Jump to content

"காலம் காலமாக ஆதிக்க சிந்தனை கொண்ட ஆண்களின் மனம் - அவ்வளவு எளிதில் மாறாது"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
"காலம் காலமாக ஆதிக்க சிந்தனை கொண்ட ஆண்களின் மனம்"

"ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்

 

அடுப்படி வரைதானே - ஒரு

ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்

 

அடங்குதல் முறைதானே"

என்று பல ஆண்டுகளுக்கு முன் எழுதினார் கவிஞர் கண்ணதாசன். பெண்களின் கோபதாபங்கள் எல்லாம் சமையலறை வரையில்தான். இதுவே இந்த வரிகளின் அர்த்தம்.

பல தசாப்தங்கள் முடிந்து தற்போது நாம் டிஜிட்டல் யுகத்தில் வாழ்கிறோம். இன்று பெண்களுக்கான வாய்ப்புகள் பரந்து விரிந்திருக்கின்றன. சொல்லப் போனால் பெரிய பெரிய நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் பெண்கள் முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றனர். ஆனால், மற்றொரு புறம் பெண்கள் இன்னும் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். சில பெண்கள் இன்னும் சுதந்திரக் காற்றை சுவாசிக்காமலே இருக்கின்றனர் என்பதே உண்மை நிலை.

பாலியல் வன்கொடுமைகளிலும், குடும்ப வன்முறைகளிலும் சிக்கித் தவித்து செய்வதறியாமல் அவர்கள் தவிக்கின்றனர்.

இதற்கு ஒரு சாட்சிதான் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த லட்சுமி. திருமணம் ஆன இரண்டே வாரத்தில் தன் கணவரால் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளார் இவர்.

திருமணம் ஆன இரண்டே வாரத்தில் மனைவியின் தோட்டை வாங்கி அடமானம் வைத்து குடித்துவிட்டு, பின்னர் இரவு 11மணியளவில் லட்சுமியை அழைத்து கொண்டு தலைக்காடு பகுதியில் உள்ள தனது இரண்டு நண்பர்களிடம் விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார் அவரது கணவர் ராஜேந்திரன் .

இரவு 2 மணியளவில் வீட்டிற்கு வந்த லட்சுமியை விடிய விடிய தாக்கிய ராஜேந்திரன், அவரது முகத்தில் உரலை வைத்து அடித்ததாக கூறப்படுகிறது. தற்போது திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள லட்சுமி, தன் கணவரின் நண்பர்கள் இருவரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னதாக, கடந்த மாதத்தில் ஒடிசாவின் பாலேஷ்வர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தன் மனைவியை வைத்து சூதாடியதாக செய்தி வெளியானது. சூதாட்டத்தில் மனைவியை தோற்ற அந்த கணவன், வெற்றி பெற்ற மனிதரிடம் தனது மனைவியை ஒப்படைத்தார். சூதாட்டத்தில் பிறகு மனைவியை ஜெயித்தவன், அந்த பெண்ணின் கணவரின் முன்னரே பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பணயம் வைக்கப்பட்டவர் Image caption பணயம் வைக்கப்பட்டவர்

எவ்வளவு காலமாக பெண்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்? இன்னமும் இந்த நூற்றாண்டிலும் பெண்கள் இவ்வாறு நடத்தப்படுவதற்கு என்ன காரணம்?

சட்டங்களால் ஆண்களின் மனதை மாற்றிவிட முடியுமா?

பெண்களை மதிக்க வேண்டும் என்ற மனநிலை பல ஆண்களுக்கு இன்றும் இல்லை என்கிறார் குடும்பநல வழக்கறிஞர் சாந்தகுமாரி. நகர்புறங்களில் ஓரளவிற்கு பரவாயில்லை என்றாலும், கிராமப்புறங்களில் பல பெண்கள் இன்னும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள் என்கிறார் அவர்.

ஆனால், வட இந்தியாவைவிட தென் இந்தியாவில் பெண்கள் சற்று அதிகமாக மதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை என்று கூறும் அவர், ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு சம்பவத்தினை விவரிக்கிறார்.

"தாயும், மகளும் மட்டும் இருந்த ஒரு குடும்பத்தில், வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கிராம பஞ்சாயத்திற்கு இந்த விவகாரம் வந்தபோது வட்டியும் முதலுமாக கடனை அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். கட்ட வழியில்லை என்று அந்த தாய் கூறியதும், அப்போ மகளை விற்றுவிட சொன்னார்கள்." இது பத்திரிகைகளிலும் வந்ததாக குறிப்பிடும் அவர், இந்தியாவை தவிர வேறெங்கும் இதுபோன்ற அநியாயங்கள் நடக்காது என்று தெரிவித்தார்.

