு வசதியாக அமைய வான்புலிகளின் தளபதி கேணல் சங்கரை தாக்கினார்கள். சங்கர் தாக்கப்பட்ட இடத்திற்கும், பிரபாகரனின் முகாமிற்குமிடையில் இருந்தது வெறும் ஒன்றரை கிலோ மீற்றர் இடைவெளிதான்!

2002 இல் அந்த தாக்குதல் நடந்தது. உடனடியாக பிரபாகரனின் இருப்பிடத்தை மாற்றினார்கள்.

Image result for prabhakaran house இதுதான் பிரபாகரனின் புதுக்குடியிருப்பு முகாம்

வான்புலிகளின் விமானங்களை இயக்கி பயிற்சியில் ஈடுபடுவதை, காட்டுக்குள் மறைந்திருக்கு இராணுவம் கேட்ககூடும். அப்படி நடந்தால், வான்புலிகளின் இருப்பிட மையத்தை இராணுவம் அடையாளம் கண்டுவிடக்கூடும்.

இராணுவம் மட்டுமல்ல, அந்த பகுதிக்கு வரும் வேட்டைக்காரர்கள் வேறு தேவைக்காக வரும் போராளிகள் யாருமே விமானங்களின் இருப்பிடத்தை அறிந்துவிடக்கூடாது என்பதில் வான்புலிகள் கவனமாக இருந்தனர். இதற்காக அவர்கள் ஒரு ஐடியா செய்தனர்.

ஓடுபாதையை சுற்றி சிறிய காவல்நிலைகளை புலிகள் அமைத்து வைத்திருந்தனர். விமானம் பறப்பில் ஈடுபடும் நாளில் காவல்நிலைகளில் ட்ரக்ரர்களை கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள். விமானம் இயங்க ஆரம்பிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர், ட்ரக்ரர்களை உச்சஸ்தாயி வரை ரேஸ் பண்ணிக்கொண்டேயிருப்பார்கள். அந்த காவல்நிலை பக்கமாக செல்பவர், ட்ரக்ரர் உறுமுவதைதான் கேட்பார். விமான சத்தத்தை கேட்க மாட்டார். இரணைமடுவிலும் இதே உத்தியைத்தான் பாவித்தார்கள்.

வான்புலிகளின் இருப்பிடத்தை தரை வழியாக கடுமையாக தேடியது இராணுவம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

Image result for வானà¯à®ªà¯à®²à®¿à®à®³à¯ கேணல் சங்கர்

2006 ஆம் ஆண்டின் பின்னர் இந்த இரண்டு ஓடுபாதைகளையும் புலிகள் பாவித்தது இல்லை. 600 மீற்றர் நீளமான சமதரை இருந்தால் போதும். புலிகள் விமானத்தை கிளப்பிவிடுவார்கள். அரசகட்டுப்பாட்டு பகுதிகளில் எட்டுமுறை வான்புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஐந்துமுறை வான்புலிகள் எங்கு விமானத்தை தரையிறக்கினார்கள் தெரியுமா?

மாத்தளன் நீரேரிக்கரைகளில்!

வான்புலிகளின் இறுதித்தாக்குதல் 2009 பெப்ரவரி 22ம் திகதி நடந்தது. இந்த தாக்குதலிற்கு புறப்பட்டதும் மாத்தளன் நீரேரி கரையிலிருந்துதான்!

2009 பெப்ரவரி 22ம் திகதி வான்புலிகளின் இறுதி தாக்குதல் நடந்தது. கட்டுநாயக்கவிற்கு அண்மையில் ஒரு விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. ஒரு விமானம் ஆட்பதிவு திணைக்கள கட்டிடத்தில் மோதியது.

 

பெப்ரவரி திகதி புதுக்குடியிருப்பு நகரத்தை இராணுவம் கைப்பற்றியது. யுத்தத்தின் முடிவை பிரபாகரன் ஏற்கனவே பல மாதங்களின் முன்னரே தெளிவாக தெரிந்துவிட்டார். பெப்ரவரி 5ம் திகதி புதுக்குடியிருப்பு சந்தியை இராணுவம் அடைந்தது. அடுத்த பத்து நாட்களும் யுத்தம் சிறிதுசிறிதாக நகர்ந்து மந்துவில் பக்கத்திற்கு வந்தது. இனி விமானங்களை வைத்திருக்க முடியாதென்ற முடிவிற்கு பிரபாகரன் வந்தார்.

மாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் குவிந்துவிட்டார்கள். இன்னும் சில நாட்கள் தாமதித்தால் விமானத்தை ரேக்ஓவ் செய்யக்கூட முடியாத நிலைமை வரப்போகிறது என்பது பிரபாகரனிற்கு தெரியும். வான்புலிகள் கொழும்பில் நடத்தப்போகும் தாக்குதல் ஒரேநாளில் யுத்தத்தின் போக்கை மாற்றுமென்ற நம்பிக்கையெல்லாம் பிரபாகரனிடம் இருக்கவில்லை. தன்னிடம் உள்ள ஆயுதங்களை கடைசிவரை பாவித்து எதிர்தரப்பிற்கு சேதத்தை உண்டுபண்ணுவதுதான் பிரபாகரனின் இயல்பு. அதைதான் பெப்ரவரி 22ம் திகதி செய்தார்.

வான்கரும்புலிகள் ரூபன், சிரித்திரன் இருவரும்தான் அனேகமான வான் தாங்குதல்களை செய்தவர்கள். இறுதி தாக்குதலிற்கும் அவர்கள்தான் தயாரானார்கள்.

வான்புலிகளின் இறுதி தாக்குதல் திட்டம் பற்றி பிரபாகரன் அதிகம் விவாதிக்கவில்லை. உண்மையை சொன்னால்-பிரபாகரன், பொட்டம்மான், சாள்ஸ் தவிர்ந்த முக்கியஸ்தர்கள் யாருக்குமே வான்புலிகளின் இறுதித்தாக்குதல் பற்றி தெரியாது. மற்ற தளபதிகள் அனைவரும் புதுக்குடியிருப்பு களமுனையில் பிஸியாக இருந்தனர்.

பிரபாகரனும் புதுக்குடியிருப்பில்தான் அப்பொழுது இருந்தார். வான்புலி சிரித்திரனில் பிரபாகரனிற்கு அலாதியான பிரியம் இருப்பதை ஏற்கனவே சொல்லியிருந்தேன். அவரை போராளிகள் பகிடியாக “ஆச்சி“ என்றுதான் கூப்பிடுவார்கள். அது பிரபாகரனிற்கும் தெரியும். கொஞ்சம் உற்சாக மனநிலையில் இருந்தால், அவரும் ஆச்சி என்றுதான் சிரித்திரனை கூப்பிடுவார்.

புதுக்குடியிருப்பிற்கும் இரணைப்பாலைக்கும் இடையில் பிரபாகரனின் இருப்பிடம் இருந்தது. (இப்பொழுது முற்றாக தகர்ந்து, நிலக்கீழ் பதுக்குழிக்கு செல்லும் நுழைவாயில் மட்டும் எஞ்சியுள்ளது)

பெப்ரவரி 22ம் திகதி காலை 11 மணிக்கு இரண்டு வான்புலிகளும் பிரபாகரனின் முகாமிற்கு சென்றனர். வழக்கத்திற்கு மாறாக பிரபாகரன் அன்று மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். இரண்டு போராளிகளையும் அருகில் உட்கார வைத்து, அவர்களின் கையை பிடித்தபடி மௌனமாக நீண்டநேரம் உட்கார்ந்திருந்தார்.

அன்று அவர்களுடனே மதிய உணவை சாப்பிட்டார்.

Image result for à®à®´ à®à®à¯à®°à¯à®µà¯à®®à¯ பà®à¯à®¯à®£à®¿

மதியம் மணியளவில் வான்புலிகள் தமது முகாமிற்கு புறப்பட்டு சென்றனர். அன்று மாலை 5. மணியளவில் மாத்தளனிற்கும் பொக்கணைக்கும் இடைப்பட்ட நீரேரியோரமாக இரண்டு விமானங்களும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. புலிகள் தமது விமானங்களை பொதுமக்களும் பார்க்கலாமென அதுவரை பகிரங்கமாக நிறுத்தியதில்லை.

வான்புலிகளின் விமானங்கள் வெட்டைவெளியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள செய்தி பொதுமக்களிற்குள் வேகமாக பரவி, அங்கு ஓரளவிற்கு ஆட்கள் குவியத் தொடங்கினார்கள். விமானத்திற்கு நெருக்கமாக செல்ல முயன்ற மக்களைத்தான் புலிகள் கலைத்தார்கள். வீதியில் நின்று பார்ப்பதற்கு அனுமதித்திருந்தனர்.

வான்புலிகள் அனைவரும் ஒன்றாக இரவு உணவை எடுத்தபின்னர், 8.30 அளவில் சிரித்திரனும் ரூபனும் விமானத்தை ரேக்ஓவ் செய்தனர். அதுதான் வான்புலிகளின் கடைசி ரேக்ஓவ்!

 

இம்முறை கொழும்பிற்கு செல்வதற்கு வான்புலிகளிற்கு அதிக flight path கள் இருக்கவில்லை. எப்படி சென்றாலும் இராணுவ நிலைகளை கடந்துதான் தீர வேண்டும். அதனால் ஆரம்பத்திலேயே இராணுவ நிலைகளை கடந்துசெல்ல முடிவெடுத்தனர்.

