Jump to content

குறைப்பிரசவத்தை முன்கூட்டியே அறிய உதவும் ரத்தப் பரிசோதனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கர்ப்பினிப் பெண்களின் குறைப்பிரசவத்தை அறிய செய்யும் ரத்தப் பரிசோதனை ஒன்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

குழந்தைபடத்தின் காப்புரிமை Getty Images

அதி உயர் பிரசவ கால ஆபத்து உள்ள பெண்கள் மத்தியில் இந்த ஆய்வு முடிவுகள் 80 சதவீதம் துல்லியத்தோடு இருப்பதாக 'சயின்ஸ்' சஞ்சிகையில் வெளியான தொடக்க நிலை ஆய்வு தெரிவிக்கிறது.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆய்வில் தெரியும் அளவுக்கு இந்த ரத்தப் பரிசோதனை மூலம் குழந்தை பிறக்கின்ற தேதியையும் துல்லியமாக கணிக்க முடிவதாக, அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முன்னர் இன்னும் அதிக ஆய்வுகள் செய்ய வேண்டியுள்ளன.

உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் ஒன்றரை கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறக்கின்றன.

ஓராண்டில் நிகழும் 10 லட்சம் இறப்புகளுக்கு குறைப்பிரசவம் காரணமாக அமைகிறது.

ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளின் இறப்புக்கு இது முக்கியக் காரணமாக விளங்குகிறது.

குழந்தைபடத்தின் காப்புரிமை Science Photo Library

கரு மற்றும் நஞ்சுக் கொடியில் இருந்தும், தாயிடம் இருந்தும் வந்து ரத்தத்தில் கலக்கும் ஆர்என்ஏ எனப்படும் மரபணுவின் நடவடிக்கையை இந்தப் பரிசோதனை ஆய்வு செய்கிறது.

கர்பிணிப் பெண்களிடம் இருந்து ஒவ்வொரு வாரமும் ரத்த மாதிரிகளை சேகரித்த ஆய்வாளாகள், மகப்பேறு காலத்தில் வெவ்வேறு ஆர்என்ஏ-வின் அளவுகள் மாறுவது பற்றி ஆராயத் தொடங்கினர். இதன் மூலம்

வயிற்றிலிருக்கும் குழந்தையின் மாதம் அல்லது குறைப்பிரசவத்தை முன்னதாகவே கணக்கிட இந்த ஆர்.என்.ஏ. அளவு மாற்றத்தை அறிவது உதவலாம் என்று இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

38 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ரத்த பரிசோதனை, வயிற்றில் இருக்கும் குழந்தையின் மாதத்தை கணிப்பதில் 45 சதவீத துல்லியமான முடிவுகளை வழங்கியது. ஆனால், அல்ராசவுண்ட் பரிசோதனையில் 48 சதவீதம் துல்லியமாக முடிவுகள் தெரியவந்துள்ளன.

குழந்தை பிறப்புக்கு 2 மாதங்களுக்கு முன்பு வரை குறைப்பிரசவத்தை கணிக்கவும் இந்தப் பரிசோதனை பயன்படுத்தப்பட்டது.

இந்த ஆய்வு இரண்டு தனித்தனி பெண்கள் குழுக்களிடம் நடத்தப்பட்டன. ஒரு குழுவில் எட்டுக்கு ஆறு முறை ஆய்வு முடிவுகள் சரியாக இருந்தன. இன்னொரு குழுவில் ஐந்துக்கு நான்கு முறை முடிவுகள் சரியாக இருந்துள்ளன.

"இவை எல்லாம் நடந்திருப்பது பற்றி நான் உண்மையிலேயே உற்சாகமடைந்துள்ளேன்" என்று இந்த ஆய்வாளர்களில் ஒருவரான மிரா மௌஃபார்ரெஜ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"தாயின் ரத்தத்தை பயன்படுத்தி சுகாதார பராமரிப்பை எளிதில் கிடைக்கக்கூடியதாகவும், அல்ட்ராசவுண்ட சோதனைகள் கிடைக்காத மக்களுக்கு அதனை மலிவானதாக பெறக்கூடிய அளவிலும் நாம் பயன்படுத்த முடிந்தால், ஆரோக்கியமாக குழந்தைகள் பிறக்கும். சுகப் பிரசவங்கள் நடைபெறும் என்று நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இது தொடக்க ஆய்வுதான் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் பெரிய ஆய்வுகளால் இந்த முடிவுகளை உறுதி செய்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவத்தின் ராயல் கல்லூரியின் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் பாஸ்கி திலகநாதன் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், குறைப் பிரசவத்தால் ஏற்படும் சிக்கல்கள் பச்சிளம் குழந்தைகளின் இறப்புக்கு முன்னிலை காரணமாக இருப்பதோடு பிரிட்டனிலுள்ள 7 முதல் 8 சதவீத குழந்தை பிறப்பை பாதிக்கின்றன.

"ஆனால், இந்த ஆய்வு நடத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், குறைப்பிரசவத்தை கணிப்பது கடினம்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

"சிகிச்சையில் இதனைப் பயன்படுத்துவதற்கு முன்னால் அதிக ஆய்வுகள் நடத்தப்பட்டு இந்த முடிவுகளை உறுதி செய்துகொள்வது அவசியம் என்றும் இந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/science-44426878

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.