பணயம் வைக்கப்பட்டவர்

"சட்டம் கொண்டு வந்தால் மட்டும் ஆண்கள் மனதை மாற்றிவிட முடியுமா?" என்று கேள்வி எழுப்பும் வழக்கறிஞர் சாந்தகுமாரி, "மனரீதியாக ஆண்கள் மாற வேண்டும்" என்கிறார்.

விட்டுக் கொடுப்பது பெண்களே…

மேலும், இது போன்ற குடும்ப வன்முறை வழக்குகளில் பெரும்பாலும் யாரும் தண்டிக்கப்படுவதில்லை என்று குறிப்பிடும் அவர், குடும்ப வன்முறைக்கு எதிரான சட்டங்களை எடுத்துக் கொண்டால் அதில் 'உடனடி கைது' என்ற ஒன்று கிடையாது என்பதால் யாரும் பயப்படுவதில்லை என்றார்.

"அப்படியே இருந்தாலும் இது தொடர்பான வழக்குகள், கடைசி வரை நடைபெறுவதும் இல்லை. கோர்ட்டுக்கு நடக்க முடியாமல் வழக்கை வாபஸ் பெறுவதும், காசு கொடுத்து வழக்கை முடிப்பதும், இல்லை என்றால் கடைசியில் அந்தப் பெண்னே கணவருடன் வாழ்வதாக கூறிவிடுவதும் நடக்கும்.

"எத்தனை சட்டம் வந்தாலும், குடும்பம் குழந்தைகள் என்று வந்துவிட்டால் பெண்கள் நிறைய விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கிறது." என்கிறார் அவர்.

வழக்கறிஞர் சாந்த குமாரி Image caption வழக்கறிஞர் சாந்த குமாரி

பல்லாயிரம் ஆண்டுளாக ஆண்கள் உடம்பில் ஊறிப்போயுள்ள ஆதிக்க உணர்வு இன்றும் இருக்கத்தான் செய்கிறது என்றும் இதெல்லாம் மாற இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்றும் சாந்தகுமாரி குறிப்பிடுகிறார்.

"வழி வழியாக வரும் ஆதிக்க சிந்தனை"

பெண்களை தாக்குவதற்கு தங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்றே சில ஆண்கள் நினைக்கின்றனர் என்கிறார் குடும்பநல வழக்கறிஞர் ஆதிலஷ்மி லோகமூர்த்தி.

"காலம் காலமாக ஆண்களுக்கு ஆதிக்க சிந்தனை என்பது உண்டு. அது வழிவழியாக வருகிறது. என்னதான் சட்டங்கள் இயற்றப்பட்டு அமலில் இருந்தாலும்கூட சமூகத்தின் பார்வை வேறாகத்தான் இருக்கிறது" என்கிறார் அவர்

பெண்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் கௌரவமும் இன்னும் பலருக்கு கிடைக்கவில்லை. என்னோட சிந்தனையை பின்பற்றினால் நீ என் மனைவி என்ற ஆண்களின் பார்வை மாறாமல் எதுவும் மாறாது என்றும் ஆதிலஷ்மி தெரிவித்தார்.

"பெண்களை இரண்டாம் நிலையில் வைப்பது இன்றும் மாறவில்லை"

பெண்கள் மீதான தாக்குதல்கள், கொடுமைகள் எல்லாம் எங்கோ ஒரு இடத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பல நேரங்களில் இதை நாம் வெளிப்படையாகக் காட்டவில்லை என்றாலும் சமூகத்தில் இது இருந்தே வந்திருக்கிறது என்று கூறிய அவர், பெண்களை இரண்டாம் நிலையில் வைப்பது இன்றும் மாறவில்லை என்கிறார்.

ஆண்களில் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என்றெல்லாம் கிடையாது. பெண் இப்படித்தான் வாழவேண்டும் என்ற மனநிலை இருக்கும் வரை இது போன்ற பிரச்சனைகள் இருக்கும்.

விழிப்புணர்வு

"படித்த பெண்களைக்கூட பலரும் மதிப்பதில்லை. இதெல்லாம் மாறி வந்தாலும், மாற்றத்தின் வேகம் மிகக் குறைவாக உள்ளதாக" கூறுகிறார் அவர்.

பாலின சமத்துவம் குறித்து தொடர்ந்து நம் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இது தொடர்பாக என்னென்ன சட்டங்கள் இருக்கின்றன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குடும்ப வன்முறை, பாலியல் வன்முறைக்கு எதிராக பல சட்டங்களும், சட்டத் திருத்தங்களும் உள்ளன. இருக்கிற சட்டங்களை பயன்படுத்த தெரிய வேண்டும் என்றும் ஆதிலஷ்மி தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-44492479

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.