Jump to content

அக்கரைபற்றில் பதற்றம் - வ.ஐ.ச.ஜெயபாலன்


poet

Recommended Posts

அம்பாறை மாவட்ட சிவில் சமூகத்துக்கும் அரசியல் தலைமைகளுக்கும்.                                                              ,,

நான் கவலைப்பட்டதுபோல கிழக்கு மாகாணத்தில் பதட்டம் அதிகரித்து வருகிறது. அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு நகர வட்டாரங்களில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் காணி விற்றல் வாங்கல் தொடர்பாக பதட்டநிலை உருவாகிவருகிறது. முஸ்லிம்கள் சிலர் தாக்கப்பட்டுள்ளனர். அரசியல் ஆய்வுகளில் இருந்து ஒதுங்கிவிட்டாலும் துர் அதிஸ்ட்ட வசமான சூழலில் சில வார்தைகள் சொல்லவேண்டுமென நினைக்கிறேன். 
.
யழ்ப்பாணம் முல்லைதீவு மாவட்டங்களில் முஸ்லிம்கள் காணிகளை தமிழரும் கிழக்கில் தமிழர் காணிகளை முஸ்லிம்களும் வாங்கும் போக்கு பொதுவாக அதிகரித்து வருகிறது. . வடக்கில் முஸ்லிம்கள் தமது காணிகளை தமிழருக்கு விற்க்க வேண்டாமென நான் எழுதியும் கோரிக்கை வைத்துமிருக்கிறேன். இது பொதுவான நீதியாகும். பாரம்பரிய நிலம் தொடர்பாகவோ அல்லது ஏற்கனவே விற்க்கப்பட்ட தனியார் நிலம் தொடர்பாகவோ தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையே காணிப் பிரச்சினைகள் எழுந்தால் அவை நீதிமன்றத்தில் மட்டுமே தீர்துகொள்ளப்பட வேண்டுமென நெடுங்காலமாக வலியுறுத்தி வருகிறேன்.

ஏற்கனவே தமிழரிடமிருந்து வாங்கிய நிலத்திற்க்கு வேலிபோடச் சென்ற முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர். கண்டனத்துக்குரிய இச்சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடாது. 
.
உலகில் ஒரே பிரதேசத்தில் இரண்டு அல்லது அதிக இனங்கள் வாழும் நாடுகளில் -உதாரணத்துக்கு வட அயர்லாந்து போன்ற இடங்களில் எல்லாம் இத்தகைய பிரச்சினைகள் உள்ளது. அண்மைக் காலங்களில் பொதுபலசேன போன்ற அமைப்புகள் இனங்களுக்கிடையிலான மாறுபட்ட குடிசன வளர்சி நிலம் கைமாறுதல் போன்ற அச்சங்களை முன்னிலைப்படுத்தி தமிழர் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார்கள். இது ஆபத்தான போக்காகும். வட அயர்லாந்து போன்ற பல்லின தேசங்களில் இத்தகைய அச்சங்கள் தீர்த்து வைக்கபட்டுள்ளது. மாறுபட்ட குடித்தொகை வளர்ச்சிப் பின்னணியில் நில உரிமைப் பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் அதிகார பகிர்வு பிரச்சினைகள் தொடர்பாக புரட்டஸ்தாந்து (ஸ்கொட்டிஸ்) மற்றும் கத்தோலிக்க (ஐரிஸ்) இனங்களின் மத்தியில் அனுபவரீதியாக நிறைய ஆய்வறிவும் விதிகளும் நவீன தீர்வுகளும் எட்டப்படுள்ளன. . வடகிழக்கில் வாழும் தமிழரும் முஸ்லிம்களும் வட அயர்லாந்துபோன்ற நாடுகளின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளலாம். 
.
தமிழரும் முஸ்லிம்களும் விற்று வாங்கும் காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க நீதிமன்றமும் பேச்சுவார்த்தை அரங்கும் அரசியல் தலமைகளும் சிவில் சமூகங்களின் சந்திப்புகளும் பத்திரீகைகளும், உள்ளது. இவற்றின் மூலம் மட்டுமே பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். யாரும் வன்முறையில் ஈடுபடுவது அனுமதிக்கப்படக்கூடாது.
.
அப்பம் பிரிக்க குரங்குகள் தேவை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களுக்கு அடி விழுந்தால் பொயட் மட்டும் அங்கு நிற்கிறார்  :35_thinking:

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

முஸ்லீம்களுக்கு அடி விழுந்தால் பொயட் மட்டும் அங்கு நிற்கிறார்  :35_thinking:

அவர்கள் திருப்பி வட்டியும் முதலுமாக தரும்போது எல்லாரும் தாராளமாக ஒப்பாரி வைக்கலாம்.

