-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா இன்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதன் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற ஜோ பைடனின் கோரிக்கையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். http://athavannews.com/அலெக்ஸி-நவல்னியை-கொலை-செ/ -
By புங்கையூரன் · Posted
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால், அந்த்ப் புண்ணியம் கண்ணனுக்கே...! போற்றுவார் போற்றலும்....தூற்றுவார் தூற்றலும், போகட்டும் கண்ணனுக்கே....! காண்டீபம் எழுக...! உன் கை வண்ணம் எழுக...! களமெலாம் சிவக்க வாழ்க....!!! -
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
இரணைதீவில் கடற்படையினர் தோண்டிய குழியை இன்று மூடினர் அப்பகுதி மக்கள்.! இரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காக கடற்படையினர் தோண்டிய குழியை அங்குள்ள மக்கள் இணைந்து இன்று மூடினர். கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக இரணைதீவை அரசு தெரிவு செய்துள்ளமைக்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். முஸ்லிம் மக்களும் அரசியல்வாதிகளும் கூட இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சிவில் சமூகத்தினர் அரசின் இந்த முடிவுக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளனர். கொரோனாவால் மரணிப்போரின் ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானம் அரசின் இனவெறிச் செயல் என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் விமர்சித்துள்ளார். முஸ்லிம் சமூகத்தினரை அரசாங்கம் துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்ய அரசு ஏடுத்துள்ள தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாதது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது. இது தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவைப் பிரிக்க அரசால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை கிளிநொச்சி - இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவுப் பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2021/03/02/23219/
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.