Jump to content

ஒருபாலுறவு மனைவியை பழிதீர்க்க நண்பர்களுக்கு இரையாக்கிய கணவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

''என் மனைவி வேறொருபெண்ணை விரும்புகிறாள். அவளுடனேயே உறவு வைத்துக் கொண்டுள்ளாள்'' என்று லியோனாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கணவன் புலம்புகிறான்.

இதனைக் கேட்டுக்கொண்டிருந்த அவனது ஐந்து நண்பர்கள், ''உனக்கு மனைவியை எவ்வாறு கையாள்வது (உறவுகொள்வது) என்பது தெரியவில்லை. அதுதான் அவள் ஒரு பெண்ணை நாடியுள்ளாள். எங்களிடம் விட்டுவிடு, எப்படி கையாள்வது என்பதை நாம் காண்பிக்கிறோம்'' என்று கூற, வெறுப்பில் இருந்த கணவனும் அதற்கு சம்மதிக்கிறான். ஒரு இரவில் ஐந்து நண்பர்கள், கணவன் முன்னிலையில் அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்.

இந்தக் கொடுர சம்பவம் நடப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் லியோனா திருமணம் நடந்தது. அப்போது அந்த இளம் பெண் திருமணத்தில் விருப்பமின்றி இருக்கிறாள். அம்மா, வலுக்கட்டாயமாக அவளுக்கு திருமணம் செய்துவைக்கிறார்.

ஆனால், லியோனாவால் திருமண வாழ்க்கையில் நாட்டம் கொள்ள முடியவில்லை. காரணம் அவளுக்கு இன்னுமொரு பெண் மீதே விருப்பம் இருந்தது. அவளுடனே உறவுகொள்வதில் நாட்டமாக இருக்கிறாள்.

ஒரு வருடம் கணவருடன் விருப்பமின்றி வாழ முயற்சித்த அவள், அம்மா வீட்டிற்கு சென்றுவிடுகிறாள். கணவன் அவளை சமாதானப்படுத்த முயற்சிக்கிறான். சமாதானப்படுத்த முயற்சித்த கணவனுக்கு தனது மனதிலுள்ள விருப்பத்தைத் தெரிவிக்கிறாள் லியோனா. கணவன் மனமுடைந்து போகிறான். இந்த இரகசியங்களை தனது நண்பர்களுடன் குடிபோதையில் பகிர்ந்துகொள்கிறான்.

இதன்பின்னரே நண்பர்களினால் கணவன் முன்னிலையில் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். இந்த பாலியல் பலாத்காரத்தால் அவள் கர்ப்பமடைகிறாள். அந்த குழந்தையின் தந்தை அந்த ஐந்து பேரில் யார் என்றுகூட அவளுக்குத் தெரியவில்லை. அதனால் அந்தக் குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் அவளுக்கு வெறுப்பாகவே இருக்கிறது. அவள் தற்போது நுவரெலியாவில் ஒரு தேவாலயத்தின் மடத்தில் தனது வாழ்க்கையைக் கழித்து வருகிறாள்.

ஒரு பெண்ணின் உணர்வுகள் மதிக்கப்படாததால் அவளது மனித உரிமையும், உணர்வுகளும் மிதிக்கப்படுகின்றன. இது ஒரு சம்பவம் மட்டுமே. இப்படி ஏராளமான சம்பவங்களும், உண்மைக் கதைகளும் இருக்கின்றன.

தான் விரும்பிய வாழ்க்கை கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம். வலுக்கட்டாயமாக திருமண செய்து வைத்த வாழ்க்கையில் வெறுப்பு. ஐந்து காமுகர்களினால் பாலியல் பலாத்காரம் என்று லியோனாவின் வாழ்க்கை இருண்டு போயுள்ளது. இதற்கான ஒரே காரணம் அவள் ஓரினச் சேர்க்கையாளர் என்பதே! அவளது உணர்வுகளை யாரும் மதிக்கவில்லை என இந்தச் சமூகத்தின் மீது வெறுப்புகொள்கிறாள்.

ஒருபால் உறவுக்காரார்கள்

LGBT என்று சுருக்காகமாக அழைக்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர்களும், திருநங்கைகளும் இலங்கையில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சட்டங்களும் அவர்களுக்கு எதிராகவே உள்ளன. இந்த சமூகத்திற்காக EQUAL GROUND என்ற அரசசார்பற்ற நிறுவனம் குரல்கொடுத்து வருகிறது. (LGBTI என்பதன் விரிவாக்கம் - L: lesbian, G: Gay, B: Bisexual, T: Transgender)

ஓரினச் சேர்க்கையாளர், திருநங்கைகள் குறித்து ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்துவதற்கான விசேட செயலமர்வொன்றையும் இந்த அரசசார்பற்ற அமைப்பு அண்மையில் நடத்தியிருந்தது.