ஸ்ரீ லங்கா அரசின் தமிழருக்கு எதிரான போரில்  சில முஸ்லிம்கள் அரசுக்கு உதவியதை வைத்து முழு முஸ்லிம்களையும் வடக்கு கிழக்கை விட்டு வெளியேற்றிய போது கை தட்டியவர்கள் பின்னர் முஸ்லிம்கள் மட்டுமல்ல  இப்படி வெளியேற்ற படாத தமிழ் "ஒட்டு குழுக்களும்" (தலைவரின் பாசறையில் பாசத்துடன் வளர்க்கப்பட்ட கருணா அம்மான் உட்பட)  இணைத்து ஸ்ரீ லங்கா அரசுடன் பூரணமாக ஒத்துழைத்து முற்றாக அழித்த போது வைத்த ஒப்பாரியை இவ்வளவு வேகமாகவா மறந்து விட்டீர்கள்?

மீண்டும் மீண்டும் அழிய வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் எந்த இனமும், மதமும், குழுமமும் தாமாக அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.  ஈழத்தமிழ் இனம் இவ்வாறு அழியும் இனத்துக்கான அனைத்து தன்மைகளையும் கொண்டு உள்ள ஒரு இனமாகவே தெரிகிறது.

கவிஞர் ஜெயபாலன் இந்த அழிவை தடுக்க அவர் யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்த நாளில் இருந்து இன்றைய முதிர் பருவம் வரை தன்னால் ஆனதை செய்கிறார். ஆனால் என்ன செய்வது? "கெடு குடி சொற் கேளாது." என்ற தமிழ் முதுமொழி ஈழத்தமிழருக்காகவே உருவானதாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ வடக்கில் இருந்து புலிகள் முஸ்லிம்களை வெளியாற்றாது போயிருந்தால் 
அமெரிக்க ஐரோப்பிய யூனியன் ..... மற்றும் காத்தன்குடி பள்ளிவாசலுக்கு குண்டு வைத்த 
கருணை கொம்மான் எல்லாம் தமிழர் பக்கம் நின்று போராடி இருப்பார்கள் என்றால் ?

மியன்மாரில் இருந்து வெறிபிடித்த நாய்கள் மாதிரி குதற குத்தற கடிக்க 
தப்பி ஓடிய ரோகிஞ்சா மக்களை காப்பாற்ற எந்த நாயும் ஏன் போகவில்லை ? 

எப்பவும் ஆட்டுக்குள் கொண்டுவந்து மாட்டை விடுவதே பிழைப்பாய் போய்விட்ட்து.
நான் கொழும்பில் இருந்த நாட்களில் .... நான் இருந்த வீட்டில் இருந்து ஐ பி சி ரோட்டில் 
(எனக்கு எதுவுமே தெரியாது) வானுக்கு பெயிண்ட் அடித்துதான் பின்பு கூட்டுபடை தலைமையகத்தில் 
கொண்டுபோய் குண்டுடன் விட்ட்டார்கள். நான் ஓடிப்போய் கம்பகாவில் யாழில் இருந்து இடம்பெயர்ந்த 
முஸ்லீம் வீட்டில்தான் தங்கி இருந்தேன் ... ரஞ்சன் விஜயரடனாவுக்கு குண்டு வெடித்தபோதும் அங்குதான் 
போனேன். அப்போது வெள்ளவத்தை போலீஸ் அதிகாரியாக இருந்தவர் நல்லவர் ஒன்றும் செய்ய மாட்ட்டார் 
ஒருக்கா எல்லோரையும் அள்ளிக்கொண்டு போய் 3-4 நாள் அந்த ஜெயிலில் பூட்டி வைப்பார் .. அது மேலிடத்து ஓடர் அவர் அதை செய்து கொள்வார். அந்த ஜெயிலில் இருக்கும் அறுவெறுப்புக்காக தான் நான் கம்பாக ஓடுவது. 

