Jump to content

எந்த உணவை எவ்வளவு சாப்பிடவேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
 

தினமும் நாம் பல வகையான உணவுகளை உட்கொள்கிறோம். இவற்றிலுள்ள சத்துகள், புரதம் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளும் நாம், அவற்றை எந்த எவ்வளவு சாப்பிடவேண்டும் என்பதை கணக்கிடுவதில்லை.

நாம் சாப்பிடும் உணவின் அளவை நினைவில் வைத்துக்கொளவது என்பது கடினமான ஒன்று. சத்தான உணவுகளுக்கும் பாஸ்புட்களுக்கு மத்தியில் நாம் பல நேரங்களில் அகப்பட்டுக்கொள்ளக் காரணம், அவற்றிலிருந்து தேர்வுசெய்ய நமக்கு பல வாய்ப்புகள் உள்ளது என்பதே.

ஆக, எந்த உணவை எவ்வளவு சாப்பிட வேண்டும்? உணவிற்கான அளவு என்ன?

உங்களின் உள்ளங்கையே அதற்கான சிறந்த அளவுகோல் என்கிறார் உணவு நிபுணரான மோனிகா செயிமிக்கா.

நமது கைகளின் அளவை வைத்து எத்தகைய உணவை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பிரிக்கமுடியும் என்கிறார் அவர்.

` காய்கறிகள், புரதம், பழங்கள், பால் வகை உணப்பொருட்கள் என நம்மிடம் பல வகையான உணவுக்குழுக்கள் உள்ளன. ஆகவே, சிறந்த, சமமான, சரியான அளவிலான உணவுகளை தேர்வு செய்வது என்பது நமக்கு மிகவும் முக்கியமானது. இதை சரியாக நினைவில் வைத்துக்கொள்ள நம் கைகளின் அளவை நினைவில் வைக்க வேண்டும்.`

அவர் கூறும் வழிமுறைகள் என்னென்ன?

எந்த உணவை எவ்வளவு சாப்பிடவேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?படத்தின் காப்புரிமை Jeffrey Greenberg/UIG via Getty Images

பழவகைகள்:

அது ஒரு ஆப்பிளாக இருந்தாலும், சோளமாக இருந்தாலும் உள்ளங்கை அளவை நினைவில் கொள்ளவேண்டும் என்கிறார் அவர். நாம் சாப்பிடும் தட்டில் 1/3 பங்கு கார்போஹைட்ரை இருந்தல் வேண்டும்.

புரதம்:

சிறந்த அளவிலான புரதச்சத்தை உணவில் சேர்த்துக்கொள்ள மாமிசம், மீன், பருப்பு, பயறு ஆகியவற்றை ஒரு நாளின் உணவில் இரண்டு அல்லது மூன்று பகுதிகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துறைக்கிறார். புரதத்தின் அளவு என்பது உங்கள் கையில் பின்பகுதி அளவு இருத்தல் வேண்டும்.

 

பால் வகை உணவுகள்:

பால் அல்லது பாலுக்கு மாற்றாக உள்ள உணவுகளை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று பகுதிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். பால்வகை உணவு என்பது, தீப்பெட்டி அளவிலான வெண்ணை, சிறிய கோப்பை ஆளவு பால் அல்லது சிறிதளவு தயிரான இருக்கலாம்.

குறைந்தது 80% நேரங்களில் சத்தான உணவையே உட்கொள்ள முயலவேண்டும் என்கிறார் மோனிகா.

`சில நாட்களில் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்னவேண்டும் என்பதுபோல தோன்றுவது மனித இயல்பே. ஆனால், அதையே ஒரு வழக்காமக நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. மீண்டும் சத்தான உணவுகளை சாப்பிடும் பழக்கத்திற்கு திரும்புவதே சிறந்தது` என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/global-44550932

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.