மேற்கத்தேய கலாசாரத்தை இலங்கையில் பரப்ப முயற்சிப்பதாக LGBT சமூகத்திற்கு ஆதரவாக குரல்கொடுப்பவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த சமூகத்திற்கு ஆரவாக குரல்கொடுப்பவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்திருப்பதாக அந்த நிறுவனத்தின் ஸ்தாபகர் ரொசானா பெல்மர் தெரிவித்தார். சட்டமும் அவர்களுக்கு எதிராக இருப்பதால் அவர்கள் பெரும் சிக்கல்களை எதிர்கொள்வதை அவர் தெளிவுபடுத்தினார்.

இதுகுறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரி மேனகா ஹேரத் பேசினார். அனைத்து மனிதர்களும் சமம் என்ற அடிப்படையில் ஓரினச் சேர்க்கையாளர், திருநங்கை ஆகியோரது அடிப்படை மனித உரிமைகளை உறுதிப்படுத்துவது மிக முக்கியமானது என அவர் விளக்கமளித்தார்.

மேனகா ஹேரத் Image caption மேனகா ஹேரத்

இதுகுறித்து மேலும் விபரித்த மேனகா ஹேரத், ''இந்தச் LGBT சமூகத்தைச் சார்ந்தோரின் அடிப்படை மனித உரிமை மீறப்படுவதாக முறையிடும் சந்தர்ப்பங்களிலும் அதுகுறித்து மனித உரிமை ஆணைக்குழு பணியாற்றுகிறது. இலங்கையிலுள்ள 365-A என்ற சட்டத்தின் கீழ் இவர்கள் எவ்வாறு கைதுசெய்யப்படுகின்றனர் என்பது குறித்து நாம் விழிப்பாக இருக்கிறோம். இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சட்டவிரோதமாகவே கைதுசெய்யப்படுகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்டம் எவ்வாறு கையாளப்படுகின்றது என்பது குறித்து மனித உரிமை ஆணைக்குழு அக்கறை கொண்டுள்ளது.''

''நபர் யார் என்பது குறித்து மனித உரிமை ஆணைக்குழு கவனத்தில் கொள்ளாது. மனிதன் என்ற வகையிலேயே ஒருவரை ஆணைக்குழு பார்க்கிறது. அனைவருக்கும் உரிமைகள் இருக்கின்றன. அவர்களின் உரிமைகள் எவ்வாறு காக்கப்படுகிறது என்பதிலேயே மனித உரிமை ஆணைக்குழு கரிசனை கொள்கிறது. LGBT சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முறையிட வந்தாலும் அவரையும் ஒரு மனிதராகவே ஆணைக்குழு பார்க்கிறது. அவரது உரிமையை உறுதிப்படுத்துவது மனித உரிமை ஆணைக்குழுவின் கடமையாக இருக்கிறது.''

''காரணம் அவர்களும் மனிதர்கள். சாதாரண மனிதர்களை விடவும் அவர்கள் பல சமயங்களை நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு யாருடையதாவது உதவி தேவைப்படுகிறது. சமூகத்தில் அவர்களுக்குள்ள பிரச்சினைகளினால் அவர்கள் முன்வர விரும்புவதில்லை. அத்துடன் முன்வர அஞ்சுகின்றனர். இதனால் அவர்கள், உரிமைகள் அற்ற நிலையில் வாழ்கின்றனர்.''

''தன்னைத்தானே வருத்திக் கொள்கின்றனர். வாழ முடியாத காரணத்தினால் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலானவர்களை குடும்பங்கள் ஒதுக்கிவைத்துள்ளன. தமக்கான அடையாளத்தைத் தொலைத்து வாழ்கின்றனர். தாம் யார் என்ற கேள்வியுடன் அவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் யார் என்பதைத் தேடிச் செல்லும் தைரியம் அவர்களிடம் இருக்கிறது.''

lesbianபடத்தின் காப்புரிமை Getty Images

''இந்த முயற்சிக்கு மனித உரிமை ஆணைக்குழுவினால் உதவ முடியும். ஊடகம் என்ற ரீதியில் உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பிருக்கிறது. ஊடகங்கள் அறிக்கையிடும் விதத்தைப் பொறுத்தே சரி, பிழை எது என்பதை மக்கள் தீர்மானிக்கின்றனர். எனவே இந்த சமூகத்தினர் குறித்த செய்திகளைப் பதிவிடும்போது மிகவும் அவதானமாக கையாளுமாறு கோருகிறோம்.'' என்று முடித்தார்.