ஆனாலும் இலங்கை பெரும்பான்மை முஸ்லீம்கள் தமிழ் விரோத எண்ணம் கொண்டவர்கள் 
இதை என்னிடம் முஸ்லிம்களே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் சிற்றறிவுக்கு ஏற்ப அவர்களிடம் 
ஒரு எண்ணம் இருக்கிறது தமிழர்களை அழித்து இலங்கையில் இரண்டாம் இனமாக வாழ முடியும் என்று.

இந்திய பார்ப்பனர்கள் போல நாம் கை  ஓங்கினால் அப்பாவியாகி கெஞ்சுவார்கள்
யாரும் அப்பாவிகள் அவர்களிடம் தனியாக மாடினால்தான் அவர்கள் உண்மை முகம் தெரியும். 

யாழ்ப்பாணத்தில் ஒரு சில முஸ்லீம்கள் இராணுவத்துக்கு உடந்தையாக இருக்கவில்லை 
அப்பட்மாக பொய் பிரசஹகாரம் செய்யாதீர்கள் .......... காக்கைவெளியில்  இராணுவம் இறங்குவது இவர்கள் 
யார் யார் என்ன என்ன செய்வது என்று பள்ளி வாசலில் வைத்து திட்டம் எல்லோருக்கும் விளக்க பட்டு இருக்கிறது  ஊர்வாகத்துறையில் இராணுவம் இறங்க முழு வேவு வேலை செய்து கொடுத்தவர்களும் இவர்கள்தான். 

சாவகச்சேரியில் கைது ஆனது தற்செயலாக நடந்தது பக்கத்து தமிழ் கடைக்காரர்கள் சொல்லிக்கொடுக்க 
புலிகள் எதோ கிரானைடு வைத்திருக்கிறார்கள் என்றுதான் எண்ணிக்கொண்டு போனார்கள் .... கிடந்த ஆயுதங்களை பார்த்த பின்புதான் .... சரியான விசாரணைக்கு தொடங்கினார்கள். புலிகள் 3 நாட்கள் பிந்தி இருந்தால்  காக்கைதீவில் இராணுவம் இறங்கி கோடடையையும் மீட்டு யாழ் நகர் பூரா 1990யிலேயே கைப்பற்றி இருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் ஐயா,

கிழக்கில் ஹிஸ்புல்லா, றிசாட் அடாவடிகள் குறித்தும் நீங்கள் பேசினால் நியாயமாக இருக்கும். தமிழர்கள் நியாயத்துக்கு ஆக, இனவாதியான, மட்டக்கிளப்பு சுமண தேரரிடம் போய் தீர்வு பெற வைத்தது இவர்களின் கைங்கரியம்.

இந்த சம்பவம், சிங்கள இனவாதிகள் ஆசீர்வாதம் இல்லாமல் நடக்க முடியாது.

நானும் முஸ்லிம்களுக்கு இடையே வாழ்ந்தவன் என்ற வகையில் சொல்கிறேன். அவர்கள் தமது நலன்களை மட்டும் கருத்தில் கொண்டால், நிலைமை மோசமாகும். 

இன்று இலங்கையில், யுத்த நிலைமையினைப் பயன்படுத்திக் கொண்டு பொருளாதார வளத்தில் சிங்களவர்கள், தமிழர்கள் அனைவரையும் பின் தள்ளி இஸ்லாமியர்கள் வளர்ந்து விட்டது, சிங்களவர்களின் கண்களை உறுத்துகிறது.

மறுபுறத்தே, தமிழரிலும் பார்க்க சிறுபான்மையாக இருந்து கொண்டே, அரச திணைக்களங்களிலும், அமைச்சரவைகளிலும், பல இடங்களை அவர்கள் கைப் பிடித்து கொண்டுள்ளனர் என மனோ கணேசன் சொல்லுமளவுக்கு நிலைமை.

மேலும் மொழி வேறானாலும் பரவாயில்லை... அரபி மொழி பொதுவாக இருப்பதால், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் என பலர் சுற்றுலா விசாவில் வந்து, உள்ளே கலியாணம் செய்து செட்டில் ஆகின்றனர். இந்த விஷயம் புரிந்ததும் அரசு அண்மையில் உசாராகி உள்ளது.

தமிழர்களிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை. முஸ்லிம்கள் மடியில், பையில் நிறைய வைத்து உள்ளனர்.... அவர்கள் தான் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.... முக்கியமாக சிங்களவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ள.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு திருடப்படும் முஸ்லிம்களின் காணியும் சுய நல சமூகமும்

%255BUNSET%255D

செவிப்பறையைப் பிய்த்து விடுமளவிற்கு அலார மணியடித்தும் சுகமான மெத்தையில் சயனித்திருக்கும்
இந்த சமூகத்திடம் நீதி நியாயங்களை எத்தனை தூரம் எடுத்துச் சொல்வது?
 
அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் 40 கட்டையில் தனக்குச் சொந்தமான காணிக்கு வேலியமைக்கச் சென்ற முஸ்லிம் காணி உரிமையாளரையும் அவரது சகாக்களையும்  சில தமிழ் இனவாதிகள் கடுமையான அடித்து விரட்டியிருக்கிறார்கள்.
 
காணியைச் சுற்றிப் போடப்பட்ட தகரத்தை பிய்த்தெறிந்து, கட்டைகளால் அடித்து,மோட்டார் வாகனங்களை சேதப்படுத்தி ஒரு களேபரமே நடந்திருக்கின்றது. தாக்கப்பட்டவர்களில் சிலர் கல்முனை வைத்திய சாலைக்கு இடமாற்றப்பட்டிருக்கிறார்கள்.
 
காரணம் தமிழர்களின் பிரதேசத்தில் சோனி நீ காணி வாங்குவதா?
 
அப்பட்டமான கடைந்தெடுத்த இனவாதத்திற்கு இதைவிட வேறு நல்ல உதாரணத்தை கூற முடியாது.
 
இதற்கு உடந்தையாக ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளரும் இருந்திருக்கிறார் என நம்பகமான செய்திகள் சொல்கின்றன.
 
அக்கரைப்பற்றின் நாலா பக்கங்களிலும் தமிழர்களின் பிரதேசங்களில் முஸ்லிம்களின் நிலங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.இந்த நிலங்களிலிருந்து முஸ்லீம்களை விரட்டுவதற்கான பிரயத்தனங்கள் தமிழ் இனவாதிகளால் எடுக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.அந்த அடிப்படையில்தான் இந்த சம்பவம் பார்க்கப்படவேண்டும்.முஸ்லீம்களின் காணிகளை அபரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
 
இந்தச் சம்பவம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நடந்தேறியிருக்கிறது.முஸ்லிம்கள் பெரும்பானமையாக வாழும் பிரதேசத்தில் கூட இதனைக் கட்டுப்படுத்தும் திராணி எமக்கில்லை என்றால் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பிரதேசங்களில் எமது நிலங்களின் நிலையை சொல்லத் தேவை இல்லை.
 
இதில் வேதனையும் வெட்கமும் கொள்ள வேண்டிய விடயம் இது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதே.
 
அடித்தவர்கள்,தூண்டியவர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு இரண்டு பெண்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள் பொலீசார்.
 
இதுதான் பொலிஸாரின் தந்திரம்.பெண்களைக் கைது செய்து சமர்ப்பித்தால் பெண்கள் என்ற அடிப்படையில் பிணை கிடைக்கும்.அதன் பிறகு ஆண்களை கொண்டுவந்தால் பெண்களுக்குப் பிணை கிடைத்ததைச் சொல்லி ஆண்களுக்கும் பிணை எடுத்துவிடலாம்.
 
பிடிபட்டவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது  ,இந்த நிகழ்வை ஒரு இனவாதச் செயற்பாடாகப் பார்க்கவேண்டும் என்று  சட்டத்தரணி றதீப் அஹமட் வாதாடியும்  இப்பிரச்சினை இரண்டு குழுக்களுக்கிடையிலான காணிப்பிரச்சினையே ஒழிய இனவாதப்பிரச்சின அல்ல என்று நீதிபதி கூறி கைதுசெய்யப்பட்டவர்களுக்கு பிணை கொடுத்திருக்கிறார்.
 
இனியென்ன.பிடிபடும் அனைவரும் பிணையில் வெளிவருவார்கள். நூற்றோடு நூற்றி ஒன்றாக இந்த வழக்கும் இனி ஆகிவிடும்.பிணை கிடைக்கும் என்ற தைரியத்தில் இன்னும் பிழைகள் செய்வார்கள் அவர்கள்.
 
இங்குதான் எமது சமூகம் தவறிழைக்கிறது.ஒரு சமுகப் பிரச்சினையை இரண்டு குழுக்களுக்கிடையில் நடந்த பிரச்சினையாக இதைக் குறுக்கிய குற்றத்தை எமது சமூகமே இழைக்கின்றது.
 