வற்றாப்பளையில் இராணுவத்திற்கு மேலாக ஊடறுத்து, மாங்குளத்தால் ஏ. வீதியை ஊடறுத்து, மடுக்கோவில் பகுதியால் மன்னார் சிலாவத்துறை கரைக்கு வந்து, மேற்கு கரையோரமாக வழக்கமான flight path இல்   தாக்குதல் இலக்கிற்கு சென்றது. புலிகளின் விமானங்கள் கிளம்பியது தெரிந்தால், கொழும்பில் உள்ள Anti Aricraft Artilleryகள் தயார்நிலைக்கு வந்துவிடும்.  இராணுவம் எதிர்பார்க்கும் flight path இல் செல்வது தற்கொலைக்கு சமம்.

வழக்கமாக விமானங்கள் செல்லும்போது பத்திரமாக திரும்பி வருவதையும் கணிப்பிட்டுத்தான் flight path களை தீர்மானிப்பார்கள். தாக்குதலிற்கு செல்லும்போதே விமானப்படையின் கண்காணிப்பு சிஸ்டங்களில் சிக்கக்கூடாது. தாக்குதலிற்கு போகும்போதே விமானப்படை விமானங்கள் அலேர்ட் ஆகி, விரட்ட தொடங்கினால் வான்புலி விமானங்களினால் தப்பிக்க முடியாது. இதெல்லாம் வான்புலிகளிற்கு நன்றாக தெரியும். தெரிந்துகொண்டே வான்புலிகள், ஏன் இந்த flight path ஐ பயன்படுத்தினார்கள் தெரியுமா?

இனி திரும்பி வருவதேயில்லை என்ற முடிவுடன்தான் அவர்கள் கிளம்பினார்கள்! (அதாவது வான் கரும்புலி தாக்குதல் நடத்தும் முடிவு)

வற்றாப்பளையில் உள்ள இராணுவ நிலைகளை புலிகளின் விமானங்கள் கடக்கவே கொழும்பு அலேர்ட் பண்ணப்பட்டது. கொழும்பை வான்புலிகள் நெருங்க, மின்சாரம் நிறுத்தப்பட்டு வானத்தை நோக்கி பயங்கர தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.

இராணுவ தலைமயகத்தை குறிவைத்த புலிகள், இலக்குமாறி இறைவரி திணைக்கத்துடன் மோதினார்கள். மற்றைய விமானம் கட்டுநாயக்கவிற்கு அண்மையில் சுட்டுவீழத்தப்பட்டது. அந்த விமானத்தை வீழ்த்தியது- இந்தியா கொடுத்த Anti Aricraft Artilleryகள்.

Image result for பà¯à®²à®¿à®à®³à®¿à®©à¯ விமானமà¯

இப்படியாக 2009 பெப்ரவரி 22ம் திகதி வான்புலிகளின் சரித்திரம் முடிவடைந்தது.

1993இல் முதன்முதலில் விடுதலைப்புலிகள் வான்புலிகள் என்ற பிரிவை முதன்முதலில் ஆரம்பித்தனர். பல்வேறு படையணிகளிலும் இருந்த 26 போராளிகளை தேர்ந்தெடுத்து வான்புலிகள் அணி ஆரம்பிக்கப்பட்டது. மலேசியா, செக்கோஸ்செலவாக்கியா நாடுகளில் வான்புலிகள் சிலர் பயிற்சி பெற்றுவந்து, பின்னர் உள்ளூரிலேயே பயிற்சிகள் வழங்கினார்கள். இப்படித்தான் வான்புலிகள் உருவாக்கப்பட்டார்கள்.

2007 இல் இருந்து வான்புலிகள் இராணுவ இலக்குகள் மீது நடத்திய தாக்குதல்கள் எட்டு. இதில் எந்த தாக்குதல்களும் வெற்றியளிக்கவில்லை. ஆனால் வான்புலிகள் பற்றிய தகவல் உலகத்திற்கு தெரிவதற்கு முன்னர் இரண்டு வெற்றிகரமான தாக்குதல்களை அவர்கள் செய்திருக்கிறார்கள். ஆளற்ற உளவு விமானங்கள் இரண்டை புலிகளின் விமானங்கள் சுட்டு வீழ்த்தியிருந்தன.

உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட வான்புலிகள் குறிப்பிடத்தக்க எந்த வெற்றிகரமான தாக்குதலையும் செய்ய முடியவில்லை. வான்புலிகளை முளையிலேயே கிள்ளியெறிந்துவிட வேண்டுமென இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய வல்லரசுகள் முழு மூச்சாக செயற்பட்டனர். இந்த தடையை கடந்து வான்புலிகளால் வெற்றிகரமாக தாக்குதல் நடத்த முடியவில்லையென்பதே உண்மை.

(முற்றும்)

 

http://www.pagetamil.com/4068/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.