இதுகுறித்து சட்டத்தரணியும், ஊடகவியலாளருமான ரதிகா குணரத்னவிடம் பேசினோம்.

''உண்மையில் இவர்களுக்கு அனைத்து வகையிலும் அநீதி இழைக்கப்படுகிறது. ஒருவரின் உணர்வுக்கு மதிப்பளிக்க மறுப்பது என்பது கொடுமையானது. உணர்வுகளால் ஈர்க்கப்பட்ட இவர்கள் பழகும்போது சட்டம் இதனைத் தடுக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் 365-A என்ற சட்டம் இவர்களுக்கு எதிரான நெருக்கடிகளை மேலும் அதிகரிக்கச் செய்கின்றது. இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது கைதுசெய்யப்படும்போது, பொலிசார் இவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில்லை.''

ரதிகா குணரத்ன Image caption ரதிகா குணரத்ன

''இவர்களை கையாளும் வழிமுறைகள் முற்றிலும் பிழையாகவே இருக்கின்றன. இதுகுறித்து எமக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதிலும் இன்னுமொரு கொடுமையான விடயம் என்னவெனில், உள்ளூர் ஊடகங்களும் இவர்கள் விடயத்தில் பாரபட்சமாக செயல்படுகின்றன. அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அவர்களும் மனிதர் என்பதை மதிக்க முயற்சிக்க வேண்டும். குறைந்த பட்சம் LGBT சமூகத்திற்கு ஆலோசனை பெற்றுக்கொள்ள உதவும் தொலைபேசி இலக்கத்தை விளம்பரமாக பிரசுரிக்கக்கூட பத்திரிகைகள் மறுக்கின்றன.''

''இதனைப் பிரசுரித்தால் அந்த ஊடகங்கள் மீது எதிர்ப்புக்கள் ஏற்படும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. இந்த சமூகம் குறித்தும், அவர்களின் உணர்வுகள் குறித்தும் பேசுவது மிக முக்கியமானது. இந்த சமூகத்தினர் பாதிக்கப்படும்போது அதனை ஊடகங்கள் கையாளும் விதமும், செய்திகள் வெளியாகும் விதமும் மிகவும் கவலையளிக்கிறது. செய்தியாளர்கள் இதில் அதிக அக்கறைகொள்ள வேண்டும். அவர்களின் உணர்வுகளை மதித்து, அவர்களின் கோணத்திலும் அந்த சம்பவங்களைப் பார்க்க வேண்டும்" என்று கூறினார்.

துஷார மனோஜ் Image caption துஷார மனோஜ்

ஊடகங்கள் LGBT சமூகத்தின் மீது அக்கறைக் கொள்வது இன்னுமொருவர் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தடுக்க உதவ வேண்டும் என இந்த சமூகத்திற்காக நீண்ட நாட்களாக குரல்கொடுத்து வருபவரும், சமூக ஆர்வலருமான துஷார மனோஜ் தெரிவித்தார்.

''ஓரினச் சேர்க்கையாளர் குறித்து கிடைக்கும் செய்திகளும், அவர்களின் அனுபவங்களும் கசப்பானதாகவே இருக்கின்றன. திருநங்கை சமூகத்தில் பாலியல் பொருளாக பார்க்கப்படுகின்றனர். பாலியல் இச்சைக்காக இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் தரப்பினர்கூம இவர்களை இழிவாக பேசுவதும் நடத்துவதும் வேதனைகொள்ள வைக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் ஆசைப்படும் அடையாளத்தை நாம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இதற்காக அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் குறித்து பேச வேண்டும். இந்த முயற்சி, இன்னுமொரு தற்கொலை முயற்சியையும், இன்னுமொரு உயிர்ப் பலியையும் நிச்சயம் தடுக்கும்'' என அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-44489022

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

LGBT சமூகத்தினரும் நம்மைப் போல் இயல்பான மனநிலை உடையோரே எனும் புரிதலை சமூகத்தில் ஏற்படுத்தும் வகையில் இவர்களுக்கு எதிரான சட்டப்பிரிவு 365 - A  நீக்கப்பட வேண்டும். அதற்கான மக்கள் இயக்கம் வலுப்பெறுதல் வேண்டும். எந்த வகையில் பார்த்தாலும் அச்சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்ணிடம் வன்புணர்வு என்பது கிரிமினல் குற்றம். LGBT சமூகத்திற்கு  எதிரான எந்த நடவடிக்கையும் மனித உரிமை மீறல். 365 - A என்பதே ஒரு கருத்தியல் வன்முறை. பிற்போக்கு சிந்தனைகளின் எச்சம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.