இவ்வாறான சம்பவங்களின் போது முழு சமூகமும் தனது எதிர்ப்பைக்காட்டவேண்டும்.பிணைவழங்குவது நீதிபதியின் அதிகாரத்திற்குட்பட்ட விடயம்.ஒரு நீதிபதி நடந்தேறிய குற்றம் சம்பந்தமாக ஒரு சமூக அழுத்தம் இல்லாதிருந்தால் இலகுவாக பிணை வழங்கிவிடுவார்.
 
குற்றவாளிகளை வெளியேவிடுவது ஆபத்து.சமூகம் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது,அவர்களை வெளியே விடுவது பல பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று நீதிபதி உணர்ந்தால்தான் பிணையை அவர் மறுப்பார்.
 
அதனை உணர்த்தும் கடமை சமூகத்திற்குரியது.
 
அந்த சமூகம் இப்படியான விடயங்களில் கொந்தளிக்காவிட்டால் இது ஒரு வெற்று வளவுச் சண்டையாகப் பொலீசாராலும் நீதிமன்றத்தாலும் பார்க்கப்பட்டுவிடும்.சமுகம் கொந்தளிக்க வேண்டும் என்பது தமிழர்களின் கடைகளைப் போட்டு உடைப்பதோ அவர்களைத் தாக்குவதோ அல்ல.முழுச் சமூகமும் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்திற்கும் பொலீசாருக்கும் அழுத்தம் கொடுப்பது.
 
கைது செய்யப்பட்டவர்களைக் கொண்டு வரும்போது நீதி மன்ற முன்றலில் நடாத்தும் கவனயீர்ப்புப் போராட்டம்,அனைத்து முஸ்லிம் சட்டத்தரணிகளும் இந்த  வழக்கிற்காக எழுவது,நீதமான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பது,காடையர்களைக் கைது செய்யும்படி பொலீசாருக்கு அழுத்தம் கொடுப்பது போன்ற செயற்பாடுகள் நீதிமன்றத்தை பிணை கொடுப்பதில் இருந்து தடுத்துவிடும்.அக்கரைப்பற்று மாநகர சபை இதில் தலையிட்டு பொலீசாருக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.மாநகர சபை உறுப்பினர்கள் வீதிக்கு வந்திருக்க வேண்டும்.இப்படித்தான் ஒரு சமுகப்பிரச்சினையை ஒரு சமூகமாக எதிர்கொள்வது.
 
ஆனால் எதுவுமே நடக்காததுபோல் இருப்பதும்,இது எனது கட்சிக்காரன் அல்ல ஆகவே எனது பிரச்சினை அல்ல என்பதும்,எனக்கு இப்போது பதவி இல்லை ஆகவே நான் எதுவும் செய்யமாட்டேன் என்பதும்,இது எனது காணியல்ல எனக்கேன் வம்பு என்றிருப்பதும்,எல்லாவற்றிற்கும் பயந்து நடுங்கும் இந்தக் கோழைத்தனங்கள்தான் இனவாதிகள் எம்மீது அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விடுவதற்கான காரணங்கள்.
 
இந்த சுயனலம்தான் எம்மை அழித்துவிடப்போகிறது.
 
ஒரு சமூகப் பிரச்சினையை சமூகமாக எதிர்கொள்ளுங்கள்.
 
இனி கைது செய்யப்படப்போபவர்களையாவது பிணை கொடுக்க விடாமல் ஒரு சமூகமாக நின்று ஒற்றுமையாகப் போராடுங்கள்.
 
ராஸி முகம்மத் ஜாபிர் ( குரல் அமைப்பு)
 
www.madawalaenews.com
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல வருகிறார்?

பிணை கேட்பது ஒருவரது சட்டபூர்வமான உரிமை. அதில் இவருக்கு என்ன பிரச்சணை?

காணி விசயத்தில் பிணக்கெண்டால், விவேகத்துடன் பேசித் தீர்வை காணவேண்டும் என்று அறிவுறுத்தாமல், நவீன மாதன முத்தா ஸ்ரைலில அறிவுரை கொடுக்கிறார். யாரு இவரைக் கேட்டது?

பிரச்சணை பட்ட காணிகாரர், மீண்டும் தமது காணிக்கு போகவேண்டாமா.?

ஜடியா சொல்லுறார், ஜடியா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/19/2018 at 6:05 PM, தனிக்காட்டு ராஜா said:

முஸ்லீம்களுக்கு அடி விழுந்தால் பொயட் மட்டும் அங்கு நிற்கிறார்  :35_thinking:

உது எப்பவோ தெரிஞ்ச விசயந்தானே...tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை, முஸ்லிம்கள் வேலைக்கு அமர்த்த வேண்டாம் - அக்கறைப்பற்றில் துண்டுப்பிரசுரம்

அக்கறைப்பற்றில் வெளியாகியுள்ள துண்டுப்பிரசுரம்



 

index.jpg
 
 

"முஸ்லிம் இனவாதிகளே" எனக்கூறி, தமிழ் இளைஞர் படையணி விடுத்துள்ள எச்சரிக்கை

 
 
'முஸ்லிம் இனவாதிகளே...' எனக்கூறி தமிழ் இளைஞர் படையணி விடுத்துள்ள எச்சரிக்கை
 
index.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/19/2018 at 11:31 PM, Jude said:

அவர்கள் திருப்பி வட்டியும் முதலுமாக தரும்போது எல்லாரும் தாராளமாக ஒப்பாரி வைக்கலாம்.

ஸ்ரீ லங்கா அரசின் தமிழருக்கு எதிரான போரில்  சில முஸ்லிம்கள் அரசுக்கு உதவியதை வைத்து முழு முஸ்லிம்களையும் வடக்கு கிழக்கை விட்டு வெளியேற்றிய போது கை தட்டியவர்கள் பின்னர் முஸ்லிம்கள் மட்டுமல்ல  இப்படி வெளியேற்ற படாத தமிழ் "ஒட்டு குழுக்களும்" (தலைவரின் பாசறையில் பாசத்துடன் வளர்க்கப்பட்ட கருணா அம்மான் உட்பட)  இணைத்து ஸ்ரீ லங்கா அரசுடன் பூரணமாக ஒத்துழைத்து முற்றாக அழித்த போது வைத்த ஒப்பாரியை இவ்வளவு வேகமாகவா மறந்து விட்டீர்கள்?

மீண்டும் மீண்டும் அழிய வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் எந்த இனமும், மதமும், குழுமமும் தாமாக அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.  ஈழத்தமிழ் இனம் இவ்வாறு அழியும் இனத்துக்கான அனைத்து தன்மைகளையும் கொண்டு உள்ள ஒரு இனமாகவே தெரிகிறது.

கவிஞர் ஜெயபாலன் இந்த அழிவை தடுக்க அவர் யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்த நாளில் இருந்து இன்றைய முதிர் பருவம் வரை தன்னால் ஆனதை செய்கிறார். ஆனால் என்ன செய்வது? "கெடு குடி சொற் கேளாது." என்ற தமிழ் முதுமொழி ஈழத்தமிழருக்காகவே உருவானதாக இருக்க வேண்டும்.

வட்டி முதல் எல்லாம் பிறகு பார்க்கிரது அது முஸ்லீமுடைய காணியாக இருக்கலாம் காணி பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கும் போது அதற்குள் அத்து மீறி நுளைவது குற்றம் 40 ம் கட்டை பகுதியில் சின்ன களப்பு , பெரிய களப்பு பகுதிகளை காணியை மீறி வேலி போட்டதால் வந்த பிரச்சினைதான் அது நாள் தோறும் கை கடுக்க மீன் வீசி விற்பவனுக்குத்தான் அந்த தொழிலின் வலியும் வேதனையும் தெரியும் எல்லாம் தெரிஞ்சால் போல் டைப்படிச்சுப்போடுவதில்லை அப்பு  அந்தக்களப்பை நம்பித்தான் அங்கே 40 க்ட்டை , தம்பட்டை . தம்பிலுவில் , திருக்கோவில் சனம் வாழுது இவங்கள் காத்தான் குடிக்கு மேற்குப்புறத்தே குப்பை போட்டு போட்டு நிரப்பி எடுப்பது போல் எடுத்தால் அந்த மக்கள் எங்கே போவது  பாவம் அவங்களுக்கு வேறு  தொழிலும் தெரியாது விவசாயம் , வலை வீச்சு மாத்திரம் மட்டுமே இல்லாட்டால் விற்றுபோட்டு ஐரோப்பாவில இல்ல அமெரிக்காவில் குடியேற வசதிகள் வாய்ப்புக்கள் இருந்தால் சொல்லுங்க வேற என்ன செய்வது ?

அதென்னப்பா கர்ணா மட்டுமா துரோகி நான் கேட்கிறேன்  அந்தக்கால தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களுக்கு தீர்வு என்று மாலை போடுறவர்கள் அந்தக்காலத்தில் பல உல்டா வேலை செய்து விட்டு ஓடுனவர்கள் எல்லாம் புனிதர்களா??  சொல்லுங்க பார்ப்போம் சந்தர்ப்பம் சூழ் நிலையும் நல்லவன் கெட்டவன் ஆவதும் கெட்டவன் நல்லவன் ஆவதும் சகஜமே சார்

கவிஞர்ருக்கு அக்கறை இருக்கலாம்   ஊரில் அவருக்கு நல்ல முஸ்லீம், நண்பர்கள் இருக்கிறார்கள் போல் அவர்களும் சந்தர்பத்துக்கேற்றால் போல தான்  கல்முனையில் நடந்த ஆர்ர்ப்பாட்டம் ஐயாவுக்கு தெரியாது போல் மற்றும் கண்டிக்கலவரம் ,அம்பாறைக்கலவரம் ஐயாக்கு தெரியும் தானே  சிங்களவனுக்கு தமிழ் தெரியாது தெரிந்திருந்தால் சிலநேரம் நிற்பாட்டி இருப்பான்  இனவாத கோபத்தில் எவனையும் பார்ப்பதில்லை யென்பது ஐயாவுக்கு நன்கு தெரியும் 

முப்பதாண்டு முன்னர் நடந்தகலவரத்தில் வானுக்கு தீ மூட்டிவிட்டு அதன் முன் ஆடிய சம்பவங்களும் உண்டு சார்  

 

1 hour ago, குமாரசாமி said:

உது எப்பவோ தெரிஞ்ச விசயந்தானே...tw_glasses:

நமக்கு இப்பதான் கொஞ்ச கொஞ்சமா தெரியவருகிறது சாமியார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

தமிழர்களை, முஸ்லிம்கள் வேலைக்கு அமர்த்த வேண்டாம் - அக்கறைப்பற்றில் துண்டுப்பிரசுரம்

அக்கறைப்பற்றில் வெளியாகியுள்ள துண்டுப்பிரசுரம்



 

index.jpg
 
 

"முஸ்லிம் இனவாதிகளே" எனக்கூறி, தமிழ் இளைஞர் படையணி விடுத்துள்ள எச்சரிக்கை

 
 
'முஸ்லிம் இனவாதிகளே...' எனக்கூறி தமிழ் இளைஞர் படையணி விடுத்துள்ள எச்சரிக்கை
 
index.jpg

இவரை யார் தமிழரரின் ஏரியாவிற்குள் வீடு வாங்க சொன்னது?...கொஞ்சம்,கொஞ்சசமாய் தமிழரது நிலத்தை புடுங்குறத்திற்கு படுற பாடு 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை சென்று இருந்தேன்.

கொழும்பில் நண்பர் ஒருவரிடம் சென்று இருந்தேன்.  வீடு மாறும் முனைப்பில் இருந்தார்.

அவர் ஒரு சதுர காணித் துண்டில் இடது பக்க மேல் மூலை சதுரத் துண்டில் வீடு வைத்திருக்க, மீதமிருக்கும் L Shape காணியில் ஒரு முஸ்லீம் வியாபாரி. இவரது துண்டு காணியை தனக்கு தருமாறு, நச்சரித்துக் கொண்டிருந்தாராம்.

வேறு காணி கிடைத்தால் தருவதாக சொல்லி இருக்கிறார்.

ஒரு சிங்கள பெண். அதே தெருவில், நண்பருடையதை விட, இன்னும் பெரிய அளவு காணி விற்பனை செய்ய, வியாபாரி போய் கேட்க.... அவரோ விற்பனைக்கு இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

அவர் இவரிடம் வந்து, அந்த வீட்டினை நீ வாங்கேன்.... நான் இதை வாங்கிறேனே என்று சொல்ல... இவர் போய் கேட்க்க அவர் ஒரு விலை சொல்லி இருக்கிறார். மேலும் தமிழருக்கு சும்மாவே கொடுத்தாலும்... அவர்களுக்கு கொடுக்கப் போவதில்லை என்று சொல்லி இருக்கிறார். (என்ன காரணமோ?)

மேலும் அவர் சொன்ன விலை.. இவரது வீட்டுக்கு வியாபாரி கொடுக்க தயாரான விலையிலும் பார்க்க குறைவு என்பதால்.... வாங்கி விட்டார்.

கடைசியில்.... ஏதோவகையில்... இவரை வெளியே அனுப்பி..... முழு சதுர காணிக்கும் சொந்தக் காரராகி விட்டார்....

இதுதான் இலங்கை முழுவதும் நிலை..

றிசாட் வில்பத்து, பாதுகாக்கப்பட்ட காடுகளில் கை வைத்தார். மாட்டியதும்... முல்லைத்தீவு காட்டில் கை வைத்தார்.

இராக் சதாம் தலையில் ஏதோ மிளகாய் அரைத்து... கிழக்கில் சதாம் நகர்.... பின்னர் இப்போது சவூதி பணக்கார்கள்.....

ஹிஸ்புல்லா, 5 ஏக்கர் நிலத்தினை மடக்கி.... அரபிக் கல்லூரி அமைக்கிறார். உபயம் சவூதி ஷேக்குகள்..

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

 

 

 

இதுதான் இலங்கை முழுவதும் நிலை..

றிசாட் வில்பத்து, பாதுகாக்கப்பட்ட காடுகளில் கை வைத்தார். மாட்டியதும்... முல்லைத்தீவு காட்டில் கை வைத்தார்.

..

இப்பொழுது அதுவும் மாட்டு பட்டு விட்டது.

அதனால் தான் இப்பொழுது கிளிநொச்சியில் கை வைத்துள்ளார் போல் உள்ளது....!!!! 

ஆனால் சில நாட்களாகவே நானா சைலண்டகி விட்டார்.

தாதா பிக்கு ஞானசாரரையே உள்ளுக்குள் நீதி மன்றம் தள்ளியதால் அடுத்தது தான் தான் என்ற பயம் வந்துட்டுது போல...!!!!

 

On 6/19/2018 at 5:05 PM, தனிக்காட்டு ராஜா said:

முஸ்லீம்களுக்கு அடி விழுந்தால் பொயட் மட்டும் அங்கு நிற்கிறார்  :35_thinking:

ஒரு ரம்சான் பிரியாணிக்காக இப்படியா ....!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் போன்றோர் முஸ்லீம்கள் 40 வருடத்திற்கு முன்பு இருந்தது போல் இப்பொழுதும் உள்ளார்கள் என நினக்கின்றார்கள். தற்காலத்தில் இலங்கையில் வாழும் மிகவும் ஓர் சுயநலமான ஓர் சமூகமாக மாறிவிட்டார்கள். 

இப்பொழுது இருக்கும் முஸ்லீம் இளைஞர்கள் கூட மதவாதிகளாகவும் / தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களாகவுமே உள்ளார்கள். சமீபத்தில் ஓர் கணொலியில் 'லாகிலாஹ இல்லல்லா மொகம்மது ரசூலுல்லா' என்று கலிமா கூறிய முஸ்லீம்கள் மாத்திரம்தான் இந்த பூமியில் வாழத்த்குதியானவர்களாம். மற்றவ்ர்கள் எல்லோரும் காபீர்கள் அழிக்கப்பட வேண்டியவர்களாம் என அந்த மதகுரு கூறுகின்றார்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானறிந்தவரை முஸ்லிம்களுடன் நல்லிணக்கமாக போகவேண்டும், முஸ்லிம்களுக்கு நாம் துரோகமிழைத்துவிட்டோம் என்று கதறி தன் பெயரை பிரபல்யபடுத்தும் தமிழர்களே அதிகம்... ஆனால்..

தமிழர் பிரதேசங்களில் வாழ்ந்துகொண்டே தமிழரை கொன்றோம், அவர்களை காட்டி கொடுத்தோம்,ஒரேமொழி ஒரே பிரதேசம், ஒரே சமூகவட்டம் என்று வாழ்ந்தாலும், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தமிழரை பலவீனபடுத்த சிங்களவருடன் சேர்ந்து நின்றோம் அது தவறு என்று எந்த முஸ்லீமும் ...

கட்டுரையோ...கவிதையோ...கருத்தோ சொன்னதேயில்லை...

அடிவாங்கினது நாமாக இருந்தாலும், அடித்தவனை அணைத்துபோக சொல்லும் எருமைமாட்டு இனம் உலகில் நாமாக மட்டுமே இருக்க முடியும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.